Category: குடி அரசு 1928

ராமனாதபுரம் ஜில்லாபோர்டு 0

ராமனாதபுரம் ஜில்லாபோர்டு

ராமனாதபுரம் ஜில்லாபோர்டு பிரசிடெண்டாயிருந்த ராமனாதபுரம் ராஜா அவர்கள் காலமானதின் மூலம் இப்போது அந்த பிரசிடெண்ட்°தானம் காலியாக இருந்து வருகின்றது. சர்க்காரார் அந்த °தானத்தை பூர்த்தி செய்வதற்கு இதுவரை யாதொரு முடிவும் செய்திருப்பதாகத் தெரியவில்ல. ஆனாலும் அந்த °தானத்தை தேர்தலுக்கு (எலக்ஷனுக்கு) விட்டுவிடலாமா அல்லது தாங்களே ஒருவரை பிரசிடெண்டாக நியமனம் ( நாமிநேஷன்) செய்து விடலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது. தற்கால நிலைமையில் அதுவும் ராமனாதபுரம் ஜில்லாவைப் பொருத்தவரை அந்த °தானத்தை எலக்ஷனில் விடுவதைவிட நாமிநேஷனில் தக்க ஒருவரை நியமனம் செய்வதே யோக்கியமும் அறிவுடைமையுமான காரியம் என்று சர்க்காருக்கு யோசனை கூறுவோம். மதுரையில் சில பாகம், திருநெல் வேலி, இராமனாதபுரம் ஆகிய ஜில்லாக்களிலும் ஜாதிக் கர்வமும் ஜாதிக் கொடுமையும் தலைசிறந்து விளங்குவது யாவரும் அறிந்த ஒன்றாகும். உதாரணமாகப் பார்ப்பனர்களின் கொடுமையோ சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. அதற்கடுத்ததான தெற்கத்திய சைவ வேளாள சமூகத் தாரின் கொடுமையோ பார்ப்பனரல்லாதார் சமூகமே வெட்கப்படத்தக்கதாகும். இவ்விரு சமூகக்...

காங்கிரஸ்காரர்களின் துரோகம் 0

காங்கிரஸ்காரர்களின் துரோகம்

தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்த சம்மந்தமாக சர்க்காரார் ரயில்வே அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு தொழிலாளர்களை இம்சைப்படுத்தி வருவதைப் பற்றி சென்னை சட்டசபையில் விவாதிப்பதற்காக மற்ற விஷயங்களை ஒத்திப்போட வேண்டுமென்று ஒரு அவசரப் பிரேரேபணைக் கொண்டு வரப்போவதாக கோயம்புத்தூர் திரு.சி.எ°. இரத்தினசபாபதி முதலியார் பத்திரிகைகளுக்கு தெரிவித்திருந்தது யாவரும் அறிந்த விஷயமேயாகும். இதை அறிந்த காங்கிரஸ்காரர்கள் என்னும் அரசியல் பிழைப்புக் கூட்டத்தார்கள் திரு.முதலியார் இந்தப்பிரேரேபணையைக் கொண்டு வந்து பேசுவார்களேயானால் பார்ப்பன சூழ்ச்சியும் தேசீய புரட்டும் காங்கிரஸ் குட்டும் வெளியாகிவிடுமே என்பதாகக் கருதி திரு. சத்தியமூர்த்தி மூலம் திரு. முதலியாரால் இப் பிரேரேபணை பிரேரேபிக்கக் குறிப்பிட்டிருந்த காலத்திற்கு முன்னதாகவே தாங்கள் பிரேரேபிக்கப் போவதாக நோட்டீஸ் கொடுத்தார்கள். இதை உண்மை என்று நம்பிய முதலியாரும் மற்றும் தொழிலாள அனுதாபிகளும் அதில் கலந்து கொள்ளத் தீர்மானித்துத் தங்கள் பிரேரேபிப்பதற்கென்று தனிச்சமயம் கேட்காமல் இருந்து விட்டார்கள். இந்த நிலையில் திரு. சத்தியமூர்த்தி அவர்கள் பொறுப்பில்லாமல் தாங்கள் சூழ்ச்சிக்கு ஏற்றவிதமாய்...

நாம் செய்த “துரோகம்” 0

நாம் செய்த “துரோகம்”

சுயமரியாதை இயக்கத்தின் பலனாய், அரசியலின் பேரால் வாழ்ந்து வந்தவர்களுக்கெல்லாம் இந்தச் சமயம் நமது நாட்டில் சகல கவுரவங்களும் செல்வாக்குகளும் அடியோடு போய்விட்டதுடன், இது சமயம் அரசியல் என்பதில் சம்மந்தப்பட்டிருக்கின்றவர்கள் என்பவர்களெல்லோரும் சுயநலக்காரரும் வயிற்றுப் பிழைப்புக்காரரும் சிறிதும் நாணயமும் யோக்கியதையும் அற்றவர்கள் என்ற சங்கதியும் பாமரமக்கள் யாவருக்கும் தெரிந்துவிடவே அரசியல் பிழைப்புக்காரர்களின் ஆர்ப்பாட்டங்கள் கொஞ்ச நாளாகவே நமது நாட்டில் தலைகாட்ட யோக்கியதை இல்லாமல் போய்விட்டது என்பது யாவரும் அறிந்ததேயாகும். உதாரணமாக இது சமயம் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் யார் என்பதையும் அரசியல் பிரதிநிதிகள் யார் என்பதையும் அவர்களுக்கு நாட்டில் உள்ள யோக்கியதை என்ன என்பதையும் கவனித்தால் இவ்விஷயம் யாருக்கும் சுலபத்தில் விளங்காமல் போகாது. தவிர, இப்பொழுது எங்கு அரசியல் மீட்டிங்கு போட்டாலும் எங்கு அரசியல் மகாநாடு கூட்டினாலும் அங்கு தலைவர்களும் பேசுபவர்களும் அபிப்பிராயம் கொடுப்பவர்களும் யார் என்று பார்ப்போமேயானால் திருவாளர்கள் குழந்தை, அமீத்கான், பஷீர் அஹம்மது, குப்புசாமி முதலியார், அண்ணாமலை பிள்ளை முதலியோர்கள்...

இந்து கடவுள்கள் 0

இந்து கடவுள்கள்

-சித்திரபுத்திரன் 2.சுப்பிரமணியனது பிறப்பு விஸ்வாமித்திரன் சுப்ரமணியனது பிறப்பைப் பற்றி ராமனுக்குக் கூறியது:- 1. சிவபெருமான் உமாதேவியைத் திருக்கலியாணம் செய்து, மோகங்கொண்டு அவளுடன் 100 தேவ வருஷம் (மனித வருஷத்தில் பல யுகம்) புணர்ந்து கொண்டிருந்தனர். அவ்வளவு காலம் கழிந்தும் பார்வதி கர்ப்பம் அடையவில்லை. அது கண்டு நான்முகன் முதலிய தேவர்கள் சிவனிடத்தில் வந்து, “இவ்வளவு காலம் புணர்ந்த உம்முடைய தேஜஸ்ஸாகிய விந்து வெளிப்படுமானால் உலகம் பொறுக்கமாட்டாது. உம்முடைய விந்துவை தயவு செய்து விடாமல் நிறுத்திக் கொள்ளும்” என்று வேண்டவும், அதற்கிசைந்த சிவன் தனது விந்துவை மற்றபடி யார் தரிப்பது? எங்கு விடுவது? என்று கேட்க, தேவர்கள் பூமியில் விடும்படி சொல்ல, அந்தப்படியே சிவன் பூமியின் மீது விட்டுவிட்டார். பூமி அதை தாங்க மாட்டாமல் பூமி முழுதும் கொதிகொண்டு எழ, தேவர்கள் அந்த வீரியத்தை பூமி தரிக்க முடியாது எனக் கருதி அக்கினியிடம் சென்று வேண்ட, அக்கினி வாயுவின் உதவியால் அவ்வீரியத்திற்குள் பிரவேசித்து...

“விஸ்வநேசன்” 0

“விஸ்வநேசன்”

திருவாளர்கள் கா. சுப்பண்ண ஆச்சாரியார் அவர்களும், ந. நல்லய்ய ஆச்சாரியார் அவர்களும் ஈரோட்டிலிருந்து ‘விஸ்வநேசன்’ என்பதாக ஒரு புதிய வாராந்திர பத்திரிகை நடத்துவதாக ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிகின்றது. அது சீக்கிரத்தில் வெளியாகலாமென்றும் நினைக்கின்றோம். அப்பத்திரிகையானது ஏனைய சில சமூகப் பத்திரிகைகள் போலவும் அரசியல் புரட்டுப் பத்திரிகைகள் போலவும் வயிற்றுப் பிழைப்புப் பத்திரிகை கள் போலவும் ‘அரைத்த மாவை அரைத்துக் கொண்டே இருக்கின்றது’ என்பது போல் ஒவ்வொரு விஷயத்திலும் பார்ப்பனர்களையும் அவர்களது சமய பழக்க வழக்கங்களையும் பின்பற்றிக் கொண்டு கண்மூடித்தனமாய் நடப்பதாக இல்லாமல், சுதந்திரத்துடன் தனது சொந்த அறிவுக்கு மரியாதை கொடுத்து தற்காலம் நமது மக்களுக்கு வேண்டியதான வழிகளில் செல்லும் என்பதாக உறுதிகொண்டு அதை வரவேற்கின்றோம். அன்றியும் அதன் பத்திராதிபராக இருக்கப்போகும் திரு. கா. சுப்பண்ண ஆச்சாரியாரவர்கள் ஒத்துழையாமை காலத்தில் ஈரோட்டில் சர்க்காரின் அக்கிரம உத்திரவை மீறி சிறை சென்றவர். இப்போதும் தொழிலாளர் விஷயமாகவும் ஈரோட்டில் சர்க்காரால் போடப்பட்ட அநியாய உத்தரவை...

பஹிஷ்காரப் புரட்டும் சர்வகக்ஷி மகாநாட்டுப் புரட்டும் 0

பஹிஷ்காரப் புரட்டும் சர்வகக்ஷி மகாநாட்டுப் புரட்டும்

சர்வகக்ஷியாரும் சேர்ந்து ஒரு சுயராஜ்யதிட்டம் போட்டுவிட்டதாகவும் அதை எல்லோரும் சேர்ந்து ஒப்புக் கொண்டதாகவும் இனி பொது ஜனங்களும் சர்க்காரும் அதை ஒப்புக் கொள்ள வேண்டியதுதான் பாக்கி யென்றும் அரசியல் வயிற்றுப்பிழைப்புப் பத்திரிகைகள் ஊளையிடுகின்றன. இது ஒரு அன்னக் காவடி, “இராஜா மகளுக்கும் எனக்கும் கல்யாணம் தீர்மானம் ஆகிவிட்டது. ஆனால் ராஜாவும் அவனது மகளும் சம்மதம் கொடுக்க வேண்டியது மாத்திரம்தான் பாக்கியாய் இருக்கின்றது” என்று சொல்லிக் கொண்டது போலிருக்கிறது. சர்வ கக்ஷி மகாநாடு என்பது என்ன? அதில் யார் யார் இருந்து “திட்டம்” செய்தார்கள்? அவர்களுக்கும் நாட்டின் ஏழை மக்களுக்கும் ஏதாவது சம்மந்தமுண்டா? இந்தியாவில் உள்ள எந்த ஜாதியாருக்கு அல்லது எந்த மதக்காரருக்கு அல்லது எந்த தொழில் காரர்களுக்கு இவர்கள் சம்மந்தப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடும்? மகமதிய சபையார்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? கிறிஸ்தவ சபையார்கள் ஒப்புக் கொள்கின்றார்களா? இந்து சபையார் ஒப்புக் கொள் கிறார்களா? பார்ப்பன சபையார் ஒப்புக் கொள்ளுகின்றார்களா? பார்ப்பன ரல்லாதார்...

வடநாட்டுக் கடவுள்கள் 0

வடநாட்டுக் கடவுள்கள்

கடவுள்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக்கொவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமாகவும் இருந்து வருகின்றன. சாதாரணமாய் இந்தியாவிற்கே பிரதான “புண்ணிய பூமிகளான” காசி, ஜகநாதம், பண்டரிபுரம் முதலிய nக்ஷத்திரங்களிலுள்ள சாமி கோவில்களில் யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று சாமியைத் தொட்டு பூசை செய்யவும், கட்டி அழுது தனது குறைகளைச் சொல்லிக் கொள்ளவும் உரிமைபெற்ற சாமிகளாகவே இருக்கின்றன. ஆனால் தென்னாட்டிலோ அதே சாமிகளைத் தொடாத போதிலும் கிட்டப் போய் கும்பிட்டாலும் அல்லது சிலர் கோயிலுக்குள்ளே புகுந்துவிட்டாலும் உடனே அச்சாமிகள் செத்துப்போய்விடுகின்றன. ஆனால் பார்ப்பானுக்குப் பணமும் சோறும் கொடுத்தால் மறுபடியும் அவைகள் உயிர்பெற்று விடுகின்றன. எனவே நமது தென்னாட்டுச் சாமிகளின் சக்திகள் கூட நமது பார்ப்பனர்களிடம் எவ்வளவு அடிமைப்பட்டுக் கிடக்கின்றன என்பது கவனிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. இப்போது மத்திய மாகாணத்தில் வார்தாவென்னுமிடத்தில் உள்ள சாமிகள் காசி முதலியவைகளிலுள்ள சாமிகளைப் போலவே தங்கள் சக்தி யை பிராமணனிடமிருந்து விடுதலை செய்து கொண்டதாகத் தெரியவரு கின்றது. அதாவது,...

திரு. வேதாசலம் அவர்களின் கடிதம் 0

திரு. வேதாசலம் அவர்களின் கடிதம்

பல்லாவரம் திரு. வேதாசலம் அவர்கள் திரு.ஈ.வெ. இராமசாமி நாயக்கருக்கு திரு. விஸ்வநாதம் பிள்ளை அவர்கள் மூலம் எழுதிய கடிதம்:- அன்புள்ள ஐயா, நலம், தங்கள் நலத்தைத் தெரிவித்தல் வேண்டும். என்னைப் பற்றிய ஒரு குறிப்பு ‘குடி அரசு’ பத்திரிகையில் வெளிவந்திருப்பதாக திருச்சி திரு. விஸ்வநாத பிள்ளை வாயிலாக இன்று அறிந்தேன். சென்னை குகானந்த நிலையத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி முறையைப்பற்றித் ‘திராவிடன்’ ‘தமிழ் நாடு’ பத்திரிகைகளிற் போந்துள்ள சிலவுரைகளை நம்பி, அக்குறிப்புத் தங்களால் வரையப்பட்டதென அறிகின்றேன். தங்களுக்காவது, தங்கள் இயக் கத்தைச் சார்ந்த அன்பர்கட்காவது எவ்வகையான தீங்கும் செய்ய அல்லது செய்விக்க வேண்டுமென்று யான் எண்ணியதுமில்லை, யாண்டும் சொல்லி யதுமில்லை. தாங்கள் என்னை வேறாக நினைத்து என்மீது வருந்துதல் வேண் டாம். என்றாலும், கடவுளைப்பற்றியும் அடியார்களைப் பற்றியும் தாங்கள் கொண்டுள்ள கோட்பாடுகளில் மட்டும் யான் கருத்து உடன்பாடுடை யேன்னல்லேன். பத்திரிகைகளில் வெளிவந்த சிலவற்றைப் பார்த்து தாங்கள் வருந்தியிருந்தால், அவ்வருத்தத்தை தாங்கள் அன்பு...

திரு. வேதாசலம் 0

திரு. வேதாசலம்

திரு. வேதாசலம் அவர்கள் சென்னை பாலசுப்பரமணிய பக்த சபை ஆண்டு விழாவில் தலைமை வகித்து நிகழ்த்திய தலைமைப் பேருரையில் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும் அதன் கொள்கைகளைப் பற்றியும் திரு.ஈ.வெ. ராமசாமி நாயக்கரைப் பற்றியும் வசை மொழிகளும் கடுமொழிகளும் மொழிந்ததாகவும் அதுபற்றி அதுசமயம் அங்கு வரநேர்ந்த திருவாளர்கள் கண்ணப்பர், தண்டபாணி பிள்ளை, ராமநாதன் ஆகியோர் களுக்கும் திரு. வேதாசலம் அவர்களுக்கும் வாக்குவாதப் போர் நடந்ததாகவும் “திராவிடன்” முதலிய பத்திரிகைகளில் காணப்பட்டதோடு பல நிரூபர்களும் நமக்கு எழுதி வந்தார்கள். ஆகிலும் திரு. வேதாசலம் அவர்கள் தமிழ்நாட்டில் செல்வாக்கும் மதிப்பும் பெற்ற பண்டிதர் என்பதாக நாம் கருதி வந்ததால் பத்திரிகைகளிலும் நிரூபங்களிலும் கண்டவற்றிற்கு சமாதானம் எழுதுவது என்பது நமக்கு சற்று சங்கடமாகவே இருந்தது. ஏனெனில், முதலாவது, இவ்வளவு மோசமாக அவர் பேசியிருப்பாரா என்பது. இரண்டாவது, அப்படியே பேசி இருக்கலாமென்றாலும் அது அவர் மனதாரப் பேசியதாக இருக்காது என்பதும், மற்றபடி ஏதோ சமய சந்தர்ப்பங்கள் இம்மாதிரி பேச...

இதைவிட வேறு சாக்ஷி வேண்டுமா? 0

இதைவிட வேறு சாக்ஷி வேண்டுமா?

தென்நாட்டு பார்ப்பனர்கள் ஒத்துழையாமையை ஒழித்து திரு. காந்தியையும் மூலையில் உட்கார வைத்துவிட்டு ஒத்துழையாமையில் ஜெயிலுக்குப் போனவர்களுடையவும் திரு. காந்தியவர்களுடையவும் செல்வாக்கையும் உபயோகப்படுத்திக்கொண்டும், அவர்களுடைய பெயர் களைச் சொல்லிக் கொண்டும் ஒன்று இரண்டு வருஷம் சட்டசபைத் தேர்தல் களிலும் ஜில்லா, தாலூக்கா முனிசிபாலிட்டி முதலிய ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்களிலும் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாகவும் தங்கள் ஆதிக்கத் திற்கு அனுகூலமாகவும் எவ்வளவு தூரம் தலைக்கொழுப்புடன் காரியங்கள் செய்யலாமோ அவ்வளவும் செய்தார்கள். இதற்கு சில பார்ப்பனரல்லாத வயிற்றுச் சோற்றுக் கூலிகளும் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து தங்கள் மானத்தை விற்று பார்ப்பனருக்கு எவ்வளவு தூரம் அடிமையாய் இருந்து கொண்டு பார்ப்பனரால்லாதாருக்கு எவ்வளவு இடையூறு செய்யக் கூடுமோ அவ்வளவும் செய்தார்கள். அந்த சமயத்தில் “குடி அரசு” ஒன்றுதான் தைரியமாய் தனி வீரனாக நின்று இந்தப் புரட்டுகளை எவ்வளவு தூரம் வெளியாக்கி அதனால் ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு தூரம் ஒழிக்க லாமோ அவ்வளவு தூரம் ஒழிக்க முன் வந்தது. இந்தக் காரணத்தால்...

பார்ப்பனீயம் 0

பார்ப்பனீயம்

சென்ற இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான “குடி அரசு” அதாவது 5.8.28 ² மலரில் பார்ப்பனீயம் என்பது பற்றி எழுதிய தலையங்கத்தில், சென்னை திருவல்லிக்கேணி உத்திராதி மடத்தில் நடந்த வைதீக பார்ப்பனர் கூட்டத்தில் தலைமை வகித்த திருவாளர் வி.வி. சீனிவாசய்யங்கார் அவர்களின் அக்கிராசன உபன்யாசத்தைப் பற்றி விரித்து விட்டு உபன்யாசகரான திரு. என். சீனிவாசாச்சாரியாரின் உபன்யாசத்தைப் பற்றி பின்னர் எழுதுவதாக எழுதியிருந்தோம். அந்தப்படி இவ்வாரம் அதைப்பற்றி எழுதுகின்றோம். திரு. சீனிவாசாச்சாரியார் அவர்கள் தமது சொற்பொழிவில் சொல்லியிருக்கும் விஷயங்களைச் சுருக்கி ³ முதல் வியாசத்திலேயே வெளியிட்டி ருக்கின்றோம். அதில் திரு. ஆச்சாரியார் “பிராமண சங்கம் பல வருஷங்களாக இந்த நாட்டில் வேலை செய்து வருகின்றது” என்றும், “எவன் தன் மனதை அடக்கி ஆண்டு கொண்டு யோக்கியனாக இருக்கின்றானோ அவனே பிராமணன்” என்றும் சொல்லியிருக்கின்றார். அப்படியானால் இப்போது பிராமணர் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் எல்லாம் தம் மனதை அடக்கி ஆண்டு கொண்டு...

தொழிலாளர் தூது 0

தொழிலாளர் தூது

பார்ப்பனரல்லாதார் தலைவர்களாகிய திருவாளர்கள் கோவை சட்டசபை அங்கத்தினரான ராவ் பகதூர் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் அவர்களும், மதுரை சட்டசபை அங்கத்தினர் திருவாளர் பி.டி. இராஜன் அவர்களும், சென்னை திருவாளர் ஏ. ராமசாமி முதலியார் அவர்களும் தென் இந்திய ரயில்வே தொழிலாளர்கள் நெருக்கடி விஷயமாக சென்னை கவர்னர் துரை அவர்களை பேட்டி கண்டு பேச வேண்டுமென்று தெரியப்படுத்திக் கொண்டதற்கேற்ப கவர்னர் துரையவர்களும் சம்மதித்து பேட்டி கொடுத்துப் பேசினார்கள். தூது சென்ற கனவான்கள் மூவரும், தொழிலாளர்களை ரயில்வேக் காரர்கள் கொடுமைப்படுத்திய விஷயங்களையும், சர்க்கார் அதிகாரிகள் அடக்கு முறை மூலம் தொழிலாளர்களுக்குச் செய்த அநீதிகளையும் பற்றி விரிவாய் எடுத்துச் சொன்னதின் பேரில் கவர்னர் துரையவர்கள் யாவற்றை யும் பொறுமையாய் வெகு அனுதாபத்துடன் கேட்டு இதுவிஷயத்தில் தம்மால் கூடியதைச் செய்வதாக வாக்களித்ததாகத் தெரிய வருகின்றது. பொதுவாக தொழிலாளர் தலைவர்களில் சிலர் மீதும் தொழிலாளர்களின் அனுதாபிகள் பலர் மீதும் ஸ்தல அதிகாரிகள் 144 உத்திரவு பிரயோகித்து அடக்கினதைப் பற்றியும்...

இந்து கடவுள்கள் 0

இந்து கடவுள்கள்

– சித்திரபுத்திரன் 1. பிள்ளையார் இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண்ணிக்கை “எண்ணித் தொலையாது. ஏட்டிலடங்காது” என்பதுபோல் எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டிருப்பதும் அத்தனை கடவுள்களுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை, பாட்டு முதலியதுகள் ஏற்படுத்தி இருப்பவை அவைகளுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக்கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெரும்படியான நேரங் களும், பல கோடி ரூபாய் பெரும்படியான அறிவுகளும் வெகுகாலமாய் பாழாய்க்கொண்டு வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்கக்கூடிய காரியமல்ல. இக்கடவுள்களில் முதன்மை பெற்றதும், மக்களிடம் மிகவும் செல் வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்பவர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக்கொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனைக் கணபதி என்றும் விநாயகர் என்றும் விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு. நிற்க, இந்தப் பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய்...

திரு. வேதாசலம் 0

திரு. வேதாசலம்

திரு. வேதாசலம் அவர்களின் சென்னை ராயபேட்டை குகாநந்த நிலைய ஆண்டு விழா வைபவத்தின் அக்கிராசனப் பிரசங்கத்திலும் திருவாளர் தண்டபாணிபிள்ளை, கண்ணப்பர், ராமனாதன் ஆகியோர்களின் வாதங்களின் போதும் பேசிய விஷயங்களைப்பற்றி வெளியான “தமிழ்நாடு” “திராவிடன்” பத்திரிகையில் கண்ட விஷயங்களுக்கு திரு வேதாசலம் அவர்களின் சமாதானமோ மறுப்போ ஒரு வாரத்தில் வராத பக்ஷத்தில் நாம் அதன் ஆராய்ச்சியை தெரிவிப்பதாக எழுதியிருந்தோம், அந்தப்படி இதுவரை அவரால் யாதொரு மறுப்போ சமாதானமோ இதுவரை வராததால் திரு. வேதாசலம் என்னும் தலைப்பில் அவற்றை ஆராய்ந்து எழுதி வருவோம் என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம். இந்த நிலையில் மற்றவர்கள் எழுதும் வியாசங்களுக்கு போதிய இடமளிக்க முடியாமைக்கும் வருந்துகின்றோம். குடி அரசு – அறிவிப்பு – 19.08.1928

சுயமரியாதை போதனாமுறைப் பாடசாலை 0

சுயமரியாதை போதனாமுறைப் பாடசாலை

ஈரோட்டில் சுயமரியாதைப் பிரசாரத்திற்கு போதனாமுறைப் பாட சாலை ஏற்படுத்துவதாய் ‘குடி அரசி’லும் ‘திராவிடனி’லும் வெளியிட்டிருந்த படி நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வந்திருப்பவைகளில் சுமார் 20 பேர்களுக்கு மட்டும் சில நிபந்தனைகள் கண்டு தனித்தனியாக கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவர்கள் தயவு செய்து உடனே அதில் கண்ட விபரங்களுக்கு பதில் எழுதிவிட்டு இவிடமிருந்து வரும் படி கடிதம் வந்தால் ஆவணி மாதம் 15 ம் தேதி வாக்கில் இவிடம் இருக்கத் தயாராயிருக்க வேண்டும். படுக்கை, புராணம், சாஸ்திரம் என்பதான புஸ்த கங்கள் முதலிய அவரவர்களுக்கு வேண்டிய சவுகரியமான சாமான்களுடன் வரவேண்டியிருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். குடி அரசு – அறிவிப்பு – 19.08.1928

“கோவில் பிரவேசம்” 0

“கோவில் பிரவேசம்”

தீண்டாதார் என்பவர்களை கோவிலுக்குள் விடவேண்டுமென்பதும், பார்ப்பனனுக்கு வேறு இடம் நமக்கு வேறு இடம் என்று இருக்கக் கூடாது என்பதும், உள்ளே போய் சுவாமி தெரிசனம் செய்வதாலோ தொட்டுக் கும்பிடுவதாலோ பக்தி அதிகமாகுமென்றோ, பலன் அதிகமென்றோ கருதி அல்ல என்பதை பொது ஜனங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.அக் கோயில்களின் நிபந்தனைகள் மக்கள் சுயமரியாதைக்கு இடை யூறாகவும் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கு ஆதாரமாகவும் இருப்பதால் இவை களுக்கு ஆதாரமான சகலத்தையும் ஒழிக்க வேண்டுமென்றே கருதி இதை செய்யத் தூண்டுகின்றோமேயல்லாது சாமி என்று ஒன்று இருந்தால் அங்கு தான் இருக்கக்கூடுமென்றோ, அந்தக் கல்லுச்சாமிக்கு பக்கத்தில் போவதால் அதிக லாபம் கிடைக்குமென்றோ நினைத்திருக்கும் படியான அவ்வளவு முட்டாள்தனத்துடன் நாம் கோவிலில் எல்லோருக்கும் சம உரிமை கேட்கவில்லை. குடி அரசு – செய்தி விளக்கம் – 19.08.1928

இந்துமத தத்துவம் 0

இந்துமத தத்துவம்

திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரண வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதைப்பற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன்னதில் அவர் தமக்குத் தெரியாது என்று சொல்லி விட்டாராம். மிஸ். மேயோ, இந்திய மக்கள் கல்வியறிவில்லாமல் இருப்பதற்கு பார்ப்பனர்களே காரணம் என்று தமது “இந்தியத் தாய்” என்ற புத்தகத்தில் எழுதியதற்கு “தேசீயத் தலைவர்களான” திரு. சத்தியமூர்த்தி பனக்கால் ராஜாவை சமூகத் துரோகி, தேசத்தைக் காட்டிக் கொடுத்த தேசத்துரோகி என்ற பொருள்படக் கூறினார். மற்றொரு “தேசீயத் தலைவர்” மிஸ். மேயோவை “குப்பைக்காரி” என்று கூறினார். இவர்கள் திருப்பதி பள்ளிக்கூட நடவடிக்கைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று கேட்கின்றோம். சமஸ்கிருதம், தேவபாஷை, பொதுபாஷை, மதபாஷை, அறிவு பாஷை என்று சொல்லி அதற்கு பார்ப்பனரல்லாதார் பணத்தில் பள்ளிக்கூடம் ஏற்படுத்துவதும், அதில் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள் படிக்க ஆசைப்பட்டால் மறுப்பதுமான அயோக்கியத்தனத்தை ஒழிக்கவோ கண்டிக்கவோ...

தொழிலாளர் வேலை நிறுத்தம் 0

தொழிலாளர் வேலை நிறுத்தம்

தென் இந்திய ரயில்வெ தொழிலாளர் வேலை நிறுத்தமானது தொழிலாளர்களுக்கு பலன் கொடுக்காமல் போனதாக சிலர் சொல்வதானாலும் அந்த வேலை நிறுத்தம் பல “தலைவர்”களுக்கும் பத்திரிகைக்காரர்களுக்கும் கொழுத்த பலனைக் கொடுத்திருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது என்றே சொல்லுகின்றோம். என்னவென்றால் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக பல நாளாகவே எச்சரிக்கை செய்தும் ரயில்வே அதிகாரி கள் இணங்காமல் பிடிவாதமாயிருப்பதற்கும், வேலைநிறுத்தம் ஏற்பட்ட பிறகும் வேலைநிறுத்தத்திற்கு கேடு நேரிடுவதற்கும் உண்மையற்ற சமாசாரங் களை வெளிப்படுத்தியும், தொழிலாளர்கள் மீது பழிசுமத்தியும் எழுதிவந்த தலைவர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் நல்ல ஆதாயம் ஏற்பட்டதென்றே சொல்ல வேண்டும். ரயில்வே அதிகாரிகளும் தங்கள் அனுதாபிகளுடனும் சில பத்திரிகைக்காரர்களுடனும், சில தலைவர்களுடனும் இது விஷயமாய் தக்க முன்னேற்பாடுகள் செய்து கொண்டுதான் வேலை நிறுத்தத்தைச் செய்து தீர வேண்டிய அவசியத்தைக் கொண்டு வந்து விட்டார்களே ஒழிய வேறில்லை. இந்த உண்மையானது ஏஜண்டின் முரட்டுத்தனத்தாலேயே ஒருவாறு ருஜுவாகாமல் போகாது. அதாவது திருவாளர் கோவை சி.எஸ். ரத்தின சபாபதி...

மதரா° கவர்ன்மெண்டு ஆபீசும் பார்ப்பனரும் 0

மதரா° கவர்ன்மெண்டு ஆபீசும் பார்ப்பனரும்

1921´ ஆக°ட் மாதம் 5 ² சென்னை சட்டசபையில் கனம் திவான் பகதூர் ஓ. தணிகாசலம் செட்டியார் கொண்டு வந்து பா° செய்த தீர்மானங் களுள் முக்கியமானது சென்னை கோட்டைக்குள் கொரடுபோட்டுக் கொண்டிருக்கிற பிராமணர்களுடைய கோட்டையை தகர்த்து, ³ கோட்டை யாகிய கவர்மெண்டு ஆபீசாகிய கோட்டைக்குள் பிராமணரல்லாதாரும் சூப்பிரண்டுகளாகவும் உயர்தர கிளார்க்குகளாகவும் செய்விக்க வேண்டு மென்பதும், அதுவும் மூன்று வருஷ காலத்திற்குள் நூற்றுக்கு ஐம்பதுக்கு குறையாமல் பிராமணரல்லாதாரை ³ வேலைகளில் நியமிக்க வேண்டு மென்பதும், அந்த கவர்ன்மெண்டு ஆபீசில் இருக்கும் பிராமணருக்குப் பிரண்டுகள், கிளர்க்குகள் வெளிப்படுத்தப்படவேண்டு மென்பதுமான இந்த தீர்மானத்துக்கு என்ன மதிப்பு தந்தனர் கவர்ன்மெண்டார்? இந்த நிலைக்கு யார் உத்தரவாதம்? பிராமண உத்தம சீலர்களும். தீர்மானத்தை நிறைவேற்றக் கூடிய மனத்திடமில்லாத மினி°டர்களும் அல்லவா? இதில் அதிக அக்கிரம முடையது. சர்.சி.பி. ராமசாமி அய்யருடைய லா டிபார்ட்டுமெண்டு ஒரு பிராமண சூப்பிரண்டு கூட கவர்மெண்டு ஆபீசை விட்டு வெளிப்படுத்தவே இல்லை. பிராமணர்களுக்கே...

திரு. கண்ணப்பர் 0

திரு. கண்ணப்பர்

“திராவிடன்” பத்திராதிபர் திரு. கண்ணப்பர் அவர்கள் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு அனுதாபம் காட்டியது பற்றி கைது செய்யப்பட்ட விபரம் முன்னமேயே தெரிவித்திருக்கின்றோம். திரு. கண்ணப்பர், பார்ப்பனரல்லாதார் மக்களின் நலத்திற்கு என்று இத்தமிழ்நாட்டில் திருவாளர் நாயர் பெருமானும், தியாகராய வள்ளலும் தோற்றுவித்த “தென் இந்தியர் நல உரிமைச் சங்கம்” என்னும் பார்ப்பனரல்லாதார் சங்கம் துவக்கப்பட்டது முதல் சுயநலம் கருதாது தொண்டாற்றி வருபவர். அச்சங்கத்தில் உழைத்து வந்த மக்களில் திரு. கண்ணப்பர் போன்று தன்னலம் கருதாமலும் உழைத்ததற்காக கூலி கேட்காமலும் உழைத்தவர்களைக் காண்பது மிகவும் கஷ்டமான காரியம் என்பது நாம் சொல்லாமலே விளங்கும். திரு. கண்ணப்பர் வெலம நாயுடு வகுப்பைச் சேர்ந்தவராயினும் அவருக்கு ஜாதிமத பேதமோ மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு என்கின்ற உணர்ச்சியோ ஒரு சிறிதுமில்லாத சமரசவாதியாவார். அவருக்கு இன்றைய வயது முப்பத்துஒன்றேயாகும். உறுதியும் தைரியமும் பெற்ற வீரர். தமிழிலும், ஆங்கிலத்திலும் பயிற்சியுள்ளவர். அவரது 22, 23 வது வயதிலே பிரசாரத்தில் புகுந்தவர்....

பெண்கள் உண்மை விடுதலையடைய வேண்டுமானால்  “ஆண்மை” அழிய வேண்டும் 0

பெண்கள் உண்மை விடுதலையடைய வேண்டுமானால் “ஆண்மை” அழிய வேண்டும்

பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அனேக இடங்களில், அனேக சங்கங்களும், முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக் கொண்டு மிகப் பாசாங்கு செய்து வருகின்றார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்கமுடியாது. தற்காலம் பெண்கள் விடுதலைக்காக பெண்மக்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல் மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாடுகளை பலப்படுத்திக்கொண்டே போகும் என்பது நமது அபிப் பிராயம். எதுபோலவென்றால், இந்திய பொதுமக்கள் விடுதலைக்கு வெள் ளைக்காரரும் பார்ப்பனரும் பாடுபடுவதாக ஏற்பாடுகள் நடந்து வருவதின் பலனாக எப்படி நாளுக்கு நாள் இந்திய மக்களுக்கு அடிமைத்தனம் விடுதலை பெற முடியாதபடி பலப்பட்டு என்றென்றைக்கும் கட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறதோ அதுபோலவும் சமூகசீர்திருத்தம், சமத்துவம் என்பதாக வேஷம் போட்டுக் கொண்டு பார்ப்பனர்களும் புராணக்காரர்களும் சீர் திருத்தத்தில் பிரவேசித்து வருவதன் பலனாக...

பார்ப்பனீயம் 0

பார்ப்பனீயம்

பார்ப்பனப் பத்திரிகைகளும், பார்ப்பன உத்தியோகஸ்தர்களும் தங்கள் ஆதிக்கத்திற்கு ஊனம் வராமல் காப்பதில் கவலை எடுத்துக் கொண்டு அதற்காக எந்ததெந்த வகையில் மக்களை ஏமாற்றலாமோ அந்தந்த வகை யில் எல்லாம் இன்னும் துணிவுடன் வேலை செய்து கொண்டேதான் இருக்கி றார்கள். ஆதலால் இனி அதைப் பற்றியும் சற்று கவனம் செலுத்துவோம். என்னவெனில், உதாரணமாக, சென்றவாரத்தில் சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள உத்திராதி மடம் என்கின்ற ஒரு வைணவப் பார்ப்பன மடத்தில் வைத்துப் “பிராமணர்கள் கூட்டம்” என்பதாக ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் ஐகோர்ட் மாஜி ஜட்ஜியும் இப்போது வக்கீலுமான திரு. வி.வி. சீனிவாசய்யங்கார் அக்கிராசனத்தின் கீழ் மற்றொரு ஐக்கோர்ட்டு வக்கீல் என். சீனிவாசாச்சாரியார் என்பவரால் “பிராமணர்களின் தற்கால நிலைமை” என்பது பற்றி ஒரு உபன்யாசம் செய்யப்பட்டிருக்கின்றது. அது வைதீகப் பார்ப்பனக் கூட்டம் என்றாலும் எல்லா வகையான பார்ப்பனர்க ளுமே அக் கூட்டத்தில் கூடி இருந்திருக்கின்றார்கள். அந்தச் சமயத்தில் அக்கிராசனரும் உபன்யாசகரும் ஆகிய இருவர்களும்...

ஒரு ஆபீசருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷணை 0

ஒரு ஆபீசருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷணை

– சித்திரபுத்திரன் குடியானவன் : என்ன சார், தங்களிடம் தனித்து சற்று நேரம் பேச வேண்டும் என்கின்ற எண்ணம். ஏனென்றால் நாம் இருவரும் வெகு நாளைய சினேகமல்லவா? ஆதலால் சில விஷயங்களைத் தெரிவிக்க வேண்டும் என்கின்ற ஆசை எனக்கு உண்டு. ஆபீசர் : ஆ! ஆ!! பேஷா பேசலாம். இப்பொழுதே வாருங்கள். என்ன விசேஷம்! குடியானவன் : விசேஷம் ஒன்றும் இல்லை; தாங்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. சிநேகித விஷயத்தில் மனம் பொறுக்கவில்லை. ஆதலால் தங்களிடம் சொல்லித் தீர வேண்டும் என்கின்ற கவலை கொண்டு விட்டேன். ஆபீசர் : என்ன இவ்வளவு யோசிக்கின்றீர்கள். கோபம் என்ன வந்தது? தாராளமாய்ச் சொல்லுங்கள். என்ன விசேஷம். குடியானவன் : கொஞ்சகாலமாகத் தங்களுடைய சம்சாரத்தின் நடத்தை சரியாய் இல்லை. என்னேரம் பார்த்தாலும் நம்ம வீட்டுக்கு அடுத்த வீட்டுத் தையல்காரனிடமே சாகவாசம் வைத்துக் கொண்டிருக்கின்றதாகத் தெரிகின்றது. சில சமயங்களில் அந்த தையல்காரன் அந்த அம்மாளை அடிக்கின்றதாகவும் தெரிய வருகின்றது....

ஈரோட்டில் தொழிலாளர் மீட்டிங்குகள் 0

ஈரோட்டில் தொழிலாளர் மீட்டிங்குகள்

ஈரோட்டில் ரயில்வே ஷ்டேஷனுக்கு அருகாமையில் திரு. வெங்கட்ட நாயக்கர் சத்திரத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அக்கிராசனத்தின் கீழ் ஜூலை 21-ல் ஒரு தொழிலாளர்கள் வேலை நிறுத்த மீட்டிங்கு கூடியது. மீட்டிங்குக்கு ஏராளமான ஜனங்களும் தொழிலாளர்களும் கூடியிருந் தார்கள். திருவாளர்கள் தேவ அன்பும், முத்துகிருஷ்ணன், அரூர் வேடி செட்டியார், மண்டி சி. குமாரசாமி கவுண்டர் முதலியோர்கள் தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு அனுதாபம் காட்டி பேசினார்கள். மறுநாள் கோணைவாய்க்கால் டேராகாட்டில் திரு. நாயக்கர் அக்கிராச னத்தில் ஒரு மீட்டிங்கு கூடியது. அதற்கும் ஏராளமான ஜனங்கள் வந்திருந்தார்கள். அங்கு இரண்டு மூன்று நாளாக லைன்களில் நடந்த விஷயங்களை எடுத்துச்சொல்லி சத்தியாக் கிரக விஷயமாய் பேசப்பட்டது. மறுபடியும் 25-தேதி புதன்கிழமை கடைவீதி அலிசவுக்கில் ‘தாஜுல் இஸ்லாம்’ பத்திராதிபர் ஜனாப் நைனாமுகம்மது சாயபு அவர்கள் தலைமை யில் ஒரு மீட்டிங்கு கூட்டப்பட்டது. தொழிலாளர்களும் திருவாளர் ஆ.ஹ.ஈஸ்வரரும் மற்றும் சில நண்பர் களும் பேசி சில தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். 27-7-28 ந்...

பல்லாவரத்துப் பண்டிதர் 0

பல்லாவரத்துப் பண்டிதர்

திரு. வேதாசலம் அவர்கள் சென்னை குகானந்த சபையில் சமீபத்தில் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் அவர் நண்பர்களையும் சுயமரியாதை இயக்கத்தையும் பற்றி மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினதாகவும் “ சுத்த சைவ ரத்த ஓட்டம் உள்ளவர்கள் இன்னமும் இவர்களைக் கொல்லாமல் இருக்கலாமா” என்பதாக சபையோர்களைக் கேட்டதாகவும் “தமிழ்நாடு” “திராவிடன்” பத்திரிகைகளில் காணப் படுகின்றது. அதே கூட்டத்தில் திரு. வேதாசலத்தை திருவாளர்கள் தண்டபாணி பிள்ளை, ராமனாதன், கண்ணப்பர் முதலிய பலர் பல கேள்விகள் கேட்ட தாகவும் பதில் சொல்ல இயலாமல் திக்கு முக்காடியதாகவும் கடைசியாக கண்ணீர் விட்டு அழுததாகவும் மற்றும் பல விதமாய் காணப்படுகின்றது. அன்றியும், சிற்சில விஷயங்களில் திரு. வேதாசலம், நாயக்கரைத் தாக்க உண்மைக்கு மாறாக சில கற்பனைகள் செய்து கொண்டு போனதாகவும் அதைக் அக்கூட்டத்திலேயே வெளியாக்கி அவர் அவமானமடையச் செய்ததாகவும் “திராவிடனி”ல் காணப்படுகின்றது. அவைகள் அடுத்த வாரத்திற்குள் திரு. வேதாசலம் அவர்களால் மறுக்கப்படாத வரை “குடி...

சுயமரியாதைப் பிரசாரங்கள் 0

சுயமரியாதைப் பிரசாரங்கள்

சுயமரியாதைப் பிரசாரங்கள் பல இடங்களில் நடந்து வருவதாகச் செய்திகள் எட்டுகின்றன. அவற்றில் பேசுகிறவர்கள் பல மாதிரி பேசுவ தாகவும் அதைக் கேட்கிறவர்கள் பல விதமாய் அர்த்தம் செய்து கொள்ளு வதாயும் சிற்சில சமயங்களில் விபரீத அர்த்தம் ஏற்பட்டு விடுவதாகவும் தெரிய வருகிறது. அவ்விபரீதத்தை நிறுத்துவதற்காக குறைந்தது பதினைந்து நண்பர்களை தயார் செய்யும் பொருட்டு ஈரோட்டில் ரயில்வே ஸ்டேஷனுக் கடுத்த திரு. வெங்கட்ட நாயக்கர் தோட்டத்திலுள்ள ஒரு கொட்டகையில் “சுயமரியாதைப் பிரச்சார போதனைக் கூடம்” என்பதாக ஒரு ஸ்தாபனம் ஏற் படுத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் ஒரு மாத காலத்திற்கு, தினமும் இரண்டு காலம் ஒவ்வொரு மணி நேரம் உபந்யாசங்களின் மூலமும், மற்றும் சம்பாஷணை, ‘குடி அரசில்’ கண்ட வியாசங்கள் முதலியவை மூலமாகவும் கற்பித்துக் கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். காலாவதி யொன்றுக்கு பதினைந்து பேர்களை சேர்த்துக் கொள்ளக்கூடும். அவர்களில் சௌகர்யமில்லாதவர்களுக்கு இலவச சாப்பாடு போடப்படும். இஷ்டமுள்ள வர்கள் தெரிவித்துக்கொண்டால் ஏற்றுக் கொண்ட விஷயத்துக்கும்...

வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறிக்கொண்டது 0

வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறிக்கொண்டது

திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அருப்புக்கோட்டை வாலிபர்கள் மகாநாட்டில் வாலிபர்களுக்கு புராணப் பிரசங்கம் செய்கையில், முன் திரு. நாயக்கருடன் “போர்” நடத்துகையில் முருகனைப்பற்றியும் புராணங் களைப் பற்றியும் என்ன எழுதினாரோ அவற்றிற்கு நேர் விரோதமாய் புராணங்களை ஆதரித்து பிரசங்கம் செய்திருக்கின்றார். மற்றும் பெரிய புராணத்தைப் பற்றி அவர் எழுதிய காலத்தில் “கவியழகுக்கும் இயற்கை வருணனைக்கும் கூடவா புராணங்களைப் படிக்கக்கூடாது” என்றும் “பெரிய புராணத்தின் உள்ளுறையை இதுவரை கிடைத்துள்ள கல்வெட்டுகள், அகச்சான்றுகள், நமது நாட்டைப்பற்றி இங்கு வந்துள்ளவர்கள் எழுதி வைத்த குறிப்புகள், சில புறச்சான்றுகள், சரித்திரப்பொருள்கள் காலநிலை முதலியவற்றிற்கு அரண் செய்யும் அளவுக்குக் கொள்ளலாம்” என்றும் எழுதியிருந்தார். இப்படி எழுதினவர் அடுத்த வாரத்திலேயே புராணப் பிரசாரத்திற்காக ஆரம்பித்து மறுபடியும் பழைய உணர்வு கொண்டு அதே புராணத்தை மூட நம்பிக்கைக்காக மக்களிடை பிரசாரம் செய்யத் திருநெல் வேலியைக் கண்டுபிடித்து அங்குள்ள மக்களிடம் தமது பழைய மூட்டையை அவிழ்க்க ஆரம்பித்துவிட்டார். அக் கூட்டத்தில் பேசும்போது அதே...

தென்னிந்திய ரயில்வே  தொழிலாளரின் வேலை நிறுத்தம் 0

தென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்

நீண்ட நாளாக ரயில்வே தொழிலாளர்கள் தங்களுடைய குறைகளைப்பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதிகாரிகள் கொஞ்சமும் இணங்காமலிருந்ததினாலும் பதினாயிரக்கணக்கான பேர்கள் திடீரென்று வேலையை விட்டுப் போக வேண்டியிருந்ததினாலும் வேறு கதியில்லாமல் தொழிலாளர்கள் சத்தியாக்கிரகமும் வேலை நிறுத்தமும் செய்தே தீர வேண்டியதாய் விட்டது. வேலை நிறுத்த விஷயத்தில் தொழிலாளர்களுக்கு எவ்வித உதவியும் இல்லாமல், அதாவது தொழிலாளர் தலைவர் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களும், தேசீயத்தலைவர் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களும், தேசீயப்பத்திரிகைகள் என்பவைகளும் பல ரயில்வேக் கம்பெனிக்காரர் களிடமிருந்து தங்கள் சுற்றத்தார்களுக்கு உத்தியோகங்கள் பெற்றிருக்கும் முறையிலும், பெற எதிர்பார்த்திருக்கும் முறையிலும், மற்றும் தங்கள் பத்திரிக் கைகளுக்கு விளம்பரங்கள் பெற்றிருக்கும் முறையிலும் ரயில்வேக் காரர்களுக்கு அடிமைகளாகி வேலை நிறுத்தத்தை தக்கபடி ஆதரிக்காமல் வேலை நிறுத்தம் செய்ய வேண்டியதில்லை என்றும், வேலை நிறுத்தம் அனாவசியம் என்றும், ஏஜண்டு கூடியவரை நெருங்கி வந்திருக்கிறார் என்றும், இன்னும் மற்ற பொது ஜனங்களுக்கும் தொழிலாளருக்கும் அதிகாரி களின் கொடுமையையும் வேலை நிறுத்தத்தின் அவசியத்தையும் சரியானபடி...

நாடார் மகாநாடு 0

நாடார் மகாநாடு

அருப்புக்கோட்டையில் நாடார் சமூக மகாநாடு சென்ற வாரம் 4,5,6 தேதிகளில் மிகவும் விமரிசையாக நடந்தேறிய விவரங்களை மற்ற பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் விஷயங்களிலிருந்து அறியலாம். சமூக மகாநாட்டை திறந்து வைத்த டாக்டர். சுப்பராயன் அவர்கள் வகுப்பு மகாநாடுகளின் அவசியம் என்றது பற்றியும் ஒவ்வொரு வகுப்பும் முன்னேறினால்தான் நாடு விடுதலை அடையமுடியும் என்றது பற்றியும் இந்த விஷயங்களை வெற்றி பெற தன்னால் கூடியதை செய்யக் காத்திருப் பதாக வாக்களித்ததைப் பற்றியும் நாம் மிகுதியும் பாராட்டுகின்றோம். மகாநாட்டு அக்கிராசனர் திரு. கனகசபை நாடார் அவர்கள் தமது அக்கிராசனப் பிரசங்கத்தில் குறித்துள்ள பல விஷயங்கள் பொன்னே போல் போற்றத் தக்கன. “நாம் பல துறைகளிலும் சிறப்புப் பெற்றிருந்தும், நமது யோக்கி யதைக்கு தகுந்த கவுரவம் நமக்கு அளிக்கவில்லை; பகிரங்கமாய் அவர்கள் (பிற வகுப்பார்கள்) கூறிவரும் கொள்கைகள் யாவையாயிருப்பினும் சரி, பொதுக்கூட்டங்கள் மூலமாயும் பத்திரிகை மூலமாகவும் அவர்கள் கூறும் செய்திகள் எவையாயிருப்பினும் சரி, காரியத்தில் மாத்திரம் ஒவ்வொரு வகுப்பினரும்...

இன்னும் ஒரு லோககுரு அவதாரம் 0

இன்னும் ஒரு லோககுரு அவதாரம்

நமது நாட்டில் பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்காக அவதரித்த லோக குருக்கள் அநேகர் என்பது யாவரும் அறிந்த விஷயம். அவர்களால் ஏற்பட்டி ருக்கும் தொல்லைகளும் நமது சுயமரியாதைக்கு இடையூறுகளும் நமது சீர்திருத்தத்திற்கும் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டைகளும் இவ்வளவு அவ்வளவு என்று சொல்லி முடியாது. இவ்வளவும் போதாமல் திருமதி பெசண்டம்மையார் அவர்களால் சுமார் 20, 30 வருஷங்களாக “லோககுரு வருகிறார்! லோக மாதா வருகின்றார்!” என்பதாக கூப்பாடு போடப்பட்டு வந்து, அநேக டாக்டர் பட்டம் பெற்றவர்கள் பி.எ., எம்.ஏ., பட்டம் பெற் றவர்கள் முதல் நம்பச்செய்து இரவும் பகலும் எதிர்பார்த்து திடீரென்று சீமை யில் திரு. கிருஷ்ணமுர்த்தி என்ற வாலிபர் லோககுருவாகவும் திருமதி அருண்டேல் ருக்மணி அம்மாள் என்கின்ற ஒரு அம்மையார் லோக மாதா வாகவும் அவதாரம் செய்து உலகோர்கள் ஒப்புக்கொண்டதாகவும் ஏற்பாடு செய்யப் பட்டு ஒரு பக்கத்தில் ‘ உலகாக்ஷிப்பு’ நடந்து வருகின்றது. இவ்வளவும் போதாமல் நமது திரு.திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் தமது தவத்தால் இன்னும்...

தொழிலாளர் 0

தொழிலாளர்

தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் தங்கள் குறைகளை எடுத்துச் சொல்லவும், அதை நிவர்த்திக்கத் தாங்கள் கொண்டுள்ள முறைகளுக்கு ஆதரவு தேடவும், ஊர் ஊராய் பிரசாரம் செய்து வருகின்ற விஷயம் யாவரும் அறிந்ததே. இம்முயற்சிக்கு ஆங்காங்குள்ள பொது மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டுமாய் வேண்டிக்கொள்கிறோம். தாடியில் நெருப்பு பற்றி எரிகின்றபோது ஒருவன் அதில் சுருட்டைப் பற்றவைக்க கொஞ்சம் நெருப்புக் கேட்டதுபோல், நாட்டின் ஜீவனாடியாகிய தொழிலாள மக்கள் இம்மாதிரி வேதனைப்பட்டு அலையும்போது சைமன் கமிஷன் பிரசாரமும் பர்டோலி சத்தியாக்கிரகத்திற்குப் பணம் தண்டலும் வெகு மும்முரமாய் நடந்து வருவதிலிருந்து நாட்டின் ஏழை மக்களிடத்தில் “தேசீய” இயக்கங்களுக்கோ “தேசீய தலைவர்கள்” என்போர்களுக்கோ எவ்வளவு கவலை இருக்கின்றது என்பதும் அவைகளால் நாட்டிற்கு எவ்வளவு பலன் ஏற்படும் என்பதும் தானாகவே விளங்குகின்றது. இனியாவது பொது மக்கள் இம்மாதிரி போலியும் அவசியமில்லாததுமான காரியங்களில் போலித்தலைவர்களை நம்பி மோசம் போகாமல் முக்கியமான காரியங்களில் கவனம் செலுத்த வேண்டுமாய் வேண்டுகிறோம். குடி அரசு – துணைத்...

மறுபடியும் பஹிஷ்காரக் கூச்சல் 0

மறுபடியும் பஹிஷ்காரக் கூச்சல்

சைமன் கமீஷன் பகிஷ்காரம் என்பதாக மறுபடியும் கூச்சல் போட கிளம்பிவிட்டார்கள். இக்கூச்சலின் உள்கருத்து அடுத்து வரப்போகும் சட்டசபைத் தேர்தலில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு வழிதேடவேயாகும். இதற்காகவே இச்சூழ்ச்சி கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது என்றும், அதற்காகவே பார்ப்பனர் அல்லாதாரிலும் சில தேசீய வயிற்றுப் பிழைப்பு ஆசாமிகளையும் கஞ்சிக்கு வேறுவழியில் பிழைக்க வகையில்லாத ஆசாமி களையும் பிடித்து கூலி கொடுத்து சைமன் பகிஷ்காரம் என்னும் பேரால் பார்ப்பனக்கக்ஷி ஆதிக்கப் பிரசாரமும் பார்ப்பனரல்லாதார் கக்ஷிகளை வைது அதன் முற்போக்குக்கு இடையூறான பிரசாரமும் நடத்த பார்ப்பனர் கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்றும் இதற்கு முன் பல தடவைகளில் எழுதி சைமன் கமீஷன் பகிஷ்காரம் என்பது புரட்டு என்பதற்கும் ஒரு வகுப்பாரின் சுயநலம் என்பதற்கும் பல ஆதாரங்களையும் எடுத்துக் காட்டி வந்தோம். அவைகளில் ஒன்றுக்காவது எந்த ‘தேசீயவாதி’யாவது ‘தேசீய பத்திரிகையையாவது அல்லது பார்ப்பனர்களின் தேசீயவாதியாவது, தேசீய பத்திரிகையாவது இதுவரை பதிலுரைத்தவர்கள் அல்ல. நமது கேள்விகளை மூடி வைத்துக் கொண்டு பாமர மக்களின் மூடத்தனத்தை...

திரு. முதலியார் அவர்களின் ‘முடங்கல்’ 0

திரு. முதலியார் அவர்களின் ‘முடங்கல்’

திரு. வி. கல்யாணசுந்தர முதலியார் அவர்களின் பெயரை தலையாகக் கொண்ட விஷயம் “குடி அரசில்” தலையங்கமாக வராமல் இப்போது உபதலையங்கமாக வருவதினாலேயே திரு. முதலியார் தலையங்கத்திற்கு அருகர் அல்லாமல் போய்விட்டாரோ என்னமோ என்பதாக யாரும் கருதிவிடக் கூடாது என்பதாக முதலில் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொண்டு சில வாக்கியங்களுடன் நாமும் இக்கிளையை முடிக்கின்றோம். திரு. முதலியார் அவர்கள் 27.6.28 ²“நவசக்தி” தலையங்கத்தில் “தொடர் முடங்கல்” என்னும் தலைப்புக் கொடுத்து நமக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் 24.6.28 ²“குடி அரசில்” அவ்விஷயத்தை தற்கால சாந்தியாக நாம் நிறுத்தி வைக்கின்றோம்” என்றும், “திரு. முதலியார் அவர்களோடு போர் தொடுக்க கவலை கொள்ளவில்லை” என்றும் கண்டி ருக்கும் வாக்கியங்களை எடுத்துக்காட்டி அதை ஆதாரமாகக் கொண்டு அதற் காகத் தாமும் போர் தொடுக்க வரவில்லை என்று எழுதியிருக்கிறார். அவைகள் எந்த வாக்கியங்களோடு இணைக்கப்பட்டது என்பதை எடுத்துக் காட்டி திரு. முதலியார் வாசகர்களுக்கு நியாயம் செலுத்தாமல் போய்விட்டார்....

தொழிலாளர் துயரமும் சைமன் பஹிஷ்கார வேஷமும் 0

தொழிலாளர் துயரமும் சைமன் பஹிஷ்கார வேஷமும்

இயற்கை அமைப்பிலேயே கைத்தொழில்களையும், தொழிலாளர் களையுமே ஜீவநாடியாகவும் அணியாகவும் கொண்டு நிலவிய நம் நாடானது எந்தக் காலத்தில் ஆரியர்களால் மேல்கண்ட இரண்டுமற்ற அன்னிய நாட்டாருக்கு காட்டிக்கொடுக்கப்பட்டு அன்னிய நாட்டு நன்மைக்காக ஆளப்படும் அன்னிய ஆதிக்கத்திற்கு – அடிமை ஆக்கப்பட்டதோ அன்று முதலே நம்நாட்டுத் தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அருகிப் போக வழி ஏற்பட்டதல்லாமல் தொழிலாளர்களும் தரித்திரத்திற்கும் துன்பத்திற்கும் ஆளாக நேர்ந்து வருடா வருடம் லக்ஷக்கணக்கான கைத்தொழிலாளர்கள் தொழிலில்லாமல் வேற்று நாடுகளுக்கு மிருகங்களாக ஏற்றுமதி செய்யப் பட்டும் வருகின்றார்கள். எஞ்சியுள்ள தொழில் மக்கள் உள் நாட்டு ஒரு சிறு கூட்டத்தினராகிய பேராசை கொண்ட முதலாளிகளிடமும், நம்மிடமும் நம் நாட்டிடமும் ஒரு சிறிதும் அன்பும் இரக்கமும் பற்றுதலும் அற்ற வெளிநாட்டு முதலாளி களிடமும் கொடுமைப்பட்டு வருகின்றார்கள். இதன்பலனேதான், நம்நாட்டில் ஒவ்வொரு நாளும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தமும், கதவடைப்பும், சத்தியாக்கிரகமும் பெண்டு பிள்ளை குட்டி களுடன் பட்டினி கிடப்பதும் அடிபடுதலும், உதைபடுதலும், துப்பாக் கியால் சுடுபடுதலும்,...

தாரா சசாங்கம் (இரண்டு மாணாக்கர்கள் சம்பாஷணை) 0

தாரா சசாங்கம் (இரண்டு மாணாக்கர்கள் சம்பாஷணை)

– சித்திரபுத்திரன் ராமசேஷன் : அடே ஜோசப்! இன்று நல்ல டிராமா என்று நோட்டீஸ் பார்த்தேன் போகலாமென்றிருக்கிறேன்; நீயும் வருகிறாயா? ஜோசப் : அது என்னடா அப்பா அப்பேர்ப்பட்ட நல்ல டிராமா? கொஞ்சம் சொல்லு பார்க்கலாம்? ராமசேஷன் : அதா? தாரா சசாங்கம்; நல்ல சீன்களும் நல்ல பாட்டு களும் உடையது. ஜோசப் : என்னடா என்னமோ கொசமுசாங்கம் என்று சொல்லுகிறாய் அதன் கருத்து என்ன? ராமசேஷன் : உனக்கென்னடா தெரியும்; நீயோ தற்குறி அது உன் வாயிலேயே நுழைவதில்லை; அதற்கு யாரு என்ன செய்வார்கள்? ஜோசப் : அந்தக் கிரகமெல்லாம் உன் வாயிலேயே நுழையட்டும், நல்ல வேளையாக என் வாயில் நுழையவேண்டாம். அதன் கருத்தென்ன சொல்லு பார்ப்போம்? ராமசேஷன் : தாரா சசாங்கம் என்றால் தாரை சந்திரனுக்கு நிர்வாணமாய் எண்ணெய் தேய்க்கும் பாகத்தை நாடக ரூபமாய் பிரத்தியக்ஷத்தில் காட்டுவார்கள். ஜோசப் : அப்படியா? தாரை என்றால் என்ன? சந்திரன் என்றால்...

சாமியும், சமயமும், சமயாச்சாரியார்களும் 0

சாமியும், சமயமும், சமயாச்சாரியார்களும்

தேவர்கள் என்றும், தெய்வங்கள் என்றும், அவதாரமென்றும், ரூப மென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், அதற்காக மதாச்சாரியர் கள் என்றும் அதற்கு சமயாச்சாரியர்கள் என்றும் கட்டியழுபவர்கள் ஒன்றா வயிற்றுப்பிழைப்பு புரட்டர்களாயிருக்க வேண்டும். அல்லது பகுத்தறி வில்லாதவர்களாகவாவது இருக்க வேண்டும் என்பதே நமது அபிப்பிராயம் என்பதாக பல தடவைகளில் வெளிப்படுத்தி இருக்கின்றோம். அது போலவே சிவன் என்றோ, விஷ்ணு என்றோ, பிரம்மா என்றோ, சொல்லப்படுபவையும் ஒரு “சாமி” என்றோ அல்லது ஒரு ஆசாமி என்றோ அல்லது ஒரு உருவமென்றோ கொள்ளுவதும் ஞானமற்றவர் களின் கொள்கை யென்றே சொல்லுவோம். உலகத் தோற்றமும், அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்வு, அழிவு என்பவைகளான மூவகைத் தன்மைகளையும், ³ “சாமி”களோ ஆசாமிகளோ ஒவ்வொரு தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்துகிறான் என்றோ அல்லது ஒவ்வொரு தன்மைக்கும் ஒவ்வொரு ஆசாமி பொறுப் பாளியாய் இருக்கின்றான் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களும் விசார ஞான மற்றவர்கள் என்றே சொல்லுவோம். மற்றபடி “மேல் கண்ட ஒவ்வொரு தன்மைக்கும்...

அருஞ்சொல் பொருள் 0

அருஞ்சொல் பொருள்

அந்தகாரம் – இருள், இருட்டு இகபர சாதனம் – இவ்வுலக மறுவுலக துணை ஒடை அடித்தல் – காளைகளின் ஆண்மை நீக்கத்துக்காக விதர்களை நசுக்கி உடைத்தல் ஓதாவில் – தோரணையில், முறையில் கோபிசந்தனம் – வைணவரின் ஒருவகை நெற்றிக்குறி சக்கரை கட்டுதல் – சர்க்கரை பொட்டலம் கட்டுதல் சாங்கோ பாங்கமாக – முழுமையாக சுணங்குகள் – நாய்கள் தாத்பர்யம் – பொருள், விளக்கம் தெய்வ எத்தனம் – கடவுள் ஏற்பாடு தொந்திரை – தொந்திரவு பாஷியம் – விளக்கம், உரை புதுக்கோட்டை அம்மன் காசு – சிறு மதிப்புள்ள நாணயம், 320 புதுக் கோட்டை அம்மன் காசுகள் = 1 ரூ புனருத்தாரணம் – மறுசீரமைத்தல் முடத்தெங்கு – வந்தனோபசாரம் – நன்றிகூறல் விகல்பம் – மனமாறுபாடு, வேறுபாடு ஸ்தம்பம் – தூண்

திருச்சியில் 144 0

திருச்சியில் 144

திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்குள் பிரவேசிக்கக்கூடாது என்று திருவாளர்கள் ஜே. கண்ணப்பர், தண்டபாணி பிள்ளை, ஜே. என். ராமநாதன் ஆகியவர்களுக்கு அவ்வூர் மாஜிஸ்திரேட் திரு. சீனிவாசராவ் என்கின்ற ஒரு பார்ப்பனரால் 144ம் உத்திரவு பிறப்பிக்கப் பட்டிருக்கின்றது. இவ்வுத்திரவு அக்கிரமமான உத்திரவானதால் அதை மீறி பிரவேசித்து சிறை புக தீர்மானித்து திருவாளர்கள் கண்ணப்பரும் தண்டபாணி பிள்ளையும் முடிவு செய்து விட்டார்கள். இன்று அல்லது நாளை திருச்சிக்கு சென்று உத்திரவை மீறுவார்கள். பின் வந்த தந்தி திரு. கண்ணப்பரும் தண்டபாணியும் இன்று காலை 144ஐ மீறுவதற்கு இவ்விடமிருந்து திருச்சிக்கு பிரயாணமாயிருக்கிறார்கள். தங்களது மீறுதலால் எவ்வித கலகமும் பலாத்காரமும் நடைபெறாது என்று உறுதி கூறி திருச்சி பொது மக்கள் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருப்பதாகவும் தங்களை அவசியம் மீற வேண்டும் என்பதாக மனபூர்வமாய் ஆமோதித்திருப்ப தாகவும் திருச்சியில் இருந்து இன்று மாலை தந்தி கொடுத்திருக்கிறார்கள். திருச்சியில் கோவிலதிகாரிகளின் பலாத்காரம் திருச்சி மலைக் கோட்டை கோயிலுக்கு சுவாமி தரிசனைக்கு திருவா...

சைமன் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு 0

சைமன் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு

சைமன் கமிஷன் பஹிஷ்காரம் என்பது பார்ப்பனர்களின் சூழ்ச்சி என்றும், மற்றும் பல பார்ப்பன தாசர்களின் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் என்றும் பலமுறை தெரிவித்து வந்திருக்கின்றோம். அதற்கிசைந்த வண்ண மாக தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்கள் அடிக்கடி குட்டிக் கரணம் போட்டு வருவதையும் பகிஷ்காரத்திற்கு புது புது வியாக்கியா னங்கள் சொல்லி வருவதையும் அவ்வப்போது தெரிவித்து வந்திருக் கின்றோம் திரு. சீனிவாசய்யங்கார் தமது திட்டத்தை தூக்கிக் கொண்டு சீமைக்குச் சென்றிருப்பதைப் பற்றியும் தெரிவித்திருக்கின்றோம். இப்போது பார்ப்பனர்கள் பார்ப்பன சமூகத்தின் பேராலும் வருணாசிரம தர்ம சபையின் பேராலும் கமிஷனுடன் ஒத்துழைக்கும் விதமாக தங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பியிருக்கிறார்கள். கமிஷனிடம் சாட்சி சொல்லவும் தயாரா யிருக்கிறார்கள். எனவே பகிஷ்கார உபதேசத்தை இந்தப் பார்ப்பனர்களும் அவர்களது தாசர்களும் இனி யாருக்கு உபதேசம் செய்கின்றார்கள் என்பதை பொதுஜனங்களே யோசித்துக் கொள்ள வேண்டுகின்றோம். அன்றியும் இப்பார்ப்பனர்களையும் அவர்களது அடிமைகளையும் நம்பி மோசம் போகாமல் ஒவ்வொரு சமூகத்தாரும் தங்கள் தங்கள் குறைகளை...

திரு. வி. கல்யாணசுந்தர முதலியார் 0

திரு. வி. கல்யாணசுந்தர முதலியார்

திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரவர்கள் தமது 20.6.28 ² ‘நவசக்தி’ பத்திரிகையில் ‘திறந்த மடல்’ என்னும் தலையங்கத்தின் கீழ் நமக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், நாம் சென்ற வாரக் ‘குடி அரசு’ பத்திரிகையில் எழுதிய விஷயங்களை தாம் ஒப்புக் கொள்ள வில்லை என்றும் ‘நவசக்தி’யில் கண்ட மற்ற – நாம் கண்டிக்காமல் விட்ட – விஷயங் களை நாம் ஒப்புக் கொண்டதாக தாம் கொள்ளுவதாகவும் எழுதி யிருக்கிறார். இதைப்போன்ற அறிவுடைமை பயித்தியக்கார ஆஸ்பத்திரியிலும் கண்டு பிடிக்க முடியாது என்றே சொல்லுவோம். மற்றவைகளைப் பற்றி நாம் பின்னர் எழுதுவோம் என்று குறிப்பிட்டது திரு. முதலியாரின் கண்களில் படாமல் போனது ஏனோ அறியோம். மற்றும் நமது கட்டுரையை நான்கு பிரிவாக்கி முதலாவதாக வசைமொழி என்றும், அதை இனி நாம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், நமக்கு புத்தி சொல்லி வருகிறார். இது அவரு டைய அதிகப் பிரசங்கித்தனத்தையே காட்டுகின்றது. தற்கால பண்டித உலகத்தில் இது...

பார்வதிக்கும் பரமசிவனுக்கும் சம்பாஷணை 0

பார்வதிக்கும் பரமசிவனுக்கும் சம்பாஷணை

– சித்திரபுத்திரன் பார்வதி :- எனது பிராணநாதனாகிய ஓ சிவபெருமானே! ஆகாயத் தில் பறக்கின்ற, கருடன் என்கின்ற பட்சியைப் பார்த்து பலர் காலையிலும், மாலையிலும் கன்னங்கன்னமாய் போட்டுக் கொள்ளுகின்றார்களே, அது எதற்காக நாதா? பரமசிவன் :- கண்மணி! இது உனக்குத் தெரியாதா? கருடன் நமது அடிமையாகிய மகாவிஷ்ணுவுக்கு வாகனமல்லவா? அதனால் விஷ்ணு பக்தர்களில் சிலர் கருடனைக் கண்டால் கன்னத்தில் அடித்துக் கொள்ளு கிறார்கள். பார்வதி :- ஓ ஹோ அப்படியா சங்கதி! சரி அப்படியானால் நமது அடிமை வாகனத்திற்கு இவ்வளவு மதிப்பு இருக்கும்போது நம்முடைய வாகனமாகிய காளை மாட்டைக் கண்டால் ஏன் யாரும் கன்னத்திலடித்துக் கொள்வதில்லை? அன்றியும் வண்டியில் கட்டி ஓட்டுகிறார்கள், ஒடை அடிக் கிறார்கள், செக்கில் கட்டி ஆட்டுகிறார்கள், அடித்துக்கூட தின்று விடுகிறார்களே அது ஏன்? பரமசிவன் :- நம்முடைய பக்தர்களுக்கு அவ்வளவு பக்தி இல்லை. நன்றாக சாம்பலை பூசிக் கொள்ளத்தான் தெரியும். நமது வாகனத்தினிடத்தில் பக்தி காட்டத் தெரியாது....

“நவசக்தி” முதலியாரின் நாணயம் 0

“நவசக்தி” முதலியாரின் நாணயம்

நாம் சென்ற வாரம் ‘குடி அரசில்’ திருவாளர் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் அவர்களைப் பற்றி எழுதியதில் ‘நவசக்தியின் சீர்திருத்தம்’ என்கிற கட்டுரையானது திரு. முதலியாரால் பேடித்தனமாகவும், திருட்டுத் தனமாகவும் நம்மைக் குறிப்பிட்டே ஜாடையாக எழுதப்பட்டதென்னும் பொருளைக் காட்டியதோடு அதை நாம் மறுக்கவோ, கண்டிக்கவோ ஆரம்பித்தால் உடனே, திரு.முதலியார் “அது குடி அரசைப் பற்றி எழுதவில்லை” என்றும் பொதுப்பட எழுதினது என்றும் எழுதி ஒளியப் பார்ப்பார் என்றும் எழுதியிருந்தோம். அது போலவே இவ்வாரம் “நவசக்தி”யில் திரு.முதலியார் அவர்கள் “குடி அரசின் குதர்க்கம்” என்னும் தலையங்கத்தில் நாம் குறிப்பிட்டபடியே தமது பழங் குணத்தைக் காட்டியிருக்கிறார். அதாவது, “குடி அரசு” குதர்க்கத்தில் பேர் பெற்றது என்றும் அது தோன்றியது முதல் யாரையேனும் போருக்கிழுப்பதே அதன் வேலை என்றும் அது இவ்வாரம் தம்மீது (திரு. முதலியார் மீது) நாட்டத்தைச் செலுத்தி இருப்பதாகவும் எழுதிவிட்டு, “நவசக்தியில் தோன்றிய ‘சீர்திருத்தம்’ என்னும் கட்டுரை பொது நெறிபற்றி எழுதப்பட்டதே தவிர ‘குடி...

‘லோகோபகாரி’யின் மயக்கம் 0

‘லோகோபகாரி’யின் மயக்கம்

31-5-28 தேதி லோகோபகாரியின் தலையங்கத்தில் மணவயது மசோதாவைப் பற்றி எழுதுகையில், “…………………..குழந்தைகளுக்கு மணம் செய்து வைக்கும் முறையைக் கண்டித்து சில ஆண்டுகளாகவே நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இது நன்று. ஆனால் இது விஷயத்தில் பொது ஜனங்களுக்கு அறிஞர்களின் பிரசாரத்தால் நல்லறிவு தோன்றுமாறு செய்தலே நல்வழியாகும். தற்காலத்தில் இது முடியாத காரியமாகத் தோன்றுகிறது. ஆயினும் இவ்விஷயத்தில் அரசாங்கத்தார் சட்டம் போடுதல் பொருத்தமுடைய செயலல்ல வென்று நமக்குத் தோன்றுகிறது” என்று எழுதியிருக்கின்றது. இப்படி எழுதி இருப்ப தானது சீர்திருத்தக்காரருக்கு தலையையும் அதன் விரோதிகளான பார்ப்பனர் களுக்கு வாலையும் காட்டுவது போல் இருக்கின்றது. ‘குடிகளால் சரி செய்து கொள்ள முடியவில்லை’ என்று தன்னாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டதும் உண்மையிலேயே மனித சமூகத்துக்கு கேடு உண் டாக்குவதுமான விஷயம் சர்க்காரால் சரி செய்யப்பட நேருவதில் ‘லோகோ பகாரி’க்கு உள்ள கஷ்டம் இன்னது என்பது நமக்கு விளங்கவில்லை. கடைசியாக “இந்தச் சட்டம் அமுலுக்கு வரும் பொழுது வயது நிர்ணயம் முதலிய...

அருப்புக்கோட்டை சுயமரியாதை கேஸ் விடுதலை 0

அருப்புக்கோட்டை சுயமரியாதை கேஸ் விடுதலை

அருப்புக்கோட்டையில் சுகாதார வார கொண்டாட்டம் நடைபெற ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் ஒரு பார்ப்பனர் தன்னைத்தானே அக்கிராசனாதிபதியாக தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆசனத்திலமர்ந்து நடவடிக்கை ஆரம்பிப்பதற்காக முதலில் ஒரு பார்ப்பனரல்லாத வாலிபர் பாட ஆரம்பித்தவுடன் அக்கிராசனத்திலிருந்த பார்ப்பனர் கோபம் கொண்டு “முதல் முதல் சூத்திரன் பாடக் கூடாது; பிராமணன் தான் பாட வேண்டும்” என்று சொல்ல, உடனே அங்கிருந்த கூட்டம் ‘சூத்திரன்’ என்று சொன்னதற்காக அக்கிராசனரை மன்னிப்பு கேட்கும்படி கேட்கவே, அக்கி ராசனர் மன்னிப்பு கேட்காததால் கூட்டத்தார் அத்தனை பேரும் சுய மரியாதைக்கு ஜே! ராமசாமி நாயக்கருக்கு ஜே! என்று சொல்லிக் கொண்டு கலைந்து போய்விட்டார்கள். பிறகு எவ்வளவு தூரம் மன்னிப்பு கேட்டுக் கொண்டும் கூட்டம் கூடவே இல்லை. இதனால் ஆத்திரம் கொண்ட ஒரு பார்ப்பன சுகாதார இன்ஸ்பெக்டர் பார்ப்பன போலீசின் உதவி பிடித்து, பல பார்ப்பனரல்லாத வாலிபர்களின் மேல் கேஸ் தொடுத்து, அதாவது அரசாங்க உத்தியோகஸ்தரின் வேலையை செய்யவொட்டாமல் தடுத்ததாகவும் மற்றும்...

மறுபடியும் பகிஷ்காரப் புரட்டு 0

மறுபடியும் பகிஷ்காரப் புரட்டு

சைமன் கமீஷன் விஷயமாகப் பார்ப்பனர்கள் ஆரம்பித்த பகிஷ் காரப் புரட்டுக்கு ஒருவிதத்தில் சாவுமணி அடித்து விட்டதானாலும் மறுபடி யும் சிலர் செத்த பாம்பை ஆட்டுவது போல் சத்தில்லாத விஷயங்களைக் காட்டிக் கொண்டு பாமரமக்களை ஏமாற்ற புதிது புதிதாக வழி கண்டுபிடித்து தங்கள் தங்கள் அரசியல் புரட்டுத் தேரை ஓட்டப் பார்க்கின்றார்கள். இனி இம்மாதிரியான புரட்டுகளுக்கெல்லாம் பாமர மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றே உறுதி கூறுவோம். தமிழ்நாட்டைப் பொருத்தவரை பஹிஷ்கார வேஷம் இனி செலா வணியாகாது என்று தெரிந்திருந்தாலும் அடுத்து வரப் போகும் தேர்தல் களுக்கு தங்களுக்கு அனுகூலமாக ஏதாவது மார்க்கம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணமுடையவர்களும் பார்ப்பனரல்லாதார் கக்ஷி வலுப்படுவதன் மூலம் தங்கள் வாழ்வுக்கு பங்கம் வந்து விடுமோ என்கின்ற சுயநல வாதிகளும் சேர்ந்து பகிஷ்காரம் பகிஷ்காரம் என்று போலிக் கூக்குரல் இடுகின்றார்கள். அதைப் பற்றி நாம் ஒரு சிறிதும் கவலைப் படவில்லை. ஆனாலும் பகிஷ்காரக் கூச்சலில் ஏதாவது ஒரு...

திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் 0

திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்

. முதலியார் அவர்கள் சிறிது காலம் உறங்கிக் கிடப்பதும் பிறகு திடீரென்று பூர்வக்கியானம் பெற்றவர் போல் நாட்டுக்கு பெரிய அழிவு வந்துவிட்டதாகவும் அதைத்தான் காப்பாற்றப் போகின்றதாகவும் வேஷம் போட்டுக் கொண்டு சீர்திருத்தக்காரர்களால் ஆபத்து! ஆபத்து! என்று சப்தம் போடுவதும் அதன் பேரில் ஏதாவது இரண்டு கிடைத்தால் வாங்கிக்கொண்டு பொறுக்கமுடியாமல் ‘நான் அப்படி செய்யவில்லை இப்படி நினைக்க வில்லை. அதற்கு இதல்ல அருத்தம் அதல்ல பொருள்’ என்று பல்லைக் காட்டுவதும் ஆகிய காரியத்திலேயே இருந்து வருகிறார். உதாரணமாக கொஞ்ச காலத்திற்கு முன் சீர்திருத்தம் என்கின்ற தலையங்கம் இட்டு ஒரு வியாசத்தில், தற்காலம் நடைபெறும் சீர்திருத்தத்தால் நாட்டிற்கு பெரிய ஆபத்து என்றும் சீர்திருத்தக்காரர்கள் மிக்க மோச மானவர்கள் என்றும் ஜனங்கள் நினைக்கும்படி எழுதினார். ‘குடி அரசு’ அதற்கு தகுந்த ஆப்புக்கடாவினவுடன் ‘நான் அப்படி எழுதவில்லை இப்படி எழுதவில்லை’, ‘அதற்கு இதல்ல அர்த்தம்’ என்று சமாதானம் சொல்லி அமர்ந்தார். இப்போது பல இடங்களில் மூடநம்பிக்கை ஒழிந்த...

சுயமரியாதைத் திருமணங்கள் 0

சுயமரியாதைத் திருமணங்கள்

இந்த வாரம் அநேக இடங்களில் இருந்து சுயமரியாதைத் திருமணங் கள் நடந்ததாக சமாச்சாரங்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன. ஆனாலும் அவற்றில் பெரிதும் பார்ப்பனர்களை விலக்கி நடத்தியதாக மாத்திரம் தெரிய வருகின்றனவேயல்லாமல் மற்றபடி அவை முழுவதும் சுய மரியாதைத் தத்துவப்படி நடைபெற்றிருப்பதாக சொல்லுவதற்கில்லா மலிருப்பதற்கு வருந்துகின்றோம். ராமநாதபுரம் ஜில்லா சுக்கிலநத்தத்தில் நடந்த மூன்று திருமணங்களையும் மதுரையில் நடந்த ஒரு திருமணத் தையுமே பரிபூரண சுயமரியாதைத் திருமணங்களென்று சொல்லலாம். சுயமரியாதைத் திருமணத்திற்கும் அது அல்லாத திருமணத்திற்கும் நாம் குறிப்பிடும் வேறுபாடுகள் என்ன வெனில், சுயமரியாதை அற்ற திருமணமென்பது 1. மற்றவர்களைக் காட்டிலும் ஜாதியாலோ சமயத்தாலோ தன்னை உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளுகிற ஆச்சாரியன் என்பவனைக் கொண்டு மணச்சடங்கு நடத்துவது. 2. மணமக்களுக்கு, மணமக்கள் அறியாத பாஷையில் சடங்கு வாக்கியங்களைச் சொல்வது. 3. மணமக்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் பொருள் விளங்காத சடங்குகளைச் செய்விப்பது. 4. இன்னின்ன காரியத்திற்காக இன்னின்னவைகளைச் செய்கிறோம் என்கின்ற குறிப்பில்லாமல், வழக்கம்,...

செங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு 0

செங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு

இந்த, நம் தாழ்ந்த நிலைக்குக் காரணம் என்ன என்றால் தெய்வ எத்தனம் என்று வெகு சுலபமாக பதில் சொல்லிவிடுகின்றார்கள். இப்படிப் பதில் சொல்லுபவர்களே தான் பெரும்பாலும் தங்களை ஆஸ்திகர்கள் என்றும் தெய்வ நம்பிக்கை உடையவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளு கின்றார்கள். இம் மாதிரி தொட்டதற்கெல்லாம் உண்மையான காரணத்தைக் கண்டு பிடிக்காமலும் கண்டுபிடிக்க ஒரு சிறிதாவது முயற்சிக்காமலும் சோம் பேறி ஞானம் பேசுவதுதான் நமது மத இயலாகவும் பெரியோரின் ஞான மாகவும் ஆஸ்திகமாகவும் போய்விட்டது. இப்போது முன்னுக்கு வந்திருக் கும் மற்ற நாட்டார் எல்லோரும் தங்கள் புத்திக்கும் முயற்சிக்கும் மதிப்புக் கொடுத்தே மேல்நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்த நிலையை முதலில் உபாத்தியாயர்கள் உணர வேண்டும். இந்த நிலைக்கு பிள்ளை களையும் கொண்டு வர வேண்டும். அம்மாதிரி நிலைமை பெற்ற மக்கள் உள்ள தேசம் எந்த விதத்திலும் முன்னடைந்தே தீரும். இன்று இவ்விடம் பல அறிஞர்கள் பலவிஷயங்களைப் பற்றி உபந் நியாசம் செய்தார்கள். அவைகளில் கிராம...

செங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு 0

செங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு

“திரு. ரெட்டியார் அவர்களே! உபாத்தியாயர்களே மற்றும் இங்கு கூடியிருக்கும் சகோதர சகோதரிகளே! இந்த ஆசிரியர் மகாநாட்டுக்கு இந்த ஜில்லா போர்டார் என்னைத் தலைவனாக யிருக்க வேணுமாய் கேட்டுக் கொண்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது. ஏனென்றால் இது “கல்வி” என்பது சம்பந்தமான ஆசிரியர் மகாநாடாயிருப்பதால், அந்தக் கல்வி என்பது ஒரு சிறிதும் இல்லாதவனும், ஆசிரியர் என்பவர்களிடத்தில் கொஞ்சமாவது பயிற்சி பெறாதவனுமான நான் இம் மகாநாட்டுக்கு தலைமை வகிக்க எவ்விதத்தில் தகுதியுடையவன் ஆவேன் என்பதுதான். நான் என்னுடைய ஒன்பதாவது பத்தாவது வயதிற்கு மேல் எந்த பள்ளிக் கூடத் திலுமே வாசித்தவனும் அல்ல. அந்த ஒன்பது வயதிற்கு உள்பட்ட காலத்திலும் என்னை பள்ளிக்கு அனுப்பிய காரணமெல்லாம், நான் வீட்டில் உள்ளவர்களுக்கு தொல்லை விளைவிக்காமலிருக்க வேண்டுமென்ற கருத்துக்கொண்டு ஓர் திட்டத்தில் காவலில் வைப்பதற்காகவே, அதுவும் ஒரு திண்ணைப் பள்ளி உபாத்தியாயர் வசமே ஒப்படைக்கப்பட்டிருந்தேன். அந்தப் பள்ளியில் இருந்த காலமும், உபாத்தியாயர்களுக்கும் பிள்ளை களுக்கும் தொல்லை விளைவிப்பதும், அவர்களிடம்...

எது தொலைய வேண்டும் 0

எது தொலைய வேண்டும்

தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றிய இந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக அரசியல் புரட்டர்களுக்கு பேச மேடையில்லாமலும் மதப் புரட்டர்களுக்கு மரியாதை இல்லாமலும், புராணப் பிரசங்கத்திற்கு இடமில்லாமலும் செய்து விட்டதோடு இவைகள் மூலம் அவரவர்களின் சொந்த வியாபாரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு விட்ட விபரம் இவைகளி னால் வயிறு வளர்த்துக் கொண்டிருந்தவர்கள் நெருப்பில் விழுந்த புழுத் துடிப்பது போல் துடிப்பதினாலே விளங்கும். இதுபோலவே பார்ப்பன ஆதிக் கமும் புரோகிதர்கள் ஆதிக்கமும் ஆங்காங்கு ஒருவாறு மறைந்து கொண்டே வருவதும் வெள்ளிடைமலை. இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுமார் பதினாயிரம் பேருக்கு மேலாகவே போலி அரசியலையும், புரட்டுப் பார்ப்பனீ யத்தையும் விட்டு விலகி விட்டதாக அவர்கள் தங்கள் பெயரை வெளிப் படுத்தி இருப்பதையும், ஆயிரக்கணக்கான சடங்குகள் பார்ப்பனர்களை நீக்கி நடத்தி இருப்பதாக வெளியாகி வருவதையும், அநே கர் தங்கள் குலகுரு என்கின்ற போலிக் குருமார்களை நீக்கியிருப்பதையும் கவனித்துப் பார்ப் பவர்கள், இச்சுயமரியாதை இயக்கம் இத்தமிழ் நாட்டில் எவ்வளவு தூரம்...