1954இல் ஆச்சாரியார் கொண்டு வந்த “இல்லம் தேடிக் கல்வி”
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி இழப்பை சரி செய்வதற்காக தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஒரு புதுமையான திட்டம் தான் இல்லம் தேடி கல்வித் திட்டம். கடந்த ஓராண்டு காலமாக இத்திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்று மாநில திட்டக் குழுவின் மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது, இந்த மதிப்பீட்டு அறிக்கையை மாநில திட்ட குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் அவர்கள் தமிழ்நாடு முதல்வர் அவர்களிடம் அளித்திருக்கிறார். அதில் இத்திட்டம் பற்றி ஆய்வுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. 6 மாவட்டங்களில் 362 பள்ளிகள், 679 தன்னார்வலர்கள், 362 தலைமையாசிரியர்கள், 362 ஆசிரியர்கள், 724 பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் கூறியிருக்கிற சில முக்கிய பரிந்துரைகள் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் எளிய கற்றல் முறைகள் மாணவர்களுடன் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை குறிப்பிட்டிருக்கிறது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிற இந்த...
