நீதித்துறையில் காவிகளின் ஊடுறுவல் ! காவிகளின் மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பதா?
நீதித்துறையில் காவிகளின் ஊடுறுவல் ! காவிகளின் மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பதா? (24.02.2018) கோவையில் ஆர்.எஸ்.எஸ்.சின் வழக்கறிஞர் பிரிவான அகில பாரத அதிவக்த பரிஷத் எனும் அமைப்பும்,அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழகப் பிரிவும் இணைந்து நடத்தும் மாநில வழக்கறிஞர் 2வது மாநாட்டை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி துவக்கி வைத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளவிருக்கிறார் என்கிற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மேலும் இவ்ர் கோவையில் மாவட்ட நீதிபதியாக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ABVP மாநாட்டில் பங்கேற்றவர் என்ற செய்தியை அறிய வரும்போது நமக்கு மேலும் பெரும் அதிர்ச்சியே ஏற்படுகிறது. இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதசார்பற்றதன்மைக்கு இது எதிரான செயலாகும்.இந்திய அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நீதித்துறையில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியே இப்படி ஒரு மதவாத அமைப்பின் நிகழ்ச்சியை துவங்கி வைப்பது நீதித்துறையின் மத சார்பற்றதன்மையையும், நம்பிக்கையையும் சீர்குலைக்கும் செயலே ஆகும். முன்பு பெங்களூருவில் கர்நாடக...
