Category: குடி அரசு 1934

முதல்  மந்திரியார்  சீக்கிரம்  கவனிப்பாரா?

முதல் மந்திரியார் சீக்கிரம் கவனிப்பாரா?

கோயம்புத்தூர்  ஜில்லா  போர்டு  பிரசிடெண்டு  மீது  சுமார்  30  மெம்பர்கள்  சேர்ந்து  “”நிர்வாக  ஊழல்”களைப்  பற்றியும்,  போர்டுக்கு  ஏற்பட்ட  நஷ்டத்தைப்  பற்றியும்  ஒரு  பிராது  தயாரித்து  கையொப்பமிட்டு  சர்க்காருக்கு  அனுப்பிய  விஷயமும்,  மற்றும்  பிரசிடெண்ட்  கனம்  வி.சி.  வெள்ளியங்கிரிக்  கவுண்டர்  மீது நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  கொண்டுவர  பட்டக்கார    கனவான்கள்  முதலியவர்கள்  முயற்சித்துக்  கொண்டிருந்த  விஷயமும்  நேயர்கள்  அறிந்ததாகும். பிறகு  உடனே  கனம்  பட்டக்காரர்களுக்கும்,  சில  மெம்பர்களுக்கும்,  கனம்  கவுண்டர்  அவர்களுக்கும்  ஒரு  வித  சமாதானம்  ஏற்பட்டு  விட்டதாகவும்,  அதன்  பயனாய்  அப்பிராதில்  கையெழுத்து  செய்திருந்த  கனவான்களில்  ஒரு  சிலர்  தங்கள்  கையெழுத்துக்களை  வித்ட்றா  செய்து கொண்டதாகவும்  தெரிய வருகிறதோடு  சமாதானத்தில்  ஒரு  நிபந்தனை,  கனம்  கவுண்டர்  அவர்கள்  பிரசிடெண்டு  ஸ்தானத்தை  ராஜீனாமா  செய்து  விடுவதாகப்  பெரிய  இடத்தில்  ஒப்புக்  கொண்டிருப்பதாயும்  சொல்லிக்  கொள்ளப்படுகிறது. இதன் உண்மை  எப்படி  இருந்தாலும்  அதைப்பற்றி  பொது  ஜனங்களுக்கு  அக்கரை  இருக்காது.  ஸ்தல  ஸ்தாபன  நிர்வாகங்களில்  கண்ட்றாக்ட்டு ...

வெங்கிட்டரமணா

வெங்கிட்டரமணா

  “”கோவிந்தாஆ  கோஓவிந்தா” “”வெங்கிடாசலபதிக்குத்  தர்மம்  செய்யுங்கள்” மானங்கெட்ட  பிழைப்பு காங்கிரசின்  பேரால்  எலக்ஷன்  நடத்துகின்றவர்கள்  தங்களுடைய  (அதாவது  அபேட்சகர்களாக  நிற்கும்  ஆசாமிகள்  தனிப்பட்ட  முறையில்  தங்களுடைய)  யோக்கியதைகள்  தேசத்தார்கள்  அறிந்திருப்பதால்  தங்களுக்குச்  சொந்தத்தில்  ஓட்டு  கிடைக்காது  என்று  தீர்மானம்  செய்து  கொண்டு  “”காந்திக்கு  ஓட்டுச்  செய்யுங்கள்”  என்று  கேட்டு  மக்களை  ஏமாற்றி  வருவது  ஒரு  புறமிருக்க,  இவ்வேமாற்றுதலை  ஜஸ்டிஸ்  கட்சியார்  வெளியாக்கும்  முறையில்  காந்தியார்  காங்கிரசை  விட்டுப்  போய்  விடுகிறேனென்று  சொல்லுவதையும்  அந்தப்படி  காங்கிரசை  விட்டு  அவர்  வெளியேறுவதற்கு  உண்டான  காரணங்களை  அவர்  எடுத்துச்  சொன்னபடியே  வெளியிடுவதையும்  பார்த்த  காங்கிரஸ்காரர்களும்,  பார்ப்பனப்  பத்திரிக்கைகளும்  அடக்க  முடியாத  ஆத்திரம்  கொண்டு  வாயில்  வந்தபடி  எல்லாம்  இழிதகமையில்  வைகின்றனர்.  இதை நாம்  ஒரு  வெட்கம்  கெட்ட  ஆத்திரம்  என்றும்,  மானங்கெட்ட  பிரசாரம்  என்றும்  தான்  சொல்ல  வேண்டியிருக்கிறது. காந்தியார்  வெட்ட  வெளிச்சமாக  முழு  முட்டாள்களுக்கும்,  புரியும்  மாதிரியில்  தான்  விலகும்  காரணங்களை  விளக்கியிருக்கிறார்....

ஏமாற்றுந்  திருவிழா  காங்கிரஸ்  கூத்து

ஏமாற்றுந்  திருவிழா காங்கிரஸ்  கூத்து

    காங்கிரஸ்  கூட்டங்களைப்  பற்றியும்,  அதன்  மகாநாடுகளைப் பற்றியும்  அவையெல்லாம்  ஏமாற்றுத்  திருவிழா  என்று  நாம்  அவ்வப்போது  எழுதி  வந்திருப்பதை  நேயர்கள்  மறந்திருக்க  மாட்டார்கள். அது  போலவே  காங்கிரஸ்  நேயர்கள்  பலருக்கும்  இவ்விஷயம்  இப்போது  வரவர  உண்மையாகி  வந்து காங்கிரசின்  பேரால்  தங்கள்  பிழைப்பை  நிர்த்தாரணம்  செய்து  கொண்டவர்கள்  தவிர,  மற்றபடி  தாங்கள்  சொந்தத்தில்  பாடுபடவும்,  வேறுவழியில்  அரை  வயிற்றுக்காவது  சம்பாதித்துக்  கொள்ள  மார்க்கமிருக்கிறதென்று  தைரியம்  கொள்ளவும்  உறுதியும்  ஊக்கமும்  உடையவர்கள்  பெரும்பாலும்  காங்கிரசிலிருந்து  விலகி வந்து  விட்டதும்,  வந்து  கொண்டிருப்பதும்  எவரும்  அறியாததல்ல.  கடைசியாக  பழம்பெரும்  காங்கிரஸ்வாதி  என்றும்,  காங்கிரசிற்கே  தனது  வாழ்நாள்  முழுவதையும்  ஒப்படைத்த  தியாகி  என்றும்  காங்கிரஸ் காரர்களாலும்,  பார்ப்பனர்களாலும்  சொல்லப்பட்டு  வந்த  தோழர்  மாளவியா  அவர்களும்  கூட  காங்கிரஸ்  கொள்கைகள்  தந்திரமானது  என்னும் காரணத்தால்  காங்கிரசோடு போட்டி  போடத்  துணிந்துவிட்டார். இது  அவ்வளவு  முக்கிய  விஷயமல்லவென்று  சொல்லி விடலாம். என்றாலும்  தோழர்  காந்தியவர்களே  இன்று ...

தேர்தல்  பிரசார  போக்கு

தேர்தல்  பிரசார  போக்கு

தோழர்  சத்தியமூர்த்தி பொய்ப் புகார்களுக்குப்  பதில் தேர்தலில்  போட்டி  அபேட்சகர்கள்  ஒருவரையொருவர்  இகழ்வதும்,  எதிர்  அபேட்சகர் மீது  வாக்காளர்களுக்கு  அவ நம்பிக்கை  ஏற்படும்படி  செய்வதும்  உலகம்  முழுதும் சகஜமாகி விட்டது.  ஆனால்  அவ்விதம்  செய்வதற்கும்  ஓர்  எல்லையுண்டு.  இப்போது  சென்னை  நகர் சம்பந்தப்பட்ட  வரையில்,  காங்கிரஸ்  பெயரைக்  கூறிக்கொண்டு  பிரசாரம்  செய்து  வருகிறார்கள்.  “அபேட்சகராக  நிற்கும்  ஆளை  கவனிக்காதீர்கள்.  மகாத்மா  காந்திக்காக  ஓட்டுப்  போடுங்கள்’  எனக்  கூறுகிறார்கள்.  இது  நாமம்  போட்ட  சோம்பேரிகள்  திருப்பதி  வெங்கிடாசலபதிக்கு  உண்டியல்  பிச்சை  கேட்பது  போலாகும்.  ஆனால்  நான்  அவ்விதம்  எதுவும்  கூற  விரும்பவில்லை.  சென்னை  மாகாணம்  சம்பந்தப்பட்ட  வரையில்  பார்ப்பனர்  அல்லாதார்  ஜாதியை  ஆதாரமாகக்  கொண்டே  தேர்தல்  இயக்கம்  நடந்து  வருகிறது.  நீங்களெல்லோரும்  சென்னை  நகரத்துக்கு  அபேட்சகராக  நிற்கும்  தோழர்  ராமசாமி  முதலியாரின்  அந்தஸ்தையும்,  யோக்கியதாம்சங்களையும்  தோழர்  சத்தியமூர்த்தி  யோக்கியதாம்சத்தையுமே  கவனிக்க  வேண்டும்.  அபேட்சகர்களில்  யார்  செய்வது  சரி,  யார்  செய்வது  தப்பு  என்பதைப் ...

தேர்தல்  ஜனப்பிரதிநிதித்துவத்திற்கா?  பித்தலாட்ட  வியாபாரத்திற்கா?

தேர்தல்  ஜனப்பிரதிநிதித்துவத்திற்கா?  பித்தலாட்ட  வியாபாரத்திற்கா?

  நாட்டில்  எங்கு  பார்த்தாலும்  இப்போது  இந்திய  சட்டசபை  ஸ்தானங்களுக்குத்  தேர்தல்  பிரசாரம்  தொடங்கி  விட்டது.  சட்டசபைகள்  மாய்கையென்றும்,  அங்கு  சென்று  மக்களுக்கு  எவ்வித  நன்மையும்  செய்ய  முடியாதென்றும்  சட்டசபைகள்  அரசாங்கம்  தங்களுடைய  பாதுகாப்புக்காக  ஏற்படுத்திக்  கொண்டிருக்கிற  அரண்களென்றும்,  சட்டசபையில்  சர்க்காருடைய  வலுவு  பிரதிநிதிகள்  வலுவைவிட  எவ்வளவோ  மடங்கு  மேல்பட்டதென்றும்  அரசாங்கத்தின்  வலுவைச்  சட்டசபை  மூலம்  சிறிதாவது  அசைக்கக்  கூட  முடியாதென்றும்  தோழர்கள்  காந்தியார்,  தாஸ்,  நேரு,  ராஜகோபாலாச்சாரியார்  ஆகியவர்கள்  மாத்திர மில்லாமல்  இன்று  சட்டசபைக்குக்  காங்கிரஸ் மாறலாய்  நிற்கும்  அபேட்சர்களுள்பட  எல்லோரும்  சொல்லியிருக்கிறார்கள். இந்த  அபிப்பிராயமானது  சட்டசபைக்கு  வெளியிலிருந்து  கொண்டு  சொன்னதென்று  எண்ணிவிட  முடியாதபடி காங்கிரஸ்  தலைவர்கள்,  தியாகிகள்,  மேதாவிகள்  பலர்  சட்டசபைக்குள்  தக்க  பலத்துடன்  சென்று,  ஒரு  கை  பார்த்துவிட்டு  வெளியில்  வரும்போதும்,  வந்த  பின்பும்  சொன்னது  என்பதை  நாம்  வாசகர்களுக்கு  நினைப்பூட்ட  வேண்டியதில்லை. அன்றியும்  சட்டசபைகளும்,  அதற்குள்  சென்று  நாம்  செய்யக்கூடிய  காரியங்களும்  அரசாங்கத்தாரால்  ஏற்படுத்தப்பட்டு  அனுமதிக்கப்பட்ட ...

கோவையில்  தோழர்கள்  ஈணூ. வரதராஜுலு 

கோவையில்  தோழர்கள்  ஈணூ. வரதராஜுலு 

    ஈ.வெ. ராமசாமி 60007000  ஜனங்கள்  பிரம்மாண்டமான  கூட்டம் தோழர்களே!  இன்று  இந்தியாவெங்கும்  பல  தரங்களில்  கிளர்ச்சிகளும்,  முயற்சிகளும்  செய்யப்பட்டு  வருகின்றன.  அவற்றில்  இப்போது  மிகவும்  விளம்பரமாய்க்  காணப்படுவது  இந்திய  சட்ட சபைத்  தேர்தல்களாகும்.  அது  விஷயமாய்  பல  கட்சிக்காரர்களும்  பலவித  அபிப்பிராயக்காரர்களும்  சட்டசபைத்  தேர்தலுக்கு  நிற்பதால்  அவரவர்கள்  அபிப்பிராயங்களைப்  பொது  ஜனங்களுக்குச்  சொல்லி  ஓட்டுகள்  கேட்கவோ  அல்லது  எந்தப்படி  சொன்னால்  பொது  ஜனங்கள்  ஓட்டுகள்  தங்களுக்குக்  கிடைக்குமென்று  கருதி  அதன்படி  பேசி  ஓட்டுக்  கேட்கவோ  ஆன  காரியங்களை  அபேக்ஷகர்கள்  செய்து  வருகிறார்கள். இந்த  நிலையில்  எப்படிப்பட்ட  நியாயமான,  யோக்கியமான  கொள்கைகள்  கொண்ட  அபேக்ஷகரும்  ஜனங்களிடையில்  வந்து  தங்கள்  அபிப்பிராயங்களையும்,  நிலைமைகளையும்  சொல்லித்  தீர  வேண்டிய  நிர்ப்பந்தம்  ஏற்பட்டு  விட்டது. அதனாலேயே  தோழர்  வரதராஜுலு  அவர்கள்  இன்று  இங்கு  இந்திய  சட்டசபைத்  தேர்தலுக்குத்  தான்  நிற்பதைப்  பற்றியும்,  உங்கள்  எல்லோருடைய  ஆதரவும்  தனக்கு  வேண்டும்  என்பதைப்  பற்றியும்  தெரிவித்துக்  கொள்வார். ...

“”ஷண்முகத்தின்  அஹம்பாவம்”

“”ஷண்முகத்தின்  அஹம்பாவம்”

  தோழர்  ஷண்முகம்  அவர்கள்  தனது  தேர்தல்  சம்மந்தமாய்  ஆங்காங்கு  பிரசங்கம்  செய்து  வருவது  யாவரும்  அறிந்ததாகும்.  அவருடைய  எதிரிகளாகிய  காங்கிரஸ்காரர்கள்    தேசிய  பத்திரிகைக்காரர்கள்    பார்ப்பனர்  ஆகியவர்கள்  ஷண்முகத்தை  வைவதற்கும்  அவர்மீது  பழி சுமத்தி  விஷமப்  பிரசாரம்  செய்வதற்கும்  ஆட்டவா  ஒப்பந்தத்தையும்,  சட்டசபைத்  தலைவர்  பதவியில்  “”அவர்  வில்லிங்டன்  பிரபுக்கு  அடிமையாய்  இருந்தார்”  என்றும்,  இனியும்  அடிமையாய்  இருக்கப்  போகிறார்  என்றும்,  காங்கிரசுக்கு  துரோகியென்றும்,  வியாபாரிகளுக்கு  துரோகியென்றும்  சொல்லி  அவற்றைப்  பல்லவியாய்  வைத்து  எதிர்ப்  பிரசாரம்  செய்து  வந்தார்கள்.  இவற்றிற்கெல்லாம்  தக்க  பதில்  சொல்லப்பட்டவுடன்  இப்போது  அந்தப்  பல்லவிகளை  உபயோகிக்க  முடியாமல்  போய்விட்டதால்  ஷண்முகம்  பிரசங்கத்தில்  “”அப்படிச்  சொன்னார்”  “”இப்படிச்  சொன்னார்”  “”இது அகம்பாவம்”  “”இது  தலைவர்க் கழகல்ல”  “”இப்படிப்பட்டவர்  தலைவராகக்  கூடாது”.  இவர்  தெரிந்தெடுக்கப்பட்டால்  எப்படியும்  தலைவராகி  விடுவார்.  ஆதலால்  தெரிந்தெடுக்கக்  கூடாது”  என்று  புதிய  முறையில்  இப்போது  விஷமப்  பிரசாரம்  செய்ய  ஆரம்பித்து  இருக்கிறார்கள்.  தென்னிந்தியாவில்  உள்ள  காங்கிரஸ்வாதிகள் ...

பார்ப்பனரைச்  சேர்த்தது  ஏன்?

பார்ப்பனரைச்  சேர்த்தது  ஏன்?

  தோழர்களே!  பார்ப்பனர்களைச்  சேர்த்துக்கொள்ளலாமா?  என்கின்ற  பிரச்சினையானது  ஜஸ்டிஸ்  கட்சியில்  1926ம்  வருஷம்  முதல்  பேசப்பட்டு  வருகிறது. உதாரணமாக  மதுரை  மகாநாட்டில்  பனகால்  அரசர்  பார்ப்பனர் களைச்  சேர்த்துக்கொள்ள  வேண்டுமென்று  ஆசைப்பட்டு,  அதற்கு  ஒரு  கமிட்டியை  நியமித்துப்  பார்ப்பனர்கள்  விண்ணப்பங்களை  கமிட்டி  பரிசோதிக்கலாமா  என்றும்,  பூணூல்  இல்லாதவர்களைச்  சேர்த்துக்  கொள்வது  என்கின்ற  நிபந்தனை  வைக்கலாமா  என்றும்,  மற்றும்  பலவித  நிபந்தனைகளின்  மீதாவது  சேர்க்கலாம்  என்றும்  சொன்னார்.  பிறகு  கோயம்புத்தூர்  மகாநாட்டிலும்,  கடைசியாக  நெல்லூர்  மகாநாட்டிலும்  பேசப்பட்டது.  என்னைப்  பொறுத்தவரை  நான்  ஆ÷க்ஷபித்தே  வந்திருக்கிறேன்.  பொது  ஜனங்களுக்கும்  பிரியமில்லை  என்பது எனது  அபிப்பிராயம். ஆனால்  தலைவர்களுக்கு  ஏதோ  அவசியமிருப்பதாகத்  தெரிகின்றது.  அதை  உத்தேசித்தே  சென்ற  மாதம்  கூடின  ஒரு  சாதாரண  தனிப்பட்ட  கூட்டத்தில்  நான்  ஆ÷க்ஷபிக்கப்  போவதில்லை  என்று  கூறி  இருக்கின்றேன்.  ஏனெனில்  தலைவர்கள்  என்பவர்கள்  அதன்  பயனை  அடைந்து  பார்க்கட்டும்  என்று  கருதித்தான். இது  போலவே  முன்னமும்  ஒரு  சம்பவம்  நடந்திருக்கிறது. ...

ஸ்தல  ஸ்தாபனச்  சீர்கேடு

ஸ்தல  ஸ்தாபனச்  சீர்கேடு

  ஸ்தல  ஸ்தாபனங்கள்  என்று  சொல்லப்படும்  ஜில்லா,  தாலூக்கா போர்டுகள்,  முனிசிபாலிட்டி,  யூனியன்,  கிராம  பஞ்சாயத்து  ஆகிய  ஸ்தாபனங் களைப்  பற்றி  நம்முடைய  அபிப்பிராயம்  யாவரும்  அறிந்ததேயாகும். இவைகளைப்  பற்றி  சுமார்  20,  25  வருஷகாலமாகவே  நமக்கு  நேரிட்ட  அனுபோகம்  உண்டு  என்பதையும்,  அதன்  பயனாகவே  ஸ்தல  ஸ்தாபனங்களில்  ஜனப்  பிரதிநிதிகள்  என்பவர்களுக்குள்ள  அதிகாரங்களையும்  அரசாங்கம்  திரும்பப்  பெற்றுக்  கொண்டு  பொறுப்புள்ள  சம்பள  ஆட்களிடம்  அவைகளை  ஒப்புவிக்க  வேண்டுமென்றும்  பேசியும்,  எழுதியும்  வந்ததோடு  இப்போதும்  அது  போலவே  பல  காரியங்கள்  நடந்தும்  வந்திருக்கின்றன. தாலூகா  போர்டுகள்  ஏற்பட்டு  விட்டன.  முனிசிபாலிட்டிகளில்  சேர்மென்களின்  அதிகாரங்கள்  பிடுங்கப்பட்டு  அவர்களை  நகரும்  யந்திரங்களாக  ஆக்கப்பட்டு  விட்டனர்.  சட்டத்தில்  சேர்மன்  என்று  இருந்த  இடங்களிலெல்லாம்  கமிஷனர்  என்று  போட்டாய்  விட்டது.  சில  கமிஷனர்கள்  யோக்கியப்  பொறுப்பற்றவர்களா  யிருக்கலாம்.  சில  சமயங்களில்  தவறுதல்கள்  செய்து  விடலாமென்று  வைத்துக்  கொண்டாலும்  10  கமிஷனர்களின்  யோக்கியப்  பொறுப்பற்ற  தன்மையையும்,  10  கமிஷனர்களின் ...

புதுக்கோட்டையில்  தோழர்  ஈ.வெ.ரா.

புதுக்கோட்டையில்  தோழர்  ஈ.வெ.ரா.

  ஆஸ்திகம்  நாஸ்திகம் தலைவரவர்களே,  தோழர்களே! இந்தப்  புதுக்கோட்டையில்  எங்களுக்காக  நடத்தப்பட்ட  ஆடம்பர  வரவேற்புகளுக்கும்,  விருந்துகளுக்கும்  இங்கு  நடைபெறுகிற  நடவடிக்கை களுக்கும்  நான்  நன்றி  செலுத்துவதுடன்  மிகவும்  மகிழ்ச்சி  அடைகின்றேன். தோழர்கள்  ரங்கம்மாள்  சிதம்பரம்  தம்பதிகள்  சீர்திருத்த  முறையில்  விவாகம்  செய்து  கொண்டவர்களாதலால்,  அவர்கள்  பாராட்டுதலுக்கும்,  வரவேற்புக்கும்  உரியவர்கள்  ஆவார்கள்.  ஆனால்  எனக்கு  எதற்காக  இந்த  ஆடம்பர  வரவேற்புகள்  என்பது  எனக்கே  விளங்கவில்லை. இந்த  ராஜ்யம்  ஒரு  சுதேச  சமஸ்தானமாதலால்  இங்கு  நமது  இயக்கத்தைப்  பிரசாரம்  செய்வதற்கு சமஸ்தானத்திலோ, அல்லது வேறு வகையிலோ  ஏதாவது  இடையூறு  ஏற்படுமோ  எனக்  கருதி,  இந்த  முறையில்  ஏதாவது  வகை  செய்யக்  கருதி  தோழர்  வல்லத்தரசும்  அவர்களது  தோழர்கள்  முரு.  தேனப்பன்,  அ.செ.சு.  சாமிநாதன்,  லெ.  சோமசுந்தரம்,  கா.ச.  சடையணன்,  சி.பெ.க.  பெரிய  கருப்பன்  முதலியவர் களும்  இந்த  ஏற்பாடு  செய்தார்களோ  என்று  எண்ணுகிறேன்.  (சிரிப்பு) இந்த  இரகசிய  ஏற்பாட்டிற்கு  இவ்வளவு  பேர்கள்  வந்து  கூடியிருப்பது ...

சென்னை  கடற்கரையில்  5000  பேர்  கூட்டம்

சென்னை  கடற்கரையில்  5000  பேர்  கூட்டம்

  தோழர்  எ.  ராமசாமி  முதலியார்  அவர்களுக்கு  விரோதமாய்  தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்  நிறுத்தப்பட்டிருக்கிறார்.  முன்னவரை  விட  பின்னவர்  எந்த  விதத்தில்  யோக்கியதை  உடையவர்  என்று  நான்  கேட்கின்றேன்.  தோழர்  சத்தியமூர்த்தி  அவர்கள்  4000  ஓட்டிலிருந்து  எண்ணப்  போகிறேன்  என்று  சொல்லுகிறாராம்.  ஏனென்றால்  சென்னையில்  4000  பார்ப்பனர்கள்  ஓட்டுகள்  இருக்கின்றனவாம்.  அவர்கள்  அத்தனை  பேரும்  பார்ப்பனர்  சத்தியமூர்த்திக்கே  ஓட்டு  செய்யப்  போகிறார்களாம். இதை  ஒரு  பெருமையாகப்  பார்ப்பனர்களும்,  அவர்களது  கூலிகளும்  பேசிக்  கொள்ளுகிறார்கள். அப்படியானால்  தோழர்  ராமசாமி  முதலியார்  அவருடைய  ஓட்டுகள்  11000த்தில்  இருந்து  எண்ணக்  கூடும்  என்று  ஏன்  சொல்லக்  கூடாது?  4000  பார்ப்பனர்கள்  ஓட்டிருப்பதால்  4000த்தில்  இருந்து  எண்ணுவதானால்  11000  பார்ப்பனர்  அல்லாதார்  ஓட்டர்கள்  இருப்பதால்  ராமசாமி  முதலியார்  ஏன்  11000த்தில்  இருந்து  எண்ணக்  கூடாது  என்று  நான்  கேட்கின்றேன்.  மொத்தம்  15  ஆயிரம்  ஓட்டல்லவா? பார்ப்பனருக்கு  இருக்கும்  புத்தியும்,  ஜாதி  அபிமானமும்,  சுயமரியாதை  உணர்ச்சியும்,  பார்ப்பனரல்லாதாருக்கு  இல்லை ...

இரண்டு  மகாநாடுகள்

இரண்டு  மகாநாடுகள்

  சென்ற  மாதம்  கடைசி  வாரத்தில்  தமிழ்  நாட்டில்  இரண்டு  மகாநாடுகள்  நடைபெற்றிருக்கின்றன.  ஒன்று  சென்னையில்  நடந்த  தென்னிந்திய  நல  உரிமைச்  சங்க  மகாநாடு.  மற்றொன்று  கோவையில்  நடந்த  தமிழ்நாடு  காங்கிரஸ் மகாநாடு.  முன்னையதற்கு  பொப்பிலி  ராஜா  தலைவர்.  பின்னையதற்கு  தோழர்  சி.  ராஜகோபாலாச்சாரியார்  தலைவர்.  இருவர் களுடைய   பேச்சுச்  சுருக்கமும்  வேறு  பக்கத்தில்  பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. ஜஸ்டிஸ்  மகாநாட்டில்  ஒரு  பெரிய  மாறுதல்.  அதாவது  அது  தன்  அஸ்திவாரத்திலிருந்தே  ஒரு  பெரிய  மாறுதலை  ஏற்படுத்திக்கொண்டது.  இனி  அதைப்  பார்ப்பனரல்லாதார்  மகாநாடு  என்றோ,  வகுப்புவாதிகள்  மகாநாடு  என்றோ,  பார்ப்பனத்  துவேஷிகள்  மகாநாடு  என்றோ  ஒருவராலும்  சொல்ல  முடியாதபடி  செய்து  கொண்டதுடன்  எவ்வித  வகுப்பு நிபந்தனையும்  இல்லாமல்  எல்லா  வகுப்புகளுக்கும்  சம  சுதந்திரமும்,  சம  சந்தர்ப்பமும், சம  நீதியும்  வழங்குவதை  முக்கிய  நோக்கமாகக்  கொண்டு  இருக்கிறது. இதற்குக்  காரணம்  “”வகுப்பு  வாதம்”  என்று  பார்ப்பனர்கள்  போட்ட  கூச்சலாயிருந்தாலும்  இருக்கலாம்.  அல்லது  பிரிட்டன்  அதிகார  வர்க்கத்துக்கோ, ...

சென்னை  கடற்கரையில்   5000  பேர்  கூட்டம்

சென்னை  கடற்கரையில்  5000  பேர்  கூட்டம்

  வரப்போகும்  தேர்தல் தோழர்களே!  இன்று இங்கு எலக்ஷன்  சம்மந்தமாகப்  பேசுவதற் கென்றே  இந்தக்  கூட்டம்  கூட்டப்பட்டதாக  எனக்குத்  தெரிகின்றது. கட்சி  கிடையாது எனக்கு  எலக்ஷனில்  கக்ஷிப்  பிரச்சனை   கிடையாது.  கட்சிகள்  என்பது  கொள்கைகளைப்  பொருத்ததாக  இருப்பது  இயல்பு.  ஆனால்  நம்  நாட்டில்  எந்தக்  கட்சியையும்  கொள்கையை  ஆதாரமாய்க்  கொண்டதாக  ஒப்புக்கொள்ள  முடியவில்லை. நமது  மாகாணத்தில்  வெகுகாலமாகவே  கட்சிகள்  உத்தியோக  ஆசைக்கும்,  வகுப்பு  ஆதிக்கத்துக்குமாகவே  இருந்து  வருகின்றனவே  ஒழிய,  பொது  ஜன  நலக்  கொள்கைக்காக  இருந்து  வரவில்லை. முதலில்  உத்தியோக  ஆசையை  முன்னிட்டு  ஏற்பட்ட  கட்சியின்  பயனாய்  பல  கொழுத்த  சம்பளமுள்ள  உத்தியோகங்களும்,  அதிகாரங்களும்  நமது  மக்களுக்குக்  கிடைக்க  சௌகரியமானவுடன்  இப்போது  இந்து,  முஸ்லீம்,  கிறிஸ்தவர்,  தீண்டாதவர்,  பார்ப்பனர்,  பார்ப்பனரல்லாதார்  என்கின்ற  வகுப்பு  நலத்தைப்  பிரதானமாய்க்  கொண்ட  கக்ஷிகள்  தலை  விரித்தாடுகின்றன.  ஒவ்வொரு  வகுப்புக்  கக்ஷியும்  மற்ற  வகுப்பை  ஏமாற்றுவதற்கு  அனுகூலமான  விஷயங்களைத்  தான்  கக்ஷிக்  கொள்கைகளாய்க்  கொண்டிருக்கின்றனவே  ஒழிய  வேறில்லை....

கோவையில்  சுயமரியாதைத்  திருமணம்   சு.ம.  திருமணமும்  பு.ம.  திருமணமும்

கோவையில்  சுயமரியாதைத்  திருமணம்  சு.ம.  திருமணமும்  பு.ம.  திருமணமும்

  தோழர்களே! இன்று  இங்கு  நடக்கும்  இத்திருமணத்திற்கு  சுயமரியாதைத்  திருமணமென்றும்  சீர்திருத்தத்  திருமணம்  என்றும்  சொல்லப்படுகிறது.  சுயமரியாதைத்  திருமணம்  என்றால்  சிலருக்குப்  பிடித்தமில்லாமல்  இருக்கலாம்  என்று  சீர்திருத்தத்  திருமணம்  எனச்  சொல்லப்படுகிறது. சீர்திருத்தம்? எப்படி  இருந்தாலும்  ஒன்றுதான்.  சீர்திருத்தம்  என்றால்  என்ன?  இருக்கின்ற  நிலைமையில்  இருந்து  மாற்றம்  செய்வதையே  சீர்திருத்தம்  என்றும்,  நாகரீகமென்றும்  சொல்லுகிறோம்  என்றாலும்,  இந்த  சீர்திருத்தமும்,  நாகரீகமும்  வெறும்  மாறுதலுக்காகவே  ஏற்படுவதும்  உண்டு.  மற்றும்  பல  விஷயங்களில்  சௌகரியத்தையும்,  நன்மையையும்,  அவசியத்தையும்,  பகுத்தறிவையும்  உத்தேசித்து  மாற்றப்படுவதும்  உண்டு.  மாறுதலும்  சீர்திருத்தமும்  மக்களுக்கும்  உலகத்துக்கும்  புதிதல்ல.  உலகம்  தோன்றிய  நாள்  முதல்  ஒவ்வொரு  துறையிலும்  எவ்வளவு  மாறுதல்  அடைந்து  வந்திருக்கிறது  என்பதை  சரித்திரங்களையும்,  பழைய  சின்னங்களையும்  பார்த்து  வந்தால்  நன்றாய்  விளங்கும்.  அது  போலவே  மனித  சமூகமும்  சகலத்  துறைகளிலும்  எவ்வளவு  மாறுதல்  அடைந்து  வந்திருக்கின்றது  என்பதும்  வாழ்க்கையில்  எவ்வளவு  மாறுதல்கள்  அடைந்து  வந்திருக்கின்றது  என்பதும்  நம்  குறைந்த  கால ...

நமது  தலைவர்  ஈ.வெ.ராவும்

நமது  தலைவர்  ஈ.வெ.ராவும்

  சென்னை பார்ப்பனரல்லாதார் மகாநாடும் “”புரட்சி”  நின்று  போவதற்கு  சற்று  முன்,  நமது  தலைவர்  ஈ.வெ.ரா.  அவர்கள்,  ஜஸ்டிஸ்  (ஒதண்tடிஞிஞு)    கட்சியோடு  சரச  சல்லாபம்  காட்டுவதாக  பாவித்து,  அது,  சமதர்மிகளுக்குப்  பொருந்தாது  என்று,  ஒரு  சிறு  கட்டுரை  எழுதி  இருந்தேன்.  அதைப்  பிரசுரிப்பதற்கு  முன்  “”புரட்சி”  நின்று  விட்டது.  அதனை  பிறகு  வந்த  “”பகுத்தறிவில்”  அதை  அச்சிட்டார்களோ,  அது  எனக்குத்  தெரியவில்லை.  அந்தக்  கட்டுரையில்,  நமது  நாட்டிலுள்ள  பலவித  அரசியல்  கட்சிகள்  சம்பந்தமாக,  நாமாகிய  சமதர்மிகள்  நடந்து  கொள்ளும்  முறையைப்  பற்றியும்  எழுதியதாகவும்  ஞாபகமிருக்கிறது.  இது  நிற்க,  சுயமரியாதை  சமதர்மியர்,  தற்காலம்  நடந்து  வரும்  தேர்தல்களில்  நடந்து  கொள்ள  வேண்டிய  முறையையும்,  ஜோலார்ப்பேட்டை  “”சமதர்மம்”  என்ற  பத்திரிகையிலும்  குறிப்பாக  எடுத்துக்  காட்டியுள்ளேன்.  இதனை  அச்சஞ்சிகையில்  பிரசுரித்தார்களோ  அதுவும்  தெரியவில்லை. எந்தக்  கட்சியினர்களாயினும்  அவர்களுக்கு  ஓர்  திட்டம்  இருக்க  வேண்டும். அந்தத் திட்டத்திற்குள் தான் அவரவர்கள்  நடந்து  தீர வேண்டும்.  வேண்டுமானால் ஒரு...

ஈரோடு  அர்பன்  பாங்கி  தேர்தல்

ஈரோடு  அர்பன்  பாங்கி  தேர்தல்

  ஈரோடு  அர்பன்  பாங்கியைப்  பற்றியும்,  அதன்  நிர்வாகத்தைப்  பற்றியும்  “”குடி  அரசு”  பத்திரிகையில்  ஒரு  குறிப்பு  வந்திருந்ததை  வாசகர்கள்  கவனித்திருக்கலாம். ஈரோடு  அர்பன்  பாங்கி  வெகு  காலம்  பார்ப்பனர்  ஆதிக்கத்திலிருந்து  வந்ததும், அது  பார்ப்பனர்  பாங்காகவே  இருந்து  வந்ததும்,  பார்ப்பனர்களுக்கும்,  பார்ப்பன  சிஷ்யர்களுக்கும்,  அடிமைகளுக்கும்  மாத்திரமல்லாமல்  மற்றவர்களுக்கு  அதில்  இடம்  கிடைப்பதே  கஷ்டமாய்  இருந்ததைப்பற்றி  அவ்வப்போது  பல  குறிப்புகள்  குடி  அரசில்  வந்து  கொண்டிருந்ததும்  யாவருக்கும்  தெரியும். இப்போது  சுமார்  4,5  வருஷ  காலமாக  சுயமரியாதை  இயக்கத்தின்  பயனாய்  பார்ப்பனரல்லாத  மக்கள்  விழிப்பெய்தி  பலதுறைகளிலும்  முன்னேற்றம்  அடைந்து  வருவது  போலவே  இந்த  அர்பன்  பாங்கி  விஷயத்திலும்  கண்  விழித்தும்  முன்னேற்றமடைந்து  பாங்கியின்  பயனை  பார்ப்பனரல்லாத  மக்களும்  பங்கு  வீதம்  இல்லாவிட்டாலும்  ஒரு  குறிப்பிடத்தகுந்த  அளவுக்காவது  அடைந்து  வருகிறார்கள்  என்பதைக்  கேட்க  பார்ப்பனரல்லாதார்  எல்லோருமே  மகிழ்ச்சி  அடையக்கூடும்.  நிற்க சமீபகாலமாய்  அதாவது  2,3  வருஷ  காலமாய்  ஈரோடு  அர்பன்  பாங்கி  டைரக்டறேடானது ...

சர்க்கார்  காங்கிரசைவிட  மோசமானதா?

சர்க்கார்  காங்கிரசைவிட  மோசமானதா?

  பட்டேலின் “”ஸ்ரீ  முகம்” தோழர்  வல்லபாய்  பட்டேல்  அவர்கள்  சென்னை  மாகாண  காங்கிரஸ்காரர்கள்  தேர்தலில்  முனைந்து  நிற்பதைப்  பார்த்து  மகிழ்ச்சி  அடைவதாகவும்,  சென்னை  மாகாணக்காரர்கள்  காங்கிரஸ்காரருக்கே  ஓட்டு  செய்ய  வேண்டும்  என்றும்  அதற்கு  காரணம்  அடக்கு  முறையைக்  கண்டிக்க  வேண்டியும்,  வெள்ளை  அறிக்கையை  நிராகரிக்க  வேண்டியும்  காங்கிரஸ்காரர்களே  தெரிந்தெடுக்கப்பட  வேண்டும்  என்றும்  சொல்லுகிறார்.  மற்றும்  காங்கிரஸ்வாதி  அல்லாத  மற்றவருக்குக்  கொடுக்கும்  ஓட்டு  சர்க்காருக்கு  கொடுத்தது  போல்  ஆகுமென்றும்  சொல்லுகிறார்.  முதல்  விஷயத்தை  ஒப்புக்கொண்டாலும்  இரண்டாவது  விஷயம்  ஒப்புக் கொள்ளப்படாதது  என்பதுடன்,  அதில்  நாணையமும்  நியாயமும்  இல்லை  என்றும்  சொல்ல  வேண்டியிருப்பதற்கு  வருந்துகிறோம். ஏனெனில்  இந்த  நாட்டிலுள்ள  சுமார்  35  கோடி  மக்களில்  காங்கிரசில்  அங்கத்தினர்களாய்  இருக்கிற  சுமார்  ஒரு  பத்தாயிரம்  அல்லது  இருபதாயிரம்  மக்களைத்  தவிர  மற்றவர்கள்  எல்லாம்  சர்க்காரைச்  சேர்ந்தவர்கள்,  தேசத்துரோகிகள்  என்பது  தோழர்  பட்டேல்  அவர்களின்  ஸ்ரீமுகத்தின்  கருத்தாகிறது. தோழர்  ஷண்முகம்  அவர்கள்  விருதுநகரில்  தெரிவித்தது  போல் ...

பார்ப்பனீய  ஒழிப்புத்  திருநாள்

பார்ப்பனீய  ஒழிப்புத்  திருநாள்

  சுயமரியாதை  இயக்கத்தின்  சுமார்  10  வருஷகால  வேலையின்  பயனாய்  பார்ப்பனீயம்  ஒரு அளவுக்காவது  ஆட்டம்  கொடுத்துவிட்ட  விஷயம்  நாம்  எடுத்துக்  காட்ட  வேண்டிய  அவசியமில்லை  என்றே  கருதுகிறோம். ஆன  போதிலும்,  சமுதாய  விஷயங்களில்  பார்ப்பனீயம்  எவ்வளவு  பகிஷ்கரிக்கப்பட்டிருக்கின்றதோ,  அதில்  8ல்  ஒரு  பங்கு  கூட  அரசியல்  விஷயத்தில்  பகிஷ்கரிக்கப்பட்டிருப்பதாகச்  சொல்ல  முடியாது. அரசியலில்  ஜஸ்டிஸ்  கட்சி  பார்ப்பனர்களுக்கு  விரோதமாய்  வேலை  செய்வது  என்று  பெயர்  வைத்துக்  கொண்டிருந்தாலும்  அதன்  தலைவர்கள்  என்பவர்கள்  பலர்,  தனிப்பட்ட  முறையில்  தங்கள்  சுயநலத்திற்காக  எதையும்  விற்றுக்  கொண்டு  வந்திருக்கிறார்கள். தோழர்  முத்தையா  முதலியார்  அவர்கள்  வகுப்புவாரி  பிரதிநிதித்துவத்  திட்டம்  அரசாங்க  உத்திரவு  மூலம்  போட்ட  காரணத்திற்காகவே  பார்ப்பனர்கள்  அவரை  ஒழிக்கச்  செய்த  சதியில்  சில  ஜஸ்டிஸ்  கட்சிக்காரர்களும்  உள்  உளவாய்  இருந்ததோடு,  பார்ப்பனரல்லாதார்  கட்சியின்  பயனாய்  முதல்  மந்திரி  ஸ்தானம்  பெற்ற  தோழர்  முனிசாமி  நாயுடு  அவர்கள்  வகுப்புவாரிப்  பிரதிநிதித்துவத்திற்கு  விரோதமாய்  இருந்து  வந்ததுடன் ...

ஜன  நாயகமா?  பண  நாயகமா?

ஜன  நாயகமா?  பண  நாயகமா?

  உலகில்   ஜனநாயகம்  என்னும்  வார்த்தை  மிகவும்  செல்வாக்குப்  பெற்றது  என்பதில்  யாருக்கும்  ஆட்சேபனை  இருக்காது. செல்வாக்குப்  பெற்ற  வார்த்தைகள்  எல்லாம்  உண்மையானதும்,  நேர்மையானதும்  என்று  சொல்லிவிட  முடியாது. செல்வாக்குப்  பெற்ற  வார்த்தைகள்  பெரும்பான்மையும்  சில  சுயநலங்கொண்ட  மக்களால்  உள்  எண்ணத்தோடு  கற்பிக்கப்பட்டு  பாமர  மக்களுக்குள்  பிரசாரம்  செய்யப்பட்டதின்  பயனாகவே  செல்வாக்கடைய  முடிந்ததாக  இருக்குமே  தவிர  உண்மையில்  அதன்  யோக்கியதையால்    ஏற்படும்  பயன்களால்  செல்வாக்கு  ஏற்பட்டதென்று  சொல்லிவிடவும்  முடியாது. புண்ணியம்,  சத்தியம்,  அஹிம்சை,  ஜீவகாருண்யம்,  ஒழுக்கம்,  கற்பு  என்பன  போன்ற  வார்த்தைகளுக்கு  நாட்டில்  மதிப்பும்  செல்வாக்கும்  இருந்து  வருகின்றது  என்றாலும்  அவைகள்  உபயோகப்படும்  மாதிரியும்  காரியத்தில்  அனுஷ்டிக்கப்படும்  தன்மையும்  எப்படி  இருந்து  வருகின்றது  என்பதை  நாம்  எடுத்துக் காட்ட  வேண்டியதில்லை.  இவை  பெரும்பாலும்  வலுத்தவன்  இளைத்தவனை  அடக்கியாளும்  காரியத்திற்கும்  தன்  தன்  சுயநலத்துக்குமே  பெரிதும்  பயன்படுத்தப்படுகின்றன  என்பது  கண்கூடு. இம்மாதிரியிலேயே  தான்  ஜனநாயகம்  என்கின்ற  வார்த்தையும்,  பணநாயகத்துக்கு  அடிமை  அதாவது  பாமர ...

பார்ப்பன  பத்திரிகைகளும்

பார்ப்பன  பத்திரிகைகளும்

  சர்.  ஷண்முகமும் தோழர்  ஆர்.கே.  ஷண்முகம்  இந்தியா  முழுவதுக்கும்  தெரிந்த  ஒரு  முக்கியஸ்தர்.  அவருடைய  நடவடிக்கைகளும்,  பேச்சுக்களும்  மக்கள்  கவனிக்கப்படத்தக்கது  என்பதில்  யாருக்கும்  ஆ÷க்ஷபனை  இருக்காது.  பலர்  எதிர்பார்க்கவும்  கூடும்.  இந்நிலையில்  தேசியப்  பத்திரிகைகள்  என்று  சொல்லிக்  கொள்ளும்  பார்ப்பனப்  பத்திரிகைகள்  அவரது  நடவடிக்கைகளை  யோக்கியமாய்  பிரசுரிக்காமலும்,  பிரசங்கங்களையும்  கேள்விகளையும்,  பதில்களையும்  சிறிது  கூட  பிரசுரிக்காமலும்  இருந்து  வருகின்றன.  சர். ஷண்முகம்  அவர்கள்  இந்திய  சட்ட  சபையில்  ராணுவ  சம்மந்தமான  பிரச்சினையில்  கொடுத்த  ஒரு  தீர்ப்பு  விஷயமாய்  பார்ப்பனப்  பத்திரிகைகள்  பாராட்டாவிட்டாலும்,    விஷமத்தனமான  பரிகாசங்களைச்  செய்தன. தோழர்கள்  ராஜகோபாலாச்சாரியார்,  சத்தியமூர்த்தி  அய்யர்,  ஜம்பை  வைத்தியனாத  பாகவதர்,  ரமண  ரிஷி  போன்றவர்கள்  விஷயங்களைப்  பெருக்கி  கண்ணு,  மூக்கு  வைத்து  கலம்  கலமாய்  அலங்கரிக்கின்றன. இந்த  மாதிரியான  காரியங்களால்  பார்ப்பனர்களுக்குக்  கீர்த்தியும்,  மேன்மையும்  ஏற்பட்டு  விட்டதாகவோ,  பார்ப்பனரல்லாதாருக்கு  அபகீர்த்தியும்,  தாழ்மையும்  ஏற்பட்டு  விட்டதாகவோ  நாம்  சொல்ல  வரவில்லை.  இந்த  மாதிரியான  நிலையில்  பார்ப்பனர் ...

மார்க்கட்டு  நிலவரம்

மார்க்கட்டு  நிலவரம்

  சித்திரபுத்திரன் தமிழ்நாட்டில்  மார்க்கட்டு  நிலவரம்  தெரியப்படுத்தி  வெகுநாள்  ஆகிவிட்டதால் இதுசமயம்  இரண்டொரு  சரக்குகளுக்கு  மாத்திரம்  நிலவரம்  எழுதுகிறோம். பெண்கள் செட்டிநாட்டில்  ஒரு  பெண்ணுக்கு  (முன்  விலை)  35000  முதல்,  45000  ரூபாய்  வரை  இருந்து  வந்ததானது  இப்போது  சவுத்துப்போய்  ஒரு  சைபருக்கே  மோசமேற்பட்டு  4000,  5000  ம் விலையில்  அசல்  செட்டி  நாட்டுப்  பெண்கள்  தாராளமாய்  கிடைக்கும்  நிலைமைக்கு  வந்துவிட்டது.  காரணம்  சுயமரியாதை  தேசத்திலிருந்து  ஏராளமான  சரக்குகள்  (பெண்கள்)  வந்து  இறங்கத்  தலைப்பட்டு  விட்டன.  ஆதலால்  வெளிநாட்டுச்  சரக்குகளை  (சுயமரியாதைப்  பெண்களை)  செட்டி  நாட்டுக்குள்  வராதபடி  வெளிநாட்டுச்  சரக்குகளுக்கு  வரி  போட  வேண்டுமாய்  செட்டிமார்களுள்  சர்க்காருக்கு  (சமூகத்தாருக்கு)    விண்ணப்பம்  போட்டிருக்கிறார்கள்.  அப்படி  அரசாங்கத்தார்  (சமூகத்தார்)  வரி  போடுவார்களானால்  பெண்கள்  இருக்கிற  நாட்டுக்கே,  குடிபோய்விடுவதாக  பெண்  வாங்குவோர்கள்  கூடிப்  பேசி  முடிவு  செய்து  தீர்மானத்தை  அரசாங்கத்துக்கு  (தங்கள்  சமூகத்தாருக்கு)  தெரிவித்து  இருப்பதாகத்  தெரிகிறது. ஓட்டுகள் முனிசிபல்  ஓட்டர்களுக்கு  இது  சமயம்  கிராக்கி ...

நான்

நான்

  நான்  காங்கிரசில்  சேர்ந்து  விடப்  போகிறேன்  என்பதாக  பலர்  எனக்குப்  பரிகாசக்  கடிதங்களும்,  சில  துர்  எண்ணங்கள்  கற்பிக்கிற  கடிதங்களும்  எழுதி  வருகிறார்கள்.  நான்  காங்கிரசில்  சேருவதாக  வைத்துக்  கொண்டு  பார்த்தாலும்,  காங்கிரசுக்கு  மகத்தான  செல்வாக்கும்,  பெருமையும்  இருக்கின்ற  காலத்தில்  நான்  அதில்  சேருவதானால்  எனக்கு  உள்  எண்ணம்  ஏதாவது  கற்பித்தால்  அதற்கு  அர்த்தமுண்டு. இன்று  அப்படி  ஒன்றும்  இல்லை.  அது  எப்படி  இருக்கின்றது  என்றால்  ஜஸ்டிஸ்  கட்சியானது  1926ம்  M முடிவில்  எப்படி  கடைசி  மூச்சு  வாங்கும்  நிலையில்  ஜீவநாடிகள்  எல்லாம்  விழுந்து  போய்  எடுத்துப்  புதைப்பதற்கும்  ஆளில்லாத  ஸ்திதியில்  இருந்ததோ,  அந்த  நிலையில்  அதைவிட  மோசமான  நிலையில்  கொள்கையற்று,  தலைவர்களற்று,  மானமற்று,  நாணையமற்று,  அழுவாரற்று  சாகும்  தருவாயில்  இருக்கும்  காங்கிரசில்  நான்  போய்  சேருவதாய்  இருந்தால்  அதில்  எனக்கு  என்ன  லாபம்  அல்லது  உள்  எண்ணம்  இருக்க  முடியும்  என்று  எனது  தோழர்களைக்  கேட்கின்றேன். ஜஸ்டிஸ்  கட்சியை ...

ஜஸ்டிஸ்  பத்திரிகையின்  நிர்வாகம்

ஜஸ்டிஸ்  பத்திரிகையின்  நிர்வாகம்

  ஜஸ்டிஸ்  பத்திரிகைக்காக  இதுவரை  சுமார்  4,  5  லக்ஷ  ரூபாய்  வரையில்  பொதுமக்களிடமிருந்து  உதவித்  தொகையாகவும்  மந்திரிகள்  சம்பளத்திலிருந்து  பார்ட்டி  (கக்ஷி) உதவித்  தொகையாகவும்  பெற்றிருக்கலாம்.  இது  தவிர  இன்றும்  பொப்பிலி ராஜா  அவர்களால்  N  2000,  3000  கொடுக்கப்பட்டு  வருகிறது.  இவ்வளவு  இருந்தும்  அப்பத்திரிகை  ஒரு  தடவை  “”இன்சால்வெண்டு”  கொடுத்தாய்  விட்டது.  பலரது  கடனுக்கு  நாமம்  சாத்தியுமாய்விட்டது.  மறுபடியும்  பொப்பிலி  ராஜா  சுமார்  50 ஆயிரம்  ரூபாய்  போல்  செலவழித்துமாய்விட்டது.  இந்த  நிலையில்  பத்திரிகை  எவ்வளவு  போகின்றது  என்று  சொல்ல  நமக்கே  வெட்கமாய்  இருக்கிறது.  இவ்வளவு  யோக்கியதையில்  அது  பிரசுரிக்கிற  முறையும்  சிரிப்புக்கிடமானது  என்றுதான்  சொல்ல  வேண்டி  இருக்கிறது. தோழர்  சர்.  ஷண்முகம்  அவர்களுடைய  பிரசங்கங்களையும்,  நடவடிக்கைகளையும்  கூட  சரிவரப்  பிரசுரிப்பதில்லை.  சுயமரியாதைக்காரரின்  சமூக  சம்மந்தமான  வேலைகளைக்  கூட  சரிவர  பிரசுரிப்பதும்  இல்லை.  இன்னும்  அதன்  யோக்கியதை  சொல்வதென்றால்  நமது  பல்லைக்  குத்தி நாமே  முகர்ந்து  பார்ப்பது  போல் ...

இந்திய  சட்டசபை

இந்திய  சட்டசபை

  மாஜி  முதல்  மந்திரியான  டாக்டர்  க.சுப்பராயன்  அவர்கள்  லண்டனுக்குச்  சென்றிருந்தவர்  வந்து  விட்டார்.  அவரது  மனைவியார்  தோழர்  ராதாபாய்  அம்மாள்  அவர்கள்  இந்திய  சட்டசபைத்  தேர்தலுக்கு  ஒரு  அபேக்ஷகராய்  நிற்கப்  போகும்  செய்தி  மறுபடியும்  கிளம்பி  இருக்கிறது.  இதன்  பயனாய்த்  தமிழ்நாட்டில்  இந்திய  சட்டசபைத்  தேர்தல்  விஷயத்தில்  ஒரு  மாற்றம்  ஏற்படலாம். அதாவது  கோவை  ஜில்லாவிலும்,  சேலம்  ஜில்லாவிலும்  கொங்கு  வேளாள  சமூகம்  அதிகமாக  உண்டு.  இந்த  இரண்டு  ஜில்லாவில்  உள்ள  வேளாள  சமூகம்  ஒரு  வேளாள  சமூக  அபேக்ஷகரைத்தான்  ஆதரிப்பார்கள்.  வேளாள  சமூகத்தில்  ஒரு  அபேக்ஷகர்  இல்லை  என்கின்ற  காரணத்தினாலேயே  கோவை  ஜில்லா  போர்டு  பிரசிடெண்டு  தோழர்  வெள்ளியங்கிரிக்  கவுண்டர்  தனது  ஜில்லா  போர்டு  ஸ்தாபனத்தின்  பயனாய்  உள்ள  செல்வாக்கைத்  தோழர்  அவனாசிலிங்கத்துக்காகப்  பயன்படுத்துவதாகவும்,  கோவை  ஜில்லா  போர்டு  வைஸ்  பிரசிடெண்டும்,  கொங்கு  வேளாள  குலத்  தலைவரும்,  மடாதிபதியுமான  பழய  கோட்டைப்  பட்டக்காரர்  அவர்கள்  தனது  செல்வாக்கை  டாக்டர் ...

ஷண்முகமும்  ஒட்டவாவும்

ஷண்முகமும்  ஒட்டவாவும்

  தோழர்  ஷண்முகம்  அவர்களைப்  பற்றிப்  பார்ப்பனர்கள்  பொறாமைப்பட்டு  இந்த  சுமார்  இரண்டு  வருஷ  காலமாகச்  செய்து  வரும்  விஷமப்  பிரசாரத்திற்கு  முக்கிய  ஆஸ்பதமாய்  கொண்டது  ஒட்டவா  ஒப்பந்தத்தில்  தோழர்  ஷண்முகம்  கலந்திருந்தார்  என்பதே. இந்த  ஒட்டவா  ஒப்பந்தம்  என்கின்ற  ஓலமே  “”கீழ்”  முதல்  “”மேல்”  வரையில்  தங்களது  விஷமத்தனத்துக்கும்,  இழி  பிரசாரத்துக்கும்  பயன்படுத்தப்பட்டு  வருகின்றது  என்றாலும்,  அந்த  ஒட்டவா  ஓலம்தான்  என்ன  என்று  பார்ப்போம். இழவு  வீடுகளில்  துக்கத்துக்குச்  சிறிதும்  சம்பந்தப்படாத  பெண்கள்  கூலிக்கு  மார்பு  வீங்கும்படி  மாரடித்துக்  கொண்டு  புரளுவது  போல்  “”ஒட்டவா  விஷயம்  என்றால்  என்ன?  அதற்கும்  நமக்கும்  என்ன  சம்பந்தம்?”  என்கின்ற  விஷயங்களே  தெரியாமல்  ஒரே  கூப்பாடாக  கத்திக்  கொண்டு  “”ஒட்டவா  வீரர்”  “”ஒட்டவா  வீரர்”  என்று  எழுதி  வருகின்றனர். ஒருவன்  “”எல்லா  வகுப்பு  மக்களுக்கும்  சம  சுதந்திரம்  வேண்டுமென்று”  கேட்டால்  அவனை  வகுப்புவாதி என்பதும்,  “”உங்கள்  சுயராஜ்யத்துக்கு  அர்த்தமென்ன”  என்று  கேட்டால்  அவனை  தேசத்துரோகி ...

காங்கிரசை  விட்டு  காந்தியார்  விலகுகிறாராம்

காங்கிரசை  விட்டு  காந்தியார்  விலகுகிறாராம்

  வழ  வழா  அறிக்கை தோழர்  காந்தி  அவர்கள்  “”காங்கிரசை  விட்டு நான் விலகப்  போவதாக  ஏற்பட்ட  செய்தி  உண்மைதான்”  என்ற  தலைப்பில்  ஒரு  நீண்ட  அறிக்கை  விடுத்திருக்கிறார். அதில்  அவர்  “”என்  இஷ்டப்படி  காங்கிரசுக்காரர்கள்  நடக்க வில்லை. காங்கிரஸ்காரர்கள்  பலரிடத்தில்  நாணையமில்லை. என்  கொள்கையில்  நம்பிக்கை  யில்லாமலே  பல  முக்கிய  காங்கிரஸ்வாதிகள்  என்னைப்  பின்பற்றுவதாய்  நடித்திருக்கிறார்கள். மற்றும்  பலர்  அஹிம்சையிலும்  சத்தியத்திலும்  நம்பிக்கை  இல்லாமல்  அது  இருப்பது  போல  வேஷம்  போடுகிறார்கள். அஹிம்சையையும்,  சத்தியத்தையும்  தற்சமயத்துக்கு  ஒரு  வேலைத்  திட்டமாய்க்  கொண்டிருக்கிறார்களே  தவிர,  அவர்களுக்கு  அவை  ஒரு  வாழ்க்கைச்  சாதனமாக  இல்லை. கதரில்  நம்பிக்கை  இல்லாதவர்கள்  கதரைக்  கட்டிக்கொண்டு  ஏமாற்றுகிறார்கள்.  சிலர்  சமயத்துக்குக்  கட்டிக்  கொள்ளுகிறார்களே  தவிர  உண்மையில்  கட்டுவதில்லை. என்னை  உபயோகித்துக்  கொள்ளுகிறதற்காகவே  என்னிடம்  பக்தி விசுவாம்  காட்டுகிறார்கள்.” என்றெல்லாம்  குறிப்புக்  காட்டிவிட்டு  “”நான்  சில  தீர்மானங்களை  வரப்போகும்  காங்கிரசில்  பிரேரேபித்துவிட்டு  அவை  ஒப்புக்  கொள்ளப்படவில்லையானால்  காட்டுக்குப்  போய்விடுவேன்” ...

விஷமத்துக்கு  விஷமமா? 

விஷமத்துக்கு  விஷமமா? 

  அல்லது  உண்மையா? திருச்சி  “”நகர  தூதன்”  பத்திரிக்கையில்  தோழர்  அவனாசிலிங்கம்  நிற்கவில்லை  என்கின்ற  தலைப்பின்  கீழ்  “”கோயமுத்தூர்,  சேலம்,  வடாற்காடு  ஜில்லாக்களின்  இந்திய  சட்டசபைத்  தொகுதிக்கு  காங்கிரஸ்  சார்பாக  அபேட்சகராய்  நிறுத்தப்பட்டதாகச்  சொல்லப்படும்  தோழர்  அவனாசிலிங்கம்  செட்டியார்  கடைசிவரை  அபேக்ஷகராய்  நிற்க  மாட்டாராம்.  காங்கிரசின்  பெயரால்  தோழர்  அவனாசிலிங்கம்  செட்டியாரை  முன்  நிறுத்தி  அத்தொகுதியைப்  பண்படுத்தி  முடிந்ததும்  கடைசியில்  இருக்கக்  கூடிய  நிலைமையை  அனுசரித்து  இறுதியாகத்  தோழர்  இராஜகோபாலாச்சாரியாரே  அதில்  அபேட்சகராக  நின்றுவிட  ஏற்கனவே  முடிவு  செய்யப்பட்டு  விட்டதாக  நம்பத்தகுந்த  இடத்திலிருந்து  தெரியவருகிறது”  என்று  ஒரு  சிறு  குறிப்புக்  காணப்படுகிறது. “”பொய்க்கு  பொய்,  கோளுக்குக்  கோள்,  விஷமத்துக்கு  விஷமம்  செய்யத்  தகுதி  உள்ளவனுக்குத்தான்  உலகில்  இடமுண்டு”  என்கின்ற  ஒரு  ஆப்த  வாக்கியம்  உண்டு. நகர  தூதனில்  காணப்படும்  இந்தக்  குறிப்பானது  நகர  தூதனுக்கு  நம்பத்  தகுந்த  இடத்திலிருந்து  வந்திருந்தாலும்  இருக்கலாம்  என்றாலும்  அந்த  நம்பத்  தகுந்த  இடத்துக்கு,  நம்பத்தகுந்த  இடத்திலிருந்து ...

சுயமரியாதைத்  திருமணங்கள்

சுயமரியாதைத்  திருமணங்கள்

  பௌனாம்பாள்  அழகப்பா  திருமணம் தோழர்களே!  இன்று  மணமகனாக  வீற்றிருக்கும்  எம்.கே.  அழகப்பா  “”நாட்டுக்கோட்டை  செட்டிமார்”  வம்சத்தைச்  சேர்ந்தவர்.  மணமகள்  பௌனாம்பாள்  “”வேளாள”  வம்சத்தைச்  சார்ந்தவர்.  இந்த  மணம்  புரோகிதச்சடங்கு  முதலிய  அனாச்சார  வழக்கங்களின்றி  நடைபெறுகிறது.  மணமக்கள்  இருவரும்  தாங்களே  மனமொத்து  மண  ஒப்பந்தம்  செய்து  கொள்ள  முன்  வந்தது  பாராட்டத்தக்கது.  வைதீகர்கள்  பழைய  சாஸ்திரத்தை  அனுசரித்து  அறிவுக்கும்,  ஞாயத்திற்கும்  பொருந்தாத  முறையில்  நூற்றுக்கு  90  கல்யாணங்களைச்  செய்து  விடுகின்றனர்.  அது  கடைசியில்  யாதொரு  பிரயோஜனத்தையும்  அளிக்காமல்  கஷ்டத்தையே  விளைவிக்கின்றது.  யெப்படியாவது  கல்யாணம்  ஆனால்  போதுமென்று  முயர்ச்சிக்கின்றனர்.  தாங்களே  தங்களுக்கு  இஷ்டமானவர்களைத்  தேர்ந்தெடுத்துக்  கொள்ள  மணமக்களுக்கு  சுதந்தரம்  கிடையாது.  பெண்  கொள்வதை  சந்தையில்  மாடுவாங்குவதாக நினைத்து  செய்து  விடுகின்றனர்.  பொருத்தம்  பார்ப்பதில்  மணமக்களுக்கு  இருக்க  வேண்டிய  மனப்  பொருத்தம்  பார்க்கப்  படுவதில்லை. வழியே  போகும்  ஒரு பார்ப்பானையோ,  வள்ளுவனையோ  கூப்பிட்டுப்  பொருத்தம்  பார்க்கச்  சொல்லி  மணத்தை  நடத்தி  விடுகின்றனர்.  மாப்பிள்ளை  7லீ ...

இரணியன்  நாடகத்தில்   தோழர்  ஈ.வெ.ரா.

இரணியன்  நாடகத்தில்  தோழர்  ஈ.வெ.ரா.

  தோழர்களே! சென்னை  சீர்திருத்த  நாடக  சங்கத்தாரால்  நடிக்கப்பட்ட  இந்த  முதல்  நாடகத்துக்குத்  தலைமை  வகிக்கும்  பெருமை  எனக்களித்ததற்கு  நன்றி  செலுத்துகிறேன். நாடகம்  என்பது  ஒரு  விஷயத்தை  தத்ரூபமாய்  நடித்துக் காட்டுவது  என்பதோடு,  அதைப்  பெரிதும்  மக்களின்  நடத்தைக்கு  வழி  காட்டியாகவும்,  ஒழுக்கங்கள்  கற்பிக்கப்படுவதற்கும்  பயன் படுத்தப்படுகின்றது  என்றும்  சொல்லப்படுகின்றது. ஆனால்  அது  அந்தப்படி  தத்ரூபமாய்  நடத்திக்  காட்டப்படுவதும்  இல்லை.  மக்கள்  ஒழுக்கத்துக்கும்,  நடப்புக்கும்  வழிகாட்டியாய்  நடப்பிப்பதும்  இல்லை  என்று  சொல்லுவதற்கு  நாடக  அபிமானிகள்  மன்னிக்க  வேண்டுகிறேன். தத்ரூபம்  என்பதில்  விஷயங்களின்  ரசபாவங்களும்,  உண்மை யாய்  நடந்திருக்கும்  என்று  நினைக்கும்படியான  எண்ணமும்  ஜனங்களுக்கு  விளங்க  வேண்டும். அந்தப்படி  இல்லாமல்  நமது  நாடகங்கள்  பெரிதும்  சங்கீதக்  கச்சேரி  போலவும்,  கால÷க்ஷப  சபை  போலவும்,  விகட  சபை  போலவும்,  நகைகள்  உடுப்புகள்  காக்ஷி  சாலைகள்  போலவும்,  விஷயங்களுக்குப்  பொருத்தமில்லாத  பேச்சுக்களை  அடுக்கி  பேசும்  பேச்சுவாத  சபை  போலவும்  விளங்குகின்றது  என்று  தான்  சொல்ல  வேண்டியிருக்கிறது. ...

இந்திய  சட்டசபைத்  தேர்தல்

இந்திய  சட்டசபைத்  தேர்தல்

  இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  காங்கிரஸ்காரர்கள்  போட்டி  போட  முடிவு  செய்து  ஆங்காங்கு  மாகாணம்  தோறும்  காங்கிரசின்  சார்பாய்  அபேட்சகர்களை  நிறுத்திப்  போட்டி  போடுகிறார்கள். காங்கிரஸ்காரர்களுக்குள்ளாகவே  இவ்விஷயத்தில்  அபிப்பிராய  பேதம்  ஏற்பட்டுத்  தேர்தலில்  பிரவேசிக்கக்  கூடாது  என்று  சொல்லி  ஒரு  கூட்டத்தார்  விலகிக்  கொண்டார்கள். மற்றொரு  கூட்டத்தார்  தாங்கள்  நேரே  தேர்தலில்  நிற்காமல்  மற்றவர்களுக்கு  உதவி  செய்து  “”காங்கிரசின்  கௌரவத்தைக்  காப்பாற்று கின்றோம்”  என்று  அபேட்சகர்களாக  நிற்பதில்  இருந்து  விலகி  இருக்கிறார்கள். மற்றொரு  கூட்டத்தாரோ!  காங்கிரஸ்  அபிமானிகள்  என்று  தங்களைச்  சொல்லிக்கொண்ட  போதிலும்  கூட  காங்கிரஸ்  கொள்கைகள்  சில  தங்களுக்குப்  பிடிக்கவில்லை  என்றும்,  அக்கொள்கைகளுக்கு  மாறாகத்  தாங்கள்  நடக்க  வேண்டி  இருக்கிறதென்றும்  சொல்லி  கட்டுப்பாட்டிலிருந்து  விலகி  காங்கிரஸ்  கட்டளைக்கு  விரோதமாய்  நடக்கத்  தீர்மானித்து  எதிர்ப்பு  முறையில்  ஒரு  கட்சி  ஏற்படுத்தி  அதன்  பெயரால்  காங்கிரசோடு  போட்டி  போட  முடிவு  செய்து  கொண்டிருக்கிறார்கள். மற்றொரு  கூட்டமோ!  காங்கிரசுவாதியாய்  இருந்து  காங்கிரசை  ஆதரித்து  வந்து ...

வேலையில்லாத்  திண்டாட்டம்

வேலையில்லாத்  திண்டாட்டம்

  செல்வம்  பொழியும்  அமரிக்கர்  தேசத்தில்  இன்று  கோடிக்கணக்கான  மக்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுவதுடன், 10 லக்ஷக்கணக்கான  தொழிலாளர்கள்  வேலை  நிறுத்தம்  செய்து  பெருத்த  கலவரம்  ஏற்பட்டு  இருக்கிறது. இந்நிலையில்  அமரிக்க  குடி  அரசு  தலைவர்  வேலையில்லாதவர் களுக்கு  வேலை  கொடுப்பதற்காக  ஒரு  காரியம்  செய்து  வருகிறார்.  அதாவது  தொழிலாளிகளின்  வேலை  நேரத்தைக்  குறைத்து  அதிக  தொழிலாளிகளுக்கு  வேலை  ஏற்படும்படி  செய்து  வருகிறார்.  எப்படியெனில்  ஒரு  தொழில்சாலையில்  ஒரு  தொழிலாளி  வாரத்துக்கு  40  மணி  நேரம்  வேலை  செய்து  வந்ததை  இப்போது  மாற்றி  வாரம்  ஒன்றுக்கு  ஒரு  தொழிலாளி  36  மணி  நேரம்  வேலை  செய்தால்  போதும்  என்றும்,  பழய  கூலியே  கொடுக்கப்பட  வேண்டும்  என்றும்  உத்திர  விட்டுவிட்டார். அதன்  பயனாக  ஒரு  மாகாணத்தில்  பருத்தி  இயந்திரத்  தொழில்  இலாக்காவில்  மாத்திரம்  10000  பதிறாயிரம்  பேருக்கு  புதிதாக  வேலை  கொடுக்கப்பட்டிருக்கிறது.  இது  போல்  இன்னும்  அநேக  இலாக்காவில்  ஏற்பாடு  செய்வதன்  மூலம் ...

நாம்  எப்படி  நடந்துகொள்ள  வேண்டும்

நாம்  எப்படி  நடந்துகொள்ள  வேண்டும்

  வரப்போகும்  இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  சுயமரியாதைக்  காரர்கள்  எப்படி  நடந்து  கொள்ள  வேண்டும்  என்பதைப்  பற்றியும்,  மேலால்  நடக்க  வேண்டிய  பிரசாரங்களைப்  பற்றியும்  எனக்குப்  பல  கடிதங்களும்,  கேள்விகளும்  வந்து  கொண்டிருக்கின்றன.  இவற்றுள்  தோழர்  இ.ஈ.நாயகம்  அவர்களுடைய  கடிதம்  முக்கியமானது.  சுயமரியாதைக்காரர்களுக்குத்  தேர்தல்  விஷயத்தில்  இன்ன  கட்சியைத்  தான்  ஆதரிப்பது  என்கின்ற  எவ்வித  நிபந்தனையும்  இது வரை  ஏற்படவில்லை  என்பது  யாவரும்  அறிந்ததே.  தேர்தல்களில் பார்ப்பனர்    பார்ப்பனரல்லாதார்  என்கின்ற  தன்மையை  மாத்திரம்  தான்  இதுவரை  சு.ம.காரர்கள்  கவனித்து  வருகிறார்கள்.  சுயமரியாதைக்காரர்கள்  ஏதாவது  ஒரு  கட்சியை  ஆதரிப்பது  என்கின்ற  நிலை  ஏற்பட  வேண்டுமானால்  வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்  என்கின்ற  கொள்கைக்குப்  பாதகமில்லாமல்  நமது  குறைந்த  பட்சக்  கொள்கையை  ஒப்புக்  கொள்ளக்  கூடிய  கட்சியைத்தான்  ஆதரிக்க  வேண்டி  வரும். ஜஸ்டிஸ்  கட்சியோ!  பார்ப்பனர்களைச்  சேர்த்துக்  கொள்ளப்  போகின்றது.  அதற்கேற்றாப்  போல்  சுயமரியாதைக்காரர்  பலருக்கும்  காங்கிரசில்  சேரலாமா  என்கின்ற  எண்ணம்  இருந்து  வருகின்றது.  சுயமரியாதைக்காரர்களுக்கு  ஜஸ்டிஸ் ...

காங்கிரசின்  வீரம்

காங்கிரசின்  வீரம்

  வெட்கம்!  வெட்கம்!!  வெட்கம்!!! காங்கிரசுக்காரர்கள்  என்று  தங்களைச்  சொல்லிக்  கொள்ளும்  ஒரு  கூட்டம்  சிற்சில  ஊர்களில்  இருந்து  கொண்டு  காலித்தனம்  செய்து  வருவதைப்  பற்றி  இதற்கு  முன்  பல  தடவை  “”குடி  அரசு”,  “”புரட்சி”  பத்திரிக்கைகளில்  எழுதப்பட்டிருந்தது  வாசகர்களுக்குத்  தெரியுமென்று  நினைக்கிறோம். இந்தக்  கூட்டங்களுக்கு  ஏற்பட்ட  வேலையெல்லாம்  காங்கிரஸ்  பேரால்  வயிறு  வளர்ப்பதும்,  அதற்குக்  கூலியாகக்  காங்கிரஸ் காரர்களல்லாதார்  என்பவர்கள்  போடும்  கூட்டங்களில்  போய்  காலித்தனம்  செய்வதும்,  சரிசமமான  காலித்தனத்தையோ,  போலீசாரையோ  கண்டால்  ஓட்டமெடுப்பதும்  வழக்கமாயிருந்து  வருகிறது. தேசியப்  பத்திரிக்கை  என்று  சொல்லிக்  கொள்ளும்  சில,  அதாவது  காலித்தனத்தில்  பிரியமும்,  ஆசையும்  உள்ள  சில  பத்திரிக்கைகள்  “”போலீசார்  பந்தோபஸ்தில்  கூட்டம்  நடந்தது”  என்றும்  “”கூட்டத்தில்  கலவரம்,  குழப்பம்”  என்றும்  எழுதி  அவற்றை  ஆதரிப்பதுமாய்  இருந்து  வருவதும்,  காங்கிரசுக்கும்,  தேசியத்துக்கும்  வெட்கக்  கேடு  என்பதுடன்  தங்களுடைய  யோக்கியதையானது  வெளியாகக்  கூடாத  அவ்வளவு  இழிவானது  என்று  அவர்களே  கருதி  காலித்தனத்தின்  மூலம்  எதிரிகளின் ...

இது  தானா  தேசியம்?

இது  தானா  தேசியம்?

  மத  விஷயங்களிலுள்ள  குற்றங்களும்,  கொடுமைகளும்,  ஒழுக்கக்  குறைவுகளும் தேசிய விஷயத்தில் இல்லையென்று  யாராலும்  சொல்ல  முடியாது. பொதுவாகவே  தேசியம்  என்னும்  வார்த்தையை  அர்த்தமற்றது  என்றும்,  மோசக்  கருத்துக்  கொண்டது  என்றும்,  அதில்  பணக்காரத்  தன்மை  பிரதிபலிப்பதோடு,  அது  பணக்காரத்  தன்மையை  ஆதரிப்பதற்கென்று  கற்பிக்கப்பட்டதென்றும்  பல  தடவை  கூறி  வந்திருக்கிறோம். நாம்  மாத்திரமல்லாமல்  பல  மேல்நாட்டு  அறிஞர்களும்  தேசியத்தின்  தன்மையைப்  பற்றிக்  குறிப்பிட்டிருக்கிறார்கள்.  ஜான்சன்  என்கின்ற  ஒரு  மேதாவி  “”தேசியம்  (தேசாபிமானம்)  என்பது  வடிகட்டின  அயோக்கியத்தனம்”  என்று  அதாவது  “”பிழைப்புக்கு  வழியில்லாதவர்களின்  கடைசியான  இழி  பிழைப்புக்கு  மார்க்கமானது”  என்று  கூறி  இருக்கிறார். இந்த  அபிப்பிராயம்  முதல்  முதல்  தேசியம்,  தேசாபிமானம்  என்கின்ற  வார்த்தைகள்  எங்கு  உண்டானதோ,  அங்கு  ஏற்பட்ட  அபிப்ராயமே  தவிர இந்தியாவில்  “”தேசிய  விரோதிகள்”  “”தேசத்  துரோகிகள்”  “”சர்க்கார்  குலாம்கள்”  என்று  “”தேசாபிமானி”களால்  கருதப்படுகின்றவர்களால்  சொல்லப்பட்டதல்ல.  இது  எப்படியோ  இருக்கட்டும்  என்று  வைத்துக்  கொள்ளுவோம். இன்று  இந்திய  தேசியவாதிகள்,  தேசாபிமானிகள் ...

காங்கிரஸ்காரர்களின்

காங்கிரஸ்காரர்களின்

  தேர்தல்  பிரசார  யோக்கியதை தோழர்  வரதராஜுலு  நாயுடு  M.ஃ.அ. க்கு  நிற்பதில்லை  என்றும்  தோழர்  ஸர்.ஆர்.கே.ஷண்முகம்  வர்த்தகத்  தொகுதிக்கு  நிற்பதில்லை  என்றும்  தெரிய வருவதாகக்  காங்கிரஸ்  தேசியப்  பத்திரிகைகள்  எழுதுகின்றன.  தோழர்  வரதராஜுலு  இதை  மறுக்கிறார்.  எனவே  இதை  விடக்  கேவலமான  முறை  கொண்ட  ஒரு  பிரசாரம்  வேறு  யாரும்  எப்படிப்பட்ட  மோசமான  வாழ்க்கைக்காரரும்  செய்ய  முடியாதென்றே  சொல்லுவோம். சத்தியம்,  தர்மம்,  நீதி,  ஒழுங்கு,  நாணையம்  ஆகியவைகளின்  பெயரைச்  சொல்லிக்  கொண்டு  இருக்கும்  ஸ்தாபனங்கள்,  கொள்கைகள்  ஆகியவைகளைச்  சேர்ந்தவர்களாலேயே  இவ்வித  பிரசாரங்கள்  நடக்குமானால்,  சாதாரண  வாழ்வில்  இருப்பவர்களால்  இனியும்  என்ன  என்ன  காரியம்  நடக்காது  என்று  கேழ்க்கின்றோம்.  தேர்தல் முறை  என்ன  என்பது  பற்றியும்  தேர்தலில்  ஒருவருக் கொருவர்  பேசிக்  கொள்வதிலும்,  எழுதிக்  கொள்வதிலும்  எவ்வளவு  நாணையமும்,  உண்மையும்  இருக்கக்  கூடும்  என்பதைப்  பற்றியும்  பொது  மக்கள்  தெரிந்து  கொள்ள  இந்த  ஒரு  உதாரணம்  போதாதா  என்று  மாத்திரம்  கேட்டுவிட்டு ...

மதம்  ஏன்  ஒழிய  வேண்டும்?

மதம்  ஏன்  ஒழிய  வேண்டும்?

  மதம்  என்பதைப்  பற்றி  இதற்கு  முன்  “”குடி  அரசு” ,  “”புரட்சி”  முதலிய  பத்திரிகைகளில்  அநேக  வியாசங்கள்  பல  தலைப்புகளின்  கீழ்  எழுதப்பட்டிருப்பது  யாவருக்கும்  தெரியும். மதமானது  இன்று  உலகில்  மனித  சமூகத்தின்  வாழ்வைத்  துக்கமயமாக்கி,  ஜீவராசிகளில்  மனிதனுக்கென்று  உள்ள  பகுத்தறிவை  அடிமைப்படுத்தி,  ஒற்றுமையைக்  குலைத்து,  மனிதனுக்கு  மனிதன்  வெவ்வேறு  இனம்  என்று  எண்ணும்படி  செய்து  வருகின்றது  என்பதற்கு  உதாரணம்  தேவையில்லை  என்றே  கருதுகின்றோம். “”தேசிய  சிங்கங்”களான  அலி  சகோதரர்கள்  ஒரு  காலத்தில்  “”நாங்கள்  முதலில்  மகம்மதியர்கள்,  பிறகுதான்  இந்தியர்கள்”  அதாவது  முதலாவது  மதம்,  பிறகு  தான்  தேசம்  என்றும்,  “”உலகம்  போற்றும்  உத்தமர்  மகாத்மா”  காந்தி  “”நானே  இந்து  மதத்தின்  உருவம்!  நான்  மூச்சுவிடுவதும்,  வாங்குவதும்  இந்து  மதத்திற்காகவே!!  நான் உண்பதும் உயிர் வாழ்வதும் இந்து மதத்திற்காகவே!!! மதத்தைக்  காக்கவே  நான்  சுயராஜ்யம்  கேட்கின்றேன்!!!!  அதாவது  இந்து  மதம்  தான்  எனக்கு  முதலும்  கடைசியும்”  என்றும்,  “”பழைய  காங்கிரஸ்வாதி, ...

ஈரோடு  முனிசிபாலிட்டிக்குப்  பாராட்டு

ஈரோடு  முனிசிபாலிட்டிக்குப்  பாராட்டு

  ஈரோடு  முனிசிபாலிட்டியானது  ஒரு  பத்து  வருஷ  காலம்  பொருப்பும்,  நாணையமும்  இல்லாமல்  லஞ்சம்,  திருட்டு,  புரட்டு,  பொய்,  போர்ஜரி  முதலிய  குணங்களை  அணிகலமாகக்  கொண்டு  நடந்து வந்ததும்,  அதன்  பயனாக  நிர்வாகமும்,  செல்வ  நிலையும்  மிகக்  கேவலமாய்  இருந்து  வந்ததும்,  அவ்வப்போது,  வெளியான  விஷயங்களில்  இருந்தும்,  சர்க்கார்  கணக்குப்  பரிசோதகர்கள்  அறிக்கைகளில்  இருந்தும்,  அரசாங்கத்தார்  நிர்வாக  அறிக்கைக்  குறிப்புகளிலிருந்தும்,  பொது  ஜனங்களும்  சிறப்பாக  ஈரோடு  வாசிகளும்  உணர்ந்திருக்கலாம். சுருக்கமாகச்  சொல்ல  வேண்டுமானால்  இந்த  10,  15  வருஷ  காலமாய்  அரசாங்கத்தார்  முனிசிபாலிட்டிக்குள்ள  அதிகாரங்களையும்,  கவுன்சிலர்களுக்கும்,  சேர்மென்களுக்கும்  உள்ள  அதிகாரங்களையும்  நாளுக்கு  நாள்  குறைத்து  வந்ததோடு,  சில  அதிகாரங்களை  அடியோடு  பறித்துக்  கொண்டதற்கும்  முக்கியமாக  ஈரோடு  முனிசிபாலிட்டியின்  நடத்தையே  காரணமென்று  சொல்லலாம். அவை  மாத்திரல்லாமல்  முனிசிபல்  ஆபிஸ்  நிர்வாகங்கள்  சேர்மென்கள்  கையிலிருந்தவைகளையும்  பிடுங்கிக்  கொண்டு  அவற்றை  நிர்வகிப்பதற்கு  மாதம்  60,  70,  100,  150  ரூபாய்  சம்பளமுள்ள  சாதாரண  சிப்பந்திகளை  நிர்வாக ...

ஈரோடு  முனிசிபல்  எலக்ஷன்

ஈரோடு  முனிசிபல்  எலக்ஷன்

  ஈரோடு  முனிசிபாலிட்டிக்கு  எலக்ஷன்கள்  நடக்க  தேதிகள்  குறிப்பிட்டாய்  விட்டன.  செப்டம்பர்  மாதம்  15ந்  தேதி  நியமனச்  சீட்டுகள்  (நாமினேஷன்  ஸ்லிப்பு)  தாக்கல்  செய்ய  வேண்டுமென்றும்,  17ந்  தேதி  அவை  பரிசீலனை  செய்யப்படும்  என்றும்,  27ந்  தேதி  எலக்ஷன்  நடைபெறுமென்றும்,  28ந்  தேதி  முடிவு  தெரிவிக்கப்படுமென்றும்  குறிப்பிடப்பட்டு  வெளிப்படுத்தியாய்  விட்டது.  இதன்  பிறகு  ஈரோட்டில்  தேர்தல்  பேச்சுகளும்  பிரசாரங்களும்  வெகு  தடபுடலாய்  நடக்கின்றன. யார் வருவதைப்  பற்றியும்,  யார்  போவதைப்  பற்றியும்  நாம்  கவலைப்படவோ  யாருக்கும்  யோசனை  சொல்லவோ  வரவில்லை.  ஆனால்  கக்ஷிகள்    இயக்கங்கள்,  பெயர்களைச்  சொல்லிக் கொண்டு, தனிப்பட்ட மக்களின் யோக்கியதாம்சங்களைப்  பற்றி  கவனிக்காமல்  நடத்தும்  சூழ்ச்சிப்  பிரசாரம்  மாத்திரம்  வேண்டாம்  என்று  தெரிவித்துக்  கொள்ளுகிறோம்.  எல்லா  வகுப்பாருக்கும்  சந்தர்ப்பங்கள்  அளிக்கப்பட  வேண்டும்  என்பதும்,  கை  பலமும்  பண  பலமுமே  ஒரு  மனிதனுடைய  தேர்தலுக்கு  யோக்கியதாபக்ஷமாய்   இருந்து  வரக்கூடாது  என்பதும்  நமது  விருப்பமாகும்.  எப்படி  இருந்தாலும்  இதுவரை  கிடைத்த  செய்திகளில் ...

ஏழைகள்  துயரம்  நீங்க  வழி

ஏழைகள்  துயரம்  நீங்க  வழி

  தோழர்களே! இந்த  தேசத்தில்  ஏற்பட்டிருக்கும்  ஜன  சமூக  அமைப்பின்  அஸ்திவாரமே  சரியாய்  இல்லாமல்  இருக்கிறது.  இந்த  அஸ்திவாரத்தின்  மீது  கட்டக்  கூடிய  எந்த  அமைப்பும்,  ஜன  சமூகத்திற்கு  நன்மையளிக்கக்  கூடியதல்ல.  ஒரு  தகப்பன்  வயிற்றில்  பிறந்த  பிள்ளைகளுக்கு  எப்படிச்  சம  அந்தஸ்தும்,  சம  உரிமையும்  உண்டோ  அப்படியே  ஒரு  தேசத்தில்  பிறந்தவர்களுக்கும்  இருக்க  வேண்டியது  அவசியமாகும்.  அப்போதுதான்  மக்கள்   சுகமாக  வாழ  முடியும்.  ஏதோ  தான்  பிறந்த  வேளையின்  பலன்  கஷ்டத்தை  அனுபவிக்க  வேண்டியதுதான்;  மற்றொருவன்  சுகத்தை  அனுபவிக்க  பாத்தியதை  யுடையவன்  தான்  என்னும்  சோம்பேறி  எண்ணமே  மக்களை  அழித்து  வருவதற்கு  முக்கிய  கருவியாய்  இருக்கிறது.  இந்த  எண்ணம்  மாறுபட  வேண்டியது  அவசியமாகும்.  இதற்காக  எவ்வளவு  தியாகம்  செய்தாலும்  அது  வீணாகாது.  ஜனங்களின்  மனோபாவமும்,  வாழ்க்கையை  நடத்தும்  முறையும்  மாறினாலொழிய  வேறொரு  முறையாலும்  நன்மை  உண்டாகாது  என்பது  திண்ணம்.  தற்போதிருக்கும்  நிலைமையில்  சுயராஜ்ஜியம்  வந்தால்  குருட்டு  நம்பிக்கையும்,  வைதீகமும்  தான் ...

“”மனித  உற்பவம்”

“”மனித  உற்பவம்”

  இந்நூல்  செப்டம்பர்  முதலில்  வெளிவரும்.  தமிழ்  பாஷையிலும்,  மற்றும்  எந்த  இந்திய  பாஷையிலும்,  இதுகாரும்  எழுதிராத  நூல்  இதுவொன்றே.  இந்  நூல்  நாட்டில்  3035  கோடி  மக்களுக்கு,  மனிதன்  உலகில்  எவ்விதம்  உற்பத்தியானான்  என்ற  விஷயம்  தெரியாமலே  இருந்து  வருகிறது.  இந்தியாவில்,  தற்போது  வாழ்ந்து  வரும்  முதியோருக்கும்  இளைஞருக்கும்  மனிதன்  எவ்விதமாக  உலகில்  தோன்றி  இருக்கக்கூடுமென்று  சிந்திக்கக்  கூடாமலே  இருக்கின்றது.  ஏனெனில்  மதங்களாலும்,  ஜாதிகளாலும்  கட்டுண்ட  நமது  இந்திய  மக்களுக்கு,  எங்கே  மனித  உற்பவ  உண்மையைத்  தெரிந்துகொண்டால்,  மதங்கள்  பேரிலும்,  ஜாதிகள்  பேரிலும்  பற்று  ஒழிந்து  போகுமோ  என்ற  மோச  எண்ணத்தால்,  மனித  உற்பவத்தியைப்  பற்றி  விஞ்ஞானம்  கூறும்  உண்மையை,  நமது  பாமர  மக்களுக்கு  எடுத்துறைக்காமலே  இதுகாரும்  நமது  அறிஞர்களும்  இருந்து  வந்திருக்கின்றனர்.  இந்த  மோசடியைப்  போக்கவும்,  மதங்களிலுள்ள  பற்று  ஒழியவும்  ஏற்பட்டதாகும்  இந்நூல்.  இதனை  வாசித்து,  நமது  பாமர  மக்களுக்கு  மனிதனுடைய  உண்மை  வரலாற்றைத்  தெரிவிக்க,  ஒவ்வொரு  சமதர்மியும், ...

இதற்கு  என்ன  சமாதானம்?

இதற்கு  என்ன  சமாதானம்?

  ஹிட்லரே ஜர்மனியின்  மொத்த  ஜனத்தொகை  66000000  ஆறுகோடியே  அருபது  லக்ஷம்.  இதில்  3  கோடியே  21  லக்ஷம்  ஆண்கள்.  பெண்கள்  3  கோடியே  39  லக்ஷம்.  ஆகவே  பெண்கள்  ஆண்களை  விட  18  லட்சம்  பேர்கள்  அதிகமாய்  இருக்கிறார்கள்.  பெண்கள்  அடுப்பங்கரைக்கும்,  படுக்கை  அரைக்குத்தான்  லாயக்கென்று  சொல்லி  இந்தியப்  பெண்களைக்  கூட  அந்தப்படி  நினைக்கும்படி  செய்துவிட்ட  ஹிட்லரே  இந்த  18  லக்ஷம்  பெண்களைப்  பாதிரியாகச்  சொல்லுகின்றீர்களா?  அல்லது  சங்கறாச்சாரி களாகவும்,  மடாதிபதி,  தம்பிரான்களாகவும்  ஆகச்  சொல்லுகிறீர்களா?  அல்லது  ஆளுக்கு  60,000  பெண்களை  கலியாணம்  செய்துகொண்ட  தசரத  மகாராஜாவைப்போல்  ஒரு  ஐம்பது  தசரத  மகாராஜாவை  சிருஸ்டிக்கிறீரா?  என்ன  செய்யப்போகிறீர்.  மற்றும்  இந்தப்  பெண்கள்  சராசரி  4  வருஷத்திற்கு  ஒரு  குழந்தை  வீதம்  பெற்றாலும்  வருஷம்  4லீ  லக்ஷம்  பிரஜைகள்  அதிகமாகுமே.  ஆதலால்  அதை  தடுக்க  என்று  கர்ப்பத்தடைப்  பிரசாரம்  செய்வதற்காக  இவர்களை  கன்னியா  மாடத்துக்காவது  அனுப்ப  உத்தேசித்து  இருக்கிறீரா? பகுத்தறிவு  துணைத்...

வைசிராய்  பேச்சு

வைசிராய்  பேச்சு

  சட்டமறுப்பு  இயக்கம்  செத்தது சட்ட  மறுப்பு காலகிரமத்தில்  சட்ட  மறுப்பு  இயக்கத்  தலைவர்கள்  பயனற்ற  தடை  வேலை,  நாசவேலை  ஆகியவைகளைக்  கைவிட்டு  விடுவார்கள்  என்று  ஏற்கனவே  நான்  சொல்லியிருக்கிறேன்.  நான்  முன்  ஒரு  தடவை  அதைப்  பற்றிப்  பேசியபோது  சட்ட  மறுப்பு  உயிருக்கு  ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.  மகா  ஜனங்கள்  அதை  வேண்டவில்லை  யென்பது  தெளிவுபட  ஆரம்பித்துவிட்டது.  சென்ற  12  மாத  காலத்திய  சம்பவங்களிலிருந்து,  அவ்வுணர்ச்சி  இன்னும்  வலுத்து,  கடைசியாக  சென்ற  ஏப்ரல்  மாதம்  அப்புரட்சி  இயக்கத்தின்  மூல  புருஷரே  சட்டமறுப்பு  இயக்கத்தை  நிறுத்தி  வைக்கும்படி  எல்லா  காங்கிரஸ்காரர் களுக்கும்  யோசனை  சொல்லப்  புறப்பட்டார்.  ஸ்வராஜ்யத்திற்காக  சட்டமறுப்புச்  செய்வதை  நிறுத்தும்படி  அவர்  சொன்னார்.  இப்பால்  காங்கிரஸ்  காரியக்  கமிட்டி  கூடி,  அதை  ஊர்ஞ்ஜிதம்  செய்ததுடன்,  சட்ட  சபைப்  பிரவேசம்  செய்யவேண்டுமென்றும்  முடிவு  செய்தது.  ஒரு  காலத்தில்  அது  பயனற்ற  முறையென்று  பல  காங்கிரஸ்  தலைவர்கள்  கூறி  வந்தது  ஞாபகமிருக்கும்.  இவ்  விஷயங்களைப்பற்றி ...

நமது  மாகாணத்தில்  பெண்  வக்கீல்கள்

நமது  மாகாணத்தில்  பெண்  வக்கீல்கள்

  நமது  நாட்டில்  பெண்கள்  சமயலுக்கும்,  படுக்கைக்கும்  மாத்திரம்  பயன்படக்கூடியவர்கள்  என்கின்ற  எண்ணம்  வைதீகர்களுக்குள்ளும்,  வயோதிகர்களுக்குள்ளும்  இருந்து  வருவதோடு  பல  பெண்களும்  அப்படியே  நினைத்துக்கொண்டுமிருக்கிறார்கள். சில  பெண்கள்  இந்த  இரண்டு  வேலைகளுக்கும்  இடையூறு  இல்லாமல்  ஏதாவது  வேலை  கிடைத்தால்  மாத்திரம்  செய்யலாமே  தவிர  மற்றபடி  பெண்கள்  ஆண்களைப்  போல்  வேலை  பார்ப்பது  பாவமென்றும்  கருதி  இருக்கிறார்கள்.  சில  பெண்கள்  சட்டசபையில்  இருந்தவர்களும்,  இருக்க  பாக்கியம்  பெற்றவர்களும்  கூட  பெண்களுக்கு  கும்மி,  கோலாட்டம்,  கோலம்,  தையலில்  பூப்போடுதல்  ஆகிய  வேலைகள்  சம்மந்தமான  கல்வி  கற்றால்  போதும்  என்றும்  சொல்லிக்கொண்டு  இருக்கிறார்கள். நம்முடைய  தேசத்து  தேசியத்தலைவர்களும்,  மகாத்மாக்கள்  என்போர்களுக்கும்  பெண்கள்  சந்திரமதி  போலும்,  சீதை  போலும்,  நளாயினிபோலும்  இருக்க  வேண்டும்  என்று  சொல்லி  அதற்குத்  தகுந்த  பிரசாரமும்  செய்து  வருகின்றார்கள்.  இப்படிப்பட்ட  கஷ்டமான  நிலையில்  நம்  தென்  இந்தியாவில்  சென்னையில்  பெண்கள்  பி.ஏ.,  பி.எல்.,  படித்து  வக்கீல்களாகி,  அட்வகேட்டுகளும்  ஆகி  இருக்கின்றார்கள்  என்றால்  பெண்களை ...

வடநாட்டுத்  “”தலைவர்கள்”

வடநாட்டுத்  “”தலைவர்கள்”

  பூலாபாய் தேசாய்    சர்தார்  சாதூல்  சிங் தோழர்  பூலாபாய்  தேசாய்  அவர்கள்  சென்ற  மாதம்  சென்னை  மாகாணத்திற்குத்  தருவிக்கப்பட்டு,  பல  இடங்களில்  சொற் பொழி வாற்றும்படி  செய்யப்பட்டதில்  அவர்  சொற்பொழிவிலிருந்து  மிக  மோசமான  வாக்கியங்கள்  காணப்பட்டதை  வாசகர்கள்  பல  பத்திரிகைகளில்  பார்த்திருக்கலாம். அவற்றில்  கவனிக்கத்தக்க  ஒரு  வாக்கியம்  என்னவென்றால்  “”சென்னை  மாகாணத்தில்  சர்க்காரை  ஆதரிக்க  சுயமரியாதை  இயக்கம்  என்பதாக  ஒன்று  இருந்து  வருகின்றது” என்பது. அதே  மாதிரி  தமிழ்நாட்டுக்கு  வந்த  மற்றொரு  தோழர்  சர்தார்  சாதூல்சிங்  என்பவர்  “”காங்கிரஸ்  குதிரை  போன்றது,  மற்ற  ஜஸ்டிஸ்  கக்ஷி  முதலியவைகள்  கழுதை  போன்றது”  என்றும்  பேசிவிட்டு  போயிருக்கிறார்.  இவர்களைப்  பற்றி  நாம்  பரிதாபப்படுகின்றோம்.  ஏனெனில்  இவர்கள்  தமிழ்நாட்டைப்  பற்றியோ,  ஜஸ்டிஸ்  கக்ஷியைப்  பற்றியோ,  சுயமரியாதை  இயக்கத்தைப்  பற்றியோ  ஒன்றும்  அறியாதவர்கள். தென்னாட்டுப்  பார்ப்பனர்கள்  சர்க்கிஸ்  மாஸ்டர்கள்  மாதிரி  வடநாட்டு  ஆசாமிகளை  சர்க்கிஸ்  வளையத்துக்குள்  ஆட்டுவிக்கும்  மிருகங்களைப்  போலப்  பிடித்துக்  கொண்டு  வந்து  ஆட்டுவிப்பதன் ...

லார்ட்  வில்லிங்டனின்  வீர  முழக்கம்

லார்ட்  வில்லிங்டனின்  வீர  முழக்கம்

  ஜோசியம்  பலித்ததாம் லார்டு  வில்லிங்டன்  பிரபு  இந்திய  சட்டசபையில்  பேசும்போது  சட்ட  மறுப்பு  இயக்கத்  தலைவர்கள்  தங்களுடைய  பயனற்ற  தடை  வேலைகளை  சீக்கிரத்தில்  கைவிட்டு  விடுவார்கள்  என்று  முன்னமே  ஜோசியம்  சொன்னதாகவும்  கொஞ்ச  நாளைக்கு  முன்  உயிருக்கு  மன்றாடிக்  கொண்டிருந்த  சட்டமறுப்பு  இயக்கம்  செத்துப்போய்  விட்டதென்றும்  இதை  பல  காங்கிரஸ்  தலைவர்கள்  கூட  அப்போதே  சொன்னார்கள்  என்றும்,  இனி  அது  எந்தக்  காலத்திலும்  தலை  எடுக்காமல்  பார்த்துக்  கொள்ள  வேண்டும்  என்றும்,  இப்போது  காங்கிரஸ்  ஸ்தாபனங்களின்  மீதுள்ள  தடையை நீக்கிவிட்டோம் என்றும் சட்டமறுப்பு இயக்கம் அடியோடு செத்துப்   போய்விட்டதென்று  தான்  நம்புவதாகவும்,  இது  விஷயமாய்  தான்  கையாண்ட  முறைகள்  எல்லாம்  வெற்றி  அளித்து  விட்டதென்றும்,  அவை  வெற்றியளித்ததற்கு  காரணம்  பொது  ஜனங்களுக்கு  நல்ல  புத்தி  வந்து  சட்ட  மறுப்பைக்  கைவிட்டதே  காரணமென்றும்  சொல்லி  கடைசியாக  இந்த  அளவுக்கு  வில்லிங்டன்  பிரபு  ஜோசியம்  பலித்துவிட்டது   என்பதோடு   இந்த  ஜோசியம்  வில்லிங்டன்  பிரபு ...

மண்  குதிரையை  நம்பின  பலன் 

மண்  குதிரையை  நம்பின  பலன் 

  கருப்புக்  கொடியும்,  தடி  அடியும்  வெடிகுண்டும் தோழர்  காந்தியாருக்கும்,  காங்கிரசுக்கும்  அரசியல்  வாய்ப்பூட்டு  ஏற்பட்டு  விட்டதின்  பிறகு  ஏதாவது  ஒரு  வேலை  செய்து  கொண்டிருக்கா விட்டால்  தங்களை  உலகம்  மறந்து  விடுமோ  என்று  பயந்து  சமுதாயத்  துறையில்  வேலை  செய்ய  எண்ணங்கொண்டு  ஹரிஜன  சேவை,  ஆலயப்  பிரவேசம்  என்னும்  பெயர்களால்  சுற்றுப்பிரயாணம்  செய்ததும்,  பணம்  தண்டினதும்  யாவரும்  அறிந்ததாகும்.  இதை  மெய்யென்று  நம்பின  சில  அரசியல்  பிழைப்புக்காரர்கள்  ஆலயப்  பிரவசே  மசோதா,  தீண்டாமை  விலக்கு  மசோதா  முதலியவைகள்  கொண்டு  வந்து  விளம்பரம்  செய்து  கொண்டதும்  இந்தியர்கள்  அறிவார்கள். பிறகு  என்ன  ஏற்பட்டது?  மண்  குதிரையை  நம்பி  ஆற்றில்  இறங்கின  பலன்தான்  ஏற்பட்டது.  ஏன்  ஏற்பட்டது  என்றால்  தோழர்  காந்தியார்  தமது  பரிவாரங்களுடனும்  சுற்றுப்  பிரயாணம்  செல்லுகையில்  அவருக்கு  ஏற்பட்ட  கருப்புக்  கொடி,  தடியடி,  வெடிகுண்டு  ஆகியவைகள்  பிரயோகமும்,  காந்தி  கூட்டத்தார்  மற்றவர்கள்  மீது  பிரயோகித்த  தடியடி  பிரசாரமும்  சேர்ந்து  காந்தியாரைப் ...

“”கர்ம  பலன்”

“”கர்ம  பலன்”

  தோழர்  வரதராஜுலு  நாயுடு  அவர்கள்  அவர்களுக்கு  விபரம்  தெரிந்த  காலம்  முதல்  இன்று  வரை  இன்னமும்  தேசீய  பல்லவி  பாடிக்  கொண்டிருந்தது  யாவருக்கும்  தெரிந்ததாகும்.  அதோடு  கூடவே,  இந்த  சர்க்காரை,  அதன்  அன்னிய  ஆக்ஷியை  ஒழித்து  சுயராஜ்ஜியம்  ஏற்படுத்த  வேண்டும்  என்ற  அனுபல்லவியையும்  பாடி  வந்ததும்,  வருவதும்  யாவருக்கும்  தெரியும். தேசீயம்  என்பது  வயிற்று  பிழைப்பு  நாடகம்  என்றும்,  அன்னிய  ஆக்ஷி,  சுய  ஆக்ஷி,  சுயராஜ்ஜியம்  என்பவைகள்  எல்லாம்  பார்ப்பனர்களுக்கும்,  பணக்காரர்களுக்கும்  பாடுபாடும்  சோம்பேறி  நாடகம்  என்று  நாம்  சொல்லி வருகிறோம். இதை  ஈணூ.நாயுடு  அவர்கள்  எதிர்த்துப்  பழித்து  தூஷித்தும்  வந்திருக்கிறார்  என்றாலும்  இந்தப்  பிரசாரத்தின்  பலனை  இவர்  என்றைக்காவது  ஒரு  நாளைக்கு  அதாவது   அனுபவிப்பார்  என்றே  கருதி  அதை  லக்ஷியம்  செய்யாமல்  இருந்து  வந்தோம்.  எனினும்  “”கர்மத்தின்  பலனை”  இன்று  அவர்  அடைய  நேர்ந்ததை  அவரே  மறுக்க  மாட்டார்  என்று  கருதுகிறோம்.  அதாவது  இந்த  நாட்டுக்கு,  இந்திய  தேசீயத்துக்கு, ...

ஆலயப்பிரவேச  மசோதா 

ஆலயப்பிரவேச  மசோதா 

  கருவிலேயே  கருகிவிட்டது இந்திய  சட்டசபையில்  இருந்த  ஆலயப்பிரவேச  மசோதா  23ந்தேதி  இந்திய  சட்டசபை  கூட்டத்துக்கு  வந்து  பொதுஜன  அபிப்பிராயம்  விரோதமாய்  இருக்கின்றது  என்கின்ற  காரணத்தால்  சர்க்காராரால்  வாப்பீசு  வாங்கிக்கொள்ளும்படி  கேழ்க்கப்பட்டு  அது  வாப்பீசு  வாங்கிக்  கொள்ளப்பட்டதால்  அது  கருவிலேயே  கருகி  விட்டது. பகுத்தறிவு  செய்திக் குறிப்பு  26.08.1934

தோழர்  திரு.வி.க.  முதலியார்

தோழர்  திரு.வி.க.  முதலியார்

  தோழர்  திரு.வி. கல்யாணசுந்திர  முதலியார்  அவர்கள்  திருச்சிக்கும், ராசீபுரத்துக்கும்  வருவதாக  பத்திரிகையிலும்,  துண்டுப்  பிரசுரங்களிலும்  வெளியானபடி  அவர்  வரவில்லை.  ஆதலால்  பார்ப்பனக்  கூலிப்  பத்திரிகைகள்  கல்யாணசுந்திர  முதலியார்  வரமாட்டார்.  அவர்  பெயரை  வேண்டுமென்றே  தப்பிதமாய்  உபயோகித்துக்கொள்ளுகிறார்கள்  என்று  எழுதிய  வாசகம்  உண்மையாய்  இருக்கலாம்  என்று  சிலர்  கருதக்கூடும்.  ஆதலால்  நடந்த  விபரங்களை  எழுதுகின்றோம்.  ஒரு  சுற்றுப்பிரயாணம்  ஏற்படுத்த  வேண்டுமென்றும்,  தானும்  அதில்  கலந்து  கொள்ளுவதாகவும்  தோழர்  முதலியார்  அவர்களே  பிரஸ்தாபித்ததை  ஒட்டித்தான்  சுற்றுப்பிரயாணம்  பிரஸ்தாபிக்கப்பட்டதென்றும்,  அவருடைய  சம்மதத்தின்  பேரிலேயேதான்  பத்திரிக்கைகளிலும்,  துண்டு  பிரசுரங்களிலும்  பிரஸ்தாபிக்கப்பட்டதென்றும்  நாம்  நமது  தோழர்களுக்குத்  தெரிவித்துக்  கொள்வதுடன்,  அதை  நம்பியே  தோழர்  ஈ.வெ.ரா.  ஒவ்வொரு  ஊருக்கும்  சென்றார்  என்றும்  தெரிவித்துக் கொள்வதோடு  தோழர்  முதலியார்  அவர்கள்  இரண்டு  இடத்திற்கும்  விஜயம்  செய்யாத  காரணம்  திருச்சிக்கு  மூலவியாதி  தொந்திரவால் வரவில்லை  என்றும்,  ராசீபுரத்துக்கு  வறாதது  அவரது  நெருங்கிய  பந்து  ஒருவரின்  மரணம்  காரணம்  என்றும்  சேதி  வந்திருப்பதையும் ...

சர்.ஆர்.கே.  ஷண்முகம்

சர்.ஆர்.கே.  ஷண்முகம்

  தோழர்  ஷண்முகம்  அவர்கள்  சமீபத்தில்  வரப்போகும்  இந்திய  சட்டசபைத்  தேர்தலுக்கு  ஒரு  அபேக்ஷகராக  நிற்கின்றார்.  அவர்  சென்னை  மாகாண  வர்த்தக  தொகுதிக்கு  அபேக்ஷகராய்  நிற்க  உத்தேசித்திருப்பதாய்  தெரிகின்றது.  அவர்  இப்போது  பொது  (கோவை,  சேலம்,  வட  ஆற்காடு  ஜில்லாக்கள்)  தொகுதியின்  பிரதிநிதியாய் இந்திய சட்டசபைக்குச் சென்று அங்கு அவரது மேன்மையாலும் தகுதியாலும்  இந்திய  சட்டசபைக்கே  தலைவராய்,  அதாவது  கௌரதையில்  வைஸ்றாய்  பிரபுவுக்கு  அடுத்தபடியாய்  விளங்குகிறார். அவர்  காங்கிரசில்  பலகாலம்  இருந்தவர்.  சமீப  காலத்தில்  அதாவது  1925,  26ம்  வருடங்களில்  தென்னாட்டுப்  பார்ப்பனர்கள்  தமிழ்நாட்டில்  காங்கிரசின்  பேரால்  தனித்து  நின்று  மேடையேறுவதற்கு  தகுதி  இல்லாமல்  முறியடிக்கப்பட்ட  காலத்தில்  (தோழர்கள்  கு. சீனிவாசய்யங்கார்,  சி.ராஜகோபாலாச்சாரியார்,  சத்தியமூர்த்தி  முதலியவர்கள்)  தோழர்  சண்முகம்  அவர்களை  முன்னிலையில்  நிறுத்தி  அவரது  நிழலில்  மறைந்து  கொண்டு  மேடைகளில்  ஆள்  அடையாளம்  தெரியாமல்  உட்கார்ந்திருந்ததை  இதற்குள்  அவர்களும்  மறந்திருக்க  மாட்டார்கள்.  பொது  ஜனங்களும்  மறந்திருக்க  மாட்டார்கள்.  தோழர்  ஷண்முகமும்  மறந்திருக்க ...