Author: admin

‘ஓட்டுக்கு நோட்டு’ பெரியார் சொன்ன கதை செ.கார்கி

இந்திய சட்டசபை தேர்தல் ஆரம்பமாகி விட்டது. இது வேலையில்லா வாலிபர்களின் கஷ்டத்தை ஒருவாறு குறைக்க அனுகூலமாயிருக்கிறது என்று சொல்லலாம். அது போலவே கொள்கையோ, விஷயமோ இல்லாத பத்திரிக்கைகாரர்களுக்கும் ஒரு அளவு கஷ்டம் நீங்கிற்று என்றும் சொல்லலாம்.                                          – பெரியார் மக்களால் வாக்களிக்கப்பட்டு ஜனநாயக முறையில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை என்பது  ஜனநாயகத்தின் மிக உயர்ந்த வடிவமாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் சாதி, மதம், பணம், மது போன்றவையே பிரதானமாகத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக விளங்கி வருகின்றன. அதனால் சாதி, மதம், முதலாளித் துவம் போன்றவற்றை ஒழிக்க நினைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தத் தேர்தல் அரசியலை வெறுக்கக் கூடியவர் களாகவும் அதன் மீது பெரும் அதிருப்தி கொண்டவர்களாகவுமே இருக் கின்றார்கள். பெரியாருக்கும் இந்தத் தேர்தல் அரசியலின் மீது பெரிதாக ஈடுபாடு  எல்லாம் இருந்தது கிடையாது. அதன் மீதான தன்னுடைய கடும் விமர்சனங்களை தன் வாழ்வின் இறுதிவரை...

அவமதிப்புகளைப் புறந்தள்ளிய ‘தொண்டறம்’

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டு இது. அவமானம் – அவமதிப்புகளைச் சுமந்து கொண்டு – பெரியாரின் ஆயுள் நீட்டிப்புக்கு தன்னையே ஒப்படைத்துக் கொண்டவர். ‘உங்கள் உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எனக்கு பலரும் யோசனை கூறுகிறார்கள். ஆனால் எனக்கு உதவிட நம்பிக்கையாக செயல்பட ஒருவர்கூட வரவில்லையே’ என்று பெரியார் கேட்டபோது, ‘இதோ நான் வருகிறேன்’ என்று ஓடோடி வந்தவர். தமிழகத்தின் பொது வாழ்க்கையிலேயே மணியம்மையார்-பெரியார் திருமண ஏற்பாடுபோல் கடும் புயலை உருவாக்கிய வேறு ஒரு நிகழ்வு இருந்திருக்க முடியாது. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சி உருவாவதற்கே இத்திருமணமே காரணமாக முன் வைக்கப்பட்டது. அப்போது கவர்னர்  ஜெனரலாக இருந்த பெரியாரின் நெருக்க நண்பரான இராஜகோபாலாச்சாரி என்ற பார்ப்பனர் அறிவுரைப்படியே பெரியார் இந்த ஏற்பாட்டைச் செய்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. வழக்கம்போல் பெரியார் இந்த அவதூறுகளை புறந்தள்ளினார். குற்றச்சாட்டுகள் வரும்போதெல்லாம் அதை உடைத்து, தனது நெஞ்சைத் திறந்துக் காட்டி தன்னை நேர்மையாளராக நிரூபித்துக்...

ஏழு தமிழர் விடுதலையும்  பார்ப்பன சுப்ரமணியசாமி திமிரும்

ஏழு தமிழர் விடுதலையும் பார்ப்பன சுப்ரமணியசாமி திமிரும்

‘ஏழு தமிழர்களை விடுதலை செய்ய மாட்டோம்’ என்று கொக்கரித்திருக்கிறார், பார்ப்பனர் சுப்ரமணியசாமி. சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் 161ஆவது சட்டப் பிரிவின் கீழ் தமிழக அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டாமா என்ற கேள்விக்கு, அமைச்சரவை முடிவைத் தூக்கிக் குப்பையில் போடு என்று திமிருடன் பதில் கூறியிருக்கிறார். சுப்ரமணியசாமி 7 தமிழர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவரா? உச்சநீதிமன்றம், அமைச்சரவை முடிவுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவரா? அப்படி ஒரு அதிகாரம் அவருக்கு எப்படி கிடைத்தது? ‘மனுதர்மம்’ வழங்கியுள்ள பார்ப்பன அதிகாரத் திமிரா? 28 ஆண்டுகளாக ஏழு தமிழர்களும் சிறையில் வாடுகிறார்கள். சிறைவாசிகளின் தண்டனைக் குறைப்புக்கு சட்டம் வழங்கியுள்ள உரிமைகள்கூட, இவர்களுக்குக் கிடையாதாம்.  அதே நேரத்தில் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் ஒவ்வொரு வழக்கிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் இந்த காவி பயங்கரவாதிகள் விடுதலையை எதிர்த்து பா.ஜ.க.வின்...

மணமகன் தேவை

மணமகன் தேவை

40 வயதான தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ‘எம்.சி.ஏ.’ பட்டதாரியான வாசுமதி எனும் பெண்ணுக்கு மணமகன் தேவை. விவாகரத்துப் பெற்றவர். ஜாதி, மதம் தடையில்லை. தொடர்புக்கு : 94874 85266 பெரியார் முழக்கம் 28032019 இதழ்

ஃபாரூக் துணைவியார் குடும்பத்தினருக்கு  கழகத் தலைவரின் அன்பு வேண்டுகோள்

ஃபாரூக் துணைவியார் குடும்பத்தினருக்கு கழகத் தலைவரின் அன்பு வேண்டுகோள்

கோவையில் அண்ணாமலை அரங் கில் மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சனிக்கிழமை 23.03.2019 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் அரியலூர் மாவட்டம் கவரபாளையம் சரோஜா-இராமகிருஷ்ணன் ஆகியோரின் மகன் இராவண கோபால்  – ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலட்சுமி-நாச்சிமுத்து ஆகியோரின் மகள் கோமதி வாழ்க்கை இணையேற்பு விழா கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்தி வைத்தார்.   திருமணத்தை தலைமையேற்று நடத்திய கழகத் தலைவர் இந்தத் திருமணத்தில் ஒருவர் கணவனை இழந்தவர், ஒருவர் மனைவியைப் பிரிந்தவர். வாழ்க்கை இணையேற்கும் இரண்டு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். மேலும் கோமதியின் மகன், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் பிரபாகரன்தான் இந்த மறுமணத்திற்கு முன் முயற்சியை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடைபெறும் இத்திருமணத்திற்கு வந்துள்ள ஹமீது (ஃபாரூக் தந்தை), இப்ராஹீம் (ரஷீதா தந்தை), ஷாஜகான்...

தமிழர்களின் இரயில்வே வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் வடநாட்டுக் கும்பல்

தமிழர்களின் இரயில்வே வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் வடநாட்டுக் கும்பல்

தமிழ்நாட்டு வேலை வாய்ப்புகளில் வடநாட்டார் குவிக்கப்பட்டு வரும் ‘உரிமைப் பறிப்பு’ கொடுமைகள் குறித்து கடந்த வாரம் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் எழுதியிருந்தோம். அதைத் தொடர்ந்து மற்றொரு அதிர்ச்சித் தகவலும் வெளி வந்திருக்கிறது. தெற்கு இரயில்வே சென்னை தேர்வு வாரியத்தில் ‘குரூப் டி’ பணியாளர்களுக்கு 1550 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்று முடிந்திருக்கிறது. இதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்புச் தேர்ச்சி. நாடு முழுதும் ஒரு கோடியே 7 இலட்சம் பேர் விண்ணப்பித்தார்கள். தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 4ஆம் தேதி வெளியிடப்பட்டன.  இதில் சென்னை தேர்வு வாரியத்தில் 1550 தேர்ச்சி பெற்றவர்களில் 90 சதவீதம் பேர் வடநாட்டினர். தேர்வுக்கான விதிகள் இருக்கின்றன. விதி எண். 11இன்படி இந்தக் கீழ்நிலைப் பதவிகளுக்கு தொடர்புடைய மாநிலங்களைச் சார்ந்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும். மாநில மொழியிலும் இந்தி, ஆங்கில மொழியிலும் இந்தத் தேர்வுக்கான விளம்பரத்தை செய்ய வேண்டும். இந்த விளம்பரங்களை மண்டலங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள்...

கூட்டணிகளின் கடந்தகால வரலாறுகளைப் பேசுவது காதில் பூ சுற்றும் வேலை!

கூட்டணிகளின் கடந்தகால வரலாறுகளைப் பேசுவது காதில் பூ சுற்றும் வேலை!

5 ஆண்டுகால மோடி ஆட்சிக்கு பூஜ்யத்துக்கும் குறைவான மதிப்பெண்தான் போடுவேன் என்றார், ‘பெரிய அய்யா’ மருத்துவர் இராமதாஸ். இப்போது மீண்டும் மோடி பிரதமராக வந்தால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்கிறார். எடப்பாடி ஆட்சியும் ஜெயலலிதா ஆட்சியும் ஊழலில் திளைத்த ஆட்சி என்று கூறி ஊழல் பட்டியல் தயாரித்து, ஆளுநரிடம் கொடுத்தது ‘பெரிய அய்யா’வின் பா.ம.க. கட்சி. இப்போது குரலை மாற்றிக் கொண்டு 5 ஆண்டுகாலமாக நல்லாட்சி தந்து வருகிறது அ.இ.அ.தி.மு.க. என்கிறார். ‘இதய தெய்வம்’ என்று ‘மூச்சுக்கு மூச்சு’ ஜெயலலிதாவின் ‘நாமத்தை’ உச்சரிக்கும் ‘அம்மாவின் விசுவாசிகள்’ ஜெயலலிதா என்ற ஊழல் குற்றவாளிக்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என்று வழக்குத் தொடுத்த பா.ம.க.வுடன் கைகோர்த்துக் கொண்டு ஓட்டுக் கேட்கிறார்கள். ‘இதய தெய்வம்’ இனி திரும்பி வந்து கேட்காது என்பது நன்றாகத் தெரியும். காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டுமா? அல்லது மோடியே பிரதமராக தொடர வேண்டுமா? என்பதைத் தனக்கு தரப்படும் தொகுதிகளை வைத்து தான்...

‘நிமிர்வோம்’ தேர்தல் சிறப்பிதழ்: தோழர்களுக்கு வேண்டுகோள்!

‘நிமிர்வோம்’ தேர்தல் சிறப்பிதழ்: தோழர்களுக்கு வேண்டுகோள்!

‘நிமிர்வோம்’ ஏப்ரல் இதழ் தேர்தல் சிறப்பிதழாக – பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க. கூட்டணியின் மக்கள் விரோதக் கொள்கைகளை விளக்கி ஏராளமான செய்திகள், கட்டுரைகள் இடம் பெறுகின்றன. கூடுதல் இதழ் தேவைப்படுவோர் மார்ச் 30 தேதிக்குள் தலைமைக் கழகத்துக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தொடர்புக்கு : 7299230363 / 9841489896 பெரியார் முழக்கம் 28032019 இதழ்

பழங்குடி மக்களைப் பாதுகாக்க களமிறங்கினர் கள்ளக்குறிச்சி கழகத் தோழர்கள்

பழங்குடி மக்களைப் பாதுகாக்க களமிறங்கினர் கள்ளக்குறிச்சி கழகத் தோழர்கள்

பழங்குடியினர் – மலைவாழ் மக்களை அந்த மக்கள் வாழக்கூடிய பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கடந்த மாதம் உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. வேறெங்கும் வீடு கட்டப்படுவதற்கான இடமோ அல்லது நிலமோ இல்லாத நிலையில் பன்னெடுங் காலமாக பழங்குடியினர் – மலைவாழ் மக்கள் வசித்துவந்த  பகுதியில் இருந்து வெளியேற்ற வற்புறுத்தல் செய்தால் அந்த மக்கள் சொந்த மண்ணிலே அகதிகளாக இருக்க வேண்டிய ஒரு அவல நிலை ஏற்படும்.எனவே பழங்குடி- மலைவாழ் மக்களை அவர்கள் வசிக்கின்ற பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும், பழங்குடியினர்- மலைவாழ் மக்களுக்கு சாதி இருப்பிட சான்றிதழ்களை அரசு  விரைவாக வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி  கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மாவட்டம் முழுவதும் 200-சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பழங்குடியினர்- மலைவாழ் மக்கள் வாசிக்கக் கூடிய சில பகுதிகளில் தோழர்கள் நேரில்...

பொள்ளாச்சி பாலுறவு வன்முறை: மேட்டூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலுறவு வன்முறை: மேட்டூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மேட்டூர் அனை சதுரங்காடி பெரியார் திடலில் 16.3.2019 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைக் கண்டித்து மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அனைத்துக் கட்சி, முற்போக்கு இயக்கங்கள், மகளிர் அமைப்புகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கி. கோவிந்தராசு தலைமை தாங்கினார். ஈழவளவன் (நாம் தமிழர்), அப்துல் கபூர் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), கே. நடராஜன் (அய்.என்.டி.யு.சி.), செ. மோகன்ராஜ் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), வசந்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), என்.பி. இராஜா (தி.மு.க.), மா. சிவக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்), ஏ.எஸ். வெங்கடேஸ்வரன் (மேட்டூர் காங்கிரஸ் கட்சி), அ. சக்திவேல் (திராவிடர் விடுதலைக் கழகம்) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  கழகத் தோழர் ம. குமரேசன், கண்டன முழக்கமிட்டு நன்றியுரையாற்றினார். கூட்டத்தில் காவை. ஈசுவரன் (கொளத்தூர் ஒன்றிய செயலாளர்), மேட்டூர் நகர செயலாளர் ஆ. சுரேசு குமார், மாவட்ட...

தலைமைக் கழக அலுவலகத்தைத் தக்க வைத்துக் கொள்ள கட்டமைப்பு நிதி கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

தலைமைக் கழக அலுவலகத்தைத் தக்க வைத்துக் கொள்ள கட்டமைப்பு நிதி கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

திராவிடர் விடுதலைக் கழகத்துக்காக சென்னையில் அமைந்துள்ள தலைமையகத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தை கழகத் தோழர்கள் நன்றாக உணர்வார்கள். கடும் முயற்சி எடுத்து குத்தகைக்கு எடுத்து அந்தத் தலைமை அலுவலகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு மட்டுமல்ல; எத்தனையோ சிறிய அமைப்புகள், இயக்கங்கள் தங்களுக்கான கலந்துரை யாடல், சந்திப்புக் கூட்டங்கள் நடத்துவதற்கு ‘தாய் வீடாக’ நமது தலைமைக் கழகம் பயன்பட்டு வருகிறது. நகரின் மய்யப் பகுதியில் உள்ள  அந்த அலுவலகத்தை அதன் உரிமையாளர்கள் விற்பனை செய்ய முடிவெடுத்தபோது தலைமைக் கழகம் இல்லாமல் போய் விடுமே என்ற கவலையும் வருத்தமும் நமக்கு உருவானது. இதைக் காப்பாற்றிக் கொள்ள  வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதற்காக ஆதரவாளர்கள் நண்பர்களிடம் கட்டமைப்பு நிதி திரட்டும் முயற்சிகளில் இறங்கினோம். பலரும் ஆர்வத்துடன் உதவினார்கள். நட்புக்கரம் நீட்டினார்கள். ஆனாலும் அலுவலக கட்டிடத்தை வாங்குவதற்கான தொகையில் பாதியளவைக்கூட நம்மால் எட்ட முடியவில்லை. வீட்டின்...

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க  தமிழக மக்களுக்கு கழகம் வேண்டுகோள்

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க தமிழக மக்களுக்கு கழகம் வேண்டுகோள்

கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் திருப்பூரில் 20.3.2019 அன்று திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் களம் – தமிழ் நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கடந்த அய்ந்து ஆண்டுகால பாஜக நடுவண் ஆட்சியில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தனித்துவத்தோடு நாம் கட்டி எழுப்பிய உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து தமிழ் நாட்டின் மீது போர் தொடுத்தது பாஜக ஆட்சி. கல்வி உரிமைகள் பறிப்பு, நீட் திணிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, காவிரி நீர் உரிமையில் வஞ்சகம், மத்திய அரசு பணிகளில் வடநாட்டவர் திணிப்பு, மதவெறி திணிப்பு, ஏழு தமிழர் விடுதலைக்கு மறுப்பு என்று தமிழகத்தை வஞ்சித்து வந்த பாஜக ஆட்சியை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகமும், தேர்தல் அரசியலில் ஈடுபடாத இயக்கங்களும், அமைப்புகளும் தொடர்ந்து போராடி...

மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்குடன் நடந்த ஃபாரூக் நினைவு நாள்  மேடையில் புரட்சிகர சுயமரியாதைத் திருமணம்

மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்குடன் நடந்த ஃபாரூக் நினைவு நாள் மேடையில் புரட்சிகர சுயமரியாதைத் திருமணம்

கோவையில் அண்ணாமலை அரங்கில் மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாரூக் மதவெறியர்களால் படுகொலை செய்யப் பட்டார். இதைக் கண்டித்து மனிதநேய அமைப்புகள் மற்றும் திராவிட அமைப்புகள் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். ஃபாரூக் படுகொலையைக் கண்டித்து ஆண்டுதோறும் நினைவேந்தல் கூட்டங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. நிகழ்வின் தொடக்கத்தில் இணையதள பொறுப்பாளர் விஜய்குமார் சமூக ஊடகங்களில் மதவெறி பற்றியும், கழகப் பகுத்தறிவு பரப்புரைக்கு சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் டுவிட்டர் பயன்பாடு பற்றியும் பயிற்சி அளித்தார். இந்தக் கூட்டத்தில் ‘மதங்களை மறப்போம், மனிதத்தை விதைப்போம்’  என தலைவர்கள் பேசினர். அதேபோல, மதங்களால் நடைபெறும் படு கொலைகள் தடுக்கப்படவேண்டும், மத அடிப்படை வாதங்கள் மாற வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது. திருப்பூர் முகில்ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, மேட்டுப்பாளையம்...

அரசியல் மணி என்னும் அணையா விளக்கு!

அரசியல் மணி என்னும் அணையா விளக்கு!

தமிழக அரசியல் வரலாற்றை எழுதும் யாராலும் தவிர்க்க முடியாத பெயர் மணியம்மை. தி.மு.க என்னும் அரசியல் கட்சி உருவாகக் காரணமாக இருந்தவர், தமிழகத்தில் முதன்முதலாக ஓர் இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெண், உலகளவில் ஒரு நாத்திக இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெண் என்னும் சிறப்புகள் மணியம்மைக்கு உண்டு. இத்தகைய வரலாற்றுச்சிறப்புமிக்க மணியம்மையின் நூற்றாண்டுவிழா இந்த ஆண்டு தொடங்குகிறது. 1920, மார்ச் 10-ல் வேலூரில் கனகசபை – பத்மாவதி தம்பதிக்குப் பிறந்தவர் காந்திமதி. கனகசபையும் பத்மாவதியும் பெரியாரின் கொள்கைகளில் பற்றுகொண்டவர்கள். கனகசபையின் நண்பர், தனித்தமிழ் ஆர்வலர் கு.மு.அண்ணல்தங்கோ காந்திமதிக்கு ‘அரசியல் மணி’ என்னும் பெயரைச் சூட்டினார். கே.அரசியல்மணி என்பது கே.ஏ.மணி என்றாகி, ‘மணியம்மையார்’ என்று காலத்தில் நிலைத்தது. 1943-ல் அரசியல்மணியின் தந்தை இறந்தார். ஒருமாதத்திலேயே இயக்கப்பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டார் மணியம்மை. பேச்சாளராக, கட்டுரையாளராக, போராட்டங்களில் பங்கெடுப்பவராக மணியம்மையின் இயக்க வாழ்க்கை அமைந்தது. திராவிடர் கழகக் கொடியின் தத்துவம், பெண்ணுரிமை, அண்ணல் அம்பேத்கர்...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கண்டன ஆர்ப்பாட்டம் ஆனைமலை 19032019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கண்டன ஆர்ப்பாட்டம் ஆனைமலை 19032019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், அனைத்து குற்றவாளிகளையும் அரசியல் தலையீடு இல்லாமல் கைது செய்யவும் ஆனைமலை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அனைத்து தோழமை அமைப்புகளையும் ஒருங்கிணைத்து 19032019 மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வலியுறுத்தியும் எஞ்சிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் தோழர்கள் முழக்கமெழுப்பினர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் பள்ளிபாளையம் 17032019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் பள்ளிபாளையம் 17032019

தமிழகத்தையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், அனைத்து குற்றவாளிகளையும் அரசியல் தலையீடு இல்லாமல் கைது செய்யவும், இனிமேல் இதுபோல் குற்றங்கள் நடக்காமலிருக்க நிரந்தர தீர்வான “பாலியல் கல்வியை” பள்ளி பாடங்களில் நடைமுறைபடுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளைய நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அனைத்து தோழமை அமைப்புகளையும் ஒருங்கிணைத்து  ஞாயிறு(17.03.2019) மாலை 5 மணிக்கு பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு பள்ளிபாளையம் நகரத் தலைவர் தோழர் மீனா தலைமை வகிக்க, திருச்செங்கோடு நகர அமைப்பாளர் தோழர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட தலைவர் தோழர் சாமிநாதன் வரவேற்புறையாற்றினார். பாலியல் குற்றவாளிகளை கண்டித்து, CPIML நகரச்செயலாளர் மாரியப்பன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் அஜ்மீர், திராவிடர் கழகம் மாவட்ட துணைச்செயலாளர் பொன்னுசாமி, DYFI ஒன்றியக்குழு செயலாளர் பிரபாகரன், புரட்சிகர இளைஞர் முன்னணி அமுதன், திராவிடர் விடுதலைக் கழக நாமக்கல்...

திருச்செங்கோட்டில் மூடப்பட்ட தந்தை பெரியார் சிலை மீண்டும் திறப்பு

திருச்செங்கோட்டில் மூடப்பட்ட தந்தை பெரியார் சிலை மீண்டும் திறப்பு

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் பின்புறம் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலை தேர்தல் அதிகாரிகளால் கடந்த 13.03.2019(புதன்) அன்று மூடப்பட்டிருந்த நிலையில், திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், வட்டாட்சியர் அவர்களிடம் முறையிட்டதன் எதிரொளியால் 14.03.2019(வியாழன்) இரவு மீண்டும் திறக்கப்பட்டது.  

சமூகநீதிப் போரில் பெரியார் அம்பேத்கர் பயிலரங்கம் மரவபாளையம் ஈரோடு 10032019

சமூகநீதிப் போரில் பெரியார் அம்பேத்கர் பயிலரங்கம் மரவபாளையம் ஈரோடு 10032019

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக , மரவபாளையம் CSI தொடக்கப் பள்ளியில் 10.03.2019 ஞாயிறு அன்று சமூகநீதிப் போரில் பெரியாரும் அம்பேத்கரும் என்னும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. காலை 11 மணிக்கு வகுப்பு துவங்கியது  தோழர்களின் அறிமுகத்தை தொடர்ந்து , முதல் அமர்வாக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சமூகநீதிப் போரில் பெரியார் என்னும் தலைப்பில் நெடிய வரலாற்று தரவுகளுடன் வகுப்பெடுத்தார். மதியம் 3 மணிக்கு வளைதளப் பொறுப்பாளர் தோழர் விஜய் கழகத்தின் வளைதளப் பக்கங்களை பற்றியும் Twitter பற்றியும் வகுப்பெடுத்தார். அதைத் தொடர்ந்து , இரண்டாம் அமர்வாக கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி சமூகநீதிப் போரில் அம்பேத்கர் என்ற தலைப்பில் மாலை 7 மணிவரை வகுப்பெடுத்தார். இறுதியாக கழகத்தின் பெயர்ப் பலகையை கழகத்தலைவர் திறந்துவைத்தார். இப்பயிற்சி வகுப்பில் 40 தோழர்கள் பங்குபெற்றனர்.  மாநகரத் தலைவர் ப.குமார் , சிவானந்தம் இருவரும் சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடுகளை...

மார்ச் 31 மதுரையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

மார்ச் 31 மதுரையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

மார்ச் 31 மதுரையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் சிறப்புரை தோழர் கொளத்தூர் மணி தோழர் விடுதலை இராசேந்திரன்   நாள் மார்ச் 31 மாலை 4 மணி இராமசுப்பு அரங்கம் மதுரை தொடர்புக்கு 7305538966

”தோழர் ஃபாரூக் நினைவேந்தல் !” கோவை 23032019

”தோழர் ஃபாரூக் நினைவேந்தல் !” கோவை 23032019

”தோழர் ஃபாரூக் நினைவேந்தல் !” இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட மனித நேயன் தோழர் ஃபாரூக் நினைவேந்தல் கருத்தரங்கம் ! நாள் : 23.03.2019 சனிக்கிழமை. நேரம் : மாலை : 04.00 மணி இடம் : அண்ணாமை அரங்கம்,இரயில் நிலையம் எதிரில்,கோவை. உரை : ”தோழர் கொளத்தூர் மணி”, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். ”முனைவர் தோழர் சுந்தரவள்ளி”, மாநிலத்துணைச் செயலாளர்,தமுஎசக. ”தோழர் பாமரன்”, எழுத்தாளர். ”தோழர் பீர் முகமது”. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திராவிடர் விடுதலைக் கழகம், கோவை மாநகர் மாவட்டம். 9677404315 – 98652 85827 – 99942 85382

நாடாளுமன்ற தேர்தல் 2019 – திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிலைப்பாடு

நாடாளுமன்ற தேர்தல் 2019 – திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிலைப்பாடு

  “திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு தீர்மானம்” திருப்பூர் 20.03.2019 எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் களம் – தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கடந்த அய்ந்து ஆண்டுகால பாஜக நடுவண் ஆட்சியில் தமிழகம் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் தனித்துவத்தோடு நாம் கட்டி எழுப்பிய உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து தமிழ் நாட்டின் மீது போர் தொடுத்தது பாஜக ஆட்சி கல்வி உரிமைகள் பறிப்பு, நீட் திணிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, காவிரி நீர் உரிமையில் வஞ்சகம், மத்திய அரசு பணிகளில் வடநாட்டவர் திணிப்பு, மதவெறி திணிப்பு, ஏழு தமிழர் விடுதலைக்கு மறுப்பு என்று தமிழகத்தை வஞ்சித்து வந்த பாஜக ஆட்சியை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகமும், தேர்தல் அரசியலில் ஈடுபடாத இயக்கங்களும், அமைப்புகளும் தொடர்ந்து போராடி வந்தோம், அரசின் அடக்குமுறைகளை சந்தித்தோம் நடுவண் ஆட்சி தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று சூளுரைத்து...

“கருஞ்சட்டைக் கலைஞர்” புத்தகம் அண்ணா அறிவாலயத்தில் …

“கருஞ்சட்டைக் கலைஞர்” புத்தகம் அண்ணா அறிவாலயத்தில் …

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் திருச்செங்கோடு கருத்தரங்கில் உரையாற்றிய தொகுப்பு “கருஞ்சட்டைக் கலைஞர்” புத்தகத்தை….. இன்று(19.03.2019)காலை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழகப் பேச்சாளர், நாடாளுமன்ற வேட்பாளர் தோழர்.ஆ.ராசா அவர்களை சந்தித்து…. கழக தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர்.இரா.உமாபதி மற்றும் ஒ.சுந்தரம் ஆகியோர் புத்தகத்தை வழங்கினர்.ஆ.ராசா அவர்களும் திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்காக 400 புத்தங்களை பெற்றுக் கொண்டார்.

திருப்பூரில் ”பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை” குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்க எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் 18032019

திருப்பூரில் ”பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை” குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்க எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் 18032019

திருப்பூரில் ”பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை” குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்க எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் 18.03.2019 திங்கட்க்கிழமை, மாலை 4.00 மணியளவில், திருப்பூர், மாநகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகம்,திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் சுசீலா அவர்கள் தலைமை தாங்கினார். தோழர்கள் தோழர் பார்வதி ,தோழர் முத்துலட்சுமி,தோழர் தேன்மொழி,தோழர் சூலூர் தமிழ்செல்விஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் விடுதலைக் கழக பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச்செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி, மாவட்டத்தலைவர் தோழர் முகில்ராசு,தலைமைக்குழு உறுப்பினர் தோழர் மடத்துக்குளம் மோகன்,பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, தோழர் சபரி-தமிழ்நாடு மாணவர் கழகம்,விஜயகுமார் – இணையதள பொறுப்பாளர், முகில் இராசு – மாவட்ட தலைவர்,தோழர் பிரசாந்த் தமிழ்நாடு மாணவர் கழகம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். தோழமை அமைப்புகளின் சார்பில் கண்டன உரையாற்றியவர்கள் : தோழர் முகமது அஸ்லாம்,மாவட்ட செயலாளர்,தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி,தோழர் அருண், திருவள்ளுவர்...

இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் !

இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் !

இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் ! “ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு ” சார்பாக 14.03.2019 வியாழன் காலை 10.30 மணியளவில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஐ.நா. வை ஏமாற்றி நீதியின் பிடியில் இருந்து தப்ப முயலும் இனக்கொலை இலங்கையே தமிழகத்தில் இருந்து வெளியேறு! கால நீட்டிப்பைத் தடுத்து நிறுத்தி பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வா! என்கிற முழக்கங்களுடன் தி,வி,க,த.பெ.தி.க., விசிக,மநேமக,எஸ்.டி.பி.ஐ,இளந் தமிழகம், தவாக,த.தே.ம.மு.,த.தே.வி.இ.,த.வி.க.,மற்றும் பல்வேறு தோழமை அமைப்பினர் இம்முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தலைகள் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன்,இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், த.பெ.தி.கவின் தோழர் குமரன், த.தே.வி.இ. தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு மற்றும் பல்வேறு அமைப்பை சேர்நத தோழர்கள் கலந்து கொண்டனர். “அபிநந்தனுக்குக்கொரு நீதி? பாலசந்திரனுக்கு ஒரு நீதியா? “இந்திய அரசே! இனக்கொலை இலங்கையைப் பாதுகாக்காதே! கால நீட்டிப்பைத் தடுத்து நிறுத்து!...

அறிவியலுக்கு வாருங்கள்!

மனதால் இருவர் ஒன்றாக இணைவதல்லக் காதல். இணைகிற இருவருக்கும், இவ்வுலகம் ஒன்றாய் தெரிந்தால்தான் அது காதல்.! – செயின் எக்ஸ்கியூபெரி மணமுறிவுக்காய் எலும்புதேய வழக்காடு மன்றப் பயணம்.. குழந்தையின் அங்ககீனத்திற்கு மனம்நொந்து … நீளும் மருத்துவமனை வாசம் ! சவரன் குறைந்ததால் … எரிந்த பெண்கள் உயிர் ஏராளம். பெட்டி..பெட்டியாய் பொன் கொண்டு போயினும் … பிணமொத்த வாழ்வில் மருகும் மகள்கள் ஏராளம்… ஏராளம்! தரங்கெட்டத் தாய்மாமன்களுக்கும்… முறைகெட்ட முறைமாமன்களுக்கும்… உறவு விட்டுப் போகுமோயென… விறகுபோல் அள்ளித்தந்து, சருகுபோல் கருகிய பெண்ணுயிர் ஏராளம்… ஏராளம் ! சுயஜாதி மணங்களின் லட்சணங்கள் இவை! மணம் எது? மனம் எது? என உணராத ஜாதிவெறி ஜம்பங்களே! நீங்கள் இருதயத்தையும், மூளையையும் விரும்பி நாடுவது, இறைச்சிக் கடையில்தானே ! கலப்பு என்பது மாட்டிலும், பயிரிலும், விதையிலும் மட்டும் எனத் திரியும் ஈனர்களே! அறிவியலுக்கு வாருங்கள் கொஞ்சம்.! கலப்பு விஞ்ஞான விதி. கலப்பு இயற்கை நியதி. கலப்பே...

வாசகர்களிடமிருந்து…

திருச்சி கருஞ்சட்டைப் பேரணியின் சிறப்பிதழாக ‘நிமிர்வோம்’ மிகச் சிறப்பாக வெளி வந்திருக்கிறது. 1946இல் மதுரையில் நடந்த கருஞ்சட்டைப் படை மாநாட்டு வரலாற்றையும் பார்ப்பனர்கள்  மாநாட்டுப் பந்தலை தீ வைத்து எரித்ததையும் விளக்கி திராவிட இயக்கத்தின் மூத்த பத்திரிகையாளர் மா. செங்குட்டுவன் எழுதிய கட்டுரை பல அரிய தகவல்களைத் தந்தது. அப்போது பெரியார்-அண்ணாவுக்கு இடையே கருத்து மாறுபாடுகள் – அது குறித்து நடிகவேள் எம்.ஆர். ராதா, கலைஞர் விமர்சனங்களையும் ‘நிமிர்வோம்’ நேர்மையுடன் பதிவு செய்திருந்ததையும் பாராட்டு கூறுகிறேன். – பெ. கார்த்திக், திண்டுக்கல் பாரதி குறித்து பெரியாரின் எழுத்துகளைப் படித்த போது பெரியார் எவ்வளவு துல்லியமாக பாரதியை ஆய்வு செய்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  சர்.பிட்டி தியாகராயர், நடேசனார், டி.எம். நாயர், பார்ப்பனரல்லாதாருக்காக தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தொடங்கியபோது பாரதி அதற்கு எதிர்வினையாக முன் வைத்த கருத்துகளை நினைவூட்ட விரும்புகிறேன். “பொய்யும் புனைவுமாகத் திராவிடர்கள் என்றும் ஆரியர்கள் என்றும் பழைய...

பரமண்டலத்துப் பிதா தண்டிப்பாரா?

பரமண்டலத்துப் பிதா தண்டிப்பாரா?

ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படும் கொடுமை உண்மைதான் என போப் பிரான்சிஸ்  ஒப்புக் கொண்டுள்ளார். இதனைக் களைந்திட உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் போப்பாண்டவர் தெரிவித்துள்ளார். மதங்களின் மடாலயங்களும், கன்னி மாடங்களும் ‘கலவிக் கூடங்கள்’ ஆகிவிட்டன! மதவெறி தகர்த்து மனித நேயம் காப்போம்! நிமிர்வோம் பிப்ரவரி 2019 மாத இதழ்

மதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது… சமீபத்திய ஆய்வு முடிவுகள்

கடவுளுக்குப் பயப்படும் தாயாக இருப்பதுதான் பிள்ளை வளர்ப்புக்கு நல்லது என்று நம்பிய காலங்கள் போய்விட்டன என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வுகள் காட்டுகின்றன. இதுபற்றி, “லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்சில்” ஒரு கட்டுரை வந்திருந்தது. ழடிற ளுநஉரடயச குயஅடைல ஏயடரநள ளுவயஉம ரயீ என்ற தலைப்பில், ஃபில் ஜுகர்மேன் (ஞாடை ஷ்ரஉமநசஅயn) என்பவர் அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். இவர் சமூக இயல் துறையில் பேராசிரியராக அமெரிக்கா வின் ஞவைணநச  கல்லூரியில் பணியாற்றுகிறார். பல நூல்களையும் எழுதியுள்ளார். 2010இல் டியூக் பல்கலைக்கழகம் ஆய்வொன்றை மேற்கொண்டது. கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளர்க்கப்படும் குழந்தைகள் இனவெறிக்கு ஆளாவதில்லை. சக மாணவர்களின் தீய பழக்கங்களால் கெட்டுப் போவதில்லை. மனதில் வஞ்சம் வைப்பதில்லை. தேசிய வெறிக்கு ஆட்படுவதில்லை. போர் வெறியர்களாக இருக்கமாட்டார்கள். அதிகாரத்துவப் போக்கு அவர்களிடம் வராது. சகிப்புத் தன்மை உள்ளவர்களாக இருப்பார்கள் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. கடவுள் நம்பிக்கையோடு வளர்க்கப்படும் குழந்தைகளைக் காட்டிலும் நம்பிக்கையில்லாதவர்களாக வளர்க்கப் படும்...

பெரியார் கவலைப்பட்டது ஏன்?

எனக்கு 40ஆவது வயதில் நாக்கில் புற்று வந்தது. நண்பர் டாக்டர் திரு. முத்துசாமி அவர்கள் என்னிடம் உண்மையினைச் சொல்லாமல் ஏதோ மருந்தினை தடவி துடைத்தே வந்தார். அவரின் ஆலோசனைப்படி சென்னை சென்று டாக்டர் சுந்தரவதனத்திடம் சென்றேன். அவர் பார்த்துவிட்டு, ‘அடச் சனியனே, உங்களுக்கா இது வரவேண்டும்?’ என்றார். ‘என்ன அய்யா நோய்?’ என்றேன். நான் பயந்து கொள்ளுவேன் என்று கருதி, ‘ஒன்றுமில்லை’ என்று கூறி வேறு ஒரு டாக்டருக்குக் கடிதம் கொடுத்தார். அவர் பார்த்துவிட்டு, ‘எத்தனை நாளாய் இப்படி இருக்கின்றது?’ என்று கேட்டார். ‘அது ஒரு மாதத்துக்கு மேலாகவே இருக்கிறது’ என்றேன். ‘என்ன அய்யா இப்படி விஷயம் தெரிந்தவர்கள் எல்லாம் இப்படிப் பேசாமலே இருக்கலாமா?’ என்று கோபித்துக் கொண்டார். ‘மன்னிக்கணும். என்ன நோய் என்கிறீர்கள்?’ என்றேன். அவர் அதற்குள்ளாக தம்மை சரிப்படுத்திக் கொண்டு, ‘ஒன்றும் இல்லை, புற்றுநோய், என்றாலும் சரியாகிவிடும்’ என்று கூறி சிகிச்சை செய்தார். பிறகு சரியாகி விட்டது. நான்...

பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் ரூ.70,000 கோடி

பொதுத் துறை வங்கிகளில் அதிகாரம் செலுத்தும் பார்ப்பன அதிகார வர்க்கம்  ரூ.  70,000 கோடி மக்கள் பணத்தை ஏப்பம் விட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் நிகழ்ந்த  மோசடியால் ஏற்பட்ட நஷ்டம் 70 ஆயிரம் கோடி ரூபாய். இது தவிர, விஜய் மல்லையா போன்றவர்கள் வங்கிகளில் கடனைப் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடியதால் வங்கிகளில் அதிகரித்த வாராக்கடன் ரூ. 10.25 லட்சம் கோடி. கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ. 30 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடிகள் வங்கிகளில் அரங்கேறியுள்ளன. மோசடிகளின் எண்ணிக்கை மட்டுமே 6,500. இதில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி கூட்டணி நிகழ்த்திய மோசடி ரூ. 12 ஆயிரம் கோடி. பெரிய தொகை சம்பந்தப்பட்ட மோசடிகள் மட்டுமே வெளிச்சத்துக்கு வந்தன. வங்கிகளின் ஸ்திரத் தன்மையை சீர்குலையச் செய்யும் மோசடிகளைக் கட்டுப்படுத்தா விட்டால் வங்கிகளின் எதிர்காலம் கேள்விக் குறிதான் என எச்சரிக்கிறது ஊழல் கண்காணிப்பு ஆணையம்...

மோடி பூமியின் காவலரா?

நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ‘பூமியின் சாம்பியன்’ விருதை வழங்கியுள்ளது ஐக்கிய நாடுகள் சபை. சுற்றுச்சூழல் முன்னேற்றத் துக்காகப் பாடுபடும் தலைவர்களுக்கு வழங்கப்படுவது இந்த உயரிய விருது. சூரியசக்தி மின்சாரம் உள்ளிட்ட சூழல் நடவடிக்கைகளில் பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து செயல்பட்டதற் காகவும், மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக்கை 2022ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதாக அறிவித்துள்ளதாலும் இந்த விருது. இதைப் பெறும் அளவுக்கு மோடி தகுதியானவரா? கடந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தன? 2014ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்ததும், புதிய தொழிற்சாலைகளுக்கு சுற்றுச் சூழல் அனுமதி வாங்குவதில் மாற்றம் கொண்டு வந்தார். ஒரு பெரிய தொழிற்சாலையைத் தொடங்குவதற்கு முன்பாக, அது அமைய இருக்கும் இடத்தில் அதனால் எந்தவிதமான சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் பாதிப்புகளும் ஏற்படாது என்பதைச் சூழலியல் துறை உறுதிசெய்ய வேண்டும். முன்பு இதற்கான கால அவகாசம் 600 நாட்களாக இருந்தது. மோடி அரசு இதை 170 நாள்களாகக் குறைத்தது....

பெரியாருடன் சிறை வாசம்

தி.மு.க. பிறந்த பிறகு பெரியாருடன் ஒரே சிறையிலிருந்த உணர்வுகளை நெகிழ்ச்சியோடு வெளிப்படுத்தி அண்ணா எழுதினார். திருச்சியில்  எனக்குக் கிடைத்த வாய்ப்பு எப்படிப்பட்டது தெரியுமா தம்பி! பெரியாரும் அதே நாளில் அதே விதமான தண்டனை பெற்ற அதே சிறைக்கு வந்தார். ‘ஆரிய மாயை’ என்னும் ஏடு தீட்டியதற்காக எனக்குச் சிறை. ‘பொன்மொழிகள்’ தீட்டியதற்காகப் பெரியாருக்குச் சிறை. திருச்சி கோர்ட்டாருக்கு இப்படியொரு காட்சியைக் காண வேண்டுமென்று ஆசை போலும்! இரண்டும் தனித் தனி வழக்குகள்; தனித் தனியாகத்தான் விசாரணைகள்; எனினும் தீர்ப்பு மட்டும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் அளிக்கப்பட்டது. பிரிந்து நெடுந்தூரம் வந்துவிட்ட என்னை, அன்று  அந்தக் கோர்ட்டில் பெரியாருக்குப் பக்கத்திலே நிற்கச் செய்து, வேடிக்கை பார்த்தது வழக்கு மன்றம். போலீஸ் அதிகாரிகள் அதைத் தொடர்ந்து ஒரே வேனில் ஏற்றிச் சென்றனர்.அதைத் தொடர்ந்து திருச்சி மத்தியச் சிறையிலே இருந்த அதிகாரி, பெரியார் கொண்டு வந்திருந்த சாமான்களைக் கணக்குப் பார்த்துச் சரியாக இருக்கிறதா என்று...

அந்த வசந்தம் அண்ணா

அண்ணா முதலமைச்சரான பிறகு ‘விடுதலை’ வெளியிட்ட பெரியார் 80ஆவது பிறந்த நாள் மலருக்காக அண்ணா எழுதிய கட்டுரை இது. கட்டுரைக்கு ‘அந்த வசந்தம்’ என்று அண்ணாவே தலைப்பிட்டார். பெரியாரின் வரலாற்றுச் சாதனைகளை கூர்மையாகப் படம் பிடிக்கும் கட்டுரை. எனக்கென்று ஒரு வசந்தகாலம் இருந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு – ஆண்டு பலவற்றுக்குப் பிறகு – அந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு இன்றையக் கவலைமிக்க நாள்களிலே எழ முடியாத புன்னகையைத் தருவித்துக் கொள்ளுகிறேன். பெரியாருக்கு அந்த வசந்த காலமும் தெரியும்; இன்று நான் பொறுப் பேற்றுக் கொண்டிருப்பதால் எழுந்துள்ள கவலையும் நன்கு புரியும். வசந்த காலம் என்றேனே, அந்த நாள்களில் நான் கல்லூரியிலிருந்து வெளியேறி, அவருடன் காடுமேடு பல சுற்றி வந்த நிலை. அந்தக் காடு மேடுகளில் நான் அவருடன் தொண்டாற்றிய போது, வண்ண வண்ணப் பூக்கள் குலுங்கி மகிழ்வளித்ததைக் கண்டேன்; நறுமணம் எங்கும் பரவிடக் கண்டேன். அப்போது, கலவரம் எழாமல்...

பெரியார் – ஃபிரெட்ரிக் டக்ளஸ் அடிமை சுதந்திரத்துக்கு எதிராக விடுதலைக் குரல்

1947, ஆகஸ்ட் 15 அன்று ‘சுதந்திரம்’ அறிவிக்கப்பட்டபோது அதைத் துக்க நாள் என்று அறிவித்தார் பெரியார். அதேபோல் அமெரிக்காவில் கறுப்பர் மக்களின் உரிமைக்குப் போராடிய ஃபிரடரிக் டக்ளஸ் 1776இல் அமெரிக்கா சுதந்திரம் பெற்றபோது அது கறுப்பர் இன மக்களுக்கு விடுதலை நாள் அல்ல என்று பேசினார். அவரது உரை பிற்காலத்தில் கறுப்பர் இன உரிமைப் போராட்டத்துக்கு வித்திட்டது. 1947ஆம் ஆண்டு பெரியார் விடுத்த அறிக்கையையும் பிரடரிக் டக்ளஸ் உரையையும் இளைய சமுதாயத்தின் வரலாற்றுப் புரிதலுக்காக ‘நிமிர்வோம்’ பதிவு செய்கிறது. “பிரிட்டிஷ்-பனியா-பார்ப்பனர் ஒப்பந்த நாள் – பெரியார் அறிக்கை: ஆகஸ்ட் 15-ந் தேதி சுயராஜ்யத்தைப் பற்றி ஏதேதோ கூறப்படுகிறது. பூரண சுயராஜ்யம் என்றும், அதற்காகக் கொண்டாட்டமென்றும் திட்டம் வகுக்கப்படுகிறது. இதைக் கண்டு யாரும் ஆச்சரியப்படுவதற்கில்லை; வேண்டு மானால் தன்மானமுள்ள காங்கிரஸ் திராவிடர்கள் அன்று வெட்கித் தலைகுனிய வேண்டும்; ஏன்? 1929ஆம் ஆண்டிலே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் எந்த அர்த்தத்தில் தீர்மானிக் கப்பட்டதோ...

“தேவை மானமும் மரியாதையும்; சோறு அல்ல!”

“தேவை மானமும் மரியாதையும்; சோறு அல்ல!”

அடிமை வகுப்பினர் சார்பில் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். முழு அரசுரிமை படைத்த சுதந்திர இந்தியாவில், ஒரு வாழ்க்கைத் தத்துவம் என்ற முறையிலும், ஒரு சமூக அமைப்பு என்ற முறையிலும் பார்ப்பனியம் அடியோடு ஒழித்து கட்டப்பட வேண்டும்; ஆழக் குழித் தோண்டிப் புதைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்பதில் எனக்கு எந்த அய்யமும் இல்லை. இதைத் தவிர, சமூக மேம்பாடு குறித்து அவர்களுக்கு எத்தகைய அக்கறையும் இல்லை என்று துணிந்து கூறுவேன். நேர்மையற்ற, கொடிய, நச்சுத்தனமான சமூக அமைப்பில் அவர்கள் அனுபவிக்கும் அவமதிப்பு, அவமரியாதை, ஏளனம், இகழ்ச்சி, நிந்தை, பரிகாசம் இவற்றுடன் ஒப்பிடும்போது அவர்களுடைய வறுமையும் இல்லாமையும் அத்தனை ஒன்றும் பெரிதல்ல. அவர்களுக்கு வேண்டியது மானமும் மரியாதையுமே தவிர, சோறு அல்ல. – டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 9- பக்கம் 211 நிமிர்வோம் பிப்ரவரி 2019 மாத இதழ்

‘தர’த்தின் பெயரால் இடஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் இப்போது ‘சாரத்தை’ சிதைக்கிறார்கள் இரா. மன்னர் மன்னன்

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10ரூ இட ஒதுக்கீடு என்ற மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் வெற்றி பெற்று தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்றுள்ளது. நாடாளு மன்றத்தில் ஒரு மசோதா வாக்கெடுப்புக்கு வரும்போது அதன் நோக்கம் என்ன என்றெல்லாம் பார்க்காமல், அதனால் பலன் அடையக் கூடியவர்கள் யார்? – என்று மட்டும் பார்த்தே நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்களோ என்ற கேள்வியை இந்த இட ஒதுக்கீட்டு மசோதாவின் வெற்றிஎழுப்பி உள்ளது. பொருளாதார ரீதியிலான இட இதுக்கீடு அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்பதும், முன்னர் இது போன்ற நடவடிக்கையை நரசிம்மராவ் அரசு மேற்கொண்ட போது அதனை நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்து இருந்தார்களா அல்லது அறியாதது போல காட்டிக் கொண்டார்களா எனத் தெரியவில்லை. இந்த மசோதாவின் மிகப் பெரிய அதிர்ச்சி களில் ஒன்று அதில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதற்கு அளிக்கப்பட்ட வரையறை, ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும்...

திராவிடத்துக்கு முகவரி தந்த கால்டுவெல் கவிஞர் வைரமுத்து

பிறப்புமுறை – ஒலிப்புமுறை – அமைப்புமுறை ஆகியவற்றால் திராவிட மொழிக் குடும்பம் ஒன்றென்பதும் அது சம்ஸ்கிருதத்துக்கு மாறுபட்டுத் தனித்துத் தோன்றியதென்பதையும் தரணிக்கு மட்டுமன்று தமிழர்க்கும் கால்டுவெல்லே உணர்த்தினார்.   ஓர் அதிசயம் 1814இல் நேர்ந்தது. தமிழ்நாட்டுக்கான சூரியோதயம் அன்று மேற்கில் நிகழ்ந்தது. அது கிழக்கு நோக்கிப் பயணப்பட்டு, தன் பேரொளியை இந்தியாவில் பரப்பிவிட்டு, தமிழ்நாட்டின் தென்கோடியில் மண்ணுக்குள் தன்னை மறைத்துக்கொண்டது. ஆனால், அதன் கற்றைகள் மட்டும் உலகின் விளிம்புகள்தோறும் இன்னும் வெளிச்சம் வீசிக்கொண்டிருக்கின்றன. அந்த வெளிச்சத்தின் பௌதிகப் பெயர் கால்டுவெல். அவர் 77 வயதில் மறைந்தபோது, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடையன்குடி கல்லறை மீது இங்கிலாந்திலிருந்து ஒரு பூ விழுந்தது. 1891 அக்டோபர் 19 நாளிட்ட ‘தி லண்டன் டைம்ஸ்’ இவ்வண்ணம் எழுதியது: “1856இல் முதன் முதலில் வெளியிடப்பட்ட அவரது திராவிடக் குழுமங்களின் ஒப்பிலக்கணம், மேற்கத்திய மொழி அறிஞர்களுக்கு ஒரு தேவ ரகசியக் கண் திறப்பாகவும், எதிர்ப்பாரற்ற – எவராலும் பின்...

வரலாற்று வெளிச்சத்தில் கீழ்வெண்மணி (1) பசு. கவுதமன்

வரலாற்று வெளிச்சத்தில் கீழ்வெண்மணி (1) பசு. கவுதமன்

1968 டிசம்பர் 25ஆம் நாள் ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நாகப்பட்டினம் அருகே உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில்  44 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கொடூரமான குருதி படிந்த  வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை வெளிக் கொண்டு வருகிறது, இத் தொடர். ஒரு முன்னுரையாக: 1989-90களுக்குப் பின்னால் ஏற்பட்ட ‘தலித் அறிவுஜீவி’களின் வளர்ச்சிப் பார்வை அல்லது ஆய்வு நோக்கு – எது எப்படியோ தந்தை பெரியாரையும், திராவிடர் இயக்கத்தையும் தாழ்த்தப்பட்ட, ஆதி திராவிட, பட்டியலின மக்களுக்கு எதிரானவர்களாகக் கட்டமைப்பதில் மிகக்கவனம் எடுத்துக் கொண்டு செயல்பட்டன என்று சொன்னால் அது மிகையில்லை. என்னுடைய எழுத்துக்கள் எதுவும் ஆய்வுக்கும், விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவை அல்ல. பெரியாரும், திராவிடர் இயக்கமும் அதற்கு உட்பட்டது தான். ஆனால், விமர்சனம் என்ற பெயரில் அவதூறு களையும், காழ்ப்புணர்ச்சிகளையும், அழிச்சாட்டியமான விதண்டாவாதங்களையும் கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் அறிவு நாணயம் என்று விளங்கவில்லை. காரல் மார்க்ஸ் தன்னை, தன்னுடைய சித்தாந்தத்தை ‘சர்வரோக நிவாரணி’ என்று...

அண்ணா தந்த அறிவாயுதங்கள்

அண்ணாவின் 50ஆவது நினைவு நாளில் அவரது எழுத்தும் பேச்சும் தமிழின விடுதலைக்கான அறிவாயுதங்களாகத் திகழ்ந்து கொண்டிருக் கின்றன. குறுகிய காலம் தான் அவர் முதல்வர். அவரது முப்பெரும் சாதனைகள் – இப்போது தமிழகத்தின் தனித்துவத்துக்கான வரலாற்று அடையாளங்களாக நிலை பெற்றுவிட்டன. தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இந்திய தேசிய வரைபடத்தில் தமிழ்நாடு மட்டுமே சமூகநீதி மண்ணாக அடையாளம் காட்டுகிறது. மும்மொழித் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டிலிருந்து இந்தியை விரட்டினார். அதுவே இந்திய தேசியத்துக்குள் தமிழகம் தன்னை முழுமையாக ‘கரைத்துக் கொள்ளாது’ என்பதை உணர்த்தி நிற்கிறது. புரோகித மந்திரங்கள் வழியாக நடத்தப்படும் திருமணங்கள் மட்டுமே திருமணத்தை உறுதிப்படுத்தும் என்ற வேத மரபைத் தகர்த்து சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் தந்தார். தமிழரின் பண்பாடு வேத மரபுக்கு முரணானது என்பதை இந்தச் சட்டம் உரத்து முழக்கமிடுகிறது. மாறி வரும் அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு மாநில சுயாட்சி முழக்கத்தை முன் வைத்தார். அந்த உரிமை...

வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள்: சென்னையில் கழகம் நடத்திய கருத்தரங்கு

வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள்: சென்னையில் கழகம் நடத்திய கருத்தரங்கு

காந்தியார் நினைவுநாளையொட்டி வரலாற்றில் ‘பார்ப்பனிய வன்முறைகள்’ எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை நிருபர்கள் சங்க அரங்கத்தில் 24.2.2019 அன்று மாலை 5 மணியளவில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமை தாங்கினார். கார்த்தி இராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். ‘இந்து இராஷ்டிரத்தின் இரத்த சாட்சிகள்: தபோல்கரி லிருந்து கவுரி லங்கேஷ்வர் வரை என்ற தலைப்பில் தோழர் துரை உரையாற்றினார். கோல்வாக்கர் கூறிய ‘இந்து இராஷ்டிரம்’ குறித்தும் பஜ்ரங்க்தள் ஆர்.எஸ்.எஸ். போன்ற ‘சங்பரிவார்’ அமைப்புகள் இரகசிய செயல் திட்டங்கள், தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் படுகொலைக்குப் பின்னால் உள்ள மதவெறி அமைப்புகள் குறித்தும் விளக்கிப் பேசினார். ‘இராமன் அயோத்தியில் பிறந்தானா? வரலாறும் கற்பிதங்களும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய மா.கி.எ. பிரபாகரன், இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியே இப்போதுள்ள அயோத்தி இலலை என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்கினார். வால்மீகி இராமாயணம் மட்டுமல்லாது, பல்வேறு இராமாயணங்கள் இருப்பதையும் ஒவ்வொன்றிலும்...

மிரட்டிய ஆளுநர்கள்: மண்டியிட்ட ஆட்சியாளர்கள்!

மிரட்டிய ஆளுநர்கள்: மண்டியிட்ட ஆட்சியாளர்கள்!

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களை ஆளுநர்களாக்கி ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்தவர்கள்தான் இப்போது வாக்கு கேட்டு வருகிறார்கள். அரசின் திட்டப் பணிகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் செய்தார். அதிகாரிகளை நேரடியாக அழைத்துப் பேசி ஆணைகளைப் பிறப்பித்தார். ஆளுநரின் இந்த அத்துமீறலை எடப்பாடியார் ஆட்சி எதிர்க்க வில்லை. கைகட்டி வாய் பொத்தி வேடிக்கைப் பார்த்தது. எதிர்க்கட்சியான தி.மு.க. தான் ஆளுநரின் இந்த அத்துமீறலை எதிர்த்து அவர் சென்ற இடமெல்லாம் கருப்புக்  கொடி போராட்டங்களை நடத்தியது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி தேர்வு செய்த முதலமைச்சர் சசிகலாவை பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்து இழுத்தடித்தார் தமிழக கவர்னர், வித்யாசாகர் ராவ். தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்து குழுவின் பரிந்துரைப்படி துணை வேந்தர் களை தேர்வு...

தமிழ்நாட்டுப் பணிகளை வடநாட்டார் பறிப்பதை இனியும் பொறுக்க முடியுமா?

தமிழ்நாட்டுப் பணிகளை வடநாட்டார் பறிப்பதை இனியும் பொறுக்க முடியுமா?

தமிழ்நாட்டு வேலை வாய்ப்புகளை வடநாட்டுக்காரர்களுக்கு வாரி கொடுத்ததை மறக்க முடியுமா? 2013 முதல் 2016 வரை மத்திய அரசு தேர்வாணையத்தில் உருவாக்கப் பட்ட பணியிடங்களில் தமிழ்நாட்டில் பணிகளில் அமர்த்தப்பட்ட வடநாட்டுக்காரர்கள் எவ்வளவு பேர் தெரியுமா? 1988 பேர் தமிழர் களுக்குக் கிடைத்தது 110 பணிகள் மட்டுமே. (6 சதவீதம்) பீகார் – இராஜஸ்தான் மாநிலங்களின் பயிற்சி நிறுவனங்கள் தேர்வாணையத்திடம் ‘கள்ளக் கூட்டு’ வைத்து தமிழ்நாட்டுக்குள் முறைகேடாக வடநாட்டுக்காரர்களை வேலைகளில் திணித்ததை மறக்க முடியுமா? – இப்படி முறைகேடாக சென்னை வருமான வரித் துறையில் வேலைக்கு வந்த 3 வடநாட்டுக்காரர்கள் கண்டறியப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர். 2014ஆம் ஆண்டு மத்திய தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் வட மாநிலத்துக்காரர்கள் இலஞ்சம் கொடுத்து தேர்வில் பெற்றி பெற்றது கண்டறியப்பட்டு, பிறகு தேர்வே இரத்து செய்யப்பட்டது. அஞ்சல் துறையையும் விட்டு வைக்கவில்லை. கடைநிலை ஊழியர் களுக்கான தேர்வுகளை அந்தந்த மாநில அரசுகளே நடத்தி மாநில மக்களுக்கு வேலை...

ஈரோடு சித்தோட்டில் தடையைத் தகர்த்து கழகம் நடத்திய மகளிர் நாள் கூட்டம்

ஈரோடு சித்தோட்டில் தடையைத் தகர்த்து கழகம் நடத்திய மகளிர் நாள் கூட்டம்

திவிக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக 08.03.2019 வெள்ளியன்று, சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் நடக்கவிருப்பதாக இருந்த  உலக மகளிர் தின விழா நிகழ்விற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. மறுப்பதற்கு அவர்கள் தரப்பு சொல்லியக் காரணங்கள் தர்க்கமற்றவை. உள்நோக்கம் கொண்டவை. இனியும் அவர்களிடம் சுமூகப் போக்குடன் பயணிப்பதென்பது சுயமரியாதையை அடகு வைப்பதற்குச் சமமென உணர்ந்து, தோழர்கள் களமிறங்கினர். மாநிலப் பொறுப்பாளர்களான ப. இரத்தினசாமி, திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னிர்செல்வம், மடத்துக்குளம் மோகன் ஆகியோரும் மாவட்டப் பொறுப்பாளர்களான எழிலன், வேணுகோபால், சண்முகப்பிரியன், கிருஷ்ணமூர்த்தி, மரவபாளையம் குமார் ஆகியோரும் மணிமேகலை, ராசிபுரம் சுமதி, ஜோதி, மலர், கவிப்பிரியா, சித்ரா, மகேஷ்வரி, கமலா, சத்யராஜ், சௌந்தர், இந்தியப்பிரியன், ரமேஷ், ரவி, செந்தில் எனப் பெருந்திரளோடு சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கூடினார்கள். அதன்பின் அங்கே வந்த காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டக் கூட்டத்தை எதற்காக நடத்துகிறீர்கள்? சட்டத்தை மீறுகிற செயல் என மிரட்டுகிறத் தொனியில் கூற தோழர்...

தலைநகரில் தொடங்கி வைத்தது திராவிடர் விடுதலைக் கழகம் மணியம்மையார் நூற்றாண்டு விழா; மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம்

தலைநகரில் தொடங்கி வைத்தது திராவிடர் விடுதலைக் கழகம் மணியம்மையார் நூற்றாண்டு விழா; மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம்

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு 2019 மார்ச் 10இல் தொடங்குகிறது. மார்ச் 9ஆம் தேதியன்றே சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாட்டில் அன்னையின் நூற்றாண்டு விழாவை முதன்முதலாக தொடங்கி வைத்துள்ளது. வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு மற்றும் மகளிர் தின விழா, பெரம்பூர் பாரதி சாலையில் எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இராஜி தலைமை தாங்கினார். இரண்யா வரவேற்புரையாற்றினார். தோழர்கள் தேவி, ஜெயஸ்ரீ, வெண்ணிலா, சங்கவி முன்னிலை வகித்தனர். ‘விரட்டு’ கலைக் குழுவினரின் பறை இசை, நாடகம், கலை நிகழ்வுகளோடு நிகழ்ச்சிகள் நடந்தன. தமிழ்நாடு அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, மணிமேகலை, புதிய குரல் நிறுவனர் ஓவியா, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். அன்னை மணியம்மையாரின் தியாக வாழ்வு,  எளிமை, பெரியாரை 95 ஆண்டுகள் வரை அவர் உடல்நலன் பேணிக் காத்த அர்ப்பணிப்பு, இராவண லீலா...

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (11) அரசை மிரள வைத்த தேசியக் கொடி எரிப்பு அறிவிப்பு

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (11) அரசை மிரள வைத்த தேசியக் கொடி எரிப்பு அறிவிப்பு

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். பகுதி 10 1955 ஜூலை 17இல் திருச்சியில் நடந்த திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்தும், இந்தியக் கூட்டாட்சிக்குள் தமிழர்கள் இருக்க விரும்பவில்லை என்பதை உணர்த்தவும், 1955 ஆகஸ்டு 1இல் நாடெங்கிலும் இந்தியத் தேசியக் கொடியை எரிக்க வேண்டும் என்ற தமது போராட்டத் திட்டத்தைப் பெரியார் அறிவித்தார். “இந்திய அரசாங்க தேசியக் கொடியைக் கொளுத்துவது என்பது மிகக் கடினமான தீர்மானம் என்பதாகக் கருதக் கூடும். இது இந்திய அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ ஒழித்துக் கட்டவோ கருத்துக் கொண்டு செய்யப்பட்ட கொடி கொளுத்தும் தீர்மானம் அல்ல.” “எங்களுக்கு – தமிழர்களுக்கு – தமிழ் நாட்டாருக்கு இந்திய அரசாங்கம் வேண்டாம்; தமிழ்நாடு – தமிழர்கள் இந்திய அரசாங்கத்தின் கூட்டு...

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (4) பூணூலும் கருஞ்சட்டையும் ஒன்று தானா? ஒ. சுந்தரம்

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (4) பூணூலும் கருஞ்சட்டையும் ஒன்று தானா? ஒ. சுந்தரம்

பெரியார் இயக்கத்தை நோக்கி சமூக வலைதளங்களில் பார்ப்பனிய நேரடி – மறைமுக ஆதரவு சக்திகள் முன் வைத்து வரும் கேள்விகளுக்கு நெத்தியடி பதில். பகுதி 3 கேள்வி : ‘ஹிந்துக்கள்’ தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். முஸ்லிம்கள் பர்தா அணிகிறார்கள். ‘ஹிந்துக்கள்’ தாலி அறுக்கும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தர்கள் மோதிரம் கழற்றும் போராட்டமும், பர்தா கழற்றும் நிகழ்ச்சியும் நடத்தும் ஆண்மை இருக்கிறதா? பதில் : ‘தாலி’  அறுப்புப் போராட்டம் என தவறாகக் கூறுவது பற்றியும் ‘ஹிந்துக்கள்’ பற்றியும் ஏற்கெனவே விளக்கியாகிவிட்டது. சிறுபான்மை கிறித்துவ மக்கள் மோதிரம் மாற்றி, திருமண பந்தத்தைக் காட்டுவது, ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவிப்பது போல், இந்துக்கள் என்பாரும் ஆணும் பெண்ணுமாகவா தாலி கட்டிக் கொள்கிறார்கள்? இல்லையே! பெண்ணுக்கு மட்டும்தானே தாலி? கிறித்துவ சிறுபான்மை மக்களின், இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் பர்தா அணிதல் உட்பட்ட பழக்க வழக்கங்கள், அந்த மதக் குழுக்களின் அடையாளங்கள், அவற்றை மதித்து...

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (3) காந்தியிலிருந்து கவுரி வரை கொலை செய்தது யார்? ஒ. சுந்தரம்

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (3) காந்தியிலிருந்து கவுரி வரை கொலை செய்தது யார்? ஒ. சுந்தரம்

பெரியார் இயக்கத்தை நோக்கி சமூக வலைதளங்களில் பார்ப்பனிய- பார்ப்பனிய நேரடி – மறைமுக ஆதரவு சக்திகள் முன் வைத்து வரும் கேள்விகளுக்கு நெத்தியடி பதில். பகுதி 2 கேள்வி : நாட்டில் நடந்துள்ள கொலைகள், குண்டு வெடிப்புகள், கொள்ளைகள், ஹவாலா திருட்டுகள், இவற்றில் இந்துக்கள் பங்கு எவ்வளவு சதவிகிதம்? பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா? அதை மேடையில் பட்டியலிடும் துணிவு இருக்கிறதா? பதில் : தேசியக் குற்றப் புலனாய்வு ஆய்வு மையத்திடம் கேட்க வேண்டிய கேள்வியை உள் நோக்கத்துடன் எம்மிடம் கேட்கிறீர். சிறுபான்மை முஸ்லீமானவர்களை குறை சொல்லும், குற்றம் சாட்டும் உங்கள் காவி வண்ண எண்ணம் எமக்குப் புரியாமலில்லை. கொலை, களவு, மோசடிக் குற்றங்களில் ஈடுபடுவோர் எவராயினும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இவர்களுக்கு ஜாதி, மதம், கடவுள், இனம் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. ஏதாவது ஒரு பயன் நோக்கிச் செயல்படுவதே நோக்கமாய் கொண்டவர்கள். எனினும், பாபர்...

புரட்சிப் பெரியார் முழக்கம் வாசகர்களுக்கு…

புரட்சிப் பெரியார் முழக்கம் வாசகர்களுக்கு…

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா அனுப்பிய தோழர்களுக்கு – இதழ் ஒரு வார இடைவெளிக்குப் பிறகே கிடைக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். சந்தா அனுப்பியவுடன் அடுத்த இதழ் உடனே கிடைக்கும் என்று தோழர்கள் எதிர்பார்ப்பு இயல்பானதே. ஆனால் சந்தா கிடைக்கப் பெற்று முகவரிப் பட்டியலில் இணைத்து சந்தாதாரருக்கு சென்றடைவதற்கு இடையில் ஒரு இதழுக்கான கால அவகாசம் தேவையாகிறது என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். சந்தா செலுத்திய பிறகு ஒரு இதழ்கூட கிடைக்கவில்லை என்றால் அது நிர்வாகத்தின் கோளாறு. உடனே அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டுகிறோம். இதழ் விட்டு விட்டு கிடைக்கவில்லை என்றால் அது உள்ளூர் அஞ்சலகத்தின் கோளாறு. அஞ்சலகத்திற்கு நேரில் சென்று ஒரு முறை புகார் அளித்தால் இந்த கோளாறை சரி செய்து விடலாம். இதழ் குறித்து தொடர்புக்கு: 9841 489896 (பொறுப்பாளர்) 9444 115133 (ஆசிரியர்) பெரியார் முழக்கம் 07032019 இதழ்

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (10) ஒரே சிறையில் பெரியாரும் அண்ணாவும்

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (10) ஒரே சிறையில் பெரியாரும் அண்ணாவும்

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். சென்ற இதழ் படிக்க பகுதி 9 பொன்மொழி நூலைப் பறிமுதல் செய்து, பெரியாருக்குத் தண்டனை வழங்கி, அவரது வாகனத்தையும் ஏலம் விட்ட அரசின் அடக்கு முறையை எதிர்த்து, கருஞ்சட்டைத் தோழர்கள் பொங்கி எழுந்தனர். தமிழ்நாடு முழுதும் கண்டனக் கூட்டங்கள் போராட்டங்கள் வெடித்தன. தீர்ப்பு வெளியான அன்றே ஈரோட்டில் கண்டனக் கூட்டம் சுவரொட்டி இயக்கங்கள் தொடங்கி விட்டன. சென்னை யில் தொடர்ந்து ஒரு வாரம் கண்டனக் கூட்டங்கள் அறிவிக்கப் பட்டன. சென்னை ராபின்சன் பூங்காவில் நடந்த கண்டனக் கூட்டத்தில் எஸ். இராம நாதன், சாமி சிதம்பரனார், ‘சண்டே அப்சர்வர்’ பி. பால சுப்பிரமணியம், குத்தூசி குருசாமி கண்டன முழக்கமிட்டனர். பார்ப்பன ஏடுகளான ‘ஹிந்து’, ‘சுதேச மித்திரன்’ தீயிட்டு எரிக்கப் பட்டன. கிளர்ச்சியில்...

கவிஞர் கலி. பூங்குன்றனுக்கு கழக சார்பில் கொளத்தூர் மணி வாழ்த்து

கவிஞர் கலி. பூங்குன்றனுக்கு கழக சார்பில் கொளத்தூர் மணி வாழ்த்து

23.02.19 அன்று செஞ்சி யில் ‘பெரியார் அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு பெரியார் சாக்ரட்டீஸ் (மாவட்ட செயலாளர்) தலைமையில்  நடைபெற்றது.  மாவட்டக் கழகத் தலைவர் பூஆ.இளைய ராசன் வரவேற்புரையாற்றி னார். நிகழ்ச்சியில்   பழங்குடி மக்கள் முன்னணி சுடரொளி சுந்தரம்,  த.மு.மு.க. சையத் உசேன்,  அம்பேத்கர் மக்கள் கட்சி மழைமேனிப் பாண்டியன் ,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் வெற்றிச்செல்வன்,  சி.பி.அய் வட்டச் செயலாளர் செல்வராசு, வர்த்தக சங்க விழுப்புரம் மாவட்டச் செயலாளர் கண்ணன்,   மதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே மணி மற்றும்  தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். நிறைவுரையாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்ச்சி தொடங்கும்போது ஒரு மகிழ்ச்சியான தகவல் வந்துள்ளது திராவிடர் கழகத்தின் அடுத்தத் தலைவராக கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் தஞ்சையில் நடக்கும் மாநாட்டில் அறிவித்துள்ளார். எனவே கவிஞர் கலிபூங்குன்றன் அவர்களுக்கு நம்...