Author: admin

சிறைவாசிகளை விடுதலை செய்வதில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுவது ஏன்? கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேள்வி

  பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் நீண்டகால சிறைவாசிகளையும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட் டோரை அரசியல் அமைப்பு சட்டம் 161வது பிரிவை பயன்படுத்தி தமிழக அரசு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை, மதுரை, கோவை நகரங்களில் மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை பிப்ரவரி 7ஆம் தேதியன்று நடத்தியது. மதுரை பழங்காநத்தம் பகுதியில் பிப்ரவரி 7ம் தேதி மாலை 4 மணியளவில் மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஐதர்அலி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ம.ம.க. பொதுச் செயலாளர் அப்துல் சமது, மனித உரிமை அமைப்பு சார்பில் ஹென்றி டிபேன், புகழேந்தி, அருண்சோரி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தனது உரையில், “இந்த நாட்டை ஒரு ஜனநாயக...

நீண்டகால முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

மனித நேய மக்கள் கட்சி சார்பில் நேற்று 07.02.2016 அன்று மாலை மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசே அரசியலமைச்சட்டம் 161 அய் பயன்படுத்து ! 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அபுதாஹீர் உள்ளிட்ட முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய் ! பேரறிவாளன் உள்ளிட்ட வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய் ! என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஹைதர் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, மக்கள் கண்காணிப்பகம் தோழர் ஹென்றி டிபேன், தோழர் எவிடன்ஸ் கதிர், தமிழ் தேச மக்கள் கட்சியைச் சார்ந்த வழக்கறிஞர் தோழர் புகழேந்தி, சி.பி.அய்( எம்.எல்) மக்கள் விடுதலை தலைவர் தோழர் அருண்சோரி ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர் மம

திலீபன் மகேந்திரன் கையை முறித்த காவல்துறைக்கு கழகம் கடும் கண்டனம்

இந்திய தேசியக் கொடியை எரிக்கும் படத்தை தனது முகநூலில் வெளியிட்ட தற்காக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த தோழர் திலிபன் மகேந்திரனை காவல்துறை கைது செய்து, அவரது கையையும் மூன்று விரல்களையும் இரும்புக் கம்பியால் உடைத்திருக்கிறது. கொடி எரிப்பு அவமதிப்பு என்றால், அதற்கான சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடரட் டும். ஆனால், காவல்துறை காட்டு மிராண்டித்தனமாக கையை உடைக் கும் அளவுக்கு போயிருக்கிறது. திராவிடர் விடுதலைக் கழகம், காவல் துறையின் இந்த செயலை வன்மை யாகக் கண்டிக்கிறது. கடந்த 6ஆம் தேதி மயிலாடுதுறையில் “ஜாதிக் கொரு சுடுகாடு; இது சுதந்திர நாடா?” என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் இந்த செயலுக்காக காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துப் பேசினார். சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தின் இந்த வன்முறை வெறியைக் கண்டித்து, கடந்த 8ஆம் தேதி காவல் நிலையத்தை...

மதிப்புமிக்க பன்னாட்டு மன்னிப்பு அவை 2016 விருது – ஹென்றி திபேன்

மதிப்புமிக்க பன்னாட்டு மன்னிப்பு அவையின் எட்டாவது விருதைப் பெரும் தோழர் ஹென்றி திபேன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள். ஓங்கட்டும் உங்கள் மனித உரிமைப் பணிகள்! அமையட்டும் ஒடுக்குமுறையற்ற சமத்துவ சமுதாயம்!

கழக பொதுக்கூட்டத்திற்கு உயர் நீதி மன்றம் அனுமதி ! ”ஜாதிக்கொரு சுடுகாடு,இது சமத்துவ நாடா?”

கழக பொதுக்கூட்டத்திற்கு உயர் நீதி மன்றம் அனுமதி ! ”ஜாதிக்கொரு சுடுகாடு,இது சமத்துவ நாடா?” வழுவூர் திருநாள் கொண்டசேரி தலித் மக்கள் மீதான ஜாதிய அடக்குமுறைகளை கண்டித்து பொதுக்கூட்டம். நாள் : 06.02.2016 சனிக்கிழமை மாலை 5.00 மணி. இடம் : விஜயா தியேட்டர் எதிரில்,மயிலாடுதுறை. ✪ தமிழகம் முழுதும் அனைத்து கிராமங்களிலும் நகரங்களிலும் மின் மயானம் அமைத்திடு ! ✪ மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூர் கிராமத்தில் நிலவும் சாதிய பாகுபாடுகளைக் களைந்திடு ! ✪ இரட்டை சுடுகாட்டு முறையை ஒழித்திடு ! எனும் கோரிக்கைகளை முன் வைத்து பொதுக்கூட்டம். சிறப்புரை : ‘தோழர் கொளத்தூர் மணி,’ தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். ‘தோழர் விடுதலை ராஜேந்திரன்’, பொதுச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். ‘தோழர் வே.மதிமாறன்’,எழுத்தாளர். – திராவிடர் விடுதலைக் கழகம் மயிலாடுதுறை – நாகை மாவட்டம். முன்னதாக இந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி 04.02.2016 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா...

கல்வி நிறுவனங்களும் ஜாதிய பாகுபாடுகளும் – தி இந்து 04022016 தினமணி

http://www.thehindu.com/news/cities/Madurai/higher-education-campuses-are-antidalit/article8191264.ece?css=print http://www.dinamani.com/edition_madurai/madurai/2016/02/04/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/article3260583.ece?service=print  

கல்வி நிறுவனங்களும் ஜாதிப் பாகுபாடும்’ கருத்தரங்கம் மதுரையில் 03022016

3-2-2016 அன்று மாலை 5-00 மணிக்கு, மதுரை, தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் துரைராஜ் பீட்டர் அரங்கத்தில், எவிடன்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பில், ‘கல்வி நிறுவனங்களும் ஜாதிப் பாகுபாடும்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். தோழர் முத்து அனைவரையும் வரவேற்றார். கருத்தரங்கின் நோக்கங்களை விளக்கி எவிடன்ஸ் நிறுவன செயல் இயக்குநர் கதிர் தொடக்கவுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து எழுத்தாளர் கவின் மலர், சமூக ஆர்வலர் ஜோசுவா ஐசக், பேராசிரியர் செம்மலர் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் நிறைவுரை ஆற்றினார். கருத்தரங்கில் ரோகித் வெமுலாவின் மரணம் குறித்தும், மத்திய பா.ஜ.க ஆட்சியின் தலித், சிறுபான்மையோர் விரோத போக்கு குறித்தும், ஏற்கனவே உயர் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த மரணங்களைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகளைச்...

மாநாட்டில் நன்கொடை

மாநாட்டில் நன்கொடை

தருமபுரி மாவட்டம் , பாலக்கோடு வட்டம், மேக்கனாம்பட்டி சு. வெங்கடேசன்-அ.வாசுகி இணையரின் மகள் இசைப்பிரியாவின் முதலாம் ஆண்டு (6.2.2016) பிறந்த நாள் மகிழ்வாக, ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடையாக சங்கராபுரம் கழக மாநாடு மேடையில் பொதுச் செயலாளரிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 04022016 இதழ்

வினா… விடை…!

வினா… விடை…!

உயர்நீதிமன்றத்தின் 1200 நீதிபதிகளில் பட்டியல் இனப் பிரிவினர் 18 பேர் மட்டுமே. – செய்தி இந்த 18 பேர் எப்படி வர முடிந்தது என்பதை கண்டுபிடிக்க உச்சநீதிமன்றம் ஒரு விசாரணைக் கமிஷனைப் போடாமல் இருந்தால் சரி. பழ. கருப்பையா அ.இ.அ.தி.மு.க.விலிருந்து நீக்கம். – செய்தி அந்த கட்சி வரலாற்றில் முதுகெலும்போடு எதிர்ப்புக் குரல் கொடுத்து அதற்காகவே நீக்கப்பட்ட முதல் மனிதர். எனவே இது ‘சாதா’ நீக்கமல்ல; ‘புரட்சி’ நீக்கம்! ‘கும்பகோணம்’ என்ற சொல்லுக்கு ‘ஏமாற்றுதல்’, ‘மோசடி’ என்று 19ஆம் நூற்றாண்டு ஆங்கில அகராதியில் கூறப்பட்டிருந்தது. – ‘தமிழ் இந்து’ செய்தி ‘கும்பகோணம்’ மடத்தை ஆதிசங்கரர் மடம் என்று சங்கராச்சாரி ஏமாற்றியதால் அப்படி ஒரு அர்த்தம் வந்தது என்பதே அர்த்தத்துக்குள் அடங்கியுள்ள அர்த்தம் என அறிக! நடிகை ஹேமமாலினி நாட்டியப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.70,000-த்துக்கு மகாராஷ்டிர பா.ஜ.க. அ ரசு வழங்கியது. – செய்தி இது ரொம்பப் பழசு....

புரட்சிப் பெரியார் முழக்கம் வங்கி கணக்கு

புரட்சிப் பெரியார் முழக்கம் வங்கி கணக்கு

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வங்கிக் கணக்கு கரூர் வைஸ்யா வங்கி, அடையாறு கிளை ‘கரண்ட்’ அக்கவுண்ட். எண் : 1257115000002041 ifsc kvbl0001257 பெரியார் முழக்கம் 04022016 இதழ்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (10) நடுவண் அரசின் எதிர்ப்புக்கு அஞ்சிய ம.பொ.சி. வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (10) நடுவண் அரசின் எதிர்ப்புக்கு அஞ்சிய ம.பொ.சி. வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மை யில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி “பொது வாழ்வில் எவ்வளவோ இன்னல்களுக் கிடையே நான் கடை பிடித்து வரும் ஒழுக்கத்தை! மக்கள் ஐயுறும் வகையிலும் என் மீது பழி சுமத்திப் பிரச்சாரம் செய்தனர். அந்தப் பொய் குற்றச்சாட்டுகள் “தினத்தந்தியில்” முழுப்பக்க அளவில் பெரிய தலைப்பு களில் அவ்வப்போது பிரசுரிக்கப்பட்டு வந்தன. என்ன காரணத்தினாலோ திரு. காமராசருக்கு ஆதரவாக இருந்தது அந்நாளில் சி.பா.ஆத்தினாரின் நேர்பார்வை யில் நடத்தப்பட்டு வந்த ‘தினத்தந்தி’ அப்போதும் நானும் திரு. சி.பா. ஆதித்தனாரும் நண்பர்களாகத் தான் இருந்தோம். ஆயினும் அவருக்கு என்னிடமிருந்த நட்பைவிட திரு. காமராசரிடமிருந்த “பக்தி (?)” யே விஞ்சியிருந்தது. “வடக்கெல்லை – தெற்கெல்லைப் பிரச்சனைகள் பற்றி நான் பொதுக் கூட்டத்திலோ, நிருபர்களுக்கும், பேட்டிகளிலோ மத்திய அரசைக்...

மரபணு ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மை குப்தர் ஆட்சிக் காலத்திலிருந்து ஜாதி கலப்பு திருமணங்கள் தடைபடுத்தப்பட்டன

மரபணு ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மை குப்தர் ஆட்சிக் காலத்திலிருந்து ஜாதி கலப்பு திருமணங்கள் தடைபடுத்தப்பட்டன

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னதாக ஜாதிக் கலப்புத் தடுக்கப்பட்டு உயர்ஜாதியினரின் ஆதிக்கத் திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது என மரபணு தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் தேசிய பயோ மெடிக்கல் ஜெனோமிக்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வு கூறுகிறது. இனக் குழுக்களாக இருந்த சமூகங்கள் எப்போது சாதி அடையாளம் உள்ளவையாக மாறின? சுமார் 70 தலைமுறைகளுக்கு முன்னதாக அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன்னதாக சாதிக் கலப்பு தடுக்கப் பட்டு ஒவ்வொரு ஜாதிக்குள்ளேயே திருமணம் மேற்கொள்ளப்பட்டு (அகமண முறை) ஜாதி அமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டு வலுப்பெற்றதாக மாறியது என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்காக 20 இனங்களைச் சேர்ந்த பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த 367 தனி நபர்களின் மரபணுக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆய்வுக் கான மாதிரிகள் ஜாதிவாரியாகவும் மொழிவாரி யாகவும் நிலவியல் வேறுபாடுகளை கவனத்தில் கொண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டன. குஜராத், மணிப்பூர், மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த பார்ப்பனர்களும் மராத்தியர்களும் திராவிடச் சமூகங்களைச் சேர்ந்த பள்ளர், இருளர்...

ரோகித் வெமுலா மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

அய்தராபாத் பல்கலைக்கழக தலித் மாணவர் ‘ரோகித் வெமுலா’ – பல்கலையின் பார்ப்பன ஜாதிப் புறக்கணிப்புக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டார். இது நிறுவனம் நடத்திய படுகொலை. இந்த சாவுக்குக் காரணமான மத்திய அமைச்சர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கழக சார்பில் பிப்ரவரி முதல் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதேபோல் தமிழகத்தில் கோரத்தாண்டவ மாடும் தீண்டாமைக் குற்றங்களைக் கண்டித்தும், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்த செய்தித் தொகுப்பு: சென்னை : சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே பிற்பகல் 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கி 6.30 வரை நீடித்தது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எஸ்.டி.பி.அய். தலைவர் தேஹலான் பாகவி, வாலாஜா வல்லவன் (மா.பெ.பொ.க.), குமரன் (த.பெ.தி.க.), வே.மதிமாறன் (எழுத்தாளர்), செந்தில் (இளந் தமிழகம்), கவின்மலர் (ஊடகவியலாளர்), வழக்கறிஞர்கள்...

‘காட்டாறு’ இதழ் குழு: ஒரு முக்கிய அறிவிப்பு

‘காட்டாறு’ மாத இதழ் கழகத்தின் அதிகாரபூர்வமானது அல்ல என்று ஏற்கெனவே அறிவித்துள்ளோம். அந்த இதழோடு தொடர்புடைய தோழர்கள் பொள்ளாச்சி விஜயராகவன், தாமரைக் கண்ணன், இராவணன், பல்லடம் விஜயன் – கழகத்தின் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்வதாகவும், ஆனால், கழகத்தில் உறுப்பினர்களாக தொடர்வதாகவும் எழுத்து மூலம் தலைமைக்கு தெரிவித்திருந்தனர். ஆனால், கழகத்தின் செயல் திட்டங்களில் இணைத்துக் கொள்ளாமல் அவற்றை விமர்சித்து, தங்களுக்கான தனி செயல் திட்டங்களோடு செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கழக உறுப்பினர்களாக நீடிப்பதிலிருந்தும் அவர்களாகவே விலகிக் கொண்டிருக்க வேண்டும். அப்படி விலகிக் கொள்ளாமல், கழக உறுப்பினர்கள் என்று கூறிக் கொண்டே கழக செயல் திட்டங்களோடு முரண்பட்டு செயல்படுவது அமைப்பில் குழப்பங்களை உருவாக்கும் முயற்சிகளேயாகும். கழக செயலவை யிலும் தோழர்கள் பலரும் இதை சுட்டிக் காட்டினர். எனவே, ‘காட்டாறு’ இதழோடு தங்களை நேரடியாக இணைத்துக் கொண்டு தங்களுக்கான தனித்த செயல் திடடங்களோடு செயல்படும் தோழர்கள் திராவிடர் விடுதலை கழகத்தின் உறுப்பினர்களாக தொடர்ந்து நீடிக்க...

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – தூத்துக்குடி புகைப்படங்கள்

தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் ! பார்ப்பன சூழ்ச்சியால் மரணமடைந்த ‘ரோஹித் வெமுலா’வின் மரணத்திற்கு நீதி கேட்டும்,மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் விளிம்புநிலை மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பில் 01.02.2016 அன்று மாலை 5 மணியளவில் சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பொறிஞர்.சி. அம்புரோசு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வே.பால்ராசு, மாவட்ட துணைச் செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அம்புரோசு அவர்களின் தலைமை உரையைத் தொடர்ந்து, மதிமுகவின் மாநில மீணவரனி செயலாளர் தோழர்.நக்கீரன் கண்டன உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து SDPIயின் தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் மைதீன்கனி, ஆதித் தமிழர் கட்சியின் சு.க.சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் கா.மை.அகமது இக்பால், மனித நேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஆசாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இவர்களைத்...

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – பழனி புகைப்படங்கள்

பழனியில் ஆர்ப்பாட்டம் ! பழனி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அய்தராபாத் மத்திய பல்கலைக் கழக மாணவர் “ரோகித் வெமுலா” மரணத்துக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் (01-02-2016) பழனி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் திருமூர்த்தி தலைமை தாங்கினார். தோழர்கள் ஆனந்த்,கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்கள் திருச்செல்வம்,காளிமுத்து,சிவமணி கண்டன உரையாற்றினர். இறுதியில் தோழர் குட்டி நன்றியுரை ஆற்றினார். பார்ப்பன “துரோணாச்சாரி”களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள் ?”ஏகலைவன்”களாக இனியும் இருக்கமாட்டோம் ! என முழக்கங்கள் எழுப்பட்டன.

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – வேலூர் புகைப்படங்கள்

வேலூரில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவன் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி கேட்டு,அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் 01.02.2016 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் வேலூரில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தி வி க மாவட்ட அமைப்பாளர் இரா.ப.சிவா, திலிபன்.வி சி க, துரை.ஜெய்சங்கர்,தா ஒ வி இ, செவ்வேள். தி வி க நரேன். சந்தோஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – திருப்பூர் புகைப்படங்கள்

திருப்பூரில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவன் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி கேட்டு,அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் 01.02.2016 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் திருப்பூர் பெரியார் சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் தோழர் நீதிராசன்,மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் ஆசிரியர் சிவகாமி அவர்கள்,தோழர் அகிலன்,கவிஞர் கனல்மதி,தனபால்,பரிமளராசன் உள்ளிட்ட கழக தோழர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் தோழர் பிரசாந்த அவர்கள் நன்றியுரையாற்றினார். பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்? ‘ஏகலைவன்’களாக இனியும் இருக்கமாட்டோம்! ‘ரோகித் வெமுலா’ மரணத்திற்கு நீதி கேட்போம்! என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – மன்னார்குடி புகைப்படங்கள்

மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் ! மன்னார்குடியில் 01.02.2016 அன்று மாலை கண்டன ஆர்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் நடைபெற்றது. ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பயின்ற முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி கேட்டும், தற்கொலைக்கு காரணமான ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் அப்பாராவ், மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிதி இராணி, மத்திய இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய அமைச்சர் இருவரையும், பதவி நீக்கம் செய்யகோரியும், திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீனிஜெகபர் சாதிக், எஸ்டிபிஐ கட்சி தொகுதி தலைவர் முகமது அலி,...

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி புகைப்படங்கள்

கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் ! கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ஹைதராபாத் பல்கலை கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் 01.02.2016, அன்று மாலை,5.00மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் இராஜேஷ் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் நீலகிரி குமார், மாவட்ட துணை செயலாளர் வாஞ்சிநாதன், மாவட்ட துணை தலைவர் நீலகிரி கிருஷ்ணன், முன்னால் மாவட்ட அமைப்பாளர் பழனி, நிர்வாகிகள் கிரி,எல்லப்பன் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பிரேம்குமார் நன்றி கூறினார்

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – நாமக்கல் புகைப்படங்கள்

நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் ! “ரோஹித் வெமுலா” மரணத்திற்கு நீதிகேட்டு 01.02.2016, அன்று மாலை,5.00மணிக்கு நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. தலைமை: தோழர்.முத்துப்பாண்டி மாவட்ட பொருளாளர்.திவிக. முன்னிலை: தோழர்.மா.வைரவேல். மாவட்ட அமைப்பாளர்.திவிக. தோழர்.மு.சரவணன். மாவட்ட செயலாளர். திவிக. கண்டன உரை: தோழர்.மு.சாமிநாதன். மாவட்ட தலைவர். திவிக. தோழர்.இரா.செல்வகுமார். மாநில கொ.ப.செயலாளர். ஆதித்தமிழர் பேரவை. தோழர்.ஆ.ஆதவன். மாநில துணைசெயலாளர். தமிழர் படை.(தவாக) தோழர்.வே.காமராஜ். மேற்கு மாவட்ட செயலாளர். விடுதலை சிறுத்தைகள் கட்சி. தோழர்.செந்தமிழன். மாவட்ட செயலாளர். தமிழ்புலிகள். தோழர்.செம்மணி. தொகுதி செயலாளர். விடுதலை சிறுத்தைகள் கட்சி. தோழர்.பெரியண்ணன். மல்லை ஒன்றிய தலைவர்.திவிக. தோழர்.சுடர்வளவன். விடுதலை சிறுத்தைகள் கட்சி. தோழர்.இரா.பிரகாசு. இளைஞரணி செயலாளர்.திவிக. தோழர்.மாணிக்கம். நகர செயலாளர். புரட்சிகர இளைஞர் முண்ணனி. தோழர்.சி.சிவகுமார். திராவிடர் விடுதலைக் கழகம். நன்றியுரை: தோழர். மு.சரவணன். நகர செயலாளர். மாவட்டம் முழுவதுமாக இருந்து 50க்கும் மேற்பட்ட கழகத்தோழர்கள் கலந்துக்கொண்டனர். செய்தி : மா.வைரவேல். மாவட்ட...

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – சென்னை புகைப்படங்கள்

சென்னையில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் நேற்று 01.02.2016 திங்கள் மாலை 3.00 மணியளவில் ரோகித் வெமுலாவின் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் . ஒத்த கருத்துள்ள அமைப்புகளோடு இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் திவிக வழக்கறிஞர்கள் அருண்,திருமூர்த்தி, ஊடகவியலாளர் தோழர் கவின் மலர், வாலாசா வல்லவன் மா.பெ.பொ.க, குமார் த.பெ.தி.க., தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்கம் அரக்கோணம், வே.மதிமாறன் எழுத்தாளர், SDPI தலைவர் தேஹலான் பாகவி, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தோழர் ம.வேழவேந்தன் நன்றி கூற மாலை ஆறரை மணியளவில் ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – சேலம் கிழக்கு புகைப்படங்கள்

ரோகித் வெமுலாவின் மரணத்திற்கு நீதி கேட்டு திங்களன்று 01022016 மாலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் கிழக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக கிழக்கு மாவட்டத் தலைவர் தோழர் க. சக்திவேல் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தோழர் இரா, டேவிட். மாவட்ட பொருளாளர் தோழர் ஏற்காடு பெருமாள் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழக பா. முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்க, இக்கண்டன ஆர்பாட்டத்தில் ஒத்த கருத்துடைய தோழமை அமைப்புகளான மதிமுக வின் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அ. ஆனந்தராஜ, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் தலைவர் பூமொழி, தபெதிக வின் மாவட்டச் செயலாளர் கு.தங்கராசு, ஆதி தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் க. இராதாகிருட்டிணன். CPI ன் மாவாட்டச் செயலாளர், A. மோகன். விடுதலை சிறுத்தைகளின் மாநில தொண்டரணி துணைச் செயலாளர்...

கல்வி நிறுவனங்களும் ஜாதியப் பாகுபாடும் – மதுரையில் கருத்தரங்கம்

”கல்வி நிறுவனங்களும்,ஜாதியப் பாகுபாடும்” கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் ! எவிடன்ஸ் அமைப்பின் சார்பில், நாள் : 03.02.2016. மாலை 4.30 மணி. இடம் : துரைராஜ் பீட்டர் ஹால், தமிழ்நாடு இறையியல் கல்லூரி,அரசரடி,மதுரை. தோழர்கள் எவிடன்ஸ் கதிர், ஹென்றி டிபேன், கவின் மலர், செம்மலர் ஆகியோர் உரையாற்றுகிறார்கள் ! சமத்துவம் மலர இணைந்து செயல்படுவோம். அன்புடன் அழைக்கிறோம்.

”தமிழ் புத்தாண்டு, பொங்கல் விழா.” மற்றும் இரண்டாம் ஆண்டு விளையாட்டு விழா திருப்பூரில்

திருப்பூரில், திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ”தமிழ் புத்தாண்டு,பொங்கல் விழா.” மற்றும் இரண்டாம் ஆண்டு விளையாட்டுவிழா. நாள் : 31.01.2016 ஞாயிற்றுக்கிழமை. இடம் : திருவள்ளுவர் தெரு,இராயபுரம் மேற்கு,திருப்பூர் – 1. ”காலை முதல் மாலை வரை விளையாட்டுப் போட்டிகள்” மாலை 6 மணிக்கு மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு பகுத்தறிவுப் பாடல்கள். மாலை 7 மணிக்கு ”பொதுகூட்டம் .” தலைமை : தோழர் கருணாநிதி. வரவேற்புரை : தோழர் நீதி ராசன். சிறப்புரை : ”தோழர் கொளத்தூர் மணி,” தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். நன்றியுரை : தோழர் மா.ஜெகதீசன்.

தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா குமரியில்

திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மாவட்டம் சார்பாக தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் குடும்ப விழாவாக கழக தோழர்  தமிழ் மதி,இல்லம் குன்னம்பாறையில் 15-01-2016.வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு நடைப்பெற்றது. கழக தோழர்கள், ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பொங்கல்  வைத்து சாப்பிட்டனர். பின்பு நடைப்பெற்ற கலந்துரையாடல் தோழர் சஜீவ் தலைமையுரையுடன் துவங்கியது.கழக தோழர் தமிழ் மதி வரவேற்று பொங்கல் தமிழ்புத்தாண்டு பற்றி விளக்கி பேசினார். தோழர்.சூசையப்பா வாழ்த்துரை வழங்கினார். தோழர்கள் பரிணாம வளர்ச்சி, நாத்திகம், மூடநம்பிக்கைகள், பற்றி கருத்துரையாற்றினார்கள். பின்பு சிற்றுண்டியுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் பிரிந்து சென்றனர்.    

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (9) ஒரே ஆண்டில் மரணித்த ம.பொ.சி.யின் ‘தமிழ்த் தேச விடுதலை’ – வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (9) ஒரே ஆண்டில் மரணித்த ம.பொ.சி.யின் ‘தமிழ்த் தேச விடுதலை’ – வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி ம.பொ.சி.தான் உண்மையான சுதந்திர தமிழ்நாடு கோரினார் என்பதை ம.பொ.சியின் ‘பிரிவினை வரலாறு’ நூலிலிருந்தும் ‘தமிழன் குரல்’ நூல்களி லிருந்தும் மேற்கோள்களை எடுத்துக் காட்டியுள்ளார் வழக்குரைஞர் பா.குப்பன். ஆம், உண்மை தான், ம.பொ.சி. அப்படி எழுதிய காலத்தில் பெரியார் ம.பொ.சி.யை முழு மனதுடன் ஆதரித்தார் என்பதை வழக்குரைஞர் பா.குப்பன் மறைத்து விட்டார். இதோ பெரியார் ஆதரித்ததை ம.பொ.சி.யே எழுதியுள்ளார். “பெரியாரைச் சந்தித்தேன்! 1947 ஜனவரி 26 இல் விருதுநகரில் நகர மன்றத்தின் சார்பில் நடைபெற விருந்த விழாவிற்கு அம்மன்றத் தலைவர் வி.வி.இராமசாமி அவர்களால் அழைக்கப்பட்டேன். அதற்காகச் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் நான் சென்று கொண்டிருந்தபோது, அதே வண்டியில் பெரியார் ஈ.வெ. ராவும் கோயில்பட்டியில் ஒரு பொதுக் கூட்டத்தில்...

வினா… விடை…!

வினா… விடை…!

தமிழக சட்டப் பேரவை நான்கு நாள் மட்டும் நடந்தது. – செய்தி போதும்; போதும்; வெள்ளப் பாதிப்பு காலத்தில் ‘மேஜை தட்டும் திருவிழாக்களை’ இதற்குமேல் கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது. அமித்ஷா – பா.ஜ.க. தலைவராக இரண்டாவது முறையும் நீடிப்பார். – செய்தி டெல்லி, பீகார் பேரவை தேர்தல் முடிவுகளையே தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு கொண்டு வந்து சேர்த்து சீரிய தொண்டாற்ற நாமும் வாழ்த்துகிறோம்! ரோகித் வெமுலா ‘தலித்’ இல்லை. – பா.ஜ.க. கண்டுபிடிப்பு சரி; அப்படியே வச்சிக்குவோம். அவரு ஒரு ‘இந்து’ தானே; ஒரு இந்துவுக்கு ‘இந்து தேசத்தில்’ இந்த நிலை வரலாமா? கும்பமேளாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி. – உளவுத்துறை எச்சரிக்கை எனவே, கும்பமேளாவுக்கு முழுக்குப் போட வருவதை தவிர்த்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் பக்தி செலுத்துமாறு பக்தர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். சிறப்பு உணவுகளுடன் நடந்து வரும் இந்து கோயில் யானைகள் புத்துணர்வு முகாமுக்குள் ஊடுருவ முயன்ற காட்டுயானைகளை வனத்துறை விரட்டி அடித்தது....

தந்தை பெரியார் நினைவு நாள்

தந்தை பெரியார் நினைவு நாள்

24-12-2015 அன்று திருச்சி மாவாட்டம் மணப்பாறை பகுதியில் தந்தை பெரியார் 42வது நினைவு நாள் அன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்விற்கு மூத்த பெரியார் தொண்டர் பெருமாள் தலைமை தாங்கினார். தொடர்ந்து பெரியார் பெருந் தொண்டர் சேகர் முன்னிலை வகுத்தார். கழகத் தோழர்கள் ஆசிரியர் தியாகுசுந்தரம், மகராஜா, சி.இரா. ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த தங்கராசு, மகராஜா, கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். தனபால் சிறப்பாக சுவரொட்டிகள் ஒட்டி நிகழ்வினை ஒருங்கினைத்திருந்தார். பகுதியில் புதியதாக நிகழ்வுகள் ஏற்பாடு செய்தமைக்காக மூத்த பெரியாரியல் தோழர்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் தந்தை பெரியாரின் 42ஆவது நினைவு நாள் அன்று கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் அண்ணா சாலையிலுள்ள பெரியார் சிலைக்கும் இராயபேட்டை, மந்தைவெளியிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. களப்பணியாற்றிய போது விபத்தில் உயிர் நீத்த கழகச்...

உற்சாக உணர்வலைகளோடு நடந்த கழக செயலவை

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் திருச்சியில் கரூர் புறவழிச் சாலையிலுள்ள இரவி ‘மினி ஹாலில்’ கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் பகல் 11 மணியளவில் தொடங்கியது திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் ஆரோக்கியசாமி, கடவுள்-ஆத்மா மறுப்பு கூறினார். முடிவெய்திய கழகத் தோழர் மல்ல சமுத்திரம் கண்ணன், மூத்த பெரியார் தொண்டர் பட்டுக்கோட்டை சதாசிவம், ரோகித் வெமுலா ஆகியோர் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து, நிகழ்ச்சிகள் தொடங்கின. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாக கடந்த ஜூலை மாதம் நடந்த தர்மபுரி செயலவைக்குப் பிறகு, கழக நிகழ்வுகளை சுட்டிக்காட்டி கழகக் கொள்கைகளை வெகு மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை தீவிரமாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், செயலவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 40 தோழர்கள் கருத்துகளை முன் வைத்தனர். கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு...

பிப்.1இல் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்!

பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்? ‘ஏகலைவன்’களாக இனியும் இருக்க மாட்டோம்! ‘ரோகித் வெமுலா’ மரணத்துக்கு நீதி கேட்போம்! கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் 24.01.2016 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 7 சதவீதத்தையும் தாண்டாத இடஒதுக்கீடு மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு ஆணை அமுலுக்கு வந்து 23 ஆண்டுகள் –கடந்த பிறகும் குரூப் ஏ, குரூப் பி போன்ற முதல்நிலைப் பதவிகளில் 7 சதவிகிதத்தைக் கூட எட்டவில்லை என்று அண்மை யில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டு கின்றன. அரசு உயர் அதிகாரப் பதவிகளை கைப்பற்றிக் கொண்டிருக்கும் – பார்ப்பன – உயர் ஜாதி அதிகார வர்க்கம் – அவற்றோடு இணைந்து நிற்கும் நடுவண் ஆட்சிகள் – பார்ப்பன உயர்ஜாதி கட்டுப் பாட்டில் உள்ள உச்சநீதிமன்றம் ஆகியவை சமூக நீதிக்கான...

படுகொலை குறும்படம் வெளியீடு

22-1-2016 வெள்ளி மாலை 6-00 மணியளவில், சேலம், மனிபால் மருத்துவமனை அருகே அமைக்கப் பட்டிருந்த நம்மாழ்வார் அரங்கில் சேலம் தோழர் பொன்.சண்முகவேல் இயக்கிய ‘படுகொலை’ என்ற குறும்படத்தை இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் சி. மகேந்திரன் வெளியிட, தோழர் பாலு மற்றும் அக்குறும்படத்தில் நடித்துள்ள சிறுவன் கவின்பூபதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர், ஒரு விவசாயியின் தற்கொலையைக் காட்சிப் படுத்துவதன் வழியாக, வேளாண்மையில் ஆதிக்கம் செலுத்துகிற கார்ப்பரேட்டுகளின் இலாப வெறி, இயற்கைச் சூறையாடல், நீர்நிலைகளின் அவல நிலை, பொதுச் சமூகத்தின் அக்கறையின்மை போன்ற செய்திகளைச் சொல்கிறது அந்தக் குறும்படம். குறும்படத் திரையிடலைத் தொடர்ந்து, எழுத்தாளர் அஜயன்பாலா, சேலம் பியூஸ் மானுஷ், அ.முத்துகிருஷ்ணன், பவா செல்லதுரை, கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், சி.மகேந்திரன் ஆகியோர் படம் சொல்லும் செய்திகள் மீதான தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். குறும் படத்தில் பங்காற்றியோர் பாராட்டப்பட்டனர். இயக்குநர் சண்முகவேல் நன்றியுரையுடன் நிகழ்வு...

“நான் பிறந்த ஜாதிதான் எனக்கு மோசமான விபத்து” – ரோகித் வெமுலா

பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்? ‘ஏகலைவன்’களாக இனியும் இருக்க மாட்டோம்! ‘ரோகித் வெமுலா’ மரணத்துக்கு நீதி கேட்போம்! ‘ஏகலைவன்’ என்ற ஆதிவாசிக்கு ‘துரோணாச்சாரி’ என்ற பார்ப்பன குரு வில்வித்தை கற்றுத் தர மறுத்தான். ஏகலைவனோ, துரோணாச்சாரி உருவத்தை செய்து, அதையே குருவாகக் கருதி வித்தையைக் கற்றுத் தேறினான். உண்மை அறிந்த துரோணாச்சாரி, “கீழ் ஜாதிப் பயலே; வில்வித்தை கற்கும் உரிமை உன் குலத்துக்குக் கிடையாதுடா! குருதட்சணையாக உன் கட்டை விரலை வெட்டித் தா” என்று கேட்டான். ஏன் தெரியுமா? கட்டை விரலை வெட்டி விட்டால் வில்லிலிருந்து அம்புகளை விடவே முடியாது அல்லவா? இது வரலாறு அல்ல; ஆனால் புராணக் கதைகளின் வழியாக பார்ப்பனர்கள் சமூகத்துக்கு உணர்த்தும் பாடம்! ‘ஏகலைவன்’கள் கதை முடிந்துவிட்டதா? இல்லை. இல்லவே இல்லை. பார்ப்பன துரோணாச்சாரிகளின் வாரிசுகள் அய்.அய்.டி., அய்.அய்.எம்., அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகம், மத்திய பல்கலைக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை இன்றும்...

ஜல்லிக்கட்டு வீரத்தின் அடையாளமா?

ஜல்லிக்கட்டு வீரத்தின் அடையாளமா?

பழமைச் சிந்தனை – ஜாதியம் – பெண்ணடிமையோடு இணைந்து நிற்கும் மரபுகளை தமிழர் மரபுகளாக முன் வைக்கப்படும்போது அது வெகு மக்களின் உணர்வாக மாற்றம் பெற்றுவிடுகிறது. அதிலே ஒன்றுதான் ஜல்லிக் கட்டு. மனித உயிர்களுக்கு ஆபத்துகளை உருவாக்கும் போட்டிகளுக்கு எல்லாம் தடை விதித்து விட்டார்களா என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். நாம் தரும் விளக்கம் இதுதான். எந்த ஒரு போட்டியும், போட்டியில் பங்கேற்கும், இரு தரப்பு ஒப்புதலுக்குப் பிறகுதான் அரங்கேறுகிறது. இந்தப் போட்டியில் காளைகளின் சம்மதம் பெறப்பட்டதா? அந்த மாட்டுக்கு தங்களை ஒரு போட்டிக் களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள் என்பது புரியுமா? ஒரு மாடு ஆவேசமடைவதற்கு அடிப்படை, அது அச்சமூட்டப்படுவதால் மட்டுமே, அச்சத்தினால்தான் மிரண்டு ஓடுகிறது, காளை. அது சரிசமமாகப் போட்டிக் களத்துக்கு வந்து, என்னை அடக்கிப் பார் என்று சவால் விட்டு பிடரியை சிலிர்த்துக் கொண்டு நிற்கவில்லை – காளைகளின் இந்த அச்சம் மிக மோசமான வதை. இந்தப் போட்டியில்...

ஆர்.எஸ்.எஸ். பேசும் ‘அகண்ட பாரதம்’

ஆர்.எஸ்.எஸ். பேசும் ‘அகண்ட பாரதம்’

ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகமான நாக்பூரில், இந்திய வரைபடம் மாட்டப்பட வில்லை. அங்கே மாட்டப்பட்டிருப்பது, ‘அகண்ட பாரதத்தின்’ வரைபடம். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மியான்மார் ஆகிய நாடுகளை ஒரே தேசமாக சித்தரிக்கிறது, அந்த வரைபடம். இந்தியாவின் பிரதமர் மோடி மேற்கொண்ட திடீர் பாகிஸ்தான் பயணத்தின்போது உலகப் புகழ் பெற்ற அல் அஜிரா தொலைக்காட்சி, பா.ஜ.க. பொதுச் செயலாளர்களில் ஒருவரான இராம் மாதவ் என்ற பார்ப்பனரின் பேட்டியை ஒளி பரப்பியது. ‘பாகிஸ்தான் நாட்டுக்கு இறையாண்மை கிடையாது. அது இந்தியாவின் பகுதி’ என்று கூறி, அகண்ட பாரதத்தை நியாயப் படுத்தினார் இராம் மாதவ். ‘அகண்ட பாரத்’ என்ற ‘பாரத் வர்ஷா’ – கற்பனை உணர்வு அல்ல. இந்தியாவின் எல்லைகள் ‘பாரத் வர்ஷாவாக’ விரிவடைய வேண்டும் என்பதே தங்களின் இலட்சியம் என்று அந்த பேட்டியில் அவர் கூறினார். (இந்தியாவில் ‘தேசிய’ ஏடுகள் எதுவும் இந்த  பேட்டிச் செய்தியை வெளியிடவில்லை) இந்து ‘பாரத் வர்ஷா’ கொள்கையை 1934இல்...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (8) வடக்கு எல்லை மீட்பு போராட்டம்: ம.பொ.சி.யின் நிலை என்ன?

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (8) வடக்கு எல்லை மீட்பு போராட்டம்: ம.பொ.சி.யின் நிலை என்ன?

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (7.1.2016 இதழ் தொடர்ச்சி) வடக்கு எல்லைப் பிரச்சினையை இழுத்தடிக்க இராஜாஜி சூழ்ச்சி செய்தார். இதைக் கஜபதி நாயகர் கண்டித்தார். 25.2.1954 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய ஆ.கசபதி நாயகர் “தமிழ்நாட்டுடன் சேர்ந்திருக்க வேண்டிய பகுதிகளாகிய சித்தூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி போன்ற பிராந்தியங்களை ஆந்திர இராஜ்யத்தோடு இந்திய சர்க்கார் சேர்ப்பதற்கு அனுமதித்தது தவறு ஆகும். அதனால் நாட்டில் எழுந்த கேடுகளை, கிளர்ச்சிகளை குழப்பங்களை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். அந்த பிராந்தியங்களில் வசிக்கின்ற பெரும் பான்மையான தமிழ் மக்களின் கலாச்சாரத்தைப் பாதிக்கின்ற ஒரு பெரிய விஷயத்தைப் பற்றி அந்தச் சபையில் (ஹளளநஅடெல) என் நண்பர் விநாயகம் அவர்கள் பேசும்போது, சித்தூர் விஷயம் ஆந்திர சர்க்காரின் பொறுப்பும் அல்ல,...

பார்வதி ‘மேனன்’ பார்வதியாகிறார்!

பார்வதி ‘மேனன்’ பார்வதியாகிறார்!

தமிழ்த் திரைப்பட உலகை இப்போது பல மலையாள நடிகைகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் ‘பார்வதி மேனன்’ என்ற ஜாதி அடையாளத்தோடு வந்தார். அண்மையில் ஒரு தமிழ் நாளேடு, இது குறித்து அவரிடம் கேட்டது. “தமிழ் நடிகைகள் தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடுவது இல்லை. இந்தி, தெலுங்கு, மலையாள நடிகைகள் மட்டும் தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரைப் பயன்படுத்துகிறார்களே? என்பது கேள்வி. அதற்கு அந்த நடிகை இவ்வாறு பதில் அளித்திருக்கிறார்: “ஜாதி ஒரு பெருமையான விஷயம் கிடையாது. அதனால் எந்த மதிப்பும் வரப்போவது இல்லை. ஜாதிப் பெயரை வைத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் என் பெயரிலிருந்து ஜாதி பெயரை நீக்கி விட்டேன். என் பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களில் மேனன் என்ற வார்த்தை கிடையாது. படங்களின் ‘டைட்டில்’களில் (பெயர் அறிவிப்புகளில்) பார்வதி என்றே குறிப்பிட வேண்டும் என்று கூறியிருக்கிறேன். எதிர் காலத்தில் என் குழந்தைகளுக்குக்கூட பள்ளிக்கூட...

ஜாதி எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன?

ஜாதி எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன?

கல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாட்டில் கட்சியின் எதிர்கால செயல் திட்டங்களில் ‘ஜாதி ஒடுக்குமுறை களுக்கு முன்னுரிமை தரப்படும்’ என்ற கருத்தை, பிரகாஷ் காரத், கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் வலியுறுத்தி யுள்ளது வரவேற்கத்தக்க ஒரு திருப்பம். இந்தியாவில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பொருளாதாரச் சுரண்டல் – சமூக ஒடுக்குமுறை என்ற இரண்டு பிரச்சினை களையே மய்யம் என்று தீர்மான நகல் கூறுகிறது. சமூக ஒடுக்குமுறை என்று பார்த்தால் பெண்கள், தலித், பழங்குடி யினர் மற்றும் மத அடிப்படையிலான மைனாரிட்டிகள் மீது காட்டப்படும் பாகுபாடுகள் என்று சீத்தாராம்யெச்சூரி விளக்கமளித்துள்ளார். அதே நேரத்தில், ஜாதி அமைப்புக்கு எதிரான கருத்தியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு தெளிவாக்கப்படவில்லை.  ஜாதிய பாகுபாடுகள் – ஒடுக்குமுறைகள் குறித்து மட்டுமே நகல் தீர்மானம் பேசுகிறது. இன்னும் ஒரு நிலைக்கு மேலே போய் சீத்தாராம் எச்சூரி, கட்சியின் நிலையை இவ்வாறு தெளிவுபடுத்தியிருக்கிறார். “பொருளாதார அதிகாரத்தை...

தலையங்கம் ‘ரோகித்’களை காவு கேட்கும் ஜாதிவெறி!

படிக்கக் கூடாத கூட்டம் என்ற ‘மனு’ சாஸ்திரத்தால் தடை செய்யப்பட்ட சமூகம், சமூகப் புறக்கணிப்புகளைக் கடந்து, உயர் கல்வி வரை எட்டிப் பிடிக்கும்போது அங்கும் ஜாதியம், அவர்களின் உயிர்களைக் காவு கேட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் இந்த ‘பாரத சமூகத்தின்’ பார்ப்பன ஜாதி தர்மம்! நெஞ்சு பதறுகிறது. அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் சமூகக் கல்வியில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்த 26 வயது தலித் மாணவர் ரோகித் வெமுலா, ஜாதி வெறி கொடுமைகளை எதிர்கொள்ள முடியாது தனது உயிரைப் பலியிட்டுக் கொண்டார். பார்ப்பன ஆதிக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் உயர்கல்வி நிறுவனங்கள், இடஒதுக்கீட்டின் கீழ் வரும் ‘தலித்’ மாணவர்களை அவமதிப்பதும், புறக்கணிப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. பார்ப்பன உயர்ஜாதிப் பேராசிரியர்கள் பலரும் இந்த மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியேறிடக் கூடாது என்று தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், ‘சங்பரிவார்’ மாணவர் அமைப்பான ‘வித்யார்த்தி பரிஷத்’ உயர்கல்வி வளாகங்களில்...