நிதி தாரீர் ! “வேத மரபு மறுப்பு மாநாட்டிற்காக…….”

 

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வரும் 24.12.2016 சனிக்கிழமை காலை முதல் மாலை வரை வேத மரபு மறுப்பு மாநாடு சேலம், நேரு கலையரங்கம், போஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

கருத்தரங்கம்- பேரணி – கலை நிகழ்ச்சி – பொது மாநாடு என ஒரு நாள் முழுவதும் நடைபெற உள்ள மாநாட்டிற்கான பணியில் கழகத் தோழர்கள் இரவு,பகலாக பணி செய்து வருகிறார்கள்.

மாநாட்டு பணிக்கான நிதியை கழக ஆதரவாளர்களிடம் பொது மக்களிடம் அணுகி திரட்டியும் கழகத் தோழர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தியும் பணியைத் தொடர்ந்து வருகிறார்கள்.

இதற்கிடையில் மத்திய பா.ஜ.க அரசின் திடீர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மாநாட்டு பணிக்கான நிதி திரட்டும் பணி நெருக்கடியை சந்தித்துள்ளது.

இம்மாநாட்டில் கழகம் வேத மரபிற்கெதிராக ஒரு புதிய அணிச்சேர்க்கையை முன்மொழிகிறது. இது பல்வேறு தரப்பினரின் வரவேற்பைப் பெற்றுள்ளது. வேத மரபிற்கெதிரான கடவுள் நம்பிக்கையுள்ளவர்களும் கூட பங்கேற்று தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்புதிய முயற்சிக்கு ஆதரவுக் கரம் நீட்டுவீர் !

தமிழின உரிமைகளுக்காக களத்தில் சமரசமின்றி தொடர்ந்து போராடிக் கொண்டும்,
பல்வேறு வழக்குகள், அரசின் ஒடுக்குமுறைகள் ஆகியவற்றை எதிர்கொண்டும்
எந்த வித சுணக்கமும் இன்றி கழகம் பெரியார் அமைத்த பாதையில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. கழகத்தின் பயணம் தொய்வின்றி தொடர ஆதரவளிப்பீர் !

மாநாட்டு பணிக்கென நிதி உதவியை வங்கி வழியாக அளித்திட :
தா.செ.மணி,
கணக்கு எண் : 555850503,
இந்தியன் வங்கி,
கொளத்தூர் கிளை,
swift code: IDIB 000KO43

You may also like...