Author: admin

தோழர் ஃபாரூக் படுகொலை கணடித்து ஆர்ப்பாட்டம் மேட்டூர் 27032017

திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் கழகத்  தோழர் கோவை பாரூக் படுகொலையைக் கண்டித்தும், வழக்கை சி.பி.சி.ஐ.டி -க்கு மாற்ற வலியுறுத்தியும் கண்டன  ஆர்ப்பாட்டம் மேட்டூர் பேருந்து நிலையம் எதிரில் 27.3.2017 மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் சி.கோவிந்தராசு தலைமை தாங்கினார். தி.வி.க. தோழர்கள் டைகர் பாலன், நங்கவள்ளி அன்பு, K.A. சந்திரசேகரன் திராவிடர் கழகம் மேட்டூர் நகரம், மா.சிவக்குமார் மேட்டூர் சட்ட மன்றத் தொகுதி செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, வீரசிவா மாநில இளைஞரணித் துணை செயலாளர் ஆதிதமிழர் பேரவை, கி.முல்லைவேந்தன் திராவிடர் பண்பாட்டு நடுவம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். படுகொலையை கண்டித்து வழக்கை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்ற வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. கழக தோழர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

தோழர் ஃபாரூக் படுகொலை கண்டன ஆர்ப்பாட்டம் தக்கலை 26032017

26-03-2017 ஞாயிறு மாலை 4.00மணிக்கு 16-03-17 அன்று இசுலாமிய மத வெறியர்களால் கொல்லப்பட்ட தோழர்,பாரூக் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிர்புறம் தோழர் சூசையப்பா தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் தமிழ் மதி,ஜாண் மதி,நீதி அரசர்,மஞ்சு குமார்,இராஜேஸ் குமார்,இரமேஸ் பாபு,சுனில்,இராஜன் ,சாந்தா,சமூக ஆர்வலர் போஸ்,அருள்ராஜ்,பேரின்ப தாஸ்,இளங்கோ,ஆன்றன் தமிழ்செல்வன்,ஆர்மல் வீரவணக்க முழக்கங்கள் எழுப்பியும் இசுலாமிய மத வெறியர்களைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பை பதிவுச் செய்தனர். பின்பு பெரியார் தொழிலாளர் கழக அலுவலகத்தில் வைத்து இரங்கல் உரை தோழர் தமிழ் மதி நிகழ்த்தினார் செய்தி தமிழ்மதி  

தோழர் ஃபாரூக் படுகொலையும் நமது நிலையும்…. கருத்தரங்கம் சென்னை 26032017

மனிதநேயப் போராளி … தோழர் ஃபாரூக் படுகொலையும் நமது நிலையும் …. கருத்தரங்கு சென்னை இராயப்பேட்டையில் 26032017 நடைபெற்றது. கருத்தரங்கம் தோழர் ஃபாரூக்கின் படத்திறப்போடு துவங்கியது. கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி தனது உரையில் … நாத்திகர்கள் மேடைகளில் நமது தோழமை இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு அவர்களது உரையை துவங்கும் போது ” உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என்று பிரார்த்தித்தவனாக .. உங்கள் முன் பேச துவங்குகிறேன் ” என்றே துவங்குவர். அது நாத்திகர்களின் மேடை மற்றும் நம் கொள்கைக்கு மாறானது என்ற போதும், அது தோழர்களின் கருத்துரிமை என்றும், அதற்கு முழு சுதந்திரம் தரப்பட்டிருக்கிறது என்றும் ., தோழமை அமைப்புகளின் கொள்கை உணர்விற்கு நாத்திகர்கள் மேடை எவ்வாறு கருத்துச் சுதந்திரத்தோடு நடந்துக் கொண்டிருந்ததை சுட்டிக் காட்டினார் … இந்த கருத்தை கருத்தரங்கிற்கு வந்திருந்த...

தோழர் முனியாண்டி படத்திறப்பு விழாவில் அவரின் இணையர் உருக்கமான பேச்சு

“இனி யார்கிட்ட சண்ட போடப்பேறன்னு தெரியலையே…” “எங்களுக்கு சுயமரியாதை திருமணம்தான் நடந்திச்சி. இதுநாள் வரைக்கும் எங்களுக்குள்ள சண்ட வந்ததே இல்ல. இங்க பேசின எல்லோரும் சொன்னா மதிரி எங்க வீட்டுக்காரருக்கு கோவம் வரவே வராது. நான் வேணும்னே சண்டக்கி போவேன். அப்ப கூட அவரு சிரிச்சிகிட்டே போயிடுவாரு. இனி நான் சண்ட போடறதுக்கூட ஆள் இல்லையே. இங்க எல்லா தோழர்களும் சேர்ந்து கொடுத்த பணத்தை வாங்கியத நினச்சா எனக்கு ஒடம்பே கூசுது. யாரும் தப்பா நினைச்சிக்க வேணாம். எனக்கு சுயமரியாதையையும், தன்னம்பிக்கையும் பெரியார் கத்துக்கொடுத்ததாலதான் அந்த பணம் வாங்குவதற்கு எனக்கு ஒரு மாதிரியா இருக்குது. உடனே என் பையன்கிட்ட அத கொடுத்தா அவனும் பெரியாரையும், அம்பேத்கரையும் படிச்சதால வேணாம்னு சொல்லிட்டான். திலீபன் தோழர் கிட்ட சொல்லி இந்த பணத்தை இயக்க செலவுக்கு வெச்சிக்கோங்கனு சொன்னேன். அவரும் வாங்காததால எனக்கு இதுவரைக்கும் ஒரு மாதிரியா இருக்குது. என்னுடைய கணவர் இறந்த பிறகு ஊர் ஆளுங்ககிட்ட...

“தமிழகத்தின் தாராளச் சூழலை நாம் இழந்திடலாகாது!”

“தமிழகத்தின் தாராளச் சூழலை நாம் இழந்திடலாகாது!”

“தமிழகத்தின் தாராளச் சூழலை நாம் இழந்திடலாகாது!” (நன்றி : தமிழ் இந்து நாளிதழ், தலையங்கம். 24.03.2017) கோவையில் நடந்திருக்கும் இளைஞர் ஃபாருக் கொலை அதிர்ச்சியைத் தருகிறது. இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் மோசமான சூழலின் வெளிப்பாடு என்பது அதிர்ச்சியைத் தாண்டி ஆழ்ந்த கவலையை உருவாக்குகிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயலாற்றிவந்த ஃபாருக், சமூகத்தின் சாதி, மதப் பாகுபாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் சாடிவந்தவர். தொடர்ந்து இறைமறுப்புக் கொள்கைகளைப் பேசிவந்தவர். அவருடைய செயல்பாட்டின் காரணமாகவே நடந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு. தமிழகத்துக்கு நாத்திகப் பிரச்சாரம் புதிதல்ல. அதற்கென்று நீண்ட நெடிய மரபு இங்கு இருக்கிறது. குறிப்பாக, நவீன அரசியல் வரலாற்றில் சாதிக்கு எதிராக இங்கு பெரியார் தொடங்கிய கலகம் அதன் மையத்திலேயே கடவுளுக்கும் மதத்துக்கும் எதிரான குரலைத் தாங்கியது. ஆத்திகர்கள் இதற்குக் காலம் முழுவதும் கடுமையாக எதிர்வினையாற்றி வந்திருக்கிறார்கள். ஆனால், அது ஆகப் பெருமளவில் கருத்துத் தளத்திலேயே...

தோழர் க.முனியாண்டி அவர்களின் படத் திறப்பு ! நெமிலி 25032017

தோழர் க.முனியாண்டி அவர்களின் படத் திறப்பு ! நெமிலியில் தோழர் ஃபாரூக் நினைவரங்கில். நாள் : 25.03.2017. சனிக்கிழமை . நேரம் : காலை 11.00 மணி. இடம்: தனபாக்கியம் வேணுகோபால் திருமண மண்டபம்,நெமிலி. படத்திறப்பாளர்: தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

தோழர் ஃபரூக் குறித்தும், அவரின் இறுதி நிமிடங்கள் குறித்தும் ஃபரூக்கின் துணைவியார், தந்தை பேட்டி – தி இந்து 25032017

‘கடவுள் மன்னிக்கக் கூடியவர்; தண்டிக்கச் சொல்பவர் அல்ல’: கொலை செய்யப்பட்ட ஃபாரூக் குடும்பத்தினர் வேதனை கோவை உக்கடம் லாரிப்பேட் டைக்கு அருகில் உள்ள பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ளது, கடவுள் மறுப்பில் தீவிரம் காட்டிய தால் கொல்லப்பட்ட ஃபாரூக்கின் சிறிய வீடு. ஃபாரூக்கின் மனைவி ரஷீதா(31) குர்ஆன் துவா செய்து கொண்டு இருந்தார். அவரைச் சுற் றிலும் கண்ணீருடன் உறவினர்கள். ‘‘நாங்கள் யாரும் எம் மார்க் கத்துக்கு விரோதிகள் அல்ல. தின மும் 5 வேளை நமாஸ் செய்பவர் கள். தவறாது நோன்பு மேற்கொள் பவர்கள். ஃபாரூக்கின் பிள்ளைகள் அப்ரீத்(13), ஹனபா(8) ஆகியோர் இஸ்லாமிக் அராபிக் பள்ளியில்தான் 1, 6-ம் வகுப்பு படிக்கிறார்கள். எந்த நிலையிலும் மார்க்கத்தைத் தாண்டி நடக்குமாறு ஃபாரூக் எங்க ளிடம் கூறியதில்லை. அதனால், அவரின் கடவுள் மறுப்புக் கொள் கைக்கும் நாங்கள் எதிராக நிற்க வில்லை. அதற்காக கொலைகூட செய்வார்களா? வேதத்தை முழுமை யாகப் படித்து, புரிந்துகொள்ளாத...

கோடைக்கால விடுமுறை  “குழந்தைகள் சிறப்பு பழகு முகாம்”

கோடைக்கால விடுமுறை “குழந்தைகள் சிறப்பு பழகு முகாம்”

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் குழந்தைகள் பழகு முகாம் வரும் மே மாதத்தில் நடைபெற உள்ளது. நாள் : 10.5.2017 முதல் 14.5.2017 (5 நாட்கள்) இடம் : பெங்களுர் . குழந்தைகள் சிறப்பு பழகு முகாமில் கற்பனைத் திறன் வளர்த்தல், படைப்பாற்றல் பெருக்குதல், குழு உரையாடல், கதை உருவாக்கல், ஓவியப் பயிற்சி, கவிதை புனைதல், கட்டுரை வரைதல், அறிவியல் சார்ந்த விளையாட்டுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் கோடையில் கொண்டாடுவோம் ! பள்ளி விடுமுறையை பயனுள்ளதாக்குவோம் ! 10 வயது முதல் 15 வயது முடிய உள்ளவர்கள் பங்கேற்கலாம். குறைந்த பட்ச பங்களிப்புக் கட்டணம் குழந்தை 1க்கு : Rs.1500/= (ரூபாய் ஒரு ஆயிரத்து ஐநூறு மட்டும்) குறிப்பு : Rs1500/= செலுத்த இயலாதவர்கள் Rs1000/= (ஒரு ஆயிரம் மட்டும்) செலுத்தலாம். முன் பதிவு அவசியம். பதிவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 98424 48175

கடவுள் இல்லை என்று சொன்னால்… கோவை கொடூரம்

கடவுள் மறுப்பு, மத – சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளைத் தீவிரமாகப் பேசிவந்த காரணத்தால், கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மத அடிப்படைவாதிகள் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கோவையில் உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர், ஃபாரூக். இவர், திராவிடர் விடுதலைக் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். கடவுள் மறுப்பாளராக இயங்கி வந்த ஃபாரூக், முற்போக்குச் சிந்தனையுடன், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசிவந்தார். மார்ச் 16-ம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது அவரது செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. பேசி முடித்தவுடன், ‘என் நண்பன் கூப்பிடறான். என்னன்னு கேட்டுட்டு வந்திடறேன்’ எனக் குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு, மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் சென்றுள்ளார். உக்கடம் பகுதியில் மாநகராட்சிக் கழிவுநீர் பண்ணை அருகே சென்றபோது, அங்கு காத்திருந்த சிலர் திடீரென ஃபாரூக்கை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த ஃபாரூக், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் இஸ்லாமியர் என்பதால், கொலையாளிகள் இந்துக்களாக இருக்கலாம் என்ற...

தமிழ்நாட்டு மாணவர்களின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் 19032017

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக 19032017 அன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. உயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் தமிழநாட்டு மாணவர்களின் மர்ம மரணத்திற்கு நீதி வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் மத்திய கைலாஷ் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் 20 மாணவர்கள் கைது

கேரளாவில் யுக்திவாதிகள் கண்டன ஆர்ப்பாட்டம் எர்ணாகுளம் 22032017

கேரளாவில் 22032017 அன்று காலை 10 மணிக்க யுக்திவாதிகள்(பகுத்தறிவாதிகள்) சார்பில் எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோட்டில் தோழர் பாரூக் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

கழக கட்டமைப்புக்கு நன்கொடை

கழக கட்டமைப்புக்கு நன்கொடை

திருச்சி, உய்யகொண்டான் திருமலை, சண்முகா நகர், பணி நிறைவு வனச் சரக அலுவலர் இல. கோவிந்தசாமி கழகக் கட்டமைப்பு நிதியாக ரூ. 10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) கழகத் தலைவர் கொளத்துர் மணியிடம் வழங்கினார். நன்றியுடன் பெறப்பட்டது. பெரியார் முழக்கம் 23032017 இதழ்

சென்னையில் தோழர்கள் சாலை மறியல்

சென்னையில் தோழர்கள் சாலை மறியல்

ஃபாரூக் கொலையுண்டார் என்ற செய்தியறிந்து அடுத்த சில மணி நேரங்களிலே சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அண்ணாசாலையில் சாலை மறியலில் ஈடு பட்டனர். தோழமை அமைப்புகள் மே 17, இளந்தமிழகம், த.பெ.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் விரைந்து வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். “கடவுள் உண்டு என்று கூறும் உரிமை உனக்கு உண்டு என்றால் இல்லை என மறுக்கும் உரிமை எமக்கு உண்டு. கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை” என்று தோழமை அமைப்புகளே உணர்ச்சிகரமாக முழக்கமிட்டனர். பெரியார் சிலை அருகே 30 நிமிடம் சாலைபோக்குவரத்து நின்றது. காவல்துறை 70க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து இரவு விடுதலை செய்தது. தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் தலைமையில் மாவட்ட செயலாளர் உமாபதி முன்னிலையில் இந்த மறியல் நடந்தது. பெரியார் முழக்கம் 23032017 இதழ்

மாணவர் முத்துகிருட்டிணன் இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர், தோழர்கள்

மாணவர் முத்துகிருட்டிணன் இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர், தோழர்கள்

கழகத் தலைவர் கொளத் தூர் மணி, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் உள்ளிட்ட தோழர்கள், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தற் கொலை செய்ததாகக் கூறப்பட்ட ஆய்வு மாணவர் முத்துகிருட்டிணனின் இல்லம் சென்று அவரது குடும்பத் தாரை சந்தித்து ஆறுதல் கூறினர். மதுரை மக்கள் கண் காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றி திபேன், அவரது குழுவினருடன் வந்து  ஆறுதல் கூறினார். ஆய்வு மாணவர்  சேலம் முத்து கிருட்டிணனன் உடல் 16-3-2017 அன்று  காலை 6.00 மணியளவில் சேலம், அரிசிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு மக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாவட்ட செயலாளர் டேவிட், மாநகரத் தலைவர் பாலு, செயலாளர் பரமேசு, மூணாங்கரடு சரவணன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் திருச்செங்கோடு வைரவேல், ஆத்தூர் மகேந்திரன் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் காலை 8.00 மணிக்கே மாணவர் முத்து கிருட்டிணன் இல்லம் வந்துவிட்டனர்....

ஆர்.எஸ்.எஸ். ஆணையை ஏற்று குண்டு வைத்தோம்: அசீமானந்தா ஒப்புதல் ஒப்புதல் வாக்கு மூலத்துக்குப் பிறகும் விடுதலையான பயங்கரவாதியின் கதை

ஆர்.எஸ்.எஸ். ஆணையை ஏற்று குண்டு வைத்தோம்: அசீமானந்தா ஒப்புதல் ஒப்புதல் வாக்கு மூலத்துக்குப் பிறகும் விடுதலையான பயங்கரவாதியின் கதை

இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் ரம்சான் தொழுகையில் 5000 இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருந்த போது குண்டு வெடித்தது. இதில் 3 பேர் இறந்தனர் 17 பேர் படுகாயமடைந்தனர். வழக்கம்போல் இதில் இஸ்லாமியர்களே குற்றவாளி என்று கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு குண்டு வைத்தது இந்து தீவிரவாதிகள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பது கண்டறியப்பட்டது. தேசிய புலனாய்வு நிறுவனம் இந்த வழக்கை விசாரித்தது. சிறப்பு நீதிமன்றம் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர், அசீமானந்தாவை விடுதலை செய்து விட்டு 3 பேரை மட்டும் குற்றவாளி என்று கூறியிருக்கிறது. அசீமானந்தா டெல்லி உயர்நீதி மன்றத்தில் பல தாக்குதல்களை நானே திட்டமிட்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலமே தந்திருந்தார். ‘காரவான்’ ஆங்கில இதழுக்காக லீனா கீதா ரெங்கநாத் எனும் செய்தியாளர் தனது குழுவினருடன் அம்பாலா சிறையில் அசீமானந்தாவை பேட்டி கண்டார். 2013ஆம் ஆண்டு நான்கு முறை சந்தித்து, 9 மணி நேரம் 26 நிமிடம் பதிவு செய்தார். தனது பயங்கரவாத...

இஸ்லாமிய அமைப்புகள்-இயக்கங்கள்-கடும் கண்டனம்

ஃபாரூக் படுகொலையைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள், இயக்கங்கள், தோழர்கள் வெளியிட்ட அறிக்கையிலிருந்து சில பகுதிகள்: கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு கடந்த 16ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு கோவை, உக்கடம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் பாரூக், சில நபர்களால் கொலை செய்யப்பட்டு இறந்தார். இச்செயலை கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இஸ்லாமிய வழிகாட்டுதலை மீறி யாரேனும் சில முஸ்லிம்கள் இந்தக் கொடூரத்தை செய்திருப்பார் களேயானால் அவர்களை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த நடவடிக்கை இஸ்லாமிய வழிமுறையும் இல்லை என்பதை இந்த நேரத்தில் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். மேலும் குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தோழர் பாரூக் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவிக்கிறோம். இக்கூட்டமைப்பு சார்பில் அனைத்து உண்மை குற்றவாளிகளையும் கைது  செய்து...

கழகத் தோழர் ஃபாரூக் குடும்பநிதி !

கழகத் தோழர் ஃபாரூக் கடந்த 16.03.2017 அன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பாரூக் அவர்களுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பம் உள்ளது. பெரிய பொருளாதார பிண்ணனி இல்லாத நிலையிலும்கூட தன் குடும்ப வருமானத்திற்கான உழைப்பின் இடையேயும் சமூகம் குறித்த கவலையோடு சிந்தித்து அதற்காக திராவிடர் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சமுதாய பணியாற்றியவர். தோழர் ஃபாரூக்கின் எதிர்பாராத படுகொலையை அடுத்து அவரின் குடும்பம் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்துள்ள இச்சமயத்தில் அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து தோழர் ஃபாரூக்  குடும்பத்தின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வோம். வாய்ப்பு உள்ள தோழர்கள் தங்களால் இயன்ற நிதியை கீழ் உள்ள கழகத்தின் பொருளாளர் துரைசாமி  வங்கிக்கணக்கில் செலுத்தியுதவுமாறு வேண்டுகிறோம். K.S.Duraisamy – Savings A/c No : 10235169636. IFSC Code : SBIN0009314.  State bank of india, Veerapandi...

கொள்கைத் தோழர் – கோவை ஃபாரூக் உயிரைப் பறித்தது – இஸ்லாமிய அடிப்படைவாதம்

கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாருக், பெரியார் கொள்கையை ஏற்று கடவுள்- மத மறுப்பாளராக வாழ்ந்ததோடு தனது முகநூலிலும் தனது மதத்தின் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டு வந்தார். இறை மறுப்பாளராக இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இஸ்லாமிய அடிப்படைவாத வெறியில் ஊறிப்போன ஒரு கும்பல் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்தது. கடந்த 16ஆம் தேதி இரவு உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே இந்த கொடூர சம்பவம் இரவு 11.15 மணியளவில் நடந்தது. பழைய இரும்புப் பொருள்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார் ஃபாரூக். தொழில் தொடர்பாக பேச விரும்புவதாக தனக்கு வந்த தொலைபேசி அழைப்பை ஏற்று, பேசிய நபர் வரச் சொன்ன இடத்துக்கு தனது மோட்டார் பைக்கில் புறப்பட்டார். சுத்திகரிப்பு நிலையம் அருகே பின்னாலிருந்து வந்த ஒரு கும்பல் தாக்கி கொடூரமாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. வழியில் சென்றவர்கள் அலறல் சத்தம் கேட்டு உதவிக்கு...

மதுரையில் பெரியார் நினைவு நாள்

மதுரையில் பெரியார் நினைவு நாள்

24.12.2011 அன்று காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து மாவடட தலைவர் வழக்கறிஞர் அ. பெரியசாமி தலைமையில் ஊர்வலமாகச் சென்று பெரியார் சிலைக்கும், சாதி ஒழிப்பு போராளி களுக்கும், தமிழ்நாடு விடுதலைக்குப் போராடி உயிர்நீத்த தோழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டனர். ஊர்வலத்தில் மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்ப்பித்தன், வெண்மணி, மாவட்ட செயலாளர் விடுதலை சேகர், பா. ஸ்டா லின் மற்றும் வழக்கறிஞர்கள், பொற்கொடி, பாரதி, பகத்சிங், இராசேந்திரன், விஜய பாரதி, மதி, வேல்முருகன், தமிழ்ப் புலி மெய்யப்பன் ஆகியோர் கலந்து கொண் டனர். பெரியார் முழக்கம் 05012012 இதழ்  

ஒட்டப் பிடாரத்தில்

ஒட்டப் பிடாரத்தில்

10.12.2011 அன்று மாலை 6 மணியளவில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் மரண தண்டனைக்கு எதிரான விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் ச.கா. பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் வே.பால்ராசு, மாவட்ட செயலாளர் கோ.அ.குமார், ம.தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் வீரபாண்டி செல்லச்சாமி, ம.தி.மு.க. மீனவரணியின் நக்கீரன் ஆகியோர் உரையாற்றினர். தலைமை செயற்குழு உறுப்பினர் பால். பிரபாகரன் விளக்கவுரையாற்றினார். பெரியார் முழக்கம் 05012012 இதழ்  

கயத்தாறில் தூக்கு தண்டனை எதிர்ப்புக் கூட்டம்

கயத்தாறில் தூக்கு தண்டனை எதிர்ப்புக் கூட்டம்

மரண தண்டனைக்கு எதிரான விளக்கப் பொதுக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறில் பால் பண்ணை எதிரில் கழக சார்பில் 3.12.11 அன்று நடந்தது. மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் வே.பால்ராசு, மாவட்டச் செயலாளர் கோ. அ. குமார், ம.தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் கணபதி பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். கழக ஆலோசனைக் குழு உறுப்பினர் பால் பிரபாகரன் சிறப்புரையாற்றினார். நிகழ்வில், மாவட்ட பொருளாளர் க.மதன், மாநகர தலைவர் சா.த. பிரபாகரன், மாநகர துணைத் தலைவர் ரவிசங்கர், மாநகரச் செயலாளர் பால். அறிவழகன், நெல்லை மாவட்டச் செயலாளர் சி.ஆ.காசிராசன், தோழர்கள் சண்முகராசு, ம.திலீபன், இரா.சிங்கணன் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள், தமிழ்ப் புலிகள் அமைப்பின் நெல்லை மாயா ஆகியோரும், ம.தி.மு.க. தோழர்களும் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட இணைச் செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 05012012 இதழ்

‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம் தனித் தமிழ்நாடு பெறுவதே – நமது ஒரே இலக்காக வேண்டும்!

‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம் தனித் தமிழ்நாடு பெறுவதே – நமது ஒரே இலக்காக வேண்டும்!

29.1.56 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வேலூர் டவுன் ஹாலில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு: தமிழ்நாட்டிற்கு இந்திய அரசாங்கம் இழைத்து வரும் கொடுமைகளைக் கவனித்தால் மிகவும் முக்கியமாக நான்கைந்து விஷயங்களில் நாம் கிளர்ச்சி செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். அவைகளில் ஒன்றாக தமிழ்நாட்டுடன் இணைக்கப் பட வேண்டிய தமிழர்கள் பெரும்பான்மையும் வசித்து வரும் தேவிகுளம்-பீர்மேடு போன்ற பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்பதே. ஆனால் இது அவசியமற்றதாகி விட்டது.காரணம் தலைக்கே ஆபத்து வருகையில் தலைப்பாகையைப் பத்திரப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதைப்போல் நம்முடைய அடிப்படையான நாட்டுக்கே கேடு வருகையில் இப்போது தேவிகுளம்-பீர்மேடு என்று கதறுவதில் பலன் இல்லை. முதலில் நாட்டைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு நாட்டைக் காப்பாற்றி அதன் பிறகு வேண்டுமானால், தேவிகுளம், பீர்மேடு பற்றிய கவலை கொள்ளலாம். இன்றைய தினம் நாட்டையே பறி கொடுக்கும் நிலைமை யில் தட்சிண பிரதேசம் என்று...

ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஆதரித்த ம.பொ.சி.!

ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஆதரித்த ம.பொ.சி.!

காங்கிரசுக்குள்ளேயே இருந்து கொண்டு 1946 ஆம் ஆண்டு ‘தமிழரசுக் கழகம்’ என்ற அமைப்பை உருவாக்கிய ம.பொ.சி., முதலில் ‘சுதந்திர தமிழரசு’ அமைப்பதே இதன் லட்சியம் என்று அறிவித்தார். பிறகு 1953 இல் வெளியார் சுரண்டல் இல்லாத தமிழகம் அமைந்தாலே போதும் என்று தனது கொள்கையை சுருக்கிக் கொண்டார். மாநிலங்களை சுதந்திரமான உறுப்பு நாடுகளாக பிரிட்டிஷ் அரசே அங்கீகரித்ததால் தான், ‘சுதந்திரத் தமிழகம்’ என்ற கோரிக்கையை தாம் முன் வைத்ததாகவும், இந்தியாவிலிருந்து, தமிழகம் தனியே பிரிந்து நிற்கிறது என்று பொருளில் கூறவில்லை என்றும் பிறகு சுய விளக்கம் அளித்தார். ‘இந்து’ பார்ப்பன நாளேட்டுக்கு ம.பொ.சி. எழுதிய ஒரு கடிதத்தில் , “என் ஆயுளில், இது வரை சுதந்திர தமிழ்க் குடியரசு தேவை என்று பேசியதே இல்லை; (தனிநாடு கேட்கும்) இந்த மாதிரியான பிளவு முயற்சிகளை எதிர்ப்பதற் காகவே தமிழரசு கழகம் தொடங்கப்பட்டது” என்று, தான் தனிநாடு கேட்பதாக ‘இந்து’ வெளியிட்ட செய்தியை மறுத்தார்....

பார்ப்பனர்களுக்கு – நோபல் பரிசு விஞ்ஞானி அறைகூவல் மூடநம்பிக்கைகளை மூட்டை கட்டுங்கள்

பார்ப்பனர்களுக்கு – நோபல் பரிசு விஞ்ஞானி அறைகூவல் மூடநம்பிக்கைகளை மூட்டை கட்டுங்கள்

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணா, மூடநம்பிக்கைகளை கைவிட்டு, அறிவியலை நம்புவதற்கு முன்வருமாறு பார்ப்பனர்களிடம் அறைகூவல் விடுத்துள்ளார். மயிலாப்பூரில் பார்ப்பன நிறுவனமான பாரதிய வித்யாபவனில், மூடநம்பிக்கைக்கு எதிராக நோபல் பரிசு பெற்ற ஒரு பார்ப்பனர் துணிவுடன், தமது கருத்துகளை முன் வைத்தது, பார்ப்பனக் கோட்டையில் வீசப்பட்ட அறிவு வெடிகுண்டாகும். அந்த அரங்கில் படித்த வைதீகப் பார்ப்பனர்கள் பெருமளவில் குழுமியிருந்தனர். பார்ப்பன தொழிலதிபரும் ராஜகோபாலாச்சாரி தொடங்கிய ‘சுதந்திரா’ கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவருமான எஸ்.வி. நரசிம்மன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவுக்கு நோபல் பரிசு பெற்ற பார்ப்பன விஞ்ஞானி தமிழகத்தைச் சார்ந்த வெங்கட்ராமன் ராம கிருஷ்ணனை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். பிரிட்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உயிரியல் தொழில் நுட்பத் துறையில் ஆய்வாளராக பணியாற்றும் அவர், வேதியலில் தமது கண்டுபிடிப்புக்காக 2009 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர். அறிவியலுக்கு எதிராக பழமை சிந்தனைகளை வைதீகக் கருத்துகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு,...

அயன்புரம் தினகரன்-ஜெயந்தி இணையரின் நன்கொடை

அயன்புரம் தினகரன்-ஜெயந்தி இணையரின் நன்கொடை

கழக இணையர்கள் அயன்புரம் என்.தினகரன் – ஜெயந்தி ஆகியோரின் திருமண நாளான ஜனவரி 7 ஆம் தேதி கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து கழக ஏட்டின் வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை வழங்கினர். கழகத் தோழர் தினகரன், இப்போது அங்கோலா நாட்டில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் தாயகம் திரும்பியுள்ளார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 12012012 இதழ்

‘பெல்’ தங்கராசுவை நேரில் சந்தித்து தோழர்கள் நலம் விசாரித்தனர்

‘பெல்’ தங்கராசுவை நேரில் சந்தித்து தோழர்கள் நலம் விசாரித்தனர்

உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்துவரும் திருச்சி தோழர் ‘பெல்’ தங்கராசு அவர்களை தூவாக்குடியிலுள்ள அவரது இல்லத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் புதியவன், தாமரைக்கண்ணன், குணா, டாக்டர் தமிழ்ச்சுடர் ஆகியோர் 26.12.2011 அன்று நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். பெல். தங்கராசு நலம் பெற்று வருகிறார். பெரியார் முழக்கம் 12012012 இதழ்

சூலூரில் கருத்தரங்கம்

சூலூரில் கருத்தரங்கம்

சூலூர் ஒன்றிய பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழர் விடுதலை இயக்கத்தின் சார்பில் டிசம்பர் 25 இல் மனுதர்ம எரிப்பு நாள் மற்றும் கீழ்வெண்மணி படுகொலை நாளில் சமூகநீதிக் கருத்தரங்கம் வே. ஆனைமுத்து அவைக் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அ.ப. சிவா தலைமை தாங்கினார். பொறியாளர் ந. பன்னீர் செல்வம் தொடக்கவுரையாற்றினார். வே. மதி மாறன், ‘பெரியார்-அம்பேத்கர் இன்றைய தேவை’ என்ற தலைப்பில் மூன்று மணி நேரம் பேசினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தோழர்களின் கேள்விகளுக்கு பதி லளித்தார். நிகழ்ச்சியில் 50க்கும் மேற் பட்ட தோழர்கள் கலந்து கொண்டு கருத்துகளைக் கேட்டனர். இறுதியாக தோழர் பேரறிவாளன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 12012012 இதழ்

சூலூர் தோழர்கள் தயாரித்துள்ள குறும்படம் ‘துக்கம்’

சூலூர் தோழர்கள் தயாரித்துள்ள குறும்படம் ‘துக்கம்’

சூலூர் ஒன்றியக் கழகம் சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம் 24.12.2011 மாலை 6 மணியளவில் கண்ணம்பாளையம் தேர்நிலை திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழகத் தோழர்கள் எழுதி இயக்கி நடித்த ‘துக்கம்’ குறும்படம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வெ.அ.நாராயணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார். அ.ப.சிவா குறும்படத்தைப் பற்றி அறிமுகவுரையாற்றினார். குறும்படத்தை எழுத்தாளர் வே.மதிமாறன் வெளியிட தமிழ்நாடு மாணவர் கழகத்தினுடைய மாநில அமைப்பாளர் பன்னீர்செல்வம், திருப்பூர் மாவட்டத் தலைவர் சு. துரைசாமி, கண்ணம்பாளையம் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் மௌனசாமி, 6வது வார்டு உறுப்பினர் இராமத்தாள் கணேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியின் நடுவில் ‘துக்கம்’ குறும்படம் திரையிடப்பட்டது. பெரும்பாலான மக்கள் குறும்படத்தைப் பார்த்தனர். மேற்கு மண்டலத்தில் நிலவும் தீண்டாமையின் ஒரு வடிவத்தை சுட்டிக்காட்டும் இந்தப் படம் பொது மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தோழர்கள் கா.சு.நாகராசன், நீலவேந்தன், வே.மதிமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர் மா....

கழக புதிய வெளியீடுகள்: திருச்சியில் அறிமுகம்

கழக புதிய வெளியீடுகள்: திருச்சியில் அறிமுகம்

திருச்சி மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக 26.12.2011 மாலை 6 மணிக்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள அய்க்கப் அரங்கத்தில் பார்ப்பன – இந்திய தேசியத்தை பயன்படுத்தி மலையாளிகளின் துரோகம் தமிழீழம் 2. முல்லைப் பெரியாறு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் டாக்டர் எஸ்.எஸ். முத்து தலைமையேற்றார். இந்திய அரசியல் சட்ட எரிப்பு வீரர்கள் முத்துச்செழியன், இளந்தாடி துரைராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கந்தவேல் குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தொடர்ந்து கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு’, ‘அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி’ என்ற நூல்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த டாக்டர் ரொகையா வெளியிட, விடுதலை சிறுத்தைக் கட்சி மாவட்ட செயலாளர் தமிழாதன், புதிய தமிழகம் மாவட்டச் செயலாளர் சங்கர், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் திராவிடன்...

எல்லை மீட்புப் போராட்டம்: பெரியார்-ம.பொ.சி. கடிதத் தொடர்புகள் உணர்த்தும் உண்மைகள்!

எல்லை மீட்புப் போராட்டம்: பெரியார்-ம.பொ.சி. கடிதத் தொடர்புகள் உணர்த்தும் உண்மைகள்!

நான் அதற்கு திராவிட பார்லிமெண்டரிக் கட்சித் தலைவர் நண்பர் சுயம்பிரகாசம் ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரால் உள்ள கட்சிக்குத் தலைவராய் இருந்துவரும் சர்.பி.டி. ராஜன் மற்றும் கம்யூனிஸ்டு, சோஷ்யலிஸ்ட் தோழர்களைக் கேட்டு அவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றேன். அவர் அதற்கு “கண்ணீர்த் துளிகளைச் சேர்க்கலாமா” என்றார். நான் இப்போது, “அவர்கள் தேவையற்றவர்கள். அவர்களால் ஆகக் கூடியது ஒன்றும் கிடையாது. சும்மா கூட்டத்திற்காகிலும் ஆள் சேர்ப்பது சரி யில்லை. கொஞ்சமாக இருந்தாலும் பொறுக்கி எடுத்த திறமைசாலிகளாக இருந்தால் போதும். உபயோகமற்றதுகளை எல்லாம் சேர்த்து  கொண் டால் வீண் கயவாளித்தனத்துக்கு இடமாகிவிடும்” என்று சொல்லிவிட்டேன். பிறகு வீட்டிற்கு வந்தவுடன் தொலைபேசியில் நண்பர் ம.பொ.சி. என்னைக் கூப்பிட்டார். ‘என்ன விசயம்’ என்று கேட் டேன். அதற்குள் வீட்டிற்குப் போனவுடன் என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை. “நான் கம்யூனிஸ்டுக்காரர்களைக் கேட்டேன், அவர்கள் மேலிடத்தை விசாரித்து சம்மதம் பெற்ற பின்பு தான் கலந்து கொள்வோம் என்றனர். சோஷியலிஸ்டுகள் சரி...

இந்து பஞ்சாங்க கணிப்புகள் அறிவியலுக்கு எதிரானவை

இந்து பஞ்சாங்க கணிப்புகள் அறிவியலுக்கு எதிரானவை

தமிழக முதல்வர் ஜெயலலிதா-இந்துத்துவ உணர்வோடு தமிழ்ப் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றினாலும் தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே என்பதை ஆணித்தரமாக விளக்கும் கட்டுரை இது. கட்டுரை ஆசிரியர் ‘சோதிடப் புரட்டு’ நூலை எழுதிய கனடா வாழ் சிந்தனையாளர் நக்கீரன். பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது அவற்றைத் தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்ள மாட்டான். இந்த அறுபது ஆண்டுகளை கடவுளர்களோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் புராணிகர்கள் உருவாக்கி விட்டார்கள். நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இதற்குப் புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61 ஆவது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவ’ ஆண்டிலிருந்து தான் தொடங்க...

‘ஜெ.’ மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்பது பெருங்குற்றமா!

‘ஜெ.’ மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்பது பெருங்குற்றமா!

‘நக்கீரன்’ மீதான தாக்குதலை கண்டிக்கிறோம் முதலமைச்சர் ஜெயலலிதா, மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று ‘நக்கீரன்’ இதழில் வெளியான செய்திக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘நக்கீரனுக்கு’ எதிராக ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு வன்முறையில் இறங்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்தத் தாக்குதல் ‘நக்கீரனுக்கு’ எதிரானதாக மட்டும் நாம் கருதவில்லை. ‘மாட்டுக்கறி’ சாப்பிடும் கோடானுகோடி  மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது. புரதச் சத்தும், ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய உணவு மாட்டிறைச்சி. கோழி, ஆடு இறைச்சியைப் போல், மாட்டிறைச்சி மற்றொரு உணவு. உண்மையிலே ஜெயலலிதா மாட்டிறைச்சி உண்டிருப்பாரானால், அதனால் அவருக்கு பெருமையே தவிர, ‘இழிவு’ அல்ல. ‘பசு மாடு’ மட்டும் புனிதமானது என்று போராடுகிறவர்கள் பார்ப்பனர்கள் தான்! பா.ஜ.க. பார்ப்பன பரிவாரங்கள், இதை கொள்கையாக வைத்துப் போராடி வருகின்றன. சென்னையில் பார்ப்பன பத்திரிகை விழா ஒன்றில் பங்கேற்க, ‘இந்துத்துவ’ பயங்கரவாதி,...

தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே! தமிழர் இல்லந்தோறும் விழா எடுப்போம்!

தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே! தமிழர் இல்லந்தோறும் விழா எடுப்போம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா-இந்துத்துவ உணர்வோடு தமிழ்ப் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றினாலும் தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே என்பதை ஆணித்தரமாக விளக்கும் கட்டுரை இது. கட்டுரை ஆசிரியர் ‘சோதிடப் புரட்டு’ நூலை எழுதிய கனடா வாழ் சிந்தனையாளர் நக்கீரன். பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது அவற்றைத் தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்ள மாட்டான். இந்த அறுபது ஆண்டுகளை கடவுளர்களோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் புராணிகர்கள் உருவாக்கி விட்டார்கள். நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இதற்குப் புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61 ஆவது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவ’ ஆண்டிலிருந்து தான் தொடங்க...

கோவக்குளத்தில் கழகக் கூட்டம்

கோவக்குளத்தில் கழகக் கூட்டம்

டிசம்பர் 24, பெரியார் நினைவு அன்று கிருட்டிணராயபுரத்தில் கேரள அரசைக் கண்டித்தும், மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்தும் முழு அடைப்பு நடத்தப்பட்டது. காலை 10 மணிக்கு பேருந்து நிலையத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்பு கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மையை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் எரித்தனர். அன்று மாலை 6 மணிக்கு கோவக்குளம் கிராமத்தில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம் கரூர் மாவட்ட செயலாளர் இரா. காமராசு தலைமையில் நடைபெற்றது. மந்திரமா, தந்திரமா நிகழ்ச்சியை பெரம்பலூர் தாமோதரன் நடத்தினார். மேட்டூர் குமாரசாமி மாவட்ட தலைவர் கு.கி.தனபால் உரையாற்றினார்.  கழகத் தோழர்கள் சிரிகாந், ஊழியன், மாணிக்கம், பன்னீர், மலைகெழுந்தன், முத்து ஆகியோர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பெரியார் முழக்கம் 19012012 இதழ்

ஒரு பெரியார் தொண்டரின் கடிதம் – நன்கொடை

ஒரு பெரியார் தொண்டரின் கடிதம் – நன்கொடை

பொன் இராமச்சந்திரன் என்ற பெரியார் பற்றாளர், கழகத் தலைவருக்கு எழுதிய கடிதம் இது: பேரன்பிற்குரிய பெரியார் திராவிடர் கழகத் தலைவர் அவர்களுக்கு வணக்கம். தங்கள் கழகத்தின் பகுத்தறிவுப் பரப்புரை பணிகளைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன். பாராட்டுகிறேன். பகுத்தறிவாளர்களின் கூட்டங்கள் அரங்கங்களின் அடைபட்டுப் போன அவலமான நிலையில் பெரியார் திராவிடர் கழகக் கூட்டங்கள் வீதிகளில் நடப்பது போற்றத்தக்கது. மக்களிடம் பகுத்தறிவு  கருத்துக்கள் சென்றடைய வீதிக் கூட்டங்களே பயன்படும். நம்மவர்களின் ஊடகங்கள் – நாள், கிழமை, திங்களிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள் – எல்லாம் வெட்கமில்லாமலும், வெட்கத்துடனும் பார்ப்பனர்களையும் மிஞ்சி மூடத்தனத்தைப் பரப்புகின்றன. காரணம், இனப்பற்று, நாட்டுப் பற்று, மொழிப் பற்றுகளைவிட பணப்பற்று மிகுந்து விட்டது. என்ன செய்வது? பெரும் பொருளும், மனவலிவும், துணிவும், சலியாத உழைப்பும் மிக்க இன்னொரு பெரியார் எப்போது வருவார் என மனம் ஏங்குகிறது. உங்களைப் போன்றவர்களின் மனத் துணிவும், இனமொழி நாட்டுப் பற்றும்,  பகுத்தறிவுப் பணியும் தான் நம் தமிழர்களைக்...

ஊடகங்கள் பரப்பி வரும் ‘முன்ஜென்ம’ பித்தலாட்டம்

ஊடகங்கள் பரப்பி வரும் ‘முன்ஜென்ம’ பித்தலாட்டம்

கடந்த சில மாதங்களாக அனைத்துத் தொலைக்காட்சி சேனல்களும் போட்டிப் போட்டுக் கொண்டு நேரடி களத் தொகுப்பு என்ற பெயரில் சில நிகழ்ச்சிகளை ஒளி பரப்புகின்றன. புலனாய்வு நிகழ்ச்சி களின் சாயலில், ‘நடந்தது என்ன’ என்பதை மக்களுக்குக் காட்டுகிறோம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் தவறான செயல்கள், நாகரிக சமு தாயத்தை மீண்டும் மூட நம்பிக்கைப் படுகுழிக்குள் தள்ளும் செயல்கள் என்று சொன்னால் அது மிகையா காது. மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தின் மூலம் தமிழகத்தில் இருக்கும் மக்கள் இப்போதைக்கு கொஞ்சமேனும் பேய், பிசாசு என்பனவற்றையெல்லாம் மறந்து அதெல்லாம் மூடநம்பிக்கை என்ற நிலையை ஓரளவிற்கு அடைந்து விட்டார்கள். இந்தத் தந்திரத்தைக் கையாளும் தொலைக்காட்சி சேனல்கள் ஊர் ஊராக, கிராமம் கிராமமாகச் சென்று அங்கிருக்கும் மக்களிடம் பேய் எப்படி வந்தது, பிசாசு எப்படிச் சென்றது என கதையளந்து இவர் களாகவே காட்சிகளைச் சித்தரித்து மக்களைக் குழப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பேய் பிசாசெல்லாம்...

இந்திய பார்ப்பன ஆட்சியின் மரண விளையாட்டு!

இந்திய பார்ப்பன ஆட்சியின் மரண விளையாட்டு!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குடியரசுத் தலைவரிடம் அளித்த கருணை மனுக்கள் 11 ஆண்டுகளுக்குப் பிறகு, உள்துறை அமைச்சகத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த 11 ஆண்டும் எந்த நொடியில்தூக்கு வரப்போகிறதோ என்று மரணத் துடிப்புடன் தான் அவர்கள் காலத்தைக் கடத்தியிருப்பார்கள். இதுவே பெரிய தண்டனை. இதற்குப் பிறகும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றலாமா என்று மனித உரிமையாளர்கள் கேட்கும் கேள்விக்கு உள்துறை அமைச்சகம், ஒரு விசித்திரமான பதிலை வழங்கியுள்ளது.  இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் கடந்த 6 ஆம் தேதி பதில் மனுவை உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ளது. 11 ஆண்டு காலம் கருணை மனுவை கிடப்பில் போட்டது கொடூரமான செயல்  அல்ல; மாறாக இவ்வளவு காலமும் அவர்கள் உயிர் காப்பாற்றப்படுகிறதே என்று நிம்மதியோடு கழித்திருப்பார்கள் என்கிறது உள்துறை அமைச்சகம். ஆக 11 ஆண்டுகாலம் தூக்குத் தண்டனையை தள்ளி வைத்து, இவர்களை நிம்மதியாக வாழ விடலாம் என்ற நல்ல நோக்கத்தோடுதான்...

25 ஆண்டுகளாக நடக்கும் கூடங்குளம் எதிர்ப்பு இயக்கம்

25 ஆண்டுகளாக நடக்கும் கூடங்குளம் எதிர்ப்பு இயக்கம்

கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிரான போராட்டம் 1986 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. இது திடீரென இப்போது தொடங்கியது அல்ல. 1986 இல் ‘தினமணி’யில் அணுஉலையின் பாதிப்புகள் பற்றி டி.என்.கோபாலன் அவர்களின் மிக விரிவான கட்டுரை ஒன்று வெளிவந்தது. இந்தக் கட்டுரை அன்றைய காலகட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அணுஉலை எதிர்ப் பியக்கங்களின் செயல்பாடும் இந்த விவாதங்களின் வழி தொடங்கியது. கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து 1987 இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. 1987 செப்.22 அன்று இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து ஒரு மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடந்தது. 1988 இல் நெல்லையில் மிகப் பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது. 1989 இல் நாகர்கோவிலில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம். 1989 மார்ச் 20 அன்று தூத்துக்குடியில் ஊர்வலம். இதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாலபிரஜாதிபதி அடிகள் உட்பட பல அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து...