கொடைக்கானலில் ஆளுநருக்குக் கழகம் கருப்புக் கொடி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கொடைக்கானலுக்கு வருகை தந்ததை ஒட்டி அவருக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் தமிழ்நாடு அரசுக்கு எதிராகச் செயல்படுவதையும், சட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதைக் கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டன.

பின்னர் கழகத் தோழர்கள் மருதமூர்த்தி, பெரியார், மாக்சிம் கார்கி, ராஜா, கபாலி, ஆயுதன், வீரா, ஜீவா, துர்க்கைராஜ், சிவா, முருகன் உள்ளிட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுக்கப்பட்டனர்.

பெரியார் முழக்கம் 18052023 இதழ்

You may also like...