தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர்கள் கூட்டம் !

29/5/2016 அன்று காலை 10 மணிக்கு திருப்பூரில் வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பகத்தில் தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட திவிக செயலாளர் முகில்ராசு வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில்,இடஒதுக்கீடு, தனியார்துறையில் இடஒதுக்கீடு, பொதுநுழைவுத் தேர்வு, அரசாணை 92, தனியார் பள்ளிகளில் 25%மாணவர் சேர்க்கை, தனியார் கல்விக்கொள்ளை, தாய்மொழிக்கல்வி, கட்டாய கல்வி உரிமைச்சட்டம் ஆகியவை குறித்தும் இன்னும் பிற கல்விஉதவித்தொகை வழங்கும் அரசாணை குறித்தும் தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி.சிவக்குமார் தொடக்கஉரையாற்றினார்.

இதனை தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு திவிக பரப்புரை செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் விளக்கம் அளித்தார். காலை நிகழ்வு மதியம் 1.30 மணிவரை நடைபெற்றது. மதிய உணவு மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது.

மீண்டும் மதியம் 2 மணிக்கு தோடங்கிய கூட்டம் 6.30 வரை தொடர்ந்தது .மதிய அமர்வில் திவிக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு தோழர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் புதிதாக மாணவர் கழகத்தில் இணைந்த தோழர்களை பாராட்டியும், பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். புதிய தோழர்களுக்கு திவிக தலைவர் பெரியாரியல் புத்தகங்களை வழங்கினார்.

முடிவில் தோழர்கள் பேசும்போது இந்த ஒருநாள் நிகழ்வு பல்வேறு செய்திகளை தெரிந்துகொள்ளவும், நாம் இனி எப்படி செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துவதாகவும் இருந்ததாக கூறினர்.

ஆரம்பத்தில் பல்வேறு கேள்விகளை இடஒதுக்கிடு குறித்து கேட்ட திருப்பூர் தோழர் கோகுல் தோழர் பால்.பிரபாகரன் விளக்கத்திற்க்கு பின் முடிவில் இடஒதுக்கீட என்பது பற்றிய என்னுடைய தவறான பார்வை மாறியதாக குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, திவிக பொறுளாளர் திருப்பூர் துரைசாமி,சூலூர் பன்னீர்செல்வம், விருதுநகர் கணேச மூர்த்தி,பல்லடம் மைதிலி, தேன்மொழி, திருப்பூர் தனபால், பரிமளராசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாரி.சிவக்குமார் நன்றியுரை கூறினார்.

இறுதியாக இக்கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :-
1)பெரும் பொருட்செலவில் தனியாரால் நடத்தப்படும் (ப்ராய்லர்) பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு சற்றும் குறையாமல் கிராமப்புற, உழைக்கும் ஏழை மக்களின் பிள்ளைகள் போதிய கட்டமைப்புஇல்லாத அரசு பள்ளிகளில் பயின்று மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றமைக்கு தமிழ்நாடு மாணவர் கழகம் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது.

2) மத்திய அரசால் நடத்தப்படும் எய்ம்ஸ், ஜிப்மர், பிஜிஅய், போன்ற மருத்துவக்கல்லூரிகளில் இன்றுவரை பொதுநுழைவுத்தேர்வு இல்லாதபோது. பொதுநுழைவுத்தேர்வு சம்பந்தமான வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நிலையிலேயே அனுமதி அளித்திருப்பது ஆங்கிலம், இந்தி பேசாத, சிபிஎஸ்சி பாடத்திட்டம் பயிலாத முதல் தலைமுறையாய் பட்டம் பயிலும் கிராமப்புற ஏழை உழைக்கும் மக்களுக்கு எதிரானது. எனவே தமிழ்நாடு மாணவர் கழகம் பொதுநுழைவுத்தேர்வை ஒருபோதும் நடைமுறைப்படுத்தக்கூடாது என அரசை வலியுறுத்துகிறது

3) தரமான கட்டாய இலவசக் கல்வியை அனைவருக்கும் வழங்க தமிழ்நாடு மாணவர் கழகம் கேட்டுக்கொள்கிறது

4)ஆரம்பக்கல்வியை தாய்மொழியிலேயே கற்ப்பது சாலச்சிறந்தது, இதுவே கல்வியாளர்கள் மற்றும் உலவியலாளர்கள் கருத்து. எனவே பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தாய்மொழிக்கல்வியில் சேர்க்க தமிழ்நாடு மாணவர் கழகம் கேட்டுக்கொள்கிறது.

5)அரசாணை 92 ஐ முழுமையாக நடைபெறைப்படுத்தவும், அதனை கண்காணிக்கவுப் கல்லூரி, பல்கலைக்கழகம் அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்து, முழுமையாக நடைமுறைப்படுத்தாத கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆண்டுதோரும் மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிடவும் அரசை தமிழ்நாடு மாணவர் கழகம் வலியுறுத்துகிறது.

6)மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி கிராமப்புற எழை உழைக்கும் மக்களின் பிள்ளைகள் பயிலும் அரசு பள்ளிகளை ஆண்டுதோரும் அரசு மூடிவருவதை தமிழ்நாடு மாணவர் கழகம் வண்மையாக கண்டிக்கிறது.

7)பள்ளிகல்வி இயக்குனர் சமீபத்தில் வெளியிட்ட பதினென்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பில்.பொதுப்பட்டியலுக்கான மாணவர் சேர்க்கையை, முன்னேறிய வக்குப்பினர் என குறிப்பிட்டுள்ளார் இடஒதுக்கீட்டுக்கெதிராக தெரிந்தே செயவ்படும் இதுபோன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாணவர் கழகம் வலியுறுத்துகிறது.

8) இடஒதுக்கீடு குறித்த விரிவான தகவல்களை பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்க்க தமிழ்நாடு மாணவர் கழகம் அரசு வலியுறுத்துகிறது.

9)கல்வி, வேளைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசை தமிழ்நாடு மாணவர் கழகம் கேட்டுக்கொள்கிறது
மேற்க்கண்ட தீர்மானங்களின் அவசியத்தை வலியுறுத்தி பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்களிடம் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்வதென முடிவெடுக்கப்படுகிறது .

13310364_1753888508228375_3332891159970100441_n

You may also like...