வினா விடை

  • செவ்வாய்கிரகத்தில் ஆறுகள் இருந்திருக்கின்றன. – நாசா

அப்படி வாங்க வழிக்கு. அதுல ஒன்னுதான் எங்க வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி ஆறு. செவ்வாய்கிரகத்திலேயே எங்களாவாதான் பூர்விகக் குடிகள், புரியுதோ!

  • 3 ஆளுநர்களைத் தந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார், பிரதமர் மோடி. – பா.ஜ.க.

என்ன குரல் மாறுது? மூன்று சனாதன ‘இந்துக்களைத் தந்து’

என்று தானே சொல்லணும். இப்போ, மதம் போய் – தமிழன்

வந்துட்டானா?

  • இந்துமாக் கடல் – சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருக்கும் நிலையில் பிரபாகரன் வெளிப்படுவதற்கான சூழல் உருவாகி யுள்ளது. – பழ. நெடுமாறன்

இந்தியப் பெருங்கடல் இந்துமாக் கடலாக மாறி விட்டதா, அய்யா!

  • பா.ஜ.கவின் கனவைத் தவிர்க்க பிரபாகரன் மீண்டும் ஈழத்துக்கு வரவேண்டும்! – கோவை இராமகிருட்டிணன் அறிக்கை

அப்ப, தமிழ் ஈழத்துக்காக வரவேண்டாமா? அப்படியே ஈரோடு இடைத்தேர்தலுக்கும் வந்து பா.ஜ.க.வின் கனவைத் தவிர்த்தால் நல்லது.

  • வருமான வரித் துறையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார். – செய்தி

அவர் பேசுவார். பசுமைத் தீர்ப்பாயத்தில் 5 கோடி அபராதம் கட்டியவர். அங்கு போயும் பசுமையைக் காப்பாற்றும் வழிமுறைகளை விளக்குவார்.

பெரியார் முழக்கம் 16022023 இதழ்

You may also like...