பறி போகிறது திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம்

1966ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திருச்சியில் தொடங்கப் பட்டது துப்பாக்கித் தொழிற்சாலை, பொதுத் துறை நிறுவனம். இந்திரா காந்தி திறந்து வைத்தார். இந்திய இராணுவத்துக்குத் தேவையான தளவாட உற்பத்தியில் முதலிடத்தில் நிற்கும் இந்த நிறுவனத்தை தனியார் மயமாக்கப் போகிறது, மோடி ஆட்சி. நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம் 72,500 கோடி நிதி திரட்டு வதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கியிருக்கிறது மோடி ஆட்சி. இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் இந்தத் தொழிற் சாலையைச் சார்ந்து வாழும் அய்ந்து கிராமங்களைச் சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. ‘மேக் இன் இந்தியா’ மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் மோடி ஆட்சி, பாதுகாப்பு தொடர்பான அனைத்து துறைகளையும் செயலிழக்கச் செய்கிறது. யூத மத வெறி இஸ்ரேலிடம் அதிகமான இராணுவத் தளவாடங்கள் வாங்கப்படுகின்றன.

பார்ப்பனியமும் ஜியோனிசமும் இராணுவ ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிலை வந்துவிட்டது. தமிழர்களே என்ன செய்யப் போகிறீர்கள்?

பெரியார் முழக்கம் 03082017 இதழ்

You may also like...