Category: தலைமை அறிக்கை

தோழர் பொழிலன் நூலுக்குத் தடை ! கிரிமினல் வழக்குகள் பதிவு ! திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம்

தோழர் பொழிலன் நூலுக்குத் தடை ! கிரிமினல் வழக்குகள் பதிவு ! திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம்

*தோழர் பொழிலன் நூலுக்குத் தடை !* கிரிமினல் வழக்குகள் பதிவு ! *திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம் !* நூலின் மீதான தடையை நீக்கவும், தோழர் பொழிலன் மீதான வழக்குகளை திரும்ப பெற தமிழக அரசை வலியுறுத்தி கழக *பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அறிக்கை !* தோழர் பொழிலன் அவர்கள் எழுதிய வேத வெறி இந்தியா எனும் நூலுக்கு தமிழக அரசு தடை விதித்து பொழிலன் மீது பல வேறு கிரிமினல் சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது அஇஅதிமுக ஆட்சியா? அல்லது ஆர்எஸ்எஸ் பார்ப்பனர்களின் வேத ஆட்சியா ?என்று சொல்லுகிற அளவிற்கு மிக மிக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறது.இது மிகச்சிறந்த ஒரு ஆய்வு நூல். வேதங்களின் காலம், வேதங்களின் உள்ளடக்கம், பழந்தமிழ் இலக்கியங்களில் வேதங்கள், சைவர்கள் வேதத்தை எதிர்த்தது ஏன் ?, ஆரியச் சார்பு ஆய்வாளர்களாக இருந்த பரிமேலழகர்,பாரதியார் சித்பவானந்தர் போன்றவர்கள் வேதம்...

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் *தோழர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்க !*  – *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !*

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் *தோழர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்க !* – *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !*

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் *தோழர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்க !* – *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !* தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைந்த நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு விழாவாகக் கொண்டாட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது. ஏற்கனவே தமிழ்நாடு அரசும் கடந்த ஆண்டு தனது தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு நாளைக் கொண்டாட முடிவு செய்து அரசாணை வெளியிட்டு இருந்தது. கர்நாடகம், காஷ்மீரம், ஆந்திரம் போன்ற பல மாநிலங்கள் இப்படிப்பட்ட விழாவை தங்கள் மாநிலத்திற்கு என்று தனிக்கொடி அமைத்துக்கொண்டு கொண்டாடுவதைப் போல தமிழ்நாடும் கொண்டாடவேண்டும் என்று விரும்பி அதற்கென தமிழ்நாட்டின் ‘வரைபடத்தைக் கொண்ட ஒரு தற்காலிக கொடியினையும் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அறிமுகம் செய்திருந்தது. மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை சுட்டிக்காட்டியும், மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படவும், தங்கள் மாநிலத்தின் சமூகம்,...

தமிழ்நாடு விழா – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

அனைவருக்கும் வணக்கம். ஒரு சில செய்திகளை உங்கள் அனைவரின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக இவ்வறிக்கையை  எழுதுகிறோம். தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைந்த நவம்பர் ஒன்றாம் தேதியை ‘தமிழ்நாடு விழா’வாகக் கொண்டாட வேண்டும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தீர்மானித்து அதன் அடிப்படையில் அதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு அரசும், கர்நாடகம் போன்ற சில மாநிலங்களில் எழுச்சியோடு கொண்டாடுவது போல தமிழ்நாட்டிலும் கொண்டாட வேண்டும் என்று கருதி அதற்கென்று தமிழ் பண்பாட்டு துறையின் சார்பில்  தமிழ்நாடு விழா நடத்துவதற்காக 10,00, 000 ரூபாய்களை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டிருந்தது. அவ்வரசாணையைக் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசுக்கு, மாநில உரிமை பற்றிய சிந்தனையோடு இவ்வாறான ஆணையை பிறப்பித்ததற்கு பாராட்டுகளைத் தெரிவித்திருந்தோம். பாராட்டு தெரிவித்தும், தமிழ்நாடு விழாவை கொண்டாடுவதற்கு ஒரு தற்காலிக கொடியினை உருவாக்கி இருக்கிறோம் என்பதையும், தமிழ்நாடு அரசு ஏதேனும் ஒரு புதிய கொடியினை அறிமுகப்படுத்தினால் அதனை ஏற்று செயல்பட அணியமாய் இருக்கிறோம் என்பதையும்...

மனுசாஸ்திரத்தை தடை செய்ய வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகம் ஆதரவு !

*விடுதலை சிறுத்தைகள்* நாளை (24.10.2020) நடத்தும் *மனுசாஸ்திரத்தை தடை செய்ய வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகம் ஆதரவு !* *கழகத்தோழர்கள்* இந்த ஆர்ப்பாட்டத்தில் *கலந்து கொள்ள* வேண்டுமாய் கழகத் தலைவர் *தோழர் கொளத்தூர் மணி வேண்டுகோள் !* அன்பு தோழர்களுக்கு, வணக்கம். தற்போதைய அரசியல் சூழலில் நாம் முன்னெடுக்க வேண்டிய பல போராட்டங்களுக்கு பாரதிய ஜனதா கட்சிக்காரர்களும், பார்ப்பனிய, பார்ப்பனிய அடிமை இந்துத்துவாதிகளும் வழியமைத்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் *மதிப்பிற்குரிய தோழர் திருமாவளவன்* அவர்கள் மனுசாஸ்திரம் குறித்து ஆற்றிய உரையின் ஒரு பகுதியை வெட்டி உருவி எடுத்து, அதை வைத்துக்கொண்டு கேவலமான விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள். மனு சாஸ்திரத்தில் இல்லாத எது ஒன்றையும் அவர் பேசி விடவும் இல்லை.அவர் எவ்வகையிலும் பெண்களை இழிவுபடுத்தி பேசி விடவும் இல்லை.என்றபோதிலும் இந்த ஆணவக் கூட்டம் ஆடை அவிழ்வதும் தெரியாமல் ஆட்டம் போடுகிறார்கள். இந்த ஒரு நல்வாய்ப்பை முன்வைத்து...

இணையம் வழியாக கழகத்தின் மாவட்ட கலந்துரையாடல்கள்

இணையம் வழியாக கழகத்தின் மாவட்ட கலந்துரையாடல்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாத சூழ்நிலையால், தலைமைக் குழு மற்றும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் ‘Team Link’ வாயிலாகவே நடைபெற்றது.  30.06.2020 அன்று காலை 10:30 மணியளவில் தலைமைக் குழு நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்,  12.07.2020 –  ஈரோடு தெற்கு மாவட்டம், 14.07.2020 –   சேலம் கிழக்கு மற்றும் சேலம் மேற்கு மாவட்டங்கள், 19.07.2020 –  திருப்பூர் மற்றும் கோவை, 21.07.2020 –  தர்மபுரி மற்றும் கிருட்டிணகிரி, 23.07.2020 –  வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, 26.07.2020 –  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், 28.07.2020 –   திருச்சி, பெரம்பலூர், அரியலூர், 29.07.2020 –  தஞ்சாவூர், நாகை, 30.07.202 –  மதுரை, சிவகங்கை மாவட்டங்கள், 31.07.2020 –  நாமக்கல், ஈரோடு வடக்கு மாவட்டம், 02.08.2020 –   தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி, 09.08.2020 –  தென் சென்னை, வடசென்னை ஆகிய தேதிகளில் கழகத் தலைவர்,...

வாசகர்களுக்கு

வாசகர்களுக்கு

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 19, 2020-க்குப் பிறகு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளிவர இயலவில்லை. 8.10.2020 முதல் மீண்டும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தனது பயணத்தைத் தொடங்குகிறது.                         – ஆசிரியர்

சுயமரியாதை வீரர் கோபி வெங்கிடு அவர்கள் முடிவெய்தினார் !*  *திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !

சுயமரியாதை வீரர் கோபி வெங்கிடு அவர்கள் முடிவெய்தினார் !* *திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !

*சுயமரியாதை வீரர் கோபி வெங்கிடு அவர்கள் முடிவெய்தினார் !* *திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !* கோபி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிநாள் தொண்டரும், அழுத்தமான சுயமரியாதைக்காரருமாகிய மதிப்பிற்குரிய *அண்ணன் கோபி வெங்கிடு அவர்கள் முடிவெய்தினார்* என்ற செய்தி தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றின்மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் வேதனை தரும் ஒன்றாகும். தன்னுடைய நகைச்சுவை நிறைந்த பேச்சுக்களாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையை வெளிப்படுத்தும் உரைகளாலும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல்களை இசை தவறாமல் பாடும் ஆற்றலினாலும் திராவிட இயக்கக் கொள்கைகளை தமிழகமெங்கும் பரப்பிய சிறப்பு அவருக்கு உண்டு. தனது சட்டமன்ற உறுப்பினர் பதவிக் காலம் முடிந்த பின்னால் தன்னுடைய சிறிய கடையில் அமர்ந்து வணிகம் செய்யவும் தயங்காத ஒரு மாமனிதர், எளிமையின் அடையாளமான அம் மானமிகு சுயமரியாதைக்காரருக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புகழ் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம். தனது அனைத்து குடும்ப...

விநாயகர்சதுர்த்தி – தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராகவும், சட்ட விரோதமாகவும் தடையை மீறும்இந்து முன்னணி ! தடுத்து நிறுத்த கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி வேண்டுகோள்!

#விநாயகர்_சதுர்த்தி – தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராகவும், சட்ட விரோதமாகவும் #தடையை_மீறும்_இந்து_முன்னணி ! #தடுத்து_நிறுத்த கழகத் தலைவர் தோழர் #கொளத்தூர்_மணி_வேண்டுகோள்! —————————————————– அன்பு தோழர்களுக்கு, வணக்கம். நம் முன் உள்ள ஒரு உடனடிக் கடமையினை சுட்டிக்காட்டவே இந்த அறிக்கையை எழுதலானேன். கடந்த 13.08.2020 அன்று அரசின் செய்தி வெளியீடு 583 இன் வழியாக நாட்டில் நிலவும் கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டும், தடுப்பு நடவடிக்கையாய் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டியும் 22.08.2020 சனிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி எனும் நிகழ்வையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதையோ, விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்துவதையோ, நீர்நிலைகளில் கரைப்பதையோ அனுமதிக்க இயலாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளதோடு, வீடுகளிலேயே இந்நிகழ்வினை நிகழ்த்திக் கொள்ளுமாறு தமிழக அரசு சமூக அக்கறையோடு அறிவித்திருந்தது. ஆனால் அறிவிப்பு வந்தவுடன் அதற்கு எதிர்வினையாக இந்து முன்னணியின் காடேஸ்வரா சுப்பிரமணியம் என்பவர் “நாங்கள் தடை ஆணையை மீறி ஒன்றரை இலட்சம் சிலைகளை...

முகநூலில் இயங்கும் பெரியார் இயக்கத் தோழர்களுக்கும்,முற்போக்கு சக்திகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் வேண்டுகோள் !

முகநூலில் இயங்கும் பெரியார் இயக்கத் தோழர்களுக்கும்,முற்போக்கு சக்திகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் வேண்டுகோள் !

முகநூலில் இயங்கும் பெரியார் இயக்கத் தோழர்களுக்கும்,முற்போக்கு சக்திகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் வேண்டுகோள் ! ___________________________________ அன்பார்ந்த தோழர்களே! வணக்கம். நேற்று (22-7-2020) கோவை மாவட்டம், அன்னூரில் பெரியாரிய இயக்கத் தோழர்களும், ஜனாயக சக்திகளும் இணைந்து முன்னெடுத்த ஒரு போராட்டம், நம்மைப் போன்ற முற்போக்கு இயக்கங்களைச் சார்ந்த தோழர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது. என்னதான் நடந்தது? அன்னூருக்கு அருகிலுள்ள நல்லி செட்டிப் பாளையம் எனும் ஊரைச் சேர்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் சண்முகநாதன் என்பவர் மோடி குறித்தும் கந்தசஷ்டிக் கவச சிக்கல் குறித்தும் முகநூலில் பதிவிட்டிருந்தார் என்பதற்காக இந்து அமைப்பினர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடனே, அன்னூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்றினைப் பதிவு செய்து 21.07. 2020 அன்று மாலை அத்தோழரைக் கைது செய்துள்ளனர். அதேவேளையில் பெரியார் குறித்து மிகக்கேவலமாக முகநூலில் பதிவுகளைப் போட்டுள்ள அன்னூர்...

கறுப்பர் கூட்டம் கைது குறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !

கறுப்பர் கூட்டம் கைது குறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !

கறுப்பர் கூட்டம் கைது குறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை ! கருத்துரிமைக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் ! இந்துத்துவவாதிகள்,கருத்துரிமைக்கு எதிராக தொடர்ந்து நடத்திவரும் ஆபத்தான அராஜகப் போக்கை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் ! திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை ! இந்திய ஒன்றியத்தின் ஆட்சிப் பொறுப்பில் பாஜக அமர்ந்த பின்பு பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவும் ஒரே நோக்கோடு பல்வேறு வகைகளில் மாநில உரிமைகளைப் பறிப்பது, பார்ப்பனரல்லாத மக்களின் கல்வி உரிமை வேலைவாய்ப்புரிமை, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டு உரிமை என ஒவ்வொன்றாக பறித்து வருகிறது. அந்தவகையில் மிக முக்கியமாக கருத்துரிமைக்கு எதிராக இந்துத்துவவாதிகளின் கடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்திய அரசியல் சட்டப் பிரிவு 51A (h) வழியாக அடிப்படை கடமையாகக் கூறியுள்ள அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல், ஆய்வு...

பெரியார் சிலை அவமதிப்பு -கழகத் தலைவர் நாளிதழ் பேட்டி

பெரியார் சிலை அவமதிப்பு -கழகத் தலைவர் நாளிதழ் பேட்டி

பெரியார்_சிலை_அவமதிப்பு, #கந்த_சஷ்டி_கவசம் குறித்த சர்ச்சை குறித்து கழகத் தலைவர் #தோழர்_கொளத்தூர்_மணி அவர்கள் 18.07.2020 அன்று நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள #பேட்டி : “தமிழகத்தில் அண்மைக்காலங்களில் திருவள்ளுவர் சிலைக்கு காவி துணி கட்டுவது, பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பத்திரிக்கையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தி பேசுவது, ஹைகோர்ட்டாவது மயிராவது என்று கோர்ட்டை அவமதிப்பது ஆகியவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இவர்கள் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்வதில்லை; செய்தாலும் கைது செய்வதில்லை. ஆனால் கடந்த ஜனவரி மாதம் கந்தசஷ்டி கவசத்தில் எழுதப்பட்டுள்ள வாசகத்தை படித்து வீடியோ பதிவிட்ட வரை ஆறு மாதங்கள் கழித்து தேடிப்பிடித்து கைது செய்கிறார்கள். இதன் நோக்கம்தான் என்ன? நடவடிக்கை எடுத்தால் அனைவர் மீதும் சரிசமமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்த சஷ்டியைப் படித்தவர் ஒன்றும் அதில் இல்லாததை படிக்கவில்லையே? அதிலுள்ள ஆபாச வார்த்தைகளை மதம் என்ற பெயரில் மக்கள் மீது திணிக்கப்படுவதைத்...

இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக!

இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக!

18-7-2020 இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக! ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை கொரோனாவின் வருகை. வரலாற்று வளர்ச்சிப் போக்கை விரைவுபடுத்தியுள்ளது. அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க வேண்டியவர்களாக தமிழ் மக்களாகிய நாமும் உள்ளோம். கொரோனா ஏற்படுத்தும் அரசியல் பொருளியல் சங்கிலித் தொடர் நிகழ்வுகளால் எழப்போகும் போராட்டங்களும் கொரோனா போலவே உலகெங்கும் பரவுவது திண்ணம். மென்மேலும் மக்கள்திரளின் காலமாக எதிர்காலம் விரிகிறது. ஆயினும் அந்த மக்கள்திரளின் கருத்தை அறிவதற்குத் தேர்தல் வழியாக அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட பெயராளர்களின் கருத்தையே இன்றைய பன்னாட்டுலக அரசுகள் கோரி நிற்கின்றன. இது அரசியலில் ஒரு குடியாட்சிய மரபாக வளர்ந்து வந்திருக்கக் காண்கிறோம். ஒற்றையாட்சி அரசமைப்புக்கு உட்பட்ட நாடாளுமன்றத்திற்கான இடங்களைப் பிடிப்பதால் இலங்கைத் தீவுக்குள் ஈழத் தமிழர்களுக்கு பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால், இலங்கைத் தீவுக்கு வெளியே பன்னாட்டரங்கில் தமிழர்களின் வேணவாக்களை...

கருப்பர் கூட்டத்தின் மீது பாஜக கொடுத்த வழக்கு

கருப்பர் கூட்டத்தின் மீது பாஜக கொடுத்த வழக்கு

“கருப்பர் கூட்டத்தின் மீது பாஜக கொடுத்த வழக்கு பற்றி #திராவிடர்_விடுதலைக்_கழகப் #பொதுச்செயலாளர் #விடுதலை_இராசேந்திரன்” “YouTube channel ஒன்றின் மீது, பாஜக காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறது. “இந்த channel ஹிந்து கடவுள்களின் புனிதத்தை கெடுக்கிறது; கடவுள்களுக்கு பாலியல் விளக்கங்களை அளிக்கிறது; இது மதத்தின் பல்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குகிறது” என்று அந்த புகார் கூறுகிறது. தமிழ்நாடு காவல்துறையின் cyber crime, இது குறித்து விசாரித்து, 5 பிரிவுகளின் கீழ், அந்த youtube channel மீது வழக்குகளை பதிவு செய்திருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. ஜாதி, மதம், இனம், மொழி சம்மந்தமாக விரோத உணர்வை தூண்டுகின்ற 5 பிரிவுகள் இந்த வழக்குகளாகும். உண்மையில் இந்த youtube channel என்ன செய்திருக்கிறது? ஹிந்து கடவுள்களுக்கான பல்வேறு புராணங்களில், 1. ஹிந்து கடவுள்களின் பிறப்புகள், 2. அவர்களின் அவதார மகிமைகள், 3. சடங்கு ஆச்சாரங்களுக்கு ஹிந்து புராண நூல்களில் கூறப்படுகின்ற விளக்கங்கள் இவற்றை அந்த நூல்களில் இருந்து எடுத்துக்காட்டி...

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் இணையவழி கருத்தரங்குகள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் இணையவழி கருத்தரங்குகள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் இணையவழி கருத்தரங்குகள்… – – – – – – – – – – – – – முதல் அமர்வு – – – – – – – – – – – – – சூலை 17, 18, 19 (வெள்ளி, காரி, ஞாயிறு – மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 வரை) கருத்தரங்கம் 1 (சூலை 17) ————————- தலைப்பு: மநு நூலும் வேத புராண சாஸ்திரங்களும் தமிழருக்கு எதிரானவை.. தலைமை: தோழர் கோவை கு. இராமக்கிருட்டிணன் கருத்துரையாளர்கள்: பேராசிரியர் வீ அரசு தோழர் குடந்தை அரசன் தோழர் நிலவழகன் கருத்தரங்கம் 2 (சூலை 18) ————————- தலைப்பு: ஆரியப் பார்ப்பனியம் ஏன் எதிர்க்கப்பட வேண்டியது.. தலைமை: தோழர் வாலாசா வல்லவன் கருத்துரையாளர்கள்: தோழர் இரா.அதியமான் பேராசிரியர் கருணானந்தம் வழக்கறிஞர் அருள்மொழி கருத்தரங்கம் 3...

ஊடகத்துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்! #SaveJournalismfromBrahmanism

ஊடகத்துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்! தமிழ்நாட்டு வரலாற்றில் பல நூற்றாண்டுகால இடைவெளிக்குப் பிறகு பார்ப்பன ஆதிக்கத்தோடு மிகக் கடுமையான போராட்டத்தைத் தொடங்கியவர் தோழர் பெரியார். சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர்கழகம் என பல இயக்கங்களின் தலைவராக இயங்கினாலும், அவரது பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரின் தொடக்கம் “குடிஅரசு” எனும் ஊடகம் தான். வடநாடுகளில் பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரைத் தொடங்கிய தோழர் அம்பேத்கரின் தொடக்கமும் “மூக்நாயக்” எனும் ஊடகம் ஏடுதான்.  பார்ப்பனப் பத்திரிகைகளின் நிலைபற்றிய தோழர் அம்பேத்கரின் வரிகள்…. “வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியாவைப் பற்றிய செய்திகளைப் பார்த்தால், காங்கிரஸ் கட்சி தான் ஒட்டுமொத்த இந்திய மக்களின் பிரதிநிதியாகத் திகழ்கிறது என்று தான் எண்ணுவார்கள். தலித் மக்கள் உட்பட அனைவரின் பிரதிநிதியாக காங்கிரஸ் கட்சியைத்தான் கருதுவார்கள். இதற்கு முக்கியக் காரணம் தலித் மக்களுக்கென்று தனியாக ஒரு ஊடகம் இல்லை. காங்கிரஸின் கருத்துக்களுக்கு மாற்றான உண்மைகளை எழுத பட்டியலின மக்களிடம் பத்திரிகைகள் எதுவுமே...

திவிக தலைமைக் குழு கூட்டம் 30062020

திவிக தலைமைக் குழு கூட்டம் 30062020

*திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு தீர்மானங்கள் :* திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக்குழுக் கூட்டம் 30.06.2020 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் டீம் லிங்க் செயலி வழியாக நடைபெற்றது. தலைமைக் குழுக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தோழர் விடுதலை க.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமைக் குழுக் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி.குமரன், அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி, இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராஜன், அன்பு தனசேகர், சூலூர் பன்னீர்செல்வம், உமாபதி, மடத்துக்குளம் மோகன், அய்யனார், இளையராஜா, காவலாண்டியூர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமைக் குழுக் கூட்டம் காலை 10.30 மணி அளவில் துவங்கி மதியம் 2 30 மணி வரை நடைபெற்றது. கழக அமைப்பின் இணையதள செயல்பாடுகள், கருத்தரங்குகள், கொரோனா பேரிடர் காலத்தில்...

ஜெ.அன்பழகன் மறைவு ! திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !

ஜெ.அன்பழகன் மறைவு ! திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !

ஜெ.அன்பழகன் மறைவு ! திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் ! மக்கள் பணியில் உயிர்நீத்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் அளித்துள்ள இரங்கல் செய்தி : திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர்களில் ஒருவருமான ஜெ.அன்பழகன் இன்று மரணமடைந்துவிட்டார்.கொரானோ தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். கடந்த சில வாரங்களாக கட்சியின் தலைமை ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உணவுப் பொருள்களை வழங்குகிற உதவிகளை செய்துவந்தது. “ஒன்றிணைவோம் வா” என்ற பெயரில் செயல்பட்ட அத்திட்டத்தில் தீவிரமாக பங்கேற்று செயலாற்றி வந்தார் ஜெ.அன்பழகன். 1995ம் ஆண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் அவர். மருத்துவர்கள் ஆலோசனையை மீறி பொது தொண்டாற்ற வந்தார் அவர். பொதுத்தொண்டின் வழியாக கிடைக்கின்ற மரணம் என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய மரணம்தான். இந்த மரணம் அவருக்கும்...

விகடன் பத்திரிக்கை குழுமத்தில் 170 தொழிலாளர்கள் பணி நீக்கம் – கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் கடும் கண்டனம்

விகடன் பத்திரிக்கை குழுமத்தில் 170 தொழிலாளர்கள் பணி நீக்கம் – கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் கடும் கண்டனம்

விகடன் பத்திரிக்கை குழுமத்தில் 170 தொழிலாளர்கள் பணி நீக்கம், திராவிடர்விடுதலைக் கழகம் கடும் கண்டனம். இந்த சட்டவிரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களுக்கு திவிக முழு ஆதரவு ! இது குறித்து திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை : விகடன் பத்திரிக்கை குழுமம் 170 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. கொரோனா காலத்தில் வாழ்க்கை போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற தொழிலாளர்களுக்கு இப்படி ஒரு பேரதிர்ச்சியை விகடன் குழு கொடுப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. 1947ம் ஆண்டு தொழில் தகராறு சட்டப்படி இது சட்ட விரோத நடவடிக்கையாகும். கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு ஒரு தாக்கீதை பிறப்பித்திருந்தது இந்த ஊரடங்கு காலத்தில் எந்த ஒரு நிறுவனமும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தராமல் இருக்கக் கூடாது என்பதோடு அவர்களை...

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க!

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க!

“புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க!” – கூட்டறிக்கை – 16.05.2020 புலம்பெயர்தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்தக் கூடாது! சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்! தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலத்தை ஏற்படுத்தக் கூடாது! சனநாயக ஆற்றல்கள், இயக்கங்கள்,கட்சிகளின் கூட்டறிக்கை! பிரதமர் மோடி தலைமையிலான நடுவண் அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொல்லொணா துயரத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.கடந்த 50 நாட்களாக அவர்கள் கைக்குழந்தைகளுடன் வெறுங்கால்களிலும் சொந்த ஊர் நோக்கி நடந்தே செல்லும் காட்சிகளைப் பார்த்து வருகிறோம். கொரோனா பேரிடரின் போதும் பெருமுதலாளிகளுக்கு 68,000 கோடி கடனைத் தள்ளுபடி செய்யும் நடுவண் அரசு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் செல்வதற்கு போக்குவரத்தைக்கூட ஏற்பாடு செய்யாமல் மிக மோசமாக புறக்கணித்தது. முதல்சுற்று ஊரடங்கு அறிவிப்பின்போதே தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்தே செல்லும் தொழிலாளர்களைக் காப்பாற்ற நடவடிக்கை...

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க! – கூட்டறிக்கை – 16-5-2020

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க! – கூட்டறிக்கை – 16-5-2020

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க! – கூட்டறிக்கை – 16-5-2020 புலம்பெயர்தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்தக் கூடாது! சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்! தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலத்தை ஏற்படுத்தக் கூடாது! சனநாயக ஆற்றல்கள், இயக்கங்கள், கட்சிகளின் கூட்டறிக்கை பிரதமர் மோடி தலைமையிலான நடுவண் அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொல்லொணா துயரத்தில் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 50 நாட்களாக அவர்கள் கைக்குழந்தைகளுடன் வெறுங் கால்களிலும் சொந்த ஊர் நோக்கி நடந்தே செல்லும் காட்சிகளைப் பார்த்துவருகிறோம். கொரோனா பேரிடரின் போதும் பெருமுதலாளிகளுக்கு 68,000 கோடி கடனைத் தள்ளுபடி செய்யும் நடுவண் அரசு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் செல்வதற்கு போக்குவரத்தைக்கூட ஏற்பாடு செய்யாமல் மிக மோசமாக புறக்கணித்தது. முதல்சுற்று ஊரடங்கு அறிவிப்பின்போதே தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்தே செல்லும் தொழிலாளர்களைக்...

அய்யா பெ.மணியரசன் அவர்களுக்கு, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பதில்

அய்யா பெ.மணியரசன் அவர்களுக்கு, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பதில்

*அய்யா பெ.மணியரசன் அவர்களுக்கு, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பதில் !* கடந்த மே மூன்றாம் நாள், புலிகள் – திராவிட முன்னேற்ற கழகம் என்ற எதிரெதிர் விவாதங்கள் குறித்து, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் இப்படிப்பட்ட தேவையற்ற தரம் தாழ்ந்த விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என்று கூறி விடுக்கப்பட்ட அறிக்கையின் சில வரிகள் மீதான கேள்விகளை எழுப்பி, தோழர் – மன்னியுங்கள் – அய்யா மணியரசன் அவர்கள், “கொளத்தூர் மணியும், சுப.வீ.யும் பிரபாகரன் எதிர்ப்பாளர்களை ஆதரிக்கலாமா?” என்ற தலைப்பில் நீண்டதொரு அறிக்கையை எழுதியுள்ளார். இறுதிப்பகுதியில் சில கேள்விகளையும் நம்மை நோக்கி வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியை எதிர்க்கின்ற அளவுக்காவது மோடி ஆட்சியை, இதுவரை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடர்ச்சியாக ஆவேசத்தோடு எதிர்த்ததுண்டா? அனைத்துக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தது. இதுதான் பாஜக எதிர்ப்பு கூட்டணியா? தோழர் கொளத்தூர் மணி கட்சி, பாஜக மதவாத எதிர்ப்பு வேலைத்...

தமிழ் நாட்டினை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – கழகத் தலைவர் கோரிக்கை

தமிழ் நாட்டினை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – கழகத் தலைவர் கோரிக்கை

தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்களின் அறிக்கையை முழுதுமாக நானும் ஏற்றுக் கொள்கிறேன் தமிழ் நாட்டினை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு எனது ஒப்புதலை அளிக்கிறேன். வன்கொடுமைப் புகார்களை அளிப்பதற்கு வாய்ப்பாக ஓர் புகார் எண்ணை அறிவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன். கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் 11-5-2020   தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்களுடைய அறிக்கையோடு நானும் கீழ்க்கண்ட செய்தியினை அரசின் கவனத்திற்கும், காவல்துறைத் தலைமையின் கவனத்திற்கும், பொதுமக்களின் கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன். பவானியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இளமதி என்ற பெண்ணும் கவுந்தப்பாடி யைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த செல்வன் என்பவரும் அவர்கள் இருவரின் முழு சம்மதத்தோடு கொளத்தூரை அடுத்த காவலாண்டியூரைச் சேர்ந்த திரு ஈஸ்வரன் அவர்கள் தலைமையில் 9-3-2020 அன்று திருமணம் செய்து கொண்டார்கள். செய்தியறிந்த பெண்ணின் குடும்பத்தினரும் அவர்களுக்குத் துணையாக ஏறத்தாழ நாற்பது ஐம்பது அடியாட்களும் வந்து திருமணத்தை...

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு இணையவழியில் ஆர்ப்பரித்து முழக்கமிடத் திட்டம்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு இணையவழியில் ஆர்ப்பரித்து முழக்கமிடத் திட்டம்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – 2 – 5 – 2020 -அன்று இணையவழி நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் நடுவக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: கொரானா நோய்த்தொற்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற நெருக்கடிச் சூழலில், எரிகிற வீட்டில் பறிப்பது ஊதியம் எனக் கொள்ளை அடிக்கிற கொடூரனைப் போல இந்திய அரசு மொழித் தேச மாநில உரிமைகளையெல்லாம் பறித்துக் கொண்டு போவதைப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வகையில் எல்லாம் இந்திய அரசின் மாநில உரிமைகளைப் பறிக்கும் போக்கைக் கண்டித்து எதிர்வரும் 9-5-2020 -ஆம் நாள் `பறிக்காதே! பறிக்காதே! மாநில உரிமைகளைப் பறிக்காதே!! கொரானா தாக்கிடும்...

புலிகள் – திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எதிர்  எதிர்விவாதங்கள் குறித்து…….

புலிகள் – திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எதிர் எதிர்விவாதங்கள் குறித்து…….

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அறிக்கை……. புலிகள் – திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எதிர்  எதிர்விவாதங்கள் குறித்து……. அன்பார்ந்த தோழர்களே, வணக்கம். கடந்த சில நாட்களாக புலிகள் – திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எதிர் எதிர் விவாதங்கள் சமூக வலைதளங்களில் மிகுந்து காணப்படுகின்றன. ஒரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் இறுதிப்போரின் போது ஈழத் தமிழர்களை வஞ்சித்து விட்டது என்பதான புலிகள் ஆதரவு வாதங்களும்,இன்னொரு பக்கம் புலிகள் தான் அநியாயமாக ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்குக் காரணமாக இருந்தார்கள் என்பதாக ஒரு பக்கமும் செயற்கையான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த விவாதங்களில் சில கடுஞ் சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.இரு தரப்பாரும் தங்கள் நிலையை அல்லது தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்வதற்காக வரம்பு கடந்து சில வாதங்களை வலிந்து முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது இந்திய அரசே நினைத்திருந்தாலும் போரினை நிறுத்தியிருக்க முடியாது.மேற்கத்திய வல்லரசுகள் நடத்திய போர்...

ஈழச்சொந்தங்களுக்கு உதவுங்கள்.

ஈழச்சொந்தங்களுக்கு உதவுங்கள்.

அன்புடையீர் வணக்கம். ஈழச்சொந்தங்களுக்கு உதவுங்கள். “இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள” கும்மிடிபூண்டி, புழல் ஆகிய இடங்களில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் முகாமில் வாடி வரும் சொந்தங்களின் பசியாற்றுவதற்கான வேண்டுகோளை முன்வைக்கிறோம். தங்களின் நாட்டிற்கும் செல்ல இயலாமல், முகாமில் வாழும் மக்கள் இந்திய, தமிழக அரசினால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வரும் சூழலில் பேரிடியாக வந்த கொரோனா தொற்றால் மேலும் நிலைகுலைந்துள்ளனர். 80 சதத்திற்கு மேலானவர்கள் தினக்கூலிக்கு செல்லும் தொழிலாளர்களாக இருப்பதாலும், கடந்த 36 நாட்களுக்கு மேலாக வருமானமில்லாத தாலும் அவர்களின் மிகவும் இக்கட்டான சூழலை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர். கும்மிடிப்பூண்டி முகாமில் பதிவு செய்யப்பட்ட 900 குடும்பங்களும், பதிவு செய்யப்படாமல் 170 குடும்பங்களும், புழல் முகாமில் பதிவு செய்யப்பட்ட 215 குடும்பங்களும், பதிவு செய்யப்படாமல் 125 குடும்பங்களும் இருக்கின்றன. பதிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டைக்கு உள்ள பொருட்களை அரசு கொடுத்தாலும் அது முழுமையாக பற்றாததும், காய்கறிகள் வாங்குவதற்கு பணம்...

பட்டியலின மக்களுக்கு மட்டுமான தலைவரா #அம்பேத்கர்? – தோழர் கொளத்தூர் மணி

பட்டியலின மக்களுக்கு மட்டுமான தலைவரா #அம்பேத்கர்? – தோழர் கொளத்தூர் மணி

#அவசியம்படியுங்கள்.. பட்டியலின மக்களுக்கு மட்டுமான தலைவரா #அம்பேத்கர்? – #தோழர்_கொளத்தூர்மணி தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அரசே அறிவித்தப்பின்னாலும், இன்று தமிழ் புத்தாண்டு என்று அனைத்து தொலைக் காட்சிகளிலும் அறிமுகபடுத்திக் கொண்டிருக்கிற இந்த ஏப்ரல் 14 இல், அம்பேத்கரை நினைவு படுத்தி பேசுவதற்காக அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கூடியிருக்கிறோம். புரட்சியாளர் அம்பேத்கரை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? நாம் ஏன் அவரை மற்றவர்களிடம் இருந்து பிரித்து வேறுபடுத்தி தனித்துவமாக பார்க்கிறோம் என்பதில்தான் அம்பேத்கருக்கு பிறாந்த நாள் எடுப்பதன் பலனாக இருக்கும். புரட்சியாளார் அம்பேத்கர் பல சிறப்புகளை கொண்டவர். அவர் ஓர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், வெளிநாடுகளுக்கு சென்று படிக்கிற வாய்ப்பினை பெற்றார். அங்குபோய் ஆய்வு பட்டங்களையும், பல உயர் பட்டங்களையும் பெற்றார். தத்துவ துறையில், பொருளியல் துறையில், சட்டத்துறையில் பட்டங்களை பெற்று திரும்பி வந்தார் என்றால் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதற்காக அல்ல. இந்த இந்திய சமுதாதாயத்தை திருத்த...

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் !  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து …..

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் ! கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து …..

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் *தோழர் கொளத்தூர் மணி* அவர்கள் *தமிழக முதலமைச்சருக்கு கடிதம் !* *கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ………..* *10.04.2020* மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக சில செய்திகளை உங்கள் பரிசீலனைக்கு முன்வைக்கவே இந்த கடிதத்தை எழுதுகிறோம். கொடூரமான கொரோனோ தொற்றுக்காக மக்களுக்கு சிகிச்சை அளிக்க, நோய்ப் பரவலைத் தடுக்க, பாதுகாக்க அரசு முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு எமது பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம். நோய்த் தொற்றுப் பரவாமல் இருக்க, உள்ளடங்கி இருப்பதுவும் பாதுகாப்பு இடைவெளியோடு இருப்பதுவும் தேவை என்பதைப் பரவலாக பரப்பி அதற்காக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அது முடியும் நிலையில் நாம் இருக்கிறோம். ஒருவேளை நடப்பு நிலை கருதி மேலும் ஒருமுறையோ, சிலமுறையோ இந்த ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்ற நிலையில்தான் அதுகுறித்த சில முன்மொழிவுகளை உங்கள் முன் வைப்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறோம். ஊரடங்கு காலத்தில் உணவுப்...

தமிழக அரசே, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்,  நீண்ட நாட்களாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அரசியல் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய். – சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டறிக்கை

தமிழக அரசே, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய், நீண்ட நாட்களாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அரசியல் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய். – சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டறிக்கை

சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டறிக்கை =================================== தமிழக அரசே, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய், நீண்ட நாட்களாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அரசியல் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய். =================================== தமிழக அரசே ! கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலக நாடுகள் கடுமையான பொருளாதார, சுகாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மிக விரைவாக கொரோனா பாதிப்பு பரவிக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிநபரும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி கொண்டிருக்கிறது இல்லையென்றால் கொரோனா தொற்று எளிதில் பரவும் என அறிவித்துள்ளது. மேலும் உடல் பலவீனமாக உள்ளவர்களை இந்த வைரஸ் விரைவாக தொற்றி உயிரிழப்பில் கொண்டுபோய் விட்டு விடும் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது இட நெருக்கடியில் வாடும் சிறையாளர்களைக்...

இணையக் கருத்தரங்கம்

இணையக் கருத்தரங்கம்

திவிக இணையதள பிரிவு இணையக் கருத்தரங்கம் இரண்டாம் கட்ட பட்டியல் https://m.teamlink.co/8111478740 இணைப்பு 8111478740 தினமும் காலை 11.30 மணிக்கு 31-3 அறிமுகம் – 1-4 தோழர் பெரியாரின் சமதர்மம் தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் தோழர் சிவகாமி 2-4 இடஒதுக்கீட்டு சிக்கல்கள் திவிக தலைமைக்குழு உறுப்பினர் தோழர் அன்பு தனசேகர் 3-4 நாத்திகமும் அறிவியல் மனப்பான்மையும் பெரியாரிய சிந்தனையாளர் தோழர் எட்வின் பிரபாகரன் 4-4 மருத்துவ துறையில் திராவிட இயக்கத்தின் சாதனை தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர் தோழர்  பிரசாந்த் 5-4 கொளுத்துவோம் மனுதர்மத்தை திவிக தஞ்சை மாவட்ட தலைவர் தோழர் சாக்கோட்டை இளங்கோவன் 6-4 மணியம்மையார் போர்க்குணம் தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர் தோழர் தேன்மொழி 7-4 பெரியாரியலாளர்களின் இயக்க பணிகள் திவிக தலைமைக்குழு உறுப்பினர் தோழர் மடத்துக்குளம் மோகன் 8-4 தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர் வீரா கார்த்திக் 9-4 புத்தமும் பெரியாரியமும்...

கழக ஏடுகளுக்கு சந்தா : கழகப் பொறுப்பாளர்கள் நேரில் வருகிறார்கள்

கழக ஏடுகளுக்கு சந்தா : கழகப் பொறுப்பாளர்கள் நேரில் வருகிறார்கள்

பெரியார் முழக்கம் மற்றும் நிமிர்வோம் சந்தாக்களைப் பெறுவதற்காக தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் தோழர்களைச் சந்திக்க நேரில் வருகிறார்கள். 20.03.2020 – வெள்ளிக்கிழமை காலை. 10 மணிக்கு – திருச்சி, பெரம்பலூர் மாவட்டம். மாலை 5 மணிக்கு தஞ்சை மாவட்டம். 21.03.2020 – சனிக்கிழமை காலை 10மணிக்கு – நாகை மாவட்டம், மயிலாடுதுறை. மாலை 5 மணிக்கு கடலூர் மாவட்டம். 22.03.2020 – ஞாயிற்றுக்கிழமை காலை 10மணிக்கு – விழுப்புரம், கள்ளக்குறிச்சி. மாலை 5 மணிக்கு ஆத்தூர். மேற்குறிப்பிட்ட மாவட்ட கழகத் தோழர்கள் இதற்கான ஏற்பாடுகள் செய்து சந்தாக்களை விரைந்து முடித்து கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெரியார் முழக்கம் 12032020 இதழ்

கடவுள் – மத மறுப்பாளராக 98 வயது வாழ்ந்து காட்டிய திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் விடைபெற்றார்

கடவுள் – மத மறுப்பாளராக 98 வயது வாழ்ந்து காட்டிய திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் விடைபெற்றார்

இனமானப் பேராசிரியர் அன்பழகன், தனது 98ஆவது அகவையில் மார்ச் 7, 2020இல் முடிவெய்தினார். திராவிடர் இயக்கத் தூண்களில் ஒருவர். தமிழையும் சுயமரியாதைக் கொள்கைகளையும் தனது இரு கண்களாகப் போற்றியவர். மிகச் சிறந்த பேச்சாளர். மாணவப் பருவத்திலிருந்தே அவரது திராவிடர் இயக்கப் பயணம் தொடங்கி விட்டது. தி.மு.க.வின் பொதுச் செயலாளராக 43 ஆண்டுகாலம் இருந்து கலைஞரின் உற்ற துணைவராக செயல்பட்டவர். மிக மிக எளிமையானது அவரது வாழ்க்கை. 7 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். பெரியார் குறித்து ஆழமான அவரது உரைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. கடவுள் – ஜாதி – மதமற்ற வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர். ஒரு கடவுள் மறுப்பாளர் 98 வயது வரை வாழ முடியும் என்ற செய்தியையும் அவரது மரணம் உணர்த்தி நிற்கிறது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தினர். மதச் சடங்குகள் ஏதும் இன்றி திராவிடர் இயக்க அடையாளங்களோடு அவரது இறுதி நிகழ்வுகள் நடந்தன. திராவிடர்...

‘நிமிர்வோம்’ – புதிய வெளியீடுகள் விற்பனைக்குத் தயார்!

‘நிமிர்வோம்’ – புதிய வெளியீடுகள் விற்பனைக்குத் தயார்!

  ட    இந்திய நாட்டினருக்கும் எதிரானது தான் குடியுரிமைத் திருத்தச் சட்டம் – கொளத்தூர் மணி ட   குடியுரிமைச் சட்டங்களைஏன் எதிர்க்கிறோம்? – விடுதலை இராசேந்திரன் ஒவ்வொன்றின் விலை ரூ.15/- மட்டுமே தொடர்புக்கு: விஜயகுமார், இணையதள பொறுப்பாளர் 9841653200 பெரியார் முழக்கம் 20022020 இதழ்

கழகத் தோழர்களே!

கழகத் தோழர்களே!

புரட்சிப் பெரியார்முழக்கம், நிமிர்வோம் இதழுக்கு சந்தா சேர்க்கும் இயக்கத்தை விரைந்து தொடங்கிடுவீர்! 2020ஆம் ஆண்டில் இதழ்கள் தொடர்ந்து வெளிவர வேண்டிய பொறுப்பை தோழர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறோம். இயக்க இதழ்கள் தான் தோழர்களை இணைக்கும் இணைப்புச் சங்கிலி. தோழர்களின் செயல்பாடுகளை சுமந்து வரும் கழகத்தின் ‘தூது மடல்’. ஒரு இயக்கம் உயிரோட்டமாக தன்னை இறுத்திக் கொள்வதற்கு இயக்க இதழ்களே சுவாசக் காற்று என்பது, நீங்கள் அறியாதது அல்ல! தோழர்களே! விரைந்து செயல்படுங்கள்! பிப்ரவரி இறுதிக்குள் சந்தா சேர்ப்பு இயக்கத்தை நிறைவு செய்தாக வேண்டிய கடமை உணர்ந்து, களத்தில் இறங்குங்கள்! பெரியார் முழக்கம் 30012020 இதழ்

கழகத் தோழர்களே!

கழகத் தோழர்களே!

கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ மாத இதழ்களுக்கு உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி விட்டீர்களா? கழகத்தின் களப் பணிகளை ஆதரவாளர்களிடம் கொண்டு சேர்க்கும் ஏடு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, வாரம் தோறும் நடக்கும் நிகழ்வுகளை பெரியாரியல் பார்வையில் பதிவு செய்து வருகிறது. பெரியாரியல் குறித்த ஆழமான கட்டுரைகள், சமூகம், சுற்றுச் சூழல், கலை, இலக்கியம் குறித்த விரிவான கட்டுரைகளுடன் வெளி வருகிறது ‘நிமிர்வோம்’. தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத ஒரு சமுதாய இயக்கம், 2002ஆம் ஆண்டிலிருந்து 17 ஆண்டுகளாக வாரந்தோறும் பெரியார் முழக்கத்தையும், மூன்று ஆண்டுகளாக மாதந்தோறும் ‘நிமிர்வோம்’ இதழையும் இடைநிறுத்தமின்றி நடத்தி வருகிறது. அரசியல் கட்சிகளால்கூட ஏடு நடத்த முடியாத நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம் இந்தப் பணியை தொய்வின்றி செயல்படுத்தி வருகிறது. தோழர்கள் இது குறித்த கவலை புரிதலுடன் களமிறங்கினால் ஏடுகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். தோழர்களே! விரைந்து கழக ஏடுகள் தொடர்ந்து...

ஜாதி வெறியர்களின் மீது 10 பிரிவுகளில் வழக்கு, செல்வன் இணையர் இளமதி இன்னும் மீட்கப்படவில்லை

ஜாதி வெறியர்களின் மீது 10 பிரிவுகளில் வழக்கு, செல்வன் இணையர் இளமதி இன்னும் மீட்கப்படவில்லை

கொளத்தூரில் ஜாதி வெறியர்களின் வன்முறை வெறியாட்ட சம்பவத்தின் மீதான நடவடிக்கைகள் ! சேலம் மாவட்டம் கொளத்தூரில் 09.03.2020 அன்று நடைபெற்ற செல்வன் – இளமதி ஜாதி மறுப்பு திருமணத்தையொட்டி ஜாதி வெறியர்கள் நடத்திய கொலை வெறித்தாக்குதல், ஆள்கடத்தல்,கொள்ளை இவற்றின் மீதான காவல் துறையின் முதல் தகவல் அறிக்கைகள் 2. (இணைப்பு) ( 09.03.2020 அன்று கொளத்தூரில் நடந்தது என்ன ? அறிய : https://www.facebook.com/1630392030578024/posts/2651540068463210/ ) திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் கழகத்தோழர்கள் தாக்குதல் சம்பவம் நடந்த 09.03.2020 நள்ளிரவு முதல் அடுத்த நாள் காலை வரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராடியதன் விளைவாக மனமகன் செல்வன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி,ஆள் கடத்தல்,கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளமதியின் தந்தை, பெரியப்பா, மாமா உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் மற்றும் கொலை முயற்சி,ஆள் கடத்தல்,கொள்ளை ஆகிய குற்றங்களுக்கான மணமகன்...

கொளத்தூரில் (சேலம் மாவட்டம்) ஜாதி வெறி கும்பலின் வன்முறை வெறியாட்டம் !

கொளத்தூரில் (சேலம் மாவட்டம்) ஜாதி வெறி கும்பலின் வன்முறை வெறியாட்டம் !

கொளத்தூரில் (சேலம் மாவட்டம்) ஜாதி வெறி கும்பலின் வன்முறை வெறியாட்டம் ! ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்து,இணையர்களுக்கு பாதுகாப்பு அளித்த கழகத்தோழர் மீது நள்ளிரவில் 50 பேர் கொண்ட ஜாதி வெறி கும்பல் கொலை வெறித் தாக்குதல் ! இணையர்களை ஜாதி வெறி கும்பல் கடத்திச் சென்றது. இதில் மணமகன் மீட்கப்பட்டுள்ளார். மணமகள் நிலை தெரியவில்லை. காவல்துறை தேடி வருகிறது. வன்முறை வெறியாட்டம் நிகழ்த்திய ஜாதி வெறி கும்பலை கைது செய்து அவர்கள் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி நள்ளிரவு முதல் விடியவிடிய திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களால் கொளத்தூர் காவல் நிலையம் முற்றுகை ! தமிழக அரசே, கொலை வெறித் தாக்குதல் நடத்திய ஜாதி வெறிக் கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய் ! அவர்கள் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல் உடன் PCR சட்டப்படி...

ரஜினிகாந்த் மீது 04.03.2020 ல் மீண்டும் திராவிடர் விடுதலைக்கழகம் தொடர்ந்த வழக்கு ! தற்போதைய நிலை என்ன? நீதிமன்றம் கூறியுள்ளது என்ன??

ரஜினிகாந்த் மீது 04.03.2020 ல் மீண்டும் திராவிடர் விடுதலைக்கழகம் தொடர்ந்த வழக்கு ! தற்போதைய நிலை என்ன? நீதிமன்றம் கூறியுள்ளது என்ன??

ரஜினிகாந்த் மீது 04.03.2020 ல் மீண்டும் திராவிடர் விடுதலைக்கழகம் தொடர்ந்த வழக்கு ! தற்போதைய நிலை என்ன? நீதிமன்றம் கூறியுள்ளது என்ன?? துக்ளக் ஏட்டின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் 1971 இல் சேலத்தில் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டி பேரணியில் ராமன் சீதை சிலைகளை நிர்வாணமாக செருப்பு மாலை அணிவித்து எடுத்து வந்தார்கள் என்ற ஒரு பொய்யான செய்தியை உள்நோக்கத்தோடு வன்முறையை தூண்டும் விதமாக வெறுப்புப் பிரச்சாரம் செய்தார். ரஜினிகாந்தின் இந்த உள்நோக்கத்தோடு பேசிய பேச்சு வன்முறையை தூண்டும் விதமாகவும்,வெறுப்பு பிரச்சாரமாகவும் இருக்கிறது ஆகவே ரஜினியின் மீது வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களில் புகார் மனு அளித்தது. ஆனால் அந்த புகார் மனுக்களின் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் இருந்ததை...

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் திருவள்ளுவராண்டு 2051 (9 – 2 – 2020) – அன்று வ.உ. சி. திடலில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:   வீரவணக்கத் தீர்மானங்கள்   சாதிக் கொடுமைகளை எதிர்த்தும், சாதி ஆதிக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தோடும் களமாடிய வலியுறுத்திக் கருத்துப்போர் நிகழ்த்திய திருவள்ளுவர், ஒளவையார் தொடங்கி எண்ணற்ற தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், கருத்தாளர்கள் மற்றும் 1957 ஆம் ஆண்டு சாதிஒழிப்புக்காக சாதியைப் பாதுகாக்கின்ற சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்திச் சிறை சென்றதோடு மட்டுமின்றி, அப்போராட்டக் காலச் சூழலில்  ஈகியர்களான எண்ணற்ற தோழர்கள் உள்ளிட்ட 20 – ஆம் நூற்றாண்டின் சாதி ஒழிப்புப் போராளியர்களாக முனைந்து எழுந்த அறிஞர்கள், இயக்கச் செயற்பாட்டாளர்கள், களப் போராளியர்கள், முன்னின்ற பொதுமக்கள் என அனைவருக்கும் மற்றும் அண்மையில் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்த நிலையில் மறைவுற்ற பதினேழு ஏதுமறியா மக்களுக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வீரவணக்கம் செலுத்துகிறது....

கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் நேர்காணல் – ஆனந்த விகடன் 

கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் நேர்காணல் – ஆனந்த விகடன் 

துக்ளக் விழாவில், ரஜினிகாந்த் பேசியது பொய் என்று சொல்லி மறுக்கும் நீங்கள், 1971-ல், ‘நடந்த விஷயங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்’ என்று அன்றைய முதல்வர் கருணாநிதி பேட்டியளித்திருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?’’ “புராணங்களில் உள்ள ஆபாசக் கதைகள் பற்றி மக்களிடையே எடுத்துச்சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் ‘மூட நம்பிக்கை ஒழிப்புப்பேரணி’யே அன்றைக்கு நடத்தப்பட்டது. இரண்டு ஆண்களுக்குப் பிறந்ததாகச் சொல்லப்படும் ஐயப்பன் பிறப்பு மற்றும் முனிவரின் மனைவியான அனுசுயாவை கடவுளர்களே நிர்வாணமாக வரச்சொல்லிய வக்கிரங்கள் ஆகியவற்றைத்தான் சித்திரங்களாக வரைந்து ‘இந்த ஆபாசக் கடவுளர்களை நீங்கள் வணங்கலாமா…’ என்று தலைப்பிட்டுப் பேரணியில் எடுத்துச் சென்றோம். வடஇந்தியாவில், ‘ராம லீலா’ என்ற பெயரில் ராவணனைத் தீயிலிட்டுக் கொளுத்துவதை எதிர்த்து, இங்கே ராமர் பொம்மையை எரிக்கத் திட்டமிட்டுத்தான் பேரணி சென்றோம். இதுதான் நடந்த உண்மை! ஆனால், துக்ளக் விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி – சீதை உருவங்கள் உடையில்லாத நிலையில் செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது’...

நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரபட்ட அவதூறு வழக்கின் நிலை குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரபட்ட அவதூறு வழக்கின் நிலை குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்த அவதூறு வழக்கின் தற்போதைய நிலை என்ன ? நீதிமன்றம் என்ன கூறியுள்ளது ? துக்ளக் ஏட்டின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் 1971 இல் சேலத்தில் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டி பேரணியில் ராமன் சீதை சிலைகளை நிர்வாணமாக செருப்பு மாலை அணிவித்து எடுத்து வந்தார்கள் என்ற ஒரு அவதூறை நடக்காத ஒரு சம்பவத்தை பெரியாரின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் உள்நோக்கத்தோடு பேசினார். நடக்காத ஒன்றை உள் நோக்கத்தோடு பேசிய நடிகர் ரஜினிகாந்தின் இந்த அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்க திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வலியுருத்தினார்.மேலும் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் உள்நோக்கத்தோடு பேசிய ரஜினியின் மீது தக்க சட்ட நடவடிக்கை கோரி தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் கழகத்தோழர்கள்...

அவுட்லுக் இல்லை.. 1971ல் வெளியான துக்ளக்கைத்தானே ரஜினி காட்டியிருக்கணும்.. கொளத்தூர் மணி!

அவுட்லுக் இல்லை.. 1971ல் வெளியான துக்ளக்கைத்தானே ரஜினி காட்டியிருக்கணும்.. கொளத்தூர் மணி!

1971-ஆம் ஆண்டு சேலம் பேரணியில் நடந்த விஷயம் வெளிவந்த துக்ளக் ஏட்டை காண்பிக்காமல் அவுட்லுக்கின் ஜெராக்ஸை ரஜினி காட்டுவது ஏன் என திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்தார். துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த விழாவில் ரஜினி பேசுகையில் 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணியில் ராமர், சீதையின் சிலைகள் உடையில்லாமல் செருப்பு மாலை அணிவித்து கொண்டு செல்லப்பட்டது. இதை துக்ளக் பத்திரிகையில் இதழின் ஆசிரியர் சோ தைரியமாக வெளியிட்டார். அந்த புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன என்றார் ரஜினி. ரஜினியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மிகவும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் என்பதால் வரலாற்றை தவறாக கூறிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் கழக அமைப்புகள் கோரின. கற்பனை இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது கையில் ஒரு பத்திரிகையை காண்பித்த ரஜினிகாந்த், நான்...

நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக – கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக – கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் மீது கழகத்தின் சார்பாக பல்வேறு இடங்களில் காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ள புகார்கள் சம்பந்தமாக கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை : – அன்பார்ந்த தோழர்களுக்கு, என் வணக்கங்கள். துக்ளக் ஏட்டின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் பெரியாரை – பெரியாரின் இயக்கத்தை கேவலப்படுத்த வேண்டும் என்ற தீய உள்நோக்கத்தோடு நடிகர் இரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, சமூகத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் பேசிய அவருடைய அவதூறு பேச்சுக்கு தக்க நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையங்களில் புகார் அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்திருந்தோம். அவ்வாறு காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாரின் நகல் ஒன்றினையும் அந்த காவல்நிலையங்களில் புகாரைப் பெற்றுக்கொண்டதற்காக கொடுக்கப்பட்ட சிஎஸ்ஆர் இரசீது நகலையும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் காவல்நிலையத்தில் புகார் பெற்று கொண்ட பின்னாலும் அதற்கான சிஎஸ்ஆர் வழங்கப்படாமல் இருக்குமேயானால்,மீண்டும் ஒருமுறை அந்த புகாரினுடைய படியை வைத்து அதனுடன் “நாங்கள் இத்தனையாம் நாள் உங்களிடம் அளித்த...

நடிகர் ரஜினிகாந்த் நிபத்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தி அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் நிபத்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தி அறிக்கை

1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன் சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் இரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளிவந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலைப் பரப்பி அதன் வழியே தமிழகத்தில் பெரியார் மீது மக்கள் கொண்டிருக்கிற நல்லெண்ணத்தை சிதைக்க வேண்டும் என்ற தீய உள்நோக்கோடும், தங்கள் எஜமானர்களை மகிழச் செய்ய வேண்டும் என பேசப்பட்டதாகவே நாங்கள் நம்புகிறோம். இந்த பொய்யான தகவலைப் பரப்பியதற்காக நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதுமட்டுமில்லாமல் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செ வதந்தியைப் பரப்பி பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் கழகத் தோழர்களும் பெரியாரியல் பற்றாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் உடனடியாக புகார்...

கழகத் தோழர்களே!

கழகத் தோழர்களே!

கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ மாத இதழ்களுக்கு உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி விட்டீர்களா? கழகத்தின் களப் பணிகளை ஆதரவாளர்களிடம் கொண்டு சேர்க்கும் ஏடு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, வாரம் தோறும் நடக்கும் நிகழ்வுகளை பெரியாரியல் பார்வையில் பதிவு செய்து வருகிறது. பெரியாரியல் குறித்த ஆழமான கட்டுரைகள், சமூகம், சுற்றுச் சூழல், கலை, இலக்கியம் குறித்த விரிவான கட்டுரைகளுடன் வெளி வருகிறது ‘நிமிர்வோம்’. தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத ஒரு சமுதாய இயக்கம், 2002ஆம் ஆண்டிலிருந்து 17 ஆண்டுகளாக வாரந்தோறும் பெரியார் முழக்கத்தையும், மூன்று ஆண்டுகளாக மாதந்தோறும் ‘நிமிர்வோம்’ இதழையும் இடைநிறுத்தமின்றி நடத்தி வருகிறது. அரசியல் கட்சிகளால்கூட ஏடு நடத்த முடியாத நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம் இந்தப் பணியை தொய்வின்றி செயல்படுத்தி வருகிறது. தோழர்கள் இது குறித்த கவலை புரிதலுடன் களமிறங்கினால் ஏடுகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். தோழர்களே! விரைந்து கழக ஏடுகள் தொடர்ந்து...

தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

  ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கு சந்தாக்களை புதுப்பிக்கும் பணிகளை தோழர்கள் விரைந்து தொடங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். – நிர்வாகி பெரியார் முழக்கம் 26122019 இதழ்

2019இல் கழகத்தின் களப் பணிகள்

2019இல் கழகத்தின் களப் பணிகள்

2019ஆம் ஆண்டில் திராவிடர் விடுதலைக் கழகம் ஆற்றிய களப்பணிகளை திரும்பிப் பார்க்கிறது. வழக்கமாக கழகத் தோழர்கள் நடத்தும் பெரியார், அம்பேத்கர் பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்வுகள், தமிழர் திருநாள் விழா நிகழ்ச்சிகள், தெருமுனைக் கூட்டங்களைத் தவிர, ஏனைய நிகழ்வுகள், கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் வெளி வந்த பதிவுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஏடுகளுக்கு சந்தாக்கள் சேர்க்கும் பணிகளில் பல மாவட்டங்களில் தோழர்கள் முனைப்புக் காட்டி செயல்பட்டனர். செயல்படாத மாவட்டங்களும் உண்டு. கழகத்தின் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் இதற்காக மாவட்டம் தோறும் கழகப் பொறுப்பாளர்களை சந்தித்து சந்தா சேர்ப்பு இயக்கத்தை விரைவுபடுத்தினர். கழகத்துக்காக சொந்தமாக தலைமைக் கழகம் உருவானது – 2019ஆம் ஆண்டில். இது மிகவும் குறிப்பிடத்தக்கது. மக்களவைக்கான தேர்தல் நடந்ததும் 2019ஆம் ஆண்டில்தான். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற முடிந்தது....

தலைமைக் கழகம்: தோழர்களின் சாதனை

தலைமைக் கழகம்: தோழர்களின் சாதனை

2019ஆம் ஆண்டு கழகத் தோழர்கள் செயல்பாடுகளில் முன்னுரிமை பெற்றிருப்பது கழகத்துக்கு சொந்தமாக தலைமைக் கழகம் ஒன்றை வாங்கியதில் காட்டிய முனைப்பான செயல்பாடுகளாகும். கழகத் தோழர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒவ்வொருவரும் குறைந்தது ரூ.20,000 நிதி திரட்ட வேண்டும் என்று கழக தலைமைக் குழுவால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பெரும்பான்மைத் தோழர்கள் இலக்கை எட்டிக் காட்டினர். கழகத்தின் செயல்பாடுகள் மீது நம்பிக்கையும் கழகத்தின் மீது மதிப்பும் கொண்ட ஆதரவாளர்கள் தாமாகவே முன் வந்து நிதி வழங்கியதோடு, நிதி திரட்டும் இயக்கத்திலும் தங்களை இணைத்துக் கொண்டனர். இது கழகத்திற்குக் கிடைத்த மிகச் சிறந்த பெருமையாகும். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏடும், ‘நிமிர்வோம்’ மாத இதழும் தடையின்றி வெளி வந்து கொண்டிருப் பதற்குக் காரணம் தோழர்கள் திரட்டிய சந்தாக்கள் தான். பெரியார் முழக்கம் 26122019 இதழ்

கழக நாள்காட்டி வெளிவந்து விட்டது

கழக நாள்காட்டி வெளிவந்து விட்டது

செயலவையில் 2020ஆம் ஆண்டுக்கான நாள் காட்டிகள் விற் பனைக்கு கொண்டு வரப்பட்டன. கழகத் தோழர்கள் நாள் காட்டிகளை வாங்கிச் சென்றனர்.  கழக ஏடுகளுக்கான உறுப்பினர்கள் சேர்க்கும் இரசீது புத்தகங்களையும் தோழர்கள் பெற்றுச் சென்றனர். இவ்வாண்டு நாள்காட்டியில் சமூகத்துக்குப் போராடிய பெண் போராளிகள் படம் இடம் பெற்றுள்ளன. தொடர்புக்கு : தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர். பேசி: 9941759641 நாள்காட்டி ஒன்றின் விலை : ரூ. 70/- ஓவியர் பரதன் வடிவமைப்பில் உருவாகும் நாள்காட்டி: ஒவ்வொரு ஆண்டும் கழக நாள்காட்டியை இயக்க ஆதரவாளர் ஓவியர் பரதன் – எம்.எஸ். ஆப்செட் நிறுவனம் வழியாக அதற்கான படங்களை  எந்த கட்டணமும் இன்றி சிறப்புடன் வடிவமைத்து தருகிறார். கழக சார்பில் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். பெரியார் முழக்கம் 02012020 இதழ்

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை அறைகூவல்

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை அறைகூவல்

பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சிகளை முறியடிக்க மக்களை ஒன்று திரட்டுவோம் பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சியைத் தடுக்க மக்கள் சக்தியை அணி திரட்டுவோம் என்று திராவிடர் விடுதலைக் கழக செயலவை அறைகூவல் விடுத்துள்ளது. நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் ஆபத்தையும் செயலவை எச்சரித்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவையில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: இந்தியாவின் மதச் சார்பற்ற அடையாளத்தை உருக்குலைத்து ‘இந்து இராஷ்டிரமாக்கும்’ முயற்சிகளை பா.ஜ.க. நடுவண் ஆட்சி தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கான வழிகாட்டும் அதிகாரங்களை ஆர்.எஸ்.எஸ். கையில் எடுத்துக் கொண்டுள்ளது. மெஜாரிட்டி மக்களாக இந்துக்களைக் கொண்ட ஒரு நாடு இந்து நாடாகவே இருக்க வேண்டும் என்று சங்பரிவாரங்கள், பா.ஜ.க. முன் வைக்கும் கருத்துகளின் உள்ளடக்கம் மிக மிக ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ‘மெஜாரிட்டி இந்துக்கள்’ போர்வைக்குள் மைனாரிட்டி பார்ப்பனர்கள் புகுந்து கொண்டு மெஜாரிட்டி இந்துக்களின் பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகளை சிதைத்து, பார்ப்பன சமஸ்கிருதப் பண்பாடே...

“குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்போம்” – கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிவிப்பு.

“குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்போம்” – கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிவிப்பு.

“குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்போம்” – கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிவிப்பு. டிச.23 திங்கள் அன்று அனைத்துக் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற உள்ள ‘குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி’யில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்கிறது. – கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிவிப்பு. இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றும் RSS ன் திட்டப்படி மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் தான் புதிய குடியுரிமை திருத்த சட்டம் . பாஜக அரசின் இந்த புதிய குடியுரிமை திருத்த சட்டம் இந்த அரசியல் சட்ட சாசனம் உறுதியளிக்கும் மதசார்பற்ற தன்மை எனும் அடிப்படையே தகர்க்கிறது. நாட்டு மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவு படுத்தி ஒரு மதம், ஒரு மொழி,ஒரு கலாச்சாரம் என்கிற ஆபத்தான ஜனநாயகத்திற்கு எதிரான, பன்முகத்தன்மைக்கும்,அடிப்படை மனித உரிமைகளுக்கும் எதிரான இந்த புதிய குடியுரிமை திருத்த சட்டம் RSS ன்...