சென்னையில் ‘ஊபா’ எதிர்ப்பு கருத்தரங்கம்

‘‘ஊபா’வை நீக்கிட என்.அய்.ஏ வை கலைத்திட குரலெழுப்புவோம்’ கருத்தரங்கம் சென்னை நிருபர்கள் சங்க கட்டிடத்தில் 20.02.2021 அன்று மதியம் 3 மணியளவில் நடைபெற்றது.

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு, “பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டு வந்த சட்டங்களே பிரிட்டிஷ் அரசாங்கமே கலைத்துவிட்டது. அதன் மாற்றே இந்த ஊபா சட்டம். அது தேச விரோதி களுக்கு எதிராக பயன்படுத்துவதாக பாஜக அரசு கூறி வருகிறது, மக்களுக்காக சிந்திப்பவர்கள் தான் தேச விரோதி களென்றால், நாம் தேச விரோதிகளா கவே இருப்போம்” என்று கருத்துரை யாற்றினார். கருத்தரங்கில் கழக மாவட்டச் செயலாளர் உமாபதி, மயிலை இராவணன் மற்றும் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 25022021 இதழ்

You may also like...