“தேவை மானமும் மரியாதையும்; சோறு அல்ல!”

அடிமை வகுப்பினர் சார்பில் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

முழு அரசுரிமை படைத்த சுதந்திர இந்தியாவில், ஒரு வாழ்க்கைத் தத்துவம் என்ற முறையிலும், ஒரு சமூக அமைப்பு என்ற முறையிலும் பார்ப்பனியம் அடியோடு ஒழித்து கட்டப்பட வேண்டும்; ஆழக் குழித் தோண்டிப் புதைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்பதில் எனக்கு எந்த அய்யமும் இல்லை. இதைத் தவிர, சமூக மேம்பாடு குறித்து அவர்களுக்கு எத்தகைய அக்கறையும் இல்லை என்று துணிந்து கூறுவேன். நேர்மையற்ற, கொடிய, நச்சுத்தனமான சமூக அமைப்பில் அவர்கள் அனுபவிக்கும் அவமதிப்பு, அவமரியாதை, ஏளனம், இகழ்ச்சி, நிந்தை, பரிகாசம் இவற்றுடன் ஒப்பிடும்போது அவர்களுடைய வறுமையும் இல்லாமையும் அத்தனை ஒன்றும் பெரிதல்ல. அவர்களுக்கு வேண்டியது மானமும் மரியாதையுமே தவிர, சோறு அல்ல.

– டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 9- பக்கம் 211

நிமிர்வோம் பிப்ரவரி 2019 மாத இதழ்

You may also like...