புத்தகங்கள் வெளியீடு! புதிய தலைப்புகள்! 42 புத்தகங்கள்!
ரூ.4000/- மதிப்புள்ள நூல்கள் ரூ.3000/-க்கு சலுகை விலையில் சேலத்தில் ஏப்.29.30 ல் நடைபெறும் “இது தமிழ்நாடு,இளைய தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டை முன்னிட்டு நிமிர்வோம் வெளியீட்டில் புத்தகங்கள் வெளியிடப் படுகின்றன. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் எழுதி 2022 டிசம்பர் மாதம் நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 37 தலைப்புகளும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி, உரைகள் ஆகியவை 3 புத்தகங்களாகவும், திமுக துணைப் பொதுச்செயலாளர் மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ இராசா கருத்தரங்க உரை நூல் வடிவில் “எங்களை தனிநாடு கேட்க வைத்து விடாதீர்கள்” எனும் நூலும் ஆகியவற்றோடு “நான் பார்ப்பனர்களுக்கு அல்ல, பார்ப்பனீயத்துக்கே எதிரானவன்” (எனும் அம்பேத்கரின் மேற்கோள் குறித்து) வெளியான ஆங்கில புத்தகத்தின் தமிழ் வடிவம். எட்வின் பிரபாகரன் மொழிப் பெயர்ப்பில். இவை அனைத்தும் சேர்த்து மொத்தமாக 42 புத்தகங்களாய் வெளியிடப்பட உள்ளது.இவற்றின் மொத்த பக்கங்கள் 4211 இதன் விலை ரூ. 4000/- மாநாட்டு திடலில் அனைத்து...