பாரூக் கொலையைக் கண்டித்து இராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, கோவைத் தோழர் பாரூக், இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர அமைப்பாளர் இரா.பிடல்சேகுவேரா தலைமை ஏற்க, ம.தி.மு.க.நகரச் செயலாளர் நா.ஜோதிபாசு,   சி.பி.ஐ . எஸ். மணிமாறன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் பாலகிருஷ்னன் ஆகியோரது கண்டன உரையைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் வைரவேல்,  மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி, ஈரோடு மாவட்ட செயவாளர் வேணுகோபால் மற்றும் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் கண்டன உரையாற்றினர்.

திருப்பூர் தோழர் சங்கீதா நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 30032017 இதழ்

You may also like...