கீழடியில் நடக்கும் கீழறுப்பு

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம்

சிவகங்கை அருக உள்ள கீழடியில் தமிழர் சங்ககால வாழ்வியல் குறித்து சான்றாதாரங்களை தொல்பொருள் ஆராய்ச்சித் துறை கண்டறிந்திருக்கிறது. ஜாதி, மதங்கள் இல்லாத ஒரு வாழ்வே சங்ககாலத் தமிழர்கள் வாழ்வு என்று இந்தத் தடயங்கள் உறுதி செய்வதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்துத்துவா திணிப்புக்கு இது எதிரானது என்பதால் தொல்பொருள் தடயங்களை ஒரு மூட்டையில் கட்டி பெங்களூருவில் உள்ள தலைமையகத்தில் வீசி விட்டனர். நீதிமன்ற வழக்குகள், பொது மக்கள் எதிர்ப்பு வந்த பிறகு மீண்டும் ஆய்வுகள் தொடங்கின. நேர்மையான ஒரு அதிகாரி முறையாக தொல்பொருள் ஆய்வுகளைத் தொடங்கினார். அவரை திடீரென்று இடமாற்றம் செய்தது மோடி ஆட்சி. மக்கள் கொதித்தெழுந்தார்கள். கீழடியைப் பார்வையிட வந்த மத்திய அமைச்சர் பொன் இராதாகிருட்டிணன், நிர்மலா சீத்தாராமனை முற்றுகையிட்டார்கள். தமிழர்கள் பண்பாடு பார்ப்பனிய இந்துத்துவா பண்பாடு அல்ல என்பதை உறுதிப்படுத்தும் ஆய்வுகளை முடக்க முயலுகிறது மோடி ஆட்சி.

பெரியார் முழக்கம் 03082017 இதழ்

 

You may also like...