Category: பெரியார் முழக்கம்

கறுப்பர் கூட்டம் மீதான அடக்குமுறை  கருத்துரிமைக்கு எதிரானது: ‘காலச் சுவடு’ கண்டனம்

கறுப்பர் கூட்டம் மீதான அடக்குமுறை கருத்துரிமைக்கு எதிரானது: ‘காலச் சுவடு’ கண்டனம்

கறுப்பர் கூட்டம் மீதான ஒடுக்கு முறைகள் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று ‘காலச் சுவடு’ மாத இதழ் (ஆகஸ்ட்) எழுதிய தலையங்கம். கறுப்பர் கூட்டம் யூட்டியூப்’ இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துகளை வெளி யிட்டதாகவும் கந்தசஷ்டிக் கவசத்தின் வரிகளைத் திரித்துக் கூறியதாகவும் இந்து அமைப்புகள் சிலவும் பாஜகவின் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பால் கனகராஜும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மத்திய குற்றப் புலனாய்வு சைபர் க்ரைம் போலீசார் அய்ந்து பிரிவுகளின் கீழ் கறுப்பர் கூட்டம் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதன் அலுவலகமும், ஸ்டுடியோவும் முடக்கப்பட்டுள்ளன. செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். நிகழ்ச்சியை வழங்கிய நாத்திகன் என்ற சுரேந்தரும் சரண் அடைந்திருக்கிறார். கறுப்பர் கூட்டம் அலைவரிசையின் அனைத்துக் காணொளிகளும் தற்போது நீக்கப்பட்டிருக்கின்றன. கறுப்பர் கூட்டம் மீது தொடுக்கப் பட்டுள்ள புகார்களைக் கருத்துச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் ஆகிய வற்றை முடக்கும் நோக்காகவே கருத வேண்டியிருக்கிறது....

பா.ஜ.க. ஊது குழல் – ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்தும் கோஸ்வாமி நடத்திய ‘ரேட்டிங்’ மோசடி

பா.ஜ.க. ஊது குழல் – ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்தும் கோஸ்வாமி நடத்திய ‘ரேட்டிங்’ மோசடி

இந்துத்துவா பேர்வழியும், ‘ரிபப்ளிக் தொலைக்காட்சி’ முதலாளியுமான பார்ப்பன அர்னாப் கோஸ்வாமி, தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளி எனப்படும் டிஆர்பி மதிப்பை அதிகரித்துக் காட்ட இலஞ்ச முறைகேட்டில் ஈடுபட்டது அம்பல மாகி இருக்கிறது. குறிப்பாக, பொதுமக்களுக்கு லஞ்சம் கொடுத்து, அர்னாப் கோஸ்வாமி தனது டிவி நிகழ்ச்சிகளை பார்க்கச் செய்துள்ளதாக மும்பை காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. எந்தெந்த டிவி சேனல்களை, மக்கள் அதிகம் பார்க்கிறார்கள் என்பதன் அடிப்படையில் டிவி சேனல்களுக்கான செல்வாக்கு (டிஆர்பி) கணக்கிடப்படுகிறது. இதற்கேற்பவேவிளம்பர வருவாய் உள்ளிட்டவையும் கிடைக்கும் என்பதால் டிஆர்பி ரேட்டை அதிகரிக்க டிவி சேனல்கள் பல்வேறு யுக்திகளை கையாள்வது உண்டு. அந்தவகையில், அர்னாப் கோஸ்வாமியின் தலைமையில் இயங்கும் ரிபப்ளிக் தொலைக் காட்சியால், பக்த் மராத்தி மற்றும் பாக்ஸ் சினிமா ஆகியமராத்தி சேனல்களை மட்டுமே பார்க்க பொதுமக்களுக்கு ‘ஹன்சா’ என்ற நிறுவனம் மூலம் லஞ்சமாக பணம் அளிக்கப் பட்டுள்ளது.அதாவது பணத்தை பெற்றவர்கள் எந்நேரமும் தொலைக்காட்சியை ஆன்செய்து, அதில் ரிபப்ளிக், பக்த் மராத்தி, பாக்ஸ்...

தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு காவல்துறையில் பெரியாரிஸ்டுகளாக இருப்பது குற்றமா?

தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு காவல்துறையில் பெரியாரிஸ்டுகளாக இருப்பது குற்றமா?

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 காவலர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியில் அவர்கள் கருப்புச் சட்டை அணிந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சம்பவம் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடலுர் மாவட்டம் கடலூர் போக்குவரத்து முதல்நிலைக் காவலர் எஸ்.ரஞ்சித், கடலூர் புதுநகர் காவல் நிலையக் காவலர் டி.ரங்கராஜன் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையக் காவலர் ஜி.அசோக் ஆகியோர் கருப்புச் சட்டை அணிந்து அண்மையில் கடலூரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அதைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் தங்கள் நண்பர்கள் குழுவில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் 3 காவலர்களையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்து கடந்த 6-ம் தேதி உத்தரவு பிறப்பித் துள்ளார். இதுகுறித்து சக காவலர்கள் மத்தியில் பல்வேறு யூகங்கள் பரிமாறப்படுவதோடு விவாதங் களும் நடைபெற்று வருகின்றன. 3 பேரையும் பணியிட மாற்றம்...

தேசிய சட்டக் கல்லூரிகளில் ‘ஓபிசி’ ஒதுக்கீடு மறுப்பு

தேசிய சட்டக் கல்லூரிகளில் ‘ஓபிசி’ ஒதுக்கீடு மறுப்பு

தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் 2020-21ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போத்தியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2006ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டுவிட்டது. பல்கலைக் கழக மான்யக் குழு, இதை துணை வேந்தர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய நிலையிலும் 13 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் அதை மீறி செயல் பட்டுள்ளன. ஏற்கனவே மருத்துவ உயர் படிப்புக்கான ‘அகில இந்திய தொகுப்பில்’ பிற்படுத்தப் பட்டோர் இடஒதுக்கீட்டை மறுத்தார்கள். இப்போது சட்டப் படிப்பிலும் கைவைத்து விட்டார்கள். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்துக்கு சட்ட அங்கீகாரம் நாங்கள் தான் கொடுத்தாம் என்று கூறும் பா.ஜ.க.வினர் இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்? பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு களில் அலட்சியம் காட்டும் நடுவண்...

தலையங்கம் தலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்

தலையங்கம் தலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்

கிராமக் கட்டமைப்புகளில் சட்டங்களின் ஆட்சி நடப்பதில்லை. ஜாதியமே தனது அதிகாரத்தைக் கொடூரமாகத் திணித்து வருகிறது. தமிழ்நாடும் இதில் விதிவிலக்கு அல்ல. ஒப்பீட்டளவில் தமிழகத்தின் பெருமை பேசலாமே தவிர, இதை ‘கள்ள மவுனத்துடன்’ கடந்து போக முயற்சிக்கக் கூடாது, எதிர்வினைகளை முன்னெடுக்க வேண்டும். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவியாக தேர்வு செய்யப்பட்ட தலித் சமூகத்தைச் சார்ந்த ராஜேஸ்வரி சரவண குமார் என்ற பெண், பஞ்சாயத்து ஜாதிவெறி துணைத் தலைவரால், தரையில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராடசி மன்ற தலித் சமூக பெண் தலைவர், ‘சுதந்திர நாளில்’ தேசியக் கொடியை ஏற்ற ஆதிக்க ஜாதி வெறியர்களால் தடுக்கப்பட்டுள்ளார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு எதிரான இந்த ‘தீண்டாமை’யை அரசு நிர்வாகத்துக்குக் கொண்டு செல்லத் தவறிய ஊராட்சி மன்ற செயலாளராக இருந்த பெண், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் டுள்ளார். இவை...

பெரியார் சிலைக்கு கூண்டு போடாதே: சென்னை மாவட்டக் கழகம் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலைக்கு கூண்டு போடாதே: சென்னை மாவட்டக் கழகம் ஆர்ப்பாட்டம்

கிண்டி கத்திப்பாரா அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாநகராட்சி சார்பில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. பெரியாரின் சிலைக்கு கூண்டு அமைக்கப்பட்டதை அகற்றக்கூறி காவல்துறையிடம் பேச்சுவார்த்தை நடந்தது. காவல்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், 07.10.2020 அன்று  மாலை 3 மணியளவில் கிண்டி கத்திப்பாரா பெரியார் சிலை அருகில் திராவிடர் விடுதலைக் கழகம் தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட தலைவர் வேழவேந்தன், வழக்கறிஞர் துரை அருண், வடசென்னை மாவட்ட தலைவர் ஏசுகுமார், தென்சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் தினேஷ் மற்றும் மாவட்டக் கழகத் தோழர்கள் 50 பேர் பங்கேற்றேனர். மற்றும் சென்னை கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர். வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இன்டியா அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பெரியாரின் சிலைக்கு அமைக்கப்பட்டுள்ள கூண்டு அகற்றப்படும்...

ஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்

ஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்

இந்தி, சமஸ்கிருத திணிப்புகளை ஒவ்வொரு நாளும் மோடி ஆட்சி அரங்கேற்றி வருகிறது. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன்னிடம் விமான நிலையத்தில் இந்தியில் பேசிய பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரிடம், தனக்கு இந்தி தெரியாது என்று கூறியவுடன், நீங்கள் இந்தியர் தானா என்று கேட்டார் அந்த அதிகாரி. ‘ஆயுஷ்’ மருத்துவ அமைச்சகம் நடத்திய ஒரு இணைய கருத்தரங்கில் அந்தத் துறையின் செயலாளர் இந்தி மொழியில் பேசினார். தென்னாட்டிலிருந்து பங்கேற்ற பிரதிநிதிகள் தங்களுக்கு இந்தி தெரியாது; நீங்கள் பேசுவது புரியவில்லை என்றவுடன், தனக்கு இந்தி மட்டும்தான் தெரியும்; புரியாதவர்கள் வெளியேறுங்கள் என்று திமிருடன் பேசினார் அந்த அதிகாரி. காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி மோடி ஆட்சி இணையம் வழியாக தமிழ்நாட்டில் மாணவர் மாணவிகளுக்கு நடத்திய புதிர் போட்டியை, இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தி தமிழை புறக்கணித்தனர். அரியலூர் மாவட்டத்தில் தேசியமய வங்கியின் நிர்வாகி உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டு வந்த ஓய்வு பெற்ற...

‘இப்பப் பாரு… நான் எப்படி ஓடுறேன்னு…’

‘இப்பப் பாரு… நான் எப்படி ஓடுறேன்னு…’

வீரம் பேசி விட்டு தலை தெறிக்க ஓட்டம் பிடிப்பதற்குக்கூட ஒரு ‘வீரம்’ வேண்டும்; “அடிச்சிட்டல்ல; இப்ப… நான் எப்படி வேகமாக ஓடுறேன்னு மட்டும் பாரு…” என்று வடிவேலு ஒரு படத்தில் வீரத்துடன் கூறுவார். அப்போது வடிவேலு எடுத்த ஓட்டம் கூட – “சும்மா… சாதா ரகம் தான் இப்போது நம்ம பா.ஜ.க. ‘ஜீ’க்கள் எடுக்கும் ஓட்டம் இருக்கே… அப்பப்பா… ‘இதை தலைதெறிக்க’ ஓடும் ஓட்டம் என்றும் கூறலாம். கடந்த வாரம் தான் பொன். ராதா கிருஷ்ணன், ‘நானும் அரசியலில்தான் இருக்கேன்’ என்று  அடையாளப்படுத்த, ஒரு திரியைக் கொளுத்திப் போட்டார். “நாங்கள் யாருடன் கூட்டணி வைப்போம் என்பதையெல்லாம் இப்ப சொல்ல முடியாது; அது தி.மு.க.வாகக்கூட இருக்கலாம்” என்றார். அவ்வளவுதான்; “பா.ஜ.க. – தி.மு.க. கூட்டணியா” என்று தொலைக்காட்சிகள் ‘அரட்டை கச்சேரி’களை (அதற்கு விவாதம் என்றும் பொருள் கூறலாம்) நடத்தி முடித்து விட்டன. கூட்டணியில் பா.ஜ.க.வுக்காக 60 இடங்களைப் பெறுவோம் என்றார், ஒரு ‘ஜி’;...

இணையம் வழியாக கழகத்தின் மாவட்ட கலந்துரையாடல்கள்

இணையம் வழியாக கழகத்தின் மாவட்ட கலந்துரையாடல்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாத சூழ்நிலையால், தலைமைக் குழு மற்றும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் ‘Team Link’ வாயிலாகவே நடைபெற்றது.  30.06.2020 அன்று காலை 10:30 மணியளவில் தலைமைக் குழு நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்,  12.07.2020 –  ஈரோடு தெற்கு மாவட்டம், 14.07.2020 –   சேலம் கிழக்கு மற்றும் சேலம் மேற்கு மாவட்டங்கள், 19.07.2020 –  திருப்பூர் மற்றும் கோவை, 21.07.2020 –  தர்மபுரி மற்றும் கிருட்டிணகிரி, 23.07.2020 –  வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, 26.07.2020 –  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், 28.07.2020 –   திருச்சி, பெரம்பலூர், அரியலூர், 29.07.2020 –  தஞ்சாவூர், நாகை, 30.07.202 –  மதுரை, சிவகங்கை மாவட்டங்கள், 31.07.2020 –  நாமக்கல், ஈரோடு வடக்கு மாவட்டம், 02.08.2020 –   தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி, 09.08.2020 –  தென் சென்னை, வடசென்னை ஆகிய தேதிகளில் கழகத் தலைவர்,...

பாண்டேக்களே, பதில் உண்டா?

பாண்டேக்களே, பதில் உண்டா?

சங்கிகளின் கழிசடை கருத்துக்களை சுமந்து கொண்டு கூவிக் கூவி விற்பனை செய்யும் ரங்கராஜ் பாண்டே என்ற பேர் வழி, ‘ஆதன் தமிழ்’ என்ற ‘யு-டியூப்’புக்கு அளித்த பேட்டியில் மனுதர்மம் இப்போது எங்கே இருக்கிறது! அதை எல்லாம் தூக்கி வீசியாச்சு என்று கூறியிருக்கிறார். அப்படியானால் ஒரு கேள்வி! பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வர்ணப் பிரிவுகளை மனு சாஸ்திரம் கூறுகிறது. ‘பிராமண’ என்ற வர்ணத்தை மட்டும் இப்போதும் மனுதர்ம அடிப்படையில் அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மாக்கள் தங்களை  அடையாளப்படுத்திக் கொண்டு காயத்ரி மந்திரம் ஓதி, அதன் ‘கல்வெட்டு நினைவு சின்னம்’ போல் பூணூலை மாட்டிக் கொண்டு திரிவது ஏன்? மனுதர்மத்தை உயிருடன் வைத்திருப்பது தானே இதன் நோக்கம்? வேத மந்திரம் ஓதுதல், சாஸ்திர சடங்குகளை நிகழ்த்துதல், திருமணம், கருமாதி மந்திரங்களை உச்சரித்தல், கர்ப்பகிரகம் வரை நுழைந்து அர்ச்சனை செய்தல், கும்பாபிஷேகம் செய்தல், சிற்பி வடித்த கல்லுக்குள் வேத மந்திரத்தை ஓதி ‘கடவுளாக்குதல்’ போன்ற...

கழகக் களப் பணியாளர் தமிழரசு முடிவெய்தினார் நெகிழ்ச்சியுடன் நடந்த படத்திறப்பு

கழகக் களப் பணியாளர் தமிழரசு முடிவெய்தினார் நெகிழ்ச்சியுடன் நடந்த படத்திறப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயல்வீரர், பெரியார் தொண்டர், கழகக் களப் பணியாளர் கோ. தமிழரசு (44)  11.06.2020  அன்று  நள்ளிரவு உடல்நலக் குறைவால் முடிவெய்தினார். தோழர் தமிழரசு படத்திறப்பு நிகழ்வு சென்னை தலைமை அலுவலகத்தில் 17.09.2020 காலை 10 மணியளவில் நடை பெற்றது. நிகழ்விற்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை வகித்தார். தோழர்கள் சி. இலட் சுமணன், தா. சூர்யா, கோ. வீரமுத்து, தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் க.சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தோழர் தமிழரசுவின் இயக்க உணர்வையும், தோழர்களுக்கு தாமாக முன் வந்து உதவிடும் பண்பையும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர். கருப்பு பிரதிகள் நீலகண்டன், ‘விரட்டு’ ஆனந்த், தலைமைக்குழு உறுப் பினர் அய்யனார் ஆகியோர் தமிழரசு அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் படத்தைத் திறந்து வைத்து  உரை யாற்றினார். மாவட்டத் தலைவர் ம.வேழவேந்தன் நன்றி...

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் இணைய வழி கருத்தரங்குகள் – நூல் வாசிப்பு நிகழ்வுகள் இளைய தலைமுறையின் எழுச்சி

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் இணைய வழி கருத்தரங்குகள் – நூல் வாசிப்பு நிகழ்வுகள் இளைய தலைமுறையின் எழுச்சி

கொரானா ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு மாணவர் கழக முகநூல் தளத்தில் மாணவர்கள், தோழர்கள் புத்தக வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும், அதனை ஊக்குவிக்கும் வகையிலும் ‘நூல் அறிமுகம்’ என்னும் நிகழ்வை நடத்தினர். ஒரு நூலின் கருத்தினை காணொளியில் பேசி தொடர்ச்சியாக பதிவு செய்து வந்தனர். தோழர்கள் திருப்பூர் தேன்மொழி, திருப்பூர் பிரசாந்த்,  கொளத்தூர் கனலி, மேட்டூர் மதிவதனி, மேட்டூர் அறிவுமதி, திருப்பூர் கனல்மதி, திருப்பூர் தென்றல், திருப்பூர் சந்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர்.  மேலும் பெரியாரிய  கருத்துக்களை பாடல் களாகப் பாடியும், வாசகங்களாக பேசியும் சமூக வலைதளத்தில் குழந்தைகளும் தோழர்களும் பதிவு செய்து வந்தனர்.  ஜூன் 25ஆம் தேதி  சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் 89ஆவது பிறந்தநாளில் அவரின் சாதனைகளைப் போற்றும் வகையில் தொடர் காணொளியிலும் தோழர்கள் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்தனர். தோழர்கள் மதிவதனி, ரம்யா, பிரசாந்த், கனலி, தேன்மொழி, விஷ்ணு, வைத்தீஸ்வரி, கனல்மதி, அறிவுமதி, சந்தோஷ் ஆகியோர் காணொளியில் பேசினர். கல்வி...

வாசகர்களுக்கு

வாசகர்களுக்கு

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 19, 2020-க்குப் பிறகு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளிவர இயலவில்லை. 8.10.2020 முதல் மீண்டும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தனது பயணத்தைத் தொடங்குகிறது.                         – ஆசிரியர்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை, இஸ்ரோ முன்னாள் அதிகாரி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் 2018 டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்டு, 2019 ஜூன் 1ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலைதளத்தில் தேசிய கல்வி கொள்கை அறிக்கை ஆங்கிலம், இந்தியில் மட்டும் வெளியானது. வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்து சொல்ல வேண்டும் என்று அரசு கால நிர்ணயமும் அறிவித்திருந்தது. பல மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருந்தும் மாநில மொழிகளில் அறிக்கை வெளியாகவில்லை என்று எதிர்ப்பு வந்தவுடன் தேசிய கல்வி கொள்கை சுருக்கமான வரைவை தமிழில் வெளியிட்டார்கள். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம்  ஓராண்டுக்கு முன்பே 2019 செப்டம்பர் 17 இல் பரப்புரை பயணத்தை நடத்தியது. ‘சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தை திணிக்காதே’ என்ற முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் கழகம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை பயணத்தை மேற் கொண்டது. பயணம் பள்ளிபாளையத்தில் நிறைவுற்றது. செப்டம்பர் 20ஆம்...

பரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி

பரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி

கான்ஷிராம் உருவாக்கிய பகுஜன் சமாஜ் கட்சிக்கு அவரது வாரிசாக தலைவராகியிருக்கும் மாயாவதி, வாக்கு வங்கி அரசியலுக்காக கான்ஷிராம் கொள்கைகளையே குழி தோண்டி புதைத்து வருகிறார். சங் பரிவாரங்கள் இராமன் கோயில் கட்டும் இயக்கத்தைத் தொடங்கியபோது கான்ஷிராம் அதற்கு எதிர்நிலைப்பாடு ஒன்றை எடுத்தார். சம்பூகன், ஏகலைவன் போன்ற விளிம்பு நிலை புராண நாயகர்களை வெகுமக்களின் அடையாளமாக்கி இயக்கம் நடத்தினார். இப்போது மாயாவதி, இராமன் கோயில் கட்டும் கட்சிகளுக்கு மாற்றாக, பார்ப்பன அவதாரமாகப் பேசப்படும் ‘பரசுராமனை’ தலையில் தூக்கி சுமக்கிறார். ஷத்திரியர்களை ஒழிப்பதற்காகவே பார்ப்பன பரசுராமன் அவதாரம் எடுத்ததாகவும் தனது கோடரியால் சத்திரியர்களை ‘பூண்டோடு’ ஒழித்ததாகவும் புராணங்கள் கதை விடுகின்றன. மாயாவதி 70 அடி உயரத்தில் அந்த பரசுராமனுக்கு சிலை வைக்கப் போவதாக அறிவித்துள்ளார். முலாயம் சிங்கின் சமாஜ் வாடி கட்சியும் தன் பங்கிற்கு மாவட்டந்தோறும் பரசுராமன் சிலைகளை வைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அதற்குப் போட்டியாக மாயாவதி வெளியிட்ட அறிவிப்பு இது? கான்ஷிராம் –...

வரலாற்றுச் சான்றுகளுடன் கொளத்தூர் மணி உரை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் – வ.உ.சிதம்பரனார்

வரலாற்றுச் சான்றுகளுடன் கொளத்தூர் மணி உரை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் – வ.உ.சிதம்பரனார்

05.09.2020 அன்று தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைத்த வ.உ.சி. பிறந்த நாள் இணைய வழி கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. முதல் பகுதி நாம் தமிழ்ச் சமூகத்திற்கு நினைவூட்ட வேண்டிய ஒரு பெரும் தலைவரைப் பற்றி அவருடைய பன்முகச் செயல்பாடுகளைப் பற்றி எடுத்துரைப்பதற்கான ஒரு வாய்ப்பாக நான் இதைப் பார்க்கிறேன். அவர் தொடக்க காலத்தில் விடுதலை வீரராக, குறிப்பாக திலகரோடு சேர்ந்து பணியாற்றிய தீவிரவாத பிரிவைச் சார்ந்தவராக வாழ்க்கையைத் தொடங்கி சிறைபட்டதை, விடுதலைக்குப் பின்னர் நடந்த மாற்றங்களை பலரும் பல கோணங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர். நான் ஒரு பெரியார் இயக்கத் தோழன் என்ற முறையில் பெரியார் இயக்கத்தோடும், சுயமரியாதை இயக்கத்தோடும் அவர் கொண்டிருந்த தொடர்புகளைப் பற்றி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியாவில் நடைபெற்ற முதல் தொழிற்சங்க போராட்டமானாலும், அரசியல் ரீதியாக நடந்த முதல் வேலை நிறுத்தப் போராட்ட மானாலும் அதில் குறிப்பிடத்தக்க...

பா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்

பா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்

தமிழக பா.ஜ.க.வில் என்ன நடக்கிறது? தலித் சமூகத்தைச் சார்ந்த அக்கட்சித் தலைவர் முருகனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த துணைத் தலைவர் அண்ணாமலை என்ற முன்னாள் அய்.பி.எஸ். அதிகாரியும், “பெரியார் சமூக சீர்திருத்தவாதி; சமூக நீதிக்கு பாடுபட்டவர்; அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறோம். பெரியாரின் இந்துமத எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு கொள்கைகளையே எதிர்க்கிறோம்” என்று பேட்டிகளில் கூற, அந்த முகாமில் உள்ள மனுவாத பார்ப்பனர்களுக்கு ஆத்திரம் பீறிட்டுக் கிளம்பி விட்டது. நாராயணன் திருப்பதி, கோலாகல சீனிவாஸ், ரங்கராஜ் பாண்டே போன்ற பார்ப்பனர்கள், பெரியாரைப் பேசினால் பா.ஜ.க. ஓட்டு வங்கி ஒழிந்து விடும்; ஆர்.எஸ்.எஸ். பாரம்பர்யம் வேறு; பெரியார் பாரம்பர்யம் வேறு; பெரியார் தனிநாடு கேட்டவர் என்றெல்லாம் வெளிப்படையாக கட்சித் தலைவர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாட்டில் பெரியார் போன்ற தலைவர்களையெல்லாம் எதிர்த்துக் கொண்டு பா.ஜ.க.வை வளர்க்க முடியாது என்று டெல்லியில் கட்சி மேலிடம் கருதுவதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு செய்தி...

தலையங்கம் ‘ஹத்ராசு’ம் அயோத்தியும்

தலையங்கம் ‘ஹத்ராசு’ம் அயோத்தியும்

உ.பி. ஹத்ராஸ் மாவட்டம் இப்போது நாடு முழுவதும் உச்சரிக்கப்படும் பெயராகி விட்டது. அயோத்தியில் ‘இராமனு’க்கு கோயில் கட்டும் வேலையும் தீவிரமாக நடக்கிறது. ‘ஹத்ராசில்’ 18 வயது தலித் பெண், உயர் ஜாதி தாக்கூர்  வெறியர்களால் கடத்தப்பட்டு கொடூரமான சித்திரவதை, பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, உயிரிழந்து விட்டார். காவல்துறை பெற்றோர்களுக்கு பெண்ணின் சடலத்தைக் காட்டாமலேயே நள்ளிரவில் எரியூட்டும் வேலையை முடித்ததோடு மாவட்ட ஆட்சித் தலைவர் பெண்ணின் பெற்றோர்களை மிரட்டியுள்ளார். வீடியோ ஆதாரங்கள் வெளி வந்திருக்கின்றன. ‘எங்கள் மகளை எவரும் வல்லுறவு செய்யவில்லை’ என்று ஒப்புதல் வாக்குமூலம் தர, பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார். நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு ஆளும் பா.ஜ.க.விலிருந்தே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதை சான்றாகக் கூறலாம். பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜ்வீர் தைலர், “இரவோடு இரவாக உடலை எரியூட்ட வேண்டாம் என்று மன்றாடினேன்; மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்கவில்லை. ஒரு எம்.பி.யாக இந்தக் கொடுமைக்கு வெட்கப்படுகின்றேன். நீதி கிடைக்கவில்லையெனில் எம்.பி. பதவியையும் துறந்து...

கொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை 80 இணைய வழி கருத்தரங்குகள்

கொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை 80 இணைய வழி கருத்தரங்குகள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இணையக் கருத்தரங்கங்கள் ‘Team Link’ மற்றும் முகநூல் வழியாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. 01.04.2020 அன்று ‘Team Link’ வழியாக தொடங்கப்பட்ட கருத்தரங்கங்கள் 31.05.2020 அன்று வரை நடைபெற்ற கருத்தரங்கம் தினமும் காலை 11:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. ‘தோழர் பெரியாரின் சமதர்மம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி – ஏப் 1 அன்றும், ‘இடஒதுக்கீடு சிக்கல்கள்’ என்ற தலைப்பில் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் – ஏப் 2 அன்றும், ‘நாத்திகமும் அறிவியல் மனப்பான்மையும்’ என்ற தலைப்பில் எட்வின் பிரபாகரன் – ஏப் 3 அன்றும்,  ‘மருத்துவத் துறையில் திராவிட இயக்கத்தின் சாதனை’ என்ற தலைப்பில் தமிழ்நாடு மாணவர் கழகம் பிரசாந்த் ஏப் 4 அன்றும்,  ‘கொளுத்துவோம் மனுதர்மத்தை’ என்ற தலைப்பில் – தஞ்சை மாவட்டத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன் ஏப் 5...

“சமூக விரோதிகள்”

“சமூக விரோதிகள்”

‘மாப்பிள்ளை இவருதான்; ஆனா, அவரு போட்டிருக்கிற சட்டை என்னுடையதல்ல” என்று நடிகர் செந்திலை, ரஜினிகாந்த் கலாய்ப்பார். அந்தக் கதை இப்போது நீதிமன்றத் தீர்ப்புகளாகவே வரத் தொடங்கி விட்டன. கரசேவகர்களாக அத்வானி, ஜோஷி என்று 32 பேர் கொண்ட ஒரு கும்பலே அயோத்தியில் கூடியிருந்திருக்கலாம். ஆனால், இவர்கள் இராமன் ‘சத்தியமாக’ மசூதியை இடித்தவர்கள் அல்ல – லக்னோ சிறப்பு நீதிமன்றமே கூறிவிட்டது. இது என்ன புதுக் கதை? அப்படின்னா, மசூதியை இடிச்சது யாரு பாஸ்? அதுவா, அவர்களுக்கு லக்னோ நீதிமன்றம் ஒரு கவுரவப் பட்டத்தையே வழங்கி யிருக்கிறது. ‘சமூக விரோதிகள்’ என்ற நாட்டின் மிக உயர்ந்த பட்டம்! இந்தியா முழுவதிலிருந்தும் இலட்சக் கணக்கில் இரயில் ஏறி அயோத்திக்கு கடப்பாறை, இரும்புத் தடிகளோடு வந்து சேர்ந்த இராம பக்தர்கள் – சமூக விரோதிகளா?   இராம பக்தர்களை இப்படியா புண்படுத்துவது? என்று ராம பக்தர்கள் கொந்தளிக்க மாட்டார்கள் என்று நாம் நிச்சயம் நம்பலாம். நீதிமன்ற அவமதிப்பு...

சங்க தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வழங்கும் விழா

சங்க தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வழங்கும் விழா

கோவை மாவட்ட கலைக்கூடத்தில் நடந்த கட்டிட தொழிலாளர் சங்கம் நடத்திய சங்க தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வழங்கும் விழாவில், கழகத்தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு நலவாரிய அட்டைகள் வழங்கியதுடன் சிறப்புரையாற்றினார். மேலும், பாவேந்தர் பாரதிதாசன் பேரவை. புலவர் செந்தலை கவுதமன் மற்றும் சூலூர் பன்னீர்செல்வம், சூலூர் பாபு, வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பெரியார் முழக்கம் 12032020 இதழ்

பேராசிரியர் அறிவரசன் முடிவெய்தினார்

பேராசிரியர் அறிவரசன் முடிவெய்தினார்

தென்காசி – கடையம் நகர் இல்லத்தில் பேராசிரியர் அறிவரசன் 4.3.2020 அன்று இரவு 7.00 மணியளவில் முடிவெய்தினார். ஆழ்வார் குறிச்சிக் கலை அறிவியல்  கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி 1996இல் ஓய்வு பெற்றவர். இயற்பெயர் குமாரசாமி. அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக்கிய தமிழ்க்காப்புப் போர்வாள்களில் ஒருவர். அங்குத் தமிழ்ப் பேராசிரியராகத்  திகழ்ந்த மு. அருணாசலம், இவரின் பெரியப்பா. ஈழத்தில் வாழ்ந்த நினைவுகளை ‘ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்’ எனும் நூலாக எழுதியுள்ளார். நூலைச் சென்னை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மீனாட்சிபுரம் மதமாற்றத்தை ‘விடுதலைபுரம்’ என்னும் காப்பியமாகப் பாடியுள்ளார். மதமா? மனிதமா?,  யார் இந்த இராமன்?,  திராவிடர் இயக்க வரலாறு, சோதிடப் புரட்டு – முதலிய நூல்களின் ஆசிரியரான இவர் பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளில் உறுதி காட்டியவர். ‘விடுதலை’, ‘உண்மை’ இதழ்களின் துணையாசிரியராக முன்பு பணியாற்றியவர்.  ‘மக்கள் தாயகம்’ எனும் மாத இதழைக் கடையத்திலிருந்து தொடர்ந்து நடத்தி வந்தார். கடையம் திருவள்ளுவர் கழகத்தை  நிறுவிச்  செயல்பட்டு...

கழக ஏடுகளுக்கு சந்தா : கழகப் பொறுப்பாளர்கள் நேரில் வருகிறார்கள்

கழக ஏடுகளுக்கு சந்தா : கழகப் பொறுப்பாளர்கள் நேரில் வருகிறார்கள்

பெரியார் முழக்கம் மற்றும் நிமிர்வோம் சந்தாக்களைப் பெறுவதற்காக தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் தோழர்களைச் சந்திக்க நேரில் வருகிறார்கள். 20.03.2020 – வெள்ளிக்கிழமை காலை. 10 மணிக்கு – திருச்சி, பெரம்பலூர் மாவட்டம். மாலை 5 மணிக்கு தஞ்சை மாவட்டம். 21.03.2020 – சனிக்கிழமை காலை 10மணிக்கு – நாகை மாவட்டம், மயிலாடுதுறை. மாலை 5 மணிக்கு கடலூர் மாவட்டம். 22.03.2020 – ஞாயிற்றுக்கிழமை காலை 10மணிக்கு – விழுப்புரம், கள்ளக்குறிச்சி. மாலை 5 மணிக்கு ஆத்தூர். மேற்குறிப்பிட்ட மாவட்ட கழகத் தோழர்கள் இதற்கான ஏற்பாடுகள் செய்து சந்தாக்களை விரைந்து முடித்து கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெரியார் முழக்கம் 12032020 இதழ்

சென்னை கருத்தரங்கில் வாலாஜா வல்லவன் பேச்சு ‘மநு’ சாஸ்திரமே இப்போதும் ஆட்சி செய்கிறது

சென்னை கருத்தரங்கில் வாலாஜா வல்லவன் பேச்சு ‘மநு’ சாஸ்திரமே இப்போதும் ஆட்சி செய்கிறது

திருச்சி பெரியார் சரவணன் எழுதிய ‘திராவிடர் விவசாய சங்கம்’ நூலின் திறனாய்வு கருத்தரங்கம் 01.03.2020 அன்று சென்னை தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி சென்னை மாவட்டப் பொறுப்பாளரும் பெரியாரிய ஆய்வாளருமான வாலாசா வல்லவன் நிகழ்த்திய உரை: திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்தை பெரியார் 1952இல் தொடங்கி இருக்கிறார்கள். அது குறித்த இந்த புத்தகம் திராவிடர் விவசாய தொழிலாளர் கழகத்தின் அமைப்பினுடைய நோக்கங்கள் பற்றி 1952இல் வெளிவந்தது. தற்போது 2016ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தினரால் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகள் ஏன் சங்கம் வைத்திருக்கின்றனர், நாம் ஏன் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் வைத்திருக்கிறோம் என்பதைப் பற்றி பெரியார் சொல்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி அப்போது ஒன்று தான். இந்திய பொதுவுடமைக் கட்சி. சோவியத்தி லிருந்து கட்டளை வந்தால் டெல்லி அதை ஏற்கும். இங்கிருக்கின்ற சூழ்நிலைக்கு ஏற்றவாறு பார்ப்பனிய சூழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில் இந்த மண்ணிற்கு உண்டான ஒரு...

அரசுப் பள்ளிகளில் பட்டியல் பிரிவு குழந்தைகளை கழிவறை சுத்தம் செய்ய பணிப்பதா? சட்ட நடவடிக்கை எடுக்க, கோவை மாநகர் கழகம் புகார்

அரசுப் பள்ளிகளில் பட்டியல் பிரிவு குழந்தைகளை கழிவறை சுத்தம் செய்ய பணிப்பதா? சட்ட நடவடிக்கை எடுக்க, கோவை மாநகர் கழகம் புகார்

கோவை மாநகர கலந்தாய்வு கூட்டம் 8.3.2020 காலை 11 மணியளவில் வ.உ.சி. பூங்கா அருகிலுள்ள சிறுவர் பூங்காவில் நடைபெற்றது.  அதில்கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. தோழர் ஃபாரூக் நினைவு நாளை ஒட்டி 17.03.2020 அன்று  அண்ணாமலை அரங்கில் கருத்தரங்கம் மற்றும் மறைந்த  தோழர்கள் பேராசிரியர் அன்பழகன்,  ஆசிட் தியாகராஜன், இராவணன் ஆகியோரது படத்திறப்பு நடத்துவது. 09.03.2020 திங்கள் கிழமை அன்று அரசு பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட குழந்தைகளை  கழிவறைகளை அகற்ற வற்புறுத்தும் ஜாதிய தீண்டாமை கொடுமைகளுக்கு துறை ரீதியாக மட்டுமே நடவடிக்கை எடுப்பதைக் கண்டித்து ஆசிரியர்கள் ஜெயந்தி, குமரேஷ்வரி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் காலை 10 மணிக்கு மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது . இதில் தோழர்கள் செ. வெங்கடேசன்,  ச. மாதவன், ஆ.சுரேஷ்,  நா.வே. நிர்மல்குமார் ப.கிருட்டிணன்   மா.நேருதாசு ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்துரையாடலின் முடிவின்படி 9.3.2020 திங்கள் அன்று  கோவை  மாவட்டத்தில்...

குனிந்து கிடந்தவனை நிமிர வைத்தது திராவிடர் இயக்கம்

குனிந்து கிடந்தவனை நிமிர வைத்தது திராவிடர் இயக்கம்

அரை நூற்றாண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சி சாதனையாக எதைச் சொல்வீர்கள்? நான் வசித்த மயிலாடுதுறையில் மகாதேவ தெரு, பட்டமங்கலம் தெரு என்று இரண்டு தெருக்கள் உண்டு. பிராமணர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தெரு. அவர்கள்தான் வழக்கறிஞர்களாக, ஆசிரியர்களாக, மருத்துவர்களாக இருப்பார்கள். சாமானிய மக்கள் அன்றைக்கு அந்தத் தெருக்களில் நுழைந்தாலே, ‘சாமி வீட்டுக்குப் போகிறேன்’ என்று சொல்வார்கள். அய்யர் வீடு என்றுகூட சொல்ல மாட்டார்கள். ‘எந்தச் சாமி வீட்டுக்குப் போகிறாய்?’ என்று கேட்டால், ‘டாக்டர் சாமி வீட்டுக்குப் போகிறேன்; வக்கீல் சாமி வீட்டுக்குப் போகிறேன்’ என்று பதில் வரும். அவ்வளவு பய பக்தி! பிள்ளைவாள் வரச் சொன்னார், முதலியார் வீடு வரை போய் வருகிறேன் இப்படி எல்லோருமே சாதியால்தான் குறிப்பிடப் பட்டார்கள். மேல்சாதி என்று சொல்லிக் கொள் பவர்களுக்கு இதில் உள்ள பேதம் புரியாது. ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களை எப்படி அழைத்திருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள். எனக்கு விவரம் தெரிந்து முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் வீடுகளில்...

பார்ப்பன உயர்ஜாதி அதிகார வர்க்கத்தின் கார்ப்பரேட் கொள்ளைக்கு மற்றொரு சான்று ‘எஸ்’ வங்கி ‘திவால்’

பார்ப்பன உயர்ஜாதி அதிகார வர்க்கத்தின் கார்ப்பரேட் கொள்ளைக்கு மற்றொரு சான்று ‘எஸ்’ வங்கி ‘திவால்’

பார்ப்பன உயர்ஜாதி அதிகார வர்க்கத்தின் பிடியில் உள்ள வங்கிகள் கோடி கோடியாக கொள்ளையடிப்பதற்கும், தொழிலதிபர்களிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு கடன் வழங்குவதற்குமே பெரிதும் பயன்பட்டு வருகின்றன. பார்ப்பன ஆதிக்கத்திலுள்ள ‘அய்சி.அய்.சி.அய்.’ வங்கியின் நிர்வாக இயக்குனராக இருந்த ஒருவர் ஊழலில் சிக்கி இப்போது சி.பி.அய். விசாரணையில் நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார். இப்போது ‘எஸ்’ என்ற தனியார் வங்கி திவாலாகியிருக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு ரிசர்வ வங்கி கண்காணிப்பின் கீழ் உள்ள இந்தத் தனியார் வங்கி, கடனாக வழங்கிய தொகை ரூ.55,633 கோடி. இது மார்ச் 2019இல் ரூ.2,44,999 கோடியாக சுமார் 8 மடங்கு உயர்ந்தது. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு நெருக்கமான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மக்கள் சேமிப்பிலிருந்து இந்தத் தொகை கடனாக ‘தானம்’ செய்யப்பட்டு, பிறகு திருப்பித் தராமல் ‘பட்டை நாமம்’ சாத்தப்பட் டுள்ளது. 2014லிருந்து 2019ஆம் ஆண்டு வரை நடந்த பா.ஜ.க. ஆட்சியில் மேலிட செல்வாக்குடன் கடன் பெற்ற நிறுவனங்கள் அனைத்தும் மோசடி...

சென்னையில், டெல்லி கலவரத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னையில், டெல்லி கலவரத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தில் இதுவரை 53 பேர் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூரையாடப்பட்டன. இஸ்லாமியர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. 02.03.2020 அன்று மாலை 4:30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், உரிமைக்காகப் போராடிய மக்களைத் தாக்கியதைக் கண்டித்தும், மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், கலவரக்காரர் களைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேச மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம், மே 17 இயக்கம், மனிதநேய மக்கள் கட்சி, சிபிஐ(எம்.எல்) ரெட் ஸ்டார், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், எஸ்டி.பி.அய், தமிழ்த் தேசியப் பேரியக்கம், பி.எஃப்.அய், மக்கள் அரசுக் கட்சி, மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சி, தமிழர் விடியல் கட்சி, தமிழ்த் தேச மக்கள் கட்சி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் கலந்து கொண்டன. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு டெல்லி கலவரத்தின்...

கடவுள் – மத மறுப்பாளராக 98 வயது வாழ்ந்து காட்டிய திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் விடைபெற்றார்

கடவுள் – மத மறுப்பாளராக 98 வயது வாழ்ந்து காட்டிய திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் விடைபெற்றார்

இனமானப் பேராசிரியர் அன்பழகன், தனது 98ஆவது அகவையில் மார்ச் 7, 2020இல் முடிவெய்தினார். திராவிடர் இயக்கத் தூண்களில் ஒருவர். தமிழையும் சுயமரியாதைக் கொள்கைகளையும் தனது இரு கண்களாகப் போற்றியவர். மிகச் சிறந்த பேச்சாளர். மாணவப் பருவத்திலிருந்தே அவரது திராவிடர் இயக்கப் பயணம் தொடங்கி விட்டது. தி.மு.க.வின் பொதுச் செயலாளராக 43 ஆண்டுகாலம் இருந்து கலைஞரின் உற்ற துணைவராக செயல்பட்டவர். மிக மிக எளிமையானது அவரது வாழ்க்கை. 7 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். பெரியார் குறித்து ஆழமான அவரது உரைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. கடவுள் – ஜாதி – மதமற்ற வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர். ஒரு கடவுள் மறுப்பாளர் 98 வயது வரை வாழ முடியும் என்ற செய்தியையும் அவரது மரணம் உணர்த்தி நிற்கிறது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தினர். மதச் சடங்குகள் ஏதும் இன்றி திராவிடர் இயக்க அடையாளங்களோடு அவரது இறுதி நிகழ்வுகள் நடந்தன. திராவிடர்...

மாநிலங்களவையில் அதிர்ச்சித் தகவல்  ‘அய்.அய்.டி’களில் ‘இடஒதுக்கீடு’ மறுப்பு

மாநிலங்களவையில் அதிர்ச்சித் தகவல் ‘அய்.அய்.டி’களில் ‘இடஒதுக்கீடு’ மறுப்பு

பார்ப்பனப் பிடியில் உள்ள அய்.அய்.டி. உயர் கல்வி நிறுவனங்களில் பட்டியல் இனப் பிரி வினருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடுகள் முழுமையாக நிரப்பப்படுவது இல்லை என்ற புள்ளி விவரங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை முனைவர் பட்டத்துக்கான தேர்வுத் திட்டங்களில் பட்டியலின பழங்குடிப் பிரிவு மாணவர்கள் மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் கடந்த வெள்ளிக் கிழமை (மார்ச் 6, 2020)அரசு சமர்ப்பித்த அறிக்கையில் இந்த விவரங்கள் அடங்கியுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தமுள்ள 23 அய்.அய்.டி. நிறுவனங்களில் 25007 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வுத் திட்டங்களில் சேர்க்கப்பட்டனர். இதில் பட்டியல் இனப் பிரிவு மாணவர் 9.1 சதவீதம் மட்டுமே. பழங்குடிப் பிரிவினர் 2.1 சதவீதம் மட்டுமே. இரு பிரிவினருக்கும் சேர்த்து 22.5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாதியளவுகூட நிரப்பப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் ஒதுக்கப்பட்டிருப்பதோ 23.2 சதவீதம்தான்...

சேலம் மேற்கு மாவட்டக் கழக சார்பில் மேட்டூரில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் தொடக்கம்

சேலம் மேற்கு மாவட்டக் கழக சார்பில் மேட்டூரில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் தொடக்கம்

சேலம் மேற்கு மாவட்ட  திராவிடர் விடுதலைக் கழகத்தின் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் சார்பாக முதல் கலந்துரையாடல் கூட்டம் 26.01.2020 கொளத்தூர் பெரியார் படிப்பகத்தில் பகல் 12.00 மணி அளவில் திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையிலும், தலைமை செயற்குழு உறுப்பினர் காவை ஈசுவரன் முன்னிலையிலும்  நடைபெற்றது. அதற்கு முன்பாக கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குருதிக் கொடை முகாமில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தோழர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் முதல் கூட்டத்தில் வாசகர் வட்டத்தின் பொறுப்பாளராக மே.கா. கிட்டு அறிவிக்கப் பட்டார். தலைமை செயற்குழு உறுப்பினர் அ.சக்திவேல்  அறிமுக உரைக்கு பின்னர்  வாசகர் வட்டத்தில் நவம்பர்,  டிசம்பர் 2019 மாத ‘நிமிர்வோம்’ இதழில் வெளிவந்த கட்டுரைகளை பற்றிய விவாதத்தினை வாசகர் வட்ட பொறுப்பாளர் மே.கா. கிட்டு விளக்கினார். மேலும் இனி ஒவ்வொரு மாத இறுதியிலும் நிமிர்வோம் வாசகர்...

ஈரோடு குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தில்  கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

ஈரோடு குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

23.02.2020 அன்று மாலை 4 மணிக்கு சூஞசு சூசுஊ ஊஹஹ குடியுரிமைச் சட்டங்களை திரும்ப பெறக் கோரி ஈரோட்டில் செல்ல பாட்ஷா வீதியில் (ஈரோடு தினசரி மார்கெட் பின்புறம்) இஸ்லாமிய பெண்கள் பெரும் திரளாக நடத்தும் உரிமை மீட்பு தொடர் முழக்க 3ஆம் நாள் போராட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் கூறினார். தனது உரையில் இது அனைத்து மக்களுக்குமான பாதிப்பு என்று உணராமல் பல்வேறு மக்கள் இன்னும் அமைதி காப்பதாகவும் தோழர்கள், குறிப்பாக பெண்கள் முன்னெடுத்து போராடுவது மகிழ்ச்சிக்கும் நன்றிக்கும் உரியது என்றும் தன் நீண்ட உரையில் குறிப்பிட்டார். திராவிட முன்னேற்றக் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இந்த சட்டங்களுக்கு எதிராக எப்போதும் போல் திமுக அரணாக நின்று காக்கும் என்று தன் உரையில் குறிப்பிட்டார். 500 பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த சட்டங்களைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி...

கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள்

கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள்

கோவையில் பிப். 9 அன்று நடந்த நீலச்சட்டை பேரணியன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி  முன்னிலையில்,  துளசி, அறிவரசு, சுரேசு, அசோக், மாதவன் ஆகிய புதிய தோழர்கள் இணைந்தனர். இவர்கள் கோவை மாவட்டத் தோழர்கள். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த  சமூக செயற்பாட்டாளர் மருத. உதயகுமார்  16.02.2020 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தன்னை திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். பெரியார் முழக்கம் 05032020 இதழ்

காவலாண்டியூர் ஈசுவரன் கழக ஏட்டுக்கு நன்கொடை

காவலாண்டியூர் ஈசுவரன் கழக ஏட்டுக்கு நன்கொடை

காவலாண்டியூர் கழகத் தோழர், தலைமைக் குழு உறுப்பினர் ஈசுவரன் மகன் கனிகாசெல்வன்-இலக்கியா ஜாதி மறுப்பு மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.5000/- நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 05032020 இதழ்

கழகக் கட்டமைப்பு நிதி

கழகக் கட்டமைப்பு நிதி

நாச்சியார் கோயில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகக் கட்டமைப்பு நிதிக்கு ரூ.20,000/-மும், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினம், ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோவன், கட்டமைப்பு நிதியாக ரூ.5000/-மும் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 05032020 இதழ்

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய மக்கள் பதிவேட்டின் (என்.பி.ஆர்.) ஆபத்துகள்

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய மக்கள் பதிவேட்டின் (என்.பி.ஆர்.) ஆபத்துகள்

தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பிரிவினரையும் பாதிக்கும்; எளிய குடிமக்கள் தலையில் தங்களை நிரூபித்துக் கொள்ளும் சுமையை அழுத்துகிறது மத்திய அரசு என்றார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பிப். 17, 2020 அன்று பேராவூரணியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை: சென்ற இதழ் தொடர்ச்சி மக்கள் தொகை கணக்கெடுப்பில் (Census) நாம் சொல்வதை அவர்கள் எழுதிக் கொள்வார்கள். எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை மதம் என்னவென்று சென்சசுக்காக கேட்டார்கள்; அவர் ‘திராவிட மதம்’ என்று கூறினார். எம்.ஜி.ஆர்.  இந்து மதம் என்று கூற வில்லை. ஆனால் அப்படி ஒரு மதம் உண்டா என்று கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது; மக்கள் சொல்வதை எழுதிக் கொள்ள வேண்டும். அதற்கென உள்ள கையேடு அப்படித்தான் கூறுகிறது. அதை எழுதிக் கொண் டார்கள். மக்கள் என்ன கூறுகிறார்களோ அதை எழுதிக் கொள்வார்கள். எம்.ஜி.ஆர்-யை திராவிட...

சேலம் ஊர்வலம் பற்றிய பொய்யுரை நடிகர் ரஜினிகாந்த் பேச்சை ‘துக்ளக்’ பத்திரிகையே வெட்டி விட்டது

சேலம் ஊர்வலம் பற்றிய பொய்யுரை நடிகர் ரஜினிகாந்த் பேச்சை ‘துக்ளக்’ பத்திரிகையே வெட்டி விட்டது

1971இல் சேலத்தில் பெரியார் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் ஸ்ரீராமமூர்த்தி-சீதையின் உருவங்கள் நிர்வாணமாக, செருப்பு மாலை போடப்பட்டு எடுத்து வந்ததாக ‘துக்ளக்’ 50ஆம் ஆண்டு விழாவில் ‘ஆன்மீக’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார். அப்படிப் பேசியது உண்மைக்கு மாறான தகவல் என்று திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பெரியார் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டத்தை நடத்தி கைதானார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளும் ரஜினிகாந்த் பேச்சைக் கண்டித்தன. பிறகு செய்தியாளர்களை சந்திந்த நடிகர் ரஜினி, தான் பேசியதற்கு ஆதாரமாக அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன் ‘அவுட்லுக்’ பத்திரிகையில்  எழுதிய கட்டுரையில் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது என்றும், தாம் பேசியதற்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்கப் போவது இல்லை என்றும் பொங்கினார். ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி, ரஜினி பேசியது உண்மைதான் என்று ‘சத்தியம்’ செய்தார். 1971ஆம் ஆண்டில் ‘துக்ளக்’ வெளியிட்ட சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு...

2007இல் தஞ்சை ஜாதி ஒழிப்பு மாநாட்டில் ஆசிட் தியாகராசன் நிகழ்த்திய உரை

2007இல் தஞ்சை ஜாதி ஒழிப்பு மாநாட்டில் ஆசிட் தியாகராசன் நிகழ்த்திய உரை

2007 மே 19 அன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஆசிட் தியாகராசன் ஆற்றிய உரை. “நான் அதிகம் பேச முன்வரவில்லை. உண்மையைச் சொன்னால் – எனது 78 வயதில் நான் ஏறியுள்ள முதல் மேடை இது தான். புரட்சிகர இயக்கங்களுக்கு தனித் தனிப் படைகள் தேவை. நீங்கள் பிரச்சாரப் பீரங்கிகள்; பிரச்சாரப் படை. நான் தீவிரவாதத்தில் தான் இருப்பேன் (கைதட்டல்) . பெரியார் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போராட்டங்களில் நான் கலந்து கொள்வது இல்லை. நான் கருப்புச் சட்டையும் போடமாட்டேன்.என்னுடைய நடவடிக்கைகளால் கழகம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று கருதுபவன். என்னுடைய போராட்டங்களை நான் தனிப்பட்ட முறையில் எனக்கு நானே பொறுப் பாக்கிக் கொண்டுதான் நடத்துவேன். சுருக்கமாகச் சொல்கிறேன். பெரியாரின் பிள்ளையார் உடைப்புப் போராட்டத்துக்கு என்ன காரணம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் விபூதி வீர முத்து என்பவன், பெரியார் படத்தை...

பெரியாரிய போராளி ஆசிட் தியாகராஜன் முடிவெய்தினார்

பெரியாரிய போராளி ஆசிட் தியாகராஜன் முடிவெய்தினார்

பெரியாரிய போராளி ஆசிட் தியாகராஜன் 94ஆம் வயதில் பிப்.26, 2020 அன்று தஞ்சையில் அவரது இல்லத்தில் முடிவெய்தினார். இயக்கத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் வெளிச்சத்துக்கு வராமல் செயல்பட்ட தன்மானப் போராளி. பெரியாரை இழித்து பழித்துப் பேசியவர்களை ‘பகத்சிங்காக’ மாறி தண்டனை வழங்கியவர். 1957ஆம் ஆண்டு பெரியார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அரசு வழக்கறிஞரான சீனிவாச்சாரி என்ற பார்ப்பனர், பெரியாரை ‘ராமசாமி நாய்க்கர்’ என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டதைக் கேட்டு ஆத்திர மடைந்து, அவர் மீது ‘ஆசிட்’ வீசியதாக கைது செய்யப்பட்டவர். வன்முறைகளிலும் பழிவாங்குதலிலும் பெரியார் இயக்கத்துக்கு உடன்பாடு இல்லை என்றாலும், இயக்கத்தோடு தொடர்புபடுத்திக் கொள்ளாமல் பெரியார் உணர்வாளர்களாகப் பல போராளிகள் இயக்கத்துக்கு வெளியே செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ‘ஆசிட்’ தியாகராஜன். செய்தி அறிந்த நாகை மாவட்ட கழகத் தோழர்கள் ஆசிட் தியாகராஜனுக்கு வீரவணக்கம் செலுத்தினர். தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன், தஞ்சை மாவட்ட அமைப்பாளர்  பேராவூரணி திருவேங்கடம்,...

குடியுரிமையைப் பறிக்கும் கணக்கெடுப்புகளை புறக்கணிப்போம்!

குடியுரிமையைப் பறிக்கும் கணக்கெடுப்புகளை புறக்கணிப்போம்!

ரேஷன் கார்டு, ஓட்டுப் போட அட்டை – ஆதார், கார் ஓட்ட உரிமம் – இதுதான் நமக்குத் தெரிந்த நம்மிடம் உள்ள அடையாள அட்டைகள். ஆனால், டில்லியில் மோடி ஆட்சிக்கு இந்த அடையாள அட்டைகள் போதாதாம்; புதுப்புது அடையாளங்களைக் கேட்கிறது. அது என்ன அடையாளம் தெரியுமா? நாம் இந்த நாட்டின் குடிமக்களாக – அதாவது இந்தியாவைச் சார்ந்தவர்கள்தான் என்பதை நாமே நிரூபிக்க வேண்டுமாம்; அப்போதுதான் இந்த நாட்டில் இருக்க முடியுமாம்; இல்லாவிட்டால் நாம் நாடற்ற அனாதைகளாம்! நாம் – இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை நிரூபிக்க புதிய கணக்கெடுப்பு நடத்தப் போகிறார்கள். இது எப்போதும் எடுக்கப்படும் ‘சென்சஸ்’ – அதாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அல்ல. அதில் நாம் சொல்வதைக் கேட்டு எழுதிக் கொண்டு போய் விடுவார்கள். இப்போது எடுக்கப்படும் கணக்கு என்பது வேறு; அது என்ன புது கணக்கெடுப்பு? அதற்குப் பெயர் ‘தேசிய மக்கள் தொகைப் பதிவேடு’. இதற்கு நாம்...

மயிலைப் பகுதியில் மனிதச் சங்கிலி குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள்

மயிலைப் பகுதியில் மனிதச் சங்கிலி குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள்

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராகவும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டங்களை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு போராட்டக் களமாக மாறி நிற்கிறது. சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியிலும் மக்கள் 24 மணி நேரமும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாநாடுகள், ஆர்ப்பாட் டங்கள், கருத்தரங்குகள், மனித சங்கிலி, கையெழுத்து இயக்கங்கள் என்று தமிழகமே கொந்தளித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு அதை எதிர்த்துப் போராடியவர்கள் மீது பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்களில் கட்சிகளை கொடூரமாக ஒடுக்கின. அசாமில் 6 பேரும், உ.பி.யில் 19 பேரும், கருநாடகாவில் 2 பேரும் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார்கள். டெல்லியில் சங்கிகள் வெளி மாநிலத்திலிருந்து வன்முறையாளர்களை இறக்குமதி செய்து இஸ்லாமியர்கள் மீது நடத்திய கொலை வெறியாட்டத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்து விட்டனர். காஷ்மீரில் 370ஆவது பிரிவை நீக்கி, அயோத்தியில் மசூதியை இடித்த இடத்தில் ‘ராமன்’ கோயிலைக் கட்ட நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற ஆணவத்தில் குடியுரிமை...

உலகத் தாய்மொழி நாள் – ஈரோடு பொதுக்கூட்டம்

உலகத் தாய்மொழி நாள் – ஈரோடு பொதுக்கூட்டம்

21.02.2020 அன்று உலகத் தாய் மொழி நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு, வடக்கு மற்றும் நாமக்கல் மாவட்ட கழகங்கள் ஒருங்கிணைப் பில் 23.02.2020 அன்று  ஈரோடு திருநகர் காலனி பகுதியில் மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது, நிகழ்வின் தொடக்கத்தில் தோழர் சித்திக், தமுமுக மாவட்டத் தலைவர் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ச்சி யாக இணைய தள பொறுப்பாளர் விஜய்குமார், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்  முத்து பாண்டி குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சிற்றுரை ஆற்றினர். அடுத்ததாக ‘நாடு எங்கே போய்க் கொண்டுள்ளது‘ என்ற தலைப்பில் புதுகை பூபாளம் குழுவினர் பல்வேறு பகுத்தறிவு கருத்துக்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கருத்துக்களையும் காண்பவர் கேட்பவர் மகிழ்ந்து பின் சிந்திக்கும் வண்ணம் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக பாடல், இசையோடு கலை நிகழ்ச்சி நடத்தினர். மக்கள் அனை வரும் ஆரவாரமிட்டு, கைத்தட்டி உற் சாகப்படுத்தி மகிழ்ந்து செவிமடுத்தனர் கழகத் தலைவர்...

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான – மக்கள் திரள் போராட்டத்துக்கு கழகம் ஆதரவு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான – மக்கள் திரள் போராட்டத்துக்கு கழகம் ஆதரவு

டெல்லியின் ஷாயின்பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டம் – குடியுரிமை தேசியப் பதிவேடு – குடியுரிமை மக்கள் தொகைப் பதிவு சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதேபோல் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் கண்ணன் ரவுண்டானா பகுதியில் 10 நாட்களாக இரவு பகலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வருகிறார்கள். பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த பொறுப் பாளர்கள் ஆதரவு தெரிவித்து பேசி வருகிறார்கள். ஆண்களைவிட இஸ்லாமிய பெண்கள் பெருமளவில் பங்கேற்பது இந்தப் போராட்டத்தின் தனிச் சிறப்பாகும். காவல்துறை அமைதியாகப் போராடிய மக்கள் மீது திடீரென தடியடி நடத்தி வன்முறையால் போராட்டத்தைக் கலைக்க முயற்சித்தது. அதற்குப் பிறகுதான் போராட்டம் குறித்த செய்தியை ஊடகங்களே வெளியிடத் தொடங்கின. தடியடிக்குப் பிறகு போராட்டம் தமிழ்நாடு முழுதும் மேலும் விரிவடைந்தது. வண்ணாரப்பேட்டை போராட்டக் களம் மேலும் சூடு பிடிக்கத் தொடங்கியது. போராட்டத்தைத் தடை செய்ய ‘சங்கிகள்’ நீதிமன்றத்தை அணுகினர். போராடும் உரிமையை...

கழகத் தலைமை நிலையத்தில் ‘மாதவி’ குறும்படம் திரையிட்டு – விவாதம்

கழகத் தலைமை நிலையத்தில் ‘மாதவி’ குறும்படம் திரையிட்டு – விவாதம்

திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை அலுவல கத்தில் 22.02.2020 அன்று மாலை 5:30 மணியளவில் ‘மாதவி’ குறும்படம் திரையிடப்பட்டது.  தென் சென்னை மாவட்ட செய லாளர் உமாபதி வர வேற்புரை யாற்றி னார். தொடர்ந்து படக் குழுவினர் அறிமுகம் நடைபெற்றது. அதன்பின் கலந்துரையாடல் தொடங்கியது. குறும்படத்தைப் பற்றி ஆழமான விவாதங்களை ஒவ்வொருவரின் பார்வை யிலும் கலந்து கொண்ட தோழர்கள் கேள்விகள் எழுப்பியும், பாராட்டுக்களைத் தெரிவித்தும் குறும்படத்தைப் பற்றிய கருத்துக்களை பரிமாறினர். சிறப்பு விருந்தினர்களான, ஊடகவியலாளர் ஜீவசகாப்தன், மனித உரிமை செயல்பாட்டாளர் தேவநேயன், நக்கீரன் வலைதளப் பொறுப்பாளர் பிலிப்ஸ், மனிதி செல்வி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் ஆசிரியர் சிவகாமி, பேராசிரியர் சரசுவதி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தோழர்களின் கருத்து பரிமாற்றங்களுக்கு இடையில் சிறப்புரையாற்றினர். விரட்டு கலை பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். குறும்படம் திரையிடல், திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் விரட்டு கலை பண்பாட்டு...

7 தமிழர் விடுதலை: மாநில அரசு அழுத்தம் தராதது ஏன்? – நீதிபதி  து. அரிபரந்தாமன்

7 தமிழர் விடுதலை: மாநில அரசு அழுத்தம் தராதது ஏன்? – நீதிபதி து. அரிபரந்தாமன்

தங்கள் தீர்மானத்தை உதாசீனம் செய்யும் ஆளுநருக்கு எந்த அழுத்தமும் தர மாநில அரசும் முன்வரவில்லை. உள்ளபடியே அமைச்சரவையின் தீர்மானத்தின்படி ஆளுநர் செயல்படத் தவறியதைப் பற்றி தமிழக அரசு மக்களிடம் பேச வேண்டும். நீதி மன்றத்திலும் தமிழக அரசு வழக்குத் தொடுக்கலாம். 7 தமிழர் விடுதலைக்கு தமிழக அமைச்சரவை அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் நீண்ட காலம் கிடப்பில் போட்டு வைத்திருக்க முடியாது என்று கருத்து கூறிய உச்சநீதிமன்றம், இது குறித்து ஆளுநரின் கருத்து என்ன என்பதைக் கேட்டு நீதி மன்றத்துக்கு அறிக்கைத் தர உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி து. அரிபரந்தாமன், இது குறித்து எழுதி யுள்ள கட்டுரை. அரசமைப்புச் சட்டக் கூறு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தின்படி, தமிழ்நாடு அரசின் அமைச்சரவை செப்டம்பர் 9, 2018 அன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 29 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் 7 தமிழர் களை விடுதலைசெய்வது எனத்...

திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டம்: கொளத்தூர் மணி பங்கேற்பு

திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டம்: கொளத்தூர் மணி பங்கேற்பு

NPR-NRC-CAA -க்கு எதிரான தொடர் மக்கள் தர்ணா போராட் டத்தில் 22.02.2020 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று சிறப்புரை யாற்றினார். திருப்பூர் இளைஞர்களின் கூட்டமைப்பு, குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் திருப்பூர் காங்கேயம் ரோடு CTC டிப்போ பின்புறம் உள்ள அறிவொளி சாலையில் பாஜக மோடிஅரசால் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், NRC NPR-ஐயும் திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து நடந்து வரும் தொடர் மக்கள் தர்ணா போராட்டத்தின் 7ஆவது நாளான 21.02.202 அன்று மாலை 6.00 மணிக்கு கழகத் தலைவர் CAA – NRC- NRP இன் அபாயம் குறித்து சிறப்புரையாற்றினார். இப்போராட்டத்தில் ஆயிரக் கணக்கான இசுலாமிய சகோதரர்களும், சகோதரிகளும், குழந்தைகளுடன் பங்கேற்று போராடி வருகிறார்கள். கழகத் தலைவருடன் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத்த லைவர் முகில்ராசு, இணைய தள பொறுப்பாளர் விஜய குமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக நிர்வாகிகள் அகிலன், தனபால்,...

லிங்காயத்து மடத்துக்கு இஸ்லாமியர் தலைவரானார்

லிங்காயத்து மடத்துக்கு இஸ்லாமியர் தலைவரானார்

முஸ்லீம்களை அன்னியர்களாக்கி வெறுப்பு அரசியலை ஒவ்வொரு நாளும் சங்கிகள் பார்ப்பனர்கள் அரங்கேற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். இந்தச் சூழலில் கருநாடகாவில் ‘லிங்காயத்து’ மடம் ஒரு இளம் இஸ்லாமியரை தனது தலைவராக்கியுள்ளது. லிங்காயத்து என்ற பிரிவை 12ஆம் நூற்றாண்டில் உருவாக்கியவர் பசவா என்று அழைக்கப்படும் பசவண்ணா, மிகச் சிறந்த கவிஞர்; தத்துவவாதி; பார்ப்பனியத்தை சுட்டெரிக்கும் கவிதைகளால் சாடியவர். அவர் உருவாக்கிய மார்க்கத்தில் உறுப்பினர்களானவர்களுக்கு ஜாதி அடையாளம் கிடையாது. ‘இந்து’ என்ற அடையாளமும் கிடையாது. பசவண்ணாவின் ஜாதி எதிர்ப்பு முற்போக்கு தத்துவத்தை ஏற்றுக் கொண்ட எந்த மதத்தவரும் தலைவராகலாம். இப்போது பசவண்ணா தத்துவத்தை ஆழமாகப் படித்து அதை ஏற்றுக் கொண்ட ஹரியஃப்முல்லா என்ற இஸ்லாமிய இளைஞர், மடத்தின் தலைவ ராகியுள்ளார். பசவண்ணா உள்ளூர் மன்னரின் அரசவையில் நிதி மேலாண்மை செய்யும் உயர் அதிகாரப் பதவியில் இருந்தவர். அரசருக்கு பசவண்ணாவின் சீர்திருத்தக் கருத்துகளில் உடன்பாடு இல்லை. ஒரு முறை தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞனுக்கும், பார்ப்பனப் பெண்ணுக்குமிடையே பசவண்ணா ஜாதி...

27 சதவீத இடஒதுக்கீட்டை ஒழிக்கும் ஆபத்து

27 சதவீத இடஒதுக்கீட்டை ஒழிக்கும் ஆபத்து

‘உயர்ஜாதி ஏழைகள்’ என்ற பிரிவுக்கு 10 சதவித இடஒதுக்கீடு செய்த பார்ப்பன பா.ஜ.க. ஆடசி இப்போது ‘உயர்ஜாதி’ ஏழைகளுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் வயது வரம்பு சலுகைகளை வழங்க ஆலோசித்து வருகிறதாம். உரிய விண்ணப்பதாரர்கள் இல்லாத பிரிவினருக்குத்தான் வயது வரம்பு சலுகை தேவைப்படுகிறது. ஆனால் ஆதிக்கவாதிகளாக பார்ப்பன உயர் ஜாதியினருக்கு வயது வரம்பு சலுகைகளை வழங்கி ‘கட்ஆப் மதிப்பெண்’ பட்டியல் இனப் பிரிவினரை விட குறைந்து இருந்தாலும், கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க கதவு திறந்து விடப் போகிறார்கள். அதேபோல் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் மத்திய அரசுப் பதவிகளில் பாதியளவுகூட இன்னும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் பெற்றோர்  அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்கள் மாத வருமானத்தை கிரிமிலேயர் வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறார்களாம். அரசு ஊழியர், பொதுத் துறை ஊழியர் மாத வருமானம், விவசாய வருமானம் 1993ஆம் ஆண்டிலிருந்து ‘கிரிமிலேயர்’ பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இனி தாய், தந்தை...

குடியுரிமைச் சட்டங்களால் ஆபத்துகள் இல்லையா?

குடியுரிமைச் சட்டங்களால் ஆபத்துகள் இல்லையா?

குடியுரிமைச் சட்டங்களைக் கொண்டு வருவதன் நோக்கத்தை சங்கிகளே இப்போது வெளிப்படையாகப் பேசத் தொடங்கி விட்டார்கள். கிரிராஜ் சிங் என்ற மத்திய அமைச்சர், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பீகாரின் வடகிழக்குப் பகுதியில் பரப்புரை செய்தபோது, “1947க்கு முன்பு ஜின்னா பாகிஸ்தான் நாடு கோரியபோதே இங்கிருந்து முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கும் அங்குள்ள இந்துக்களை இந்தியாவுக்கும் அனுப்பி வைத்திருந்தால் இப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வர வேண்டிய தேவையே இருந்திருக்காது” என்று பேசியிருக்கிறார். இதற்கு பா.ஜ.க. அமைச்சரவையிலேயே இடம் பெற்றுள்ள ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிரங் பஸ்வான் (பஸ்வானின் மகன்), பீகாரில் பா.ஜ.க. கூட்டணி கட்சியான நிதிஷ்குமார், கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ள இந்துஸ்தானி சுவான் மோட்சா (மதச் சார்பின்மை) கட்சியின் தலைவர் கண்டனம் தெவித்திருப்பதோடு, கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் நோக்கமே இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்குவது தான் என்ற...

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய குடியுரிமை-மக்கள் பதிவேடுகள் அனைத்து தரப்பினருக்கும் ஆபத்தானவை

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய குடியுரிமை-மக்கள் பதிவேடுகள் அனைத்து தரப்பினருக்கும் ஆபத்தானவை

இந்த தேசிய மக்கள் பதிவேடும், இந்தியக் குடியுரிமைப் பதிவேடும் இஸ்லாமியருக்கு மட்டும் எதிரானதா? இல்லை, அனைத்துத் தரப்பினருக்கும் எதிரானது. தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பிரிவினரையும் பாதிக்கும்; எளிய குடிமக்கள் தலையில் தங்களை நிரூபித்துக் கொள்ளும் சுமையை அழுத்துகிறது மத்திய அரசு என்றார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பிப். 17, 2020 அன்று பேராவூரணியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பாதிப்புகளை எனக்கு முன்னர் உரையாற்றிய பலரும்  விளக்கி யிருக்கிறார்கள். குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் விலக்கி, குறிப்பிட்ட நாடுகளை உலகின் கொடூரமான நாடுகள் என்பதாக அடையாளப்படுத்துகிற ஒரு சட்டம்; அதிலும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவர்களுக்கு மட்டும் – 2014க்குப் பின் அந்த நாடுகளெல்லாம் எந்த கொடுமைகளையும் செய்வதில்லை; 2014உடன் நிறுத்திவிட்டார்கள் என்பதைப்போல  -–இந்த சட்டத்தை ஏன் கொண்டு வந்தார்கள்...