Category: திவிக

தமிழ் நாட்டினை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – கழகத் தலைவர் கோரிக்கை

தமிழ் நாட்டினை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – கழகத் தலைவர் கோரிக்கை

தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்களின் அறிக்கையை முழுதுமாக நானும் ஏற்றுக் கொள்கிறேன் தமிழ் நாட்டினை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு எனது ஒப்புதலை அளிக்கிறேன். வன்கொடுமைப் புகார்களை அளிப்பதற்கு வாய்ப்பாக ஓர் புகார் எண்ணை அறிவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன். கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் 11-5-2020   தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்களுடைய அறிக்கையோடு நானும் கீழ்க்கண்ட செய்தியினை அரசின் கவனத்திற்கும், காவல்துறைத் தலைமையின் கவனத்திற்கும், பொதுமக்களின் கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன். பவானியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இளமதி என்ற பெண்ணும் கவுந்தப்பாடி யைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த செல்வன் என்பவரும் அவர்கள் இருவரின் முழு சம்மதத்தோடு கொளத்தூரை அடுத்த காவலாண்டியூரைச் சேர்ந்த திரு ஈஸ்வரன் அவர்கள் தலைமையில் 9-3-2020 அன்று திருமணம் செய்து கொண்டார்கள். செய்தியறிந்த பெண்ணின் குடும்பத்தினரும் அவர்களுக்குத் துணையாக ஏறத்தாழ நாற்பது ஐம்பது அடியாட்களும் வந்து திருமணத்தை...

தமிழகத்தை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – எவிடென்ஸ் கதிர்

தமிழகத்தை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – எவிடென்ஸ் கதிர்

தமிழகத்தை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக புகார் உதவி எண்கள் உருவாக்க வேண்டும் பத்திரிக்கை செய்தி இந்த கொரானா காலத்திலும் சாதிய கொலைகள், ஆணவ கொலைகள், காவல் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், குடியிருப்புகள் தாக்கப்படுதல், சாதி ரீதியாக இழிவுபடுத்தி அவமானபடுத்துதல் போன்ற வன்முறைகள் தலித்துகள் மீது அதிகரித்து உள்ளன. அதுமட்டுமல்ல நாற்காலியில் உட்கார அனுமதி மறுக்கின்றனர். சாதி ரீதியாக இழிவாக பேசுகின்றனர். பணி செய்யவிடாமல் சித்திரவதை செய்கின்றனர் என்று மூன்று பஞ்சாயத்து தலைவர்கள் புகார் தெரிவித்து இருக்கின்றனர். கடந்த நான்கு நாட்களில் 4 தலித்துகள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தலித்துகள் மீது சாதிய கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தமிழக முதல்வர் இக்கொடுமைகளுக்கு எதிராக உரிய அளவிற்கு நடவடிக்கை எடுக்க வில்லை. குழந்தைகள் மீதும் பெண்கள் மீதும் வன்முறை தடுப்புக்கு என்று உதவி எண்களை அரசு வெளியிட்டு இருக்கிறது. அவற்றின்...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 11

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 11

காட்சி – 11 இடம் : இலங்கை இராவணன் அவை. பாத்திரங்கள் : இராவணன், மேகநாதன், கும்பகர்ணன், விபீடணன், அமைச்சர்கள், அவைப் பிரதிநிதிகள், சேனாவீரர்கள், மற்றும் பலர். இராவ : சிங்கத்தின் பீடத்திலே சிறு நாயை ஏற்றி விட்டார்கள்! துரோகம் வீரத்தை விழுங்கிவிட்டது! வாலியை மறைந்து நின்று கொன்றுவிட்டு, சுக்ரீவனை மன்னனாக்கி விட்டார்களாம் அந்த ஆரியச் சிறுவர்கள். மேக : சதிக்குச் சாய்ந்துவிட்டதே அப்பா; சமருக்கு அஞ்சாத தென்னாடு. இராவ : வஞ்சகர்கள் பெருகிவிட்டார்கள் குழந்தாய்! மேக : மாற்றானின் கால்பிடித்து மன்னன் ஆவதைவிட, மானத்தை விட்ட செயல் வேறு உண்டா? இராவ : பதவிப் பித்து மானத்தை மறக்கடித்துவிட்டது ஒன்றுபட்ட தமிழகத்திலே தமிழன் வாழ்க்கையிலே பிளவு, ஆரியத்தின் ஊடுருவல்…. மேக : அந்த பேதத்தை நீக்க வேண்டியது தங்கள் கடமை அப்பா. இராவ : அதற்காகத் தமிழனும் தமிழனும் மோதிக் கொள்ள வேண்டியதுதான்; வந்திருக்கும் ஆரியர்களுக்காக வாளேந்தி நிற்பவர்கள் யார்?...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 10

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 10

காட்சி – 10 இடம் : கிட்கிந்தையில் ஒரு மலை அடிவாரம் பாத்திரங்கள் : அனுமன், அங்கதன், சாம்பவந்தன், மற்றும் பலர் அனு : நீங்கள் எல்லோரும் இங்கேயே இருங்கள். நான் மட்டும் சம்பாதி முனிவன் சொன்ன விவரப்படி இலங்கை சென்று சீதாபிராட்டியாரைக் கண்டு திரும்புகிறேன். நான் வருகிறவரையில் வேறு எங்கும் போகாதீர்கள். அங்க : *ஆமாம்! (* கி.கா. 53-ம் சருக்கம் 1-2 55-ம் சருக்கம் 1-16) சீதையைக் காணாமல் நாம் சுக்ரீவனையோ ராமனையோ பார்ப்பதற்கில்லை. அந்தக் கொடியவர்கள் குணம்தான் நாம் அறிந்ததாயிற்றே. அனு : நான் எப்படியும் சீதையைக் கண்டே திரும்புகிறேன். அங்க : அனும! நீ எப்படி இலங்கைக்குப் போவாய்? அனு : இலங்கைக்குப் போவது முடியாத காரியமென்று நினைத்துவிட்டாயா அங்கதா? அங்க : இடையிலே பெருங்கடல் இருக்கிறதாமே! அனு : இல்லை! அனுபவமில்லாதவர்கள் – ஆய்ந்து பார்க்கத் திறனில்லாதவர்கள் கட்டிய கதையப்பா அது எனது. –...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 9

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 9

காட்சி – 9 இடம் : சுக்ரீவன் கொலுமண்டபம். பாத்திரங்கள் : அங்கதன், அனுமான், ராமன், லட்சுமணன், மற்றும் பலர். [கிட்கிந்தையில் சுக்ரீவனுக்கு முடிசூட்டப்பட்ட சில காலத்திற்குப் பிறகு ஒரு நாள் சுக்ரீவன் கொலுவிருக்கிறான். அங்கதனும் அனுமானும் அருகில் இருக்கின்றனர்; ராமனும் லட்சுமணனும் உட்கார்ந்திருக்கின்றனர்.) ராமன் : சுக்ரீவ! உன் ஆசை, நிறைவேறிவிட்டது. என் கடமையும் முடிந்து விட்டது; இனி நீ எனக்கு சீதையை மீட்டுத் தரவேண்டும். லட்சு : சீதையை ராவணன் எங்கு சிறையிட்டிருக்கிறான் என்பதை முதலில் கண்டறிந்தாக வேண்டும். அனு : பிரபு, நேற்று இந்த நகை மூட்டையைத் தெற்கே உள்ள குன்றின் அடிவாரத்தில் நமது வீரர்கள் கண்டெடுத்து வந்தனர். இவைகள் ஒரு வேளை பிராட்டியாருடைய நகைகளாக இருந்தாலும் இருக்கலாம். [ராமனும் லட்சுமணனும் ஆவலோடு அந்த நகை மூட்டையை வாங்கிப் பிரிக்கின்றனர்.) ராமன் : *சீதா! அய்யோ ! இவைகள் உன் நகைகள் போலவே இருக்கின்றதே. தம்பி லட்சுமணா!...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 8

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 8

காட்சி – 8 இடம் : கிட்கிந்தையில் மலையும், காடும் அடர்ந்த ருஷ்யமுக பர்வதத்தின் ஒரு பகுதி. பாத்திரங்கள் : சுக்ரீவனும், அனுமானும். சுக்ரீவன் : இனிமேலும் நான் அரசனாக முடியும் என்று நீ நினைக்கிறாயா? அனும! அனு : ஏன் முடியாது சுக்ரீவா? சாதுர்யமும் சமயோசிதமும் நிறைந்த இந்த அனுமான் உன் அருகில் இருக்கும் போது, நீயேன் சாம்ராஜ்ய அதிபதியாக முடியாது? சுக் : *என்ன இருந்தாலும் என் அண்ணனுக்கு நான் அவ்வளவு பெரிய துரோகம் செய்திருக்கக் கூடாது. அவனைக் குகைக்குள்ளே விட்டு, பாறையால் மூடி விட்டு, இறந்து விட்டதாக ஊரை ஏமாற்றி அவன் மனைவியைக் கைது செய்து அரசையும் கைப்பற்றிக் கொண்டேனே அது பெரிய துரோகமல்லவா? (* *கி.கா. 10-ம் சருக்கம் 11-28 ) அனு : துரோகம், பழி, பாவம் – இவைகளையெல்லாம் பார்த்தால், பலரும் புகழ பேரரசன் ஆக முடியுமா? சுக் : அதற்காக….? அனு...

தமிழக அரசும், குடிமை சமூகமும்- பாதுகாப்பு அரண்

தமிழக அரசும், குடிமை சமூகமும்- பாதுகாப்பு அரண்

பெருமதிப்பிற்குரியீர், வணக்கம்! தமிழக அரசும், குடிமை சமூகமும்- பாதுகாப்பு அரண். இன்றைய நிலையில் கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்கவும், அவசர நிலை என்ற காலகட்டத்தை கடந்து,  நிரந்தரமான தீர்வுக்கு  ஒரு தொலைநோக்கு பார்வையை முன்வைக்கவும் வேண்டிய கட்டாயத்தில் இந்தியா மற்றும் முக்கியமாக தமிழகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதுநாள்வரையில் இந்த இயக்கம் அரசின் சட்ட திட்டம் மற்றும் போலீஸ் நிர்வாகத்தின் கெடுபிடி கட்டாயங்களுடன் நடந்தேறுகிறது. நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலமாகவும், தூய்மை பணியாளர்கள் மற்றும்  மருத்துவ பணியாளர்களின் தன்னலமற்ற முழு நேர உழைப்பின்  மூலமாகவும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசின் பாராட்டுக்குரிய முனைப்பும், அரசு ஊழியர்களின் கடமையும், தூய்மை மற்றும் மருத்துவ பணியாளர்களின் சீரிய பணியும் சிறப்பாக இருப்பினும், நாம் எதிர் கொண்டிருக்கும்  கொரானா தொற்று நோய்  சவாலுக்கு நீண்டகால,  நிரந்தர தீர்வாக இவை அமையாது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன: முதலாவதாக, பெருமளவிற்கு மக்கள்...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 7

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 7

காட்சி -7 இடம் : மதங்கவனத்திலே ஒரு பகுதி பாத்திரங்கள் : ராமன், லட்சுமணன். [ராமன் உட்கார்ந்து பாடிக் கொண்டிருக்கிறான்; லட்சுமணன் ஒரு மான் குட்டியைக் கொன்று தூக்கி வருகிறான்.) ராமன் : சீதா; சிங்காரப் பெட்டகமே! சிந்தை நிறை அமுதே! என் உயிர் பறிக்கும் ஓவியமே! உன்னை எங்கேயடீ கண்டு தேடுவேன்… சீதா! லட்சு : (தலையில் அடித்துக்கொண்டு) அண்ணா! கொஞ்ச நேரம் சும்மா இருக்கமாட்டே நீ? ராமன் : லட்சுமணா! என் சீதையை இராவணன் இந்நேரம் என்ன பண்றானோ தெரியலையேடா! சீதா! உன் ராமன் காட்டிலே இப்படிக் கதறுகிறேனே, இது உன் காதிலே விழலையா? சீதா, சீதா…. (குதிக்கிறான்] லட்சு : சீதா! சீதா!! சீதா!! அவள் எக்கேடு கெட்டால் என்ன? எவன் தூக்கிக்கிட்டுப் போனால்தான் என்ன? அவள் செத்தால்கூட என்ன அண்ணா ! அப்படி மோசம் வந்துவிடும் உனக்கு? அவள் போனால் அயோத்தியிலே பேரழகி *பிரபாவதி இருக்கா;...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 6

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 6

காட்சி – 6 இடம் : இராவணன் அரண்மனையில் ஒரு பகுதி. பாத்திரங்கள் : இராவணன், சீதை, மேகநாதன், இரண்டொரு வீரர்கள். [சீதை தலைவிரி கோலமாக நிற்கிறாள்.) இராவ : ஏதோ நடந்தது நடந்துவிட்டது. இனி நீ வருந்திப் பயன் இல்லை. அந்த மூடர்கள் வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் உன்னை அவர்களோடு அனுப்பிவிடுகிறேன், வருந்தாதே. மேக : தந்தையே! ஆரியச் சிறுக்கிக்கா இரக்கம்! அநீதி இழைத்தவன் மனைவிக்கா மரியாதை! இராவ : எதிரிக்கும் இரங்க வேண்டியது இலங்கையின் பண்பல்லவா மகனே? மேக : இரக்கத்தைக் கோழைத்தனமென்று கருதிவிடுவார்கள் இழிந்தவர்கள். இந்தச் சிறுக்கியைச் சித்திரவதை செய்ய வேண்டும். இவள் அங்கங்களைச் சிதைத்து அனுப்பினால்தான் ஆரியர்களுக்குப் புத்தி வரும். இனியேனும் யாருக்கும் தீங்கு இழைக்க மாட்டார்கள். இராவ : இந்திரசித்தா! ஆத்திரப்படாதே… அறிவிலா மூடர்கள் செய்த வேலையை நாமும் செய்யலாமா? நமக்குத் தீங்கு செய்தவர்கள் வெட்கப்படும் அளவுக்கு மரியாதை செய்ய வேண்டாமா? அதுதானே...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 5

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 5

காட்சி – 5 இடம் : பஞ்சவடி குடிசை பாத்திரங்கள் – ராமன், லட்சுமணன், சீதை. [வழக்கம்போல் குடித்துக் குலவிக் கொண்டிருக்கிறார்கள்.) ராமன் ; லட்சுமணா! நேற்ற நடந்த அஜமேத யாகத்துலே ஏண்டா நமக்கு சரியா பங்கு வரல்லே? இந்த ரிஷிப் பசங்களுக்கு யாகம் யாகம்னு ஊர்லே உள்ள ஆடுமாடுகளை எல்லாம் ஒழிச்சுக் கட்ட, நாம் உதவுறோம். நமக்கு என்னடான்னா ஒன்னும் சரியான பங்கே வரமாட்டேங்குதே! உம்…. லட்சும : அண்ணா ! நம்ம பசிக்கு இனிமே யாகத்துக்கு அஜம் போதாது கஜம் தான் வேணும். ராமன் : அதுக்கென்னடா நடத்தினா போச்சு (சீதையிடம்) பிரிய நாயகி! என்ன அவனையே பார்த்துகிட்டு இருக்கே! போய் நேற்று குதிரைக்கால் ரசம் வச்சேல்லே, அதிலே பாக்கியிருந்தா கொண்டா. [சீதை உள்ளே போனதும்.] லட்சும : ஏன் அண்ணா ! நானோ இளைஞன், வயிறு சரிந்து வாலிபம் குலைந்து நிற்கும் அண்ணியைப் பற்றி நீ ஏன்...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 4

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 4

காட்சி – 4 இடம் – இராவணன் அந்தப்புரம். பாத்திரங்கள் : இராவணன், வண்டார்குழலி, மாரீசன், தண்டகாரண்யத்திலிருந்து வந்த அகம்பனன் என்ற ஒற்றன். அகம்பனன் : மன்னர் மன்ன! இராவணன் : யார், அகம்பனனா! என்ன? அகம் : மறத்தமிழ் பரம்பரைக்கு மாறா அவமானம். இராவ : என்ன! அகம் : ஆரியர்கள் அநீதி, அளவை மீறிவிட்டது அரசே! மாரீசன் : விவரமாகச் சொல். அகம் : ஆரிய ராம லட்சுமணர்கள், அன்னை காமவல்லியை உருக்குலைந்து விட்டனர். இராவ : என்ன! (மீசை படபடவெனத் துடிக்கிறது. கண்களில் பொறி பறக்கிறது) தகர்க்கப்பட்டதா தமிழனின் தன்மானம் ! மாறாத அவமானம் ! மாரீசன் : பதறாதே இராவணா! அகம்பனா! சொல்…. பிறகு? அகம் : அவமானம் தாங்காத அம்மையார், தற்கொலை செய்து கொண்டு விட்டார்கள், இராவ : (மிகுந்த சோகம்) என் குலக்கொடி மறைந்து விட்டாளா! தங்கையே, உனக்கு இந்த முடிவா கிட்ட...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 3

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 3

காட்சி – 3 இடம் : தண்டகாரண்யம் பாத்திரங்கள் : ராமன் சீதை, லட்சுமணன் (சீதை, நடுவிலிருக்க, ராமனும், லட்சுமணனும் இருபக்கங்களிலும் இருந்து கொண்டு கொஞ்சி குலவிக் கொண்டு; மூங்கில் குழாய்களில் மதுவை ஊற்றி மூவரும் அருந்திக் கொண்டிருக்கின்றனர்.) ராமன் : (போதையுடன்) லட்சுமணா! மது (சீதையைக் காட்டி) மாது மனுஷனுக்கு வேறு என்னடா வேணும்…? லட்சுமணன் : எனக்குத் தெரியாது அண்ணா ? ராமன் : என்னடா உளர்றே! லட்சுமணன் : (குடித்துக் கொண்டே எனக்குப் பாதி சுகம்தானே அண்ணா தெரியுது. (சீதையைப் பார்த்துக்கொண்டே ஒன்னு இல்லையே. (சீதை முறைக்கிறாள்.) ராமன் : (உடனே) சீதா – உம் நீ ஒன்னு போட்டுப் பாரேன்.. இல்லேன்னா நீயும் அசுர வம்சத்தைச் சேர்ந்தவளாயிடுவே சுராபானத்தின் சுகம் வேறு எதிலே இருக்கு? சாப்பிடு சீதே…. சும்மா சாப்பிடு. [சீதையிடம் கொடுக்க அவள் வாங்கிக் குடிக்கிறாள்.) லட்சுமணன் : என்ன அண்ணா ! சீதைக்கு...

ஆரணி காண்டமும், கிஷ்கிந்தா காண்டமும் காட்சி – 2

ஆரணி காண்டமும், கிஷ்கிந்தா காண்டமும் காட்சி – 2

ஆரணி காண்டமும், கிஷ்கிந்தா காண்டமும் காட்சி – 2 இடம் : இலங்கையில் இராவணன் கொலு மண்டபம். பாத்திரங்கள் : இராவணன், மேகநாதன், கும்பகர்ணன், விபீடணன், மற்றும் அமைச்சர்கள், சேனா வீரர்கள், மந்திரி சபையினர். [நாட்டின் ஆட்சி விவகாரங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.] மேகநாதன் : தந்தையே! அந்தத் தருக்கர்களின் கொட்டத்தை அடக்காவிட்டால், நாடு நாசகாரர்களின் வேட்டைக்காடாக மாறிவிடும் – விரைவிலே அந்த வீணர்களை ஒழிக்கத் திட்டம் தேவை! சேனாதிபதி : மன்னர் மன்ன! தமிழரசி, தங்கள் மூதாட்டி தடாதகை அம்மையார் தாக்கப்பட்ட போதே இதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தோம். கும்பகர்ணன் : கொலையும் வேள்வியும் மட்டுமே அவர்கள் குறிக்கோளாக இருக்க முடியாது. கொடி போட்டு ஆளவும் திட்டம் இருக்கும் என்று நம்புகிறேன் அண்ணா ! இராவணன் : உம்: ஆச்சர்யம்! சிங்கக் கூட்டத்திலே சிறு நரிகள்; செந்தாமரை ஓடையிலே முதலைகள் ; தமிழகத்திலே ஆரியர்கள் ! வேட்டைக்கு வேறு இடம் கிடைக்கவில்லை...

இராமாயண நாடகம் – பால காண்டமும், அயோத்தியா காண்டமும்

இராமாயண நாடகம் – பால காண்டமும், அயோத்தியா காண்டமும்

பால காண்டமும், அயோத்தியா காண்டமும் காட்சி – 1 இடம் : காட்டில் வால்மீகி ஆசிரமம். பாத்திரங்கள் : வால்மீகி, சீதை, லவன், குசன். [மெளனமாக அமர்ந்திருந்த வால்மீகி தனக்குள்ளாகவே கூறிக்கொள்கிறார்.) “உண்மையை, உலகம் ஒரு நாள் அறிந்தே தீரப் போகிறது. ஏன் நாமே அதைக் கூறிவிடக் கூடாது.” [இப்பொழுது சீதையும் லவகுசர்களும் அங்கு வருகிறார்கள்.] வால்மீகி : காலம் வந்து விட்டது சீதா! காவியத்தைத் தொடங்கப் போகிறேன்; உன் கண்மணிகளின் இதயங்களிலே புதிய கருத்துக்களைத் தூவப் போகிறேன். சீதை : எல்லாம் உங்கள் கிருபை மகரிஷே! வால் : குழந்தைகாள்! ஏடுகளை எடுத்து வந்து என்னருகில் அமருங்கள். (குசனும் லவனும் ஏடு எழுத்தாணிகளுடன் வந்து வால்மீகியின் முன்னர் அமர்கின்றனர்.) வால் : கண்மணிகாள்! காலத்தைக் கடந்து நிற்கப் போகும் ஒரு மாகாவியத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன்; உலகு கண்டு வியக்க இருக்கும் அம் மா ஓவியத்தைக் கவனமாகத் தீட்டி வாருங்கள்....

பாத்திரங்கள் – இராமாயண நாடகம்

பாத்திரங்கள் – இராமாயண நாடகம்

பாத்திரங்கள் திராவிடர்கள் இராவணன் – இலங்கை வேந்தன் மேகநாதன் (இந்திரசித் – இராவணன் மைந்தன் கும்பகர்ணன் – இராவணன் தம்பி வண்டார்குழலி (மண்டோதரி) – இராவணன் மனைவி அதிகாயன் – இராவணன் சேனாபதி மாரீசன் – இராவணன் மாமன் சபரி – தமிழ் மறையவரின் பெண் வாலி – கிட்கிந்தை, மன்னன் காமவல்லி (சூர்ப்பகை) – இராவணன் தங்கை கரன் – திராவிட மன்னன் தூஷணன் – கரனது சேனாதிபதி சம்பூகன் – திராவிடத் தவசி அகம்பணன் – ஒற்றன்     ஆரியர்கள் ராமன் – ஆரியர் தலைவன் லட்சுமணன் – ராமனின் தம்பி பரதன் – அயோத்தி அரசன் சத்துருக்கண் – ராமனின் தம்பி தசரதன் – ராமனின் தகப்பனாகக் கருதப்படுபவன்.

இந்நூல் எழுதுவதற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட நூல்கள்

இந்நூல் எழுதுவதற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட நூல்கள்

இந்நூல் எழுதுவதற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட நூல்கள் தந்தை பெரியார் எழுதிய ராமாயணப் பாத்திரங்கள். கடலங்குடி பண்டித நடேச சாஸ்திரியாரின் வால்மீகி ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பு. C.R. ஸ்ரீனிவாச அய்யங்கார் B.A., எழுதிய வால்மீகி ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பு. A.V. நரசிம்ம ஆச்சாரியாரின் வால்மீகி ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பு கோவிந்த ஆச்சாரியாரின் வால்மீகி ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பு. பண்டித மன்மதநாத்தத்தர் எழுதிய வங்களா & ஆங்கில ராமாயண ஆராய்ச்சி ஆகியவையாகும். “சுமித்திரை, கோசலை, கைகேயி என்ற தசரதன் மனைவியர்கள் முறையே ஹோதா, அத்வர்யூ. உத்காதர என்ற ரிஷிகளுக்குப் பெற்ற பிள்ளைகளே ராம. பரத லஷ்மண சத்துருக்கணர்கள்.” – மன்மதநாத்தத்தர் ராமன் சீதையை பட்டமகிஷியாக மணம் புரிந்து கொண்டிருந்தாலும் போகத்துக்கா ஸ்ரீதாமா, சுதாமா, ரதினிபா, பிரபாவதி போன்ற பல பெண்களை வைத்துக் கொண்டிருந்தான். வால்மீகி ராமாயணம் அயோத்தியாகாண்டம் 3-ம் சருக்கம்; By C.R. சீனிவாச அய்யங்கார் B.A.   திரு ஸ்ரீனிவாச அய்யங்கார் தனது...

இராமாயண நாடகம் – தந்தை பெரியார் அவர்களின் மதிப்புரை

முதற் பதிப்புக்கு தந்தை பெரியார் அவர்களின் மதிப்புரை தோழர் திருவாரூர் தங்கராசு அவர்கள் எழுதிய இராமாயண நாடகம் என்னும் இப் புத்தகத்திற்கு என்னை ஒரு மதிப்புரை எழுதித் தரும்படி கேட்டார். எனக்குள்ள பல நெருக்கடியும் அவசரமுமான வேலைகளுக்கிடையில் இப் புத்தகம் முழுவதையும் தொடர்ச்சியாகப் படித்துப் பார்க்க நேரம் இல்லாததால் மேற்போக்காகவும், அங்குமிங்குமாகவும் பல பக்கங்களைப் படித்தேன்; அதிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், இப்போது நாட்டில் பார்ப்பனர்களும் புலவர்களும் இராமாயணத்தைப் பற்றிச் செய்து வரும் இராமாயணப் பிரச்சாரம், எவ்வித பொறுப்பும் கவலையும் இல்லாமல் மக்களுக்கு இராமாயணம் பற்றி இருந்து வரும் பக்தியையும் மூட நம்பிக்கையையும் அவர்கள் தங்களுக்கு ஆதரவாகக் கொண்டு, தங்கள் இஷ்டப்படி இராம பக்தி பெருகவும் மூட நம்பிக்கை வளரவும் பார்ப்பன உயர்வுக்கு ஏற்பவும் தக்கவண்ணம் பிரச்சாரம் செய்து வருவதைக் கண்டு வேதனைப்பட்டு, பாமர மக்கள் இடையில் இருக்கும் மூட பக்தியையும் இராமாயண சம்பந்தமான மூடநம்பிக்கையையும் எப்படியாவது ஒழிக்கவேண்டும் என்கிற...

சங்க தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வழங்கும் விழா

சங்க தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வழங்கும் விழா

கோவை மாவட்ட கலைக்கூடத்தில் நடந்த கட்டிட தொழிலாளர் சங்கம் நடத்திய சங்க தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வழங்கும் விழாவில், கழகத்தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு நலவாரிய அட்டைகள் வழங்கியதுடன் சிறப்புரையாற்றினார். மேலும், பாவேந்தர் பாரதிதாசன் பேரவை. புலவர் செந்தலை கவுதமன் மற்றும் சூலூர் பன்னீர்செல்வம், சூலூர் பாபு, வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பெரியார் முழக்கம் 12032020 இதழ்

பெரியார் தொண்டர் ஆசிட் தியாகராசன் படத்திறப்பு

பெரியார் தொண்டர் ஆசிட் தியாகராசன் படத்திறப்பு

பெரியார் தொண்டர் ஆசிட் தியாகராசன் நினைவேந்தல் தலைமை கழக அலுவலகத்தில்  04.03.2020 அன்று மாலை 6:30 மணியளவில் தொடங்கியது.  தென் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் வரவேற்புரையாற்றினார். தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தலைமையில் நிகழ்வு நடந்தது. வட சென்னை மாவட்டத் தலைவர் யேசுகுமார் முன்னிலை வகித்தார்.  கழகத் தலைவர் கொளத்தூர் மணி படத்தைத் திறந்து வைத்தார்.  கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும்  கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். நிகழ்வை தென் சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி தொகுத்து வழங்கினார். சூலூரில் : 01.03.2020 அன்று சூலூர் அறிவியல் பூங்காவில் (எஸ். ஆர். எஸ்.மண்டபம்) ஆசிட் தியாகராசன் படத்திறப்பு நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மறைந்த தோழர் ஆசிட் தியாகராசன் படத்தை திறந்து வைத்து அவரின் களப்பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார். தொடர்ந்து கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்...

சென்னை கருத்தரங்கில் வாலாஜா வல்லவன் பேச்சு ‘மநு’ சாஸ்திரமே இப்போதும் ஆட்சி செய்கிறது

சென்னை கருத்தரங்கில் வாலாஜா வல்லவன் பேச்சு ‘மநு’ சாஸ்திரமே இப்போதும் ஆட்சி செய்கிறது

திருச்சி பெரியார் சரவணன் எழுதிய ‘திராவிடர் விவசாய சங்கம்’ நூலின் திறனாய்வு கருத்தரங்கம் 01.03.2020 அன்று சென்னை தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி சென்னை மாவட்டப் பொறுப்பாளரும் பெரியாரிய ஆய்வாளருமான வாலாசா வல்லவன் நிகழ்த்திய உரை: திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்தை பெரியார் 1952இல் தொடங்கி இருக்கிறார்கள். அது குறித்த இந்த புத்தகம் திராவிடர் விவசாய தொழிலாளர் கழகத்தின் அமைப்பினுடைய நோக்கங்கள் பற்றி 1952இல் வெளிவந்தது. தற்போது 2016ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தினரால் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகள் ஏன் சங்கம் வைத்திருக்கின்றனர், நாம் ஏன் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் வைத்திருக்கிறோம் என்பதைப் பற்றி பெரியார் சொல்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி அப்போது ஒன்று தான். இந்திய பொதுவுடமைக் கட்சி. சோவியத்தி லிருந்து கட்டளை வந்தால் டெல்லி அதை ஏற்கும். இங்கிருக்கின்ற சூழ்நிலைக்கு ஏற்றவாறு பார்ப்பனிய சூழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில் இந்த மண்ணிற்கு உண்டான ஒரு...

அரசுப் பள்ளிகளில் பட்டியல் பிரிவு குழந்தைகளை கழிவறை சுத்தம் செய்ய பணிப்பதா? சட்ட நடவடிக்கை எடுக்க, கோவை மாநகர் கழகம் புகார்

அரசுப் பள்ளிகளில் பட்டியல் பிரிவு குழந்தைகளை கழிவறை சுத்தம் செய்ய பணிப்பதா? சட்ட நடவடிக்கை எடுக்க, கோவை மாநகர் கழகம் புகார்

கோவை மாநகர கலந்தாய்வு கூட்டம் 8.3.2020 காலை 11 மணியளவில் வ.உ.சி. பூங்கா அருகிலுள்ள சிறுவர் பூங்காவில் நடைபெற்றது.  அதில்கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. தோழர் ஃபாரூக் நினைவு நாளை ஒட்டி 17.03.2020 அன்று  அண்ணாமலை அரங்கில் கருத்தரங்கம் மற்றும் மறைந்த  தோழர்கள் பேராசிரியர் அன்பழகன்,  ஆசிட் தியாகராஜன், இராவணன் ஆகியோரது படத்திறப்பு நடத்துவது. 09.03.2020 திங்கள் கிழமை அன்று அரசு பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட குழந்தைகளை  கழிவறைகளை அகற்ற வற்புறுத்தும் ஜாதிய தீண்டாமை கொடுமைகளுக்கு துறை ரீதியாக மட்டுமே நடவடிக்கை எடுப்பதைக் கண்டித்து ஆசிரியர்கள் ஜெயந்தி, குமரேஷ்வரி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் காலை 10 மணிக்கு மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது . இதில் தோழர்கள் செ. வெங்கடேசன்,  ச. மாதவன், ஆ.சுரேஷ்,  நா.வே. நிர்மல்குமார் ப.கிருட்டிணன்   மா.நேருதாசு ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்துரையாடலின் முடிவின்படி 9.3.2020 திங்கள் அன்று  கோவை  மாவட்டத்தில்...

சென்னையில், டெல்லி கலவரத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னையில், டெல்லி கலவரத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தில் இதுவரை 53 பேர் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூரையாடப்பட்டன. இஸ்லாமியர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. 02.03.2020 அன்று மாலை 4:30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், உரிமைக்காகப் போராடிய மக்களைத் தாக்கியதைக் கண்டித்தும், மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், கலவரக்காரர் களைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேச மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம், மே 17 இயக்கம், மனிதநேய மக்கள் கட்சி, சிபிஐ(எம்.எல்) ரெட் ஸ்டார், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், எஸ்டி.பி.அய், தமிழ்த் தேசியப் பேரியக்கம், பி.எஃப்.அய், மக்கள் அரசுக் கட்சி, மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சி, தமிழர் விடியல் கட்சி, தமிழ்த் தேச மக்கள் கட்சி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் கலந்து கொண்டன. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு டெல்லி கலவரத்தின்...

கடவுள் – மத மறுப்பாளராக 98 வயது வாழ்ந்து காட்டிய திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் விடைபெற்றார்

கடவுள் – மத மறுப்பாளராக 98 வயது வாழ்ந்து காட்டிய திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் விடைபெற்றார்

இனமானப் பேராசிரியர் அன்பழகன், தனது 98ஆவது அகவையில் மார்ச் 7, 2020இல் முடிவெய்தினார். திராவிடர் இயக்கத் தூண்களில் ஒருவர். தமிழையும் சுயமரியாதைக் கொள்கைகளையும் தனது இரு கண்களாகப் போற்றியவர். மிகச் சிறந்த பேச்சாளர். மாணவப் பருவத்திலிருந்தே அவரது திராவிடர் இயக்கப் பயணம் தொடங்கி விட்டது. தி.மு.க.வின் பொதுச் செயலாளராக 43 ஆண்டுகாலம் இருந்து கலைஞரின் உற்ற துணைவராக செயல்பட்டவர். மிக மிக எளிமையானது அவரது வாழ்க்கை. 7 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். பெரியார் குறித்து ஆழமான அவரது உரைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. கடவுள் – ஜாதி – மதமற்ற வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர். ஒரு கடவுள் மறுப்பாளர் 98 வயது வரை வாழ முடியும் என்ற செய்தியையும் அவரது மரணம் உணர்த்தி நிற்கிறது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தினர். மதச் சடங்குகள் ஏதும் இன்றி திராவிடர் இயக்க அடையாளங்களோடு அவரது இறுதி நிகழ்வுகள் நடந்தன. திராவிடர்...

சேலம் மேற்கு மாவட்டக் கழக சார்பில் மேட்டூரில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் தொடக்கம்

சேலம் மேற்கு மாவட்டக் கழக சார்பில் மேட்டூரில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் தொடக்கம்

சேலம் மேற்கு மாவட்ட  திராவிடர் விடுதலைக் கழகத்தின் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் சார்பாக முதல் கலந்துரையாடல் கூட்டம் 26.01.2020 கொளத்தூர் பெரியார் படிப்பகத்தில் பகல் 12.00 மணி அளவில் திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையிலும், தலைமை செயற்குழு உறுப்பினர் காவை ஈசுவரன் முன்னிலையிலும்  நடைபெற்றது. அதற்கு முன்பாக கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குருதிக் கொடை முகாமில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தோழர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் முதல் கூட்டத்தில் வாசகர் வட்டத்தின் பொறுப்பாளராக மே.கா. கிட்டு அறிவிக்கப் பட்டார். தலைமை செயற்குழு உறுப்பினர் அ.சக்திவேல்  அறிமுக உரைக்கு பின்னர்  வாசகர் வட்டத்தில் நவம்பர்,  டிசம்பர் 2019 மாத ‘நிமிர்வோம்’ இதழில் வெளிவந்த கட்டுரைகளை பற்றிய விவாதத்தினை வாசகர் வட்ட பொறுப்பாளர் மே.கா. கிட்டு விளக்கினார். மேலும் இனி ஒவ்வொரு மாத இறுதியிலும் நிமிர்வோம் வாசகர்...

ஈரோடு குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தில்  கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

ஈரோடு குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

23.02.2020 அன்று மாலை 4 மணிக்கு சூஞசு சூசுஊ ஊஹஹ குடியுரிமைச் சட்டங்களை திரும்ப பெறக் கோரி ஈரோட்டில் செல்ல பாட்ஷா வீதியில் (ஈரோடு தினசரி மார்கெட் பின்புறம்) இஸ்லாமிய பெண்கள் பெரும் திரளாக நடத்தும் உரிமை மீட்பு தொடர் முழக்க 3ஆம் நாள் போராட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் கூறினார். தனது உரையில் இது அனைத்து மக்களுக்குமான பாதிப்பு என்று உணராமல் பல்வேறு மக்கள் இன்னும் அமைதி காப்பதாகவும் தோழர்கள், குறிப்பாக பெண்கள் முன்னெடுத்து போராடுவது மகிழ்ச்சிக்கும் நன்றிக்கும் உரியது என்றும் தன் நீண்ட உரையில் குறிப்பிட்டார். திராவிட முன்னேற்றக் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இந்த சட்டங்களுக்கு எதிராக எப்போதும் போல் திமுக அரணாக நின்று காக்கும் என்று தன் உரையில் குறிப்பிட்டார். 500 பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த சட்டங்களைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி...

கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள்

கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள்

கோவையில் பிப். 9 அன்று நடந்த நீலச்சட்டை பேரணியன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி  முன்னிலையில்,  துளசி, அறிவரசு, சுரேசு, அசோக், மாதவன் ஆகிய புதிய தோழர்கள் இணைந்தனர். இவர்கள் கோவை மாவட்டத் தோழர்கள். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த  சமூக செயற்பாட்டாளர் மருத. உதயகுமார்  16.02.2020 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தன்னை திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். பெரியார் முழக்கம் 05032020 இதழ்

காவலாண்டியூர் ஈசுவரன் கழக ஏட்டுக்கு நன்கொடை

காவலாண்டியூர் ஈசுவரன் கழக ஏட்டுக்கு நன்கொடை

காவலாண்டியூர் கழகத் தோழர், தலைமைக் குழு உறுப்பினர் ஈசுவரன் மகன் கனிகாசெல்வன்-இலக்கியா ஜாதி மறுப்பு மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.5000/- நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 05032020 இதழ்

கழகக் கட்டமைப்பு நிதி

கழகக் கட்டமைப்பு நிதி

நாச்சியார் கோயில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகக் கட்டமைப்பு நிதிக்கு ரூ.20,000/-மும், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினம், ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோவன், கட்டமைப்பு நிதியாக ரூ.5000/-மும் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 05032020 இதழ்

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய மக்கள் பதிவேட்டின் (என்.பி.ஆர்.) ஆபத்துகள்

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய மக்கள் பதிவேட்டின் (என்.பி.ஆர்.) ஆபத்துகள்

தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பிரிவினரையும் பாதிக்கும்; எளிய குடிமக்கள் தலையில் தங்களை நிரூபித்துக் கொள்ளும் சுமையை அழுத்துகிறது மத்திய அரசு என்றார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பிப். 17, 2020 அன்று பேராவூரணியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை: சென்ற இதழ் தொடர்ச்சி மக்கள் தொகை கணக்கெடுப்பில் (Census) நாம் சொல்வதை அவர்கள் எழுதிக் கொள்வார்கள். எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை மதம் என்னவென்று சென்சசுக்காக கேட்டார்கள்; அவர் ‘திராவிட மதம்’ என்று கூறினார். எம்.ஜி.ஆர்.  இந்து மதம் என்று கூற வில்லை. ஆனால் அப்படி ஒரு மதம் உண்டா என்று கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது; மக்கள் சொல்வதை எழுதிக் கொள்ள வேண்டும். அதற்கென உள்ள கையேடு அப்படித்தான் கூறுகிறது. அதை எழுதிக் கொண் டார்கள். மக்கள் என்ன கூறுகிறார்களோ அதை எழுதிக் கொள்வார்கள். எம்.ஜி.ஆர்-யை திராவிட...

பெரியாரிய போராளி ஆசிட் தியாகராஜன் முடிவெய்தினார்

பெரியாரிய போராளி ஆசிட் தியாகராஜன் முடிவெய்தினார்

பெரியாரிய போராளி ஆசிட் தியாகராஜன் 94ஆம் வயதில் பிப்.26, 2020 அன்று தஞ்சையில் அவரது இல்லத்தில் முடிவெய்தினார். இயக்கத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் வெளிச்சத்துக்கு வராமல் செயல்பட்ட தன்மானப் போராளி. பெரியாரை இழித்து பழித்துப் பேசியவர்களை ‘பகத்சிங்காக’ மாறி தண்டனை வழங்கியவர். 1957ஆம் ஆண்டு பெரியார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அரசு வழக்கறிஞரான சீனிவாச்சாரி என்ற பார்ப்பனர், பெரியாரை ‘ராமசாமி நாய்க்கர்’ என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டதைக் கேட்டு ஆத்திர மடைந்து, அவர் மீது ‘ஆசிட்’ வீசியதாக கைது செய்யப்பட்டவர். வன்முறைகளிலும் பழிவாங்குதலிலும் பெரியார் இயக்கத்துக்கு உடன்பாடு இல்லை என்றாலும், இயக்கத்தோடு தொடர்புபடுத்திக் கொள்ளாமல் பெரியார் உணர்வாளர்களாகப் பல போராளிகள் இயக்கத்துக்கு வெளியே செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ‘ஆசிட்’ தியாகராஜன். செய்தி அறிந்த நாகை மாவட்ட கழகத் தோழர்கள் ஆசிட் தியாகராஜனுக்கு வீரவணக்கம் செலுத்தினர். தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன், தஞ்சை மாவட்ட அமைப்பாளர்  பேராவூரணி திருவேங்கடம்,...

குடியுரிமையைப் பறிக்கும் கணக்கெடுப்புகளை புறக்கணிப்போம்!

குடியுரிமையைப் பறிக்கும் கணக்கெடுப்புகளை புறக்கணிப்போம்!

ரேஷன் கார்டு, ஓட்டுப் போட அட்டை – ஆதார், கார் ஓட்ட உரிமம் – இதுதான் நமக்குத் தெரிந்த நம்மிடம் உள்ள அடையாள அட்டைகள். ஆனால், டில்லியில் மோடி ஆட்சிக்கு இந்த அடையாள அட்டைகள் போதாதாம்; புதுப்புது அடையாளங்களைக் கேட்கிறது. அது என்ன அடையாளம் தெரியுமா? நாம் இந்த நாட்டின் குடிமக்களாக – அதாவது இந்தியாவைச் சார்ந்தவர்கள்தான் என்பதை நாமே நிரூபிக்க வேண்டுமாம்; அப்போதுதான் இந்த நாட்டில் இருக்க முடியுமாம்; இல்லாவிட்டால் நாம் நாடற்ற அனாதைகளாம்! நாம் – இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை நிரூபிக்க புதிய கணக்கெடுப்பு நடத்தப் போகிறார்கள். இது எப்போதும் எடுக்கப்படும் ‘சென்சஸ்’ – அதாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அல்ல. அதில் நாம் சொல்வதைக் கேட்டு எழுதிக் கொண்டு போய் விடுவார்கள். இப்போது எடுக்கப்படும் கணக்கு என்பது வேறு; அது என்ன புது கணக்கெடுப்பு? அதற்குப் பெயர் ‘தேசிய மக்கள் தொகைப் பதிவேடு’. இதற்கு நாம்...

மயிலைப் பகுதியில் மனிதச் சங்கிலி குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள்

மயிலைப் பகுதியில் மனிதச் சங்கிலி குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள்

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராகவும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டங்களை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு போராட்டக் களமாக மாறி நிற்கிறது. சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியிலும் மக்கள் 24 மணி நேரமும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாநாடுகள், ஆர்ப்பாட் டங்கள், கருத்தரங்குகள், மனித சங்கிலி, கையெழுத்து இயக்கங்கள் என்று தமிழகமே கொந்தளித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு அதை எதிர்த்துப் போராடியவர்கள் மீது பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்களில் கட்சிகளை கொடூரமாக ஒடுக்கின. அசாமில் 6 பேரும், உ.பி.யில் 19 பேரும், கருநாடகாவில் 2 பேரும் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார்கள். டெல்லியில் சங்கிகள் வெளி மாநிலத்திலிருந்து வன்முறையாளர்களை இறக்குமதி செய்து இஸ்லாமியர்கள் மீது நடத்திய கொலை வெறியாட்டத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்து விட்டனர். காஷ்மீரில் 370ஆவது பிரிவை நீக்கி, அயோத்தியில் மசூதியை இடித்த இடத்தில் ‘ராமன்’ கோயிலைக் கட்ட நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற ஆணவத்தில் குடியுரிமை...

உலகத் தாய்மொழி நாள் – ஈரோடு பொதுக்கூட்டம்

உலகத் தாய்மொழி நாள் – ஈரோடு பொதுக்கூட்டம்

21.02.2020 அன்று உலகத் தாய் மொழி நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு, வடக்கு மற்றும் நாமக்கல் மாவட்ட கழகங்கள் ஒருங்கிணைப் பில் 23.02.2020 அன்று  ஈரோடு திருநகர் காலனி பகுதியில் மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது, நிகழ்வின் தொடக்கத்தில் தோழர் சித்திக், தமுமுக மாவட்டத் தலைவர் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ச்சி யாக இணைய தள பொறுப்பாளர் விஜய்குமார், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்  முத்து பாண்டி குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சிற்றுரை ஆற்றினர். அடுத்ததாக ‘நாடு எங்கே போய்க் கொண்டுள்ளது‘ என்ற தலைப்பில் புதுகை பூபாளம் குழுவினர் பல்வேறு பகுத்தறிவு கருத்துக்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கருத்துக்களையும் காண்பவர் கேட்பவர் மகிழ்ந்து பின் சிந்திக்கும் வண்ணம் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக பாடல், இசையோடு கலை நிகழ்ச்சி நடத்தினர். மக்கள் அனை வரும் ஆரவாரமிட்டு, கைத்தட்டி உற் சாகப்படுத்தி மகிழ்ந்து செவிமடுத்தனர் கழகத் தலைவர்...

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான – மக்கள் திரள் போராட்டத்துக்கு கழகம் ஆதரவு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான – மக்கள் திரள் போராட்டத்துக்கு கழகம் ஆதரவு

டெல்லியின் ஷாயின்பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டம் – குடியுரிமை தேசியப் பதிவேடு – குடியுரிமை மக்கள் தொகைப் பதிவு சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதேபோல் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் கண்ணன் ரவுண்டானா பகுதியில் 10 நாட்களாக இரவு பகலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வருகிறார்கள். பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த பொறுப் பாளர்கள் ஆதரவு தெரிவித்து பேசி வருகிறார்கள். ஆண்களைவிட இஸ்லாமிய பெண்கள் பெருமளவில் பங்கேற்பது இந்தப் போராட்டத்தின் தனிச் சிறப்பாகும். காவல்துறை அமைதியாகப் போராடிய மக்கள் மீது திடீரென தடியடி நடத்தி வன்முறையால் போராட்டத்தைக் கலைக்க முயற்சித்தது. அதற்குப் பிறகுதான் போராட்டம் குறித்த செய்தியை ஊடகங்களே வெளியிடத் தொடங்கின. தடியடிக்குப் பிறகு போராட்டம் தமிழ்நாடு முழுதும் மேலும் விரிவடைந்தது. வண்ணாரப்பேட்டை போராட்டக் களம் மேலும் சூடு பிடிக்கத் தொடங்கியது. போராட்டத்தைத் தடை செய்ய ‘சங்கிகள்’ நீதிமன்றத்தை அணுகினர். போராடும் உரிமையை...

கழகத் தலைமை நிலையத்தில் ‘மாதவி’ குறும்படம் திரையிட்டு – விவாதம்

கழகத் தலைமை நிலையத்தில் ‘மாதவி’ குறும்படம் திரையிட்டு – விவாதம்

திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை அலுவல கத்தில் 22.02.2020 அன்று மாலை 5:30 மணியளவில் ‘மாதவி’ குறும்படம் திரையிடப்பட்டது.  தென் சென்னை மாவட்ட செய லாளர் உமாபதி வர வேற்புரை யாற்றி னார். தொடர்ந்து படக் குழுவினர் அறிமுகம் நடைபெற்றது. அதன்பின் கலந்துரையாடல் தொடங்கியது. குறும்படத்தைப் பற்றி ஆழமான விவாதங்களை ஒவ்வொருவரின் பார்வை யிலும் கலந்து கொண்ட தோழர்கள் கேள்விகள் எழுப்பியும், பாராட்டுக்களைத் தெரிவித்தும் குறும்படத்தைப் பற்றிய கருத்துக்களை பரிமாறினர். சிறப்பு விருந்தினர்களான, ஊடகவியலாளர் ஜீவசகாப்தன், மனித உரிமை செயல்பாட்டாளர் தேவநேயன், நக்கீரன் வலைதளப் பொறுப்பாளர் பிலிப்ஸ், மனிதி செல்வி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் ஆசிரியர் சிவகாமி, பேராசிரியர் சரசுவதி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தோழர்களின் கருத்து பரிமாற்றங்களுக்கு இடையில் சிறப்புரையாற்றினர். விரட்டு கலை பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். குறும்படம் திரையிடல், திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் விரட்டு கலை பண்பாட்டு...

திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டம்: கொளத்தூர் மணி பங்கேற்பு

திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டம்: கொளத்தூர் மணி பங்கேற்பு

NPR-NRC-CAA -க்கு எதிரான தொடர் மக்கள் தர்ணா போராட் டத்தில் 22.02.2020 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று சிறப்புரை யாற்றினார். திருப்பூர் இளைஞர்களின் கூட்டமைப்பு, குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் திருப்பூர் காங்கேயம் ரோடு CTC டிப்போ பின்புறம் உள்ள அறிவொளி சாலையில் பாஜக மோடிஅரசால் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், NRC NPR-ஐயும் திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து நடந்து வரும் தொடர் மக்கள் தர்ணா போராட்டத்தின் 7ஆவது நாளான 21.02.202 அன்று மாலை 6.00 மணிக்கு கழகத் தலைவர் CAA – NRC- NRP இன் அபாயம் குறித்து சிறப்புரையாற்றினார். இப்போராட்டத்தில் ஆயிரக் கணக்கான இசுலாமிய சகோதரர்களும், சகோதரிகளும், குழந்தைகளுடன் பங்கேற்று போராடி வருகிறார்கள். கழகத் தலைவருடன் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத்த லைவர் முகில்ராசு, இணைய தள பொறுப்பாளர் விஜய குமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக நிர்வாகிகள் அகிலன், தனபால்,...

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய குடியுரிமை-மக்கள் பதிவேடுகள் அனைத்து தரப்பினருக்கும் ஆபத்தானவை

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய குடியுரிமை-மக்கள் பதிவேடுகள் அனைத்து தரப்பினருக்கும் ஆபத்தானவை

இந்த தேசிய மக்கள் பதிவேடும், இந்தியக் குடியுரிமைப் பதிவேடும் இஸ்லாமியருக்கு மட்டும் எதிரானதா? இல்லை, அனைத்துத் தரப்பினருக்கும் எதிரானது. தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பிரிவினரையும் பாதிக்கும்; எளிய குடிமக்கள் தலையில் தங்களை நிரூபித்துக் கொள்ளும் சுமையை அழுத்துகிறது மத்திய அரசு என்றார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பிப். 17, 2020 அன்று பேராவூரணியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பாதிப்புகளை எனக்கு முன்னர் உரையாற்றிய பலரும்  விளக்கி யிருக்கிறார்கள். குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் விலக்கி, குறிப்பிட்ட நாடுகளை உலகின் கொடூரமான நாடுகள் என்பதாக அடையாளப்படுத்துகிற ஒரு சட்டம்; அதிலும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவர்களுக்கு மட்டும் – 2014க்குப் பின் அந்த நாடுகளெல்லாம் எந்த கொடுமைகளையும் செய்வதில்லை; 2014உடன் நிறுத்திவிட்டார்கள் என்பதைப்போல  -–இந்த சட்டத்தை ஏன் கொண்டு வந்தார்கள்...

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் நடத்திய அண்ணா நினைவு கருத்தரங்கு

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் நடத்திய அண்ணா நினைவு கருத்தரங்கு

நிமிர்வோம் 13 ஆவது வாசகர் வட்ட நிகழ்வு. பேரறிஞர் அண்ணாவின் 51 ஆவது நினைவு நாளை முன்னிட்டு அண்ணா நினைவு தின சிறப்பு வாசகர் வட்டமாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் 16.02.2020 அன்று மாலை 6:30 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் ஊடகவியிலாளர் பிரகாஷ் வரவேற்புரையாற்றினார். தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் சு.பிரகாஷ்  தலைமை வகித்தார்.  அண்ணாவின் இரங்கலுக்காக கலைஞர் எழுதிய கவிதையின் சிறு பகுதியை, ‘இதயத்தை தந்திடண்ணா’ என்ற தலைப்பில் யாழினி வாசித்தார். நிகழ்வில் 30.12.2019 அன்று வேலூர் கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  ஆற்றிய உரை, ‘இந்திய நாட்டினருக்கும் எதிரானது தான் குடியுரிமை திருத்தச் சட்டம்’ என்கிற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இதனை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  வெளியிட, பேராசிரியர் மு.நாகநாதன்  பெற்றுக் கொண்டார். கடந்த வாசகர் வட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  ஆற்றிய உரை, ‘குடியுரிமை சட்டங்களை ஏன்...

கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

16.2.2020 ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறு மணி அளவில் தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தில் மீன் மார்க்கெட் அருகில் மக்கள் அரசு கட்சி பொதுச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற அக் கட்சியின், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து பெருவாரியான மக்கள் கலந்து கொண்டனர். அதில்  அழைக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்சித் பொறுப்பாளர்களும் உரையாற்றினார்கள். மக்கள் அரசு கட்சியின் தலைவர் வழக்கறிஞர் அருள்மொழிவர்மன் சிறப்புரை ஆற்றினார். அக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டி அக்கூட்டத்தின் நோக்கத்தையும், மக்கள் இந்த நேரத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டியதின் மிக முக்கியமான தேவையையும் வலியுறுத்தி நல்லதொரு கண்டன உரையாற்றினார்கள். கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நாச்சியார்கோயில் கிளையின் சார்பாக மூன்றாவது தவணையாக கழகக் கட்டமைப்பு நிதிக்காக ரூ.20,000/- கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது....

பெரியார் சிலை உடைப்பு எதிரொலி: பேராவூரணியில் ஆர்ப்பாட்டம்!

பெரியார் சிலை உடைப்பு எதிரொலி: பேராவூரணியில் ஆர்ப்பாட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே கலிப்பட்டு கிராமத்தில் சமூக விரோதிகளால் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலை கண்டித்து பேராவூரணியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி பெரியார் சிலை அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, தமிழக மக்கள் புரட்சி கழகம், அறநெறி மக்கள் கட்சி, விதை நெல் இலக்கிய கூடம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர். கூட்டத்தில் உண்மைக்கு மாறாக பெரியாரை அவதூறு செய்யும் நோக்கத்தோடு ‘துக்ளக்’ இதழ் விழாவில் பேசிய ரஜினிகாந்துக்கு எதிராகவும்,  கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்த தமிழ்நாடு அமைச்சர்...

திரைமறைவில் நடக்கும் இரகசிய பேரங்கள் இராஜபக்சேவை இந்தியா அழைத்தது ஏன்?

திரைமறைவில் நடக்கும் இரகசிய பேரங்கள் இராஜபக்சேவை இந்தியா அழைத்தது ஏன்?

சென்னை ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் விளக்கம் இராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து ‘ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு’ சார்பாக, சென்னை, வள்ளுவர் கோட்டம் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை அதில் பங்கேற்றுள்ள அமைப்புகள் நடத்தியுள்ளன.  ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு பங்கேற்ற திராவிடர் விடுதலைக் கழகத்தின்  பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், இன்றைய தினம் ஈழத் தமிழர்களின் உரிமைகளைக் காவு கொடுத்து, பா.ஜ.க.வின் நரேந்திர மோடி அரசும்-சிங்கள இன வெறி அரசின் பிரதமரான இராஜ பக்சேவும் இணைந்து  நடத்திடும் ஈழத் தமிழரின் தேசிய இன  அடையாளமழித்து, அங்கு ஒற்றை ஆட்சி முறையை, ஆழ வேரூன்றச் செய்வதற்காக மேற் கொள்ளும் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி உரை யாற்றினார்.  அவரது உரையில் குறிப்பிட்டதாவது : இலங்கைப் பிரதமர் மஹிந்த இராஜபக்சே  5 நாள் அரசு முறைப் பயணமாக 07.02.2020 அன்று புது டெல்லிக்கு வருகை தந்திருக்கிறார். இவரை விமான நிலையம் சென்று வரவேற்றிருக்கிறார், இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை...

எதிர்த்த ஊர் மக்களே மேளதாளத்துடன் வரவேற்பு

எதிர்த்த ஊர் மக்களே மேளதாளத்துடன் வரவேற்பு

தலித் மக்கள் உரிமைக்காக வாதாடி வென்ற வழக்கறிஞர்  ப.பா. மோகனுக்கு பாராட்டு ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள  வடுகபாளையத்தில் கடந்த ஆறு ஆண்டு களுக்கு முன்பு, ஊர்ப் பொதுமக்கள் சுடுகாடு கேட்டு போராடி, இறந்த உள்ளூர்க்காரரின் உடலை நடுரோட்டில் வைத்து சாலை மறியல் செய்த காரணத்தால், 43 பேர் கைது செய்யப்பட்டு சிறைப் படுத்தப்பட்டனர். இதில் திராவிடர் விடுதலைக் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, விடுதலை வேங்கைகள், தற்சார்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட இயக்கங்கள் களப்பணி ஆற்றி, மூத்த வழக்கறிஞர்  ப.பா. மோகன் மூலமாக, கடந்த 6 ஆண்டு களாக பெருந்துறை நீதிமன்றத்தில் வழக்கு நடை பெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட் டிருந்த 43 பேரும் கடந்த 27.12.2019 அன்று பெருந் துறை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், எவ்வித கட்டணமும் வாங்காமல் வாதாடி விடுதலை பெற்றுத்தந்த மூத்த வழக்கறிஞர்  ப.பா மோகன் மற்றும் இந்தப்...

சேலம் மாநாட்டில் நடந்தது என்ன? : சிறப்புக் கூட்டத்தில் விரிவாக விளக்கினார், மூத்த வழக்கறிஞர் துரைசாமி

சேலம் மாநாட்டில் நடந்தது என்ன? : சிறப்புக் கூட்டத்தில் விரிவாக விளக்கினார், மூத்த வழக்கறிஞர் துரைசாமி

‘1971இல் சேலம் மாநாட்டில் நடந்தது என்ன?’ என்ற தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான செ. துரைசாமி, சென்னையில் தலைமைக் கழக அரங்கில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் ஒன்றரை மணி நேரம் விரிவாகப் பேசினார். நிகழ்ச்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாநாட்டையொட்டி இந்துக் கடவுள்களை புண்படுத்தி விட்டதாக மாநாட்டு வரவேற்புக் குழு உறுப் பினர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் தந்தை பெரியார் ஆணையை யேற்று தோழர்கள் சார்பில் வாதாடியவர் வழக்கறிஞர் துரைசாமி. வழக்கு முதலில் சேலம் நீதிமன்றத்தி லும் பிறகு சென்னை பெருநகர நீதி மன்றத்திலும் நடந்தது. பிறகு சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றத்திலும் நடந்தது. சேலம் – சென்னை பெருநகர நீதிமன்றங்களின் வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக ‘துக்ளக்’ சோ சாட்சிய மளித்தபோது அவரை குறுக்கு விசாரணை செய்தார், வழக்கறிஞர் துரைசாமி. பெரியாரை நோக்கி சேலம் ஊர்வலத்தில் செருப்பு...

அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு முழக்கத்தோடு கோவையில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி வகுத்த மாட்சி

அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு முழக்கத்தோடு கோவையில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி வகுத்த மாட்சி

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பாக கோவையில் கடந்த 9.2.2020 அன்று நீலச் சட்டை பேரணி ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. காவல்துறை அனுமதி மறுப்பின் காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த நிகழ்வு பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்புத் தோழர்களின் இடையறாத முயற்சியால் நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெறப்பட்டு பேரணியும் மாநாடும் திட்டமிட்டபடி நடந்துள்ளது. இந்தப் பேரணியும் மாநாடும் பொதுமக்களின் பார்வையை ஈர்த்து விடக்கூடாது என்று அரசும் காவல் துறையும் பேரணி துவங்கும் போதும் மாநாடு நடைபெறும் பொழுதும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்திய வண்ணமே இருந்தார்கள். பேரணி நடைபெறும் 9.2.2020 முந்தைய நாள் மதியம் திடீரென காவல்துறை ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்த பேரணி செல்லும் பாதைக்கு அனுமதி மறுத்து குறுகலான சாலையில் பொதுமக்களின் பார்வை படாத இடத்தில் ஊர்வலப் பாதையை மாற்றி அமைத்தது. கோவையில் அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் பொதுக் கூட்டங்கள் நடத்தும் வ.உ.சி. பூங்கா மைதானத்தில ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்துவதற்கு...

மடத்துக்குளம் பகுதியில் குடியுரிமைச் சட்ட ஆபத்துகளை விளக்கி பரப்புரை

மடத்துக்குளம் பகுதியில் குடியுரிமைச் சட்ட ஆபத்துகளை விளக்கி பரப்புரை

காந்தியார் படுகொலை நாளை முன்னிட்டு, 30.1.2020 அன்று உடுமலை. மடத்துக்குளம் பகுதியில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையில் உடுமலை மடத்துக்குளம் முற்போக்காளர் கூட்டமைப்பு சார்பாக காந்தி படுகொலை  நாள் ஊஹஹ., சூசுஊ., சூஞசு. எதிர்ப்புப் பரப்புரை பயணமாக நடத்தப்பட்டது.  வேன்கள், இரு சக்கர வாகனம் மூலம் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் இரா. மோகன்  தலைமையில் துவங்கியது.குமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர், காரத் தொழுவு, துங்காவி, பூளவாடி, குடிமங்கலம், பெதப்பம்பட்டி, கொங்கல் நகர், முக்கோணம் பகுதி, குட்டை திடல், இறுதியாக உடுமலை சித்தரக் கூடம் ஆகிய பகுதிகளில் மக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. பரப்புரை பயணத்தில், இந்திய ஜக்கிய கம்யூனிஸ்ட் , ஆதி தமிழர் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் பண்பாட்டு இயக்கம், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் தமிழர் கட்சி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியில்...

நாச்சியார் கோயில் கழகக் கூட்டத்தில் கழகத்தினர் வழங்கிய ரூ.30,000 நிதி

நாச்சியார் கோயில் கழகக் கூட்டத்தில் கழகத்தினர் வழங்கிய ரூ.30,000 நிதி

பெரியாரின் 41 ஆவது நினைவு நாள் கூட்டம் 1.2. 2020 அன்று சனிக்கிழமை மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்டம்  நாச்சியார் கோவில் வடக்கு வீதியில்   மிகச் சிறப்பாக நடை பெற்றது.   மாவட்டத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன் தலை மையிலும் தலைமைக் குழு உறுப்பினர்  இளைய ராஜா மற்றும் சோலை மாரியப்பன் முன்னிலையிலும் தொடங்கியது. கூட்டத்திற்கு, குடந்தை ஒன்றிய அமைப்பாளர் வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட செயலாளர் கு. பாரி, நாகை மாவட்ட செயலாளர்  தே.மகேஷ், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்முகமது , சிவபுரம் மாணவர் கபிலன் ஆகியோர் உரையாற்றினர் . அதனைத் தொடர்ந்து நாச்சியார் கோவில் தி.வி.க . கிளைக் கழகம் சார்பில் இரண்டாவது தவணையாக ரூ.30,000  (முப்பதாயிரம் மட்டும்) கழகத் தலைவர் தா.செ. மணியிடம் வழங்கப்பட்டது. கழகத்  தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை நிகழ்த்தினார். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகவே பேச்சு...

‘கற்க கல்வி’ அறக்கட்டளை சார்பில் மணியம்மையார் நூற்றாண்டு விழா – பொதுக் கூட்டம்

‘கற்க கல்வி’ அறக்கட்டளை சார்பில் மணியம்மையார் நூற்றாண்டு விழா – பொதுக் கூட்டம்

‘கற்க கல்வி’ அறக்கட்டளை சார்பாக 02.02.2020 அன்று மாலை 6 மணியளவில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ் வழியில் பயிலும் 2000 மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கும் விழாவும், சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. கற்க கல்வி அறக்கட்டளை செயலாளரும், திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினருமான கரு அண்ணாமலை நிகழ்விற்கு தலைமை வகித்தார்.  திவிக தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர் நிகழ்வை ஒருங்கிணைத்தார். ப.அமர்நாத் வரவேற்புரை யாற்றினார். ‘விரட்டு’ வீதி நாடகக் குழுவினர், ‘ஹசவiஉடந 21’ அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம் என்ற தலைப்பில், தேசிய கல்விக் கொள்கையின் ஆபத்தை விளக்கும் வகையில் வீதி நாடகத்தை நிகழ்த்திக் காட்டினர். அதைத் தொடர்ந்து, மருத்துவர் எழிலன், மா.சுப்பிரமணி (தென் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர்), வழக்கறிஞர் எஸ். துரைசாமி (துணைத் தலைவர் தந்தை பெரியார் திராவிடர் கழகம்), கொளத்தூர் மணி...

கழகத் தோழர்களே!

கழகத் தோழர்களே!

புரட்சிப் பெரியார்முழக்கம், நிமிர்வோம் இதழுக்கு சந்தா சேர்க்கும் இயக்கத்தை விரைவுப் படுத்துவீர்! 2020ஆம் ஆண்டில் இதழ்கள் தொடர்ந்து வெளிவர வேண்டிய பொறுப்பை தோழர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறோம். இயக்க இதழ்கள் தான் தோழர்களை இணைக்கும் இணைப்புச் சங்கிலி. தோழர்களின் செயல்பாடுகளை சுமந்து வரும் கழகத்தின் ‘தூது மடல்’. ஒரு இயக்கம் உயிரோட்டமாக தன்னை இறுத்திக் கொள்வதற்கு இயக்க இதழ்களே சுவாசக் காற்று என்பது, நீங்கள் அறியாதது அல்ல! தோழர்களே! விரைந்து செயல்படுங்கள்! பிப்ரவரி இறுதிக்குள் சந்தா சேர்ப்பு இயக்கத்தை நிறைவு செய்தாக வேண்டிய கடமை உணர்ந்து, களத்தில் இறங்குங்கள்! பெரியார் முழக்கம் 06022020 இதழ்

ஆசிரியருக்குக் கடிதம் வேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்?

ஆசிரியருக்குக் கடிதம் வேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்?

பிறப்பின் அடிப்படையில் மட்டுமே ஒருவர் ‘இந்து’ என்று அடையாளப்படுத்தப்படுகிறார். இந்து ‘சனாதன தர்மம்’ இந்துக் கடவுள்களின் பிறப்பு, இந்து மத நூல்கள் குறித்து பெரும்பாலான இந்து மக்களுக்கு எதுவும் தெரியாது. அதன் காரணமாகத்தான் பார்ப்பனர்கள் சூழ்ச்சியாக, தங்கள் பார்ப்பனிய வேத மதத்தை இந்து மதம் என்று கூறி பார்ப்பனரல்லாத மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அர்ச்சகர் ஆகும் உரிமை தங்களுக்கே உண்டு என்று உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடுகிறார்ககள். ஆனால் வழிபாடுமுறைகள் குறித்து புரோகிதர்களுக்கு தேர்வுகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை. கல்வித் தரத்தை உயர்த்த ‘நீட்’ தேர்வு 5ஆம் வகுப்புக்கு தேர்வு; 8ஆம் வகுப்புக்கு தேர்வு என்றெல்லாம் பேசுகிறவர்கள் அர்ச்சகர் புரோகிதர் ஆவதற்கும் ‘தகுதி’ வேண்டும். அதற்கான தேர்வு வேண்டும் என்றும் ஏன் வலியுறுத்துவது இல்லை? அதேபோல் சமஸ்கிருதத்தில் புரோகிதப் பார்ப்பனர்கள் ஓதும் மந்திரங்களின் தமிழ்மொழி பெயர்ப்பை ஏன் மக்களிடம் எடுத்துச் சொல்லக் கூடாது? இந்தி திரைப்படம் ஓடினால் புரிந்து கொள்வதற்கு அதற்கு...

திருப்பூர்-கொளத்தூர்-மேட்டூரில் தமிழர் திருநாள்

திருப்பூர்-கொளத்தூர்-மேட்டூரில் தமிழர் திருநாள்

திருப்பூர் மாவட்ட திவிக சார்பில் பதினோராம் ஆண்டு தை 1 தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா நாள் 26.1.2020 ஞாயிறு காலை 8 மணிக்கு மாஸ்கோ நகர் பெரியார் திடலில் நிகர் கலைக்குழுவினர் பறை முழக்கத் துடன் ஆரம்பித்தது. தமிழர் விழா, பகுதி மக்களின் ஒத்துழைப்போடு நடைபெறும் இவ்விழாவில் முதல் நிகழ்வாக காலை 9 மணி அளவில் தோழர் புல்லட் இரவி (அமமுக) பொங்கல் வழங்கினார். அதனை தொடர்ந்து சிறுவர் சிறுமி களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை சேகர் (அதிமுக) தொடங்கி வைத்தார். கழகப் பொருளாளர் துரைசாமி தொடக்க உரையாற்றிய பின் திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு, செயலாளர் நீதிராசன், அமைப்பாளர் அகிலன், சங்கீதா, மாநகர் தலைவர் தனபால், செயலாளர் மாதவன் மற்றும் மாநகர் அமைப்பாளர் முத்து ஆகியோர் பல்வேறு விளையாட்டு போட்டிகளை திறம்பட நடத்தினர். உடன் தமிழ்நாடு மாணவர் கழக நிர்வாகிகள் தோழர் சந்தோஷ் மற்றும் பிரசாந்த் ஒருங்கிணைத்தனர் சிறுவர்...