கழக புதிய வெளியீடுகள்: திருச்சியில் அறிமுகம்

திருச்சி மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக 26.12.2011 மாலை

6 மணிக்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள அய்க்கப் அரங்கத்தில் பார்ப்பன – இந்திய தேசியத்தை பயன்படுத்தி மலையாளிகளின் துரோகம்

  1. தமிழீழம் 2. முல்லைப் பெரியாறு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் டாக்டர் எஸ்.எஸ். முத்து தலைமையேற்றார். இந்திய அரசியல் சட்ட எரிப்பு வீரர்கள் முத்துச்செழியன், இளந்தாடி துரைராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கந்தவேல் குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

தொடர்ந்து கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு’, ‘அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி’ என்ற நூல்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த டாக்டர் ரொகையா வெளியிட, விடுதலை சிறுத்தைக் கட்சி மாவட்ட செயலாளர் தமிழாதன், புதிய தமிழகம் மாவட்டச் செயலாளர் சங்கர், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் திராவிடன் பெற்றுக் கொண்டனர்.

இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விரிவான ஒரு கருத்துரையை வழங்கினார். மாவட்ட அமைப்பாளர் ஆரோக்கியசாமி நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட இணைச் செயலாளர் புதியவன், மாவட்ட பொருளாளர் மனோகரன், திருவரங்கம் நகரச் செயலாளர் அசோக், தாமரைக் கண்ணன், தோழர்கள் ஜெகநாதன், அபிமன்னன், பழனி, பொன்னுசாமி, அரியலூர் மாவட்ட அமைப்பாளர் பகுத்தறிவாளன், கரூர் மாவட்டச் செயலாளர் காமராஜ், தமிழ்நாடு மாணவர் கழக தோழர்களும் மற்றும் பல்வேறு இயக்கங்களை சார்ந்த தோழர்களும், பொது மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை குணா தொகுத்து வழங்கினார்.

பெரியார் முழக்கம் 12012012 இதழ்

 

You may also like...