Category: சென்னை

0

கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து எழும்பூர் இக்சாவில் கூட்டம்

கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம், சென்னை, சார்பாக எழும்பூர் இக்சாவில் 13.07.2015 அன்று மாலை 5 மணியளவில் அரங்க கூட்டம் நடைபெற்றது. பேரசிரியர் வீ.அரசு, தோழர் செல்வி, கவின் மலர், தோழர் தியாகு, கழகப் பொது செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவாக தோழர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

0

இளவரசனை தொடர்ந்து கோகுல்ராஜ்

”திராவிடர் விடுதலைக் கழகம் இந்த ஜாதி ஆணவப் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறது”- கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை. கோகுல்ராஜ் கொலை’கவுரவக் கொலை’ என்ற பெயரில் ‘ஜாதி ஆணவக் கொலைச் சம்பவங்கள்’ தமிழகத்தில் தலைதூக்கி வருவது தமிழ் நாட்டுக்கே தலைக்குனிவாகும். 2013ம் ஆண்டு இளவரசன் என்ற தலித் இளைஞர் திவ்யா என்கிற வன்னியப் பெண்ணை காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்க்காக அவர்களை ஜாதிவெறியர்கள் கட்டாயப்படுத்தி அச்சுறுத்தி பிரித்தனர்.கடைசியில் இளவரசனின் பிணம் தண்டவாளத்தில் கிடந்தது. இப்போது பொறியியல் பட்டதாரியான தலித் இளைஞர் கோகுல்ராஜ் அதே கதிக்கு ஆளாகி உள்ளார்.உயர் ஜாதி என சொல்லிக் கொள்ளும் கவுண்டர் ஜாதிப்பெண்ணை காதலித்ததால் அவர் ஜாதிவெறியர்களால் கடந்த 23ம் தேதி கடத்தப்பட்டுள்ளார்.24ம் தேதி தலை துண்டிக்கப்பட்டுல்ள நிலையில் பள்ளிபாளையம் கிழக்கு தொட்டி பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். திருச்செங்கோடு மலைக்கோவிலுக்கு கோகுல்ராஜ் ஒருமாணவியோடு சென்று சாமி கும்பிடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.கடைசியாக...

0

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறை தலைவரிடம் மனு

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறை தலைவரிடம் மனு! நாள் : 01.07.2015 புதன்கிழமை காலை 11 மணி. இடம் : காவல்துறை தலைமை அலுவலகம், காமராஜர் சாலை,மெரீனா கடற்கரை அருகில்,சென்னை.4 தமிழ் நாட்டில் நடக்கும் ஜாதீய வன்கொடுமை,ஜாதி வெறிப் படுகொலைகளில் காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், குறிப்பிட்ட ஆதிக்க ஜாதியினர் வாழும் மாவட்டங்களில் அதே ஜாதியை சேர்ந்தவர்களை காவல்துறை அதிகாரிகளாக நியமனம் செய்யக்கூடாது என வலியுறுத்தியும், நாமக்கல் பொறியியல் கல்லூரி மாணவன் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கு நேர்மையாகவும்,விரைவாகவும் நடக்கும் பொருட்டு வழக்கை சி..பி.அய்.க்கு மாற்றவேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தமிழக காவல்துறை தலைவர் (D.G.P.)அவர்களிடம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாளை 01.07.2015 அன்று காலை 11 மணியளவில் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் மனு அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு : 7299230363 தோழர் உமாபதி மாவட்ட செயலாளர்,சென்னை.

0

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை-சி.பி.ஐ.விசாரணையை தடுக்கும் ஆந்திர அரசு

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலையில் சி.பி.ஐ.விசாரணையை தடுக்கும் ஆந்திர அரசுக்கு எதிராக வழக்காடவும்,ஆந்திர சிறையில் வாடும் சுமார் 2000 தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு. 15.07.2015 அன்று சென்னையில் ம.தி.மு.க. தலைமையகமான ‘தாயகத்தில்’ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன்,தமிழக மக்கள் வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், விடுதலைசிறுத்தைகள் அமைப்பின் தோழர் பாலசிங்கம்,தமுமுக தலைவர் பேராசியர் ஜிவாஹிருல்லா,மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் வீரபாண்டியன்,இந்திய கம்னியூஸ்ட் கட்சி சார்பில் தோழர் பீமாராவ்,திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி,தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த ஆலோசனைக்கூட்டத்தின் நோக்கம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பேட்டியளித்தார். ஆந்திராவில் 20 கூலித்தொழிலாள தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட...