Category: பெரியார் முழக்கம்

மத்திய அமைச்சகப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு பட்டை நாமம்!

மத்திய அமைச்சகப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு பட்டை நாமம்!

மத்திய அமைச்சரவையில் அமைச்சக துறைகள் – 42. இதில் தலைமை நிர்வாகம் (ஏ பிரிவு) கண்காணிப்பு (பிரிவு பி) திறன் மிக்க தொழிலாளர்கள் (Workers Skilled – பிரிவு சி) திறன் பெறாத தொழிலாளர்கள் (Workers Unskilled). இவர்களில், பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை – 22.62 சதவீதம் மட்டுமே. பட்டியல் பிரிவினர் – 17.38 சதவீதமே. பழங்குடிப் பிரிவினர் – 10.18 சதவீதமே. 5 மத்திய அமைச்சகங்களில் ‘ஏ’ பிரிவில் ஒரு பிற்படுத்தப்பட் டோர்கூட இல்லை – 0. 7 அமைச்சகங்களில் ‘பி’ பிரிவு அதிகாரிகளில் ஒரு பிற்படுத்தப்பட்டோர்கூட இல்லை – 0. (இது 31.3.2022 நிலவரம்) ஆதாரம் :      Department of Public Center Prises Survey  – 2021. 22 தகவல் :        ஜி. கருணாநிதி (செயலர் – அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சம்மேளனம்) பிற்படுத்தப்பட்டோருக்காக போலிக் கண்ணீர் வடிக்கும் பா.ஜ.க. சங்கிகளே – இதற்கு என்ன...

ஆர்.எஸ். பாரதிக்கு பதிலடி ‘ராசி’ மீது எனக்கு நம்பிக்கை இல்லை – உதயநிதி ஸ்டாலின்

ஆர்.எஸ். பாரதிக்கு பதிலடி ‘ராசி’ மீது எனக்கு நம்பிக்கை இல்லை – உதயநிதி ஸ்டாலின்

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எனக்கு ராசி மீது நம்பிக்கை இல்லை; உழைப்பின் மீது தான் நம்பிக்கை” என்று கூறினார். முன்னதாகப் பேசிய தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “2019ஆம் ஆண்டிலிருந்து கடந்த 5 தேர்தல்களாக நான் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் வெற்றி கிடைத்து வருகிறது. அதற்கான ‘ராசி’ என்னிடம் இருக்கிறது” என்றார். இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி, “எனக்கு ராசி மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது. அண்ணன் ஆர்.எஸ். பாரதிக்கு நம்பிக்கை இருக்கும் என்றால் அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். வெற்றிகளுக்கு எல்லாம் காரணம் தலைவர், கழகப் பொறுப்பாளர்களின் கடும் உழைப்பு; ராசி அல்ல” என்று மேடையில் பதிலடி தந்தார் உதயநிதி. பெரியார் முழக்கம் 30032023 இதழ்

“இது தமிழ்நாடு”  சனாதனத்துக்கு சாவுமணி அடிக்கும் பெண்ணுரிமைத் திட்டங்கள்

“இது தமிழ்நாடு” சனாதனத்துக்கு சாவுமணி அடிக்கும் பெண்ணுரிமைத் திட்டங்கள்

உலகப் பொருளாதார மன்றத்தின் பாலினச் சமத்துவ இடைவெளியைக் குறைக்கும் 2022ஆம் ஆண்டறிக்கை பெண்களின் பொருளாதாரம், கல்வி, உடல் நலம் மற்றும் அரசியல் பங்கேற்புக் குறித்து ஆராய்கிறது. 145 நாடுகள் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் இடம் 136. பொருளாதாரப் பங்கேற்பில் 143ஆவது இடத்தில் கடைசியிலிருந்து மூன்று இடங்களுக்கு மேலே இருக்கிறது. பெண்கள் உடல்நலன் பேணுவதில் பெண்களுக்கு கடைசி இடம். இதுதான் சனாதனம் – மதவாதம் பேசும் பா.ஜ.க. ஆட்சியின் “சாதனை”. திராவிட ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில் மட்டும் நிலைமை முற்றிலும் வேறு. தேசிய அளவிலான மெக்கன்சே ஆய்வு (2015), பாலினச் சமத்துவத்தைப் பேணுவதில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டையும், கேரளாவையும் குறிப்பிடுகிறது. 32 சதவீதப் பெண்கள் தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்கின்றனர். இது அகில இந்திய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகம் – இதுதான் திராவிட மாடல். உயர்கல்வியில் பெண்கள் சேர்க்கை வீதம் 49 சதவீதம். அகில இந்திய அளவில் இது 25 சதவீதம்...

சென்னையில் இணையதளப் பிரிவு கருத்தரங்கம்

சென்னையில் இணையதளப் பிரிவு கருத்தரங்கம்

கழகத்தின் இணையதளப் பிரிவு கருத்தரங்கம் சென்னை மாவட்ட இணையதளப் பிரிவு பொறுப்பாளர் இரண்யா தலைமையில் 26.03.2023 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டுச் செய்திகளை முன்னெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. யூடியூபில் செயல்பட வேண்டிய அவசியம், யூடியூப் சேனல்களைத் தொடங்கி இயக்குவது குறித்த அடிப்படையான தகவல்கள், சமூக வலைத்தளமான டிவிட்டரில் செயல்பாடுகளை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கருத்தரங்கில் பேசப்பட்டது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்புகள், கட்சிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறுகளை முறியடிக்க, தோழர்கள் சமூக வலைதளங்களை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம் என்பது குறித்து சில முன்னணி யூடியூபர்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். இறுதியாக திருப்பூர் மகிழவன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 30032023 இதழ்

மாநில மாநாடு: களப்பணியில் பம்பரமாய் சுழலும் தோழர்கள்

மாநில மாநாடு: களப்பணியில் பம்பரமாய் சுழலும் தோழர்கள்

உதயநிதியுடன் சந்திப்பு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கழகத் தலைவர் கடந்த மார்ச் 26 மாலை சென்னை அன்பகத்தில் சந்தித்து, மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். கட்டாயம் வருவேன் என்று அமைச்சர் உறுதியளித்தார். தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் உடன் சென்றிருந்தனர். மாநாட்டுக்கான இரண்டு நாள் நிகழ்ச்சிகள் உறுதி செய்யப்பட்டுவிட்டன. கழகத் தலைவர், பொதுச் செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர், சென்னை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட தோழர்கள் கடந்த மூன்று நாள்களாக அமர்ந்து கலந்து பேசி நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது. பேச்சாளர்களிடம் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. மாநாட்டுத் தீர்மானங்கள் – மாநாட்டில் எடுக்கும் உறுதி மொழிகளை கழகத் தலைவர், பொதுச் செயலாளர் கலந்து பேசி இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர். ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே தோழர்கள் சுவரெழுத்து எழுதிக் கொண்டிருந்த போது முன்னாள் நகர கூட்டுறவு வங்கி இயக்குநரும், அ.இ.அ.தி.மு.க. பிரமுகருமான...

குக்கிராமங்களிலும் பேராதரவு

குக்கிராமங்களிலும் பேராதரவு

சின்னஞ்சிறு கிராமங்களிலும் மாநாட்டுக்கு மக்களிடம் பேராதரவு காணப்படுகிறது. கொளத்தூர் அருகே உள்ள உக்கம் பருத்திக்காடு எனும் கிராமத்தில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்திய வசூலில் மக்கள் அளித்த தொகை 1 இலட்சத்து 500 ரூபாய். தாரமங்கலத்தில் 21ஆம் தேதி மக்கள் அளித்த நன்கொடை ரூ.52,100/- பெரியார் முழக்கம் 23032023 இதழ்

திருப்பூரில் மகளிர் தின விழா

திருப்பூரில் மகளிர் தின விழா

திருப்பூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 8.3.2023 புதன்கிழமை மாலை 6 மணியளவில் மகளிர் தின விழா திருப்பூர் அம்மாபாளையம் பெரியார் படிப்பகத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்விற்கு சுசிலா அவர்கள் தலைமை ஏற்று பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி முன்னிலை வகித்தார். நஜ்முன்னிசா வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து தோழர்கள் சங்கீதா, வீரலட்சுமி, ஷோபனா ராணி, சகுந்தலா, காயத்ரி ஆகியோர் “பெண்களின் உரிமைகள் பற்றியும் பெரியாரின் பெண் விடுதலை கொள்கைகள்” பற்றியும் கருத்துரை யாற்றினர். நிறைவாக சங்கவி நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் முத்துலட்சுமி, கௌசல்யா, மனிஷா, திவ்யா, ரூபா, விஜி, காளியம்மாள் மற்றும் பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, வெற்றிமாறன், வெற்றிகொண்டான், ரித்திசாய், ஃபெர்லின் சோபியா, ஷெர்லின் மரியா, மெர்சி, தழல் சிறகன், இயல் ஆழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கேக் வெட்டப்பட்டது.இரவு உணவாக மாட்டுக் கறி வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 23032023...

கள்ளக்குறிச்சியில் ‘பறிபோகும் மாநில உரிமைகள்’ விளக்கப் பொதுக்கூட்டம்

கள்ளக்குறிச்சியில் ‘பறிபோகும் மாநில உரிமைகள்’ விளக்கப் பொதுக்கூட்டம்

11-03-2023 அன்று மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நைனார்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது . கழக பரப்புரைச் செயலாளர் தூத்துகுடி பால்.பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள் விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூஆ.இளையரசன். கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார், கடலூர் மாவட்டச் செயலாளர் சிவக்குமார். கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் இராமர், மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை, மாவட்டத் துணைச் செயலாளர் வெற்றிவேல், நைனார்பாளையம் நடராஜ், பெரியார் வெங்கட், அசி.சின்னப்பா, தமிழர் பாவலர் கீர்த்தி, பெரியார் பிஞ்சு பாடகர் திராவிட மகிழன், நங்கவள்ளி கிருஷ்ணன், பிரபாகரன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டும் கருத்துரையாற்றியும் சிறப்பித்தார்கள். தோழர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு பேசப்பட்ட கருத்துகளை ஆர்வமுடன் கேட்டார்கள். பெரியார் முழக்கம் 23032023 இதழ்

கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மாநாடு தொடர்பாக சுவரெழுத்து, வசூல் பணிகள், மக்கள் காட்டும் ஆதரவு, அது தொடர்பான அமைப்புகளின் செயல்பாடுகளை உடனுக்குடன் கீழ்க்கண்ட எண்களுக்கு பகிரி (றுhயவளயயீயீ) வழியாக அனுப்பி வைக்க வேண்டுகிறோம். பரிமளராசன் – 78719 62024 விஷ்ணு – 89733 41377 பெரியார் முழக்கம் 23032023 இதழ்

மார்ட்டின் இல்ல மண விழா: கழக ஏட்டுக்கு நன்கொடை

மார்ட்டின் இல்ல மண விழா: கழக ஏட்டுக்கு நன்கொடை

மேட்டூர் கழகப் பொறுப்பாளர் மார்ட்டின் விஜயலட்சுமி இணையரின் மகள் அன்புக்கரசி – ஹமீது ஆகியோரின் ஜாதி – மத மறுப்பு மணவிழா மார்ச் 12, 2023 அன்று கள்ளக்குறிச்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.10,000/- நன்கொடை வழங்கப்பட் டுள்ளது. நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 23032023 இதழ்

நீதித் துறையில் சனாதனம்

நீதித் துறையில் சனாதனம்

112 ஆண்டுகால சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பட்டியல் இனத்தவர்கூட நீதிபதியாக வர முடியவில்லையே என்று கேட்டார் பெரியார். கலைஞர் ஆட்சி நடந்தது; வரதராசன் என்ற தலித் – தலைமை நீதிபதி யானார். பிறகு உச்சநீதிமன்றம் வரை சென்றார். இப்போது நீதித்துறையில் நிலை என்ன? ட           நீதித் துறையில் இடஒதுக்கீடுகள் இல்லை; கே.ஆர். நாராயணன், குடியரசுத் தலைவராக இருக்கும்போது மட்டும் இதற்காகக் குரல் கொடுத்தார். அது வெற்றி பெறவில்லை. தற்போது உச்சநீதி மன்றத்தில் தலித் நீதிபதிகள் 2 பேர் மட்டுமே. ட           மோடி ஆட்சி பரிந்துரைக்கும் நீதிபதிகளில் ஆர்.எஸ்.எஸ். உணர் வுள்ளவர்களே தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க. மகளிர் அணி பொறுப்பில் இருந்த ஒருவர் நீதிபதியாக்கப் பட்டுள்ளார். அவர் இந்தியாவில் வாழும் கிறிஸ்தவர்களை தேசவிரோதிகளாக்கி தனது முகநூலில் பதிவிட்டவர். ட           உச்சநீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி, 1989இல் தேர்வு செய்யப்பட்டார். இது வரை உச்சநீதிமன்றத்தில்...

அய்.அய்.டி.களில் ‘சனாதனம்’

அய்.அய்.டி.களில் ‘சனாதனம்’

அய்.அய்.டி., அய்.அய்.அய்.எம். பார்ப்பன கூடாரங்களாகி விட்டன. அங்கே சமஸ்கிருதம் வேதம் கற்பிக்கப்படுகிறது. அம்பேத்கர், பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்படுகிறது. பார்ப்பன வேத பிரச்சாரங்கள், உபதேசம் செய்கிறார்கள். மாட்டிறைச்சி சாப்பிட்டால் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். சைவம், அசைவம் என்று உணவுக் கூடத்தில் பாகுபாடு. தலித் மாணவர்கள், பேராசிரியர்களாக இருக்கும் பார்ப்பனர்கள் தரும் இடையூறுகள் அவமதிப்புகளால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ட மும்பை அய்.அய்.டி.யைச் சார்ந்த தலித் மாணவர் தர்ஷன் சோலங்கி விடுதியின் 7ஆவது மாடியிலிருந்து குதித்து அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். 2014இல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு என்ன நிலை? ட 2014 முதல் 2021 வரை அய்.அய்.டி., அய்.அய்.எம். மத்திய பல்கலைக் கழகங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மக்களவையில் இது அரசு தாக்கல் செய்த அறிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்ட தகவல். 122 பேரில் 24 மாணவர்கள் பட்டியல் இனப் பிரிவினர். 41 பேர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்....

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டிலேயே பெரியார் பட்டம் வந்து விட்டது!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டிலேயே பெரியார் பட்டம் வந்து விட்டது!

பிப்ரவரி 18, 2023 அன்று கோவை மாநகரக் கழகம் நடத்திய “1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாடும், தமிழ் நாட்டு அரசியலும் கருத்தரங்க”த்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. (சென்ற இதழ்த் தொடர்ச்சி) நம்முடைய நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழிலாளர்களின் முன்னேற்றமும் அவசியமான படியால் அவரவர்களின் வேலைக்குத் தகுந்தபடியும் அவர்கள் சுகமாக வாழ்வதற்கு வேண்டிய அளவு கூலி கொடுப்பதோடு ஒவ்வொரு தொழிலும் கிடைக்கும் இலாபத்தில் அந்தந்த தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான பங்கு கொடுக்க வேண்டும் என்றும் இம் மாநாடு தீர்மானிக்கிறது. இது மாநாட்டுத் தீர்மானம். இதை கடைசி வரைக்கும் பெரியார் வலி யுறுத்தி வந்தார். “நீங்கள் பணம் போட்டால் நான் என் உழைப்பைப் போடுகிறேன். நாம் இரண்டு பேரும் பங்காளிகள் என்று எப்போதாவது கம்யூனிஸ்டுகள் சொல்லி யிருக்கிறீர்களா” என்று பெரியார் கேட்டார். “அவர்களுக்கு இலாபத்தில் வரும் பங்கை பிரித்துக் கொடு” என்றார். பெரியாருக்கு பெரியார் என்று யார்...

புள்ளி விவரங்கள் கூறும் அதிர்ச்சித் தகவல் தேசிய மய வங்கிகளின் மேலாளர் பதவிகளில் 92 சதவீதம் பார்ப்பன உயர்ஜாதியினரே!

புள்ளி விவரங்கள் கூறும் அதிர்ச்சித் தகவல் தேசிய மய வங்கிகளின் மேலாளர் பதவிகளில் 92 சதவீதம் பார்ப்பன உயர்ஜாதியினரே!

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் உயர் பதவிகளில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இப்போதும் பார்ப்பனர்களும் ,மேல் சாதியினருமே, இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்த புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சி தருவதாக இருக்கின்றன. அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி. இந்திய வங்கிகளின் உயர்நிலைப் பதவிகளில் இருப்போர் சமூக ரீதியாக எந்தெந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலை கேட்டு பெற்று இருக்கிறார். அந்த தகவல்களின்படி தலைமை பொது மேலாளர், பொது மேலாளர் ஆகிய பதவிகளில் இருப்பவர்களில் 88ரூ முதல் 92ரூ வரை பார்ப்பன, உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். அதாவது பொதுப் பிரிவைச் சார்ந்தவர்கள். பொதுப் பிரிவைச் சார்ந்தவர்கள் என்றாலே அதில் பார்ப்பனர்களும், உயர் சாதிக்காரர்களும்தான் இருப்பார்கள். தமிழ்நாடு மட்டும் இதற்கு விதிவிலக்காகக் கூற முடியும். இந்தப் பிரிவில் ஓரளவு பிற்படுத்தப்பட் டோரும், தாழ்த்தப்பட்டோரும் வருகிறார்கள். ஏனைய மாநிலங்கள் அனைத்திலும் பொது போட்டி என்று சொல்லப்படுகிற பொதுப்பிரிவு உயர் சாதியினருக்காகவே தாரை வார்க்கப்பட்டு...

தலையங்கம் திராவிட மாடலைப் பறைசாற்றும் ‘பட்ஜெட்’

தலையங்கம் திராவிட மாடலைப் பறைசாற்றும் ‘பட்ஜெட்’

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் மார்ச் 20ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். நடப்பது திராவிட மாடல் ஆட்சி என்பதற்கு மேலும் ஒரு சிறப்பாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. இதில் குறை காணுவதற்கு ஏதும் இல்லாமல் ‘பூத’க் கண்ணாடியை வைத்து தேடிக் கொண் டிருக்கின்றன எதிர்கட்சிகள். மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குகின்ற திட்டத்தை அறிவித்தீர்களே செய்தீர்களா என்ற ஒரு கேள்வியைத்தான் திமுக ஆட்சியைப் பார்த்து இதுவரை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டே வந்தன. அவர்களை வாயடைத்து பதில் கூற முடியாத அளவிற்கு அந்தத் திட்டத்தை இப்போது அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. மகளிருக்கு உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தத் தொகை உண்மையில் விளிம்பு நிலை மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். வசதி படைத்த மாத வருவாய் வரக்கூடிய பெண்களுக்கு தேவையில்லை என்பதே நமது கருத்து....

சுவரெழுத்துப் பணியில்  உற்சாக மூட்டிய நிகழ்வு

சுவரெழுத்துப் பணியில் உற்சாக மூட்டிய நிகழ்வு

15.3.2023 மதியம் சூலூர் வழி பல்லடம் சாலையில் ஒரு சுவரில் சுவரெழுத்து விளம்பரம் எழுதிக் கொண்டிருக்கும் போது அதன் வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள்  சென்று கொண்டே இருந்தன. அப்படிச் சென்ற ஒரு இருசக்கர வாகனம் சுவரெழுத்து விளம்பரத்தைக் கடந்து சென்றது.  மீண்டும் திரும்பி வந்தது. நீங்கள் திக வா என்றார்; திவிக என்றோம். “ஓகே ஓகே நீங்கள் எங்கள் அனைத்து ஜாதி அர்ச்சகர் உரிமைக்காக தொடர்ந்து போராடறீங்க; துணை நிற்கறீங்க; கொஞ்ச நாளுக்கு முன்னால் கூட உங்க  சென்னை தோழர்கள் எங்கள் பொறுப்பாளர் அரங்கநாதனை மேடையில் ஏற்றி பாராட்டுனாங்க. ஆர்ப்பாட்டத்திற்கு கூப்பிட்டு பேச வைத்தீர்கள்; தொடர்ந்து எங்களுக்காக போராட்டங்களை நடத்துறீங்க. உங்கள் இதழில் எங்கள் உரிமைகளைப் பற்றி எழுதறீங்க; எனக்கும் இதழ் அனுப்புங்க; சந்தா தருகின்றேன்” பெருமிதத்துடன் கூறினார். “நான் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பயிற்சி முடித்தவன். இப்போ 2 அர்ச்சகரை நீக்கம் பண்ணியிருக்காங்க, கொடுமை. ஆனா அந்த வழக்கில் நாங்க...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ. இராசா, பாலபிரஜாபதி அடிகளார், வன்னிஅரசு, மதுக்கூர் ராமலிங்கம், மருத்துவர் எழிலன், சுந்தரவள்ளி உள்ளிட்ட பல்வேறு சிந்தனையாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.  ட   அண்ணா தீட்டிய ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ பொம்மலாட்டம்; புரட்சிகர கலை நிகழ்ச்சிகள்; திரிபுவாதங்களைத் தோலுரிக்கும் கருத்தரங்குகள் சேலம் மாநாடு எழுச்சி; மக்கள் பேராதரவு, களப்பணிகளில் தோழர்கள் உற்சாகம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ. இராசா, பாலபிரஜாபதி அடிகளார், வன்னிஅரசு, மதுக்கூர் ராமலிங்கம், மருத்துவர் எழிலன், சுந்தரவள்ளி உள்ளிட்ட பல்வேறு சிந்தனையாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்கள். ட அண்ணா தீட்டிய ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ பொம்மலாட்டம்; புரட்சிகர கலை நிகழ்ச்சிகள்; திரிபுவாதங்களைத் தோலுரிக்கும் கருத்தரங்குகள் சேலம் மாநாடு எழுச்சி; மக்கள் பேராதரவு, களப்பணிகளில் தோழர்கள் உற்சாகம்

சேலத்தில் ஏப். 29, 30 தேதிகளில் கழகம் நடத்தவிருக்கும் சனாதன சக்திகளே, தமிழகத்தில் நீங்கள் காலூன்ற முடியாது என்று எச்சரிக்கும் இளைஞர்கள் மாநாட்டுக்கு மக்களிடையே பேராதரவு கிடைத்து வருகிறது. ‘கருப்பு – சிவப்பு – நீலம்’ என்று பெரியார் – அம்பேத்கர் – மார்க்சிஸ்ட் சிந்தனையாளர்கள் இணைந்து சனாதன எதிர்ப்பில் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதை எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் மாநாடாக திராவிடர் விடுதலைக் கழகம் ஒழுங்கு செய்துள்ளது; இது காலத்தின் தேவை! மாநாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், வைகுண்டர் வழி வந்த பால பிராஜாபதி அடிகள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், சிந்தனையாளர்கள் பங்கேற்கிறார்கள். கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றுவோர் பெரும்பாலும் துடிப்பு மிக்க இளைய தலைமுறை. பேரறிஞர் அண்ணா எழுதி, அவரே காகப்பட்டர்...

நடிகர் ரஜினிகாந்துக்கு பதில்

நடிகர் ரஜினிகாந்துக்கு பதில்

ஒரு சொட்டு இரத்தத்தை மனிதரால் உருவாக்க முடியுமா? கடவுள் உடல் கட்டமைப்பை அப்படி உருவாக்கி இருக்கிறான். இதற்குப் பிறகும் சிலர் கடவுள் இல்லை என்று பிதற்றுவது சிரிப்பாக இருக்கிறது.                 – ரஜினிகாந்த் மனித இரத்தத்தை செயற்கையாக உருவாக்கும் ஆய்வுகள் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுவிட்டனர். செயற்கை இரத்தத்தை உருவாக்கி இரண்டு மனிதர்களுக்கு 5 முதல் 10 மில்லி மீட்டர் செலுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள். உலகில் அரிய வகை இரத்தத்தை உருவாக்கும் முயற்சியில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டார்கள். ரஜினி அவர்களே, நவீன அறிவியலுக்கு வாருங்கள்! பெரியார் முழக்கம் 16032023 இதழ்  

சேலத்தில் 50 இடங்களில் சுவரெழுத்து

சேலத்தில் 50 இடங்களில் சுவரெழுத்து

சேலத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சுவரெழுத்துகள் எழுதப்பட் டுள்ளன. கடை வீதி வசூல் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. தோழர்கள் உற்சாகமாக செயல்படுகிறார்கள். கோவை : சேலத்தில் ஏப்ரல் 29.30 ஆகிய தேதிகளில் கழகம் நடத்தும் “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டிற்கான துண்டறிக்கை மற்றும் நன்கொடை ரசீது புத்தகங்களை கோவை மாநகரக் கழகத்திற்கு மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி மாநிலப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் நேரில் வழங்கி மாநாட்டுப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகளை கூறினார்கள். உடன் மாநகர அமைப்பாளர் நிர்மல் குமார். அய்யப்பன். கிருஷ்ணன். ராஜாமணி ஆகியோர். 100 வயதையும் தாண்டி உற்சாகம் பெரியார் பெருந்தொண்டர் அய்யா தங்கவேல் (ஆத்தூர்) அவர்களுக்கு 100 வயதாகிறது. நன்கொடைக்காக வந்த   கருஞ்சட்டை தோழர்களைக் கண்டதும் அதே உற்சாகத்தோடு தனது கடையில் வெள்ளை சட்டையில் இருந்தவர் நான் பெரியாரின் தொண்டன் உங்களோடு கருப்புச் சட்டையுடன் தான் புகைப்படம் எடுத்துக் கொள்வேன்...

சேலம் மாநாடு, தோழர்கள் தீவிரம்

சேலம் மாநாடு, தோழர்கள் தீவிரம்

சேலம் ஆத்தூர் : திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு!” ஏப்ரல் மாதம் 29,30 ஆகிய தேதிகளில் சேலத்தில் நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி கடைவீதி வசூல் மற்றும் சந்தை வசூல் சேலம் கிழக்கு மாவட்டக் கழக சார்பாக 11.03.2023 சனி மதியம் 12 மணிக்கு ஆத்தூரில் மகேந்திரன் தலைமையில் தொடங்கியது. ஆத்தூர் தந்தை பெரியார் சிலை முன்பு இருந்து தொடங்கபட்ட நன்கொடை திரட்டும் பணி இரவு 9 மணி வரை நடைபெற்றது.  ஆத்தூரில் மொத்த நன்கொடை ரூ.8,200 பெறப்பட் டுள்ளது. கிருஷ்ணன், தங்கதுரை, பிரபாகரன், ஆத்தூர் மகேந்திரன், சிந்தாமனியூர் முருகேசன், ஆனந்தி, வெங்கடேஷ், ஆத்தூர் மணிகண்டன், ஆத்தூர் செங்கமலை ஆகியோர் வசூல் பணிகளை மேற்கொண்டனர். சென்னையிலிருந்து நான்கு பேருந்துகள் சேலம் மாநாட்டுக்கு சென்னையிலிருந்து 4 பேருந்துகளில் புறப்பட சென்னை மாவட்டக் கழகம் திட்டமிட்டுள்ளது. சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், மார்ச் 13, 2023 மாலை...

உணர்வுகளைப் பகிர்ந்த பெண்கள் சந்திப்பு

உணர்வுகளைப் பகிர்ந்த பெண்கள் சந்திப்பு

அன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் மகளிர் தின பெண்கள் சந்திப்பு நிகழ்வு, 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை சென்னை கழகத் தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் தொங்கி மாலை 5.30 வரை நடைபெற்றது. நிகழ்விற்கு தேன்மொழி தலைமை ஏற்று நடத்தினார். ஜெயந்தி வரவேற்புரை நிகழ்த்தினார். மதிவதனி அன்னை மணியம்மையார் குறித்து தொடக்கவுரை ஆற்றினார். குறளரசி மற்றும் ஆதித்யா ஆகிய இருவரும் திராவிட இயக்கத்தின் பெண் தலைவர்களான அன்னை நாகம்மையார், தோழர் கண்ணம்மாள், அன்னை சத்தியவாணிமுத்து, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், குஞ்சிதம் அம்மையார், டாக்டர் எஸ்.தருமாம்பாள் ஆகியோரது வாழ்க்கைக் குறிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். அடுத்த நிகழ்வாக தோழர்கள் பல்வேறு தலைப்புகளில் கருத்துரையாற்றினர். றடிஆஹசூ – உடலும், உளவியலும் – தேன்மொழி; பெண்களின் சுயமரியாதையை நிலைநாட்டும் திராவிட மாடல் (அன்றும்-இன்றும்) – ரம்யா; குடும்ப கௌரவத்தின் அடையாளம் பெண்கள் (உருட்டுகளும், புரட்டுகளும்) – அறிவுமதி; சட்டம் பேசாதே! டாக்டர் அம்பேத்கர் பெற்றுத்தந்த பெண்ணிய உரிமைகள் –...

சேலம் மாநில மாநாட்டுக்கு நிதி பங்களிப்பு வழங்கிய மாவட்டங்கள்

சேலம் மாநில மாநாட்டுக்கு நிதி பங்களிப்பு வழங்கிய மாவட்டங்கள்

ஈரோடு : ரூ.1,00,000 கோபி : ரூ.1,00,000 நாமக்கல் : ரூ.1,00,000 திருப்பூர்  : ரூ.50,000 தர்மபுரி : ரூ.50,000 கோவை : ரூ. 40,000 தஞ்சை மற்றும் திருச்சி : ரூ.50,000 மதுரை : ரூ. 25,000 மயிலாடுதுறை : ரூ. 25,000   பெரியார் முழக்கம் 25052023 இதழ்

“புரட்சிப் பெரியார் முழக்கம்” தோழர்களுக்கு வேண்டுகோள்

“புரட்சிப் பெரியார் முழக்கம்” தோழர்களுக்கு வேண்டுகோள்

“புரட்சிப் பெரியார் முழக்கம்” பொறுப்பாளராக கழகத் தோழர் அன்னூர் விஷ்ணு செயல்பட்டு வருகிறார். பெரியார் முழக்கம் தொடர்பாக தோழர்கள் கீழ்க்கண்ட அலைபேசி எண்ணுக்கு அவரைத் தொடர்புக் கொள்ளவும். அலைபேசி எண் : 8973341377 விடுதலை இராசேந்திரன் ஆசிரியர், புரட்சிப் பெரியார் முழக்கம் பெரியார் முழக்கம் 25052023 இதழ்

திலீபன் மீது கொலை வெறித் தாக்குதல் வேலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

திலீபன் மீது கொலை வெறித் தாக்குதல் வேலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

திலீபன் மீது காவலர்கள் முன்னிலையில் கொலை வெறித் தாக்குதல் நடத்திய ராமமூர்த்தி தலைமையிலான வன்முறை கும்பலை கைது செய்! திலீபன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறு! எனும் கோரிக்கைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையம் முன்பு 08.05.2023 திங்கள் காலை 10.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் பெரப்பேரி திலீபன், தன் கிராமத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு எதிராக ஊர் கட்டுப்பாடு போட்டதை எதிர்த்து போராடியதற்காகவும், தன் கிராமத்தில் பொது வழிப் பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான ஆணையைப் பெற்று வந்தார். இந்நிலையில்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை சைமன் ஆணையத்தை இந்தியாவில் வரவேற்றவர்கள் பெரியார், அம்பேத்கர் மட்டுமே!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை சைமன் ஆணையத்தை இந்தியாவில் வரவேற்றவர்கள் பெரியார், அம்பேத்கர் மட்டுமே!

செங்கல்பட்டு மாநாட்டுக்கு தனி தொடர்வண்டி விடப்பட்டது. தனி இரயில்வே நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடைசி நேரத்தில் இரயில்வே துறையின் முட்டுக்கட்டையால் நின்று போனது. ¨          சைமன் கமிஷன் அறிக்கைக்குப் பிறகு தான், ‘தீண்டப்படாத’ மக்களுக்கு தனித் தொகுதி, இரட்டை வாக்குரிமை கிடைத்தது. காந்தி அதை உண்ணாவிரத நாடகம் நடத்தி தடுத்து விட்டார். பிப்ரவரி 18, 2023 அன்று கோவை மாநகரக் கழகம் நடத்திய “1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாடும், தமிழ் நாட்டு அரசியலும் கருத்தரங்க”த்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. (சென்ற இதழ்த் தொடர்ச்சி) செங்கல்பட்டு சுயமரியாதை மாநாடு எப்படி நடந்தது என்பதற்கு குடிஅரசில் பல செய்திகளைப் பதிவு செய்கிறார் பெரியார். அந்த மாநாட்டில் அன்றைய முதலமைச்சராக இருந்த டாக்டர். சுப்பராயன் கலந்து கொள்கிறார். பிடி.இராசன் கொடியேற்றி உரையாற்றுவார். எம்.கே.ரெட்டி வரவேற்புக் குழு தலைவர், டாக்டர் சுப்பராயன் மாநாட்டை திறந்து வைப்பார். றுஞஹ...

சனாதனத்தின் கொடூர வரலாறு (2) கோயில் நுழைவு உரிமை சந்தித்தத் தடைகள்

சனாதனத்தின் கொடூர வரலாறு (2) கோயில் நுழைவு உரிமை சந்தித்தத் தடைகள்

பிரிட்டிஷ் ஆட்சி காலம் தொடங்கி சுதந்திர இந்தியாவில் சனாதனம் பேசி பார்ப்பனியம் எந்த ஒரு சிறு சமூக மாற்றத்தையும் தடுத்து வந்ததோடு நீதி மன்றங்களிலும் வழக்குத் தொடர்ந்தது. ஆண்டு வாரியாக சனாதனக் கொடுமைகள் அது தொடர்பான வழக்குகள் குறித்து ஒரு சுருக்கமான ஆண்டுகள் வழியான தொகுப்பு. மனோஜ் மிட்டல் எழுதி அண்மையில் வெளிவந்த மிகச்சிறந்த நூலான ஜாதியப் பெருமை (Caste Pride) நூலிலிருந்து: (சென்ற இதழ்த் தொடர்ச்சி) 1926 : மராட்டியப் பகுதிகளில் பிராமண அர்ச்சகர்கள் பரம்பரை அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்துக்கும் தங்களை அதிகாரபூர்வ அர்ச்சகர்களாக நியமித்துக் கொண்டனர். எந்த வைதீக சடங்குகளும் நடத்தும் உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்று உரிமை கோரினார்கள். வெளியில் இருந்து ஒரு அர்ச்சகர் சடங்கு நடத்தி கட்டணம் வாங்கியதை எதிர்த்து நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தனர். பம்பாய் உயர் நீதிமன்றம் புரோகித பார்ப்பனர்கள் பரம்பரை உரிமையை உறுதி செய்து தீர்ப்பளித்து விட்டது. வைதீக சடங்குகள்...

ஹிட்லர் வழியில் பாஜக

ஹிட்லர் வழியில் பாஜக

பாரதிய ஜனதா கட்சி ஒரு வகுப்புவாத கட்சி என்பதற்கு சான்றாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலம் அருவா மாவட்டத்தில் மவுரியா நகரசபைத் தலைவராக இருக்கும் யஷ்பால் பேனா, இவர் தனது மகள் ஒரு இஸ்லாமியரை காதலித்தார் என்பதை ஏற்றுக் கொண்டு இருவருக்கும் திருமணம் செய்வதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து இம்மாதம் 28ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது. குடும்ப நிகழ்ச்சியான  திருமணத்திற்கு அரசியல் கட்சியான பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்தது. உத்தரகாண்டில் இந்து அமைப்பினர் இந்தத் திருமணத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.  அதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாக தான் இருப்பதால் இந்தத் திருமணம் நடைபெறுவதை விரும்பவில்லை என்று கூறி தனது மகளின் திருமணத்தை ரத்து செய்து இருக்கிறார். பா.ஜ.க.வினர் அசைவம் சாப்பிடக் கூடாது; பா.ஜ.க.வினர் பிராமணனை வணங்க வேண்டும் என்றுகூட போராட்டம் நடத்தினாலும் வியப்பு இல்லை. திருமணம் என்பது தனிமனித உரிமையைச் சார்ந்தது.  இருவரும் காதலித்தார்கள்; இருவரும் திருமணம் செய்ய...

தலையங்கம் தோழர்களே, தயாராவீர்!

தலையங்கம் தோழர்களே, தயாராவீர்!

வைக்கம் போராட்டத்திற்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில் “வைக்கம் போர் முடியவில்லை” எனும் தலைப்பில் ஜாதித் தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுக்க திராவிடர் விடுதலைக் கழகம் முடிவு செய்து இருக்கிறது. தமிழ்நாட்டில் சாக்கடை மலகுழிகளை சுத்தம் செய்யும் ஆபத்தான இழிவு வேலைகளுக்கு மனிதர்களைப் பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. நச்சுக் காற்றில் சிக்கி பல தலித் தோழர்கள் உயிரிழக்கிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தி செயல்பட முன் வந்திருப்பதை நாம் பாராட்டி வரவேற்கிறோம். மனித கழிவுகளை மனிதர்கள் எடுப்பது சட்டப்படி தடை செய்யப்பட்ட நிலையில் இந்த அவலம் தமிழகத்தில் அதிகம் நடப்பதை முதல்வர் நேர்மையோடு ஒப்புக்கொண்டு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். முதல் கட்டமாக நகர பகுதிகளில் நவீன இயந்திரங்களை அடுத்த நான்கு மாத காலத்துக்குள் முழுமையாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இனிவரும் காலங்களில் மனிதர்கள் செய்யும்...

திராவிட இயக்கத்தின் இன்றைய திசை வழி விடுதலை இராசேந்திரன்

திராவிட இயக்கத்தின் இன்றைய திசை வழி விடுதலை இராசேந்திரன்

‘முரசொலி’ – முதல்வர் மு.க. ஸ்டாலின் 70ஆவது பிறந்த நாள் சிறப்பு மலருக்கு எழுதிய கட்டுரை. 1916இல் சென்னை மாகாணத்தில் திராவிடர் இயக்கம் முன்வைத்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற சமத்துவக் கோட்பாடு இன்று 100 ஆண்டுகள் கடந்து புதிய பரிணாமங்களைப் பெற்று வளர்ந்து வருகிறது. அன்றைக்கு பார்ப்பனப் பிடியில் சிக்கியிருந்த காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் மட்டும் திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, ராஜாஜி காலத்துக்குப் பிறகு சமூக நீதிக் குரலை ஒலித்து, திராவிட இயக்கப் பாதையில் நடைபோடும் சூழல் உருவானது. சனாதன தர்மத்தை என்றுமே மாற்ற முடியாது என்று வர்ணாஸ்ரமத்தை உயர்த்திப் பிடித்த சக்திகள், பல்வேறு தடைகள் எதிர்ப்புகளைக் கடந்தும் உருத்திரட்சிப் பெற்று, இப்போது ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டது. இதன் விளைவாக திராவிடம் – சனாதனம் என்ற முரண்பாடுகள் கூர்மையடைந்து நிற்கின்றன. புதிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய வரலாற்றுச் சூழலை உருவாக்கியுள்ளது. திராவிட இயக்கம்...

எழுச்சியுடன் நடந்த செயலவை

எழுச்சியுடன் நடந்த செயலவை

சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்டம் மே 21 காலை 10:30 மணியளவில் குகை ஜிபி கூடத்தில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் கோவிந்தராஜ் கடவுள் ஆத்மா மறுப்புகளைக் கூறத் தொடங்கியது. மாநகரச் செயலாளர் ஆனந்தி வரவேற்புரையாற்ற பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் செயலவை நோக்கம் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தீர்மானங்களை முன்மொழிந்தார் . 30 தோழர்கள் மாநாட்டின் வெற்றி, எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து கருத்துகளை முன் வைத்தனர். மாநாட்டின் வரவு செலவு கணக்குகளையும் அவையின் முன் வைத்தனர், புரட்சிப் பெரியார் முழக்கம் வரவு செலவுக் கணக்குகளை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் செயலவையில் முன் வைத்தார். 85 தோழர்கள் செயலவையில் பங்கேற்றனர். மதியம் அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. காலை 10:30 மணிக்கு தொடங்கிய செயலவை உணவு இடைவேளையைத் தொடர்ந்து மாலை 6 மணி வரை நீடித்தது....

அர்ச்சகர் சட்டம்: மதுரை நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

அர்ச்சகர் சட்டம்: மதுரை நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீரங்கம் குமார வயலூர் கோவிலில் அனைத்து சாதி அர்ச்சகர் சட்டத்தின்படி மூன்று அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் ஒருவர் பார்ப்பனர். ஏனைய இரண்டு பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களின் நியமனம் செல்லாது என்றும், இதற்கு முன்பு பணியில் இருந்த பார்ப்பனர்களுக்கே அர்ச்சகர் பணி கொடுக்கப்பட வேண்டும் என்றும், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்பைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு இவ்விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மார்ச் 9, 2023 மாலை 4 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் இரா. உமாபதி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் தொடக்கமாக கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, காஞ்சிபுரம் ரவிபாரதி உரையாற்றினார். பின், தோழர் நாத்திகன், இரண்யா, ப்ரீத்தி ஆகியோர் ‘தூங்குறியா நடிக்கிறியா ரங்கநாதா?’ பாடல்களைப் பாடினர். அனைத்து சாதியினர் அர்ச்சகர் பயிற்சி மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன், பணி...

மீண்டும் கருவறைத் தீண்டாமையை நிலைநாட்டியது, மதுரை உயர்நீதிமன்றம் வடநாட்டில் இல்லாத ஆகமம் தமிழ்நாட்டுக்கு ஏன்? ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் உரை

மீண்டும் கருவறைத் தீண்டாமையை நிலைநாட்டியது, மதுரை உயர்நீதிமன்றம் வடநாட்டில் இல்லாத ஆகமம் தமிழ்நாட்டுக்கு ஏன்? ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் உரை

ஆகமங்களைத் தடை செய்யக் கோரி – இனி ஆகம எரிப்புப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை வந்துவிட்டது என்று கூறிய தி.வி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ஆகம விதிகள் பார்ப்பனர்களால் மீறப்பட்டதைப் பட்டியலிட்டுக் காட்டினார். வயலூர் முருகன் கோயில் அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட இரண்டு பார்ப்பனரல்லாத அர்ச்சகர் நியமனத்தை செல்லாது என்று அறிவித்து விட்டது மதுரை உயர்நீதிமன்றக் கிளை. ஏற்கனவே 10 ஆண்டுகளாக எவ்வித வேத ஆகம தகுதித் தேர்வுகள் இல்லாமல் குல வழி அர்ச்சகர்களாக இருக்கும் இரண்டு பார்ப்பன அர்ச்சகர்கள் தொடர்ந்த வழக்கு, இந்த இருவரும் முறைப்படி அறநிலையத் துறை நியமனம் பெறாவிட்டாலும் அந்தக் கோயிலின் காமிகா ஆகமப்படி ஆதி சிவாச்சாரியார், ஆதி சைவர் குலத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குத் தான் அர்ச்சகர் தகுதி உண்டு என்று நீதிபதி ஜீ.ஆர். சாமிநாதன் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார். அறநிலையத் துறை நியமித்த மூன்றாவது அர்ச்சகர் பார்ப்பனர் என்பதால் அவரை எதிர்த்து...

வினா விடை

வினா விடை

பிரபாகரன் விரைவில் வெளியே வருவார்; அதற்கான ஆதாரங்கள் கிடைத்தப் பிறகு, வெளியிடுவோம்.  – பழ. நெடுமாறன் ஆதாரங்களே, இன்னும் கிடைக்கவில்லையா, அய்யா! காரைக்கால் அருகே ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட இந்து முன்னணி அலுவலகத்தை ஜடாய்புரீஸ்வரர் கோயில் நிர்வாகம் இடித்ததைக் கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம். – செய்தி இந்து முன்னணிக்கு சபாஷ். இப்படித்தான் இந்து கோயில் நிர்வாகத்தை எதிர்த்துப் போராட வேண்டும். இனி இந்து கடவுள் ஜடாய்புரீஸ்வரரையும் எதிர்த்துப் போராடுங்க. அப்பத்தான் நீங்கள் ‘இந்து முன்னணி’. நாடு முழுதும் பசுவதைத் தடைக்கு சட்டம் இயற்ற – புராணங்களை ஆதாரம் காட்டி அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தல். – செய்தி இப்போதெல்லாம் உயர்நீதிமன்றங்கள் அரசியல் சட்டங்களைப் புறக்கணித்து புராணங்கள் அடிப்படையிலே தீர்ப்புகள் வழங்குகின்றன. நீதிமன்றங்களின் பெயரை புராண இதிகாச பை  என்று மாற்றி விடலாம். ஆன்மீகம் இல்லை என்றால் தமிழ் இல்லை. – ஆளுநர் தமிழிசை ‘ஆன்மீகம்’ என்பதே தமிழ் இல்லை, மேடம்!...

சேலத்தில் கழகச் செயலவைக் கூடுகிறது!

சேலத்தில் கழகச் செயலவைக் கூடுகிறது!

சேலத்தில் எதிர்வரும் மே 21, 2023 காலை 10 மணியளவில் கழகச் செயலவைக் கூடுகிறது. பொருள் : மாநாடு பற்றிய ஆய்வு, எதிர்காலச் செயல் திட்டங்கள் மற்றும் மாநாடு வரவு செலவுகள் ஒப்படைத்தல். செயலவை உறுப்பினர்கள் தவறாது கலந்துக் கொள்ள வேண்டுகிறோம். இடம் : ஜி.பி. ஹால், 52ஊ/1, பென்சன் லைன் ரோடு, குகை ஆண்கள் உயர்நிலைப் பள்ளி அருகில், சேலம், கொளத்தூர் மணி, தலைவர் விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர் பெரியார் முழக்கம் 18052023 இதழ்  

சேலம் மாவட்டக் கலந்துரையாடல் : கழகத் தலைவர் தலைமையில் நடந்தது

சேலம் மாவட்டக் கலந்துரையாடல் : கழகத் தலைவர் தலைமையில் நடந்தது

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், 11.05.2023 வியாழன் காலை 11.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மேட்டூர் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் சேலத்தில் நடைபெற்ற இரண்டு நாள் மாநில மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் மாநாட்டு வரவு செலவு கணக்குகளை தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் ஆகியோர் மாநாடு குறித்தும், மாநாட்டிற்காக உழைத்த தோழர்களைப் பற்றியும், தோழர்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் இந்த மாநாடு சிறக்க உதவியாக இருந்தது என்று தமது உரையில் குறிப்பிட்டனர். அதன் பிறகு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த மாவட்ட அமைப்பாளர்கள், மாநகர, நகர, ஒன்றிய, கிளைக் கழக பொறுப்பாளர்களும், தோழர்களும், மாநாடு குறித்தும் மாநாட்டிற்காக தங்கள் பகுதியில் திரட்டிய நன்கொடை மற்றும் செலவு...

இளைஞர்களே, இதுதான் பார்ப்பனியம்! சனாதனத்தின் கொடூர வரலாறு

இளைஞர்களே, இதுதான் பார்ப்பனியம்! சனாதனத்தின் கொடூர வரலாறு

பிரிட்டிஷ் ஆட்சி காலம் தொடங்கி சுதந்திர இந்தியாவில் சனாதனம் பேசி பார்ப்பனியம் எந்த ஒரு சிறு சமூக மாற்றத்தையும் தடுத்து வந்ததோடு நீதி மன்றங்களிலும் வழக்குத் தொடர்ந்தது. ஆண்டு வாரியாக சனாதனக் கொடுமைகள் அது தொடர்பான வழக்குகள் குறித்து ஒரு சுருக்கமான ஆண்டுகள் வழியான தொகுப்பு. மனோஜ் மிட்டல் எழுதி அண்மையில் வெளிவந்த மிகச்சிறந்த நூலான ஜாதியப் பெருமை (ஊயளவந ஞசனைந) நூலிலிருந்து: 1795 :  உயர் ஜாதியினரிடம் நல்ல பெயர் வாங்கும் நோக்கத்தில் கிழக்கிந்திய கம்பெனி காசி பார்ப்பனர்களுக்கு மட்டும் தூக்கு தண்டனையிலிருந்து விதிவிலக்கு அளித்தது. 1816 : கீழ் ஜாதிக்காரர்கள் சிறு குற்றங்கள் செய்தாலும் அவர்களை ஆடு மாடுகள் அடைக்கும் பட்டிகளில் அடைத்து வைக்கும் தண்டனையைக் கிழக்கிந்திய கம்பெனி அறிமுகப்படுத்தியது. 1829 : உயர்ஜாதியினரின் கடும் எதிர்ப்பு களையும் மீறி வில்லியம் பென்ட்டிங் கணவன் இறந்த நெருப்பில் மனைவி தானாக விரும்பி வீழ்ந்தாலும் அல்லது கட்டாயப்படுத்தி நெருப்பில் தள்ளப்பட்டாலும்...

கொடைக்கானலில் ஆளுநருக்குக் கழகம் கருப்புக் கொடி

கொடைக்கானலில் ஆளுநருக்குக் கழகம் கருப்புக் கொடி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கொடைக்கானலுக்கு வருகை தந்ததை ஒட்டி அவருக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசுக்கு எதிராகச் செயல்படுவதையும், சட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதைக் கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டன. பின்னர் கழகத் தோழர்கள் மருதமூர்த்தி, பெரியார், மாக்சிம் கார்கி, ராஜா, கபாலி, ஆயுதன், வீரா, ஜீவா, துர்க்கைராஜ், சிவா, முருகன் உள்ளிட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுக்கப்பட்டனர். பெரியார் முழக்கம் 18052023 இதழ்

விடுதலை சிகப்பி மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்

விடுதலை சிகப்பி மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்

கவிஞர் விடுதலை சிகப்பி மீது சென்னை அபிராமபுரம் காவல்துறை பொய் வழக்கு ஒன்றை பதிவு செய்திருக்கிறது. அவர் இந்து கடவுள்களை அவமதித்து விட்டார் என்று பாரத் இந்து முன்னணி என்ற ஒரு அமைப்பு கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கவிஞர் விடுதலை சிகப்பி கவிதையில் மலக்குழியில் இறக்கிவிடப்பட்டு அன்றாடம் செத்து ஒழிவதற்கென்றே சில ஜாதிகளை கடவுள் தான் படைத்தார் என சொல்லப்பட்டால் அந்த கடவுள் ஒருநாள் இறங்கி இந்த வாழ்வு எவ்வளவு கொடியது என்பதை நேரடியாக உணரட்டும் என்ற ஆவேசத்துடன் அவர் எழுதிய கவிதை. தன்னுடைய கற்பனை சிந்தனைத் திறனை இராமன், இலட்சுமணன் மலக்குழியில் இறங்குவது போல் அவர் சித்தரித்தார். இது இந்து கடவுள்களைப் புண்படுத்திவிட்டது என்று ஓலமிடுகிறார்கள். சக மனிதனை ஜாதியின் பெயரால் இழி தொழில் செய்ய வைத்து மனித மலத்தை எடுக்கச் சொல்வதும், மலக்குழியில் இறங்கச் சொல்வதும் எவ்வளவு பெரிய சமூக அவமானம். எவ்வளவு பெரிய...

காங்கேயத்தில் நிர்வாண சாமியார்கள்: நடவடிக்கை எடுக்கக் கழகம் கோரிக்கை

காங்கேயத்தில் நிர்வாண சாமியார்கள்: நடவடிக்கை எடுக்கக் கழகம் கோரிக்கை

காங்கேயம் நகராட்சி அலுவலகத்திற்குள் நிர்வாண சாமி யார்களை அழைத்து வந்து ஆசி வாங்கியது தொடர்பாக ஆணையர், மாநகராட்சி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகளுடன் இணைந்து கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் மே 13, சனிக்கிழமை அன்று திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல்துறை ஆணையாளர் அவர்கள் விசாரணையின் அடிப்படையில் புகார் மனுவின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் முகில் ராசு, முகநூல் பொறுப்பாளர் பரிமள ராசன், சங்கீதா, இராமசாமி, மாரிமுத்து, ஆதித்தமிழர் பேரவை அவிநாசி மணி, தமிழ்மாறன், து.தலைவர் கு.ஜானகி, புரட்சிகர இளைஞர் முன்னணி தமிழமுதன், வேலு, மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு கார்மேகம் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 18052023 இதழ்

பா.ஜ.க. இல்லாத தென்னகம்

பா.ஜ.க. இல்லாத தென்னகம்

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மை பெற்றிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி சந்தித்து இருக்கிறது. பாஜக செய்த வெறுப்பு அரசியலை மக்கள் ஆதரிக்க தயாராக இல்லை என்பதையே இந்த தேர்தல் நமக்கு உணர்த்துகிறது. கர்நாடக மாநிலத்திற்கு என்று சில தனித்த பண்புகள் உண்டு. அதை சமூக நீதி மாநிலமாக மாற்றி அமைத்த பெருமை தேவராஜ் அர்ஸ் என்பவரையே சாரும். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்தவர் தேவராஜ் அர்ஸ். தமிழ்நாட்டில் 69ரூ  இட ஒதுக்கீடு வருவதற்கு முன்பே கர்நாடகாவில் 71% இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய சமூக நீதிப் போராளி அவர்.  மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று குரல் கொடுத்தவர் அவர். சென்னை சைதாப்பேட்டையில் திராவிடர் கழகம் நடத்திய மண்டல் கமிஷன் இயக்கத்திற்கு ஆதரவான மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியவர் தேவராஜ் அர்ஸ்.  சமூக நீதி மாநிலமாகத் திகழ்ந்த கர்நாடகாவில் பிற்காலத்தில்...

மக்களைக் குழப்பும் போலி அறிவியல்

மக்களைக் குழப்பும் போலி அறிவியல்

பெரியார் இயக்கம் என்பதே ஒரு அறிவியல் இயக்கம் தான். நாம் பேசாத அறிவியல் இல்லை. எனினும் இன்றைய சூழலில், போலி அறிவியலைப் பற்றியும் நாம் பேச வேண்டியுள்ளது. 200 ஆண்டுகளுக்கு முந்தைய சமுதாயத்தில், அறிவியல் பேசுபொருளாக இருக்கவில்லை. ஆனால் இன்று அறிவியல் பேசுபொருளாக உள்ளது. இதனால் நேர்மறை விளைவுகளும் உண்டு; எதிர்மறை விளைவுகளும் உண்டு. புதிய விஞ்ஞான கண்டு பிடிப்புகளால் நம் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மாற்றங்கள் நேர்மறையான விளைவுகளாகும். அதே வேளையில், மக்களிடம் இருக்கும் அறிவியல் சொற்கள் மீதான ஆர்வத்தை பயன்படுத்திக் கொண்டு, அச்சொற்களை வைத்தே பொய்யான தகவல்களை பரப்புவது, எதிர்மறையான விளைவாகும். இச்சூழ்நிலையே நம்மை போலி அறிவியலைப் பற்றி பேசத் தூண்டுகிறது. போலி அறிவியல் என்றால் என்ன? ஒரு பொய்யான மூடநம்பிக்கை கருத்து, அறிவியல் முலாம் பூசப்பட்டு, உண்மையைப் போல காட்டப்படும் போது, அது போலி அறிவியலாகிறது. (Pseudoscience). உதாரணமாக, சனீஸ்வரன் கோயிலை எடுத்துக் கொள்வோம். திருநள்ளாறு சனீஸ்வரன்...

கலிபோர்னியாவில் ஜாதிக்குத் தடை

கலிபோர்னியாவில் ஜாதிக்குத் தடை

அமெரிக்காவில் சீட்டில் நகரசபையைத் தொடர்ந்து – கலிபோர்னியா மாநிலத்திலும் ஜாதி ஒழிப்புத் தீர்மானம் நிறைவேறியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது.  ஜாதிப் பாகுபாடுகளைத் தடை செய்கிறது அத் தீர்மானம். ஜாதிய நிகழ்வுகள் நடத்துவது அதில் பங்கேற்பது குற்றம் என்கிற தீர்மானம் 34 உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.  இந்த தீர்மானத்திற்கு ஒருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு என்னவென்றால் இந்த மசோதாவை கலிபோர்னியாவின் செனட் சபையில் கொண்டு வந்தவர் ஆயிஷா மஹால் என்ற இஸ்லாமியப் பெண்.  கலிபோர்னியா மாகாண சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இஸ்லாமிய பெண்ணும் இவர்தான்.  இவர் ஆப்கான் – அமெரிக்க தம்பதிகளுக்குப் பிறந்தவர். இதற்காக முழு முயற்சிகளில் இறங்கி இந்த மசோதாவை ஒரு மாதத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தினார்.   செனட் சபையின் சட்ட ஆலோசனைக் குழு மசோதாவைப் பரிசீலித்து ஒப்புதல் தந்தது. ஜாதி, தீண்டாமையை எதிர்த்து அமெரிக்காவில் போராடிக் கொண்டிருக்கும்...

பொதுச் செயலாளர் விடுதலை  இராசேந்திரன் உரை மாநாட்டின் வெற்றிக்கு அடித்தளம் நமது தோழர்களின் உழைப்பு – அர்ப்பணிப்பு

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை மாநாட்டின் வெற்றிக்கு அடித்தளம் நமது தோழர்களின் உழைப்பு – அர்ப்பணிப்பு

மாநாட்டில் நிறைவாக உறுதிமொழியைப் படிப்பதற்கு முன், கழகப் பொதுச் செயலாளர் நிகழ்த்திய சுருக்கமான உரை: இந்த மாநாட்டைப் பொறுத்த வரை மாநாடு அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து தமிழ்நாடு முழுவதும் இருக்கிற நமது தோழர்கள் ஆற்றிய பணி மிகப் பெரிய அளவிடற்கரியது; மதிப்புக்குரியது. குறிப்பாக கடைவீதிகளில் சாதாரண மக்களை சந்தித்து கடைவீதி வசூல் என்ற ஒரு இயக்கத்தைத் தொடங்கி இரண்டு மூன்று வாரங்களாக தோழர்கள் இதே பணியை செய்து மாநாட்டிற்கு நிதி திரட்டினார்கள். சுவர் எழுத்து விளம்பரங்களை செய்தனர், மாநாட்டுப் பணிகளில் தங்களை முழுமையாக மூழ்கடித்து, அர்ப்பணித்து  செயல்பட்டனர். இந்த மாநாடு மிகப் பெரிய வெற்றியடைவதற்கு அடித்தளமிட்டது, கழகச் செயல் வீரர்களின் கடுமையான உழைப்பு ஒன்று மட்டும்தான் என்பதை இந்த மாநாட்டின் வழியாக நாம் சொல்லியாக வேண்டும். சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் அந்த மாவட்ட கழகத் தோழர்கள் கடைவீதி வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திக் காட்டினார்கள். தொடர்ச்சியாக மக்களை சந்தித்து சாதாரண மக்களிடம்,...

செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம் போல் சேலம் மாநாட்டுத் தீர்மானங்களும் வெற்றி பெறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம் போல் சேலம் மாநாட்டுத் தீர்மானங்களும் வெற்றி பெறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

கழக மாநில மாநாட்டில் (ஏப்.30) இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைஅமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையின் கடந்த இதழ் தொடர்ச்சி. பெரியாரின் தொண்டினை படம்பிடிக்கும் வரிகள்! தந்தை பெரியாரின் தொண்டினைப் பற்றி ஒருவர் எழுதியிருந்ததைப் படித்தேன். “அவரின் கையெழுத்து நன்றாக இருக்காது, ஆனால் நாம் அழகாக எழுதினோம். அவரின் பேச்சு கொச்சையாக இருந்தது, ஆனால் நாம் அழகுத் தமிழில் பேசினோம். அவர் பள்ளிக்கூடம் கூட தாண்டவில்லை, ஆனால் நாம் பல்கலைக் கழகங்களில் பட்டங்கள் பெற்றோம். அவர் உடை கைலியும் சட்டையுமாய் இருந்தது. ஆனால் நாம் கோட்சூட் அணிந்தோம். தந்தையே உன்னை போற்றுகிறோம், தலைநிமிர்ந்து வாழ்த்துகிறோம்.” பெரியாரையும் அவர் ஆற்றிய தொண்டினையும் சிறப்பாக படம்பிடிக்கும் வரிகள் இவை. ஒவ்வொரு கூட்டத்திலும் பேசத் தொடங்கும் போது, பெரியார் இப்படி சொல்கிறார். “என்னுடைய கருத்துக்களையும் என்னுடைய அனுபவங்களையும் உங்களுக்குச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. இதனைப் போன்றே, நான் சொல்லுகின்ற கருத்துக் களை சிந்தித்துப்...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம்  மாநாட்டு உரை நூலாக வெளி வந்து விட்டது

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் மாநாட்டு உரை நூலாக வெளி வந்து விட்டது

சேலம் மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய உரை; சென்னையில் கழகம் நடத்திய தமிழர் திருநாள் விழாவில் நிகழ்த்திய உரைகளை இணைத்து “இது தமிழ்நாடு!” எனும் தலைப்பில் நூலாக கழகம் வெளியிட்டுள்ளது. கடந்த மே 7ஆம் தேதி திருவல்லிக்கேணி பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி நூலையும் மாநாட்டு செய்திகள் அடங்கிய “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழையும் அமைச்சரிடம் நேரில் வழங்கினார். நூல் விலை : ரூ.30/- நூல் தேவைப்படுவோர் கழக தலைமை நிலையத்தை தொடர்பு கொள்ளவும். தொடர்பு எண் :  + 91 98416 53200 / +91 8973341377 பெரியார் முழக்கம் 11052023 இதழ்

தலையங்கம் எல்லை மீறாதீர், ஆளுநரே!

தலையங்கம் எல்லை மீறாதீர், ஆளுநரே!

மே 4 ஆம் தேதி வெளிவந்த கூiஅநள டிக ஐனேயை நாளிதழுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். வழக்கமான உளறல்கள் தான் இந்த பேட்டியிலும் இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்நாட்டை சீண்டி பார்த்திருக்கிறார். திராவிட மாடல் என்ற ஒன்று கிடையாது. அது காலாவதியான தத்துவம், விரக்தியான மனநிலையில் இருக்கிறவர்கள் அது நீடிக்க வேண்டும் என்பதற்காக தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நாம் “ஒரே பாரதம் ஒரே இந்தியா” என்ற கொள்கையின் கீழ் வாழ்கிறவர்கள், இதற்கு எதிரானது தான் திராவிட மாடல். அது காலாவதியாகிவிட்டது என்று அவர் பேசியிருக்கிறார். திராவிட மாடலுக்கு எதிராக உருவான சனாதன தர்மத்தைத் தான் தனது கொள்கை என்று இந்த பேட்டியில் உயர்த்துப் பிடிக்கிறார் ஆளுநர் ரவி. ஆக திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது, ஆரிய மாடலான சனாதனம் தான் நமக்கான அடையாளம் என்று பச்சையாக ஆரியப் பெருமை பேசுகிறார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “காலாவதியானது...

சேலத்தில் கழகச் செயலவைக் கூடுகிறது!

சேலத்தில் கழகச் செயலவைக் கூடுகிறது!

சேலத்தில் எதிர்வரும் மே 21, 2023 காலை 10 மணியளவில் கழகச் செயலவைக் கூடுகிறது. பொருள் : மாநாடு பற்றிய ஆய்வு, எதிர்காலச் செயல் திட்டங்கள் மற்றும் மாநாடு வரவு செலவுகள் ஒப்படைத்தல். செயலவை உறுப்பினர்கள் தவறாது கலந்துக் கொள்ள வேண்டுகிறோம். இடம் பின்னர் அறிவிக்கப்படும். கொளத்தூர் மணி, தலைவர் விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர்   பெரியார் முழக்கம் 11052023 இதழ்

மதவாத ஆட்சி அமைக்க மன்னராட்சி உருவாகும் ஆபத்து பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த உறுதி ஏற்போம்! ஜனநாயக சக்திகளுக்கு சேலம் மாநாடு அறைகூவல்

மதவாத ஆட்சி அமைக்க மன்னராட்சி உருவாகும் ஆபத்து பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த உறுதி ஏற்போம்! ஜனநாயக சக்திகளுக்கு சேலம் மாநாடு அறைகூவல்

இந்து இராஷ்டிரம் அமைக்க மன்னராட்சியை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் ஆபத்துகள் எதிர்நோக்கியுள்ள நிலையில் பா.ஜ.க. அணியை வீழ்த்த மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டும் என்று சேலத்தில் கூடிய (ஏப்.29, 30, 2023) திராவிடர் விடுதலைக் கழக மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. இது தமிழ்நாடு; இளம் தலைமுறை எச்சரிக்கை மாநாட்டுத் தீர்மானங்கள்: வேத மத ஆட்சியின் ஆபத்து : 1) தமிழ்நாட்டில்  நீண்டநெடுங்காலமாக பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதை, சமூகநீதி, பெண்ணுரிமைக் கொள்கைகளை சீர்குலைத்து வேத பார்ப்பனிய ஆட்சியை இந்துத்துவம் என்ற பெயரில் கொண்டுவர ஒன்றிய பாஜக ஆட்சி திட்டமிட்டு செயல்பட்டு வரும் நிலையில் அந்த ஆபத்தை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் வேத பார்ப்பனியம் ஆட்சிக்கு வந்தால் நாம் அடிமையாகி படுகுழியில் தள்ளப்படுவோம் என்றும் நமது முன்னோர்கள் பெற்று தந்த தன்மான உணர்வை இழந்து கீழ் மக்கள் ஆகிவிடும் ஆபத்து உருவாகிவிடும் என்பதையும் இம்மாநாடு தமிழர்களுக்குச்...

மாநாட்டு மலர் வெளிவருகிறது

மாநாட்டு மலர் வெளிவருகிறது

சேலம் மாநாட்டில் கருத்தரங்கம், ஆய்வரங்கம், வரலாற்று அரங்கங்களில் கருத்தாளர்கள் நிகழ்த்திய உரைகள் முழுமையாக தொகுக்கப்பட்டு சேலம் மாநாட்டு மலராக விரைவில் வெளிவர இருக்கிறது. உரையாற்றிய கழகத் தோழர்கள் தங்களது உரையை எழுத்து வடிவில் விரைவாக அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். பெரியார் முழக்கம் 04052023 இதழ்

சனாதனத்துக்கு தமிழ்நாட்டில் சவக்குழி!

சனாதனத்துக்கு தமிழ்நாட்டில் சவக்குழி!

மாநாட்டின் இறுதி நிகழ்வாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சனாதன எதிர்ப்பு உறுதி மொழியை வாசிக்க, தோழர்கள் உறுதி எடுத்தனர். உறுதி மொழி விவரம்: இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாட்டில் அந்த கொள்கை உணர்வோடும் இலட்சிய துடிப்போடும் ஆயிரக் கணக்கில் கூடியிருக்கிற இளைஞர் களாகிய நாங்கள் கீழ்கண்ட உறுதியினை ஏற்கிறோம். ஜாதியற்ற தமிழர்களாக வாழ்ந்த நமது சமூகத்தை ஆரியம் ஊடுருவி வர்ணாசிரம சனாதனத்தால் வீழ்த்தியது. 1916இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம், பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கம் இரண்டும் இணைந்து உருவான திராவிடர் கழகம் தொடர்ந்து வந்த திராவிட ஆட்சிகள் ஆகியவற்றின் உழைப்பால் திராவிடர் என்ற பெருமையோடு நாம் தலை நிமிர்ந்தோம். பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுத்து நம்மை இழிமக்களாக்கிய ஆரிய சனாதனத்திற்கு எதிரானது எங்கள் திராவிடம். ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான சமத்துவம் சம நீதியே எங்கள் திராவிடம். ஆனால் சனாதன ஒன்றிய ஆட்சி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சமத்துவத்தை...