தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பாலன்,மற்றும் தோழர் கோ.சீனிவாசன் ஆகியோர் ஊபா (UAPA) வழக்கில் கைது ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்!
தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் *பாலன்*,மற்றும் தோழர் *கோ.சீனிவாசன்* ஆகியோர் *ஊபா (UAPA) வழக்கில் கைது !* கழகத் தலைவர் *தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்!* பாஜக – அதிமுக அரசுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது தொடர்ந்து ஆள்தூக்கி சட்டங்களை கொண்டு பொய் வழக்குகளை புனைந்து கைது செய்து சிறையில் அடைக்கும் அதே வேளையில், சமூக விரோதச் செயல்களில், பெரும் வன்முறைகள், கொலைக் குற்றங்களில தொடர்ந்து ஈடுபட்டுவரும் சங்பரிவார தீவிரவாதிகளைக் கண்டும் காணாமலும் இருந்து வருவதாக குற்றச்சாட்டு ! கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே வனப்பகுதியில் கேரள போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கணவாய்ப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவாசகம் என்பவர் கொல்லப்பட்டார். அவரது உடல் சொந்த ஊரான கணவாய்புதூரில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தகனம் செய்யப்பட்டது அந்த...
