தோழர் ஃபாரூக் படுகொலை கணடித்து ஆர்ப்பாட்டம் மேட்டூர் 27032017

திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் கழகத்  தோழர் கோவை பாரூக் படுகொலையைக் கண்டித்தும், வழக்கை சி.பி.சி.ஐ.டி -க்கு மாற்ற வலியுறுத்தியும் கண்டன  ஆர்ப்பாட்டம் மேட்டூர் பேருந்து நிலையம் எதிரில் 27.3.2017 மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் சி.கோவிந்தராசு தலைமை தாங்கினார். தி.வி.க. தோழர்கள் டைகர் பாலன், நங்கவள்ளி அன்பு, K.A. சந்திரசேகரன் திராவிடர் கழகம் மேட்டூர் நகரம், மா.சிவக்குமார் மேட்டூர் சட்ட மன்றத் தொகுதி செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, வீரசிவா மாநில இளைஞரணித் துணை செயலாளர் ஆதிதமிழர் பேரவை, கி.முல்லைவேந்தன் திராவிடர் பண்பாட்டு நடுவம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். படுகொலையை கண்டித்து வழக்கை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்ற வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. கழக தோழர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

2017-03-27-17-39-15-601 img_20170327_172651 img_20170327_180510 img_20170327_180939

You may also like...