‘ஓட்டுக்கு நோட்டு’ பெரியார் சொன்ன கதை செ.கார்கி
இந்திய சட்டசபை தேர்தல் ஆரம்பமாகி விட்டது. இது வேலையில்லா வாலிபர்களின் கஷ்டத்தை ஒருவாறு குறைக்க அனுகூலமாயிருக்கிறது என்று சொல்லலாம். அது போலவே கொள்கையோ, விஷயமோ இல்லாத பத்திரிக்கைகாரர்களுக்கும் ஒரு அளவு கஷ்டம் நீங்கிற்று என்றும் சொல்லலாம். – பெரியார் மக்களால் வாக்களிக்கப்பட்டு ஜனநாயக முறையில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை என்பது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த வடிவமாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் சாதி, மதம், பணம், மது போன்றவையே பிரதானமாகத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக விளங்கி வருகின்றன. அதனால் சாதி, மதம், முதலாளித் துவம் போன்றவற்றை ஒழிக்க நினைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தத் தேர்தல் அரசியலை வெறுக்கக் கூடியவர் களாகவும் அதன் மீது பெரும் அதிருப்தி கொண்டவர்களாகவுமே இருக் கின்றார்கள். பெரியாருக்கும் இந்தத் தேர்தல் அரசியலின் மீது பெரிதாக ஈடுபாடு எல்லாம் இருந்தது கிடையாது. அதன் மீதான தன்னுடைய கடும் விமர்சனங்களை தன் வாழ்வின் இறுதிவரை...