தீ மிதிப்பது பக்தியாலா?

தீயில் மனிதன் நடப்பது என்பது ‘கடவுள் செயல்’ என்றும், கடவுள் மீது

உள்ள பக்தியின் காரணமாகவே நடக்க முடிகிறது என்றும் மக்கள் நம்பி னார்கள். மதவாதிகள் தங்கள் மதத்தைப் பரப்ப இம்முறையைத் தங்கள் மத

விழாவாகப் பயன்படுத்தினார்கள். இம்முறை இந்தியாவிலும், மலேசியா

விலும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில், பரவலாக இந்துக்களும், சில இடங்களில் முகமதியர்களும் தீமிதி விழாக்களை நடத்துகிறார்கள். தீ குழியின் அமைப்பு : தீ குழியின் அளவு ஒவ்வொரு இடத்திலும் மாறுபட்டிருக்கும். சராசரியாக 15 அடி நீளமும், 5 அடி அகலமும், 2 அடி

உயரமும் உடையதாக இருக்கும். பாற்குழி ஒன்று இருக்கும். (பசு

அல்லது வெள்ளாட்டின் பால் நிரப்பப்பட்ட சிறிய குழி) முதலில்

பெரிய பெரிய மரக்கட்டைகளை எரிய விடுகிறார்கள். அந்த மரக்கட்டைகள்

எரிந்து தணல் கட்டிகளாக ஆன பின்னால் இரண்டு மூன்று பேர் நீளமான மூங்கிற் குச்சிகளைக் கொண்டு தணல் கட்டிகளைக் குத்தி உடைத்து தீ குழி முழுவதும் பரப்பி மட்டமாக்கி விடுவார்கள். பெரிய தட்டிகளைக் கொண்டு (விசிறி போல்) தணல் கட்டிகள் மீது விசுறுவார்கள். அப்போது தணல் கட்டிகள் மீது பூக்கும் சாம்பல் நீக்கப்படுகிறது. இப்படி அடிக்கடி விசுறுவார்கள்.

பின்னர் ஒவ்வொருவராக தணல் கட்டிகள் மீது வேகமாக நடந்து (ஓடி)

சென்று பாற்குழியில் கால்களை நனைத்துக் கொள்வார்கள். அப்போது

பலருக்கு கால்கள்தீயவோ, கொப் புளிக்கவோ இல்லாததால் அதற்குகடவுள் பக்திதான் காரணம் என்ற பெரும்பாலோர் நம்புகின்றனர். அறிவியல் கண் கொண்டு ஆராய முன்வந்த மேல் நாட்டாருக்கும் சமீபகாலம் வரை இந்நிகழ்ச்சி பெரும் புதிராகவே இருந்தது. கோவூரின் ஆராய்ச்சி : இலங்கை

பகுத்தறிவாளர் கழகத் தலைவர் டாக்டர் டி. கோவூர், தீ மிதியின் தத்துவத்தை ஆராய்ச்சி மூலம் மெய்ப்பித்துக் காட்டினார். இலங்கை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவின்போது மாணவர்கள் மத்தியில் ஒரு தீ குழி அமைத்து ஆராய்ந்தார். கடவுள் பக்தி இல்லை என்பதைக் காட்டுவதற்காக மாணவர்கள் கைகளில் மதுப்பாட்டில்களையும் சிகரெட்டு களையும் கோழிகளையும் கொடுத்து நெருப்பின் மேல் வேகமாக நடக்கச் செய்தார். வேகமாக நடந்தவர்களுக்குக் கால்கள் தீயவில்லை. ஆனால் சிறிது மெதுவாக நடந்தவர்களுக்கு சிறிது சுடச் செய்தது. வேகமாக நடந்தவர்கள் தங்களுடைய கால்களை நெருப்பின்மேல் வைத்து எடுக்க, எடுத்துக்கொண்ட நேரம் அரை வினாடிக்கும் குறைவு. ஆனால் அரை வினாடிக்கும் அதிகமான

நேரத்தை எடுத்துக் கொண்டு நடந்தவர்களுக்கே கால் சுடச் செய்தது. ஆகவே

மனிதப் பாதங்களின் அடித்தோலுக்கு சராசரியாக அரை வினாடி நேரம்

நெருப்பின் வெப்பத்தைத் தாங்கும் சக்தி உண்டு என்பதையும் அதுவரை

மனித உடலில் வெப்பம் தாக்குவதில்லை என்பதையும் நிரூபித்துக் காட்டினார்.

சோதனை 1 : தீ மிதிக்கும் தத்துவத்தை எளிய சோதனைகள் மூலம் அறியலாம். சுவாலையுடன் எரியும் விளக்கு அல்லது மெழுகு வர்த்தியில்

சுவாலையின் நுனி பாகத் திற்கு மேல் நமது உள்ளங் கையை வேகமாக

அசைத்தால் தீ சுடுவதில்லை. ஆனால் வேகத்தை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டு வந்தால் சுட ஆரம்பிக்கிறது. இந்த அடிப்படையில் தான்

நெருப்பில் வேகமாக நடக்கும் போது கால்கள் சுடுவதில்லை என்பதையும்,

வேகம் குறையும்போது கால்கள் தீய்க்கச் செய்கிறது.

சோதனை 2 : நமது வீடுகளில் தாய் மார்கள் சமையல் செய்யும்போது

அடுப்பிலிருந்து வெளியில் விழும் நெருப்புக் கட்டிகளை கையால்

எடுத்து மீண்டும் அடுப்பில் போடு வதை நாம் பலமுறை பார்த்திருக்

கிறோம். ஆனால் அவர்கள் சூடேறிக் காய்ந்துவிட்ட பாத்திரங்களையோ

பழுத்துப்போன இரும்புச் சட்டி களையோ வெறுங்கையால் எப்போதும் எடுக்க முற்படுவதில்லை. இதிலிருந்து நெருப்பின் மேல் நடத்தலில் உள்ள மர்மத்தை அறியலாம். வெப்பத்தால் பழுப்பேறிய உலோகம் அல்லது கற்களைப்போல வெறும் கட்டைகளாலான தணல் வெப்பத்தைக் கடத்துவதில்லை. தணல் ஒரு குறைந்த வெப்பக் கடத்தி. அதனால்தான் தீ மிதி விழா நடத்துபவர்கள் மரக்கட்டைகளைப் பயன்படுத்துகிறார்கள். குழியில் உள்ள கற்களை அப்புறப்படுத்துகிறார்கள். தீ குண்டத்தில் நெருப்பின் மீது

அடிக்கடி விசுறுகிறார்கள் என்று முன்பு குறிப்பிட்டோம். அவ்வாறுசெய்யாத போது சாம்பல் படிய ஆரம்பிக்கும். அப்போது அதை உணராமல் அதில் இறங்கி நடக்கும் போது, வெப்பமான சாம்பல் பாதங்களில் ஒட்டிக் கொள்கிறது. பாதங்களில் ஒட்டிக் கொண்ட சாம்பல் குறிப்பிட்ட வினாடி நேரத்திற்கு மேல் பாதங்களில் இருப்பதால் வெப்பம் உடலில் ஊடுருவ ஆரம்பித்து கொப்புளங்கள் ஏற்படுகின்றன. உண்மை அறிய : 1. தணல் கட்டிகளில் நடப்பவர்கள் நெருப்பைக் கொழுந்துவிட்டு எரியச் செய்து

அந்தத் தீச் சுவாலைகளின் மத்தியில் ஏன் இறங்கி நடக்கக் கூடாது?

  1. தீ குண்டத்தில் நடப்பவர்கள் ஏன் சற்று நேரம் படுத்து உருண்டு காட்டக் கூடாது?
  2. மரத்தை எரித்து நெருப்புக்கட்டிகள் மீது நடப்பவர்கள் ஏன் பழுக்கக் காய்ச்சிய உலோகத் தகடுகள் மீது நடக்கக் கூடாது?
  3. நெருப்பில் பூக்கும் வெப்பமான சாம்பல்மீது ஏன் நடந்துகாட்டக் கூடாது என்று கேட்பார்களானால் தீ மிதிப்பதில் உள்ள அறிவியல் உண்மை வெளிப்படும்.

பெரியார் முழக்கம் 22072016 இதழ்

You may also like...