கறுப்பர் கூட்டம் மீதான அடக்குமுறை கருத்துரிமைக்கு எதிரானது: ‘காலச் சுவடு’ கண்டனம்
கறுப்பர் கூட்டம் மீதான ஒடுக்கு முறைகள் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று ‘காலச் சுவடு’ மாத இதழ் (ஆகஸ்ட்) எழுதிய தலையங்கம். கறுப்பர் கூட்டம் யூட்டியூப்’ இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துகளை வெளி யிட்டதாகவும் கந்தசஷ்டிக் கவசத்தின் வரிகளைத் திரித்துக் கூறியதாகவும் இந்து அமைப்புகள் சிலவும் பாஜகவின் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பால் கனகராஜும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மத்திய குற்றப் புலனாய்வு சைபர் க்ரைம் போலீசார் அய்ந்து பிரிவுகளின் கீழ் கறுப்பர் கூட்டம் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதன் அலுவலகமும், ஸ்டுடியோவும் முடக்கப்பட்டுள்ளன. செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். நிகழ்ச்சியை வழங்கிய நாத்திகன் என்ற சுரேந்தரும் சரண் அடைந்திருக்கிறார். கறுப்பர் கூட்டம் அலைவரிசையின் அனைத்துக் காணொளிகளும் தற்போது நீக்கப்பட்டிருக்கின்றன. கறுப்பர் கூட்டம் மீது தொடுக்கப் பட்டுள்ள புகார்களைக் கருத்துச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் ஆகிய வற்றை முடக்கும் நோக்காகவே கருத வேண்டியிருக்கிறது....