பெரியார் பெயரைக் கேட்டாலே மோடியும், அமித் ஷாவும் அலறுவது ஏன்? (3) – பேராசிரியர் ஜெயராமன்
(25.01.2024 இதழில் வெளியான உரையின் தொடர்ச்சி) இந்தியா விடுதலை அடையும் நேரத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மனுஸ்மிருதியை அரசியல் சட்டமாக்க வேண்டும் என்று கேட்டார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மிகப்பெரிய தலைவர்களில் ஒருவராக போற்றப்படுகிற பாலகங்காதர திலகர் அடிப்படையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனர் பிரிவைச் சேர்ந்தவர். மராட்டியத்தில் சிவாஜி மற்றும் அவரது வகையறாக்கள் சத்ரபதிகள். பிரதமருக்கு பேஷ்வாக்கள் என்று பெயர். மன்னர்கள் குடித்துவிட்டு நடனமாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஆட்சியதிகாரத்தை சித்பவன் பார்ப்பனர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அவர்களுக்கு கீழே தான் கெய்க்வாட், பான்சிலேவ், சிந்தியா, கோல்கார் உள்ளிட்ட மராட்டியப் பகுதித் தலைவர்கள் இருப்பார்கள். பின்னர் ஆங்கிலேயர்களுடன் போர் புரிந்து அந்த மராட்டிய பேஷ்வாக்களை தோற்கடித்துதான் மராட்டியப் பகுதிகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்ட சித்பவன் பார்ப்பனர்கள், வெளியேறும்போது இந்த நாட்டை எங்களிடம் (சித்பவன் பார்ப்பனர்களிடம்) தந்துவிட்டு செல்லுங்கள் என்றனர்....
