மூடப்படுகிறது ‘செம்மொழி ஆய்வு நிறுவனம்’

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்

தமிழ் செம்மொழியாக ஏற்கப்பட்ட பிறகு ‘செம்மொழி தமிழ் ஆய்வு மய்யம்’ சென்னையில் அமைக்கப்பட்டது. தனித்து இயங்கிய இந்த ஆய்வு மய்யத்தை இழுத்து மூடிவிட்டு, திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ஒரு துறையாக மாற்ற மோடி ஆட்சி முடிவெடுத்திருக்கிறது. சமஸ்கிருதம், இந்தி மொழியைத் தவிர்த்து பிறமொழி நிறுவனங்கள் அனைத்தையும் ஆங்காங்கே இருக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஒரு துறையாக இணைக்க மோடியின் மனித வள மேம்பாட்டுத் துறை முடிவெடுத்திருக்கிறது. இந்தி, சமஸ்கிருதம் தவிர ஏனைய மொழிகளை ஒரு இனத்தின் பண்பாட்டு அடையாளங்கள் என்பதை மோடி ஆட்சி ஏற்கத் தயாராக இல்லை. தேசிய இனங்களை இந்த பார்ப்பனிய கட்டமைப்புக்குள் கொண்டு வந்து, தேசிய இனங்களின் மொழிகளை சமஸ்கிருத, இந்தி ஆளுகைக்குக் கீழே அடக்க முயலும் பார்ப்பன சதியை தமிழர்களே! தமிழ் மொழிப் பற்றாளர்களே புரிந்து கொள்ளுங்கள்!

பெரியார் முழக்கம் 03082017 இதழ்

You may also like...