மோடியின் ஓராண்டு – அருண் ஜெட்லி, கதை இது!
மோடி, அமித்ஷா, அருண் ஜெட்லி – இந்த மூவர் குழுதான், இப்போது ஆட்சியில் அதி காரத்தைக் கையில் வைத்திருப் பவர்கள். அருண் ஜெட்லி, நிதியமைச்சராகவும், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராகவும் உள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே போய° தோட்டத்துக்கு வந்து அவரை நேரில் சந்தித்துப் பேசியவர் அருண் ஜெட்லி! பார்ப்பன அம்மையாரை பார்ப்பன அமைச்சர் சந்தித்ததால் இந்த அப்பட்டமான அதிகார முறைகேட்டை ஊடகங்கள் ஊதிப் பெருக்கவில்லை. பல கார்ப்பரேட் நிறுவனங்களின் வழக்கறிஞராகவும், சட்ட ஆலோசகராகவும் செயல்பட்டவர் ஜெட்லி. இவருடைய இரட்டை வேடம் அதிகார முறைகேடுகளுக்கு இரண்டு உதாரணங்கள்: 2012இல் மாநிலங்களவையில் பா.ஜ.க. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் அருண் ஜெட்லி. நிலக்கரி ஒதுக்கீட்டில் மன்மோகன் சிங் ஆட்சி மீது புகார்கள் வந்த நேரம். அப்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜுடன் இணைந்து போர் முரசு கொட்டினார். இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “நாடாளுமன்றத்தை...