செஞ்சியில் பெரியார் அன்றும் இன்றும் கருத்தரங்கு 23022019

விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்
23 -02-19 அன்று செஞ்சியில் பெரியார் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் கருத்தரங்கு பெரியார் சாக்ரட்டீஸ் தலைமையில்  நடைபெற்றது.  மாவட்ட கழக தலைவர் பூஆ.இளையரசன் வரவேற்பு உரையாற்றினார். நிகழ்சியில்   பழங்குடி மக்கள் முன்னனி தோழர் சுடரொளி சுந்தரம்,  த.மு.மு.க சையத் உசேன்,  அம்பேத்கர் மக்கள் கட்சி மழைமேனிப்பாண்டியன் ,  விடுதலைசிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தோழர் வெற்றிச்செல்வன்,  சி.பி.அய் வட்டச் செயலாளர் தோழர் செல்வராசு, வர்த்தக சங்க விழுப்புரம் மாவட்ட செயலாளர் தோழர் கண்ணன்,   மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே மணி, மற்றும்  தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். நிறைவுரையாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் நிகழ்சி தொடங்கும்போது ஒரு மகிழ்ச்சியான தகவல் வந்துள்ளது திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை திராவிடர் கழக தலைவர் தஞ்சையில் நடக்கும் மாநாட்டில் அறிவித்துள்ளார். எனவே கவிஞர் கலிபூங்குன்றன் அவர்களுக்கு நம் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம் என்று  அறிவித்தார்.

தொடர்ந்து  பெரியார் அன்றும் இன்று என்ற தலைப்பில் இன்றய அரசியல் அன்றைய அரசியல் சூழலை பொருத்தி விரிவான ஆழமான பெரியாரின் கொள்கை பயணத்தை எடுத்துரைத்து பேசினார் மதியம் 2.30 மணியளவில் நிகழ்சி திண்டிவனம் நகரபொறுப்பாளர் தோழர்  சிந்தனை சிற்பி நன்றியுடன் நிரைவு பெற்றது முன்னதா கருத்தரங்கு நிகழ்சி  நடைபெறவுள்ளதை சுவரொட்டி அடித்து செஞ்சி நகரம் முழவதும் ஒட்டி விளம்பரம்செய்யப்பட்டது .

தலைமை செயற்ககுழு  உறுப்பினர் தோழர் அய்யனார்,  கள்ளகுறிச்சி மாவட்ட அமைப்பாளர் தோழர் சாமிதுரை , விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர்  பெரியார் ஜெயரட்சகன்,  திருநங்கையர் பேராசிரியர் சுவாதி ,  தோழர்கள் மூர்த்தி,  வில்லாலன் , கள்ளகுறிச்சி மாவட்ட தோழர்கள் மற்றும் தோழமை அமைப்பு தோழர்கள் திரளாகவந்து கலந்துகொண்டனர்.

23- 02-19 அன்று மாலை விழுப்புரம் புதிய பேருந்துநிலைத்தின் அருகில்  பேராசியர் கல்யாணி ஒருங்கிணைப்பில் நடந்த  பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாட்டில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி உரைக்குபின்  திராவிடுதலைக்  கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள்  பழங்குடி மக்கள் மீது அரசும் காவல்துறையும் எப்படி நடந்துகொள்கிறது என்பதை விளக்கி சிறப்புரையாற்றினார் நிறைவுரையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  தொல்.திருமாவளவன் பேசினார்.

மாநாட்டில் தலைமைசெயற்குழு உறுப்பினர் தோழர் அய்யனார், விழுப்புரம் மாவட்ட தலைவர் பூஆ.இளையரசன் , மாவட்டச் செயலாளர் தோழர் பெரியார் சாக்ரட்டீஸ்,  கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் பாரதிதாசன்,  அரியலூர் மாவட்ட செயலாளர் தோழர் இராவண கோபால் தின்டிவனம் நகர கழக தோழர் சிந்தனை சிற்பி மற்றும் தோழர்கள் மூர்த்தி,  வில்லாலன் ஆகியோர்  சென்று கலந்துகொன்டனர்.

You may also like...