கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தந்தை நடேசன் படத்திறப்பு

கழகத் தலை மைக் குழு உறுப் பினர் ந. அய்யனார் தந்தை நடேசன்(75) கடந்த 25.01.2021 அன்று அதிகாலை உடல் நலக் குறைவால் முடிவெய்தினார். நடேசன் அவர்களின் இறுதி நிகழ்வு 25.01.2021 அன்று மாலை 4 மணியளவில் எந்த வித சடங்கு, சம்பிரதாயங்களும் இல்லாமல் நடைபெற்றது.

நடேசனின் படத்திறப்பு நிகழ்வு 31.01.2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் கடுவனூரில் காலை 10 மணியளவில் நடைபெற்றது. நிகழ்விற்கு, ச.கு.பெரியார் வெங்கட் வரவேற்பு கூறினார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி படத்தைத் திறந்து வைத்தார்.

தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் தொடக்கவுரையாற்றினார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக்குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன், திவிக  கள்ளக்குறிச்சி  மாவட்ட அமைப்பாளர் சி.சாமிதுரை, விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ. இளையரசன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் கோ.சாக்ரடீசு, வேலூர் மாவட்ட செயலாளர் இரா.பா.சிவா, சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி, மக்கள் குடியரசுக் கட்சி தம்பி மண்டேலா, கள்ளக்குறிச்சி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் நா.வெற்றிவேல், புதுவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி விஜயன், சங்கை தமிழ் படைப்பாளர் தலைவர் அரங்க செம்பியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல.சிலம்பன் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். நிகழ்வை கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்க. இராமர் தொகுத்து வழங்கினார்.

நிகழ்வில், தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 04022021 இதழ்

You may also like...