Category: திவிக

மயிலாப்பூர் செயின்ட் மேரீஸ் டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டம்

மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் செயின்ட் மேரீஸ் பாலத்திலுள்ள டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் அந்த பகுதி பொது மக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தியது. தோழர்களுடன் பொது மக்களையும் காவல்துறை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது. தொடர்ந்து ஐந்தாண்டுகளில் நான்காவது முறையாக பெரும் முற்றுகை போராட்டத்தை மயிலை பகுதி தோழர்களுடன் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தியுள்ளது. அரசு செவிசாய்த்து கடையை நீக்கும் வரை போராட்டங்கள் ஓயாது. மாவட்ட செயலாளர் தோழர் இரா.உமாபதி பத்திரிகையாளர்களை சந்தித்து கோரிக்கையை செய்தியாக வைத்தார். பகுதி பொதுமக்களும் தன் மனக்குமுறல்களை பத்திரிகையாளர்களிடம் கொட்டித் தீர்த்தனர். பெண்களும் கைதாகியது தோழர்க ளை மேலும் இந்த போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட வழிசெய்தது… தற்போது கைதாகி மண்டபத்தில் … திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

சென்னை மாவட்ட கலந்துரையாடல் 30062016

30062016 அன்று மாலை 5:30 மணிக்கு பொதுச்செயலாளர் தலைமையில் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் துவங்கியது . சென்னை மாவட்ட செயலாளர் தோழர். இரா .உமாபதி உரையை துவங்கி வைக்க , அதைத் தொடர்ந்து மாவட்ட மாணவரணி செயலாளர் ஜெயபிரகாசு தலைமை செயலவையின் தீர்மாணத்தை வாசித்தார். அதை தொடர்ந்து தலைமை நிலைய செயலாளர் தோழர் .தபசி குமரன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தோழர் . அன்பு தனசேகரன், தோழர் அய்யனார், வழக்கறிஞர் தோழர். துரை அருண் போன்ற நிர்வாகிகளும் , மாவட்ட தோழர்களும் அவர்களின் கருத்தை தொடர்ச்சியாக பதித்தனர் . சமஸ்கிருத திணிப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் பற்றியும், பிரச்சார பயணம் பற்றியும் , அடுத்தக்கட்ட மாவட்ட செயல்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர் . நிகழ்வின் முடிவாக பொதுச்செயலாளர் கேள்விகள் அனைத்திற்கும் விளக்கமாக நீண்ட உரையாற்றினார் . அவரின் உரை தோழர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தரும் விதமாக அமைந்தது ....

சமஸ்கிருத திணிப்பு துண்டறிக்கைக்கான செய்திகள்

மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 08.07.2016 அன்று மாவட்ட தலை நகரில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கான துண்டறிக்கை வாசகங்கள். ———————————————————- மத்திய அரசே ! சமஸ்கிருதத்தை திணிக்காதே ! அலுவல் மொழிகள் பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கு ! • மத்திய மனித வளத் துறை அமைச்சகம் விஞ்ஞான கருத்துகள் ஏராளம் இருப்பதாக கூறி அய் .அய் .டி.களிலும் மத்திய பாடத்திட்டத்தில் இயங்கும் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தை கட்டாயமாகத் திணித்து வருகிறது. • சமஸ்கிருதம் வழியாக இந்து, பார்ப்பனப்பண்பாட்டைத் திணிப்பதே இவர்களின் உண்மையான நோக்கமாகும். • அதன் காரணமாகவே ஆர்.எஸ்.எஸ்.சமஸ்கிருதமே இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் என்று கொள்கையாகஅறிவித்திருக்கிறது. • ஆர்.எஸ்.எஸ். தனது கிளை அமைப்புகள் அனைத்துக்கும் சமஸ்கிருதத்திலேயே பெயர் சூட்டி இருக்கிறது. • இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் சமஸ்கிருதம் பேசும் மக்களைக் கொண்ட மாநிலமாக இல்லை. • அது பேச்சு மொழியாகவும்...

பெரியாரும் தலித்துகளும் – திருச்சியில் வாசிப்பு முகாம்

பெரியாரும் தலித்துகளும் – திருச்சியில் வாசிப்பு முகாம்

வாசிப்பு முகாம் – II. +++++++++++++++++++ நாள் : 02-07-2016 – சனிக்கிழமை. நேரம் : காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை. தலைப்பு : பெரியாரும் தலித்துகளும். இடம் : இன்னாவோட்டர்ஸ் குரூப்ஸ், தியான லிங்கா டவர், முதல் தளம், உறையூர் பெட்ரோல் பங்க், ஏ ஒன் பாஸ்ட் புட் அருகில், ருக்மணி தியேட்டர் பஸ் ஸ்டாப், சாலை ரோடு, உறையூர், திருச்சி. பங்கேற்பு :தோழர் கொளத்தூர் மணி மற்றும் வாசிப்பாளர்கள். கட்டணம் : ரூ.100 மட்டும். ஏற்பாடு : தமிழ்நாடு அறிவியல் மன்றம். தொடர்புக்கு – 8754316187, 9842448175.

சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 30062016

30062016 வியாழன் கிழமையன்று மாலை 5:30 மணியளவில் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் கலந்துரையாடல் கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற உள்ளது . பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் … சமஸ்கிருத திணிப்பிற்கு எதிராக கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டம் குறித்தும், ஆகஸ்டில் நடைபெறும் பகுத்தறிவு பிரச்சார பயணம் குறித்தும், புரட்சி பெரியார் முழக்கம் சந்தா சேர்ப்பு குறித்தும், மாவட்ட கழகத்தின் அடுத்த செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படும். தோழர்கள் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் … இரா. உமாபதி சென்னை மாவட்ட கழக செயலாளர்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் 26062016

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் 26.6.16,ஞாயிறு மாலை 4 மணிக்கு, சித்தோடு தட்டாங்குட்டையில் தோழர்.கமலக்கண்ணன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. தோழர்.எழிலன் தலைமை வகித்தார். தோழர்.இரத்தினசாமி, தோழர்.சண்முகப்பிரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. 89 வயதான மூத்த பெரியார் தொண்டர்.தோழர்.இனியன் பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.. சித்தோடு தோழர் பிரபாகரனின் கடவுள் மறுப்பு மற்றும் ஆத்மா மறுப்புடன் கலந்தாய்வு தொடங்கியது.. *கூட்டத்தில் கீழ்க்காண் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:* *1)*திராவிடர் விடுதலைக் கழக மாநில செயற்குழு முடிவின் படி, பரப்புரைப் பயணமானது *சென்னை,மயிலாடுதுறை,பொள்ளாச்சி,சத்தியமங்கலம்* ஆகிய இடங்களில் இருந்து ஆகஸ்ட்-7ஆம் தேதி தொடங்கி,கழகம் தொடங்கப்பட்ட நாளான ஆகஸ்ட்-12 அன்று, சேலம் மாவட்டம் ஆத்தூரில் நிறைவடைகிறது. இப்பயணத்தில் ஈரோடு தெற்கு மாவட்டத்திலிருந்து தோழர்கள் கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. *2)* சத்தியமங்கலத்திலிருந்து தொடங்கும் பயணம் ஈரோடு வழியாக வரும் போது, மாவட்டத்தில் இரண்டு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.. *3)* பெரியார் முழக்கம் இதழுக்கான...

இடஒதுக்கீடு பற்றிய கலந்துரையாடல் திருச்செங்கோடு 26062016

திருச்செங்கோடு பெரியார் மன்றத்தில் 26062016 அன்று தோழர் பால் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இடஒதுக்கீடு பற்றிய நீண்ட நெடிய கலந்துரையாடல் நிழற்படங்கள்

புதுவை – வீதி நாடகக் கலைஞர்கள் மதிவதணன் – அஸ்வினி வாழ்க்கை இணையேற்பு

26062016 ஞாயிறு அன்று பகல் 11-00 மணிக்கு புதுச்சேரி, முத்தியாலுபேட்டை, அம்பாள் திருமண மண்டபத்தில், விரட்டு வீதி நாடகக் குழு கலைஞர்களும், கல்லூரிகளில் துணைப் பேராசிரியர்களாகப் பணீயாற்றுவோருமான, தோழர்கள் சி.அ.அஸ்வினி – மதிவதணன் ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஏற்புவிழா, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மருத்துவர் எழிலன், தலித் சுப்பையா, யாழன் ஆதி, சேலம் வி.சி.க.தலைவர் நாவரசன், கோகுல் காந்திநாத் ஆகியோரின் விழாவிளக்கவுரைகளைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒப்பந்த உறுதிமொழிகளை கூறச் செய்து வாழ்க்கைத்துணைநல ஒப்பந்த்தந்தத்தை நிறைவேற்றிவைத்தார். தாலி தவிர்க்கப்பட்ட இவ்விழாவில் மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தங்க சங்கிலிகளை அணிவித்தனர். வாழ்க்கை ஒப்பந்தவிழாவுக்கு முன்னதாக பறையிசை, கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கிராமப்புற பாடல்கள் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் எறத்தாழ ஒன்றரை மணி நேரம் நிகழ்ந்தது. மணமக்கள் இருவரும் பறைமுழக்கத்தில் பங்கேற்று பரை அடித்தது குறிப்பிடத் தக்கது. விழாவை விரட்டு வீதிநாடகக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்த்...

திவிக செயலவையில் ஜாதி மறுப்பு திருமணம்

இன்று மேட்டூர் பாப்பம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திவிக செயலவையில் ஜாதி மறுப்பு திருமணத்தோடு நிகழ்ச்சி துவங்கியது

திவிக செயலவை தீர்மானங்கள் மேட்டூர் 25062016

  25062016 சனிக் கிழமையன்று சேலம் மாவட்டம், மேட்டூர் பாப்பம்மாள் திருமண மண்டபத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்ற, திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தீர்மானம் 1 – இரங்கல் குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின், தந்தை பெரியார் தமிழிசை மன்ற நிறுவுநர் (ஆனா ரூனா) அருணாசலம், திருச்சி இளந்தாடி துரைராசன், பெங்களூர் வேமண்ணா (எ) வி.சி. வேலாயுதம் ஆகியோருக்கு கழகத்தின் சார்பில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தீர்மானம் 2 – மாநில அரசின் உரிமை தண்டனைக் குறைப்புக்கான அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்கும் – அரசியல் சட்டத்தின் 161வது பிரிவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது, மாநிலங்களுக்கு அந்த உரிமை உண்டு என்று ஏழு தமிழர் விடுதலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாக்கியிருக்கிறது, எனவே தான் – மாநில அரசுக்குரிய இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி 7...

இடஒதுக்கீடு கலந்துரையாடல் – நாமக்கல் 26062016

இடஒதுக்கீடு நீண்ட நெடிய போராட்ட வரலாறு குறித்த கலந்துரையாடல் இடம் பெரியார் மன்றம், திருச்செங்கோடு நாள் 26062016 முன்பதிவு அவசியம்

சாவிலும் சடங்குகளை தவிர்க்கச் சொன்ன தோழர்

11 .6.16 அன்று சென்னை மாவட்ட கழகத் தோழர் ஆட்டோ சரவணன் முதலாமாண்டு நிகழ்ச்சி இராயப்பேட்டை பத்ரிநாராயணன் படிப்பகத்தில் கழகப் பொதுச்செயலாளர்விடுதலை இராசேந்திரன் படத்திற்கு மாலை அணிவித்து இரங்கல் உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்ட இந்நிகழ்வில் கழகத்தோழர்கள் திரளாக கலந்து வீர வணக்கம் செலுத்தினர். “மரணத்திலும் சடங்குகளை மறுக்கச்சொன்ன பெரியார் தொண்டர் சரவணனுக்கு வீர வணக்கம்!” என்ற வாசகங்களடங்கிய சுவரொட்டியை கழகத் தோழர்கள் ஒட்டியிருந்தனர். -புரட்சிப் பெரியார் முழக்கம் – 16.06.2016.

7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி எழுச்சிப் பேரணி !

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய முன் வந்த தமிழக அரசின் முடிவை நிறைவேற்றக் கோரி ஜூன் 11ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் சென்னையில் கோரிக்கை பேரணி எழுச்சியுடன் நடந்தது. 7 தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம் சார்பில் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய பேரணி, பிற்பகல் 3.30 மணியளவில் எழும்பூர், லேங்ஸ் தோட்டம் அருகே முடிவடைந்தது. பேரணி யில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி , பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும், தமிழகம் முழுதுமிருந்தும் ஏராளமான கழகத் தோழர்களும், புதுவை கழகத் தோழர்களும் பங்கேற்றனர். வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன், அற்புதம் அம்மாள், த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா, வி.சி.க. செய்தித் தொடர்பாளர் வன்னியரசு உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும்,...

சேலத்தில் கழக தெருமுனைக்கூட்டம் !

சேலம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 19/06/16 அன்று மாலை 7 மணியளவில் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியில் தோழர்கள் பிரபு, வெற்றி முருகன், மூ.பெ.சரவணன் மற்றும் பெரியார் பிஞ்சு தமிழ்செல்வன் ஆகியோரின் பறை இசை முழக்கத்துடன் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. தொடர்ந்து சேலம் மாநகர செயலாளர் தோழர் பிரபு குழுவினரின் வீதி நாடகங்கள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஏற்காடு அய்யா தேவதாஸ் அவர்கள் பல வரலாற்று ஆதாரங்களுடன் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி யின் மக்கள் விரோத செயல்பாடு மற்றும் இட ஒதுக்கீட்டின் தேவை குறித்தும் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக மாநகர தலைவர் தோழர் பரமேஸ் குமார் நன்றி கூற நிகழ்வு முடிவுற்றது. இந்நிகழ்ச்சியை சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் செய்திகளை கேட்டறிந்தனர். . மேலும் வீதி நாடகத்தில் ஜாதி எதிர்ப்பு காட்சிகளின் போது மக்கள் பெருத்த கரவொலியோடு ஆதரவு அளித்தனர். செய்தி : தோழர் .பரமேஸ்...

தோழர் மலைக்கொழுந்தன் – கோமதி வாழ்க்கைக் துணைநல ஒப்பந்தம்

16062016 அன்று கரூர், தாந்தோன்றிமலை, திருமணமண்டபத்தில், பட்டதாரி ஆசிரியர்களான தோழர் ஆ.மலைக்கொழுந்தன், பா.கோமதி ஆகியோரின் விருப்ப வாழ்க்கைத்துணைநல ஒப்பந்தம் கழகத் தலைவர் கொளத்துர் மணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கழக மாவட்டத் தலைவர் பாபு (எ) முகமது அலி, த.பெ.தி.க மாவட்டத் தலிவர் தனபால், குளித்தலை கழகத் தலைவர் சத்தியசீலன், கொடுமுடி பாண்டியன் உட்பட Pஅலர் கல்ந்துகொண்டனர். தோழர் மலைக்கொழுந்தன் தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தொடக்ககால அமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். மணவிழா மகிழ்வாக கழக ஏடான பெரியார் முழக்கத்துக்கு ரூ 2,000 நன்கொடை வழங்கினார்.

ஜூன் 25இல் மேட்டூரில் கழக செயலவை கூடுகிறது

திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு 12.6.2016 காலை 10 மணியளவில் சென்னையில் கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் முன்னிலையில் கூடியது. கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் உள்ளிட்ட தலைமைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 24.1.2016 அன்று திருச்சியில் கூடிய கழகச் செயலவை கூட்டத்துக்குப் பிறகு கழக அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் கழகம் அறிவித்த போராட்டங்களை நடத்திய – நடத்தாத கழக அமைப்புகள் குறித்தும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா சேர்ப்பு பணிகளில் கழகத்தினர் செயல்பாடுகள் குறித்தும் அடுத்த செயல் திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஜூன் 25ஆம் தேதி மேட்டூரில் கழக செயலவைக் கூட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம், இளம்பிள்ளை 13062016

13-06-2016 திங்கட்கிழமை மாலை 6-00 மணியளவில், சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே, பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இளம்பிள்ளை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கருப்பூர் சக்திவேல் முன்னிலை வகிக்க, இளம்பிள்ளை பகுதி தலைவர் சி.தனசேகர் தலைமை ஏற்றார். முருங்கப்பட்டி இரமேசு வரவேற்று பேசினார்.இக்கூட்டத்தில் வழக்கறிஞர் வித்யாபதி, மோகன்ராஜ் ஆகியோர் உரையாற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் துவக்கமாக மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவினரின் பகுத்தறிவு – ஜாதி ஒழிப்பு பாடல்களும், காவை இளவரசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியும் நடைபெற்றது. இறுதியாக இளம்பிள்ளை பகுதி துணைச் செயலாளர் தங்கராஜ் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.  

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இசை ஆல்பம் வெளியீட்டு விழா !

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட, திரைப்பட இயக்குநர்.தோழர் சங்ககிரி ராச்குமார் அவர்கள் பெற்றுக் கொண்டார்.. 05.06.16 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் தோழர்.சண்முகப்பிரியனின் மகன் இந்தியப்பிரியன் அவர்கள் இயக்கிய ”கேடு” எனும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு இசை ஆல்பம் வெளியீட்டு விழா ஈரோடு ரீஜன்சி ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு 100 மரக்கன்றுகள் கழக தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.

காவல்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி அதிரடியாக நடைபெற்ற எஸ்.வி.ஆர். ஆவணப்பட வெளியீடு !

கழக தலைவர் வெளியிட தோழர் நல்லக்கண்ணு பெற்றுக்கொண்டார் ! 04.06.2016 சனிக்கிழமை, மாலை ”மனிதநேயப் போராளி தோழா் எஸ்.வி.ஆா்.” எனும் ஆவணப்பட வெளியீடு மற்றும் திரையிடல் சென்னை மேற்கு மாம்பலம்,சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிகழ்சிகள் துவங்கும் நிலையில் திடீரென வந்த காவல்துறை நிகழ்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் இந்த திருமண மண்டபத்தில் நிகழ்சியை நடத்தக்கூடாது எனவும் மிரட்டல் விடுத்தது.அப்பட்டமான ஜனநாயக விரோதமாக நடந்து கொண்ட காவல்துறையின் அடாவடித்தனத்தை முறியடித்து குறும்பட வெளியீட்டை,திரையிடலை எப்படியும் நடத்தி விடுவது என தோழர்கள் முடிவு செய்தனர். உடனடியாக கழக தோழர் அன்பு தனசேகர் அவர்களின் இல்லத்தின் மேல் மாடியில் நிகழ்சியை நடத்த மாற்று ஏற்பாடு செய்தனர்.தோழர் அன்பு தனசேகர் அவர்கள் காவல் துறையின் மிரட்டகளை புறந்தள்ளி தன் வீட்டில் நிகழ்சியை நடத்த மகிழ்சியுடன் ஒப்புக்கொண்டு நிகழ்சிக்கான ஏற்பாடுகளை செய்தார். உடனடியாக நாற்காலி, ஒலிபெருக்கி, விளக்கு அனைத்தும் தயார் செய்யப்பட்டு 100 பேர்...

திராவிடர் வாழ்வியல் உறுதிமொழி ஏற்பு !

பொள்ளாச்சி ஆனைமலை,கா.க.புதூரில் கிருத்திகா – ஸ்டாலின் இணையருக்கு, கழக தலைவர் தலைமையில் நடைபெற்ற ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் ! ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக ஆணவப்ப டுகொலைகள் நடந்து வருகிற இந்த நேரத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் கா.க.புதூர் கிராமத்தில் 29.05.2016 ஞாயிற்றுக்கிழமை 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்த கிருத்திகா – ஸ்டாலின் ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் கழக தலைவர் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் கா.க. புதூர் ஜாதி ஒழிப்பு போராளிகள் நினைவுத் தூண் முன்பிருந்து ஊர்வலமாக சென்ற பின் மதியம் 12.30 மணியளவில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் மணவிழா துவங்கியது.பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் தோழர் காசு.நாகரஜ்.அவர்கள் அனைவரையும் வரவேற்றுப்பேசினார். தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி பெரியார் சரவணன்,தோழர் அறக்கட்டளை சாந்த குமார் கோவை கதிரவன்,அறிவியல் மண்ரம் ஆசிரியர் சிவகாமி, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, பேராசிரியர்...

தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர்கள் கூட்டம் !

29/5/2016 அன்று காலை 10 மணிக்கு திருப்பூரில் வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பகத்தில் தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட திவிக செயலாளர் முகில்ராசு வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில்,இடஒதுக்கீடு, தனியார்துறையில் இடஒதுக்கீடு, பொதுநுழைவுத் தேர்வு, அரசாணை 92, தனியார் பள்ளிகளில் 25%மாணவர் சேர்க்கை, தனியார் கல்விக்கொள்ளை, தாய்மொழிக்கல்வி, கட்டாய கல்வி உரிமைச்சட்டம் ஆகியவை குறித்தும் இன்னும் பிற கல்விஉதவித்தொகை வழங்கும் அரசாணை குறித்தும் தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி.சிவக்குமார் தொடக்கஉரையாற்றினார். இதனை தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு திவிக பரப்புரை செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் விளக்கம் அளித்தார். காலை நிகழ்வு மதியம் 1.30 மணிவரை நடைபெற்றது. மதிய உணவு மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. மீண்டும் மதியம் 2 மணிக்கு தோடங்கிய கூட்டம் 6.30 வரை தொடர்ந்தது .மதிய அமர்வில் திவிக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு தோழர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் புதிதாக...

குடந்தை ஆ.பி.எஸ்.ஸ்டாலின் முடிவெய்தினார் !

01.06.2016 அன்று மாலை 5 மணியளவில் உடல்நலக்குறைவினால் தோழர் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் அவர்கள் முடிவெய்தினார்.இன்று 02.06.2016 மாலை கும்பகோணம் டாக்டர் மூர்த்தி சாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற உள்ள இறுதி நிகழ்வில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மிகச்சிறந்த பெரியாரியல்வாதி, திராவிடர் கழக இளைஞர் அணி தலைவராக பணியாற்றி ஏராளமான இளைஞர்களை அமைப்பிற்கு அழைத்து வந்தவர், 1974 இந்தியாவே திரும்பிப்பார்த்த அன்னை மணியம்மையார் நடத்திய ராவணலீலா நிகழ்வில் முன்னின்று செயல்பட்டவர்,அதற்காக அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மகத்தான அற்பணிப்புகளை செய்தவர், ஈழவிடுதலை போராளிகளுக்கு தன்னுடைய சொத்துக்களை வழங்கியவர், பெருமளவு நிதி உதவி செய்தவர், திராவிடர் விடுதலைக் கழக ஏடான புரட்சிப்பெரியார் முழக்கம் ஏட்டை குடந்தை மற்றும் சுற்றுப்பகுதிகளில் முடிதிருத்தும் நிலையங்களில் எல்லாம் கொண்டு போய் சேர்த்தவர், தமிழ்நாடு இந்திய தேசியத்தில் இருந்து விடுபட வேண்டும் என்கிற...

தவறவிடக் கூடாத ஆய்வு நூல்கள் – தோழர் பழ.அதியமான்

”தவறவிடக் கூடாத ஆய்வு நூல்கள்” எனும் தலைப்பில் தோழர் பழ.அதியமான் அவர்கள் 30.05.2016 தமிழ் இந்து நாளிதழில் சிந்தனைக் களம் பகுதியில் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் புத்தாயிரத்தில் வந்த சில முக்கிய நூல்கள் என குறிப்பிட்டுச் சொல்லியுள்ள புத்தகங்களில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை வெளியீட்டாளராக கொண்ட பெரியார் திராவிடர் கழக பதிப்பகம் சார்பில் வெளியிட்ட ”குடி அரசு 1925-1938 பெரியாரின் எழுத்தும் பேச்சும்” தொகுதிகள் குறித்து பதிவு செய்துள்ளார்.இவை இணையத்திலும் கிடைக்கின்றன என கூறியும் உள்ளார். இணையத்தில் இத்தொகுதிகளை படிக்க விரும்புவோர் கீழ்காணும் இணைப்பில் உள்ள கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று கழக வெளியீடுகள் எனும் தலைப்பின் கீழ் சென்று படிக்கலாம். http://dvkperiyar.com/?cat=76

பிரியாவிடை ! கண்ணீர் மல்க பிரிந்து செல்லும் குழந்தைகள் !

பிரியாவிடை ! கண்ணீர் மல்க பிரிந்து செல்லும் குழந்தைகள் ! ”குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் – 2016” தமிழ்நாடு அறிவியல் மன்றம் 20.05.2016 முதல் 24.05.2016 முடிய 5 நாட்கள் திண்டுக்கல்,ஐ.சி.எம். ஹவுசில் நடத்திய ”குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் – 2016” ல் பங்கேற்ற குழந்தைகள் முகாம் நிறைவுற்று தத்தமது இல்லம் திரும்பும் போது கண்ணீர் மல்க சக நண்பர்களுக்கு பிரியாவிடை கொடுத்த நெகிழ்ச்சியான நிகழ்வு. 42 குழந்தைகள் பங்கேற்புடன் இம்முகாம் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்சியுடனும் நடைபெற்றது.  

பாலமலை மருத்துவ முகாம் 18052016

18.05.2016 அன்று பாலமலை பெரியாரியல் பயிற்சி முகாமையொட்டி இராமன்பட்டி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நடைபெற்றது. திருமதி. விஜயா சரவணன் (பாலமலை ஊராட்சித் தலைவர்) தலைமையில் பூச்சியப்பன் (ஊர்ப்பட்டகாரர்), சதீசு (துணைத் தலைவர், பாலமலை ஊராட்சி), மாதப்பன் (ஊர்க் கவுண்டர்) ஆகியோரின் முன்னிலையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். சுமார் 100க்கும் மேற்பட்டபொதுமக்கள் இம்மருத்துவ முகாமில் பயனடைந்தார்கள். முகாமில் பங்குபெற்ற மருத்துவர்கள்: மருத்துவர் முரளி கிருஷ்ண பாரதி, மருத்துவர் வ.ப.வீரமணி, இவர்களுக்கு உதவியாக திருமதி சூர்யா, இரா.விஜயகுமார் தார்காடு, இலக்கம்பட்டி குமார் மற்றும் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி ஆகியோர் செயல்பட்டனர். (முகாம் காலை 9:30 மணிக்கு துவங்கி மதியம் 1:30 மணி வரை நடைபெற்றது)

காதலர்களுக்கு ‘காவல்’ தரும் காவலாண்டியூர் !

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பாலமலையில் மே 17, 18 தேதிகளில் பெரியாரியல் பயிலரங்கம் மிகச்சிறப்பாகவும் கருத்துச் செறிவாகவும் நடைபெற்றது.அந்த பயிரங்கத்தின் இடையே ஜாதிமறுப்பு காதல் திருமணம் நடைபெற்றது. குமாரபாளையம் சக்தி (தந்தை பெயர் முருகன்), ஓசூரைச் சேர்ந்த பிரீத்தி (தந்தை பெயர் ஆனந்த்) ஆகியோரின் ஜாதி மறுப்பு திருமணத்தை கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் அவர்கள் மணி நடத்தி வைத்தார். மேட்டூரில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள காவலாண்டியூர் கிராமம்,கழகக் கட்டமைப்புடன் செயல்படக்கூடிய பகுதி. பெயரிலேயே‘காவல்’அடையாளத்தைக் கொண்டிருக்கும் இந்த ஊருக்கு ஒருதனி சிறப்பு உண்டு. குடும்பத்தையும் ஜாதியையும் எதிர்த்து, ஜாதி மறுப்பு திருமணம் புரிந்த ஏராளமான இணையர்களுக்கு புகலிடம் தந்து, ‘காவல்’ காத்த ஊர் காவலாண்டியூர். மாதக் கணக்கில் அடைக்கலம் பெற்ற இணையர்களும் உண்டு. அண்மையில் வெளி வந்த சின்னத்துரை எனும் தமிழ்த் திரைப்படம் ஒன்றில் ஊரை விட்டு ஓடி வந்த ஓர் ஜாதி மறுப்பு இணையர், ‘காவலாண்டியூர்’...

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்திய ”குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் – 2016 ”

திண்டுக்கல்,ஐ.சி.எம். ஹவுசில் 20.05.2016 முதல் 24.05.2016 முடிய 5 நாட்கள் நடைபெற்ற குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் 42 குழந்தைகள் பங்கேற்புடன் சிறப்புடன் நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் கருத்துக்கள் பகிரப்பட்ட இப்பழகு முகாமில் ”விமர்சன சிந்தனை மற்றும் பாலின சமத்துவம்” குறித்து தோழர் பூங்குழலி கருத்துரைத்தார். கதை சொல்லல் மற்றும் கதை உருவாக்கல் ஆகியவற்றை தோழர்கள் கோவை வெங்கட்,திருப்பூர் சதீஸ்குமார் ஆகியோர் நிகழ்த்தினர். ”நாடகம் மற்றும் திறன் வளத்தல் ”குறித்த கருத்துக்களை தோழர் சந்திரமோகன் அவர்களும்,”இளம் பருவத்தினருக்கான சவால்கள்” வகுப்பினை தோழர் நீலாவதி அவர்களும், ”வாசிப்பும்,விமர்சனமும்” வகுப்பினை தோழர் சிவகாமி அவர்களும் வழி நடத்தினர். சமூக சிற்பிகள் அறிமுகத்தினை தமிழ்செல்வன் அவர்களும், மீளாய்வுகளை மணிமாறன் அவர்களும் நெறிப்படுத்தினர்.ஓவிய வகுப்புகளுக்கு சிகரன்,பாடல் வகுப்புகளுக்கு யாழினி ஆகியோரும் பொறுப்பேற்று நடத்தினர். சித்தன்னவாசல் புதுக்கோட்டை அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு குழந்தைகள் சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டனர். அறிவிற்கும் மன வளர்ச்சிக்குமான செய்திகளும்,கொண்டாட்டமும் நிறைந்த இம்முகாம் இனிதே நிறைவடைந்தது. இறுதி...

அய்யா அருணாசலம் மறைவு திராவிடர் இயக்கத்திற்கு பேரிழப்பு

‘அய்யா அருணாசலம் மறைவு திராவிடர் இயக்கத்திற்கு பேரிழப்பு’ திருக்கண்ணபுரத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு பேச்சு திருக்கண்ணபுரம் மே. 25 பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் தமிழ் இசை மன்றம், தமிழ் சான்றோர் பேரவை நிறுவனருமான அய்யா அருணாசலம் அவர்கள் நேற்று முன்தினம் சென்னையில் இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் நடைபெற்றது. அய்யா அருணாசலம் அவர்களின் இறுதி நிகழ்வில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் தலைமைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளையராஜா, நாகை மாவட்ட செயலாளர் தெ.மகேசு, மாவட்ட அமைப்பாளர் அன்பரசன், மாவட்ட பொருளாளர் விஜயராகவன், திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, திருச்சி மாவட்ட அமைப்பாளர் குணா, மயிலாடுதுறை நகர தலைவர் நாஞ்சில் சங்கர் ஆகியோர் பங்கேற்று இறுதி மரியாதை செய்தனர். பின்னர் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு பேசுகையில்...

பாலமலை பெரியாரியல் பயிலரங்கம்

ஏராளமான புதிய தோழர்கள் உற்சாகத்துடன் பங்கேற்க,சிறப்புடன் நடைபெற்றது ! பல்வேறு தலைப்பிலான வகுப்புகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 2 நாட்கள் நடைபெற்றது பயிலரங்கம் ! சேலம் மாவட்டம், காவலாண்டியூர், பாலமலையில் கடந்த 17.05.2016 மற்றும் 18.05.2016 அன்று சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 2 நாள் பெரியாரியல் பயிலரங்கு நடைபெற்றது.120 தோழர்கள் இப்பயிலரங்கில் பங்கேற்றனர். முதல் நாள் நிகழ்வாக 17.05.2016 அன்று காலை 10 மணிக்கு பயிலரங்கம் குறித்த அறிமுகத்துடன் பயிலரங்கு ஆரம்பமானது. காலை 11.00 மணிக்கு முதல் வகுப்பாக ”அறிவியல் சமுதாய உருவாக்கத்தை நோக்கி” எனும் தலைப்பில் மருத்துவர் எழிலன் அவர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.ஜோதிடம்,சாஸ்திரங்களின் பொய்மைகள் குறித்து காணொலிக் காட்சியுடன் விரிவாக விளக்கினார். உயிர்கள் உருவாக்கம் குறித்த மெய்ப்பிக்கப்பட்ட அறிவியல் கருத்துக்களை பகிர்ந்த மருத்துவர் எழிலன் அவர்களின் வகுப்பு மதியம் 2.30 வரை நீடித்தது. தோழர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் வகுப்பைக் கவனித்தனர். மருத்துவர் எழிலன் அவர்களின்...

முள்ளி வாய்க்கால் பேரழிவு 7ம் ஆண்டு நினைவேந்தல் மன்னார்குடி 19052016

முள்ளி வாய்க்கால் பேரழிவு 7ம் ஆண்டு நினைவேந்தல் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார் குடியில் நடைபெற்றது. மன்னார்குடி மே.19 இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி அன்று அப்பாவி தமிழர்கள் மீது தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்கள் கொத்து குண்டுகளை வீசி ஒரே நாளில் ஒன்றை லட்சம் தமிழ் மக்களை சிங்கள அரசு முள்ளி வாய்கால் பகுதியில் கொன்று குவித்தது, அப்போரில் இறந்த அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முள்ளி வாய்க்கால் 7ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடியில் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் சேரன்குளம் செந்தில் குமார், மதிமுக நகர செயலாளர் சன் சரவணன், நாம் தமிழர் கட்சி மன்னார்குடி சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் வேதா பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்....

“நியூட்ரினோ” திட்டத்திற்கு எதிராக போராடும் தோழர் முகிலன் கைதிற்கு கண்டனம்

தென் தமிழகத்தின் பாதுகாப்பிற்கே பேரபாயத்தை உருவாக்கும் “நியூட்ரினோ” திட்டத்திற்கு எதிராக பல்வேறு அடக்கு முறைகளை சந்தித்து களத்தில் போராடும் தோழர் முகிலன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் தனது ஆதரவினை தெரிவிக்கிறது. தோழர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடில்லாமல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதை கழகம் வன்மையாக கண்டிக்கிறது. தென் தமிழகத்தை அழிக்கும் திட்டமான நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்கும் திட்டத்தை மறைமுக ஆதரவு கொடுத்த அமைச்சர் திரு.ஒ.பன்னீர் செல்வம் அவர்களை இந்த தேர்தலில் தோற்கடிப்போம். நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்காத கட்சிகளை தோற்கடிப்போம் என்ற வேலைத் திட்டத்தோடு 08.05.2016 தேனி மற்றும் போடி பகுதிகளில் பரப்புரை இயக்கத்தை துவங்கினார் தோழர் முகிலன். இயற்கை வள பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் காலை தேனி கிருஷ்ணா திரையரங்கம் முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்புடன் பரப்புரை துவங்கியது. பரப்புரையின் தொடர்ச்சியாக போடி பேருந்து நிலையத்தில் மதியம் 2 மணியளவில் துண்டறிக்கை பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த...

காவி இருளில் முழ்கி கிடக்கும் மக்களை,பகுத்தறிவு பாடல்கள் மூலம் மீட்க வேண்டும்”- மக்கள் பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் தாயார் படத்திறப்பில் தோழர் அரங்ககுணசேகரன் பேச்சு.

”காவி இருளில் முழ்கி கிடக்கும் மக்களை,பகுத்தறிவு பாடல்கள் மூலம் மீட்க வேண்டும்”- மக்கள் பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் தாயார் படத்திறப்பில் தோழர் அரங்ககுணசேகரன் பேச்சு. பேராவூரணி மே. 6 திராவிடர் விடுதலைக்கழக பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் மறைவுற்ற தாயார் சின்னப்பிள்ளை அவர்களின் படத்திறப்பு விழா நிகழ்ச்சி திராவிடர் கழக மாவட்ட துணைத்தலைவர் அரு.நல்லதம்பி தலைமையில் பள்ளத்தூரில் நடைபெற்றது. தோழர் சின்னபிள்ளையின் படத்தினை பெரியார் பெருந்தொண்டர் அழகிய நாயகிபுரம் தோழர் ப.அ.வைத்தியலிங்கம் திறந்து வைத்தார். தோழர் சின்னப்பிள்ளையின் தொண்டினை நினைவு கூர்ந்து, சத்துணவு ஊழியர்சங்க மாவட்ட தலைவர் மனோகரன், ஆசிரியர் வீரமணி, தமாகா நிர்வாகி வை.ராகவன்,விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி முருகேசன், விடுதலை தமிழபுலிகள் கட்சியின் பொறுப்பாளர் பசுபதி, கூத்தலிங்கம் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஆத்மநாதன், திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் செல்வராஜ்,திராவிடர் விடுதலைக்கழக தஞ்சை மாவட்ட முன்னாள் அமைப்பாளர் கு.பாரி,மெய்சுடர் இதழ் ஆசிரியர் வெங்கடேசன், இசிஐ திருச்சபை ஆயர் ஜேம்ஸ், தமிழக...

தாலி,மெட்டியை அகற்றிய மணமக்கள் !

கழக தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பெண்ணடிமைச் சின்னங்களை அகற்றிய ஜாதி மறுப்பு வாழ்விணையர்கள் ! ”கல்கி – தேஜஸ்ஶ்ரீ” இருவரும் பி.டெ.க். பட்டதாரிகள்.படிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தேஜஸ்ஶ்ரீ அவர்கள் ஆந்திராவைச் சார்ந்தவர்.அவர் தந்தை தெலுங்கு ஆசிரியராக தமிழ் நாட்டில் பணி செய்கிறார்.அவர் இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். தந்தையின் எதிர்ப்பு காரணமாக வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேறி தேஜஸ்ஶ்ரீ – கல்கி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.கல்கி அவர்களின் பெற்றோர் வினோத்- ஸ்டெல்லா ஆகியோர் இந்த திருமணத்திற்கு ஆதரவளித்தனர்.வினோத் – ஸ்டெல்லா இணையர் பகுத்தறிவாளர்களாக பெரியாரியலை ஏற்றுக்கொண்டு வாழ்ந்துவரும் தோழர்கள் ஆவார்கள். இந்நிலையில் கடந்த 20.04.2016 அன்று கொளத்தூரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.தோழர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர். இவர்களின் திருமணம் குறித்து தேஜஸ்ஶ்ரீ அவர்களின் பெற்றோருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைக்கப்பெற்ற...

ஏழு தமிழர் விடுதலை கோரி வாகன பேரணி – ஜூன் 11 வேலூர்

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை : ”ஏழு தமிழர் விடுதலை கோரி ஜூன் 11 ஆம் தேதி காலை 8 மணிக்கு வேலூர் சிறைச்சாலை முன்பு துவங்கி சென்னை கோட்டை வரை நடைபெற உள்ள வாகன பேரணியில் திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னை இணைத்துக் கொள்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுவிக்க கோரி இப்பேரணி நடைபெறுகிறது. 25 ஆண்டுகளாக தன் மகனுக்காக மட்டுமல்லாமல் அனைத்து சிறைவாசிகளுக்காகவும் நீண்டதொரு மனித உரிமைப் போராட்டத்தை நடத்திவரும் அற்புதம் அம்மாள் அவர்கள் தலைமையில் 7 தமிழர் விடுதலை கூட்டியக்கம் ஒருங்கிணைக்கும் இந்த பேரணியை 7 பெண்கள் துவங்கி வைக்கின்றனர். சரியாக 25 ஆண்டுகளுக்கு முன் இதே ஜூன் 11 ஆம் தேதி ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்ததமாக காவல்துறை விசாரணைக்கு...

பெரியாரியியல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் இளம்பிள்ளை 13062016

பெரியாரியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நாள் : ஜூன்  13/2016 நேரம் : மாலை 6-00 மணி இடம் : இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகில்

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் ‘மாநில கலந்துரையாடல் கூட்டம்’

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் ‘மாநில கலந்துரையாடல் கூட்டம்’. நாள் : 29/5/2016,ஞாயிறு. நேரம் :காலை 10 மணி. இடம் : பெரியார் படிப்பகம், வீரபாண்டி பிரிவு, திருப்பூர் . ▪தமிழ்வழி கல்வியின் முக்கியத்துவம், ▪மருத்துவப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு, ▪பள்ளிகளில் சமஸ்கிருத திணிப்பு, ▪மாநில பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகத்தின் இடஒதுக்கீட்டுக்கெதிரான உத்தரவு, ▪சமச்சீர் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் ▪தமிழ்நாடு மாணவர் கழகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்படுகின்றன. இக்கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார் . ஆகவே தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தவறாமல் கலந்துகொள்ளவும். தொடர்புக்கு : பாரி.சிவக்குமார், மாநில அமைப்பாளர் 9688310621. முகில், அமைப்பாளர், திருப்பூர் மாவட்டம் 9566835387. முகில் ராசு,திருப்பூர் மாவட்ட செயலாளர் (திவிக) 9842248174

ஈரோடு பெரியார் சிலை முன் நடந்த ஆவணப்பட வெளியீடு … Sending to Clouds

‘பை பாஸ்’ ஆவணப்பட வெளியீடு ! கழகத் தலைவர் அவர்கள் ஈரோடு பெரியார் சிலை முன் ஆவண படத்தை வெளியிட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணையில்,தடய அறிவியல் ஆய்வுகளில் உள்ள குளறுபடிகளை ஆவணப்படுத்தி கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் மற்றும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி ஆகியோர் ஆவணப்படமாக ”பை பாஸ்” எனும் தலைப்பில் இயக்கி இருக்கிறார்கள். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட 25 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று 21.05.2016 காலை ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகில் உள்ள பெரியார் சிலை முன் இந்த ஆவணப்பட வெளியீடு நடைபெற்றது.. வரவேற்புரையாற்றிய தோழர் பொன் சந்திரன், ”ராஜீவ் வழக்கிலும், ஈழப் பிரச்சினைகளிலும், புலிகள் தொடர்பான வழக்குகளிலும் கைதானவர்களும், காவல்துறை நெருக்கடிகளில் பாதிக்கப்பட்டவர்களும். தொடக்க காலத்திலிருந்து புலிகளை ஆதரித்தவர்களும், உதவியவர்களும் பெரிதும் பெரியார் தொண்டர்களே என்பதால் பெரியார் பிறந்த மண்ணில், பெரியார் சிலைக்கு முன்னால் பெரியார் இயக்கத்தவர் வெளியிடுவதே பெரிதும்...

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் ”குழந்தைகள் பழகு,மகிழ்வு முகாம் !”

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் ”குழந்தைகள் பழகு,மகிழ்வு முகாம் !”

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் ”குழந்தைகள் பழகு, மகிழ்வு முகாம் !” 10 முதல் 15 வயதுவரை உள்ள குழந்தைகள் இருபாலரும். தேதி : 20.05.2016 முதல் 24.05.2016 முடிய 5 நாட்கள். இடம் : திண்டுக்கல். ♫ திறன் வளர்த்தல் ♫ பாலின சமத்துவம் ♫ படைப்பாற்றல் வளர்த்தல் (ஓவியம்,இசை,நாடகம்) ♫ திறனாய்ந்து வாசித்தல் ♫ ‘கதை சொல்லி’யோடு ஒருநாள் ♫ குழுவிவாதம் ♫ சமூக விஞ்ஞானிகள் ஓர் அறிமுகம் ♫ சித்தன்னவாசல் சுற்றுலா மற்றும் பல நிகழ்வுகளுடன்…………. குறைந்த பட்ச பங்களிப்பு : ரூ 1000/= (ரூபாய் ஒரு ஆயிரம் மட்டும்) வாய்ப்புள்ள தோழர்கள் முழுதொகையான 1500 /= (ரூபாய் ஒரு ஆயிரத்து ஐநூறு மட்டும்) ரூபாயை பங்களிக்கலாம். ”முன் பதிவு அவசியம்” தொடர்புக்கு : ஆசிரியர் தோழர் சிவகாமி – 9842448175 ஆசிரியர் தோழர் சிவக்குமார் – 9688856151

திவிக தேர்தல் நிலைப்பாடு விளக்கப் பொதுக்கூட்டம்

”தேர்தல் நிலைப்பாடு விளக்க பொதுக்கூட்டம்”, கெலமங்கலம். 4-5-2016 புதன் அன்று மாலை 5-00 மணிக்கு, கிருட்டிணகிரி மாவட்டம், கெலமங்கலம் பேருந்து நிலையத் திடலில், கிருட்டிணகிரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், கழக தேர்தல் நிலைப்பாட்டு விளக்கப் பொதுக்கூட்டம், மாவட்டத் தலைவர் தி.க.குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் தலைவர் குமார் , மாவட்டப் பொருளாளர் மைனர் (எ) வெங்கடகிரியப்பா, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் பழனி நன்றி கூறினார். தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வாழ்கிற அப்பகுதியில் மைனர் வெங்கடகிரியப்பா தெலுங்கு மொழியிலேயே உணர்வுபூர்வமாக, அத்தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிற தளி இராமச்சந்திரனின் அடாவடி சமூக விரோத நடவடிக்கைகளை விளக்கிப் பேசியதோடு, ஒரு பொதுவுடமைக் கட்சிக்கு இது ஒரு களங்கமே என்பதை விரிவாக விளக்கிப் பேசினார்....

பெரியாரியல் பயிற்சி வகுப்பு – இரண்டு நாட்கள் பாலமலை 17052016 மற்றும் 18052016

2 நாட்கள் பெரியாரியல் பயிற்சி வகுப்பு சேலம் மாவட்டம் காவலாண்டியூர் அருகில் பாலமலை முன்பதிவுக்கு மே 5 தேதிக்குள் தொடர்பு கொள்ளவும் 9750052191

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை மாநகராட்சி அலுவலக முற்றுகைப்போராட்டம்! 26042016

இன்று (26.04.2016) முற்றுகைப்போராட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழக அரசே ! உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடைபாதை கோயில்களை அகற்று எனும் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி முற்றுகைப் போராட்டம் ! நாள் : 26.04.2016 செவ்வாய்க்கிழமை,மாலை 4 மணி. இடம் : சென்னை மாநகராட்சி அலுவலகம்.ரிப்பன் மாளிகை. தலைமை : தோழர் விடுதலை ராஜேந்திரன்,பொதுச்செயலாளர் ,திராவிடர் விடுதலைக் கழகம். தொடர்புக்கு : 7299230363 சட்ட விரோதமான உள்ள நடைபாதைக் கோயில்களை அகற்று ! உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பத்து ஆண்டுகள் ஆகியும் அத்தகைய கோயில்களை அகற்றாமல் இனியும் காலதாமதப்படுத்தாதே !

ஆணவ படுகொலைகளை தடுத்திட தமிழக அரசு தனி சட்டம் இயற்றவேண்டும்” தலைவர் கொளத்தூர் மணி பேச்சு மன்னார்குடி அம்பேத்கர் பிறந்த நாள் 18042016

”ஆணவ படுகொலைகளை தடுத்திட தமிழக அரசு தனி சட்டம் இயற்றவேண்டும்” அம்பேத்கர் 125வது பிறந்த நாள் விழாவில்’கழக தலைவர் கொளத்தூர் மணி பேச்சு மன்னார்குடி ஏப். 20. தமிழகத்தில் ஜாதியின் பெயரால் நடைபெறுகின்ற ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு உடனடியாக தனி சட்டத்தை இயற்ற வேண்டுமென அம்பேத்கர் 125வது பிறந்த நாள் விழா கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர்மணி பேசினார். புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடி சிட்டி ஹாலில் கருத்தரங்கம் திருவாரூர் மாவட்ட செயலாளர் காளிதாசு தலைமையில் நடைபெற்றது. அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் வரவேற்றார். திராவிடர் விடுதலைக்கழக நாகை மாவட்ட செயலாளர் மகேசு, மாவட்ட அமைப்பாளர் அன்பசரன், மாவட்ட பொருளாளர் விஜயராகவன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பூபதி கார்த்திகேயன், தஞ்சை மாவட்ட செயலாளர் சித.திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கத்தில் தலைவர்களின்...

ஆக்கிரமிப்பு கோயில்களை அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 27042016

பொதுஇட ஆக்கிரமிப்பு கோயில்களை அகற்ற வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்தின் துண்டறிக்கை ஆர்ப்பாட்டம் 27042016 இடம் அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் முன்பு

சென்னையில் பெரியாரியல் பயிலரங்கம் 30042016

‘பெரியாரியல் பயிலரங்கம்’ கழக செயல்வீரர் தோழர் செ.பத்ரிநாராயணன் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஒருநால் பெரியாரியல் பயிலரங்கம் ! நாள் : 30.04.2016 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு. இடம் : முருகேசன் திருமண மண்டபம்,இராயப்பேட்டை. துவக்கவுரை : தோழர்.பால் பிரபாகரன். பரப்புரை செயலாளர். திராவிடர் விடுதலைக் கழகம் தலைப்பு : ‘இந்துத்துவா’ தோழர். விடுதலை இராசேந்திரன். பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். தலைப்பு : ”பெரியாரியல் – ஒரு பார்வை” தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்