தோழர் ஃபாரூக் படுகொலை
இசுலாமிய சமுதாயத்திற்கும் எமக்குமான உறவு தொப்பூள் கொடி உறவு.அதனை யாராலும் பிரிக்க முடியாது. மறைந்த பழனிபாபா அவர்கள்‘’நான் இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், மார்க்கத்தால் இசுலாமியன்’’ என பிரகடனப்படுத்தினார். சிறுபான்மை மக்களுக்கும், பெரும்பான்மையான எண்ணிக்கையில் இருக்கும் இந்து மத நம்பிக்கையுள்ள பார்ப்பனர் அல்லாத எம் உறவுகளுக்கும் எதிரான காவி மதவெறி பாசிசமே எமது முதன்மை எதிரி. பிறப்பின் அடிப்படையில் ஏற்ற தாழ்வுகளைக் கற்பிக்கும் பார்ப்பன சனாதன வேத மதமே முதலில் ஒழிக்கப்பட வேண்டிய மதம். பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் உழைத்தது சம உரிமையை மறுக்கும் வேதமதத்திற்கு எதிராகத் தான். தீண்டாமையை ஒழிக்க இசுலாம் மார்க்கத்தை பெரியார் பரிந்துரைத்தார். 5.00 மணிக்கு இசுலாமியனாக மாறினால் 5.05க்கு உன் தீண்டாமை போய் விடும் இவ்வளவு விரைவில் தீண்டாமையை போக்கும் வேறு வழியில்லை எனக் கூறினார். பெரியாரின் நாத்திகத்தின் முதன்மை நோக்கம் “ஜாதி ஒழிப்பே”. பெரியார் அறிவியல் நோக்கில் கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்தவர் அல்லர்....
