சென்னையில் முற்றுகைப்போராட்டம் ,கைது !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 26.04.2016 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடைபாதை கோயில்களை உடனே அகற்று என தமிழக அரசை வலியுறுத்தி கழக பொதுச்செயலாளர் தோழர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை.முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இம்முறைக்கப்போராட்டத்தின் போது சட்ட விரோதமான உள்ள நடைபாதைக் கோயில்களை அகற்று !உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பத்து ஆண்டுகள் ஆகியும் அத்தகைய கோயில்களை அகற்றாமல் இனியும் காலதாமதப்படுத்தாதே ! என தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முற்றுகையில் ஈடுபட்ட கழக தோழர்கள் கைதுசெய்யப்பட்டு மாலை 7 மணியளவில் விடுவிக்கப்பட்டார்கள்.

இம்முற்றுகைப் போராட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன்,மாவட்ட தலைவர் வேழவேந்தன்,மாவட்ட செயலாளர் உமாபதி, தலைமைக்குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார், வடசென்னை மாவட்ட தலைவர் ஏசுகுமார்,கழக வழக்கறிஞர் அருண் உள்ளிட்ட 40 தோழர்கள் கலந்துகொண்டு கைதாகினர்.

 

You may also like...