Category: பெரியார் முழக்கம்

சவால் விட்ட பூரி சங்கராச்சாரியை ஓட வைத்த அக்னிவேஷ்

கணவன் இறந்தவுடன் மனைவியை நெருப்பில் போட்டு எரிக்கும் ‘சதி’ எனும் உடன் கட்டை ஏறும் கொடுமை, சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. 1988ஆம் ஆண்டு இராஜஸ்தான் மாநிலத்தில் ரூத்கன்வர் என்ற பெண் உடன்கட்டை ஏறினார். உடனே பார்ப்பனர்கள் அந்தப்பெண்ணுக்கு கோயில் கட்டி ‘சதி மாதா’ என்று வழிபட ஆரம்பித்தார்கள். சங்பரிவார்களும் இதை ஆதரித்தன. பா.ஜ.க.வின் உ.பி. முதல்வராக இருந்த கல்யாண்சிங், சதி மாதா கோயிலுக்குச் சென்று வழிபட்டார். பூரி சங்கராச்சாரியான பார்ப்பனர் நிரஞ்சோ தீர்த் என்பவர், அப்போது உடன்கட்டை ஏறுவதை நியாயப்படுத்தி பேசி வந்தார். இராஜஸ்தான் மாநில அரசு நிறைவேற்றிய உடன்கட்டை ஏறுதல் தடுப்புச்சட்டத்தைக் கடுமையாகக் கண்டித்து வந்தார். இந்த சட்டத்தின்படி உடன் கட்டையை ஆதரித்துப் பேசுவதும் குற்றம். சங்கராச்சாரி அது பற்றிக் கவலைப்படவில்லை. இந்த நிலையில் சங்கராச்சாரி மீரத் நகரில் உடன்கட்டை ஏறுவதை ஆதரித்துப் பேசவும் யாகம் நடத்தவும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இதை எதிர்த்து வடநாட்டில் சமூக நீதியை தீவிரமாக ஆதரிப்பவரும் பார்ப்பன எதிர்ப்பாளராகவும் வலம்...

‘சாய்கிருஷ்ணன்’ முகமூடியைக் கிழித்த அறிவியல் குழு

பெங்களூரிலிருந்து 80 மைல் தொலைவிலுள்ள பாண்டவபுரம் எனும் ஊரில் சாய் கிருஷ்ணன் எனும் ஏழு வயது சிறுவன் அற்புத சக்தியோடு கையசைப்பில் விபூதியை தருவதாக  பெரும் கூட்டம் கூடத் தொடங்கியது. புட்டபர்த்தி சாய்பாபாவின் மறு அவதாரம் என்று இந்த சிறுவனைக் கூறினார்கள். இந்த சிறுவனைப் பார்த்து புட்டபர்த்தி சாய்பாபா சீடர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஒரு ஆஸ்திரேலிய  நாட்டுக்காரர், இந்த சிறுவனின் ‘அதிசய சக்தியை’  விளக்கி வெளிநாடுகளில் பரப்ப ஒரு  திரைப்படத்தையே தயாரித்தார். “இந்த சிறுவன் 11 மாதம் வயிற்றிலிருந்து பிறந்தான் என்றும், பிறக்கும்போது தனக்கு பிரசவ வலியே இல்லை என்றும், பிறந்ததிலிருந்தே அவனது உடலிலிருந்து விபூதி கொட்டத் தொடங்கி விட்டது என்றும் அவரது தாயார் கூறி வந்தார். பெங்களூர் பல்கலைக்கழகத்தின் துணை  வேந்தராக இருந்தவர் டாக்டர் எச். நரசிம்மையா – எளிமையான காந்தியவாதி; சீரிய பகுத்தறிவாளர்; மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இயக்கங்களை நடத்திய பெருமைக்குரியவர். பல்கலைக் கழகப் பேராசிரியர்களைக் கொண்டு மூடநம்பிக்கை ஒழிப்புக் குழு ஒன்றை...

மிரண்டு ஓடிய ‘பேய்’ ஓட்டும் பாதிரியார்கள்

சாமியார்கள் சங்கராச்சாரிகள்  அற்புதசக்தி இருப்பதாக மோசடி செய்தவர்களை நேருக்கு நேர் சந்தித்து  அவர்களின் முகத்திரையைக் கிழித்து  எறிந்த சம்பவங்கள் ஏராளம் உண்டு. அது குறித்து சில நிகழ்வுகளின்  தொகுப்பு: மேட்டூர் கொளத்தூரிலிருந்து மூன்று  மைல் தொலைவிலுள்ள கிராமம் தார்க்காடு சுந்தராபுரம். 1975 ஆம் ஆண்டு  செப்டம்பர் 25ஆம் தேதி இந்த ஊரில் கிறிஸ்தவர் பிரச்சார முகாம் நடந்தது. மதப்பிரச்சாரம் மட்டுமின்றி, ‘பேயோட்டுதல்’ போன்ற மூடநம்பிக்கைகளையும் மக்களிடையே பரப்பி வந்தார்கள். செய்தியறிந்து அவ்வூர் பொது மக்கள் கொளத்தூர் திராவிடர் கழகத் தோழர்களுக்கு  தகவல் தெரிவித்தனர். கொளத்தூர் திராவிடர் கழகத் தலைவர் தா.செ. மணி  (கழகத் தலைவர் கொளத்தூர் மணி), பகுத்தறிவாளர் கழகத் தலைவர் டி.ஆர்.கிருஷ்ணன் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் சுபாஷ் சந்திர போஸ், ஆசிரியர்  எம். இராமலிங்கம், டி.கே. நாச்சிமுத்து, வி.கே. முத்துசாமி ஆகியோரடங்கிய குழு தார்க்காடு விரைந்தது. 8 மணிக்கு மதப் பிரச்சாரகர் நிகழ்ச்சியைத் தொடங்கியுடன்,கிறிஸ்தவ மதம் குறித்து தங்களின் சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டும் என்று...

குஜராத், தலித் மக்களின் புரட்சி

செத்த மாட்டைப் புதைக்க மாட்டோம்; சாக்கடைக் குழியில் இறங்க மாட்டோம்! குஜராத், தலித் மக்களின் புரட்சி “செத்த மாடுகளைப் புதைப்பது உள்ளிட்ட இழிவான வேலைகளை செய்ய மாட்டோம்” என்று, தலித்  மக்கள் போர்க்கொடி உயர்த்திய மகிழ்ச்சியான செய்திகள்  வந்து கொண்டிருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் செத்த பசுமாட்டுத் தோலை  உரித்தார்கள் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியுள்ள ‘பசு பாதுகாப்பு’ அமைப்பைச் சார்ந்த வன்முறையாளர்கள், தலித் இளைஞர்களை ஆடைகளைக் களைந்து  மூர்க்கத்தனமாக தாக்கினர். இந்த செய்தி குஜராத் தலித்  மக்களை கொதித்தெழச் செய்துவிட்டது. மாட்டுத் தோலை விற்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டவர்கள் தலித் மக்கள். செத்த மாடுகளின் தோலை உரிக்கக் கூடாது என்று  ஆர்.எஸ்.எஸ். கும்பல் வன்முறையில் ஈடுபடுவது அவர்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கிறது. இனி  செத்த மாடுகளை புதைக்க மாட்டோம் என்று குஜராத்தில்  தலித் மக்கள் அறிவித்து விட்டதால், 200 செத்த மாடுகள் புதைக்கப்படாமல் துர்நாற்றம் அடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் சபர்மதியில் தலித்  மக்கள் கடந்த ஞாயிற்றுக்...

காந்தியின் ஆயுளை பொய்யாக்கியது சோதிடம்!

மக்களின் அறியாமையையும்  மூடநம்பிக்கையையும் பயன்படுத்தி வெளி வந்த இதழ்களுள், ‘பாரத தேவி’ என்ற சோதிட  இதழும் ஒன்றாகும். இந்நூலின் 16.8.1947-ந் தேதி இதழில்  காந்தியைப் பற்றி, ‘புகழ் பெற்ற’ சோதிடரான வி.கே. கிருஷ்ண மாச்சாரி என்பவரால் ஒரு  சோதிடக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   “காந்தியடிகள் பிறந்தது சிம்ம லக்கனம், மக நட்சத்திரம். விடியற்காலம் மக நட்சத்திரத்தில் ஜனித்தவர்களுக்கு தீர்க்காயுள் யோகம் உண்டு. இதேபோல் சிம்ம லக்கனமும் நீண்ட ஆயுள் தரக் கூடியது.”  “மேலும் ஜன்ம லக்கனம்,  சிம்மமாகவும், அதில் சந்திரன் ஆயுள் ஸ்தானாதிபதியான குரு தசம கேந்திரத்தில் நின்று லக்னாதிபதியான சூரியனையும், ஆயுள்காரனாகிய சனியையும்  பார்ப்பதனாலும் பரமாயுள் என்ற  கணக்கான 120 வருஷங்கள் மகாத்மாவுக்கு ஆயுள் உண்டு.  “தவிர, முன் காலத்தில் தப சிரேஷ்டர்களான ரிஷீஸ்வர்கள்  தமது தபோ மகிமையால் ஆயிரக்கணக்கான வருஷங்கள்  ஜீவித்ததுபோல் காந்தியடிகள்  தமது தெய்வ பிரார்த்தனையால் ஆயுள் விருத்து செய்து கொண்ட ஜாதக ரீதியாக ஏற்படும் பரமாயுள் 120 வருஷங்களுக்கு அதிகமாகவே ஜீவித்திருப்பாரென்பது எனது...

அஸ்வினி-மதிவதணன் வாழ்க்கை ஒப்பந்த விழா

அஸ்வினி-மதிவதணன் வாழ்க்கை ஒப்பந்த விழா

26-6-2016 ஞாயிறு அன்று பகல் 11-00 மணிக்கு புதுச்சேரி, முத்தியாலுபேட்டை அம்பாள் திருமண மண்டபத்தில், விரட்டு வீதி நாடகக் குழு கலைஞர்களும், கல்லூரிகளில் துணைப் பேராசிரியர்களாகப் பணியாற்றுவோருமான, தோழர்கள் சி.அ.அஸ்வினி – மதிவதணன் ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஏற்புவிழா, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மருத்துவர் எழிலன், தலித் சுப்பையா, யாழன் ஆதி, சேலம் வி.சி.க.தலைவர் நாவரசன், கோகுல் காந்திநாத் ஆகியோரின் விழா விளக்கவுரைகளைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒப்பந்த உறுதிமொழிகளை கூறச் செய்து வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைத்தார். தாலி தவிர்க்கப்பட்ட இவ்விழாவில் மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தங்க சங்கிலிகளை அணிவித்தனர். வாழ்க்கை ஒப்பந்த விழாவுக்கு முன்னதாக பறையிசை, கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கிராமப்புற பாடல்கள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நிகழ்ந்தது. மணமக்கள் இருவரும் பறைமுழக்கத்தில் பங்கேற்று பறை அடித்தது குறிப்பிடத்தக்கது. விழாவை விரட்டு வீதி நாடகக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் மிக சிறப்பாக ஒழுங்கமைத்தார். விழாவில் புதுவை மாநில கழக அமைப்பாளர் தந்தை பிரியன், வழக்கறிஞர்...

விண்வெளியில் பறக்கும் தட்டுகள் உருவாவது எப்படி?

விண்வெளியில் பறக்கும் தட்டுகள் உருவாவது எப்படி?

பறக்கும் தட்டுகள் (Flying saucers) பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். வானிலிருந்து மனிதர்கள் பூமிக்கு வருவதாக புரட்டுகளை பரப்புகிறார்கள். அது மிகவும் அதிசய மானது என்றும் அதைப் பற்றி நம்ப முடியாத கட்டுக் கதைகளையும் இது வரையிலும் கூறி வந்தனர். இப்பொழுது ஆராய்ச்சியாளர்கள் குறிப்பாகக் கணித ஆராய்ச்சியாளர்கள் பறக்கும் தட்டு உருவாகும் விதத்தைக் கணிதத்தின் புதிய பிரிவான catastrophe Theory  மூலம் விளக்கியுள்ளனர். அதாவது ஒளி அலைக்கற்றையானது ஒரு நீள்வட்ட ஊடகத்தில் பாயும் பொழுது ஒரு வகையான ஒளிக்கூடு ஏற்படுகிறது. இதை காஸ்டிக் (caustic) என்பர். அது லேசான காற்றில் ஒரு வகையான மாற்றத்தால் புதிய காஸ்டிக்காக உருவாகிறது. இது தட்டுப் போன்ற அமைப்புக் கொண்டது. பனி மூட்டத்தின் மீதோ அல்லது தூசு மண்ட லத்தின் மீதோ பாயும் பொழுது இது போன்ற காஸ்டிக்குகள் உருவாகும். பனிப் படலமும் தூசு மண்டலமும் நகரும் பொழுது இந்த காஸ்டிக்குகளும் நகரும். இதையே பறக்கும் தட்டுகள் என்று கூறு கின்றனர். ஆதாரம் : V.I. Arnold, catastrophe Theory  spring, Berlin  1984. பெரியார் முழக்கம் 28072016 இதழ்

மகிழ்வோடு; தார்சூடு!

மகிழ்வோடு; தார்சூடு!

பெண்களின் மறுமணத்தை வலியுறுத்தி புரட்சிக் கவிஞர் எழுதிய பாடல் இது. “என்னருமைத் துணைவி! நானோ கொடிய நோயினால் வருந்துகிறேன். இனி பிழைத் திருப்பேன் என்று சொல்வதற்கில்லை. ஆகவே என் மனத்திலுள்ளதைச் சொல்லுகிறேன் கேள். நான் இறந்தபின், நீ என்னையே எண்ணிக் காலங்கழிக்காதே. என்னை மறந்துவிட்டு மகிழ்வுடன் இரு! உன் மனத்துக்குரியவனை மணந்து வாழு! “வைதீக மிரட்டலுக்கு அஞ்சாதே; மலர் மாலை சூடி மகிழுடனே வாழ்வாய்” என்று கூறி மகிழ்ச்சியுடன் உயிரைவிட்டான் வீரத் தமிழன்.   இதை அழகுற எடுத்துக் கூறுகிறார் புரட்சிக் கவி பாரதிதாசன். “பெண்ணே! கண்ணே!! கண்மணியே!!! கடும்பிணியாளன் நான் இறந்தபின், மாதே! கைம்பெண்ணாய் வருந்தாதே பழிஎன்றன் மீதே. அடஞ்செய்யும் வைதீகம் பொருள்படுத்தாதே! ஆசைக்குரியவனை நாடு – மகிழ்வோடு – தார்சூடு – நலம் தேடு.” – புரட்சிக் கவிஞர் பெரியார் முழக்கம் 28072016 இதழ்

பெண்கள் மீதான தீண்டாமை!

பெண்களை மாதந்தோறும் தீண்டாமைக்கு உள்ளாக்கும் ஒரு நிகழ்வு இன்னும் தொடர்கிறது. பெண்களைக் கீழானவர்கள் என்ற உளவியலைக் கட்டமைக்கும் இந்தத் தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது குறித்து தமிழ் ‘இந்து’ நாளேட்டில் (ஜூலை 24) வெளி வந்த கட்டுரையி லிருந்து சில பகுதிகள்: நீந்த, ஓட, நடனம் ஆட, விளையாட, குத்துச்சண்டை போட, சைக்கிள் ஓட்டத் தயார் நிலையில் நிற்கும் பெண்கள். அவர்களின் உடல் உறுப்புகளிலிருந்து இரத்தம் கசிகிறது. இப்படிப் புறச் சூழலால் உண்டான காயங்களால் இரத்தம் வழிந்தாலும் மாதவிடாய் காரணமாக உடலுக்குள்ளிருந்து இரத்தம் கசிந்தாலும் அத்தனை பெண்களும் மீண்டும் எழுகிறார்கள். தன்னைத் தானே உந்தித் தள்ளித் தடைபட்ட பயணத்தை மீண்டும் தொடர்கிறார்கள். ‘நோ பிளட் ஷுட் ஹோல்ட் அஸ் பேக்’ (‘NO blood should  hold us  back’), ‘டோன்ட் லெட் யுவர் பீரியட் ஸ்டாப் யூ’ (Don’t let your period stop you) என்கிற வாசகங்களுடன் சானிட்டரி பேடுக்கான ஒரு பிரிட்டன் விளம்பரப் படம் கம்பீரமாக பறைசாற்றுகிறது. பெண்ணுரிமைப் பார்வையில் இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண் தன்னுடைய கனவை, வேட்கையை, இலக்கை நோக்கித் துணிந்து வீறுநடை போட ஒருபோதும்...

குரங்குகளிடமிருந்து பெற்ற மனித கைரேகைகள்

தோழர் மா. சிங்காரவேலர் எழுதிய “விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்” மிகச் சிறப்பான அறிவியல் விளக்கங்களைக் கொண்டுள்ள நூல். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் 1934ல் இதை முதலில்  வெளியிட்டது. அதிலிருந்து ஒரு பகுதி: கையிலுள்ள கோடுகளைப் பார்த்து ஜோஸ்யம் சொல்லுவது உலக முழுமையும் பரவியுள்ள ஓர் வித்தையாகும். அது வெறும் பழக்கமே அல்லாது உண்மை யல்ல. நமது கையிலுள்ள கோடு களைப் போல் நமது ஒரு காலத்து பூர்வபங்காளிகளாகிய  வாலில்லாக் குரங்குகளுக்கும் உண்டு. இன்னும் தூரப் பங்காளிகளாகிய (Distnat cousing) வாலுடைய குரங்குகளுக்கும் கையில் கோடுகள் இருக்கின்றன. ஆனால் காட்சிச் சாலைகளில் வசிக்கும் காட்டு மனிதக் குரங்குகளின் கைகளைப் பார்த்து ஜோதிடம் சொல்வார் யாருமில்லை. நமது கைகளில் இருக்கும் கோடுகள் (Grooves) நமது காலத்தில் நமது குரங்கு மூதாதைகள் மரத்தில் தாவிப் பிடித்து தாண்டும் போது உண்டான தோல் மடிப்புகள். அந்த வம்சத்தலிருந்து வந்தவர்களாகிய நமக்கும் அந்த மடிப்புகள் பரம்பரை வழியாக (Hereditory) தோன்றுகின்றன. நமது கைக்கோடுகள்...

இப்படியும் இருந்தன மூடநம்பிக்கைகள்!

தேவதாசி பிரதா: ஒரு இளம் பெண்ணின்வாழ்க்கையை கடவுளின் கவுரவத்திற்கு தியாகம் செய்வது என்ற பெயரால் சாகடிப்பது; தேவதாசி முறையில் ஒரு இளம் பெண்ணைத் கடவுளுக்கு மணம் முடிப்பது; அதன் மூலம் பாலியல் தொழிலில் இளம் பெண்ணை உள்ளாக்குவது; கங்கை நதியில் மூழ்கி தனது உயிரை மாய்த்துக் கொள்வது; இவை போன்ற இளம் பெண்களுக்கு இழைக்கும் சமூக  பழக்கவழக்கம் எனும் கொடுமைகள் ‘தேவதாசி பிரதா’ எனும் பெயரில் நடந்தது.   காஸிகர்வதா: காசியில் உள்ள விஸ்வேஸ்வ நாத் ஆலயத்தில் ஒரு தீர்த்தக் கிணறு இருந்தது. மோட்சம் அடைய விரும்புபவர்கள் அந்தக் கிணற்றில் வீழ்ந்து மரணம் அடைந்தால் மோட்சமடைந்து விடலாம் என்ற நம்பிக்கை. இது பண்டைய மூடநம்பிக்கை.   சதி பிரதா : கணவன் இறந்துவிட்டால் அவனோடு மனைவியும் உடன்கட்டை ஏறி எரிந்து உயிருடன் சாக வேண்டும். இளம் மனைவி மறுத்தால் உறவினர் சேர்ந்து பலாத்காரமாக அவளை எரியும் நெருப்பில் தள்ளி விடுவார்கள். இது பண்டைய மூட நம்பிக்கை....

‘கங்கா தீர்த்தம்’ உடலுக்குக் கேடு!

‘கங்கா தீர்த்தம்’ உடலுக்குக் கேடு!

கங்கை நீரை பாட்டில்களில் அடைத்து அஞ்சலகங்களில் விற்பதற்கு மோடி ஆட்சி ஏற்பாடு செய்துள்ளது. பிணங்களும் இராசயனக் கழிவுகளும் கலந்து நிற்கும் கங்கை – உலகின் மிக மோசமான நதிகளில் ஒன்று. கங்கையை தூய்மைப்படுத்துவதற்கு மோடி ஆட்சியே ரூ. 25,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அந்த அசுத்தத் தண்ணீரை ‘புண்ணிய நீர்’ என்று என்று பக்தர்கள் குடிப்பதற்கு விற்பனை செய்வது மக்களின் உடல்நலனுக்கு தெரிந்தே இழைக்கப்படும் கேடு. பக்தி என்ற பெயரால் அறிவியலை சமூகம் இழந்து நிற்பதற்கு இதைவிட வேறு சான்று  வேண்டுமா? சென்னை பல்கலைக்கழகத்திலேயே இந்திரா காந்தி என்ற ஆய்வாளர் மயிலாப்பூர் கோயில் குறித்து ஆய்வு நடத்தினார். கோயிலில் கர்ப்பகிரகத்துக்குள் ‘மூல விக்ரகத்துக்கு’ ஒவ்வொரு நாளும் அர்ச்சகர்கள் ‘அபிஷேகம்’ (அதாவது சிலையில் தண்ணீர் ஊற்றுதல்) நடத்துகிறார்கள். இந்த ‘அபிஷேக தீர்த்தத்தை’ கிண்டியிலுள்ள ‘கிங் இன்ஸ்டியூட்’ எனும் ஆய்வு மய்யத்துக்கு சோதனைக்கு அனுப்பினார், அந்த ஆய்வாளர். அதில் நோய் உண்டாக்கும் கிருமிகள் இருப்பதை தனது ஆய்வில் பதிவு செய்தார். இந்த...

அய்யப்பன் மகர ஜோதி ‘மர்மம்’ என்ன?

அய்யப்பன் மகர ஜோதி ‘மர்மம்’ என்ன?

சபரி மலையில் ஆண்டுதோறும் ‘மகர ஜோதி’ என்ற வெளிச்சம் தோன்றும். இது அய்யப்பன் சக்தியால் ஆண்டுதோறும் தானாக தோன்றும் ஒன்று என்று நம்ப வைக்கப்பட்டது. அய்யப்பன் கோயிலுக்குப் போகிறவர்கள், இந்த ‘மகர ஜோதியை’யும் தரிசிப்பது ஒரு சடங்கு. இது உண்மையல்ல. திருவனந்தபுரம் கோயில் தேவஸ்தானம் தான் மின் வாரிய ஊழியர்களைப் பயன்படுத்தி வெளிச்சத்தை  உருவாக்குகிறது. அன்றைய கேரள முதலமைச்சர் ஈ.கே. நயினார், இந்த மோசடியை அம்பலப்படுத்துவதற்குச்  சென்ற கேரள மாநில பகுத்தறிவாளர் குழுவிடம் உண்மையை ஒப்புக் கொண்டார். பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சேனல் இடமருகு இதை அம்பலப்படுத்த ‘மகர ஜோதி’ தெரியும் பொன்னம்பல மேடு என்ற பகுதிக்கு தனது குழுவினருடன் செல்ல திட்டமிட்டார்.அதற்கு முன் கேரள முதல்வர் ஈ.கே. நயினாரை சந்தித்து ஒப்புதல் பெறச் சென்ற போது, ஈ.கே.நயினாரே இந்த உண்மையை வெளி யிட்டார். 5.1.1990 அன்று பி.டி.அய். செய்தி நிறுவனம் இதை வெளியிட்டது. முதல்வரின் கருத்தும் ஒலிப் பதிவு நாடாவில் பதிவு செய்யப்பட்டது. பி.டி.அய். செய்தி நிறுவனம் கேரள முதல்வர் கூறியதாக...

சோதிடத்தைப் பற்றிஆச்சாரியார்!

சோதிடத்தைப் பற்றிஆச்சாரியார்!

ஜோதிடத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று  இராஜகோபாலாச்சாரி (இராஜாஜி)  கூறியிருக்கிறார்.  அவர் மேற்கு வங்க முதல் ஆளுநராக இருந்தபோது  அஜந்தாவுக்கும் எல்லோராவுக்கும் போகும் வழியில் அவுரங்காபாத்தில் வரவேற்பொன்று அளித்தனர். வரவேற்புரையில் அவரை அளவுக்கு மீறி வரம்பின்றிப் புகழ்ந்து வைத்தனர். இராஜாஜியின் முழுப் பெயரில் உள்ள எழுத்துக்களைக் கூட்டி, அதை வைத்து, ‘எண் சோதிடம்’ கூறுவதாக அவரை ஒரேயடியாக புகழ்ந்து  நல்ல பலன்களாகவே கூறினர். இவைகளுக்கு இராஜாஜி பதிலளித்துப் பேசுகையில், “உண்மையைக் கூற வேண்டுமானால், நான் ஜோதிடத்தை நம்புவதில்லை; எனக்கு அதில்  நம்பிக்கை இல்லை; அதை நம்பக் கூடாது என்று  உங்களையும் நான் எச்சரிக்கிறேன். ஜோதிடத்தில் அப்படியே ஏதாவது இருந்தாலும் அதை  நட்சத்திரங்களைக் கொண்டு எதிர்காலத்தை அறிவதாகக் கூறுவது சிறிதுகூட அறிவுடைமையாகாது. மாலையை அணிவித்து வரவேற்புரையும் கூறினீர்கள். இவற்றில் மாலையைத்தான் நான் ஏற்றுக் கொள்வேன். ஏனெனில், அதை நான் என் கழுத்திலிருந்து எடுத்துவிட முடியும்; நீங்கள் கூறிய புகழுரைகள் என்னைக் கவலைக்குள்ளாக்குகின்றன”  என்றார். (இராஜாஜியின் இராணுவச் செயலாளராக ...

‘பால்ய விவாகம்’: அன்றும் இன்றும்!

பார்ப்பனியம் சமூகத்தில் திணித்த பல கொடுமைகளில் ‘பால்ய விவாகம்’ என்ற குழந்தைத் திருமணமும் ஒன்று. 5 வயது, 6 வயதிலேயே திருமணம் செய்யும் கொடுமை பார்ப்பனர்களால் திணிக்கப்பட்டது. பார்ப்பனக் குடும்பங்களில் இது அதிகம் நடந்தது. இதனால் பெண் குழந்தைகள் மரணமும் இளம் விதவைகள் எண்ணிக்கையும் அதிகரித்தது.  “பெற்றோர்களும் தாங்களாகவே முன் வந்து திருமண  வயதை உயர்த்த உறுதி ஏற்கவேண்டும்” என்று, பூனா பார்ப்பனரும், ‘சீர்திருத்தவாதி’யுமான ராணடே வேண்டுகோள் விடுத்தார். இந்து தர்ம சாஸ்திரங்களில்  அதற்கு இடமில்லை என்று சங்கராச்சாரிகளும் வைதீகப் பார்ப்பனர்களும் மறுத்து விட்டனர். திருமண வயதை உயர்த்தி சட்டம் போடுவதைத் தவிர வேறு வழியில்லை  என்று பிரிட்டிஷ் ஆட்சி முயற்சித்தபோது சுதந்திரப்  போராட்ட வீரராக சித்தரிக்கப்பட்ட மராட்டிய பார்ப்பனர் திலகர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  “நமது சமூகப் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை ஒழுங்குபடுத்தும் வேலையில் அரசாங்கம்  இறங்குவதை நாங்கள் விரும்பவில்லை” என்று தான்  நடத்தி வந்த ‘மராட்டா’ பத்திரிகையில் எழுதினார். அப்போது குஜராத்தைச்...

‘பேய்’ உண்டா? சவால் விட்டவர்கள் ஓட்டம்

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை ஒன்றியம் கோளம்பட்டி கிராமத்தில் சோழ ராஜா கோயில் இருக்கிறது. ஆடி மாதத்தில் மூன்று நாள்கள் நடக்கும் இந்தக் கோயில் திருவிழாவில் கொடூரமான சித்திரவதைகள் அரங்கேறுகின்றன. பேய் பிடித்ததாகக் கூறப்படும் பெண்களைக் கொண்டு வந்து  நிறுத்தி, முகத்தில் தண்ணீரைத் தெளித்து, சாம்பிராணி புகைப்போட்டு, ‘உனக்கு பேய் பிடித்திருக்கிறது. அது எந்த ஊர் பேய்?” என்று  கேட்டு சாட்டையால் இரத்தம் சொட்ட சொட்ட அடிக்கிறார்கள். அடி தாங்க முடியாத பெண்கள், ‘பேய் ஓடி விட்டது’ என்கிறார்கள். அந்தப் பெண்ணின் தலை முடியை எடுத்து ஓர் ஆணியில் சுற்றி அப்பகுதி புளிய மரத்தில் அடிக்கிறார்கள். பேயைப் பற்றி காசார் பிரைட் என்ற பிரிட்டனைச் சார்ந்தவர் ஓர் ஆய்வை நடத்தினார். 800 வருட பழமையான பங்களா ஒன்றில் ‘பேய் பிசாசு’ பிடித்தவர்கள் என்று கூறப்பட்டவர்களை கொண்டு போய் தங்க வைத்து, அவர் ஆய்வு செய்தார். குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது  வழக்கத்துக்கு அதிகமான ‘காந்தப்...

பயணத்துக்கு தயாராகிறது சத்தியமங்கலம் அணி

17.07.2016 ஞாயிறு மாலை 4 மணிக்கு கோபி மாவட்ட  அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நாத்திகசோதி மற்றும்  மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தின சாமி தலைமையிலும், மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், மாவட்ட செயலாளர் பவானி வேணு கோபால் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. 07.08.2016 அன்று சத்திய மங்கலத்தில் துவங்க உள்ள “நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்கள!” என்ற அறிவியல் பரப்புரை அணியை சிறப்பாக வழிநடத்தி ஆத்தூரில் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிறைவு நாள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிப்பது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் தோழர்கள் நிவாசு, சதுமுகை பழனிச்சாமி, இரகுநாதன், கிருட்டிணமூர்த்தி, தங்கம், அறிவு, அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழ்க்கண்டவாறு சத்தியமங்கலம் அணியின் பரப்புரைப் பயண அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. “நம்புங்க அறிவியலை! நம்பாதீங்க சாமியாரை!” அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத் திட்டஅட்டவணை பின்வருமாறு. 07.08.2016 (ஞாயிறு) : காலை : 10 மணி சத்தியமங்கலம் துவக்கம்; முற்பகல் :...

சுப்ரமணியம்-நந்தினி மணவிழா

சுப்ரமணியம்-நந்தினி மணவிழா

9.6.2016 வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடி, மூப்பனார் திருமண மண்டபத்தில் தெனாம் துரை, பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த அம்சவள்ளிராஜேந்திரன் புதல்வன் இரா.சுப்பிரமணியன், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் பரூர் மதுராப்பட்டி கிராமம் தங்கமணி-பொன் மணியன் புதல்வி சு. நந்தினிக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. முருகன்குடி ஆசிரியர் சி.பழனிவேல் முன்னிலை வகித்தார். மேலும் மா.லெ.கட்சி, மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் ராமர், பெண்ணாடம் மனித நேய பேரவை அமைப்பாளர் பஞ்சநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மணமகனின் சகோதரர் இரா. பழனிவேல் அனைவரையும் வரவேற்றார். மணமக்கள் நன்றி கூறினர். மணவிழா மகிழ்வாக கழகத்துக்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 14072016 இதழ்

நுழைவுத் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் கழகம்-ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

நுழைவுத் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் கழகம்-ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்யக் கோரியும், தனியார் பள்ளிகளில் 25ரூ இட  ஒதுக்கீட்டை முழுமையாக நடை முறைப்படுத்தவும், பள்ளிகளில் சமஸ்கிருத திணிப்பை கைவிடக் கோரியும். தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் மாநில அமைப்பாளர் பாரி சிவக்குமார் தலைமையில் 7.7.2016 அன்று காலை 10.30 மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஆளுநர் மாளிகை அருகே திரண்ட தோழர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர் பின்னர் ஊர்வலமாக சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்ட மாணவர்கள் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். இப் போராட்டத்தில் தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ், விவேக், பல்லடம் மதிவாணன், மயிலாடுதுறை கார்த்திக், மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளை சேர்ந்த பாரி மைந்தன், பார்வைதாசன், பகலவன், ரம்யா, கலை, செம்பியன் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம்...

சமஸ்கிருதத் திணிப்பை முறியடிப்போம்! கழகக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

சமஸ்கிருதத் திணிப்பை முறியடிப்போம்! கழகக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

எந்த ஒரு மாநிலமும் சமஸ்கிருதம் பேசும் மக்களைக் கொண்டிருக்காத போது, சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக ஏற்க முடியாது. எனவே ஆட்சி மொழிப் பட்டியலி லிருந்து அதை நீக்கக் கோரியும், மத்திய அரசு அய்.அய்.டி., சி.பி.எஸ்.ஈ., பள்ளிகளில் சமஸ்கிருத்தைப் பாடமாக திணிப்பதைக் கண்டித்தும் கல்வி உரிமையை பொதுப் பட்டியலிலிருந்து நீக்கி மீண்டும் மாநில உரிமைப் பட்டியலுக்குக் கொண்டு வர வலியுறுத்தியும், கடந்த 8 ஆம் தேதி தமிழகம் முழுதும் திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அது குறித்த செய்திகளின் தொகுப்பு:   சென்னையில் கல்வியில் மத்திய பா.ஜ.க. அரசின் சமஸ்கிருததிணிப்பை கண்டித்தும், மத்திய அலுவல் மொழிபட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் 08.07.2016 வெள்ளிக்கிழமை காலை 10  மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரியாரியல் சிந்தனையாளர் வாலாசா வளவன் (மா.பெ.பொ.க), கண்ணன் (மக்கள் விடுதலை), தந்தை பெரியார்  திராவிடர் கழகத்தின் சார்பில்...

தலையங்கம் – தோழர்களே தயாராவீர்!

தலையங்கம் – தோழர்களே தயாராவீர்!

மக்களை சந்திக்கும் பரப்புரைப் பயணங்களை தொடர்ச்சியாக  முன்னெடுத்து வரும் பெருமை திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு  உண்டு. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் தழுவிய பரப்புரை இயக்கத்தை நடத்தினர். மக்களிடம் ஜாதிய அமைப்பின் கொடூர முகங்களை விளக்கினர். ஆங்காங்கே சில ஜாதி வெறி சக்திகள் உருவாக்கிய ‘சலசலப்புகளை’ முறியடித்துப் பயணம் தொடர்ந்தது. அடுத்து இந்த முழக்கம் மேலும் விரிவாக்கப்பட்டது. “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்” என்ற முழக்கத்தை மக்களிடம் கழக செயல் வீரர்கள் கொண்டு சென்றார்கள். இந்தப் பயணம் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மட்டுமல்ல; பிற்படுத்தப்பட்ட இளைஞர்களும் வேலை வாய்ப்பு வாழ்வுரிமை இழந்து நிற்கும் அவலங்களை பட்டியலிட்டு மக்களிடம் விளக்கியது.  பிற்படுத்தப்பட்டோரிடையே ஜாதி வெறியைத் தூண்டி, ஜாதி சங்கம் உருவாக்கி, அரசியலுக்குப் பயன்படுத்தும் சக்திகளின் சுயநலத்தையும் அந்தப் பரப்புரை கேள்விக்குள்ளாக்கி யது. ‘ஒடுக்கப்பட்ட இளைஞர்களே, ஜாதி சங்கத் தலைவர்களின் வலையில் விழுந்து விட்டில்...

‘நம்புங்க-அறிவியலை; நம்பாதீங்க-சாமியார்களை’  அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை  4 முனைகளிலிருந்து ஆகஸ்டு 7இல் புறப்படுகிறது

‘நம்புங்க-அறிவியலை; நம்பாதீங்க-சாமியார்களை’ அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை 4 முனைகளிலிருந்து ஆகஸ்டு 7இல் புறப்படுகிறது

மக்களிடம் அறிவியல் சிந்தனைகளையும் பகுத்தறிவு கருத்துகளையும் விளக்கி, ‘நம்புங்க-அறிவியலை; நம்பாதீங்க-சாமியார்களை’, ‘அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை’ என்ற முழக்கத்தோடு, பரப்புரைப் பயணத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகம் திட்டமிட்டுள்ளது. ஆகஸ்டு 7ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி  வரை தமிழகம் முழுதும் நான்கு முனைகளிலிருந்து பரப்புரை பயணக் குழு புறப்படுகிறது. சத்தியமங்கலம் – சென்னை – மயிலாடுதுறை – திருப்பூரிலிருந்து 4 அணிகளும் தனித் தனி யாகப் புறப்பட்டு, மக்களிடம் அறிவியல்  கருத்துகளையும் மூடநம்பிக்கைகளால்  சமூகத்தின் பாதிப்புகளையும்  விளக்கிப் பேசுவார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் என்றால் கருவிலேயே அழிக்கும் பெண் சிசுக் கொலை, 18 வயது முழுமையடைவதற்கு முன்பே சிறுமிகளாக இருக்கும் பெண்களுக்கு ‘மரபு வழக்கம்’ என்ற பெயரால் நடத்தப்படும் இளம் வயது திருமணத்தால் பெண்களுக்கு உடலியல், உளவியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் – பறிக்கப்படும் பெண்களின்  உரிமைகள்; பெண்களிடம் அவர்களின் மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்தி ஏமாற்றி கெடுக்கும் சாமியார்கள் மோசடி, ‘பேய்- பில்லி-சூன்யம்’ என்ற கற்பனைகள்...

திராவிட மொழியையும்…

திராவிட மொழியையும்…

“திராவிட மக்களைப் பிரித்துப் பாழ்படுத்தியது போலவே திராவிட மொழியையும் பலவாறாகப் பிரித்துப் பாழ்படுததி அதற்கு எழுத்து எல்லாம் ஆரியமயமாக்கி திராவிட மக்களுக்கு நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும் இல்லாமல் போகும்படி ஆரியர்கள் செய்து விட்டதோடு, திராவிட நூல்களையும், கலாச்சாரங்களையும் பாழ்படுத்தி ஆரிய நூல்களும் ஆரிய கலாச்சாரங்களுமே திராவிடர்களிடையே தலைசிறந்து விளங்கும்படி திராவிடம் அடிமைப்படுத்தப்பட்டாகிவிட்டது.” – பெரியார் ‘விடுதலை’ 27.11.48 பெரியார் முழக்கம் 07072016 இதழ் (பார்ப்பனிய சமஸ்கிருத எதிர்ப்பு சிறப்பிதழ்)

பனகல் அரசர் தந்த பதிலடி

பனகல் அரசர் தந்த பதிலடி

மருத்துக் கல்லூரியில் பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்பதற்காக பார்ப்பனர்கள் ஒரு சூழ்ச்சிகரமான திட்டத்தை பிரிட்டிஷ் ஆட்சியில் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி அமுல்படுத்தி வந்தார்கள். ‘மருத்துவம் படிக்க ஒரு மாணவர் விண்ணப்பித்திருந்தால் அவருக்கு கட்டாயம் ‘சமஸ்கிருதம்’ தெரிந்திருக்க வேண்டும்’ என்று விதி உருவாக்கினார்கள். இந்த சூழ்ச்சியை முறியடித்தவர், சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சி ஆட்சியில் முதல்வராக இருந்த பனகல் அரசர் இராமராயர். மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கி உத்தரவிட்டார். 1923 முதல் 1926 வரை சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தார். கோயில்களை பார்ப்பனர் பிடியிலிருந்து மீட்க அற நிலையப் பாதுகாப்பு சட்டம் கொண்டு  வந்தது உள்ளிட்ட பல சீர்திருத்த சட்டங்களைக் கொண்டு வந்ததால் பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புக்குள்ளானார். ஒரு கல்லூரி வரவேற்பில் அவரை அவமதிக்கும் நோக்கத்தோடு பார்ப்பனர்கள் ‘சமஸ்கிருத’த்திலே வரவேற்பு பத்திரம் வாசித்தனர். பனகல் அரசருக்கு சமஸ்கிருதம் தெரியாது என்ற மமதையிலும் மருத்துவக் கல்லூரி...

மின்சார கம்பிக்குள் பாய்ந்த ‘தீட்டு’!

மின்சார கம்பிக்குள் பாய்ந்த ‘தீட்டு’!

‘சமஸ்கிருதம்’ ஒரு மொழி என்ற எல்லையை யும் தாண்டி, பார்ப்பனிய ‘நால் வர்ண’ ஏற்றத் தாழ்வுகளையும் தன்னுடன் பிரிக்க முடியா மல் இணைத்துக் கொண் டிருக்கிறது. ‘பிராமணன்-சூத்திரன்’ என்ற பிறவி ஏற்றத் தாழ்வு கொடுமை களை சமூகத்தின் விதி களாக்கும் ‘மனு சாஸ் திரம்’ – சமஸ்கிருதத்தில் தான் இருக்கிறது. ‘நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்’ என்று கிருஷ்ணன் கூறும் பகவத் கீதையும் சமஸ்கிருதத்தில் தான் இருக்கிறது. ‘பிரம்மம்’, ‘பிராமனம்’ இவற்றுக்குள்தான் உலகமே அடக்கம் என்று கூறும் ஆரிய – பார்ப்பன ஆதிக்கத்தை  வலியுறுத் தும் சமஸ்கிருத கருத்து கள் காலாவதியாகி விட்டன. இனி நாகரிக சமூகத்துக்கு அவை தேவை இல்லை என்று சமஸ்கிருத பெருமை பேசும் பா.ஜ.க. ஆட்சியோ, ‘சங் பரிவார்’ அமைப்புகளோ அறிவிப் பார்களா? சவால் விட்டுக் கேட்கிறோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவர், சமஸ்கிருத்தைப் படித்தாலும் அவர் ‘வேத சமஸ்கிருதம்’ படித்த பார்ப்பனர்களோடு சமமாக மதிக்கப்படுகிறார்களா? இல்லை....

பொருள் தெரியாத உளறல்!

பொருள் தெரியாத உளறல்!

மறைந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத்  அர்த்தம் புரியாமல் வேதம் படித்த தனது அனுபவத்தை இவ்வாறு கூறுகிறார்: ஒன்பதாவது வயது முதல் ஆறாண்டு காலம் ரிக் வேதம் முழுவதையும் மனப் பாடமாகப் பயிலுவதற்காக நான் செல வழித்தேன். குடும்பப் பாரம்பரியத்தோடு ஒட்டிய ஒரு ஏற்பாடு இது. அறுபது ஆண்டு களுக்கு முன்னால் அது நடை பெற்றது. நம்பூதிரிகள் ரிக்வேதிகள், யஜுர் வேதிகள், சாமவேதிகள் என்று பிரிக்கப்பட் டுள்ளனர். அந்தந்தப் பிரிவைச் சேர்ந்த ஆண் பிள்ளைகள் இளமையில் ஒரு முறையாவது அவர்களுக்குரிய வேதங்களை குருவிடமிருந்து நேரடியாகக் கேட்பதும் சுயமாகப் பாராயணம் செய்வதும் கட்டாய மாகும். அவர்களில் ஒரு பிரிவினராவது அவரவர் வேதங்கள் முழுவதையும் பாகம் பாகமாக திரும்பத் திரும்ப பாராயணம் செய்து மனப்பாடம் செய்து கொண்டனர். அவர்களில் நானும் ஒருவன். ஆனால் மனப்பாடமாகப் பயிலுவதைத் தவிர நாங்கள் உச்சரிப்பதன் பொருள் என்ன என்று இந்தச் சிறுவர்களோ அவர்களின் குருமார்களோ அறிந்திருக்க...

பரம்பரை இழிவுக்கு நிரந்தர ஆதரவு!

பரம்பரை இழிவுக்கு நிரந்தர ஆதரவு!

“தமிழ்நாட்டில் பல காலமாக சமஸ்கிருதம் என்கின்ற ஒரு வடமொழியை ஆரியர் இந்நாட்டில் புகுத்தி அதற்குத் ‘தேவ பாஷை’ எனப் பெயரிட்டுத் தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவைகளுக்கு அதில் சொன்னால்தான் புரியும். பயன்படும் என்று காட்டி நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள். சமஸ்கிருதம் பரவினால்தான் பார்ப்பனர் வாழ முடியும்; சுரண்ட முடியும்; நம்மை கீழ்சாதி மக்களாக ஆக்க முடியும். அவன் ‘பிராமணனாக’ இருக்க முடியும். அதன் நலிவு பார்ப்பன ஆதிக்கத்தின் சரிவு என்று உணர்ந்து ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ ஜாக்கிரதை யோடும் விழிப்போடும் காரியம் செய்து வருகிறார்கள்.”                – பெரியார் ‘விடுதலை’ (15.2.60) பெரியார் முழக்கம் 07072016 இதழ் (பார்ப்பனிய சமஸ்கிருத எதிர்ப்பு சிறப்பிதழ்)

பார்ப்பனர் பிழைப்புக்கு வந்த ‘காசி யாத்திரை’

பார்ப்பனர் பிழைப்புக்கு வந்த ‘காசி யாத்திரை’

தமிழர்கள் வாழ்க்கையில் பார்ப் பனர்கள் சமஸ்கிருத சடங்குகளைப் புகுத்துவதற்கு மேற்கொண்ட சூழ்ச்சிகளை ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங்கனார் அம்பலப்படுத்து கிறார். அவரது நூலிலிருந்து: ஒரு நானூறு ஆண்டுகளுக்கு முன் விசயநகர மன்னர், தமிழ்நாட்டில் புகுந்து ஆளத் தொடங்கினர். அவர் களுக்கு வடமொழியிற் பற்று மிகுந் திருந்ததால் தமிழ் நாட்டவர் சடங்குகள் அனைத்தையும் அம்மொழியிலேயே நிகழ்த்தினால் நல்லது என்று நம்பினர். அதனால், ஆயிரக்கணக்கான ‘புரோகி தர்’களை ஆந்திர நாட்டிலிருந்து இறக்குமதி செய்து தமிழ் நாடெங்கணும் ஊருக்கு ஒருவராய்க் குடியேறவிட்டனர். அவர் களுக்கு வேண்டிய வீட்டு வசதி, வாழ்க்கை வசதி களையெல்லாம் செய்துதந்து, ஒவ்வொருவருக்கும் சடங்கு செய்து வைக்கக்கூடிய எல்லைகளையும் வகுத்துத் தந்தனர்; குறிப்பிட்ட எல்லைக்குள் நிகழும் சடங்குகள் அவ்வளவையும் ஒரு புரோகிதரே நடத்தி வைக்கும் தனி உரிமையையும் வழங்கினர். இப் புரோகிதர் குடியேறிய பிறகே, தமிழர் வீட்டுச் சடங்குகள் அனைத்தும் இப் புரோகிதர்களால் வடமொழியில் நடத்தி வைக்கப் பெறலாயின. சிலப்பதிகாரத்தில் காணப்படும்...

சமஸ்கிருதத்தைத் திணிக்காதே! சமஸ்கிருதத்தில் அறிவியலா?

சமஸ்கிருதத்தைத் திணிக்காதே! சமஸ்கிருதத்தில் அறிவியலா?

சமஸ்கிருதத்தில் பல அறிவியல் கருத்துகள் இருக்கின்றன என்கிறார்கள். கண்டம் விட்டு கண்டம் பாயும் – விமானங்கள் குறித்து சமஸ்கிருதத்திலேயே நமது முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர் என்று பேசினார் பிரதமர் மோடி! மனிதன் கற்பனையில் கண்ட கனவுகளும், அதில் உருவான எழுத்துகளுமே அறிவியலுக்கான ஆதாரங்கள் ஆகிட முடியாது. கோட்பாடு (தியரி), சோதனை (எக்ஸ்பெரிமென்ட்), கண்டறிதல் -இம் மூன்றையும் உள்ளடக்கிய செயல்பாடுதான் அறிவியல்! கண்டம் விட்டு கண்டம் பாயும் விமானங்கள் வேத காலத்தில் பறந்திருக்க முடியுமா? எரிபொருள் இல்லாமல் விமானம் பறக்க முடியாது. இரப்பர், அலுமினியம்  போன்ற பொருள்கள் இல்லாமல் விமானத்தையே வடிவமைத்திருக்கவும் முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக ‘பெர்னூலி’ கொள்கை, நியூட்டனின் விதிகள் தெரியாமல் பறப்பது பற்றிய ஒரு அடிப்படைப் புரிதலே வந்திருக்க முடியாது. “எல்லாம் நம்மிடத்திலே ஒரு காலத்தில் இருந்ததுதான். ஆனால் தொலைந்து போய்விட்டன” என்று பதில் கூறலாம். அது அறிவியலுக்கு எதிரானது. தொலைந்து போவது அவ்வளவு எளிது அல்ல. மனிதன் தனக்குப் பயன்படக்கூடிய...

மெக்காலே மீட்டுத் தந்த கல்வி உரிமை!

மெக்காலே மீட்டுத் தந்த கல்வி உரிமை!

பிரிட்டிஷ் ஆட்சியில் வைதீக வெறி பிடித்த பார்ப்பனர்கள், பார்ப்பனர்களுக்கு மட்டும் சமஸ்கிருத கல்லூரியை ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த அழுத்தத்தினால் பிரிட்டிஷ் ஆட்சி காசியில் ஒரு சமஸ்கிருத பள்ளியைத் தொடங்கி, அடுத்து கல்கத்தாவிலும் ஒரு சமஸ்கிருத பள்ளியை தொடங்கும் முயற்சிகளில் இறங்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்து மத சீர்திருத்தவாதியும் பார்ப்பனருமான இராஜாராம்  மோகன் ராய், “சமஸ்கிருதக் கல்வியானது இந்தியாவை என்றென்றும் இருளில் ஆழ்த்திவிடும். இந்திய குடிமக்களின் முன்னேற்றத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அக்கறை இருக்குமானால் கணிதம் இயற்கை தத்துவம், வேதியல் உடற்கூறு இயல் ஆகிய பயனுள்ள அறிவியலைக் கற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கவர்னர்  ஜெனரலுக்கு கடிதம் எழுதினார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வந்தன. பல ஆண்டுகாலம் கருத்து வேறுபாடுகள் நீடித்த பிறகு, பிரிட்டிஷ் அரசு சமஸ்கிருதக் கல்வித் திட்டத்தை கைவிட்டது. இந்த துணிச்சலான முடிவை எடுத்தவர் கவர்னர் ஜெனரல். அமைச்சரவை...

சமஸ்கிருதத்தில் வரவேற்பு: எதிர்த்தார் காந்தி

சமஸ்கிருதத்தில் வரவேற்பு: எதிர்த்தார் காந்தி

20.9.1927 அன்று திருச்சியில் பார்ப்பனக் கல்வி நிறுவனமான தேசியக் கல்லூரியில் காந்தியார் பேச வந்தார். பார்ப்பனர்கள் அவருக்கு சமஸ்கிருதத்தில் எழுதி வரவேற்பு பத்திரம் வாசித்தார்கள். காந்தியார் பேச எழுந்தார். பேச்சைத் தொடங்குவதற்கு முன்பு, ‘இந்தக் கூட்டத்தில் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் இருந்தால் கையை உயர்த்துங்கள்’ என்று கேட்டார். வெகுசிலரே கையை உயர்த்தினார்கள். “மிகப் பெரும்பாலாருக்கு சமஸ்கிருதம் தெரியாதபோது, அந்த மொழியில் ஏன் வரவேற்பு பத்திரத்தை தயாரிக்க வேண்டும்?” என்று  கேட்டார். பார்ப்பனர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. ‘வரவேற்புரையை தமிழில் எழுதியிருக்கலாம். வேண்டுமானாhல் அதன் மய்யக் கருத்தை இந்தியிலோ சமஸ்கிருதத்திலோ கூறியிருக்கலாம்’ என்றார். கூட்டம் முடிந்து திரும்பும்போது உடன் வந்த காகா கலேல்கர்  (இவர்தான் முதன்முதலாக அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர்  ஆணையத்தின் தலைவராக இருந்தவர் – மராட்டிய பார்ப்பனர்),  காந்தியிடம் இது குறித்து கேட்டார். -“உங்களுக்குத்தான்  சமஸ்கிருதம் பிடிக்குமே; அப்படி இருந்தும் ஏன் எதிர்த்தீர்கள்?”  அதற்கு காந்தியார் சொன்ன பதில் இது: “எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த மாணவர்களின்...

சங்கராச்சாரியுடன் வாதிட்ட வள்ளலார்

சங்கராச்சாரியுடன் வாதிட்ட வள்ளலார்

இறந்து போன காஞ்சி சீனியர் சங்கராச்சாரிக்கும் வள்ளலாருக்கும் ‘சமஸ்கிருதம்’ தொடர்பாக நேரடி மோதல் நடந்த வரலாறும் உண்டு. ஒரு முறை வள்ளலார், காஞ்சி சங்கராச்சாரியை சந்திக்கச் சென்றபோது ‘சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய்’ என்று சங்கராச்சாரி ஓங்கி அடித்துப் பேசியிருக்கிறார். அங்கேயே இதை ஏராளமான ஆதாரங்களைக் கொண்டு வள்ளலார் அவரிடம் மறுத்து வாதாடியிருக்கிறார். வள்ளலார் வரலாற்றை எழுதியுள்ள ‘சன்மார்க்க தேசிகன் என்ற ஊரன் அடிகள்’ நூலில் இந்த நிகழ்வை பதிவு செய்திருக்கிறார். ‘சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி என்று நீங்கள் கூறினால் தந்தை மொழி தமிழ் தான் என்று நான் கூறுவேன். தமிழ் இல்லாவிட்டால் பிறமொழிகள் வந்திருக்காது’ என்று பதிலடி தந்திருக்கிறார் வள்ளலார்.  ஊரன் அடிகள் அந்த சம்பவத்தை இவ்வாறு எழுதுகிறார். “ஆரிய அரசன் பிரகத்தனுக்கு – தமிழ் அறிவுறுத்துவான் வேண்டிக், கபிலன் குறிஞ்சிப் பாட்டினைப் பாடியதைப் போல் ஆரியமொழி மட்டுமே நன்கு உணர்ந்த சங்கராச்சாரிக்கு தென்மொழி, வட மொழி என்ற...

‘சமபந்தி’க்கு தடை போட்ட திருவையாறு சமஸ்கிருத கல்லூரி

‘சமபந்தி’க்கு தடை போட்ட திருவையாறு சமஸ்கிருத கல்லூரி

1940ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது, அன்றைய தஞ்சை மாவட்டம் திருவை யாற்றில் ஒரு சமஸ்கிருத கல்லூரி இருந்தது. அப்போது மாவட்டம் தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு மாவட்ட வாரியம் (District Board) என்ற அமைப்பின் நிர்வாகத்தில் மாவட்டங்கள் இயங்கின. இந்த சமஸ்கிருத கல்லூரி, ‘மாவட்ட வாரிய’ நிர்வாகத்தின் கீழ் இயங்கிய ஒரு அரசு நிறுவனம். இதில் சமஸ்கிருத மொழி மட்டுமே கற்பிக்கப்பட்டது. எனவே, படித்தவர் களும் பார்ப்பனர்கள் மட்டுமே! அப்போது மாவட்ட வாரியத் தலைவராக இருந்தவர் சர். ஏ.டி. பன்னீர் செல்வம். பெரியாரின் சுயமரியாதை கருத்துகளை தீவிரமாக ஆதரித்தவர். சமஸ்கிருத கல்லூரியில் தமிழும் கற்றுத் தர வேண்டும் என்று உத்தரவிட்டார். பார்ப்பனர்களோ சமஸ்கிருத கல்லூரியில் தமிழ் நுழைந்தால் புனிதம் கெட்டுவிடும் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மிரட்டலுக்கு பன்னீர்செல்வம் பணியவில்லை. சமஸ்கிருத கல்லூரியில் தமிழ் படிக்க பார்ப்பனரல்லாத மாணவர்கள் சேர்ந்தனர். இதனால் மாணவர் விடுதியில் பிரச்சினை உருவாக்கப்பட்டது. பார்ப்பன...

ஹரித்துவாரில் கங்கை கரையில் சிலை திறப்பை பார்ப்பனர்கள் தடுத்து நிறுத்தினர் திருவள்ளுவர் தீண்டப்படாதவராம்!

ஹரித்துவாரில் கங்கை கரையில் சிலை திறப்பை பார்ப்பனர்கள் தடுத்து நிறுத்தினர் திருவள்ளுவர் தீண்டப்படாதவராம்!

திருவள்ளுவர் தீண்டப்படாத சாதிக்காரர். எனவே அவர் சிலையை ஹரித்துவார் கங்கை நதிக் கரையில் நிறுவ அனுமதிக்க முடியாது என்று பார்ப்பன சாமியார்கள், பார்ப்பன அர்ச்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளுவர் சிலை திறப்பையும் நிறுத்தி விட்டனர். தருண் விஜய் என்ற பா.ஜ.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அண்மைக்காலமாக திருக்குறள் மீது தனக்கு மிகவும் ஈடுபாடு இருப்பதாகக் கூறி வருகிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் கங்கை நதிக் கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவப் போவதாக கன்யாகுமரியிலிருந்து திருவள்ளுவர் சிலையை பல ஊர்கள் வழியாக ‘யாத்திரை’யாகக் கொண்டு சென்றார். கடந்த ஜூன் 29ஆம் தேதி கங்கை நதிக்கரையில் ‘ஹர்கி பவுரி’ என்ற இடத்தில் சிலை நிறுவ ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், ஜன. 28ஆம் தேதியே பார்ப்பன புரோகிதர்களும் பார்ப்பன சாமியார்களும் சிலை நிறுவுவதை எதிர்த்து போராடத் தொடங்கிவிட்டனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம், “திருவள்ளுவர் தீண்டப்படாத சமுதாயத்தில் பிறந்த ஒரு தலித். அவரது சிலையை...

சமஸ்கிருதத்தைத் திணிக்காதே! ‘தினமணி’யின் திரிப்பு வேலை!

சமஸ்கிருதத்தைத் திணிக்காதே! ‘தினமணி’யின் திரிப்பு வேலை!

தமிழ்நாட்டில் பா.ஜ.க. வின் ஊதுகுழலாக வெளி வரும் ‘தினமணி’ நாளேட்டின் ஆசிரியர் கி. வைத்தியநாதன் எனும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர், ஹரித்துவாரில் திட்டமிடப் பட்டிருந்த திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்வுக்கு சென்றார்.  ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் உ.பி. மாநில ஆளுநர் ராம்நாயக் சிலையை திறந்து வைத்தார் என்று படங்களுடன் ‘தினமணி’ நாளேட்டில் ஒரு முழுப் பக்கத்துக்கு செய்தியை வெளியிட்டார். இந்த நிகழ்வில் தமிழ் நாட்டைச் சார்ந்த இப்போது மேகலயா ஆளுநராக இருக்கும் சண்முகநாதன், மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், காங் கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் போன்ற ஒரு சில தமிழர்கள் மட்டுமே பங்கேற்றனர். கங்கை நதிக்கரைப் பகுதி யிலுள்ள வளாகத்தில் சிலை திறக்கப்பட்டதாக பொய்யான செய்தி வெளியிட்ட ‘தினமணி’ நாளிதழ், கடைசி வரியில் தப்பித்துக் கொள்வதற் காக எதிர்ப்புக் காரண மாக பொதுப் பணித்துறை விருந்தினர் வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றதாக அடிக் குறிப்பு போட்டிருக்...

வினா… விடை…!

வினா… விடை…!

காஞ்சி வரதராஜபெருமாள் கோயிலில் 24 இடங்களில் சி.சி.டி.வி காமிரா பொருத்தப்படுகிறது.          – செய்தி அப்படியே, ஆகமங்கள் ஒழுங்கா பின்பற்றப்படுதான்னு கண்காணிக்கிற காமிராவப் பாத்து வாங்குங்க!   திருமலையில் முகூர்த்த நாள்களில் இனி இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படும்.                – திருப்பதி தேவஸ்தானம் தகவல் ஜாதி மறுப்பு திருமணத்துக்கு அனுமதி உண்டா? ‘ஆணவக் கொலை’ எதுவும் நடக்காம ஏழுமலையான் பாதுகாப்பாரா? கேட்டு சொல்லுங்க…   ‘ஆன்மிக குரு’ காஞ்சி ஜெயேந்திரர் பிறந்த நாள் விழாவில் அமித்ஷா, சு.சாமி, பா.ஜ.க. தலைவர்கள் பாராட்டு.     – செய்தி அப்படியே, ‘சாமி’களுக்கு ஒரு பிரச்சார வாகனத்தைத் தயார் செஞ்சு, 234 தொகுதி களுக்கும் அனுப்பி வைய்யுங்க! நல்லா ஓட்டு விழும்!   வேட்பாளர் பட்டியல் – தேர்தல் அறிக்கைகளை வெளியிட ‘வளர்பிறை’ தொடங்கும் ஏப்.7ஆம் தேதிக்காக அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன.                       – செய்தி சந்திர மண்டலத்துலயும், தேர்தல் அறிவிச்சிருக்காங்களா? சொல்லவே இல்ல!   ஏழுமலையான் ‘பட்ஜெட்’டில் கணக்கில்...

தீ மிதிக்கு தடை – கருநாடக முதல்வரின் பாராட்டத்தக்க அறிவிப்பு

தீ மிதிக்கு தடை – கருநாடக முதல்வரின் பாராட்டத்தக்க அறிவிப்பு

கருநாடகாவில் தும்கூரு என்ற ஊரில் நடந்த கோயில் திருவிழாவில் தீ மிதியின்போது தீயில் விழுந்து 70 பக்தர்கள் படுகாயமடைந்தனர். 35 வயதான பெண் தீக்காயங்களால் கடந்த மார்ச் 17ஆம் தேதி இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து கருநாடக சட்டசபையில் தீக்குண்டத்துக்கு உரிய பாதுகாப்புகள் செய்யப்படவில்லை என்று பா.ஜ.க. உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். அப்போது சீரிய பகுத்தறிவாளரான கருநாடக முதல்வர் சித்தராமய்யா, ‘தீ மிதி நடத்த முழுமையாக தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது’ என்று  சட்டசபையில் தெரிவித்தார். பாராட்ட வேண்டிய முதலமைச்சர்! பெரியார் முழக்கம் 31032016 இதழ்

பேராவூரணி கழக ஆர்ப்பாட்டத்தில்  ‘எவிடென்ஸ்’ கதிர் பேச்சு

பேராவூரணி கழக ஆர்ப்பாட்டத்தில் ‘எவிடென்ஸ்’ கதிர் பேச்சு

ஜாதி ஆணவ படுகொலை வழக்குகளில் குற்றவாளிகளைக் காப்பாற்றும் காவல்துறை ஜாதி மறுப்பு திருமணம் செய்த சங்கர் உடுமலைப்பேட்டையில் ஜாதிய வெறியர்களால் ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பேராவூரணி அண்ணா சிலை அருகில் திராவிடர் விடுதலைக் கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் மார்ச் 25ம் தேதி மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அவர் தனது உரையில் – தமிழகத்தில் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மீது அவர்களை ஒடுக்கு வதற்காக, அவர்களின் குரல்களை நசுக்கு வதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தை போராளிகள் மீது அரசு பாய்ச்சுகிறது. நியாயப்படி ஜாதியின் பெயரால் ஆணவ படு கொலை செய்பவர்களையும், கொலையை தூண்டுபவர்களையும் தான் அந்த சட்டத் தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். ஆணவ கொலையாளிகள் மீது குற்றவியல் நடைமுறை சட்டம் 174...

திப்பு சுல்தான் படத்தில் நடிக்காததால் ரஜினிக்கு கிடைத்த விருது!

திப்பு சுல்தான் படத்தில் நடிக்காததால் ரஜினிக்கு கிடைத்த விருது!

கோபி கழக மாநாட்டில் அப்துல் சமது ஆற்றிய உரை கோபியில் பிப்.28 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆற்றிய உரை: (சென்ற இதழ் தொடர்ச்சி) இன்றைக்கு ‘பாரதமாதா கி ஜே’ எனும் கோசம் போடும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன காவிக் கும்பலை பார்த்துக் கேட்கின்றேன், இந்த பாரதமாதா அடிமை சங்கிலியால் கட்டப்பட்டு கிடந்தபோது அதை உடைப்பதற்கு நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட போரிட்டவர்களில் எத்தனை பேர் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன காவிக்கும்பல்கள்?  ஒருவர் கூட இல்லையே! விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ் கும்பல், பார்ப்பனக் கும்பல் இன்றைக்கு இந்தியாவின் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணமான பார்ப்பனீயம் ஒடுக்கப்பட்டிருக்கிறதா அல்லது நசுக்கப்பட்டிருக்கிறதா? எனக் கேட்கிறோம்.  இந்த கும்பலுக்குதான் இன்றைக்கு தேசபக்தி பீறிட்டு கொண்டு வருகிறது. விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது மட்டுமல்ல காட்டிக்கொடுத்தது...

கழகத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஜாதி வெறியர்களுக்கு எச்சரிக்கை !

கழகத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஜாதி வெறியர்களுக்கு எச்சரிக்கை !

வாட்ஸ்அப் ஊடகம் மூலம் செங்குட்டுவன் வாண்டையார் என்பவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தூண்டி விட்டு கலவரத்தை உண்டாக்கும் தீய நோக்கத்தோடும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் குலைத்து, சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து ஜாதி மோதலை உருவாக்கும் முயற்சியாக பேசி வருவதற்காக அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில்கடந்த 23.03.2016 அன்று புகார் மனு அளிக்கப் பட்டது. ஜாதிவெறியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் மனு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் உமாபதி மற்றும் செந்தில் குனுடு ஆகியோருக்கு ஜாதி வெறியர்கள் அலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். வாட்ஸ் அப் கால், ஸ்கைப், நெட்கால் வாயிலாக எளிதில் கண்டுபிடிக்க இயலாத வகையில் மறைந்திருந்து கோழைத்தனமாக ஆபாசமாக பேசுவதுதான் இந்த ஜாதி வெறியர்களின் வீரம் போலும்? இது...

நாத்திகர்களின் நாடாக மாறி வருகிறது நார்வே!

நாத்திகர்களின் நாடாக மாறி வருகிறது நார்வே!

உலக மக்கள் தொகையில் 33 சதவீதம் பேர் எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று அண்மையில் சர்வதேச அடிப்படையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ‘கால் அப் இன்டர் நேஷனல்’  ‘பேவ் ரிசர்ச் சென்டர்’ என்ற அமைப்புகள் இணைந்து, இந்த ஆய்வை மேற்கொண்டன. ‘கடவுள்’ மத நம்பிக்கையற்றவர்களாக வாழ்வதற்கு, இந்த நாடுகளில் எதிர்ப்புகள் ஏதும் இல்லை. நம்பிக்கையாளர்கள் இந்த சிந்தனையை அங்கீகரிக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு தெரிவித்துள்ள தகவல்கள்: சீனாவில் 90 சதவீதம் பேரும், ஹாங்காங்கில் 70 சதவீதம் பேரும் மதநம்பிக்கையோ கடவுள் நம்பிக்கையோ இல்லாதவர்கள். முன்னாள் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த நாடான ‘செக்’ குடியரசில் மொத்த மக்கள் தொகையில் 45 சதவீதம் பேர் கடவுள் மதங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள். 30 சதவீதம் பேர் நாத்திகர்கள். அதாவது கடவுள் – மதத்தை மறுப்பவர்கள். அய்ரோப்பிய ஒன்றியத்திலேயே அதிக எண்ணிக்கையில் கடவுள் மத நம்பிக்கையில்லாதவர்களைக் கொண்ட நாடாக செக் குடியரசு...

கழகத்தின் முற்றுகைப் போராட்டம் எதிரொலி மவுனம் கலைத்தது, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு “ஜாதிய ஒடுக்குமுறைகள் மூடி மறைக்கப்படுவது உண்மைதான்!”

கழகத்தின் முற்றுகைப் போராட்டம் எதிரொலி மவுனம் கலைத்தது, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு “ஜாதிய ஒடுக்குமுறைகள் மூடி மறைக்கப்படுவது உண்மைதான்!”

உடுமலைப்பேட்டையில் தலித் பொறியாளர் சங்கர் சில ஜாதி வெறியர்களால் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டார். கொலைக் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட வர்களில் ஒருவர் திண்டுக்கல் இந்து மக்கள் கட்சியின் நகர செயலாளர். தமிழ் நாட்டில் தொடர்ந்து நடந்து வரும் ஜாதி ஆணவப் படுகொலைகளையும் ஜாதிய ஒடுக்கு முறைகளையும் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழக சார்பில் சென்னை, திருப்பூரில் காவல்துறையை முற்றுகையிடும் போராட்டத்தை கழகத் தோழர்கள் தோழமை அமைப்புகளுடன் இணைந்து நடத்தி கைதானார்கள். காவல்துறையிலேயே ஜாதி-தீண்டாமைக் குற்றங்களைத் தடுப்பதற்காகவே தனிப் பிரிவு ஒன்று இருக்கிறது.  அதன் பெயர் ‘சமூகநீதி மற்றும் மனித உரிமை தனிப் பிரிவு’. இந்த அலு வலகத்தைத்தான் அதன் செயலற்றப் போக்கைக் கண்டித்து கழகம் முற்றுகை யிட்டது. கழகத்தின் போராட்டத்துக்குப் பிறகு, இத்துறையின் உயர் அதிகாரிகள் தங்கள் மவுனத்தைக் கலைத்து கருத் துகளைத் தெரிவித் துள்ளனர். ‘தினத்தந்தி’ தமிழ் நாளேடு சென்னையில் ‘டிடி-நெக்ஸ்டு’ (dtNEXT) என்ற ஆங்கில பதிப்பையும் வெளியிட்டு...

ஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்திய  கழகத் தோழர்கள்

ஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்திய கழகத் தோழர்கள்

உடுமலையில் தலித் பொறியியல் பட்டதாரி சங்கர் படுகொலையைத் தொடர்ந்து புதுக்கோட்டை ஆலங்குடிப் பகுதியைச் சார்ந்த வினோத் எனும் தலித் இளைஞரை காதலித்த பிரியங்கா என்ற இடைநிலைச் சாதியைச் சார்ந்த பெண்ணை அவரது குடும்பத்தினரே கொலை செய்ய திட்டமிட்டனர். பிரியங்கா அவரது பெற்றோரால் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுவரும் செய்தியை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் கார்த்திகேயன், மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் மணிகண்டன், உடனே முகநூலில் இதைப் பதிவிட்டனர். ‘உடனே இந்தப் பெண்ணை காப்பாற்றுங்கள்’ என்று அவர்கள் பதிவிட்ட செய்தியால் மனிதநேயம் கொண்ட ஏராளமானோர் ‘ஷேர்’ செய்தவுடன் காவல்துறை நடவடிக்கை எடுக்க முன் வந்தது. அந்தப் பெண்ணை மீட்டு திருச்சியில் பெண்கள் விடுதி ஒன்றில் காவல்துறை சேர்த்திருக்கிறது. இந்த செய்தியை ‘ஜூனியர் விகடன்’ ஏடு (30.3.2016) பதிவு செய்துள்ளது. ஜூ.வி. வெளியிட்ட செய்தி: “மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை எனப் பல ஆக்கப்பூர்வமான ...

நடைபாதை பூங்கா நிறுத்தம்: கழகத்தின் கோரிக்கை வெற்றி!

நடைபாதை பூங்கா நிறுத்தம்: கழகத்தின் கோரிக்கை வெற்றி!

சென்னை மயிலாப்பூர் ஒரு வழிப்பாதையாக உள்ள லஸ் சாலையின் நடுவே 15 அடி அகலத்தில் நடைபாதை அமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 80 அடி அகலத்தில் உள்ள இந்த சாலையில் ஏற்கனவே, இரு புறங்களிலும் தலா 12 அடியில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது, சாலையின் நடுவே நடைபாதை பூங்கா அமைப்பதால் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இத்திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் மார்ச் 6ஆத் தேதி, மண்டல உதவி ஆய்வாளரிடமும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மார்ச் 8ஆம் தேதியும் சந்தித்து மனு அளித்தனர். கழகத்தின் கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி நடைபாதை பூங்கா அமைக்கும் பணியை நிறுத்தி விட்டது. கழகத்தின் முயற்சிக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர். பெரியார் முழக்கம் 24032016 இதழ்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (15)

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (15)

நீதிக்கட்சித் தலைவரை பதவி விலக மிரட்டினார் ராஜாஜி! வாலாசா வல்லவன் ‘குணா’வின் வாரிசாக கிளம்பி யுள்ள ஒருவர் அண்மையில் வெளி யிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. 1938 இல் இந்தி எதிர்ப்பின் போது இராஜாஜி நீதிக் கட்சியின் தலைவர் பொப்பிலி அரசரை அக்கட்சியின் தலைவர் பதவியை விட்டு விலகுமாறு மிரட்டினார். பொப்பிலி அரசர் பயப்பட வில்லை. இராஜாஜியும் சும்மா இருக்க வில்லை. ஜமின்தாரி ஒழிப்பு மசோதாவை கொண்டு உங்கள் ஜமின் சொத்துகளை அரசுடைமை ஆக்கி விடுவேன் என்று மிரட்டியதால், மற்ற ஜமீன்தார்கள் பொப்பிலி அரசருக்கு நெருக்கடி கொடுத்து நீதிக்கட்சி தலைவர் பதவியி லிருந்து விலகி விடுமாறு வற்புறுத்தினர். பொப்பிலி அரசர் விலகி விட்டால் நீதிக் கட்சியை ஒழித்து விடலாம் என இராஜாஜி கனவு கண்டார். பொப்பலி அரசர் நீதிக் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகி விட்டார். இந்த நிலையில்தான். கி.ஆ.பெ. விசுவநாதமும் ஏ.டி. பன்னீர் செல்வமும் பெல்லாரி சிறையில் இருந்த பெரியாரை...

தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க தயாரிக்கப்பட்ட குறுந்தகடு!

தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க தயாரிக்கப்பட்ட குறுந்தகடு!

சென்ற இதழ் தொடர்ச்சி எச். ராஜா, இராம. கோபாலன், சுப்பிரமணிய சாமி பார்ப்பனர்கள் தமிழகத்தில் மதக் கலவரத்தை உருவாக்க உருவாக்கிய குறுந் தகட்டை தமிழக அரசு தடை செய்திருக்கிறது என்ற தகவலை அப்துல் சமது வெளியிட்டார். கோபியில் பிப்.28 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆற்றிய உரை: (சென்ற இதழ் தொடர்ச்சி) மராட்டியத்தில் கோவிந்த் பன்சாரே என்கிற பொதுவுடைமை இயக்கத் தலைவர், எழுத்தாளர் இருந்தார்.  அவரை நடைப்பயிற்சியின் போது சுட்டுக் கொன்றது பார்ப்பன காவிக்கும்பல். எதற்காக இந்த படுகொலை நடந்தது என நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். ‘யார்  இந்த சிவாஜி?’ என்ற ஒரு புத்தகத்தை கோவிந்த் பன்சாரே எழுதினார். சிவாஜி என்று சொன்னால் முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு மன்னர். சத்ரபதி சிவாஜி, முஸ்லீம்களுக்கு எதிராகக் களமாடியவர்; இந்துக்களின் தலைவர்; அவுரங்கசீப் போன்ற...

1957இல் பார்ப்பன நீதிபதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் முழங்கியவர் பெரியார் எல்லை மீறும் தீர்ப்புகள் இன்னும் தொடர்கின்றன!

1957இல் பார்ப்பன நீதிபதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் முழங்கியவர் பெரியார் எல்லை மீறும் தீர்ப்புகள் இன்னும் தொடர்கின்றன!

நீதிபதிகள் சில வழக்குகளில், சட்ட எல்லைகளைத் தாண்டி தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து, அவர்களுக்கான அதிகார வரம்புகளை மீறுகிறார்கள்; நீதிபதிகள் சமுதாயத்தை வழி நடத்தும் தலைவர்கள் அல்ல! 1956ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஆர்.எஸ். மலையப்பன் (இவர் பிற்படுத்தப்பட்ட சமுதாயமான ‘கள்ளர்’ வகுப்பைச் சார்ந்தவர்) – நிலக் குத்தகை தொடர்பான வழக்கில் நில பிரபுகளுக்கு எதிராக ஒரு தீர்ப்பு வழங்கினார். மேல்முறையீட்டில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு பார்ப்பன நீதிபதிகள், தீர்ப்பை இரத்து செய்ததோடு மாவட்ட ஆட்சித் தலைவரை கடுமையாக, “அவர் பதவியில் நீடிக்கவே தகுதியற்றவர். உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று பார்ப்பன வெறியுடன் தீர்ப்பு கூறினார். ‘இந்து’ பார்ப்பன ஏடு, தீர்ப்பை உச்சி மோந்து பாராட்டியது. பெரியார் கொதித்து எழுந்தார். மக்களைக் கூட்டிய பெரியார் பார்ப்பன நீதிபதிகளின் உள்நோக்கத்தை வன்மையாகக் கண்டித்தார். மக்கள் மன்றத்தில் தீர்ப்பு தீயிடப்பட்டது. பெரியார் மீது நீதிமன்ற அவமதிப்பு...

முற்றுகைப் போராட்டம் ஏன்?

முற்றுகைப் போராட்டம் ஏன்?

தமிழ்நாட்டின் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக கடந்த 3 ஆண்டுகளில் 82 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தலித் இளைஞர்கள். இளவரசன், கோகுல் ராஜ், இப்போது சங்கர். இன்னும் எத்தனை படுகொலைகள் தொடரப் போகிறதோ? நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. தென் மாவட்டங்களிலும் கொங்கு மண்டலத்திலும் ஜாதி வெறி சக்திகள் சவால் விடுகின்றன. இதைத் தடுப்பதற்கு காவல்துறையோ, தமிழக அரசோ எந்தத் தீவிர நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழ்நாட்டில் ‘கவுரவக் கொலைகளே’ நடப்பது இல்லை என்று சட்டமன்றத்தில் அறிவித்தார், ஓ. பன்னீர்  செல்வம். மத்திய சட்ட ஆணையமும் மகளிர் ஆணையமும், ‘கவுரக் கொலைகளை’ தடுப்பதற்கான சட்டவரைவுகளை உருவாக்கி, மாநில அரசுகளின் கருத்து கேட்டு அனுப்பியது. தென் மாநிலங்களில் இதற்கு பதில் அளிக்காத ஒரே ஆட்சி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மட்டும் தான். தென் மாவட்டங்களில் 5 ஆண்டு களில் நடந்த 600 படுகொலைகளில் 70 சதவீதம் ஜாதி ஆணவக் கொலைகள், இதைத் தடுத்து...

கும்முடிப்பூண்டி முகாமில் ஈழத் தமிழர் காலை உடைத்த காவல் ஆய்வாளர்

கும்முடிப்பூண்டி முகாமில் ஈழத் தமிழர் காலை உடைத்த காவல் ஆய்வாளர்

கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழர் முகாமில் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் அராஜகம் எல்லை மீறிப் போயுள்ளன. சென்ற 15.03.2016 அன்று சுபேந்திரன் என்ற ஈழத் தமிழர் சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் டெல்லிபாபு தலைமையிலான காவலர்களால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு இரண்டு கால்களும் உடைக்கப்பட்டுள்ளன. இன்று வரை அவரால் கால்களை இயக்க முடியவில்லை. தொடர்ந்தும் அந்தக் கால்கள் இயங்குமா எனபது சந்தேகமே. அந்தக் குடும்பம் அன்றாட வாழ்க்கைக்கு வழியின்றித் தவிக்கிறது. இந்நிலையில் வெற்றுக் காகிதத்தில் கையொப்பமிடும்படியும், பொய் வழக்குப் போடுவோம், அரசை எதிர்த்து உங்களால் என்ன செய்ய முடியும் என்றும் உளவுத் துறையும் காவல்துறையும் சுபேந்திரனையும் அவர் துணைவியாரையும் மிரட்டி வருகின்றனர். சுற்றியும் காவலர்கள் சூழ்ந்து அவர்களை அச்சுறுத்தி வருகின்றனர். சுபேந்திரன் மாடியிலிருந்து குதித்ததால் கால்கள் உடைந்ததாகக் கதைகட்ட காவல்துறையும் உளவுத்துறையும் மெனக்கெடுகின்றன. முகாமின் தலைவர் கண்ணன் அவர்களையும் அதே காவலர்கள் கண்மூடித்தனமாக அடித்து ஜட்டியோடு உட்கார வைத்துள்ளனர். அம்முகாமில் பலரும் பொய் வழக்குகளுக்கு ஆளாக்கப்பட்டு...

தீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகங்களை கழகம் முற்றுகை: தோழர்கள் கைது

தீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகங்களை கழகம் முற்றுகை: தோழர்கள் கைது

ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசை வலி யுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை மற்றும் திருப்பூரில் காவல்துறையின் தீண்டாமை ஒழிப்பு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி தோழர்கள் கைதானார்கள். வேலூரில் கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடுமலையில் சங்கர் – கவுசல்யா ஜாதி மறுப்பு இணையரை குறிவைத்து பொது மக்கள் முன்னிலையில் தேவர் ஜாதியைச் சார்ந்த சில வெறியர்கள் படுகொலை நடத்தினர். தலித் பொறி யாளர் சங்கர் பலியாகி விட்டார். கவுசல்யா பலத்த காயங் களுடன் உயிர் தப்பினார். தமிழ்நாட்டில் ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்காமல் குறட்டை விட்டு உறங்கும் காவல் துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவை சம்பவம் நடந்த இரண்டு நாள்களிலேயே முற்றுகையிடும் போராட்டத்தை கழகம் நடத்தியது. திருப்பூரில் : 16.3.2016 அன்று கழக பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் தலைமையில் திருப்பூரில் முற்றுகையிடும்...