அதானியை மோடி வளர்த்தது எப்படி?

குஜராத்தின் அஹமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு 1988ம் ஆண்டில் கௌதம் அதானி என்பவரால் அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனமாக தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் மிகப் பெரிய வளர்ச்சிக்கு பிரதமர் மோடியே அடித்தளமிட்டவர்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி தனது ஆத்ம நண்பரான அதானியை ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் போதும் உடன் அழைத்துச் சென்றார்.

2019இல் ஆஸ்திரேலியா சென்ற போது அதானியை அழைத்துச் சென்று, அங்குள்ள குயின்ஸ்லாந்தில் சார்பில் 12.3 பில்லியன் அமெரிக்க டாலர்களில் மேற்கொள்ளப்பட இருந்த பெரிய திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ ஆரம்பத்தைப் பெற்று தந்தார். இதற்கு இந்தியாவில் உள்ள வங்கிகள் பிணை வழங்கியது சர்ச்சைக்கு உள்ளானது.

தொடர்ந்து இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை அதானி குழுமத்தின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததிலும் ஒன்றிய அரசின் ஒப்புதல் பரிபூரணமாக இருந்தது. ஒரு காலத்தில் அதானி குழுமத்தின் ஆதிக்கத்தின் கீழ் விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டவையும் வந்து சேர்ந்தன.

உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா தொற்றுக் காலத்தில் எல்லா நிறுவனங்களும் கடும் சரிவினைக் கண்டு குட்டிக்கரணம் அடித்தன. ஆனால் அதானி குழுமம் மட்டும் ரூ.11 இலட்சம் கோடி சொத்து மதிப்புடன் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் பட்டியலுக்கு முன்னேறியது.

அதானி குழுமத்தின் வளர்ச்சி எப்படி பிரம்மிக்கத்தக்கதாக இருந்ததோ, இப்போது வீழ்ச்சியும் அந்த அளவுக்கு அதல பாதாளத்தை நோக்கியே உள்ளது.

 

பெரியார் முழக்கம் 02022023 இதழ்

You may also like...