Category: பெரியார் முழக்கம் 2019

இலங்கையின் தொடர் குண்டு வெடிப்புகள் கடவுளின் ஆட்சிக்கு மனித உயிர்களை பலி கேட்கும் மதவெறி

இலங்கையின் தொடர் குண்டு வெடிப்புகள் கடவுளின் ஆட்சிக்கு மனித உயிர்களை பலி கேட்கும் மதவெறி

இலங்கையில் கிறித்துவர்களைக் குறி வைத்து அவர்களின் வழிபாட்டு இடங்களிலும் நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டு வெடித்து 310க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகிவிட்டனர். 500 பேருக்கு மேல் படுகாயமடைந்துள்னர். மட்டக் களப்பில் ஈஸ்டர் நாள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த தமிழர்களும் குண்டு வெடிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவைச் சார்ந்த 5 பேர் உயிர்ப் பலியாகியுள்ளனர். சிறுபான்மை மக்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதல் கடும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை என்றாலும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு மீது இலங்கை அரசு சந்தேகம் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் தாக்குதலுக்கு குறி வைக்கப் பட்டவர்கள் – மதத்தின் அடிப்படையில் தான் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. உலகம் முழுதும் மத பயங்கரவாதம் மனித குலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஈரான், சிரியா, ஆப்கானிஸ்தான் என்று இந்த பட்டியல் விரிவடைந்து நிற்கிறது. தங்களின் ‘கடவுள்’ ஆணையை ஏற்று ‘மத அரசாட்சியை’ உருவாக்குவதற்காக மனித...

பிரெஞ்சு நாளேடு அம்பலப்படுத்துகிறது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு இடைத் தரகரா மோடி

பிரெஞ்சு நாளேடு அம்பலப்படுத்துகிறது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு இடைத் தரகரா மோடி

ரிலையன்ஸ் நிறுவனம், பிரான்ஸ் அரசிடம் ரூ. 1,124 கோடி வரித் தள்ளுபடி பெற்றிருப்பதன் மூலம், ரபேல் பேரத்தில், அனில் அம்பானிக்கு பிரதமர் மோடி, இடைத்தரகராக செயல்பட்டிருப்பது நிரூபணமாகி இருப்பதாக காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.  இதுதொடர்பான விவரம் வருமாறு: இந்தியாவின் பெருமுதலாளிகளில் ஒருவரான அனில் அம்பானி, ‘ரிலையன்ஸ் அட்லாண்டில் பிளாக் பிரான்ஸ்’ எனும் பெயரில் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றை, பிரான்சில் நடத்தி வருகிறார். ஆனால், பிரான்ஸ் அரசுக்கு செலுத்த வேண்டிய 151 மில்லியன் யூரோ (சுமார் ரூ. 1182 கோடி) அளவிற்கான வரியை, கடந்த 2007 முதல் 2012ஆம் ஆண்டு வரை அம்பானி செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், பிரான்ஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில், முதற்கட்டமாக 7.3 மில்லியன் யூரோவை (ரூ. 57 கோடி) செலுத்த, ரிலையன்ஸ் நிறுவனம் சம்மதித்துள்ளது. 2014 கால கட்டத்தில் இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன....

தலைமைக் கழக அலுவலகத்தைத் தக்க வைத்துக் கொள்ள கட்டமைப்பு நிதி கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

தலைமைக் கழக அலுவலகத்தைத் தக்க வைத்துக் கொள்ள கட்டமைப்பு நிதி கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

திராவிடர் விடுதலைக் கழகத்துக்காக சென்னையில் அமைந்துள்ள தலைமையகத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தை கழகத் தோழர்கள் நன்றாக உணர்வார்கள். கடும் முயற்சி எடுத்து குத்தகைக்கு எடுத்து அந்தத் தலைமை அலுவலகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு மட்டுமல்ல; எத்தனையோ சிறிய அமைப்புகள், இயக்கங்கள் தங்களுக்கான கலந்துரை யாடல், சந்திப்புக் கூட்டங்கள் நடத்துவதற்கு ‘தாய் வீடாக’ நமது தலைமைக் கழகம் பயன்பட்டு வருகிறது. நகரின் மய்யப் பகுதியில் உள்ள  அந்த அலுவலகத்தை அதன் உரிமையாளர்கள் விற்பனை செய்ய முடிவெடுத்தபோது தலைமைக் கழகம் இல்லாமல் போய் விடுமே என்ற கவலையும் வருத்தமும் நமக்கு உருவானது. இதைக் காப்பாற்றிக் கொள்ள  வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதற்காக ஆதரவாளர்கள் நண்பர்களிடம் கட்டமைப்பு நிதி திரட்டும் முயற்சிகளில் இறங்கினோம். பலரும் ஆர்வத்துடன் உதவினார்கள். நட்புக்கரம் நீட்டினார்கள். ஆனாலும் அலுவலக கட்டிடத்தை வாங்கு வதற்கான தொகையில் பாதியளவைக்கூட நம்மால் எட்ட முடியவில்லை....

புல்வாமா தாக்குதல்: இந்திய ஊடகங்கள் கேட்கத் தவறிய கேள்விகள்

புல்வாமா தாக்குதல்: இந்திய ஊடகங்கள் கேட்கத் தவறிய கேள்விகள்

அதிகாரபூர்வத் தகவல் தொடர்பைக் குறைத்து, சமூக ஊடகங்களின் மூலம் அதிகார பூர்வமற்ற செய்திகளை அதிகளவில் வெளியிட்டதன் மூலம், பல கேள்விகளுக்குப் மத்திய அரசு விடையளிக்கவில்லை. (‘தி ஸ்க்ரால்’ பத்திரிகையில் கல்பனா சர்மா எழுதிய கட்டுரை) காஷ்மீரில் உள்ள புல்வாமா என்னும் ஊரில் பிப்ரவரி 14 அன்று நடந்த தற்கொலைப் படை தாக்குதலில், 40 ரிசர்வ் காவல்துறை வீரர்களின் மரணத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் முக்கியமான ஊடகங்கள், குறிப்பாக தொலைக்காட்சி செய்திகள், இதுவரை எட்டாத உற்சாகத்தையும் பரவசத்தையும் அடைந்துள்ளன. இது ஆபத்தானதாக இல்லாமல் இருந்தால், வியப்பானது என்று சொல்லி ஒதுக்கிவிடலாம். ஆனால், ஊடகங்களின் இந்தப் போக்கு தேர்தல் காலத்தில் அதீதமான தேசியவாதத்திற்கான தீனியைப் போட்டிருக்கிறது. இந் நிகழ்வின் உடனடி எதிர்வினை என்பது காஷ்மீரிகள் மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் – மீதான விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் மற்றும் பிறரின் தாக்குதலாகும். வரப்போகும் தேர்தலில் இது முக்கியமாகக் கருதப்படும். ஏற்கெனவே, பாஜக கட்சித் தலைவர் அமித்ஷா...

கழக சார்பில் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

கழக சார்பில் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

சென்னையில் : டாக்டர் அம்பேத்கர் 128ஆவது பிறந்தநாளான 14.04.2019 காலை 9 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர்  சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கழகத் தோழர்கள் ஜாதி, மத எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின் இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் கழகத்  தோழர்கள் ராஜீ, சங்கீதா, அம்பிகா, பூர்ணிமா ஆகியோர் அம்பேத்கர் படத்திற்கும், பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். திருப்பூரில் :  திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்வாக 14.04.2019 ஞாயிறு காலை 11.00 மணியளவில் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது. கழகப் பொரு ளாளர்...

தென்னகத்தை அடக்கும் வடநாடு: அம்பேத்கர் தந்த எச்சரிக்கை

தென்னகத்தை அடக்கும் வடநாடு: அம்பேத்கர் தந்த எச்சரிக்கை

2019 தேர்தல் களம் வடக்கு, தெற்காகப் பிரிந்து நிற்கிறது. பா.ஜ.க. வடநாட்டுக் கட்சியாகவே செயல்படுகிறது. தென்னாடு புறக்கணிக்கப்படுகிறது என்று திராவிடர் இயக்கத்தின் கருத்தை ராகுல் காந்தியும் ப. சிதம்பரமும் பேசி  வருகின்றனர். இந்த ஆபத்தை டாக்டர் அம்பேத்கரே சுட்டிக் காட்டியிருந்தார். அம்பேத்கர் 128ஆவது பிறந்த நாள் நினைவாக அம்பேத்கர் கருத்தை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. வட மாநிலங்கள் தென் மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஆபத்துகள் இந்தியா வில் உருவாகிவிடும் என்பதை முன்கூட்டியே எச்சரித்திருக்கிறார் டாக்டர் அம்பேத்கர் ‘மொழி வழி மாநிலங்கள் குறித்த சிந்தனை’ என்ற நூலில் அவர் எழுதியிருப்பதாவது : மாநிலங்களின் பிரிவினைக்கான ஆணையம் மாநிலங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியிருப்பது மட்டுமல்ல, தென்னாடு வடநாடு மோதல்களுக்கும் வழி வகுத்திருக் கிறது. உ.பி, பீகார் என்ற இரண்டு பெரிய மாநிலங்களையும் அப்படியே நீடிக்க அனுமதித்துவிட்டார்கள். இந்த வடமாநிலங் களுக்கு வலிமை சேர்ப்பது போல், மற்றொரு பெரிய மாநிலமாக மத்திய பிரதேசமும்,...

‘பிரண்ட் லைன்’ பத்திரிகை ஆய்வு உ.பி. பீகாரில் பா.ஜ.க.வுக்கு கடும் பின்னடைவு

‘பிரண்ட் லைன்’ பத்திரிகை ஆய்வு உ.பி. பீகாரில் பா.ஜ.க.வுக்கு கடும் பின்னடைவு

உ.பி. பீகாரில் பா.ஜ.க. இந்தத் தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்திக்கும் என்று ‘பிரண்ட் லைன்’ இதழ் (ஏப். 26, 2019) – அதன் செய்தியாளர்கள்  தந்துள்ள தகவல் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு தேர்தலில் உ.பி.யில் பா.ஜ.க. 71 இடங்களைப் பிடித்திருந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் 2013இல் நடந்த முசாஃபர் நகர் கலவரம். மதக் கலவரத்தில் முஸ்லிம்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு அவர்கள் உடைமைகள் அழிக்கப் பட்டன.  60 பேர் உயிர்ப் பலியானார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.  இந்து – இஸ்லாமியர் என்ற அடிப்படையில் வெறுப்பு அரசியலை பாஜ.க.வும் – ஆர்.எஸ்.எஸ்.சும் திட்டமிட்டு உருவாக்கியது. எனவே இந்தப் பகுதியில் பெரும்பாலான இடங்களை தேர்தலில் பாஜ.க. ஜாதி மற்றும் கட்சிகளைக் கடந்த அறுவடை செய்ய முடிந்தது. இப்போது அந்த நிலை மாறி விட்டது. 2014இல் 16 இடங்களை வென்ற பாஜ.க. மேற்கு உ.பி. பகுதியில் ஏப்.11, 17 தேதிகளில் இப்போது முதல்...

மோடியின் 10 சதவீத இடஒதுக்கீடு ஒரு ஏமாற்று வித்தை 445 உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டின் நிலை என்ன?

மோடியின் 10 சதவீத இடஒதுக்கீடு ஒரு ஏமாற்று வித்தை 445 உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டின் நிலை என்ன?

திறந்த போட்டியில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மோடி ஆட்சி அவசர அவசரமாய் கொண்டு வந்தது. தேர்தலில் வாக்கு அரசியல் நடவடிக்கையே தவிர, உண்மையாக அந்த 10 சதவீத ‘ஏழைகளுக்கு’ பயன் கிடைக்க வேண்டும் என்பது அல்ல. இது குறித்து இந்து ஆங்கில நாளேட்டில் (ஏப். 10, 2019) ஒரு ஆய்வுக் கட்டுரை வெளி வந்துள்ளது. ஏற்கனவே உயர் கல்வியில் மேற்குறிப்பிட்ட பொருளாதார நலிந்த பிரிவினர் 10 சதவீதத்துக்கு கூடுதலாகவே இடம் பெற்றிருக்கின்றனர் என்பதை புள்ளி விவரங்களுடன் நிறுவியுள்ளது அக்கட்டுரை. கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள்: மத்திய மனித வளத் துறை அமைச்சகம் 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களை தர வரிசைப்படுத்தும் ஒரு முறையை 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன்படி தர வரிசையை முறைப்படுத்தும் தேசிய நிறுவனம் ஒன்று உருவாக்கப் பட்டது. (National Institute Ranking Frame Work-NIRF) இந்த நிறுவனம் 2018இல் 445...

கதிர் முகிலன் – நஜ்முன்னிசா இணையேற்பு

கதிர் முகிலன் – நஜ்முன்னிசா இணையேற்பு

திருப்பூர் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் முகில் இராசு, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி ஆகியோர் மகன் கதிர் முகிலனுக்கும், திருப்பூர் அப்துல் ஜப்பார் – சுபைதா பேகம் ஆகியோரின் மகள் நஜ் முன்னிசாவிற்கும் 3.4.2019 அன்று மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் வாழ்க்கை இணையேற்பு நடைபெற்றது. இது மத மறுப்புத் திருமணமாகும். பெரியார் முழக்கம் 11042019 இதழ்

வெறுப்பு அரசியல் நடத்தும் பா.ஜ.க.: 200 எழுத்தாளர்கள்  கூட்டறிக்கை

வெறுப்பு அரசியல் நடத்தும் பா.ஜ.க.: 200 எழுத்தாளர்கள் கூட்டறிக்கை

  வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பர், ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் அமிதவ் கோஷ், ‘புக்கர்’ விருதுபெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், எழுத்தாளர்கள் நயன்தாரா சாகல், ஜெர்ரி பிரின்டோ, ஆனந்த் டெல்டும்டே, நாடகாசிரியர் கிரிஷ் கர்னாட், பி. சிவகாமி, விஜயலட்சுமி, விஜய்பிரசாத் முதலான 200 எழுத்தாளர்கள் கையெழுத்திட்டு, இந்தி, ஆங்கிலம், தமிழ், பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, வங்காளம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது, காஷ்மீரி உள்ளிட்ட மொழிகளில் தங்களின் வேண்டுகோளை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நமது அரசமைப்புச் சட்டம், நாட்டின்குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமைகளை உத்தரவாதப்படுத்தி இருக்கிறது. தாங்கள் விரும்பியபடி சாப்பிடுவதற்கான உரிமை, வழிபடுவதற்கான உரிமை மற்றும் வாழ்வதற்கான உரிமையை அனைவருக்கும் சமமாக வழங்கியிருக்கிறது. அதேபோன்று ஆட்சியிலிருப்போரின் கருத்துக்களை விமர்சிப்பதற்கான பேச்சுரிமையையும் வழங்கியிருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மதத்தின் பேராலும், சாதியின் பேராலும், வேறொரு மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று பாகுபாடு ஏற்படுத்தியும், குடிமக்கள் தாக்கப்படும் மற்றும் கொல்லப்படும்...

காவிரி: பா.ஜ.க.வின் துரோகங்கள், நினைவிருக்கிறதா?

காவிரி: பா.ஜ.க.வின் துரோகங்கள், நினைவிருக்கிறதா?

காவிரிப் பிரச்சினையில் நடுவண் ஆட்சி பச்சையாக – தனது தேர்தல் அரசியல் நலனுக்காக தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை திட்டமிட்டு துரோகம் செய்ததை மறக்க முடியுமா? 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், “6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் – இந்த 6 வார காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது” என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தது. (It is hereby made clear that no extension shall be granted for framing the scheme on any ground – தீர்ப்பு பக்.451) 6 வார காலத்துக்குள் தீர்ப்பை அமுல்படுத்த முடியாது என்று தமிழகம் வந்த மத்திய அமைச்சர்கள் பேட்டி அளித்தனர். தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய மத்திய நீர்வளத் துறை செயலாளரும் இதே போன்ற கருத்துகளையே வெளியிட்டார். 6 வாரக் கெடு முடியும் வரை மத்திய அரசு தீர்ப்பை அமுல்படுத்த எந்த...

பா.ஜ.க. தேர்தல் அறிக்கை : தமிழிசை தடுமாறுகிறார்

பா.ஜ.க. தேர்தல் அறிக்கை : தமிழிசை தடுமாறுகிறார்

இராமர் கோயில் கட்டுவோம்; சமஸ்கிருதத்தைப் பள்ளிப் பாடமாக்குவோம் என்கிறது பா.ஜ.க. தேர்தல் அறிக்கை. ‘நீட்’ குறித்து மவுனம் சாதிக்கிறது. தமிழிசையிடம் இது குறித்து செய்தியாளர் கேட்டபோது நீட் பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது என்று சமாதானம் கூறியிருக்கிறார். சபரிமலை கோயிலுக்குள் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் சபரிமலையில் பாரம்பரிய முறையை மீறக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப் போவதாக இதே தேர்தல் அறிக்கைதான் கூறுகிறது. இதற்கு தமிழிசையிடம் பதில் உண்டா? பெரியார் முழக்கம் 11042019 இதழ்

மோடியின் அடுக்கடுக்கான ‘பொய்’ (2)

மோடியின் அடுக்கடுக்கான ‘பொய்’ (2)

பகுதி 1   மோடி பேசி வரும் பொய்களின் ஒரு தொகுப்பு, இது. 600 கோடி ஓட்டு: மோடி உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய மோடி, கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக 600 கோடி மக்கள் ஓட்டு போட்டு என்னை பிரதமராக தேர்வு செய்திருக்கிறார்கள் என்றார். இந்தியாவின் மக்கள் தொகையே 120 கோடி மட்டும் தான். அதிலும் ஓட்டு போடும் மக்கள் 80 கோடி பேர் தான். இந்த 80 கோடி பேரில் 600 கோடி ஓட்டு பெற்று பிரதமர் ஆனதாக மோடி குறிப்பிடுகிறார். இப்படியொரு  அறிவாளி பிரதமரை இந்தியா கொண்டிருப்பதற்கு என்ன தவம் செய்ததோ! குஜராத்திலிருந்து முதல் பிரதமர்: மோடியின் பொய் குஜராத்திலிருந்து பிரதமராகும் முதல் நபர் தான் மட்டுமே என மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார். ஆனால் உண்மை? இந்தியாவின் வரலாற்றில் நான்காவது பிரதமராக மொரார்ஜி தேசாய் குஜராத்திலிருந்து வந்தவர் தான். ஆனால் மோடி தன்னை குஜராத்திலிருந்து...

எடப்பாடி ஊழல் பற்றிப் பேசலாமா

எடப்பாடி ஊழல் பற்றிப் பேசலாமா

தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாளுக்கு நாள் தரம்தாழ்ந்து பேசி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை ‘நீ, வா, போ’ என்று ஒருமையில் பேசத் தொடங்கி விட்டார். ‘தமிழ் இந்து’ நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றும் இதை சுட்டிக்காட்டியுள்ளது. முதலமைச்சரை மட்டும் குறை சொல்லிவிட்டதாக எவரும் கருதி விடக் கூடாது என்பதற்காக மு.க. ஸ்டாலினும் தரக்குறைவாகப் பேசுவதாக அந்த ஏடு எழுதியுள்ளது. எங்கே, எந்தக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் அப்படித் தரம் தாழந்து ஒருமையில் பேசினார் என்பதை நேர்மையோடு எடுத்துக்காட்ட அந்த ஏடு தயாராக இல்லை. தி.மு.க. ஆட்சி – ஊழல் ஆட்சியை நடத்தியதாக எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். காக்னிசன்ட் என்ற அமெரிக்க நிறுவனம், தமிழ்நாட்டில் அதன் கிளையைத் தொடங்க தமிழக ஆட்சியாளர் களுக்கு 20 இலட்சம் டாலர் இலஞ்சம் கொடுத்த செய்தி அமெரிக்க நீதிமன்றத்தில் அம்பலமாகி அதற்காக அந்நாட்டு நீதிமன்றம் அந்த...

ஆர்.எஸ்.எஸ்.சின் சதி : மு.க. ஸ்டாலின் விளக்கம்

ஆர்.எஸ்.எஸ்.சின் சதி : மு.க. ஸ்டாலின் விளக்கம்

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, கிருஷ்ணன் குறித்துப் பேசியதாக வன்முறையில் இறங்கியிருப்பது ஆர்.எஸ்.எஸ். சதி என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி: கேள்வி: திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கி.வீரமணி அவர்கள் கிருஷ்ணனைப்பற்றி தவறாகப் பேசியதாக  சொல்கிறார்களே, அதை தி.மு.க. ஏற்றுக்கொள்ளுமா? மு.க.ஸ்டாலின்: அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சல்ல அது. ஏற்கெனவே அவர் திராவிடர் கழகத் தலைமை அலுவலகமாக இருக்கக்கூடிய பெரியார் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேச்சாகும். யாரையும் கொச்சைப்படுத்தியோ, கேவலப்படுத்தியோ பேச வேண்டும் என்கிற நோக்கத்தோடு பேசவில்லை. அவர் சில உதாரணங்களைச் சொல்லி பேசியிருக்கிறார். அதை இன்றைக்கு சில ஊடகங்கள், ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகள் தேர்தல் நேரத்தில், அதனை தவறாகத் திரித்து, மக்களிடத்தில் தவறான பிரச்சாரத்தினைக் கொண்டு போக வேண்டும் என்கிற நோக்கில் திட்டமிட்டு செய்திருக்கின்ற சதி இது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், பேரறிஞர் அண்ணாவின்...

தேர்தல் நன்கொடை திரட்ட பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்த கொல்லைப்புற சட்டத்திருத்தம்

தேர்தல் நன்கொடை திரட்ட பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்த கொல்லைப்புற சட்டத்திருத்தம்

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக வருமான வரித்துறையை கூச்சநாச்ச மின்றி பயன்படுத்தி வருகிறது மோடி ஆட்சி. தேர்தல் ஆணையமோ, மல்லிகைப் பூவில் அடிப்பதுபோல் பா.ஜ.க.வினருக்கு ‘காதல் கடிதங்களை’ எழுதிக் கொண்டிருக்கிறது. அவ்வளவு நேர்மையாக ஆணையம் செயல்படுவதுபோல் மக்கள் காதில் பூ சுற்றுகின்றனர். தேர்தல் களத்தை நேர்மையாக நடத்துவதாக நாடகம் போடும் மோடி ஆட்சியின் முகத்திரையைக் கிழிக்கும் ஒரு செய்தியை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இப்போது உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அது ‘தேர்தல் பத்திரம்’ தொடர்பான வழக்கு. அது என்ன தேர்தல் பத்திரம்? கடந்த ஆண்டு மத்திய நிதியமைச்சர்  அருண் ஜெட்லி அறிமுகப்படுத்திய திட்டம். இதன்படி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தரும் நிறுவனங்கள் ரொக்கமாகப் பணம் தருவதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட வங்கியில் மின்னணு எந்திரம் வழியாக நன்கொடை செலுத்தி தொகைக்கான பத்திரத்தைப் பெற்று அந்தப் பத்திரத்தை கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். இதற்காக இந்திய ஸ்டேட் வங்கியில் ஒரு கோடி ரூபாய் வரையில்...

பா.ஜ.க. ஆட்சியின் ‘நமோ டி.வி.’ மோசடி

பா.ஜ.க. ஆட்சியின் ‘நமோ டி.வி.’ மோசடி

தேர்தல் நடத்தி விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு வருகிறது மோடி ஆட்சி. ‘தூர்தர்ஷன்’ என்ற அரசு தொலைக்காட்சி சேவையும் அகில இந்திய வானொலியும் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சார மேடைகளாக மாற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி நடத்தை விதிகள் அமுலுக்கு வந்த பிறகு விதிகளுக்கு மாறாக ‘நமோ டிவி’ என்ற தொலைக்காட்சி சேவையை பா.ஜ.க. தொடங்கியிருக்கிறது. ஒரு தொலைக்காட்சி சேவை தொடங்கப்பட வேண்டுமானால் அதற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த ஒப்புதல் ஏதும் பெறாமலே இந்த ‘நமோ டிவி’ தொடங்கப்பட்டு விட்டது. மோடியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகள் தம்பட்டமடிக்கப்படுகின்றன. மார்ச் 31ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த ‘டி.வி.’, ‘டிடிஎச்’ (Direct to Home) அலைவரிசையைப் பயன்படுத்தி வருகிறது. எதிர்கட்சிகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ‘இது தனியார் விளம்பர சேவை; தொலைக்காட்சியல்ல’ என்று விளக்கம் கூறுகிறது பா.ஜ.க. இந்தத் தொலைக்காட்சி உரிமையாளர்...

‘நெல்ப்’ முறையை மாற்றி ‘ஹெல்ப்’ முறையைக் கொண்டு வந்தது யார்?

‘நெல்ப்’ முறையை மாற்றி ‘ஹெல்ப்’ முறையைக் கொண்டு வந்தது யார்?

மீத்தேன், ஷேல்கேஸ் போன்ற பூமிக்கடியில் உள்ள இயற்கை எரிவாயுக்களை எடுப்பதற்கு தனித்தனியாக அனுமதி பெறும் ‘நெல்ப்’ முறையை மாற்றி ‘ஹெல்ப்’ எனப்படும் ஒற்றை உரிமத்தை பெற்றால் போதும்; ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டு பூமிக்கடியில் உள்ள எந்த இயற்கை வளங்களை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். பன்னாட்டு முதலாளிகள் இந்திய இயற்கை எரிவாயு வளங்களை கொள்ளையடிப்பதற்காக, ‘தளர்த்தப்பட்ட திறந்தவெளி அனுமதி திட்டம்’ என்ற புதிய கொள்கையின்படி எண்ணெய் வயல்களை மத்திய ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் அடையாளம் கண்டு அதை ஏலம் விட்டுக் கொண்டுள்ளது. இதில் பெயரளவிற்கு ஒரு சில இடங்களை மட்டும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்துவிட்டு பெரும்பாலான இடங்களை தனியார், பன்னாட்டு கம்பெனிகளுக்கு வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு 28.8.2018இல் நாடு முழுவதும் 55 இடங்களை ஏலத்திற்கு விட்டதில் வேதாந்தா நிறுவனம் 41 இடங்களைப் பெற்றுள்ளது. எச்.ஓ.இ.சி. ஒரு இடம் பெற்றுள்ளது. மீதியுள்ள 13 இடங்கள்தான் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்...

பகுத்தறிவாளர்கள் – சிந்தனையாளர்களைத் தண்டிக்கத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது 154 விஞ்ஞானிகள் அறைகூவல்

பகுத்தறிவாளர்கள் – சிந்தனையாளர்களைத் தண்டிக்கத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது 154 விஞ்ஞானிகள் அறைகூவல்

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பகுத்தறிவு சிந்தனையற்றவர்களுக்கு எதிராக வும், சாதி, மதம், இனம், மொழி, பிராந்தியம் ரீதியாக, மக்களைத் துண்டாட நினைப்பவர் களுக்கு எதிராகவும் வாக்களிப்போம் என்று நாடு முழுவதுமுள்ள விஞ்ஞானிகள் அறைகூவல் விடுத்துள்ளனர். கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அறிவியலாளர்களின் கூட்டமைப்பான இந்தியக் கலாச்சாரக் கழகம், இந்தியக் கல்வி அ றிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்தியப் புள்ளியல் நிறுவனம், தேசிய உயிரியல் அறிவியல் மையம், இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் 154 விஞ்ஞானிகள் இணைந்து இந்த அறைகூவலை விடுத் துள்ளனர். அமித் ஆப்தே, சோரப் தலால், ரமா கோவிந்த ராஜன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: “மக்களை மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், மொழியின் பெயராலும், வாழும் பகுதியின் பெயராலும், பாலினத்தின் பெயராலும் மக்களுக்கு எதிராக பாகுபாட்டை ஏற்படுத்தி அவர்களைக் கொலை செய்பவர்களை நாம் நிராகரிக்க வேண்டும்....

நினைவிருக்கிறதா?   திராவிடக் கட்சிகளை வீழ்த்த யாகம் நடத்திய பா.ஜ.க.

நினைவிருக்கிறதா? திராவிடக் கட்சிகளை வீழ்த்த யாகம் நடத்திய பா.ஜ.க.

‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்று ஊர்தோறும் சுவர்களில் எழுதி, திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்று சூளுரைத்த பா.ஜ.க. தான் இப்போது அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் 5 இடங்களைப் பெற்றுக் கொண்டு மீண்டும் எடப்பாடி நல்லாட்சியையும் ‘தேசபக்த’ மோடி ஆட்சியையும் கொண்டு வருவோம் என்று பேசி வருகிறது. 2018 ஜனவரி 26, 27, 28 தேதிகளில் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளை ஒழித்து இந்து சாம்ராஜ்யம் அமைக்க பல கோடி ரூபாய் செலவில் பார்ப்பன புரோகிதர்களை வைத்து யாகம் நடத்தியது பா.ஜ.க. ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே உள்ள ஏ.பி.டி. பள்ளி வளாகத்தில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் தகரப் பந்தல் அமைத்து சுமார் 2 கோடி ரூபாய் செலவில் 300 பார்ப்பனப் புரோகிதர்கள் வேதம் ஓத நடத்தப்பட்டது அந்த யாகம். இராமாயணத்தில் – இராமன் செய்த யாகத்துக்குப் பிறகு நடந்த மிகப் பெரும் யாகம்  இதுதான் என்றார்கள், யாகம் நடத்திய பா.ஜ.க.வினர், காஞ்சி இளைய சங்கராச்சாரி...

சாமியார் ராம்தேவ் தலைமையில் குருகுலக் கல்வி ஆணையமாம்!

சாமியார் ராம்தேவ் தலைமையில் குருகுலக் கல்வி ஆணையமாம்!

இந்துத்துவ அமைப்புகள் தற்போதைய கல்விமுறை ஆங்கிலேயர் களால் கொண்டுவரப்பட்டது என்றும், இதனை நீக்கிவிட்டு மீண்டும் பழைய குருகுல முறைக் கல்வியை கொண்டுவரவேண்டுமென்றும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. தற்போது இவர்களின் கோரிக்கை செயல்வடிவம் பெறத்துவங்கியுள்ளது, குருகுலக் கல்விக்காக புதிய ஆணையம் உருவாக்கப்பட்டு அதன் தலைவராக சாமியார் ராம்தேவ் அமர வைக்கப்பட் டுள்ளார்.  ஆங்கிலேயர் வருகைக்கும் முன்பு பார்ப்பனர் மட்டுமே கல்வி கற்கும் நிலை இருந்தது. சூத்திரர்கள் உள்ளிட்டோர் அங்கு கல்வி கற்க அனுமதியில்லை. இதனால் பல நூற்றாண்டுகளாக இந்தியா இருண்ட காலத்தில் இருந்து வந்தது. 1700-களில் ஆங்கிலேயர்கள் இந்தியா விற்கு வருகை தந்த பிறகு சீரழிந்து கிடந்த சமுகத்தை கல்வியின் மூலம் மேம்படுத்த முயலும்  நோக்கத்தில், மதத்தின் பரப்புரையின் மூலமாக மிசனரிப்பள்ளிகள் நாடு முழுவதும் துவங்கப்பட்டன. முக்கியமாக தென் இந்தியாவில் அதிகமாக துவங்கப்பட்டன. இதன் விளைவாக 1800களுக்குப் பிறகு இந்தியாவின் எழுத்தறிவு 5 விழுக்காடாக உயர்ந்தது, இதனைத் தொடர்ந்து 1900-களின் துவக்கத்தில்...

பெரியார் – காந்தி சிலைகளுக்கு மாலை போட்டதற்காகவே கைது செய்ததை மறக்க முடியுமா?

பெரியார் – காந்தி சிலைகளுக்கு மாலை போட்டதற்காகவே கைது செய்ததை மறக்க முடியுமா?

”மறக்கமுடியுமா?” • சங்பரிவாரங்கள் நடத்திய ‘ராம ரதயாத்திரை’க்கு தமிடிநநாட்டில் காவல் துறை பாதுகாப்புடன் அனுமதி வழங்கியது எடப்பாடி ஆட்சி. தமிழ்நாட்டை மதக் கலவரமாக்கும் இந்த யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று மதவெறி எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தின் வேண்டுகோளைப் புறந்தள்ளி எதிர்ப்பு தெரிவித்த பல்லாயிரக்கணக்கான தோழர்களை கைது செய்தது எடப்பாடி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி. • முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழர்களுக்கு வீர வணக்கம் செலுத்த சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட இளைஞர்களைக் கைது செய்து 17 முன்னணித் தோழர்களை ‘ரிமாண்ட்’ செய்ததும் எடப்பாடி ஆட்சி தான். இவர்கள் தான் இப்போது ஈழத் தமிழர் பிரச்சினையின் ஆதரவாளர்களைப்போல் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பேசி வருகிறார்கள். • அதே முள்ளிவாய்க்கால் வீரவணக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திருமுருகன் காந்தி (மே 17), இளமாறன் மற்றும் டைசன் (தமிழர் விடியல் கட்சி) ஆகிய தோழர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்து பா.ஜ.க. எஜமானர்களிடம் தனது...

மோடியின் ‘பொய்’கள் – 1

மோடியின் ‘பொய்’கள் – 1

மோடி பேசி வரும் பொய்களின் ஒரு தொகுப்பு, இது. அறிவியல் – மோடி ஒரு நாட்டின் மக்களை எப்படியெல்லாம் வழி நடத்த வேண்டும் என்று பல தலைவர்களின் பட்டியலைக் கொடுக்கலாம். ஆனால் எப்படி வழி நடத்தக் கூடாது என்று  கேட்டால் தயங்காமல் மோடியின் பெயரைப் பரிந்துரைக்கலாம். நாட்டின் அறிவியலாளர்கள், மருத்துவர்கள் அடங்கிய அவையில் மோடி பேசியது, “மகாபாரதத்தில் கர்ணன் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை. இதற்குக் காரணம், அன்றைய காலக்கட்டத்திலேயே மரபணு அறிவியல் இருந்ததால் தான் இது நடந்திருக்கிறது. விநாயகரின் தலையைப் பாருங்கள், யானையின் தலை பொருத்தப் பட்டிருக்கிறது. அன்றே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததால் தான் இது நடந்திருக்ககிறது” என்றார். அறிவியல் பாதையில் உலகம் விண்வெளி யில் வீடு அமைக்கும் அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கும் காலத்தில் மத நம்பிக்கைகளை உட்புகுத்தி கிஞ்சிற்றும் அறிவுக்கு உட்படாத நிகழ்வுகளை அறிவாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வில் பேசுகிறார். தன் அரசியலுக்கு கர்ணனையும், விநாயகரையும்கூட விட்டு விட்டு வைக்க...

விழுப்புரத்தில் பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாடு

விழுப்புரத்தில் பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாடு

23.2.2019 அன்று மாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் பேராசிரியர் கல்யாணி ஒருங்கிணைப்பில் நடந்த பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாட்டில் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி உரைக்குப் பின்  திராவிடர் விடுதலைக்  கழகத் தலைவர் கொளத்தூர் மணி,  பழங்குடி மக்கள் மீது அரசும் காவல்துறையும் எப்படி நடந்து கொள்கிறது என்பதை விளக்கி சிறப்புரையாற்றினார். நிறைவுரையாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல். திருமாவளவன் பேசினார். முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க. பொன்முடி, சமூக சமத்துவப் படை தலைவர் ப. சிவகாமி, அய்.ஏ.எஸ்., மனித நேய மக்கள் கட்சி ப. அப்துல் சமது, த.நா. மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் டில்லி பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யனார், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூஆ. இளையரசன், மாவட்டச் செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ், கடலூர் மாவட்டச் செயலாளர் பாரதிதாசன், அரியலூர் மாவட்ட அமைப்பாளர்  இராவண கோபால், திண்டிவனம் நகர...

ஈரோடு மரவபாளையத்தில் கழகப் பயிற்சி வகுப்பு

ஈரோடு மரவபாளையத்தில் கழகப் பயிற்சி வகுப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக , மரவபாளையம் சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளியில் 10.03.2019 ஞாயிறு அன்று சமூகநீதிப் போரில் பெரியாரும் அம்பேத்கரும் என்னும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. காலை 11 மணிக்கு வகுப்பு துவங்கியது  தோழர்களின் அறிமுகத்தை தொடர்ந்து , முதல் அமர்வாக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் “சமூகநீதிப் போரில் பெரியார்” என்னும் தலைப்பில் நெடிய வரலாற்று தரவுகளுடன் வகுப்பெடுத்தார். மதியம் 3 மணிக்கு வளைதளப் பொறுப்பாளர் விஜய் கழகத்தின் வளைதளப் பக்கங்களைப் பற்றியும் twitter பற்றியும் வகுப்பெடுத்தார். அதைத் தொடர்ந்து , இரண்டாம் அமர்வாக கழகத் தலைவர் கொளத்தூர்மணி “சமூகநீதிப் போரில் அம்பேத்கர்” என்ற தலைப்பில் மாலை 7 மணிவரை வகுப்பெடுத்தார். இறுதியாக கழகத்தின் பெயர்ப் பலகையை கழகத் தலைவர் திறந்து வைத்தார். இப்பயிற்சி வகுப்பில் 40 தோழர்கள் பங்கு பெற்றனர்.  மாநகரத் தலைவர் ப.குமார் , சிவானந்தம் இருவரும் சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்...

தமிழகத்தின் அவமானச் சின்னம் எச்.ராஜா – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் அவமானச் சின்னம் எச்.ராஜா – மு.க.ஸ்டாலின்

பெரியாரை அவமதிப்பு – மதப் பதட்டங்களை உருவாக்கும் வகையில் அடாவடித்தனமாக செயல்பட்டு வரும் எச். ராஜா, தமிழகத்தின் அவமானச் சின்னம் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து நிற்கக்கூடிய வேட்பாளர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். அவருடைய வண்டவாளங்கள் அத்தனையும் நன்றாக அறிந்து வைத்திருக்கக் கூடியவர்கள் நீங்கள். எச்.ராஜா அவர்கள் ஆளுங்கட்சியின் துணையோடு பி.ஜே.பி-யின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார். என்னைப் பொறுத்த வரையில் ஒரு எதிர்க்கட்சியின் வேட்பாளராக நான் அவரைப் பார்க்கவில்லை, தமிழகத்தில் ஏன் இந்தியா விலேயே இதுபோன்று ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியை நாம் இதுவரையில் பார்த்திருக்க முடியாது, இனிமேலும் பார்க்கவும் முடியாது. அதற்கு ஒரு உதாரணமாக இருக்கக்கூடியவரைத் தான் தேர்ந்தெடுத்து இன்றைக்கு நம்மை எதிர்க்கிற வேட்பாளராக நிறுத்தி வைத்திருக்கின்றார்கள். நான் எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்று சொன்னால், தமிழ்ச் சமுதாயத்தின் நல்லிணக்கத்தை, நிம்மதியை கெடுக்கக்கூடிய வகையில் பேசுவது, வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறுவது, கலவரத்தை...

பி.எட். தேர்வு: ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மாபெரும் அநீதி

பி.எட். தேர்வு: ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மாபெரும் அநீதி

பட்டதாரி ஆசிரியர் பயிற்சியான ‘பி.எட்.’ வகுப்பில் சேர்வதற்கான தகுதி தமிழ்நாட்டில் தற்போதுள்ள இடஒதுக்கீடு அடிப்படையில் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், ‘ஆசிரியருக்கான தேர்வு’க்கான மதிப்பெண் தகுதிகளை இப்போது திடீர் என மாற்றி அமைத்திருக்கிறது. திறந்த போட்டியினருக்கு 50 சதவீதம்; பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்த முஸ்லிம்களுக்கு 45 சதவீதம்; மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 43 சதவீதம்; பட்டியலினப் பிரிவு, அருந்ததியினருக்கு 40 சதவீதம் என்று மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்ட தேர்வுகளில் இந்த மதிப்பெண் முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 15ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வில் ஆசிரியர் தேர்வு வாரியம் திடீரென்று அடிப்படை மதிப்பெண் தகுதியை முன்னறிவிப்பு ஏதுமின்றி விண்ணப்படிவங்களில் உயர்த்தி அறிவித்தது. பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடிப் பிரிவு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் 45 சதவீதம் பெற்றிருக்க வேண்டும் என்ற திடீர் அறிவிப்பால் ஏற்கெனவே இந்த மதிப்பெண் அடிப்படையில் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள்...

உலகப் பொருளாதார ஆய்வாளர்களுடன் கலந்து உருவாக்கப்பட்ட இராகுல்காந்தியின் ரூ. 72,000 உதவித் திட்டம்

உலகப் பொருளாதார ஆய்வாளர்களுடன் கலந்து உருவாக்கப்பட்ட இராகுல்காந்தியின் ரூ. 72,000 உதவித் திட்டம்

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள 25 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 உதவியாக வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் இராகுல்காந்தி அறிவித்திருக்கிறார். இது நிறைவேற்ற முடியாத திட்டம், அரசியலுக்கான அறிவிப்பு என்று பா.ஜ.க. விமர்சனம் செய்கிறது. முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன், இத்திட்டம் நிறைவேற்றக் கூடியதே என்று கூறுகிறார். இத்திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி பல மாதங்களாகவே பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வந்திருக்கிறது என்ற தகவல்கள் இப்போது வெளி வந்திருக்கின்றன. உலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு நாட்டு பொருளாதார ஆய்வாளர் தாமஸ் பிக்கட்டி இத்திட்டத்தை உருவாக்குவதில் காங்கிரஸ் கட்சிக்குத் தாம் உதவியதாக இப்போது கூறியிருக்கிறார். ‘தி பிரிண்ட்’ இணைய தள பத்திரிகை, கடந்த புதன்கிழமை இந்த செய்தியைத் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே இத் திட்டத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. பிக்கட்டி இத்திட்டத்துக்கு தனது அழுத்தமான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதோடு இந்தியாவில் படித்த ஆளும் வர்க்கம்...

இயக்குநர்கள் – படைப்பாளிகள்  103 பேர் கூட்டறிக்கை தேசபக்தியைத் துருப்புச் சீட்டாக்கி வரும்  பா.ஜ.க.வைத் தோற்கடிப்பீர்!

இயக்குநர்கள் – படைப்பாளிகள் 103 பேர் கூட்டறிக்கை தேசபக்தியைத் துருப்புச் சீட்டாக்கி வரும் பா.ஜ.க.வைத் தோற்கடிப்பீர்!

நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், மக்களவைத் தேர்தலில் தயவுசெய்து பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதீர்கள் என்று, இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்கநர்கள், படைப்பாளிகள், 103 பேர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரிவினைவாத மற்றும் வெறுப்பரசியலை வளர்த்தெடுப்பது, தலித்துகள் மற்றும் முஸ்லிம்களை தனிமைப்படுத்துவது, விவசாயிகளைக் கண்டு கொள்ளாதது, நாட்டையே சில பெரும் முதலாளிகள் கையில் ஒப்படைத்தது, கலாச்சார மற்றும் விஞ்ஞான நிறுவனங்களை ஒழிப்பது, கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் தணிக்கை கட்டுப்பாடுகளை இறுக்குவது, பொய்யான தகவல்களைப் பரப்புவது போன்ற பாஜகவின் நடவடிக்கைகள் நாட்டை மிக மோசமான ஆபத்தை நோக்கி கொண்டு சென்றுவிடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனந்த் பட்வர்தன், குர்விந்தர் சிங், கபீர் சிங் சவுத்ரி, சணல்குமார் சசிதரன், ஆஷிக் அபு, வெற்றி மாறன், ரஞ்சித், கோபி நயினார், லீனா மணி மேகலை, திவ்யபாரதி, அஜயன் பாலா உள்ளிட்டோர் கையெழுத்திட்டு www.artistuniteindia.com என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தொடர்பாக மேலும் கூறப்பட்டிருப்பதாவது: “நம்...

ஏழு தமிழர் விடுதலையும்  பார்ப்பன சுப்ரமணியசாமி திமிரும்

ஏழு தமிழர் விடுதலையும் பார்ப்பன சுப்ரமணியசாமி திமிரும்

‘ஏழு தமிழர்களை விடுதலை செய்ய மாட்டோம்’ என்று கொக்கரித்திருக்கிறார், பார்ப்பனர் சுப்ரமணியசாமி. சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் 161ஆவது சட்டப் பிரிவின் கீழ் தமிழக அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டாமா என்ற கேள்விக்கு, அமைச்சரவை முடிவைத் தூக்கிக் குப்பையில் போடு என்று திமிருடன் பதில் கூறியிருக்கிறார். சுப்ரமணியசாமி 7 தமிழர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவரா? உச்சநீதிமன்றம், அமைச்சரவை முடிவுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவரா? அப்படி ஒரு அதிகாரம் அவருக்கு எப்படி கிடைத்தது? ‘மனுதர்மம்’ வழங்கியுள்ள பார்ப்பன அதிகாரத் திமிரா? 28 ஆண்டுகளாக ஏழு தமிழர்களும் சிறையில் வாடுகிறார்கள். சிறைவாசிகளின் தண்டனைக் குறைப்புக்கு சட்டம் வழங்கியுள்ள உரிமைகள்கூட, இவர்களுக்குக் கிடையாதாம்.  அதே நேரத்தில் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் ஒவ்வொரு வழக்கிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் இந்த காவி பயங்கரவாதிகள் விடுதலையை எதிர்த்து பா.ஜ.க.வின்...

மணமகன் தேவை

மணமகன் தேவை

40 வயதான தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ‘எம்.சி.ஏ.’ பட்டதாரியான வாசுமதி எனும் பெண்ணுக்கு மணமகன் தேவை. விவாகரத்துப் பெற்றவர். ஜாதி, மதம் தடையில்லை. தொடர்புக்கு : 94874 85266 பெரியார் முழக்கம் 28032019 இதழ்

ஃபாரூக் துணைவியார் குடும்பத்தினருக்கு  கழகத் தலைவரின் அன்பு வேண்டுகோள்

ஃபாரூக் துணைவியார் குடும்பத்தினருக்கு கழகத் தலைவரின் அன்பு வேண்டுகோள்

கோவையில் அண்ணாமலை அரங் கில் மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சனிக்கிழமை 23.03.2019 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் அரியலூர் மாவட்டம் கவரபாளையம் சரோஜா-இராமகிருஷ்ணன் ஆகியோரின் மகன் இராவண கோபால்  – ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலட்சுமி-நாச்சிமுத்து ஆகியோரின் மகள் கோமதி வாழ்க்கை இணையேற்பு விழா கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்தி வைத்தார்.   திருமணத்தை தலைமையேற்று நடத்திய கழகத் தலைவர் இந்தத் திருமணத்தில் ஒருவர் கணவனை இழந்தவர், ஒருவர் மனைவியைப் பிரிந்தவர். வாழ்க்கை இணையேற்கும் இரண்டு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். மேலும் கோமதியின் மகன், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் பிரபாகரன்தான் இந்த மறுமணத்திற்கு முன் முயற்சியை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடைபெறும் இத்திருமணத்திற்கு வந்துள்ள ஹமீது (ஃபாரூக் தந்தை), இப்ராஹீம் (ரஷீதா தந்தை), ஷாஜகான்...

தமிழர்களின் இரயில்வே வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் வடநாட்டுக் கும்பல்

தமிழர்களின் இரயில்வே வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் வடநாட்டுக் கும்பல்

தமிழ்நாட்டு வேலை வாய்ப்புகளில் வடநாட்டார் குவிக்கப்பட்டு வரும் ‘உரிமைப் பறிப்பு’ கொடுமைகள் குறித்து கடந்த வாரம் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் எழுதியிருந்தோம். அதைத் தொடர்ந்து மற்றொரு அதிர்ச்சித் தகவலும் வெளி வந்திருக்கிறது. தெற்கு இரயில்வே சென்னை தேர்வு வாரியத்தில் ‘குரூப் டி’ பணியாளர்களுக்கு 1550 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்று முடிந்திருக்கிறது. இதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்புச் தேர்ச்சி. நாடு முழுதும் ஒரு கோடியே 7 இலட்சம் பேர் விண்ணப்பித்தார்கள். தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 4ஆம் தேதி வெளியிடப்பட்டன.  இதில் சென்னை தேர்வு வாரியத்தில் 1550 தேர்ச்சி பெற்றவர்களில் 90 சதவீதம் பேர் வடநாட்டினர். தேர்வுக்கான விதிகள் இருக்கின்றன. விதி எண். 11இன்படி இந்தக் கீழ்நிலைப் பதவிகளுக்கு தொடர்புடைய மாநிலங்களைச் சார்ந்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும். மாநில மொழியிலும் இந்தி, ஆங்கில மொழியிலும் இந்தத் தேர்வுக்கான விளம்பரத்தை செய்ய வேண்டும். இந்த விளம்பரங்களை மண்டலங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள்...

கூட்டணிகளின் கடந்தகால வரலாறுகளைப் பேசுவது காதில் பூ சுற்றும் வேலை!

கூட்டணிகளின் கடந்தகால வரலாறுகளைப் பேசுவது காதில் பூ சுற்றும் வேலை!

5 ஆண்டுகால மோடி ஆட்சிக்கு பூஜ்யத்துக்கும் குறைவான மதிப்பெண்தான் போடுவேன் என்றார், ‘பெரிய அய்யா’ மருத்துவர் இராமதாஸ். இப்போது மீண்டும் மோடி பிரதமராக வந்தால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்கிறார். எடப்பாடி ஆட்சியும் ஜெயலலிதா ஆட்சியும் ஊழலில் திளைத்த ஆட்சி என்று கூறி ஊழல் பட்டியல் தயாரித்து, ஆளுநரிடம் கொடுத்தது ‘பெரிய அய்யா’வின் பா.ம.க. கட்சி. இப்போது குரலை மாற்றிக் கொண்டு 5 ஆண்டுகாலமாக நல்லாட்சி தந்து வருகிறது அ.இ.அ.தி.மு.க. என்கிறார். ‘இதய தெய்வம்’ என்று ‘மூச்சுக்கு மூச்சு’ ஜெயலலிதாவின் ‘நாமத்தை’ உச்சரிக்கும் ‘அம்மாவின் விசுவாசிகள்’ ஜெயலலிதா என்ற ஊழல் குற்றவாளிக்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என்று வழக்குத் தொடுத்த பா.ம.க.வுடன் கைகோர்த்துக் கொண்டு ஓட்டுக் கேட்கிறார்கள். ‘இதய தெய்வம்’ இனி திரும்பி வந்து கேட்காது என்பது நன்றாகத் தெரியும். காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டுமா? அல்லது மோடியே பிரதமராக தொடர வேண்டுமா? என்பதைத் தனக்கு தரப்படும் தொகுதிகளை வைத்து தான்...

‘நிமிர்வோம்’ தேர்தல் சிறப்பிதழ்: தோழர்களுக்கு வேண்டுகோள்!

‘நிமிர்வோம்’ தேர்தல் சிறப்பிதழ்: தோழர்களுக்கு வேண்டுகோள்!

‘நிமிர்வோம்’ ஏப்ரல் இதழ் தேர்தல் சிறப்பிதழாக – பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க. கூட்டணியின் மக்கள் விரோதக் கொள்கைகளை விளக்கி ஏராளமான செய்திகள், கட்டுரைகள் இடம் பெறுகின்றன. கூடுதல் இதழ் தேவைப்படுவோர் மார்ச் 30 தேதிக்குள் தலைமைக் கழகத்துக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தொடர்புக்கு : 7299230363 / 9841489896 பெரியார் முழக்கம் 28032019 இதழ்

பழங்குடி மக்களைப் பாதுகாக்க களமிறங்கினர் கள்ளக்குறிச்சி கழகத் தோழர்கள்

பழங்குடி மக்களைப் பாதுகாக்க களமிறங்கினர் கள்ளக்குறிச்சி கழகத் தோழர்கள்

பழங்குடியினர் – மலைவாழ் மக்களை அந்த மக்கள் வாழக்கூடிய பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கடந்த மாதம் உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. வேறெங்கும் வீடு கட்டப்படுவதற்கான இடமோ அல்லது நிலமோ இல்லாத நிலையில் பன்னெடுங் காலமாக பழங்குடியினர் – மலைவாழ் மக்கள் வசித்துவந்த  பகுதியில் இருந்து வெளியேற்ற வற்புறுத்தல் செய்தால் அந்த மக்கள் சொந்த மண்ணிலே அகதிகளாக இருக்க வேண்டிய ஒரு அவல நிலை ஏற்படும்.எனவே பழங்குடி- மலைவாழ் மக்களை அவர்கள் வசிக்கின்ற பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும், பழங்குடியினர்- மலைவாழ் மக்களுக்கு சாதி இருப்பிட சான்றிதழ்களை அரசு  விரைவாக வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி  கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மாவட்டம் முழுவதும் 200-சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பழங்குடியினர்- மலைவாழ் மக்கள் வாசிக்கக் கூடிய சில பகுதிகளில் தோழர்கள் நேரில்...

பொள்ளாச்சி பாலுறவு வன்முறை: மேட்டூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலுறவு வன்முறை: மேட்டூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மேட்டூர் அனை சதுரங்காடி பெரியார் திடலில் 16.3.2019 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைக் கண்டித்து மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அனைத்துக் கட்சி, முற்போக்கு இயக்கங்கள், மகளிர் அமைப்புகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கி. கோவிந்தராசு தலைமை தாங்கினார். ஈழவளவன் (நாம் தமிழர்), அப்துல் கபூர் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), கே. நடராஜன் (அய்.என்.டி.யு.சி.), செ. மோகன்ராஜ் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), வசந்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), என்.பி. இராஜா (தி.மு.க.), மா. சிவக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்), ஏ.எஸ். வெங்கடேஸ்வரன் (மேட்டூர் காங்கிரஸ் கட்சி), அ. சக்திவேல் (திராவிடர் விடுதலைக் கழகம்) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  கழகத் தோழர் ம. குமரேசன், கண்டன முழக்கமிட்டு நன்றியுரையாற்றினார். கூட்டத்தில் காவை. ஈசுவரன் (கொளத்தூர் ஒன்றிய செயலாளர்), மேட்டூர் நகர செயலாளர் ஆ. சுரேசு குமார், மாவட்ட...

தலைமைக் கழக அலுவலகத்தைத் தக்க வைத்துக் கொள்ள கட்டமைப்பு நிதி கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

தலைமைக் கழக அலுவலகத்தைத் தக்க வைத்துக் கொள்ள கட்டமைப்பு நிதி கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

திராவிடர் விடுதலைக் கழகத்துக்காக சென்னையில் அமைந்துள்ள தலைமையகத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தை கழகத் தோழர்கள் நன்றாக உணர்வார்கள். கடும் முயற்சி எடுத்து குத்தகைக்கு எடுத்து அந்தத் தலைமை அலுவலகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு மட்டுமல்ல; எத்தனையோ சிறிய அமைப்புகள், இயக்கங்கள் தங்களுக்கான கலந்துரை யாடல், சந்திப்புக் கூட்டங்கள் நடத்துவதற்கு ‘தாய் வீடாக’ நமது தலைமைக் கழகம் பயன்பட்டு வருகிறது. நகரின் மய்யப் பகுதியில் உள்ள  அந்த அலுவலகத்தை அதன் உரிமையாளர்கள் விற்பனை செய்ய முடிவெடுத்தபோது தலைமைக் கழகம் இல்லாமல் போய் விடுமே என்ற கவலையும் வருத்தமும் நமக்கு உருவானது. இதைக் காப்பாற்றிக் கொள்ள  வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதற்காக ஆதரவாளர்கள் நண்பர்களிடம் கட்டமைப்பு நிதி திரட்டும் முயற்சிகளில் இறங்கினோம். பலரும் ஆர்வத்துடன் உதவினார்கள். நட்புக்கரம் நீட்டினார்கள். ஆனாலும் அலுவலக கட்டிடத்தை வாங்குவதற்கான தொகையில் பாதியளவைக்கூட நம்மால் எட்ட முடியவில்லை. வீட்டின்...

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க  தமிழக மக்களுக்கு கழகம் வேண்டுகோள்

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க தமிழக மக்களுக்கு கழகம் வேண்டுகோள்

கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் திருப்பூரில் 20.3.2019 அன்று திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் களம் – தமிழ் நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கடந்த அய்ந்து ஆண்டுகால பாஜக நடுவண் ஆட்சியில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தனித்துவத்தோடு நாம் கட்டி எழுப்பிய உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து தமிழ் நாட்டின் மீது போர் தொடுத்தது பாஜக ஆட்சி. கல்வி உரிமைகள் பறிப்பு, நீட் திணிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, காவிரி நீர் உரிமையில் வஞ்சகம், மத்திய அரசு பணிகளில் வடநாட்டவர் திணிப்பு, மதவெறி திணிப்பு, ஏழு தமிழர் விடுதலைக்கு மறுப்பு என்று தமிழகத்தை வஞ்சித்து வந்த பாஜக ஆட்சியை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகமும், தேர்தல் அரசியலில் ஈடுபடாத இயக்கங்களும், அமைப்புகளும் தொடர்ந்து போராடி...

மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்குடன் நடந்த ஃபாரூக் நினைவு நாள்  மேடையில் புரட்சிகர சுயமரியாதைத் திருமணம்

மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்குடன் நடந்த ஃபாரூக் நினைவு நாள் மேடையில் புரட்சிகர சுயமரியாதைத் திருமணம்

கோவையில் அண்ணாமலை அரங்கில் மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாரூக் மதவெறியர்களால் படுகொலை செய்யப் பட்டார். இதைக் கண்டித்து மனிதநேய அமைப்புகள் மற்றும் திராவிட அமைப்புகள் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். ஃபாரூக் படுகொலையைக் கண்டித்து ஆண்டுதோறும் நினைவேந்தல் கூட்டங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. நிகழ்வின் தொடக்கத்தில் இணையதள பொறுப்பாளர் விஜய்குமார் சமூக ஊடகங்களில் மதவெறி பற்றியும், கழகப் பகுத்தறிவு பரப்புரைக்கு சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் டுவிட்டர் பயன்பாடு பற்றியும் பயிற்சி அளித்தார். இந்தக் கூட்டத்தில் ‘மதங்களை மறப்போம், மனிதத்தை விதைப்போம்’  என தலைவர்கள் பேசினர். அதேபோல, மதங்களால் நடைபெறும் படு கொலைகள் தடுக்கப்படவேண்டும், மத அடிப்படை வாதங்கள் மாற வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது. திருப்பூர் முகில்ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, மேட்டுப்பாளையம்...

வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள்: சென்னையில் கழகம் நடத்திய கருத்தரங்கு

வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள்: சென்னையில் கழகம் நடத்திய கருத்தரங்கு

காந்தியார் நினைவுநாளையொட்டி வரலாற்றில் ‘பார்ப்பனிய வன்முறைகள்’ எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை நிருபர்கள் சங்க அரங்கத்தில் 24.2.2019 அன்று மாலை 5 மணியளவில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமை தாங்கினார். கார்த்தி இராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். ‘இந்து இராஷ்டிரத்தின் இரத்த சாட்சிகள்: தபோல்கரி லிருந்து கவுரி லங்கேஷ்வர் வரை என்ற தலைப்பில் தோழர் துரை உரையாற்றினார். கோல்வாக்கர் கூறிய ‘இந்து இராஷ்டிரம்’ குறித்தும் பஜ்ரங்க்தள் ஆர்.எஸ்.எஸ். போன்ற ‘சங்பரிவார்’ அமைப்புகள் இரகசிய செயல் திட்டங்கள், தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் படுகொலைக்குப் பின்னால் உள்ள மதவெறி அமைப்புகள் குறித்தும் விளக்கிப் பேசினார். ‘இராமன் அயோத்தியில் பிறந்தானா? வரலாறும் கற்பிதங்களும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய மா.கி.எ. பிரபாகரன், இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியே இப்போதுள்ள அயோத்தி இலலை என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்கினார். வால்மீகி இராமாயணம் மட்டுமல்லாது, பல்வேறு இராமாயணங்கள் இருப்பதையும் ஒவ்வொன்றிலும்...

மிரட்டிய ஆளுநர்கள்: மண்டியிட்ட ஆட்சியாளர்கள்!

மிரட்டிய ஆளுநர்கள்: மண்டியிட்ட ஆட்சியாளர்கள்!

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களை ஆளுநர்களாக்கி ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்தவர்கள்தான் இப்போது வாக்கு கேட்டு வருகிறார்கள். அரசின் திட்டப் பணிகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் செய்தார். அதிகாரிகளை நேரடியாக அழைத்துப் பேசி ஆணைகளைப் பிறப்பித்தார். ஆளுநரின் இந்த அத்துமீறலை எடப்பாடியார் ஆட்சி எதிர்க்க வில்லை. கைகட்டி வாய் பொத்தி வேடிக்கைப் பார்த்தது. எதிர்க்கட்சியான தி.மு.க. தான் ஆளுநரின் இந்த அத்துமீறலை எதிர்த்து அவர் சென்ற இடமெல்லாம் கருப்புக்  கொடி போராட்டங்களை நடத்தியது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி தேர்வு செய்த முதலமைச்சர் சசிகலாவை பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்து இழுத்தடித்தார் தமிழக கவர்னர், வித்யாசாகர் ராவ். தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்து குழுவின் பரிந்துரைப்படி துணை வேந்தர் களை தேர்வு...

தமிழ்நாட்டுப் பணிகளை வடநாட்டார் பறிப்பதை இனியும் பொறுக்க முடியுமா?

தமிழ்நாட்டுப் பணிகளை வடநாட்டார் பறிப்பதை இனியும் பொறுக்க முடியுமா?

தமிழ்நாட்டு வேலை வாய்ப்புகளை வடநாட்டுக்காரர்களுக்கு வாரி கொடுத்ததை மறக்க முடியுமா? 2013 முதல் 2016 வரை மத்திய அரசு தேர்வாணையத்தில் உருவாக்கப் பட்ட பணியிடங்களில் தமிழ்நாட்டில் பணிகளில் அமர்த்தப்பட்ட வடநாட்டுக்காரர்கள் எவ்வளவு பேர் தெரியுமா? 1988 பேர் தமிழர் களுக்குக் கிடைத்தது 110 பணிகள் மட்டுமே. (6 சதவீதம்) பீகார் – இராஜஸ்தான் மாநிலங்களின் பயிற்சி நிறுவனங்கள் தேர்வாணையத்திடம் ‘கள்ளக் கூட்டு’ வைத்து தமிழ்நாட்டுக்குள் முறைகேடாக வடநாட்டுக்காரர்களை வேலைகளில் திணித்ததை மறக்க முடியுமா? – இப்படி முறைகேடாக சென்னை வருமான வரித் துறையில் வேலைக்கு வந்த 3 வடநாட்டுக்காரர்கள் கண்டறியப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர். 2014ஆம் ஆண்டு மத்திய தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் வட மாநிலத்துக்காரர்கள் இலஞ்சம் கொடுத்து தேர்வில் பெற்றி பெற்றது கண்டறியப்பட்டு, பிறகு தேர்வே இரத்து செய்யப்பட்டது. அஞ்சல் துறையையும் விட்டு வைக்கவில்லை. கடைநிலை ஊழியர் களுக்கான தேர்வுகளை அந்தந்த மாநில அரசுகளே நடத்தி மாநில மக்களுக்கு வேலை...

ஈரோடு சித்தோட்டில் தடையைத் தகர்த்து கழகம் நடத்திய மகளிர் நாள் கூட்டம்

ஈரோடு சித்தோட்டில் தடையைத் தகர்த்து கழகம் நடத்திய மகளிர் நாள் கூட்டம்

திவிக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக 08.03.2019 வெள்ளியன்று, சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் நடக்கவிருப்பதாக இருந்த  உலக மகளிர் தின விழா நிகழ்விற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. மறுப்பதற்கு அவர்கள் தரப்பு சொல்லியக் காரணங்கள் தர்க்கமற்றவை. உள்நோக்கம் கொண்டவை. இனியும் அவர்களிடம் சுமூகப் போக்குடன் பயணிப்பதென்பது சுயமரியாதையை அடகு வைப்பதற்குச் சமமென உணர்ந்து, தோழர்கள் களமிறங்கினர். மாநிலப் பொறுப்பாளர்களான ப. இரத்தினசாமி, திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னிர்செல்வம், மடத்துக்குளம் மோகன் ஆகியோரும் மாவட்டப் பொறுப்பாளர்களான எழிலன், வேணுகோபால், சண்முகப்பிரியன், கிருஷ்ணமூர்த்தி, மரவபாளையம் குமார் ஆகியோரும் மணிமேகலை, ராசிபுரம் சுமதி, ஜோதி, மலர், கவிப்பிரியா, சித்ரா, மகேஷ்வரி, கமலா, சத்யராஜ், சௌந்தர், இந்தியப்பிரியன், ரமேஷ், ரவி, செந்தில் எனப் பெருந்திரளோடு சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கூடினார்கள். அதன்பின் அங்கே வந்த காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டக் கூட்டத்தை எதற்காக நடத்துகிறீர்கள்? சட்டத்தை மீறுகிற செயல் என மிரட்டுகிறத் தொனியில் கூற தோழர்...

தலைநகரில் தொடங்கி வைத்தது திராவிடர் விடுதலைக் கழகம் மணியம்மையார் நூற்றாண்டு விழா; மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம்

தலைநகரில் தொடங்கி வைத்தது திராவிடர் விடுதலைக் கழகம் மணியம்மையார் நூற்றாண்டு விழா; மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம்

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு 2019 மார்ச் 10இல் தொடங்குகிறது. மார்ச் 9ஆம் தேதியன்றே சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாட்டில் அன்னையின் நூற்றாண்டு விழாவை முதன்முதலாக தொடங்கி வைத்துள்ளது. வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு மற்றும் மகளிர் தின விழா, பெரம்பூர் பாரதி சாலையில் எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இராஜி தலைமை தாங்கினார். இரண்யா வரவேற்புரையாற்றினார். தோழர்கள் தேவி, ஜெயஸ்ரீ, வெண்ணிலா, சங்கவி முன்னிலை வகித்தனர். ‘விரட்டு’ கலைக் குழுவினரின் பறை இசை, நாடகம், கலை நிகழ்வுகளோடு நிகழ்ச்சிகள் நடந்தன. தமிழ்நாடு அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, மணிமேகலை, புதிய குரல் நிறுவனர் ஓவியா, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். அன்னை மணியம்மையாரின் தியாக வாழ்வு,  எளிமை, பெரியாரை 95 ஆண்டுகள் வரை அவர் உடல்நலன் பேணிக் காத்த அர்ப்பணிப்பு, இராவண லீலா...

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (11) அரசை மிரள வைத்த தேசியக் கொடி எரிப்பு அறிவிப்பு

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (11) அரசை மிரள வைத்த தேசியக் கொடி எரிப்பு அறிவிப்பு

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். பகுதி 10 1955 ஜூலை 17இல் திருச்சியில் நடந்த திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்தும், இந்தியக் கூட்டாட்சிக்குள் தமிழர்கள் இருக்க விரும்பவில்லை என்பதை உணர்த்தவும், 1955 ஆகஸ்டு 1இல் நாடெங்கிலும் இந்தியத் தேசியக் கொடியை எரிக்க வேண்டும் என்ற தமது போராட்டத் திட்டத்தைப் பெரியார் அறிவித்தார். “இந்திய அரசாங்க தேசியக் கொடியைக் கொளுத்துவது என்பது மிகக் கடினமான தீர்மானம் என்பதாகக் கருதக் கூடும். இது இந்திய அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ ஒழித்துக் கட்டவோ கருத்துக் கொண்டு செய்யப்பட்ட கொடி கொளுத்தும் தீர்மானம் அல்ல.” “எங்களுக்கு – தமிழர்களுக்கு – தமிழ் நாட்டாருக்கு இந்திய அரசாங்கம் வேண்டாம்; தமிழ்நாடு – தமிழர்கள் இந்திய அரசாங்கத்தின் கூட்டு...

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (4) பூணூலும் கருஞ்சட்டையும் ஒன்று தானா? ஒ. சுந்தரம்

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (4) பூணூலும் கருஞ்சட்டையும் ஒன்று தானா? ஒ. சுந்தரம்

பெரியார் இயக்கத்தை நோக்கி சமூக வலைதளங்களில் பார்ப்பனிய நேரடி – மறைமுக ஆதரவு சக்திகள் முன் வைத்து வரும் கேள்விகளுக்கு நெத்தியடி பதில். பகுதி 3 கேள்வி : ‘ஹிந்துக்கள்’ தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். முஸ்லிம்கள் பர்தா அணிகிறார்கள். ‘ஹிந்துக்கள்’ தாலி அறுக்கும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தர்கள் மோதிரம் கழற்றும் போராட்டமும், பர்தா கழற்றும் நிகழ்ச்சியும் நடத்தும் ஆண்மை இருக்கிறதா? பதில் : ‘தாலி’  அறுப்புப் போராட்டம் என தவறாகக் கூறுவது பற்றியும் ‘ஹிந்துக்கள்’ பற்றியும் ஏற்கெனவே விளக்கியாகிவிட்டது. சிறுபான்மை கிறித்துவ மக்கள் மோதிரம் மாற்றி, திருமண பந்தத்தைக் காட்டுவது, ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவிப்பது போல், இந்துக்கள் என்பாரும் ஆணும் பெண்ணுமாகவா தாலி கட்டிக் கொள்கிறார்கள்? இல்லையே! பெண்ணுக்கு மட்டும்தானே தாலி? கிறித்துவ சிறுபான்மை மக்களின், இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் பர்தா அணிதல் உட்பட்ட பழக்க வழக்கங்கள், அந்த மதக் குழுக்களின் அடையாளங்கள், அவற்றை மதித்து...

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (3) காந்தியிலிருந்து கவுரி வரை கொலை செய்தது யார்? ஒ. சுந்தரம்

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (3) காந்தியிலிருந்து கவுரி வரை கொலை செய்தது யார்? ஒ. சுந்தரம்

பெரியார் இயக்கத்தை நோக்கி சமூக வலைதளங்களில் பார்ப்பனிய- பார்ப்பனிய நேரடி – மறைமுக ஆதரவு சக்திகள் முன் வைத்து வரும் கேள்விகளுக்கு நெத்தியடி பதில். பகுதி 2 கேள்வி : நாட்டில் நடந்துள்ள கொலைகள், குண்டு வெடிப்புகள், கொள்ளைகள், ஹவாலா திருட்டுகள், இவற்றில் இந்துக்கள் பங்கு எவ்வளவு சதவிகிதம்? பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா? அதை மேடையில் பட்டியலிடும் துணிவு இருக்கிறதா? பதில் : தேசியக் குற்றப் புலனாய்வு ஆய்வு மையத்திடம் கேட்க வேண்டிய கேள்வியை உள் நோக்கத்துடன் எம்மிடம் கேட்கிறீர். சிறுபான்மை முஸ்லீமானவர்களை குறை சொல்லும், குற்றம் சாட்டும் உங்கள் காவி வண்ண எண்ணம் எமக்குப் புரியாமலில்லை. கொலை, களவு, மோசடிக் குற்றங்களில் ஈடுபடுவோர் எவராயினும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இவர்களுக்கு ஜாதி, மதம், கடவுள், இனம் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. ஏதாவது ஒரு பயன் நோக்கிச் செயல்படுவதே நோக்கமாய் கொண்டவர்கள். எனினும், பாபர்...

புரட்சிப் பெரியார் முழக்கம் வாசகர்களுக்கு…

புரட்சிப் பெரியார் முழக்கம் வாசகர்களுக்கு…

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா அனுப்பிய தோழர்களுக்கு – இதழ் ஒரு வார இடைவெளிக்குப் பிறகே கிடைக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். சந்தா அனுப்பியவுடன் அடுத்த இதழ் உடனே கிடைக்கும் என்று தோழர்கள் எதிர்பார்ப்பு இயல்பானதே. ஆனால் சந்தா கிடைக்கப் பெற்று முகவரிப் பட்டியலில் இணைத்து சந்தாதாரருக்கு சென்றடைவதற்கு இடையில் ஒரு இதழுக்கான கால அவகாசம் தேவையாகிறது என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். சந்தா செலுத்திய பிறகு ஒரு இதழ்கூட கிடைக்கவில்லை என்றால் அது நிர்வாகத்தின் கோளாறு. உடனே அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டுகிறோம். இதழ் விட்டு விட்டு கிடைக்கவில்லை என்றால் அது உள்ளூர் அஞ்சலகத்தின் கோளாறு. அஞ்சலகத்திற்கு நேரில் சென்று ஒரு முறை புகார் அளித்தால் இந்த கோளாறை சரி செய்து விடலாம். இதழ் குறித்து தொடர்புக்கு: 9841 489896 (பொறுப்பாளர்) 9444 115133 (ஆசிரியர்) பெரியார் முழக்கம் 07032019 இதழ்

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (10) ஒரே சிறையில் பெரியாரும் அண்ணாவும்

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (10) ஒரே சிறையில் பெரியாரும் அண்ணாவும்

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். சென்ற இதழ் படிக்க பகுதி 9 பொன்மொழி நூலைப் பறிமுதல் செய்து, பெரியாருக்குத் தண்டனை வழங்கி, அவரது வாகனத்தையும் ஏலம் விட்ட அரசின் அடக்கு முறையை எதிர்த்து, கருஞ்சட்டைத் தோழர்கள் பொங்கி எழுந்தனர். தமிழ்நாடு முழுதும் கண்டனக் கூட்டங்கள் போராட்டங்கள் வெடித்தன. தீர்ப்பு வெளியான அன்றே ஈரோட்டில் கண்டனக் கூட்டம் சுவரொட்டி இயக்கங்கள் தொடங்கி விட்டன. சென்னை யில் தொடர்ந்து ஒரு வாரம் கண்டனக் கூட்டங்கள் அறிவிக்கப் பட்டன. சென்னை ராபின்சன் பூங்காவில் நடந்த கண்டனக் கூட்டத்தில் எஸ். இராம நாதன், சாமி சிதம்பரனார், ‘சண்டே அப்சர்வர்’ பி. பால சுப்பிரமணியம், குத்தூசி குருசாமி கண்டன முழக்கமிட்டனர். பார்ப்பன ஏடுகளான ‘ஹிந்து’, ‘சுதேச மித்திரன்’ தீயிட்டு எரிக்கப் பட்டன. கிளர்ச்சியில்...