Category: பெரியார் முழக்கம்

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1) பிரிட்டிஷ் ஆட்சி தொடர்ந்த இராஜதுவேஷ வழக்கு

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1) பிரிட்டிஷ் ஆட்சி தொடர்ந்த இராஜதுவேஷ வழக்கு

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து. “பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்” என்ற தலைப்பு எனக்கு தரப்பட்டிருக்கிறது. பெரியார் இயக்க வரலாற்றிலிருந்து ஒரு சில நிகழ்வுகளை மட்டும் தேர்வு செய்து பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். 1932ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ பத்திரிகையில் “இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும்” என்று பெரியார் எழுதிய கட்டுரைக்காக அவர் மீது ‘இராஜ துவேஷ’ வழக்கை அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி போட்டது. கட்டுரை அப்படி ஒன்றும் கடுமையானதும் அல்ல. “ஏழை எளிய மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளை வழங்காமல், பணக்காரர்களுக்கு, பரம்பரை மேல் ஜாதிக்காரர்களுக்கு மட்டும் அரசு மக்களின் வரிப்பணத்தை விரயமாக்குகிறது” என்பதே கட்டுரையின் உள்ளடக்கம் (குடிஅரசு, 29.10.1933). பெரியார் மட்டும் கைது செய்யப்படவில்லை. பத்திரிகையின் பதிப்பாளர் – அச்சிடுபவராக இருந்த பெரியாரின் தங்கை கண்ணம்மாவும் கைது செய்யப்பட்டார். கோவை...

2019ஆம் ஆண்டுக்கான கழக நாள்காட்டி

2019ஆம் ஆண்டுக்கான கழக நாள்காட்டி

கண்ணைக் கவரும் வண்ணப்படங் களுடன் தயாராகி வருகின்றன. ஒரு நாள்காட்டியின் விலை ரூ.70/- தேவைப்படுவோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம். முன் பதிவு எண்ணிக்கைக்கேற்ப மட்டுமே நாட்காட்டிகள் அச்சிடப்படு கின்றன. தொடர்புக்கு : தபசி. குமரன், தலைமைக் கழக செயலாளர். தொடர்பு எண் : 9444025408 பெரியார் முழக்கம் 13122018 இதழ்

எது இந்து மதம்? எது இந்துத்துவா?

எது இந்து மதம்? எது இந்துத்துவா?

ம.பி., இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் கள்  – பரப்புரைக் கூட்டத்தில் ‘இந்துத்துவம்’ குறித்து காரசார விவாதம் நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி, இந்துத்துவத்தின் அடிப்படையை மோடி புரிந்து கொள்ளவில்லை என்று பேச, அதற்கு மோடி இந்துத்துவம் பற்றி நீங்கள் எங்கு தெரிந்து கொண்டீர்கள்? என்று எதிர் கேள்வி கேட்டிருக்கிறார். இரண்டு தரப்புக்கும் இப்போது நாம் சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது. ‘இந்து’ என்ற பெயர் – வேதம், இதிகாசம், புராணம் உள்ளிட்ட எந்த மத நூல்களி லாவது இருக்கிறதா? ‘இல்லை’ என்று கூறுகிறோம். இருக்கிறது என்பதற்கு ஆதாரம் காட்டத் தயாரா? இந்து மதத்தை விமர்சித்தால் ‘தேச விரோதிகள்’ என்று கூப்பாடு போடுகிற எச்.ராஜா உள்ளிட்ட பார்ப்பனர்களும் சங் பரிவாரங்களும் ‘இந்து’ என்ற பெயர் பிரிட்டிஷ்காரன் சூட்டியது என்பதை மறுக்க முடியுமா? இந்து மதத்தின் ‘மனிதத் தெய்வமாகப்’ பார்ப்பனர்களும் சங்பரிவாரங்களும் தலையில் தூக்கி வைத்து ஆடிக் கொண்டிருக்கும் இறந்து போன சீனியர்...

மேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்

மேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்

வீடு கட்டுவதற்கான திட்டங்களுக்குத் தான் வீட்டுவசதி வாரியம் ஒப்புதல் தந்திருக்கிறது. அதற்காக வீடு கட்டுவதற்கு ஒப்புதல் தரவேண்டும் என்ற அவசியமில்லை என்று வீட்டுவசதி வாரியம் கூறினால் எப்படி இருக்கும்? கட்டப் போகாத வீடுகளுக்கு ஏன் திட்ட நகலை தயாரிக்க வேண்டும்? அந்தத் திட்ட நகலுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று சராசரி அறிவுள்ளவர்கள் கூட கேட்பார்கள். காவிரியின் குறுக்கே மேகதாதுபகுதியில் அணைகட்டும் திட்டம் ஒன்றுக்கு வரைவு நகலை தயாரித்து கருநாடக அரசு மத்திய நீர் ஆணையத்துக்கு அனுப்பியவுடன், ஆணையம் ஒப்புதல் வழங்கி விட்டது. பா.ஜ.க.வினர், வரைவுத் திட்ட அறிக்கைக்குத் தானே ஒப்புதல் தரப்பட்டிருக்கிறது. திட்டத்துக்கு ஒப்புதல் தரவில்லையே என்று இப்போது வாதம் செய்கிறார்கள். காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு; அதைத் தொடர்ந்து மத்திய நீர்வள அமைச்சகம் வெளியிட்ட அரசாணைகளின் அடிப்படையில் மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகள் தொடங்கும் நிலை யிலேயே அதைத் தடுத்திருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட போது...

டிசம்பர் 23 பேரணி தோழர்களே தயாராகி விட்டீர்களா?

டிசம்பர் 23 பேரணி தோழர்களே தயாராகி விட்டீர்களா?

திருச்சியில் டிசம்பர் 23இல் பெரியார் உணர்வாளர்கள் நடந்த இருக்கும் கருஞ்சட்டைப் பேரணிக்கு பேராதரவு பெருகி வருகிறது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மிகவும் உற்சாகத்துடன் இந்த முயற்சியை பாராட்டி வரவேற்று பேரணியில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய அமைப்புகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. அதிகாரம் இருக்கிறது என்ற இறுமாப்புடன் தமிழ்நாட்டின் தனித்துவத்துக்கும் சமூக நீதிக்கும் சவால் விட்டு வரும் மதவெறி சக்திகளுக்கு தமிழ்நாடு – பெரியார் மண் என்பதை உணர்த்துவோம். திருச்சி கருஞ்சட்டைக் கடலாக வேண்டும் தோழர்களே! தனிப் பேருந்துகளில் அணி அணியாகத் திரளுவீர்! பெரியார் முழக்கம் 13122018 இதழ்

சந்தா சேர்ப்பு இயக்கம்: கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

சந்தா சேர்ப்பு இயக்கம்: கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கான சந்தா சேர்ப்புப் பணிகளை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் முடித்துத் தருமாறு தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம். கழகத்தின் இணைப்பு சக்தியாய் விளங்குவது கழகத்தின் ஏடுகள் தான்! கழக ஏடுகளை பரப்புவதன் வழியாக கழகத்தின் வளர்ச்சியை மேலும் தீவிரமாக்க முடியும் என்பதை உணர்ந்து சந்தா சேர்ப்பு இயக்கத்தில் முனைப்புக் காட்டி செயல்படுமாறு தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம். – தலைமைக் கழகம் பெரியார் முழக்கம் 13122018 இதழ்

மதவாதிகளின் முயற்சி முறியடிப்பு

மதவாதிகளின் முயற்சி முறியடிப்பு

திருப்பூரில் இந்து முன்னனி அமைப்பைச் சார்ந்தவர் களின் மகா யாக பூஜைக்கு பள்ளி மாணவர் களிடம் செங்கல், பூ, நெய் ஆகியவை எடுத்து வர வலியுறுத்தப்பட்டார்கள் அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியரிடமும், கல்வி முதன்மை அதிகாரியிடமும் திருப்பூர் கழகம் சார்பில் 3.12.2018 அன்று புகார் மனு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனு மீது  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். நிகழ்வில்    திராவிடர் விடுதலைக்கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், பதியம் இலக்கிய அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன. பெரியார் முழக்கம் 13122018 இதழ்

சின்னியம்பாளையத்தில் அம்பேத்கர் நினைவு பொதுக் கூட்டம்

சின்னியம்பாளையத்தில் அம்பேத்கர் நினைவு பொதுக் கூட்டம்

கோவை சின்னியம் பாளையத்தில் டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கரின் 62 ஆவது நினைவு நாளை முன்னிட்டு டிசம்பர் 1ஆம் தேதி நினைவு நாள் பொதுக்கூட்டம் சிவா தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி  மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் சீலாராஜ் உரையாற்றினர். டி.கே.ஆர். குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்னிலையில் திராவிடர் விடுதலை  கழகத்தில்  சிலம்பரசன் (வழக்கறிஞர்), ரஞ்சித் இணைந்தனர். அவர்களுக்கு நிமிர்வோம் இதழை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழங்கி வரவேற்றார். பெரியார் முழக்கம் 13122018 இதழ்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்  பாசிச எதிர்ப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் பாசிச எதிர்ப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சேலம் மேற்கு மாவட்டம் சார்பாக 06.12.2018 அன்று பாசிச எதிர்ப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி யது. இந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் உமா சங்கர் (வனவாசி நகர செய லாளர்) கண்டன உரையாற்றி னார். சேலம் மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணன், நங்கவள்ளி நகரச் செயலாளர் கண்ணன், நகர துணைத் தலைவர் குமார், சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 13122018 இதழ்

நாத்திகம் முருகேசன் துணைவியார் முடிவெய்தினார்

நாத்திகம் முருகேசன் துணைவியார் முடிவெய்தினார்

ஆழ்வை ஒன்றிய தி.வி.க. தலைவர் நாத்திகம் முருகேசன் துணைவியார் திருமதி. சந்திரா (வயது 65) 30.11.2018 மாலை 4.00 மணியளவில் முடிவெய்தினார். அவரது உடல் நல்லடக்கம் ஆழ்வார் தோப்பில் 01.12.2018மதியம் 1.00 மணியளவில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகப் பரப்புரைச் செயலாளர் பால் .பிரபாகரன்  மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார். நிகழ்வில் நெல்லை மாவட்டத் தலைவர் பா. பால்வண்ணன், நெல்லை மாவட்டச் செயலாளர் சி.ஆ.காசிராஜன், தமிழ்நாடு அறிவியல் மன்ற நெல்லை மாவட்ட பொறுப்பாளர் ச. தமிழன், நெல்லை மாவட்ட அமைப்பாளர் சு. அன்பரசு, கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் அ.மாசிலாமணி, தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்ட துணைச் செயலாளர் ச.கா.பால சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கோ.அ.குமார், வே.பால்ராசு, சா.த.பிரபாகரன், செ.செல்லத்துரை. குமணன், பாரி, மனோஜ் மற்றும் தூத்துக்குடி நெல்லை மாவட்ட தி.வி.க. தோழர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். எவ்வித சடங்குகள் இன்றி...

சிறைக்குள் மரணமடைந்த ஜாதி ஒழிப்புப் போராளி நன்னிமங்கலம் கணேசன் நினைவிடத்தில் தோழர்கள் உறுதி ஏற்பு

சிறைக்குள் மரணமடைந்த ஜாதி ஒழிப்புப் போராளி நன்னிமங்கலம் கணேசன் நினைவிடத்தில் தோழர்கள் உறுதி ஏற்பு

ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை எரித்து கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல தோழர்களில் நண்ணிமங்கலம் கணேசன் ஒருவர். அவர் சிறையிலேயே இறந்துவிட்டார். அவருடைய உடல் கோவை ஆத்துப்பாலம் சுடுகாட்டில் பெரியாரின் போர்வாள் எம்.ஆர்.ராதா  மனைவி பிரேமாவதி மற்றும் மகன் தமிழரசன் நினைவிடத்திற்கு அருகே புதைக்கப் பட்டுள்ளார். அவரை நினைவு படுத்தும் விதமாக ஆத்துப்பாலம் சுடுகாட்டில் கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சூலூர் பன்னீர்செல்வம் வெங்கட் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் உடுமலை இயல் கிருஷ்ணன் நிர்மல்குமார்  மலர் வளையம் வைத்து  ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். பெரியார் முழக்கம் 13122018 இதழ்

கஜா புயல் : வேலூர் மாவட்டக் கழகத் தோழர்கள் நேரில் நிவாரண உதவி

கஜா புயல் : வேலூர் மாவட்டக் கழகத் தோழர்கள் நேரில் நிவாரண உதவி

கஜா புயல் நிவரணத்திற்காக வேலூர் மாவட்ட திவிக தோழர் களால் திரட்டப் பட்ட பொருட் கள் தஞ்சாவூர் மாவட்டம் பட்டு கோட்டை வட்டம் வாட்டா குடி மற்றும் இரண்யன் நகர் உள்ளிட்ட 3 குக்கிராமங்களைச் சேர்ந்த 156 குடும்பங்களுக்கு கழகத் தோழர்களின் உதவியுடன் வேலூர் மாவட்ட திவிக தோழர்கள் நேரில் சென்று வழங்கினர். 1 குடும்பத்திற்கு 2.5 கிலோ காய்கறி, 1.25 கிலோ அரிசி, 1 ப்ரெட் பாக்கெட், 1 வரக்கி பாக்கெட் , 100கிராம் கடலை எண்ணெய், 50கிராம் மிளகுதூள் பாக்கெட், 1 நாப்கின் பாக்கெட், 1 பாக்கெட் பன், 1 தைலம், 1 கொசுவத்தி, 1 வத்திப் பெட்டி என பல்வேறு பொருட்களை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் கஜேந்திரன், பாஸ்கரன், சுதகார், பார்த்திபன், வழக்கறிஞர் மகேஷ் குமார், பாரத் தமிழ், மாதேஷ், பாண்டியன், மாதேஷ், திருமலை ஆகியோர் அடங்கிய குழு சென்றது. பெரியார் முழக்கம் 13122018 இதழ்

‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல!

‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல!

வேத மதம் என்று அழைக்கப்பட்ட பண்டைய ஆரிய மதத்திற்கு மூன்று தனிப்பட்ட குணாம்சங்கள் இருந்தன. மாட்டிறைச்சி உண்பது, குடிப்பது மற்றும் கேளிக்கை களியாட்டங்களில் ஈடுபடுவது, இவை  அன்றைய வேத மதத்தின் கூறுகளாகவே இருந்தன. இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இவற்றைப் பின்பற்றினார்கள். இப்போதும்கூட சில பார்ப்பனர்கள் அந்த நாட்களுக்குத் திரும்பிப் போய் விடமாட்டோமா என்ற ஏக்கத்தோடு கனவு காண்கிறார்கள். அந்தப் பண்டைய மதத்தோடு மட்டுமே ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயமிருந்திருந்தால் எதற்காக இந்திய மக்கள் அன்று இந்து மதத்தை உதறித் தள்ளிவிட்டு, புத்த மதத்தை ஏற்றுக் கொண்டார்கள்? எதற்காக அவர்கள் வேத மதத்தை உதறித்தள்ளிவிட்டு, சமண மதத்தை ஏற்றுக் கொண்டார்கள்? நம்முடைய முன்னோர்கள் அந்த மதத்திற்குள்ளேயே இருந்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அவர்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு அந்த மதத்திற்குள் இருந்தார்கள் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். நால்வர்ண அமைப்பு என்பது இந்த நாட்டில் பன்னெடுங்காலமாக நிலவிய ஓர்...

அம்பேத்கர் நினைவு நாளில் கழகத்தினர் சூளுரை ஜாதி அடையாளம் அல்ல; அவமானம்

அம்பேத்கர் நினைவு நாளில் கழகத்தினர் சூளுரை ஜாதி அடையாளம் அல்ல; அவமானம்

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்தனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பேரணியாக வந்து மு.நாகராஜ் (அறிவியல் மன்ற அமைப்பாளர்) தலைமையில்  மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்தனர். இந்நிகழ்வில் கழகத்தின் மாவட்ட அமைப் பாளர் சி.சாமிதுரை முன்னிலை வகித்தார். ஜாதி ஒழிப்பு, ஆணவப் படுகொலைக்கு தனி சட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி முழக்க மிட்டனர். இரா.துளசிராஜா, குமார், பாரதிதாசன், ராமச்சந்திரன் கார்மேகம், நீதிபதி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். சேலம் : திவிக சேலம் மாநகரம் சார்பாக 6.12.2018 அன்று சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் மற்றும் சேலம் மாநகர செயலாளர் பரமேஸ்குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு  மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர். நிகழ்வில் மாநகர தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை: இந்திய...

75 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு  மா.பா. மணிகண்டன் விடுதலை

75 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு மா.பா. மணிகண்டன் விடுதலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் கடந்த மே 22ந் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து மதுரையில் நடைபெற்ற போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைக்கு மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் மா.பா. மணிகண்டன் தான் காரணம் என காவல்துறை பொய் வழக்கு போட்டு கடந்த 2018ஆகஸ்ட் 23ந் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தது அவர் வெளியில் வரக்கூடாது என்பதற்காக முதலில் போடப்பட்ட வழக்கில் பிணை கிடைத்தும் மேலும் பொய் வழக்குகளை போட்டு வெளியில் வரவிடாமல் தடுத்தது காவல்துறை. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றம் வரை சென்று காவல்துறையின் பொய் வழக்குகளை முறியடித்து நவம்பர் 9ந் தேதி  காலை 7.மணிக்கு மதுரை மாவட்ட செயலாளர் மா.பா. மணிகண்டன் 75 நாள் சிறையிலிருந்து விடுதலையானார். மா.பா. மணிகண்டனை அமைப்பு செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் சூலூர்...

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அழைக்கிறது ஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்!

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அழைக்கிறது ஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்!

இந்தியா முழுதும் பிற்போக்குத்தனங்களும், சாதிய மேலாதிக்கமும் நிறைந்திருக்கிறது. ஆரியப் – பார்ப்பனிய  – இந்துத்துவ கும்பல் இந்திய ஒன்றியத்தின் அனைத்துத் தேசிய இனங்களின் வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. மதத்தின் பெயரால் நாள்தோறும் கலவரங்களும், படுகொலைகளும் இந்தியா முழுவதும் நிகழ்த்தப்படுகின்றன. மாட்டுக் கறி வைத்திருந்தவர்கள் என்று சொல்லி ஒடுக்கப்பட்ட மக்களையும், சிறுபான்மை மக்களையும் காவி வெறிக் கும்பல் அடித்துக் கொலை செய்கிறது. ஆரியப் – பார்ப்பனியத்தின் சூழ்ச்சிப் போக்குகளிலிருந்து தமிழ்நாட்டைக் காத்திட தன் இறுதி மூச்சு வரை போராடியவர் தந்தை பெரியார். ஆனால், அத்தகைய தமிழ்நாட்டினைக் கூறுபோட்டு விற்றிட இன்றைக்கு ஆரியப் – பார்ப்பனிய இந்துத்துவக் கும்பல்களை பெருமளவில் களமிறங்கி யிருக்கின்றன. தமிழ்நாட்டின் பண்பாட்டையும், இயற்கை வளங்களையும், தனித் தன்மைகளையும் இந்தக் கும்பல்களிடமிருந்து காக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டினர்  அனைவருக்கும் இருக்கிறது. தமிழ்நாட்டு வளங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு சுரண்டிக் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ். – இந்துத்துவக் கும்பலை அச்சுறுத்தும் பெரு நெருப்புகளுள் தந்தை...

குழப்பவாதிகளுக்கு கொளத்தூர் மணி விளக்கம் (9) திராவிட ஆட்சியின் சாதனைகளை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்

குழப்பவாதிகளுக்கு கொளத்தூர் மணி விளக்கம் (9) திராவிட ஆட்சியின் சாதனைகளை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி புறக்கணிக்கப்பட்ட மக்களைப் பற்றி சிந்தித்தது திராவிடர் இயக்கம் மட்டும்தான். நாம் இப்போது இருக்கிற சூழலில் நமக்கு வாய்த்திருக்கிற நன்மைகள் சிலவற்றைப் பேச வேண்டியுள்ளது. நீண்டகாலமாக இடதுசாரிகள் ஆட்சியில் இருந்த மாநிலம் மேற்கு வங்கம். இப்போதுதான் 10 ஆண்டுகளாக திரிணாமூல் காங்கிரசின் மம்தா பேனர்ஜி ஆட்சியில் இருக்கிறார். அந்த மேற்கு வங்கத்தில் இன்றும் கை ரிக்சா உள்ளது. மனிதனை மனிதன் இழுக்கிறான் என்ற அவல நிலையை நாம் 1970லேயே ஒழித்துவிட்டோம். “எங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மேற்கு வங்கத்தின் எல்லா மாவட்டத் தலைநகரங் களிலும் அரசு மருத்துவமனைகள் கட்டுவோம்” என்று மம்தா பேனர்ஜி 2004 தேர்தலில் வாக்குறுதி அளித்தார். ஆனால் கலைஞர் கடந்த ஆட்சியில் எல்லா மாவட்டத் தலைநகரிலும் அரசு மருத்துவக் கல்லூரி...

பெருமாள் மலையில் சட்ட எரிப்பு போராளிகள் வீரவணக்க பொதுக் கூட்டம்

பெருமாள் மலையில் சட்ட எரிப்பு போராளிகள் வீரவணக்க பொதுக் கூட்டம்

பெரியார் அவர்களால் அறிவிக்கப்பட்டு ..பெரியாரியல் தொண்டர்களால் நடந்தேறிய சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்ற, சிறையிலும்.. சிறைவாசத்திற்குப் பின்னும் ஜாதியொழிப்பு கொள்கைக்காக உயிர்கொடை தந்தப் பல்லாயிரக் கணக்கான கருஞ்சட்டை வீரர்களுக்கு வீரவணக்கம் செய்யும் விதமாக தி.வி.க. ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக பொதுக் கூட்டம் பெருமாள்மலையில் 26.11.2018 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. காவல் துறையின் அனுமதி மறுப்பால் உள்ளரங்குக் கூட்டமாக மாற்றப்பட்டடது. நிகழ்ச்சிக்கு பெருமாள் மலை இராசண்ணன் தலைமை வகிக்க மாநில அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி முன்னிலை வகித்தார். கலைமதி, இராசிபுரம் சுமதி, பெருமாள் மலை கழக ஆதரவாளர் பாரதிதாசன், புரட்சிகர இளைஞர் முன்னணி அற்புதராஜ் உரைக்குப் பின், பரப்புரைச் செயலாளர்  பால். பிரபாகரன். சட்ட எரிப்புப் போராட்டத்தின் வரலாற்றையும், அச் சமகாலத்தில் நிலவிய ஜாதீயக் கொடுமைகள் குறித்தும் தரவுகளோடு உரையாற்றினார். ஈரோடு மாவட்ட மாணவர்கள் கழகத்தின் சார்பாக  அரங்கம்பாளையம் பிரபு மற்றும் சௌந்தர் பரப்புரைச் செயலாள ருக்கு...

கழகக் கலந்துரையாடல்

கழகக் கலந்துரையாடல்

சென்னை : சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 11.11.2018 மாலை 6 மணிக்கு தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடைபெற்றது. குகன் – கடவுள் மறுப்பு கூறினார். கழகப் பொறுப்பாளர்கள் அன்பு தனசேகர், தபசி குமரன். சுகுமார், கருஅண்ணாமலை, எட்வின் பிரபாகரன், ஜெயபிரகாஷ், செந்தில்குமார், ஏசுகுமார், அருண்குமார், தேன்ராஜ் ஆகியோர் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர். புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் இதழ்களுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும், தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துதல் மற்றும் தலைமை செயலவை முடிவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிறைவாக தோழர்களிடம் கழக ஏடுகளுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க சந்தா புத்தகங்களை தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் மா. வேழவேந்தன் ஒப்படைத்து டிசம்பர் மாதம் வரவிருக்கும் பயணக்குழுவிடம் கழக இதழ்களுக்கான சந்தாக்களை ஒப்படைக்கக் கோரி, கூட்டத்தை நிறைவு செய்தார். விருதுநகர் : விருதுநகர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல்...

ஒட்டன் சத்திரத்தில் திராவிட விழுதுகள் நடத்திய  ‘பெரியாரியல் பயிற்சி வகுப்பு’

ஒட்டன் சத்திரத்தில் திராவிட விழுதுகள் நடத்திய ‘பெரியாரியல் பயிற்சி வகுப்பு’

18-11-2018 ஞாயிறு அன்று காலை 10-00 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 4-00 மணிவரை ஒட்டன்சத்திரம், பேருந்து நிலையம் அருகி லுள்ள இராம லிங்கசாமிகள் மடத் தின் அரங்கில், ஒட்டன் சத்திரம் திராவிட விழுதுகள் அமைப்பின் சார்பாக பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் பங்கேற்க பல் வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்களும், தோழர்களும், மாணவர்களும் 30 பெண்களும் ஆக 80 பேர் கலந்துகொண்டனர். வீ. அரிஸ்டாட்டில் வரவேற்புரையாற்ற, பேரா. மதியழகன் நோக்க உரையாற்றினார். ‘ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு’ என்ற தலைப்பில் பணிநிறைவு பெற்ற கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் மு.செந்தமிழ்ச்செல்வன் எளிய எடுத்துக்காட்டுகளைக் கூறி விளக்கியதோடு, இன்று இட ஒதுக்கீடு சந்திக்கும் நெருக்கடிகளையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார். அடுத்ததாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெரியாரியல் – காலத்தின் தேவை என்ற தலைப்பில் கருத்துகளை முன்வைத்தார்.  நண்பகல் உணவுக்குப் பின்னர் 2-30 மணியளவில் பிற்பகல் அமர்வு தொடங்கியது....

சாக்கடைக் குழியில் இறங்கும் அவலம்: தடுத்து நிறுத்தினர் கழகத் தோழர்கள்

சாக்கடைக் குழியில் இறங்கும் அவலம்: தடுத்து நிறுத்தினர் கழகத் தோழர்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருவான்மியூர் பகுதியைச் சார்ந்த தோழர்கள் தேன்ராஜ், தமிழ்தாசன் 13.11.2018  அன்று சென்னை அடையாறு பகுதியில் வடிகால் வாய் குழிக்குள் இறங்கி எந்த ஒரு பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் வேலை பார்த்து கொண்டிருந்த 2 தொழிலாளர்களை தடுதது, குழியிலிருந்து வெளியேற்றினர். உடனே எந்த பாதுகாப்பு கருவிகளும் தராமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுத்திய பொறுப்பாளரையும், சென்னை மாநகராட்சி அடையாறு உதவி பொறியாளரையும் நேரில் சந்தித்து எச்சரித்தனர். அவர்களும் இதுபோன்ற செயல்கள் தவிர்க்கப்படும் என்றும்… உடனடியாக பாதுகாப்புக் கருவிகளை தொழிலாளர்களுக்கு வழங்கி, குழிக்குள் இறங்கி வேலையில் ஈடுபட்ட செயலுக்கு வருத்தத்தையும் தெரிவித்து கொண்டனர். பெரியார் முழக்கம் 06122018 இதழ்

அனுமானுக்கு ‘கம்யூனிட்டி’ சான்றிதழ்

அனுமானுக்கு ‘கம்யூனிட்டி’ சான்றிதழ்

இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்குப் போன உ.பி. முதல்வர் ஆதித்யநாத் – ஹனுமான் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்று பேசியிருக்கிறார். இதற்கு இராஜஸ்தான் ‘சர்வ பிராமண மகாசபை’ என்ற பார்ப்பன அமைப்பின் தலைவர் சுரேஷ் மிஸ்ரா என்பவர் ஹனுமான் ஒரு ‘பிராமணன்’ அவனை எப்படி ‘தலித்’ என்று கூறலாம் என்று எதிர்ப்பு தெரிவித்து, 3 நாட்களுக்குள் ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ‘அனுமானுக்கு’ உ.பி. அரசும், ‘பிராமண’ மகாசபையும் ‘ஜாதிச் சான்றிதழ்’களை தயாரித்து வைத்திருக்கின்றன போலும். தேர்தல் பிரச்சாரத்தில் மத அடிப்படையில் வாக்கு கேட்கக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. ‘அனுமானை’யும் ‘இராமனை’யும் கூறி உ.பி. முதல்வரே ‘இந்து’க்கள் வாக்குகளை வாங்கி விடலாம் என்று பேசி வருவதற்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ, நமக்குத் தெரியாது. இதற்கிடையே உ.பி. மாநிலத்தில் ‘பீம்சேனை’ என்ற தலித் அமைப்பின் தலைவர் சந்திரசேகர், உ.பி....

இராவணன் உருவ எரிப்புக்கு பூரி சங்கராச்சாரி கண்டனம்

இராவணன் உருவ எரிப்புக்கு பூரி சங்கராச்சாரி கண்டனம்

தசரா விழாவின்போது இராவணன் கொடும்பாவிகளை எரிக்கும் நடைமுறை, இந்து கலாச்சாரத்திற்கு உட்பட்டது அல்ல என்று பூரி சங்கராச்சாரியாரான அதோக் ஷஜானந்த் தேவ் தீர்த்த மஹராஜ் கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜோடா பதக் அருகே இராவணன் கொடும்பாவி எரிக்கப்படுவதை வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்த மக்கள் மீது இரயில் மோதி சுமார் 60 பேர் உயிரிழந்தனர். இதன் பின்னணியில், பூரி சங்கராச்சாரியார் அதோக் ஷஜானந்த் தேவ் தீர்த்த மஹராஜ், மதுரா நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “ தசரா விழாவின்போது, கொடும்பாவி எரிக்கும் பழக்கம் ஒரு பழமைவாதமாகும்; இந்து கலாச்சார அடிப்படைக்கே எதிரானது; இந்து புராணத்தின்படி, இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் ஒரே ஒருமுறை மட்டுமே செய்யப்பட வேண்டும்; அவ்வகையில், இராவணனின் இறுதிச் சடங்குகளை இராமபிரான் முன்னிலையில் விபீஷணன் செய்து முடித்து விட்டார்; எனவே, தசரா விழாக்களின்போது இதுபோல் கொடும்பாவிகளை கொளுத்துவதால் பெரிய அளவில் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது; எனவே,...

கொளத்தூர் புலியூரில் நவ.27 மாவீரர் நாள்

கொளத்தூர் புலியூரில் நவ.27 மாவீரர் நாள்

இளமை சுகங்களை எல்லாம் துறந்து எதிர்கால சந்ததிகளுக்காக தம் நிகழ்காலத்தைப் பணயம் வைத்துப் போராடி தம் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கும், தமிழ்ப் பொதுமக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி 27.11.2018 அன்று மாலை 5.00 மணிக்கு கொளத்தூர், புலியூர் பிரிவில், தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் நடைபெற்றது. தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற்ற இந்த மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சிக்கு ஈரோடு ப. இரத்தின சாமி தலைமை வகித்தார். சேலம் மேவி.குமார், த.சரவணன், திருப்பூர் துரைசாமி, தமிழ் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக திருக்குறள் கூட்டமைப்பின் தலைவர் வி.சேகர் (திரைப்பட இயக்குனர்), திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் மாவீரர் நாள் உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர். பெரியார் முழக்கம் 06122018 இதழ்

30க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஓரணியாய் கருஞ்சட்டையுடன் திரளுகிறார்கள் டிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி

30க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஓரணியாய் கருஞ்சட்டையுடன் திரளுகிறார்கள் டிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி

திருச்சியில் டிசம்பர் 23ஆம் தேதி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கருஞ்சட்டைப் பேரணி யும், மாநாடும் திட்டமிடப்பட்டுள்ளது. பெரியாரை ஏற்றுக் கொண்ட தமிழ் தேசிய அமைப்புகள் – முற்போக்கு அமைப்புகள் – பெரியாரிய அமைப்புகள் இணைந்து பெரியாரே தமிழர்களின் ஒற்றை அடையாளம் என்று பார்ப்பனிய இந்துத்துவ வாதிகளுக்கு பிரகடனப்படுத்துவதே இந்தப் பேரணியின் நோக்கம். கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் தமிழ்நாடு முழுதுமிருந்தும் திருச்சி நோக்கி தனிப் பேருந்து வாகனங்களில் திரண்டு வர தயாராகி வருகிறார்கள். அண்மையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்,  தமிழ்நாடு முழுதும் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள் வழியாக தோழர்களை சந்தித்து வருகின்றனர். அப்போது திருச்சி கருஞ் சட்டைப் பேரணியில் கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்கள். கழகத் தோழர்கள்...

தீபாவளி பட்டாசு: காவல்துறையிடம் விழுப்புரம் மாவட்டக் கழகம் மனு

தீபாவளி பட்டாசு: காவல்துறையிடம் விழுப்புரம் மாவட்டக் கழகம் மனு

தீபாவளி அன்று  2 மணிநேரம் மட்டும் பட்டாசு வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை  கடைபிடிக்க வேண்டுமென்றும்  அதை மக்களிடம் அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும் அரசு துறையில் பணியாற்றுபவர்கள் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க நடவடிகை எடுக்கவும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  விழுப்புரம் கழக சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் , விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களுக்கும் அரசு நிர்வாகங்களுக்கும் 4.11.2018 அன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் அவர் வீட்டிற்கு சென்று கடிதம் கொடுக்கப்பட்டது. விழுப்புரம் கிழக்கு மாவட்ட கழகத் தலைவர் பூஆ.இளையரசன், மாவட்ட அமைப்பாளர் சிறீதர் ஆகியோர் அதிகாரிகளை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர்.   பெரியார் முழக்கம் 29112018 இதழ்

ஈரோடு (வடக்கு) மாவட்ட பரப்புரைப் பயணம்

ஈரோடு (வடக்கு) மாவட்ட பரப்புரைப் பயணம்

பெரியார்  140 ஆவது பிறந்த நாள் விழாவினை ஈரோடு வடக்கு மாவட்டம் வாரந்தோறும் தமிழர்கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணமாக நடத்தி வருகின்றது. மழை  காரணமாக  மற்றும் செயலவைக் கூட்டம் காரணமாக இரு வாரங்கள் ஒத்திவைக்கப்பட்ட  பரப்புரைப் பயணம் இந்தவாரம் நம்பியூர் ஒன்றியம் குருமந்தூர் பகுதியில் துவங்கியது. குருமந்தூர் மேட்டில் அமைக்கப்பட்டுள்ள கழகக் கொடிக்கம்பத்தில் குருமந்தூர் திமுக பகுதி செயலாளர் குழந்தைவேல் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் பகுத்தறிவுப் பாடலை பாட பரப்புரை பயணம் தொடங்கியது. பயணத்தின் நோக்கத்தை விளக்கி மாவட்ட செயலாளர் வேணுகோபால் தலைமையில் கழகப் பேச்சாளர் வேலுச்சாமி, மாநில வெளியீட்டு செயலாளர் இராம இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர். அலிங்கியம் செந்தில் அனைவருக்கும் நன்றி கூறினார். கழகத் தோழர் செந்தில் அனைவருக்கும் தேனீர் ஏற்பாடு செய்து இருந்தார். பயணக்குழு அடுத்து அளுக்குளி பகுதிக்கு வந்தது. அளுக்குளி தங்கம் வரவேற்புரையாற்ற பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் பகுத்தறிவு...

தலைமைக் கழக அறிவிப்பு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – மாற்றியமைக்கப்பட்ட புதியப் பட்டியல்

தலைமைக் கழக அறிவிப்பு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – மாற்றியமைக்கப்பட்ட புதியப் பட்டியல்

அன்பு தோழர்களுக்கு வணக்கம். 14.10.2018 அன்று திருப்பூரில் நடைபெற்ற கழகச் செயலவையின் தீர்மானங்களை நினைவூட்டுகிறோம். அவற்றின்  நிறைவேற்றம், முன்னேற்றம், கீழ்க்கண்ட செயல் திட்டங்கள் குறித்து ஆயவும், கலந்துரையாடவும் முதற்கட்ட பயணம் ஒன்றினை திட்டமிட் டுள்ளோம். இப்பயணத்தில் கழகத்தலைவர், பொதுச் செயலாளர், தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். டிசம்பர் 5 முதல் 9 வரை இருந்த மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – மாற்றியமைக்கப்பட்ட புதியப் பட்டியல் 15.12.2018 – சனி காலை – நெல்லை, தூத்துக்குடி; 16.12.2018 – ஞாயிறு காலை – கன்னியாகுமரி; 19.12.2018 – புதன் மாலை – விழுப்புரம்; 20.12.2018 – வியாழன் காலை – வேலூர்; மாலை – காஞ்சிபுரம்; 21.12.2018 – வெள்ளி காலை – சென்னை; மாலை – பாண்டிச்சேரி; 22.12.2018 – சனி மாலை – மதுரை. திட்டமிடப்பட்டுள்ள நாள்களில் அந்தந்த மாவட்ட கழகப்...

கொளத்தூர் தோழர்கள் அதிரடி நடவடிக்கையால் அரசு அலுவலகத்தில் ஆயுத பூஜை நிறுத்தம்

கொளத்தூர் தோழர்கள் அதிரடி நடவடிக்கையால் அரசு அலுவலகத்தில் ஆயுத பூஜை நிறுத்தம்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடுவது அரசாணைக்கு எதிரானது என்று கொளத்தூர் கழகத் தோழர்கள் அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தனர். கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நாங்கள் அப்படித்தான் கொண்டாடுவோம் என்று கூறவே தோழர்கள் கொளத்தூர் காவல்துறையில் அரசாணையைக் காட்டி புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்  கொளத்தூர் காவல்துறைக்கு கீழ்க்கண்ட கடிதத்தை எழுதியுள்ளார். பெரியார் முழக்கம் 29112018 இதழ்

குழப்பவாதிகளுக்கு கொளத்தூர் மணி விளக்கம் (8) இந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.

குழப்பவாதிகளுக்கு கொளத்தூர் மணி விளக்கம் (8) இந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. 7ஆம் பகுதி தொடர்ச்சி எந்தவிதமான மரியாதைக்குரிய பண்பும் இல்லாத தலைவராகத்தான் ம.பொ.சி. வாழ்ந்திருக் கிறார். காங்கிரசுக்கு உள்ளேயே இருந்துகொண்டு 1946ஆம் ஆண்டு தமிழரசுக் கழகத்தை ம.பொ.சி. உருவாக்கினார். 1938ஆம் ஆண்டிலேயே பெரியார் தனித் தமிழ்நாடு கேட்டார். ஆனால் அதற்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்து அமைப்பு தொடங்கிய ம.பொ.சி.தான் முதன்முதலில் தமிழ்நாடு கேட்டார் என்று தமிழ்தேசியவாதிகள் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். அப்போது முதலில் சுதந்திரத் தமிழரசு அமைப்பதே என் லட்சியம் என்றார். பிறகு 1953ஆம் ஆண்டில் வெளியாட்கள் சுரண்டல் இல்லாத தமிழ்நாடு அமைந்தாலே போதும் என்றார். இந்து பார்ப்பன நாளேட்டுக்கு ம.பொ.சி. எழுதிய கடிதத்தில், ‘என் ஆயுளில் இதுவரை சுதந்திரக் குடியரசு தேவை என்று நான் பேசியதே இல்லை’ என்று எழுதினார். இந்த மாதிரியான பிளவு முயற்சிகளை எதிர்ப்பதற்காகவே...

சென்னையில் மாவீரர் நாள் – சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம்

சென்னையில் மாவீரர் நாள் – சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம்

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் மயிலாப்பூர் பகுதிக் கழகம் சார்பில் நவம்பர் 25ஆம் நாள் மாவீரர் நாள் சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம் நவம்பர் 26 மாலை சேப்பாக்கத்திலுள்ள பத்திரிகையாளர் அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்றது. மயிலைப் பகுதி கழகப் பொறுப்பாளர் இராவணன் தலைமை தாங்கினார். நாத்திகன், பெரியார்-அம்பேத்கர்-ஈழப் போராளிகள் குறித்துப் பாடல்களைப் பாடினார். ஈழப் போரில் இன்னுயிர் ஈத்த மாவீரர்களின் நினைவாக நினைவுச் சுடரை மருத்துவர் தாயப்பன் ஏற்றினார். இரண்டு நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவர் தாயப்பன், ‘ஈழம் நமது கடமை’ எனும் தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து தோழர்கள் ஜாதி ஒழிப்புப் போராளிகள் நினைவாக ஜாதி ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனர். ‘பெரியாரின் இன்றைய தேவை’ எனும் தலைப்பில் விடுதலை இராசேந்திரனும், ‘சட்ட எரிப்புப் போராட்டம்’ குறித்து கொளத்தூர் மணியும் விரிவாகப் பேசினர். அரங்கம் முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைவருக்கும் மயிலைப் பகுதி தோழர்கள் மாட்டுக்கறியுடன் இரவு உணவு...

மருத்துவர் தாயப்பன் பேச்சு ஈழத்தமிழர் உரிமைகளைத் தடுப்பது இந்திய ஆளும் பார்ப்பன வர்க்கம்

மருத்துவர் தாயப்பன் பேச்சு ஈழத்தமிழர் உரிமைகளைத் தடுப்பது இந்திய ஆளும் பார்ப்பன வர்க்கம்

26.11.2018 இல் சென்னையில் கழகக் கருத்தரங்கில் மருத்துவர் தாயப்பன் உரையிலிருந்து: ஈழத் தமிழர்களுக்கு இரண்டு வகையில் நாம் ஆதரவினைக் காட்டுகிறோம். ஒன்று நமது தொப்புள் கொடியான தமிழர் என்ற ஆதரவு; மற்றொன்று இனம் என்ற எல்லையைக் கடந்து மனிதர் என்ற கண்ணோட்டத்தில் அவர்களுக்கான உரிமைகளுக்கு ஆதரவு. இன அழிப்புப் போரில் இனப்படு கொலைக்குள்ளான அவர்களுக்கு இதுவரை எந்த நிவாரண நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 40 ஆண்டுகளாக எவரையும் விசாரணையின்றி சிறையிலடைக்கும் பயங்கரவாத சட்டம் அங்கே அமுலில் இருக்கிறது. அது ஒரு இராணுவச் சட்டம். எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு காலம் ஒரு பயங்கரவாதச் சட்டம் நீடித்து இருந்தது இல்லை. இராணுவம் ஆக்கிரமித்த நிலங்கள் அவர்களிடம் முழுமையாக திருப்பித் தரப்படவில்லை. உளவியல் ரீதியாக அழுத்தத்திற்கும் தோற்கடிக்கப்பட்டோம் என்ற மனநிலைக்கும் உள்ளான அம்மக்களின் படைப்பாற்றல் திறன் முழுமையாக முடங்கி விட்டது. ஈழத் தமிழர்களின் திறன், படைப்பாற்றலுக்கு உதாரணம் கூற வேண்டுமானால் சுனாமி பேரழிவை இரண்டே மாதங்களில்...

கழக ஏடுகளுக்கு சந்தா  சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

டிசம்பர் 24ஆம் தேதி திருச்சி கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகி வரும் கழகத் தோழர்கள் கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழுக்கு சந்தா சேர்க்கும் இயக்கத்திலும் முனைப்போடு  செயல்பட்டு வருகிறார்கள். மாவட்டக் கழகத் தோழர்களுடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். முதல் கட்டமாக பயணம் நவம்பர் 21ஆம் தேதி காலை ஈரோடு வடக்கு மாவட்டம் கோபியில் காலை 11.30 மணியளவில் கழகத் தோழர் நிவாஸ் இல்லத்தில் நடந்தது. ஈரோடு வடக்கு மாவட்டமான கோபியில் 7 ஒன்றியங்களில் கழக அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. கல்வி உரிமை பரப்புரைப் பயணத்தைத் தொடர்ந்து ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத் தோழர்கள் பரப்புரைக்காக வாங்கியுள்ள வாகனத்தைப் பயன்படுத்தி கிராமம் கிராமமாக பரப்புரையை தொடர் நிகழ்வாக நடத்தி வருவது...

டிசம்பர் 24இல் திருச்சி நோக்கி திரளுவீர்!  அனைத்து இயக்கங்களும் இணைந்து நடத்தும் கருஞ்சட்டைப் பேரணி

டிசம்பர் 24இல் திருச்சி நோக்கி திரளுவீர்! அனைத்து இயக்கங்களும் இணைந்து நடத்தும் கருஞ்சட்டைப் பேரணி

பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று அனைத்து பெரியாரிய இயக்கங்களும், உணர்வாளர்களும் இணைந்து முக்கியமான அரசியல் நிகழ்வு ஒன்றினை நடத்த வேண்டும் என்பது குறித்து 10-11-2018, சனிக்கிழமை அன்று சென்னை செய்தியாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: டிசம்பர் 24 அன்று மாலையில் திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாடு நடத்துவதென்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. மாநாட்டிற்கான பெயர் விவாதிக்கப்பட்டு “தமிழின உரிமை மீட்போம்!” என்ற முழக்கத்தின் பெயரில் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது. •இயக்கங்கள் மற்றும் இயக்கங்களை தாண்டிய பெரியாரிய சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், உணர்வாளர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்வது. திருச்சியில் அனுமதி பெறுவதற்கான பொறுப்பினை தோழர் குடந்தை அரசன் அவர்கள் ஏற்றுக் கொண்டார். ஒன்பது மண்டலங்களாக பிரித்து மாநாட்டிற்கான வேலைகளை பார்ப்பது என முடிவெடுக்கப்பட்டு, ஒவ்வொரு இயக்கத்திற்கும் பொறுப்பு கொடுக்கப் பட்டது. ஒன்பது மண்டலங்கள் சென்னை – பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி: – 8608068002),...

நன்கொடை

நன்கொடை

விருதுநகர் கழகச் செயற்பாட் டாளர் கு. கணேசமூர்த்தி-திருச்சி தே. சுதாதேவி ஆகியோரின் ஜாதி-தாலி-சடங்கு மறுப்பு வாழ்க்கை இணை யேற்பு நிகழ்வு ஜன. 21, 2018 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் திருச்சியில் நடந்தது. மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.3000/- நன்கொடை வழங்கினர். விழுப்புரம் மாவட்டம் சங்கரா புரம் வட்டம் தொழுவந்தங்கல் கிராமத் தில் வீ. முருகன்-நா.பஞ்சவர்ணம் ஆகியோரது வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வை 11.11.2018 ஞாயிறு அன்று மாவட்ட செயலாளர் இராமர் நடத்தி வைத்தார். கழகத் தோழர்கள் மண விழாவில் பங்கேற்றனர். மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.1000/- நன்கொடை வழங்கப்பட்டது. (நன்கொடையினை நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். – ஆர்) பெரியார் முழக்கம் 22112018 இதழ்

குழப்பவாதிகளுக்கு கொளத்தூர் மணி விளக்கம் (7) தமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்

குழப்பவாதிகளுக்கு கொளத்தூர் மணி விளக்கம் (7) தமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி (6) அம்பேத்கரின் 15ஆவது தொகுதியில், 95ஆவது பக்கத்தில் உள்ள ஒரு செய்தியை இங்கே குறிப்பிடுகிறேன். ”தமிழ்மொழி முதலில் தமிதா என்று உச்சரிக்கப்பட்டது. பின்னர் தமிழாகி, திராவிட என்று உரு திரிந்தது. தமிழ் அல்லது திராவிடம் என்பதுதான் ஆரியர்கள் வருவதற்கு முன்னால் இந்தியா முழுவதும் பேசப்படுகிற மொழியாக இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்டு வந்தது தமிழ் ஆகும். வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய் மொழியான தமிழை கைவிட்டுவிட்டு சமஸ் கிருதத்தை கற்றுக்கொண்டனர். ஆனால் தென்னிந் தியாவில் இருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை. தமிழையே தங்களது தாய்மொழியாகப் பேணிக் காத்து வந்தனர். இந்த வேறுபாட்டை மனதில் கொண் டால் திராவிட என்ற பெயரை ஏன் தென்னிந்திய மக்களுக்கு மட்டும் பயன்படுத்தும்படி நேர்ந்தது என்பதைப்...

பட்டியலிடுகிறார் கேரள முதல்வர் சடங்குகளுக்கு எதிராக கேரளாவில் நடந்த சமூக சீர்திருத்தங்கள் பினராயி விஜயன் (கேரள முதல்வர்)

பட்டியலிடுகிறார் கேரள முதல்வர் சடங்குகளுக்கு எதிராக கேரளாவில் நடந்த சமூக சீர்திருத்தங்கள் பினராயி விஜயன் (கேரள முதல்வர்)

16.10.2018 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த இடது ஜனநாயக முன்னணி கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆற்றிய உரையிலிருந்து – ஸ்ரீ நாராயண குரு, அய்யன் காளி, சட்டம்பி சாமிகள் போன்றவர்களின் வரிசையில் உட்படுபவர்கள்தான் அய்யா வைகுண்டரும் பொய்கையில் குமார குரு தேவனும் எல்லாம். இவர்களால், இந்த மாநிலத்தில் நடைமுறையில் இருந்த மூடநம்பிக்கைகள் நீங்கியதால் வந்த ஒளி தான் இப்போது கேரளத்தில் வீசுகின்றது. நாம் அதில் பார்க்க வேண்டியது என்னவென்றால், அவர்கள் எல்லோரும் ‘சடங்குகளை மீறுவதற்காகத்தான் நிலைப்பாடு கொண்டிருந்தார்கள்’ என்பதைத் தான். ஸ்ரீ நாராயண குரு அருவிப்புறத்தில் சிவபிரதிஷ்டை நடத்திய சம்பவம்… உண்மையில் அது ஒரு சடங்கு மீறல் அல்லவா? அப்போது “உங்களுக்கு இதைச் செய்ய என்ன உரிமை?” என்று அவரிடம் கேட்டார்கள் அல்லவா? அதற்கு குரு என்ன பதில் கூறினார்…? “நாம் பிரதிஷ்டித்தது பிராமணர்களின் சிவனை அல்ல…நமது சிவனைத்தான் நாம் பிரதிஷ்டித் துள்ளோம்” அங்கு சடங்கு...

சாதியைக் கட்டியழுதால்… நாதியற்றுப் போவோம் நாம்!

சாதியைக் கட்டியழுதால்… நாதியற்றுப் போவோம் நாம்!

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள் முடிவுகட்டுவோம்! முடிவுகட்டுவோம்! சாதி ஆணவக் கொலைகளுக்கு முடிவுகட்டுவோம் முடிவுகட்டுவோம்! உரக்கச் சொல்வோம்! உரக்கச் சொல்வோம்! எல்லோரும் நிகரென்று உரக்கச் சொல்வோம்! தமிழக அரசே! துணை போகாதே! தமிழக அரசே! தமிழக அரசே! சாதி ஆணவக் கொலைக்கு எதிராய் தனிசட்டம் இயற்றிடு! கைதுசெய் கைதுசெய்! கொலை செய்த கூலிப்படையை உடனடியாக கைதுசெய்! அமைச்சர்களே, அமைச்சர்களே ஊர்ப்பணத்தைக் கொள்ளையிட்டு ஊர்வம்புப் பேசிக்கொண்டு ஊர்வலம் போவதற்கா அமைச்சர் பதவி உங்களுக்கு? தமிழர்களே! தமிழர்களே! சாதியைக் கட்டியழுதால் நாதியற்று போவோம் நாம்! பெற்றெடுத்த மகளையும் மணம்முடித்த மருமகனையும் மகள் வயிற்றுப் பிள்ளையையும் கொல்லச் சொல்லும் சாதிவெறி! சாதிவெறி போதையது! தாயுணர்ச்சிக் கொன்றுவிடும் தந்தையுணர்ச்சிக் கொன்றுவிடும் மாந்தநேயம் கொன்றுவிடும்! பழக்கமாம்! வழக்கமாம்! வழக்கறிஞர் வேலையும் மருத்துவப் படிப்பும் எந்த சாதிப் பழக்கமய்யா! பாட்டன் முப்பாட்டன் பட்டப் படிப்பு படிச்சானா? இடஒதுக்கீடு வாங்கிக்கிட்டு அரசு வேலைக்குப் போனானா? எல்லாமே மாறும்போது மணமுறைதான் மாறாதா? மந்திரிப்பதவி வாங்கிகிட்டு...

ஜாதிவெறியே! இன்னும் எத்தனை உயிர் குடிப்பாய்? கொடூரக் கொலைக்கு நீதி கேட்டு பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டம்

ஜாதிவெறியே! இன்னும் எத்தனை உயிர் குடிப்பாய்? கொடூரக் கொலைக்கு நீதி கேட்டு பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டம்

நந்தீஷ்-சுவாதியின் கொடூரமான ஜாதிவெறி ஆணவப் படுகொலையைக் கண்டித்து கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் (நவம்.19, 2018) சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்த் தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக்க கழகம், இளந்தமிழகம் ஒருங்கிணைத்த இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து செய்தியாளர்களுக்கு தரப்பட்ட அறிக்கை விவரம்: கடந்த 16-11-2018 இல் நந்தீசு-சுவாதி என்ற காதல் இணையர் கொல்லப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது. சுவாதியின் தந்தை, சித்தப்பா உள்ளிட்ட மூவரின் ஒப்புதல் வாக்குமூலமும் இவர்களின் பின்னணியும் இது சாதி ஆணவப் படுகொலை என்பதை உறுதிசெய்துள்ளது. நந்தீசு தலித் சமூகப் பிரிவை சேர்ந்தவர். சுவாதி வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். கொலை நடந்த விதம், அதை மறைப்பதற்காக நந்தீசின் முகம் சிதைக்கப்பட்டதும் சுவாதியின் தலைக்கு மொட்டையடிக்கப்பட்டதும் கொலையின் தொழில்முறைத் தன்மையைப் புரிந்துகொள்ள...

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – 2018 பட்டியல்

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – 2018 பட்டியல்

தலைமைக் கழக அறிவிப்பு அன்பு தோழர்களுக்கு வணக்கம். 14.10.2018 அன்று திருப்பூரில் நடைபெற்ற கழகச் செயலவையின் தீர்மானங்களை நினைவூட்டுகிறோம். அவற்றின்  நிறைவேற்றம், முன்னேற்றம், கீழ்க்கண்ட செயல் திட்டங்கள் குறித்து ஆயவும், கலந்துரையாடவும் முதற்கட்ட பயணம் ஒன்றினை திட்டமிட் டுள்ளோம். இப்பயணத்தில் கழகத்தலைவர், பொதுச் செயலாளர், தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – 2018 பட்டியல் 21.11.2018 – புதன் காலை – ஈரோடு வடக்கு – மாலை – ஈரோடு தெற்கு; 22.11.2018 – வியாழன் காலை – நாமக்கல் – மாலை – திருப்பூர்; 23.11.2018 – வெள்ளி காலை – கோவை மாநகர்  – மாலை கோவை புறநகர் (ஆனைமலை); 24.11.2018 – சனி காலை – திண்டுக்கல் (பழனி) -மாலை – திருச்சி, பெரம்பலூர், அரியலூர் (திருச்சி); 30.11.2018 – வெள்ளி காலை – சேலம் கிழக்கு- மாலை – சேலம்...

எம்.டி.எம்.ஏ.வில் என்ன நடக்கிறது?

எம்.டி.எம்.ஏ.வில் என்ன நடக்கிறது?

எம்.டி.எம்.ஏ.வில் என்ன நடக்கிறது? அவுட் லுக் தரும் ஆய்வு: ராஜீவ் கொலை விசாரணைக்காக 1998ஆம் ஆண்டு டிசம்பரில் நியமிக்கப் பட்ட – சி.பி.அய்யின் பல்நோக்கு விசாரணை ஆணையம் (எம்.டி.எம்.ஏ) முடங்கிக் கிடக்கிறது. கடந்த 20 ஆண்டு களுக்கு மேலாக ஆமை வேகத்தில் நகர்ந்து கொண் டிருக்கும் – மக்கள் மறந்து போன இந்த விசாரணை அமைப்பு –  இம்மாதம் சி.பி.அய். அமைப் பில் உருவான குழப்பங்களின்போது  மீண்டும் செய்தியானது. சி.பி.அய் அமைப்பில் நடந்த அதிகார மாற்றங்களின்போது – அந்த அமைப்பில் இணை இயக்குநராக நான்காம் இடத்தில் இருந்த அருண் குமார் சர்மா – இந்த நிறுவனத்திற்கு அதிகாரியாகத் தூக்கியடிக்கப்பட்டார். நாட்டின் ஆகப் பெரும் புலனாய்வு அமைப்பின் உள் முரண்பாட்டால் ஏற்பட்ட சர்மாவின் நியமனம், எம்.டி.எம்.ஏ அமைப்பையே சந்தேகத்துக்குரிய தாக்கி உள்ளது. சி.பி.அய்.யில் திறமையானவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது இந்த அமைப்பு. வேறு புலனாய்வு நிறுவனங் களைச் சேர்ந்தவர்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றார்கள். ராஜீவ்...

குழப்பவாதிகளுக்கு கொளத்தூர் மணி விளக்கம் (6) திராவிடம்: ஈழத்து தமிழ் அறிஞர்களும் அம்பேத்கரும் தந்த விளக்கம் என்ன?

குழப்பவாதிகளுக்கு கொளத்தூர் மணி விளக்கம் (6) திராவிடம்: ஈழத்து தமிழ் அறிஞர்களும் அம்பேத்கரும் தந்த விளக்கம் என்ன?

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சென்ற வார தொடர்ச்சி 2005ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. ‘திராவிட இயக்கக் கருத்து நிலையின் இன்றைய பொருத்தப்பாடு’ என்ற தலைப்பில் பேராசிரியர் சிவத்தம்பி ஒரு நூலை எழுதினார். இவர் நா.கைலாசபதி போன்ற மார்க்சிய சிந்தனை கொண்ட தமிழறிஞர் களின் தொடர்ச்சியாகவும், தமிழ் ஆளுமை யாகவும், அறிஞராகவும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். ஆனால் இவரைத்தான் உலகத் தமிழ் மாநாட்டில் அனுமதிக்காமல் விமானத்திலேயே வைத்து அப்படியே அனுப்பினார் ஜெயலலிதா. அந்த நூலில் அவர் எழுதிய சில சொற்களை மட்டும் இங்கே குறிப்பிட வேண்டும். “தமிழ்நாட்டில் வாழும் பிராமணர் அல்லாத பாதிக் குடும்பங்களைச் சேர்ந்த வர்கள் தங்களின் சமூக நிலைமையையும், தங்களின் அசைவு இயக்கத்தையும் வரையறை செய்த பிராமண கருத்து நிலை தம்மீது திணித் ததென அவர்கள் கண்ட மேலாண்மைக்கு...

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பெரியார் பிறந்த நாள் விழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பெரியார் பிறந்த நாள் விழா

தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், 17.09.2018 அன்று (திங்கள்) காலை 10 மணியளவில், எடப்பாடி ரோடு காவேரி நகரில், நகரத் தலைவர் தண்டபாணி பெரியாரின் பிறந்தநாள் விழா ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். காவேரி நகரில் தோழர் பரிமளம் கொடியேற்றினார். பாலம் அருகில், பெரியாரின் பொன்மொழி வாசக பலகையை சஜீனா திறந்து வைத்தார், மீனாட்சி கொடியேற்றினார். பேருந்து நிலையத்தில்  கலைசெல்வி  பொன்மொழி வாசக பலகையை திறந்து வைத்தார்.   கலைவாணி கொடியை ஏற்றினார். அங்கு தோழர்களால் கடவுள் மறுப்பு பாடல் பாடப்பட்டது. பின் நகர காவல் நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில், தந்தை பெரியாரின் வாசகங்கள் அடங்கிய அட்டை மற்றும் சாக்லேட் வழங்கப்பட்டது. தண்டபாணி, செல்வி சைக்கிள் கடையின்  சின்ன நூலகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை ரேணுகா திராவிடமணி திறந்து வைத்தார், இனிப்பு வழங்கப்பட்டது. அங்கு, அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் நகரில்  ரேணுகா...

கேரளா மதச் சடங்குகளை எதிர்த்தே வளர்ந்தது மதச் சடங்குகளுக்கு எதிரான சமூக சீர்திருத்தங்கள் தேவை பினராயி விஜயன் (கேரள முதல்வர்)

கேரளா மதச் சடங்குகளை எதிர்த்தே வளர்ந்தது மதச் சடங்குகளுக்கு எதிரான சமூக சீர்திருத்தங்கள் தேவை பினராயி விஜயன் (கேரள முதல்வர்)

16.10.2018 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த இடது ஜனநாயக முன்னணி கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆற்றிய உரையிலிருந்து – சமூக சீர்திருத்த மரபு தான் நமது மகத்தான மரபு… நாம் அத்தகைய சமூக சீர்திருத்த மரபைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறோம். இங்கு மேலோங்கி நிற்கும் சமூகசீர்திருத்த இயக்கங்கள் அனைத்தும் ஸ்ரீநாராயண குரு, சட்டம்பி சுவாமிகள் போன்றவர்களால் தலைமை தாங்கி வழி நடத்தப் பட்டவை. அதனால்தான் “ஒரு பைத்தியக்காரர்களின் கூடாரம்” என்று விவேகானந்தரால் விமர்சிக்கப் பட்ட கேரளம் மாநிலம், இன்று மத பேதமற்ற, ஜாதி பேதமற்ற சமூகமாகமுன்னேறி நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.இங்கே நமது நாட்டின் வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், நமது மாநிலத்தின் வரலாற்றை எடுத்துக்கொண்டா லும், எந்த காலகட்டங்களில் எல்லாம் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் உருவெடுத்தனவோ அந்த கால கட்டங்களில் எல்லாம் அதற்கெதிரான ஒரு பகுதியினரும் களத்திலிறங்கி இருக்கிறார்கள். அந்த பிரிவினரில் பிற்போக்கு...

‘குடிஅரசு’ வழக்கு விசாரணை

‘குடிஅரசு’ வழக்கு விசாரணை

முன்னாள் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி (தற்போது திராவிடர் விடுதலைக் கழகம்) மற்றும் முன்னாள் பெ.தி.க பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் (தற்போது தந்தை பெரியார் திராவிடர் கழகம்) ஆகியோர் மீது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன செயலாளரும், திராவிடர் கழகத் தலைவருமான  திரு. கி. வீரமணி அவர்களால் சென்னை உயர்நீதிமன்றத்தில் காபிரைட் ஐ (உடியீலசiபாவ) மீறியதாக- அதாவது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கே சொந்தமான பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகை மற்றும் இதர தொகுப்புகள் , புத்தகங்கள் மற்றும் வெளியீடுகள் ஆகியவற்றை மீறி வெளியிட்டதற்காக ரூ. 15,00,000/- இழப்பீடு கேட்டு  2008ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில்  ஒன்றன்பின் ஒன்றாக உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை திரு. கி. வீரமணி அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுமல்லாமல், பெரியார் தன் எழுத்துகளுக்கு தனியாக காப்புரிமை கொண்டாடாததால் பெரியாரின் எழுத்தும் பேச்சும் , அவர் இறந்து 25 ஆண்டுகள் கழிந்ததும் அதே...

பார்ப்பன-பனியா சுரண்டலுக்கு எதிராக பெரியார் வழியில் ‘சூத்திர’ புரட்சி தொடங்க வேண்டும் ஆய்வாளர் காஞ்சா அய்லய்யா முழக்கம்

பார்ப்பன-பனியா சுரண்டலுக்கு எதிராக பெரியார் வழியில் ‘சூத்திர’ புரட்சி தொடங்க வேண்டும் ஆய்வாளர் காஞ்சா அய்லய்யா முழக்கம்

இந்தியா பார்ப்பனர்-பனியாக்கள் பிடியில் தான் நீடித்துக் கொண்டிருக்கிறது. மோடி ஆட்சியில் இது மேலும் வலிமை பெற்று விட்டது. பெரியார் தொடங்கி வைத்த ‘சூத்திரர்கள்’ புரட்சி நடந்தாக வேண்டும் என்று சமூக இயல் ஆய்வாளரும் இந்துத்துவ பாசிச எதிர்ப்பாளரும் பேராசிரியருமான காஞ்சா அய்லய்யா அறைகூவல் விடுத்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் நடத்திய “கருத்துரிமை போற்றுதும் – எழுத்தாளர்கள் கலைஞர்களின் ஒன்றுகூடல்” – 2018 அக். 19 அன்று காமராசர் அரங்கில் காலை முதல் இரவு வரை நடந்தது. பேராசிரியர் காஞ்சா அய்லய்யா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். பெரியாருக்கு வணக்கம்; அம்பேத்கருக்கு வணக்கம் என்று ஆங்கிலத்தில் உரையைத் தொடங்கிய அவர், இந்தியாவிலேயே மனுவாதி களுக்கு எதிராக சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி நிலையங்களைத் திறந்த சாவித்திரி பாய் புலே, பெரியார் அம்பேத்கர், மார்க்ஸ் படங்கள் இதுபோன்ற மாநாடுகளில் இடம் பெற வேண்டும் என்று பலத்த கரவொலிகளுக் கிடையே தெரிவித்தார். மோடியின் ‘தேசியம்’...

கழகத் தலைவர் பங்கேற்ற  எஸ்.டி.பி.அய். மாநாடு

கழகத் தலைவர் பங்கேற்ற எஸ்.டி.பி.அய். மாநாடு

திருச்சியில் 21.10.2018 ஞாயிறு அன்று நடைபெற்ற எஸ்.டி.பி.அய்.  அமைப்பின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட் டின் காலை அமர்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘நெருக்க டிக்குள்ளாகும் மத சார்பின்மையும், அரசியல் எழுச்சிக்கான தேவை யும்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கு. இராமகிருட்டிணன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், ஜமாத்தே இஸ்லாமிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜலாலுதீன், தமிழ்த் தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன், கிருஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிக்கோ இருதயராஜ், மே17 இயக்கத்தின் அருள் முருகன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் காலித் முகமது, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில...

மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்

மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்

காஞ்சிபுரம் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்  18-10-2018 அன்று மாலை 5 மணிக்கு தினேஷ்குமார் தலைமையில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி முன்னிலையில் நடைபெற்றது . புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் இதழ்களுக்கு சந்தா சேர்த்தல், தெருமுனைக் கூட்டம், கருத்தரங்கம்  நடத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், செங்குட்டுவன், தெள்ளமிழ்து, ரவிபாரதி, கரிகாலன், ஆண்டனி, ராஜேஷ், அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கராபுரம் :  18.10.2018 வியாழன் மாலை 4மணி அளவில் திராவிடர் விடுதலை கழக மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் சங்கராபுரம் வட்டம் கடுவனூரில் சி. சாமி துரை இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் நா.அய்யனார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல்களும், பி.ஜே.பி.யினால் மக்கள் படும் அவலம் , பெரியாரியல் பற்றிய தமிழ்...

புல்லட் இரயில் : கடன்சுமை  ரூ. 6,160 கோடி அதிகரித்தது…!

புல்லட் இரயில் : கடன்சுமை ரூ. 6,160 கோடி அதிகரித்தது…!

ஜப்பான் நாட்டு நாணயமான ‘யென்’னின் மதிப்பு, தொடர்ந்து உயர்ந்துகொண்டே போவதால், புல்லட் ரயில் திட்டத்திற்காக இந்தியா பெற்ற கடன்தொகையில் திடீரென ரூ. 6 ஆயிரத்து 160 கோடியை அதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.திட்டப்பணிகளே இன்னும் துவங்கப்படாத சூழலில் கடன்மதிப்பு- அதுவும் ஒரே ஆண்டில் ரூ. 6 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது ரயில்வே துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டு கடனுதவியுடன் மும்பை – அகமதாபாத் இடையே 508 கி.மீ. தூரத்திற்கு ரூ. 1 லட்சம் கோடி செலவில் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ‘இந்தியாவின் முதலாவது அதிவேக புல்லட் ரயில் திட்டம்’ என்றும் இத்திட்டத்தை அவர் அழைத்தார். மேலும், குஜராத் தேர்தலையொட்டி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வை இந்தியாவுக்கே நேரில் வரவழைத்து கடந்த ஆண்டு அகமதாபாத்தில் புல்லட் ரயில் திட்டத்தை மோடி துவக்கி வைத்தார். அப்போதே இத்திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்தியா போன்ற...

ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம்  (5) விடுதலைப் புலிகளே தங்களை திராவிடர்கள் என்றே பதிவு செய்தனர்

ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் (5) விடுதலைப் புலிகளே தங்களை திராவிடர்கள் என்றே பதிவு செய்தனர்

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சென்ற வார தொடர்ச்சி பெரும்பான்மை மக்களாகிய நம்மை, எண்ணிக்கையில் சிறுபான்மை மக்களாகிய பார்ப்பனர்களுடன் ஒப்பிட்டு நம்மைப் பார்ப்பனர் அல்லாதவர்கள் என்று கூறுவதா என்று கேட்ட பெரியார். சிதம்பரத்தில் ஒருமுறை பேசும்போது கூட பெரியார் கேட்டார். ”உங்களைப் பார்த்து ஈரோட்டவர் அல்லாதவர்களே (சூடிn நுசடினயைளே) என்று நான் பேச இயலுமா? ஈரோட்டிலிருந்து நான் மட்டும்தான் வந்திருக்கிறேன். நீங்கள் 10,000 பேர் இருப்பீர்கள் என்றால் நீங்கள் எல்லாம் இந்த ஊர். அதுபோலத்தான் எண்ணிக்கை யில் குறைவாக இருக்கிற பார்ப்பனர்களை ஒப்பிட்டு நம்மைக் குறிக்க பார்ப்பனர் அல்லாதவர் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது” என்று பேசினார். அதற்கு மாற்றாக ஒரு உடன்பாட்டுச் சொல்லாக, எதிர்மறைச் சொல்லாக அல்லாமல், நேர்மறைச் சொல்லாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிடர் என்ற சொல்லை 1939ஆம் ஆண்டு...