Category: பெரியார் முழக்கம் 2017

இந்தியா இனி ‘இந்தி’யா?

இந்தியா இனி ‘இந்தி’யா?

2011-ம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த இந்தி மொழி தொடர்பான பரிந்துரைகளுக்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இப்போது ஒப்புதல் அளித்துள்ளார். இந்தி பேசாத மாநிலங்களின் மீது இடியைப்போல் இறங்கியிருக்கும் இந்தப் பரிந்துரைகள் கீழ்வருமாறு… ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட தலைவர்கள், குறிப்பாக யாருக்கெல்லாம் இந்தி தெரியுமோ, அவர்கள் இனி நாடாளுமன்றத்திலும் பொது விழாக்களிலும் இந்தியில்தான் பேச வேண்டும் விமானங்களில் இந்தியில்தான் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். அதைத் தொடர்ந்து, ஆங்கிலத்தில் அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும். இனி, விமானங்களில் வழங்கப்படுகிற செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் 50 சதவிகிதம் இந்தி மொழியில் இருக்க வேண்டும். ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் டிக்கெட்டுகளிலும் இந்தி பெருமளவு பயன்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசின் டேராடூன் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிலையத்தில் அனைத்துப் பயிற்சி ஏடுகளும் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளைக்கொண்டதாக இருக்க வேண்டும். பள்ளிக் கல்வித்திட்டத்தில் இந்தி கட்டாயப் பாடமாகச் சேர்க்கப்படவேண்டும். முதல் கட்டமாக சி.பி.எஸ்.இ...

தமிழகத்தில் இந்தியைத் திணிப்பதை அனுமதிக்க முடியாது! ஜூன் 5இல் சென்னையில் மத்திய அரசு பெயர்ப் பலகையில் இந்தி அழிப்பு கழக தலைமைக் குழுவின் முக்கிய முடிவுகள்

சென்னையில் மத்திய அரசு அலுவலக வளாகமான சாஸ்திரி பவனில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை ஜூன் 5இல் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிறது. இந்தியே இந்தியாவின் ஆட்சிமொழி என்பதை வலியுறுத்தும் 1976ஆம் ஆண்டு ஆட்சி மொழி விதிகள் இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பிலேயே 1 (ii)ஆவது பிரிவில் “They shall extend to the whole of India, except the state of Tamil Nadu” – என்று தெளிவாக குறிப்பிடப்பட் டிருந்தது.  1987, 2007, 2011இல் திருத்தங்கள் செய்யப் பட்டன. 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு தந்த விதிவிலக்கை நீக்கிவிட்டார்கள். இந்த உள்துறை அமைச்சக ஆவணத்தில் மாநில ஆட்சி மத்திய ஆட்சி களில் இந்தியைப் பயன்படுத்துதல் இரண்டு ஆட்சி களுக்கிடையிலான தகவல் தொடர்புகளில் இந்தியைப் பயன்படுத்துதல் குறித்து ஆட்சி...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீடுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீடுகள்

மனு நீதி : ஒரு குலத்துக்கொரு நீதி- பெரியார், விலை-ரூ.10. தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?-விடுதலை இராசேந்திரன் விலை-ரூ.30. இந்து மதப் பண்டிகைகள்-பெரியார். விலை-ரூ.30. கடவுளர் கதைகள்- சாமி. விலை-ரூ.20. இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா? விலை-ரூ.20. உயர் எண்ணங்கள்-பெரியார். விலை-ரூ.30. பெரியாருக்கு எதிரான முனைமழுங்கும் வாதங்கள்-கொளத்தூர் மணி. விலை-ரூ.50. இவர்தான் பெரியார்-தஞ்சை மருதவாணன். விலை-ரூ.20. திராவிட இயக்க வரலாற்றுச் சுவடுகள்-தஞ்சை மருதவாணன். விலை-ரூ.30 ஈழம் முதல் அணுஉலை வரை-கொளத்தூர் மணி. விலை-ரூ.30 பண்பாடு-சமூகம்-அரசியலில் ‘மனு’வின் ஆதிக்கம்- விடுதலை இராசேந்திரன், விலை-ரூ.10 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஜாதி ஒழிப்பு மலர். விலை-ரூ.100 பேய், பில்லி-சூன்யம், பொய். விலை – ரூ.30. ‘சமஸ்கிருத’ படையெடுப்பு. விலை – ரூ.30. விஞ்ஞானிகளை அழித்த மதவெறி. விலை – ரூ.30. வளர்ந்தது விஞ்ஞானம்; வீழ்ந்தன மூடநம்பிக்கைகள். செங்குட்டுவன்-விலை-ரூ.20. வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள்-அப்துல் சமது உரை- விலை-ரூ.10. தொடர்புக்கு: தலைமைக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் 95,...

பெங்களூரில் “குழந்தைகள் சிறப்பு பழகு முகாம்” தேதி, இடம் மாற்றம்

பெங்களூரில் “குழந்தைகள் சிறப்பு பழகு முகாம்” தேதி, இடம் மாற்றம்

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் குழந்தைகள் பழகு முகாம் : நாள் : 13.5.2017 முதல் 17.5.2017  (5 நாள்கள்)  இடம் : பெங்களூர் அய்.எஸ்.அய். அரங்கம். கற்பனைத் திறன் வளர்த்தல், படைப்பாற்றல், குழு உரையாடல், கதை உருவாக்கல், ஓவியப் பயிற்சி, கவிதை, கட்டுரை புனைதல், அறிவியல் விளையாட்டுகள் உள்ளிட்ட நிகழ்வுகள். 10 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். குறைந்த பட்ச பங்களிப்பு : குழந்தை 1-க்கு : ரூ.1500/- ரூ.1500/= செலுத்த இயலாதவர்கள் ரூ.1000/-= செலுத்தலாம். முன் பதிவு அவசியம். பதிவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 98424 48175 – ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) பெரியார் முழக்கம் 04052017 இதழ்

வில்வித்தைப் போட்டியில் கழகக் குடும்பத்தின் குழந்தைகள் வென்றனர்

வில்வித்தைப் போட்டியில் கழகக் குடும்பத்தின் குழந்தைகள் வென்றனர்

சேலம் மாவட்டம் கொளத்தூர் கழக குடும்பத்தை சார்ந்த கொளத்தூர் குமார் – தமிழரசி ஆகியோரது மகன் இனியன், காவலாண்டியூர் விஜயகுமார் – கலைச்செல்வி ஆகியோரது மகன் வளவன், காவை இளவரசன் – மாதவி ஆகியோரது மகன் எழிலரசு ஆகியோர்  23.4.17 ஞாயிறு அன்று நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் ஸ்போர்ட்ஸ் பவுண்டேசன், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடத்திய மாநில அளவிலான வில் வித்தை போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான கம்போண்ட் பிரிவில் பங்கேற்றனர். இனியன் தங்கபதக்கம் பெற்றார். 10 வயதிற்கு உட்பட்டோருக்கான கம்போண்ட்  பிரிவில் வளவன் தங்க பதக்கம் பெற்றார். 10 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியன் பிரிவில் எழிலரசு வெள்ளி பதக்கம் பெற்றார். இதற்கான சான்றிதழையும், பதக்கத்தையும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி புண்ணியமூர்த்தி வழங்கினார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டுகளை தெரிவித்து குழந்தைகளுக்கு உற்சாகமூட்டினார். பெரியார் முழக்கம் 04052017 இதழ்

பத்ரிநாராயணன் 13ஆவது நினைவு நாள்

திராவிடர் விடுதலை கழகத்தின் கழக செயல் வீரர் பத்ரி நாராயணன் 13 ஆம் ஆண்டு நினைவு நாள் 30.4.17 அன்று  மிகுந்த எழுச்சியுடன் நடந்தது. அவரது நினைவிடத்தில் கழகத் தோழர்கள், காலை 9 மணி யளவில் மலர்வளையம் வைத்து உறுதி மொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தினர். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர், ஆசிரியர் திருப்பூர் சிவகாமி நிகழ்வில் பங்கேற்றார். தலைமைக் குழு  உறுப்பினர் அன்பு தனசேகரன்  வீரவணக்க முழக்கங் களை எழுப்பி உரையாற்றினார். தந்தை பெரியார் திராவிடர் கழகம் அண்ணா மலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த ரூதர். கார்த்திக், குமரப்பா , தி.மு.க. ஆர்.என். துரை ஆகியோர் பத்ரியின் கொள்கை உறுதியை நினைவுகூர்ந்து உரையாற்றினர். இராயப்பேட்டை  பெரியார் படிப்பகத்தில் பத்ரி நாராயணன் புகைப்படத்திற்கு தலைமை கழகச் செயலாளர் தபசி குமரன் மாலை அணிவித்தார்.  பகுதி முழுதும் ஏராளமான கழகக் கொடிகளை தோழர்கள் கட்டி யிருந்தனர். மாவட்ட செயலாளர் உமாபதி நிகழ்வுகளை...

வெளியுறவுக் கொள்கைகளை முடிவெடுப்பதில் மாநில அரசுகளுக்கு உரிமை வேண்டாமா?

வெளியுறவுக் கொள்கைகளை முடிவெடுப்பதில் மாநில அரசுகளுக்கு உரிமை வேண்டாமா?

அய்தராபாத் நிசாமுக்கு வழங்கப்பட்டது வெளியுறவுத் துறை அதிகாரம் ‘சவுத் பிளாக்’ பார்ப்பன அதிகார வர்க்கத்தின் பிடி தளர்த்தப்பட வேண்டும் இந்தியாவில் வெளியுறவுக் கொள்கைகள், எப்படி, எவரால், எந்தப் பார்வையில் செயல்படுத்தப்படுகின்றன என்ற கேள்விக்கு வெளிப்படையான பதிலோ, விவாதங்களோ கிடையாது. வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் பார்ப்பன அதிகார வர்க்கத்துக்கு பெரும் பங்கு உண்டு. டெல்லி தலைமைச் செயலகத் தில் ‘சவுத் பிளாக்’ அவ்வளவு சக்தி வாய்ந்தது. பார்ப்பன அதிகார வர்க்கத்தின் ஆளுமையையும் அதிகாரங்களையும் அங்கே பார்க்க முடியும். ஈழத் தமிழர் இனப்படுகொலைக்குள்ளான 2009ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகமே ஓரணியில் திரண்டு கொதித்து, “இந்திய அரசே ஈழத் தமிழர்களைக் காப்பாற்று” என்று கண்ணீர்விட்டுக் கதறிய ஓலம், டெல்லி பார்ப்பன அதிகாரவர்க்கத்தின் செவிப்பறைகளில் கேட்கவே இல்லை. அன்றைய ஆளும் காங்கிரஸ், சிறிலங்கா அதிகார வர்க்கமும், இந்திய பார்ப்பன அதிகார வர்க்கமும் இனப்படுகொலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு ஒவ்வொரு நாளும் கலந்து பேசி திட்டங்களைத் தீட்டின. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை தீர்மானிப்பதற்கு முன்பு,...

கல்வித்துறை மீது தொடரும் மோடி அரசின் தாக்குதல்

கல்வித்துறை மீது தொடரும் மோடி அரசின் தாக்குதல்

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப்படிப்புகளுக்கான நிதி ஒதுக் கீட்டை குறைத்துக்கொண்டே வரும் மோடி அரசு, சமூகப் பாகுபாடு பற்றிய ஆய்வு மையங்களுக்கான நிதியை முற்றிலுமாக நிறுத்தி விடுவதென முடிவெடுத்துள்ளது. நாட்டின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் சமூகப் பாகுபாடு பற்றிய ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (யுஜிசி) நிதி அளித்து வருகிறது. இந்நிலையில் 11-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நிலையங்கள் (2007-2012) மற்றும் 12-ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட சமூக பாகுபாடு பற்றிய ஆய்வு மையங்களுக்கான நிதியை நிறுத்தப் போவதாக யுஜிசி தெரிவித்துள்ளது. 13ஆவது திட்டத்தின் மூலம் மீண்டும் இத்திட்டம் நீட்டிக்கப்படும் என பல்கலைக்கழகங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், மார்ச் 31 முதல் இவற்றுக்கான நிதி நிறுத்தப்படும் என பல்கலைக்கழகங்கள் சில வற்றுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பெண்கள் மீதான சமூக பாகுபாடு தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் இதர ஆய்வு...

சங்பரிவாரங்களுக்கு அமெரிக்காவின் ஆணையம் கண்டனம்

சங்பரிவாரங்களுக்கு அமெரிக்காவின் ஆணையம் கண்டனம்

இந்தியாவில் இந்தத்துவா சக்திகளால் மத சுதந்திரத் துக்கான அச்சுறுத்தல்கள் மேலும் மேலும் மோசமடைந்து வருவதாக அமெரிக்காவின் மத சுதந்திரத்துக்கான ஆணையத்தின் ஆண்டறிக்கை கூறியுள்ளது. ஏப்.26ம் தேதி, 2016ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்காவில் இந்த ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து தேசியவாதக் குழுக்களும் அவர்களின் ஆதரவாளர்களும், மதச் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை, துன்புறுத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. 10 மாவட்டங்களில் இது மிகவும் மோசமாக நடந்து வருகிறது. நாட்டின் தேசிய மற்றும் மாநிலங்களின் சட்டங்களும் இந்த வன்முறைக்கு சாதகமான சூழல்களை உருவாக்கி வருகின்றன என்று குற்றம்சாட்டும், அந்த அறிக்கை பசுவதைத் தடைச் சட்டம், மற்றும் மத மாற்றத் தடைச் சட்டம் ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளது. பிரதமர் மோடி, சகிப்புத் தன்மை, மதச் சுதந்திரம் பற்றி பேசினாலும், ஆளும் கட்சியின் உறுப்பினர்களும் அவர்களோடு நெருக்கமாக இருக்கும் மத தேசியம் பேசும் அமைப்பினரும்...

தலையங்கம் இராமானுஜர் ஆயிரம் ஆண்டு விழா கொண்டாடுவோரே – பதில் கூறுங்கள்!

தலையங்கம் இராமானுஜர் ஆயிரம் ஆண்டு விழா கொண்டாடுவோரே – பதில் கூறுங்கள்!

பிறப்பால் பார்ப்பனரான வைணவ மதப் பிரிவைச் சார்ந்த இராமானுஜரின் ஆயிரமா வது ஆண்டு விழா இப்போது கொண் டாடப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். – சங் பரிவாரங்கள் – வைணவப் பார்ப்பனர்கள் – இராமானுஜருக்கு விழா எடுக்கிறார்கள். ஆனால் இராமானுஜர் முன் வைத்த கருத்து களை இவர்கள் பின்பற்று கிறார்களா? இராமானுஜர், பாரதியைப்  போல் ஒடுக்கப்பட்ட ஜாதியினரும் ‘பூணூல்’ அணிந்து, ‘பிரம்மத்தை’ அடையலாம்; ‘பிராமணர் என்பது பிறப்பால் வருவது அல்ல’ என்று கூறிய ஒரு சீர்திருத்தவாதி. 3 சதவீத பார்ப்பனர்கள், தங்கள் பிறவி மேலாண்மையின் அடையாளமாக அணியும் பூணூலை மற்றவர்களுக்கு அணியச் சொல்வதைவிட பிறவி அகங்காரத்தை வெளிப்படுத்தும் பூணூலை பார்ப்பனர்களே ஏன் கழற்றி வீசக் கூடாது என்பதுதான் பெரியார் இயக்கம் முன் வைத்த கேள்வி. அரிசியில் கல் கலந்துவிட்ட நிலையில் கல்லைப் பொறுக்கி, அரிசியைத் தூய்மைப்படுத்த வேண்டுமே தவிர, அதைச் செய்யாது, அரிசிகளை பொறுக்கிக் கொண்டிருப்பது அறிவுடைமையாகுமா என்று பெரியார் கேட்டார். இத்தகைய...

அரசு மருத்துவர்கள் போராடுவது ஏன்?

அரசு மருத்துவர்கள் போராடுவது ஏன்?

தமிழகத்தில் தற்போது 1800 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 330 அரசு மருத்துவமனைகள், 19 அரசு மருத்துவ கல்லூரிகள், 50க்கும் மேற்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் போன்ற மருத்துவத் துறைகளில் சுமார் 16000க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் சேவை செய்து வருகின்றனர். இதில் சுமார் 9000 மருத்துவர்கள் இளநிலை படிப்பு (எம்.பி.பி.எஸ்.) மட்டுமே முடித்துவிட்டு ஏழை எளிய மக்களுக்கு சேவை புரிந்து வருகின்றார்கள். இத்தகைய சிறப்பான பணியினாலேயே அனைத்து சுகாதார குறியீடுகளிலும் இந்தியாவில் தமிழகம் முன்னிலையில் இருந்த வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது சுமார் 1500 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றில் அனைத்திந்திய கலந்தாய்வு மூலம் 50 சதவித இடங்களும், மாநில அரசின் கலந்தாய்வின் மூலம் 50 சதவீத இடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது. அதாவது இதில் மாநில அரசிடம் உள்ள மருத்துவ முதுநிலை பட்டப் படிப்பின் மொத்த 750 இடங்களில் 50 சதவீத இடங்கள் சிறப்பு சேவை ஒதுக்கீடாக சுமார் 375 இடங்கள்...

கல்வி உரிமை மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும். பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது நீதிபதி அரி பரந்தாமன் மருத்துவர்களிடையே முழக்கம்!

கல்வி உரிமை மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும். பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது நீதிபதி அரி பரந்தாமன் மருத்துவர்களிடையே முழக்கம்!

தமிழ்நாட்டில் அரசுத் துறையில் ஆரம்ப சுகாதார மய்யங்களில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருவோருக்கு பணியில் இருக்கும்போதே உயர் பட்டப்படிப்புக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கும் கோட்டா முறையை அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியிருக்கிறது.; இந்த கோட்டா முறை நீக்கப்பட்டால் கிராமங்களில் பணிபுரிய மருத்துவர்கள் வரும் வாய்ப்புகள் குறைந்து விடுவதோடு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் பட்டப்படிப்பு படித்த மருத்துவர்களின் சேவையும் கடும் பாதிப்புக்குள்ளாகிவிடும். எனவே மருத்துவ சேவையின் சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் இந்த ஆபத்தை நீக்கிட அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகம் முழுதும் அரசு மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர் வளாகத்தில் 8 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏப்.26 அன்று கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்று மருத்துவர் களிடையே பேசினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: மருத்துவ சேவையில் இந்தியாவுக்கே...

மார்க்கத்தையும் இயக்கத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும்!

மார்க்கத்தையும் இயக்கத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும்!

திராவிட இயக்கங்களுக்கும் இஸ்லாமி யர்களுக்குமிடையே கடந்த காலங்களில் தலைவர்கள் கட்டிக் காத்த நல்லுறவை குலைத்துவிட கூடாது என்று ‘எஸ்பிஇசட் – ஈமெகசைன்’ என்ற இணைய ஏடு வெளியிட்டுள்ள கட்டுரை. “பகுத்தறிவுச் சிங்கம்” ஈ.வெ.ரா. பெரியார். தமிழகத்தில் திராவிடர்களுக்கும் தமிழ் முஸ்லிம்களுக்கும் மத்தியில் இவ்வளவு ஆழமான உறவு இருப்பதற்கு, பெரியாரின் கொள்கைகளே காரணம். பெரியார் எதை எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடினாரோ அவையனைத் தும் இஸ்லாத்தில் இயல்பாகவே தடை செய்யப்பட்டு இருந்தது. பெரியார் எதை வலுவாக ஆதரித்தாரோ அவை இஸ்லாத் தில் இயல்பாகவே வலியுறுத்தப்பட்டிருந்தது. தீண்டாமையை எதிர்த்தார். இஸ்லாத் தின் இயல்பிலேயே தீண்டாமை இல்லை. மாறாக அனைவரையும் அரவணைக்கும் குணாதிசயம் இருந்தது. குறிப்பிட்ட இனத்தவர்கள்தான் இந்த சாலையில் நடக்க வேண்டும். பிற இனத்தவர் இந்தப் பக்கமே வரக்கூடாது என்றிருந்தபோது இரண்டு இஸ்லாமியர்கள் ஒருசேர அமர்ந்து ஒரே தட்டில் இருவரும் சேர்ந்து சாப்பிட்டது பெரியாரை ஈர்த்தது. குறிப்பிட்ட இனத்தவர்கள் கோவிலுக் குள் வரக்கூடாது...

போராடும் விவசாயிகளுக்காக கழகம் போராட்டம்

போராடும் விவசாயிகளுக்காக கழகம் போராட்டம்

13-4-17 அன்று மாலை 4-00  மணியாவில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக…..கடந்த 31 நாட்களாக டெல்லி – ஜந்தரில் போராடி கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை கண்டு கொள்ளாத மத்திய மோடி அரசைக் கண்டித்து பா.ஜான்மண்டேலா  தலைமையில் சென்னை “கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்” நடைபெற்றது. விவசாயிகளின் கோரிக்கைகளையும் ஏற்க கோரி மத்திய மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் 25பேர் கைது செய்து சைதாப்பேட்டை கூ.மு. திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் புதுவை கழகம் பாரூக் குடும்ப நிதியாக 2 இலட்சம் வழங்கியது 8-4-2017 அன்று புதுவை, அரியாங்குப்பம், கரும்புலி மில்லர் அரங்கத்தில், புதுவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஃபாரூக் குடும்பநிதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு லோகு அய்யப்பன் தலைமை வகித்தார். தோழர்கள் தந்தைபிரியன், வீராச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் முன்னரே நிதி அளித்தவர்கள் அல்லாமல்...

பார்ப்பன போலிச் சடங்குகளை தோலுரித்த ‘சம்ஸ்காரா’ நாவல், உலகின் கவனத்தை ஈர்க்கிறது

பார்ப்பன போலிச் சடங்குகளை தோலுரித்த ‘சம்ஸ்காரா’ நாவல், உலகின் கவனத்தை ஈர்க்கிறது

நாவல் முன்வைக்கும் பிரச்சினைகள்  இன்றும் சமகால சமூகத் தளத்திலும் எழுப்பப்பட வேண்டியவை. கருநாடக பார்ப்பனர் யூ.ஆர். அனந்தமூர்த்தி எழுதிய ‘சம்ஸ்காரா’ என்ற நாவல் பார்ப்பனர் களின் போலிச் சடங்குகளை அம்பலமாக்கியது. பார்ப்பனர்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கிய அந்த நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டது. இப்போது உலகம் முழுதும் இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று இங்கிலாந்து நாட்டின் கார்டியன் பத்திரிகை பரிந்துரைத்த நாவல்களில் சம்ஸ்காராவும் இடம் பெற்றுள்ளது. இந்த நாவலின் உள்ளடக்கம் குறித்து ‘தமிழ் இந்து’வில் (மார்ச் 5) வாசந்தி எழுதிய கட்டுரை இது இங்கிலாந்திலிருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை அண்மையில் சுவாரஸ்யமான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அனைத்து மாணவ உலகமும் அவசியம் படித்தாக வேண்டிய பத்துப் புத்தககங்களைத் தேர்ந்தெடுக்கும்படி பிரபல எழுத்தாளர்கள் பலரிடம் கேட்டது. ஆங்கில உலகில் அறியப்படாத ஆசியப் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கச் செய்தார்கள். அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்ட பத்துப் புத்தகங்களுள் ஒன்று கன்னட எழுத்தாளர் யூ.ஆர். அனந்தமூர்த்தியின்...

அம்பேத்கரிய சிந்தனைகளை ஆழமாக அலசிய கருத்தரங்கம்

அம்பேத்கரிய சிந்தனைகளை ஆழமாக அலசிய கருத்தரங்கம்

“அம்பேத்கரின் அறிய வேண்டிய சிந்தனைகள்; ஆழமான புரிதலுக்கு அழைக்கிறோம்” என்ற அறிவிப்போடு வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த ஏப்.23 அன்று மிகச் சிறப்பான கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. பெரம்பூர் மேம்பாலம் அருகே உள்ள ‘பகுஜன் சமாஜ் கட்சி’யின் அரங்கில் இந்தக் கருத்தரங்கை நடந்த கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட் ராங் கழகத் தோழர் களுக்கு மகிழ்ச்சி யுடன் அனுமதி அளித்தார். அண்மை யில் திராவிடர் விடுதலை கழகத்தில் தங்களை இணைத் துக் கொண்ட பெண் தோழர்கள் சா.ராஜி, வ. சங்கீதா ஆகியோர் முன்னின்று, இக் கருத்தரங்கை ஏற்பாடு செய்தனர். வடசென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் ஒத்துழைப்பு வழங்கினர். சா. ராஜி தலைமையில் வ.சங்கீதா வரவேற்புரையாற்ற, மாவட்ட செயலாளர் இரா. உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘அம்பேத்கரை திசை திருப்பும் சதி’ எனும் தலைப்பில் அம்பேத்கர் இந்துத்துவ ஆதரவாளராக சித்தரிக்க முயலும் சங்பரிவாரங்களுக்கு பதிலளித்து. வரலாறுகளையும்...

பசுவதை தடை சட்டம் கோருவது அரசியல் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும்

பசுவதை தடை சட்டம் கோருவது அரசியல் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும்

“அடிப்படை உரிமைகள் மனிதர்களுக்கானதே தவிர, விலங்குகளுக்கு அல்ல” என்றார் அம்பேத்கர். பசுவதை தடை சட்டத்தை மாநில அரசுகள் இயற்ற வேண்டும் என்பது அரசியல் சட்டத்தின் நோக்கத்துக்கே எதிரானது என்பதை விளக்கி, ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் வெளி வந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள். அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நோக்கத்தி லிருந்து விலகிப் போய் நீதிமன்றம் சட்டத்துக்கு மாறான தீர்ப்புகளை வழங்கி வருகிறது என்பதற்கு, ஒரு உதாரணம், ‘பசுவதைத் தடைச் சட்டம்’ குறித்து 2005ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14 அன்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மக்களின் பாதுகாப்புக்காக உறுதி செய்யப்பட்ட சட்டங்களை அதன் நோக்கத்திலிருந்து திரித்து விடுவதும் அதிலிருந்து விலகி நின்று முடிவுகள் எடுப்பதும் கடும் எதிர்விளைவுகளை உருவாக்கி விடும் என்று கட்டுரை எடுத்துரைக்கிறது. இதற்கு அமெரிக்காவின் விண்வெளி...

வழிபாட்டுத் தலங்களில் ஒலி பெருக்கி அலறலுக்கு கண்டனம்: மதவாத மிரட்டலுக்கு திரைப்படப் பாடகர் பதிலடி

வழிபாட்டுத் தலங்களில் ஒலி பெருக்கி அலறலுக்கு கண்டனம்: மதவாத மிரட்டலுக்கு திரைப்படப் பாடகர் பதிலடி

சோனுநிகாம், பிரபல இந்தி திரைப்படப் பாடகர். பிறப்பால் சீக்கியர். மசூதி, கோயில், குருத்துவாராவில் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்தி, மக்களுக்கு இடையூறு செய்வது ‘கட்டாய மதத் திணிப்பு’ என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். மசூதிகளில் தொழுகைக்கு அழைப்பதில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதையும், கட்டாய மதத் திணிப்பு என்று அவர் கூறியிருந்தார். இதற்கு மதவாதிகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் வரத் தொடங்கின. ஒரு இஸ்லாமிய மதக்குரு, சோனு நிகாமுக்கு எதிரான தண்டனையை அறிவித்திருந்தார். மேற்கு வங்கத்தில் மைனாரிட்டி ஒருங்கிணைப்புக் குழு துணைத் தலைவராக இருப்பவர் சையத் ஷா அதொஃப் அலி அல் கொய்தாரி. அவர்வெளியிட்ட தண்டனை அறிவிப்பு இவ்வாறு கூறியது: சோனு நிகாம் தொழுகைக்கான ஒலி பெருக்கி அழைப்புக்கு (அசான்) எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், “அவர் தலையை மொட்டை அடித்து, கழுத்தில் கிழிந்துபோன செருப்பு மாலை போட்டு நாடு முழுதும் அதே கோலத்தில் அவரை இழுத்து வருவோருக்கு ரூ.10 இலட்சம் பரிசு தருகிறேன்” என்று அறிவித்திருந்தார். கடந்த ஏப்.18ஆம் தேதி...

“மாட்டுக்கறி உணவு விழா”  கழகத் தலைவர்  அறிக்கை

“மாட்டுக்கறி உணவு விழா” கழகத் தலைவர் அறிக்கை

தோழர்களுக்கு வணக்கம்! முதல் செய்தி 23.04.2017 அன்று காவல்துறையினரின் அனுமதி மறுப்பால் கொளத்தூர், பெரியார் படிப்பகத்தில் நடைபெறுவதாக இருந்த மாட்டுக்கறி விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதாகும். நீதிமன்றத்தை அணுகி உடனடியாக அனுமதி பெறுவதற்குப் போதிய கால இடைவெளி இல்லாத காரணத்தால் பின்னொரு தேதிக்கு அனுமதிபெற்று சிறப்பாக நடத்திக் கொள்ளலாம். மாட்டுக்கறி விருந்து கொளத்தூரில் நடந்தால் ஈரோட்டில் பெரியார் சிலைக்கு “ஏதோ” மாலை அணிவிக்க உள்ளதாக சில இந்து இயக்கங்கள் அறிவித்திருக்கிறார்கள். அவ்வாறு “மாலை மரியாதை” செய்ய வருவோருக்கு “நல்ல முறையில்” வரவேற்பளித்து, உரிய பதில் மரியாதை அளிக்க வேண்டியது நமது கடமையாகும். எனவே, மாட்டுக்கறி (அவர்கள் மொழியில், பசு மாமிசம்) விருந்தினை, அவர்கள் (இந்து இயக்கங்கள்) வசதிக்காகவும், அவர்கள் ஈரோடு பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வரும்பொழுது சிறு காலதாமதமும் இன்றி வரவேற்று, பதில் மரியாதை செய்வதற்கு வாய்ப்பாகவும், 30-4-2017 அல்லது 1-5-2017 அன்று நண்பகல் ஈரோட்டில் ”பெரியார் மன்றத்தில்” அல்லது அருகாமையில்...

‘மத நம்பிக்கைகளை புண்படுத்தக் கூடாது’ என்ற  சட்டப் பிரிவை எதற்கெடுத்தாலும் பயன்படுத்தக் கூடாது உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

‘மத நம்பிக்கைகளை புண்படுத்தக் கூடாது’ என்ற சட்டப் பிரிவை எதற்கெடுத்தாலும் பயன்படுத்தக் கூடாது உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

கடவுள் – மதம் குறித்து கருத்துகளை தெரிவிப்பதே சட்டவிரோதம் என்று கூப்பாடு போடும் ‘இந்துத்துவ’ சக்திகளுக்கு கடிவாளம் போடும் முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. மதத்தைப் புண்படுத்தும் பேச்சு, செயல்பாடுகள் தண்டனைக்குரிய குற்றமாக சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தில் 295(ஏ) பிரிவை மதவாதிகள் பாதுகாப்பு அரணாக முறை கேடாகப் பயன்படுத்துகிறார்கள். மகாபாரதத்தை நடிகர் கமலஹாசன் விமர்சித்தார் என்பதற்காக மத உணர்வை புண்படுத்திவிட்டதாக நீதிமன்றம் போகிறார்கள். பெண்கள் அடிமைச் சின்னமான தாலியை அகற்றும் நிகழ்ச்சி நடந்தால் மத உணர்வை புண்படுத்துவதாக வழக்கு தொடருகிறார்கள். மதத்தை, கடவுளை, அறிவியல் சமூகக் கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்யும் கருத்துரிமையையே இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்தி பறிக்கிறார்கள். எம்.எஸ். தோனி என்ற கிரிக்கெட் விளையாட்டு வீரரை ‘மகாவிஷ்ணு’வாக சித்தரித்து, ஒரு வர்த்தக பத்திரிகை 2013இல் அட்டைப்படம் போட்டிருந்தது. இந்து மதத்தைப் புண்படுத்தி விட்டதாக தோனி மீது ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப் பட்டது. ...

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா குமரி மந்தாரம் புதூர் 23042017

திராவிடர் விடுதலைக்கழகம், பெரியார் தொழிலாளர் கழகம், குமரி மாவட்டம் சார்பாக அம்பேத்கர், காரல் மார்க்சு பிறந்த நாள் விழா மற்றும் தொழிலாளர் தினவிழா மந்தாரம் புதூரில் நடைப்பெற்றது. தோழர் பாரூக் வீரவணக்க கொடிக்கம்பம் நடப்பட்டு தோழர் பால்பிரபாகரன் கழகக்கொடியேற்றி வீரவணக்க முழக்கங்கள் எழுப்பினார். பொதுக்கூட்டத்தில் தோழர் நீதி அரசர், தலைமையுரையாற்றினார். தோழர் ஜாண் மதி வரவேற்புரையாற்றினார். தோழர்கள் தமிழ் மதி, ஜாண் முறே ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர் பால் பிரபாகரன் (கழகப் பரப்புரைச் செயலாளர்) சாதி ஒழிப்பில் பெரியாரும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் உரையாற்றினார். பால் பிரபாகன் பேசிய உரையிலிருந்து வினா விடைப் போட்டி நடைப்பெற்றது. அதில் முதல் பரிசு ரூ.1000-ம், பெரியார் கோப்பையும் ஆதிராவும், இரண்டாவது பரிசு ரூ.500-ம், பெரியார் கோப்பையும் அனுசிகாவும் பெற்றனர். கைப்பந்து போட்டிகளில் கலந்துக்கொண்டு திறமைகளை வெளிக்கொணரும் தோழர் சிவசங்கரி அவர்களைப் பாராட்டி பெரியார் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. பெரியார் புத்தகங்களும் பரிசாக வழங்ப்பட்டது. பள்ளிப்பிள்ளைகள் 10...

இந்து மத வேதங்களே மாட்டிறைச்சியை அனுமதிக்கின்றன

“பசு, கன்று, குதிரை மற்றும் எருமையை உண்ணுவது இந்திரனின் வழக்கம்” என்றும் (6:17:1) “பெண்ணின் மணவிழாவில் காளை யும், பசுவும் வெட்டப்படுகின்றன” என்றும் குறிப்பிடுகிறது ரிக் வேதம். “மாமிசம் உண்பது பாவமில்லை; ஏனெனில் உண்பது உண்ணப்படுவது என இரண்டுமே பிரம்மனால் படைக்கப் பட்டிருக்கின்றன” என்றும், “மதச் சடங்குகளை முறை யாகச் செய்யும் ஒருவர், மாமிசத்தை உண்ண வில்லை யெனில், இறப்பிற்குப் பின்னர், தனது இருபத்தி ஒன்றா வது மறு பிறவியில் பலி விலங்காகப் பிறக்க நேரிடும்” என்றும் மநுதர்மம் கூறுகிறது. பார்ப்பனர் திருமணங்களில் மாட்டிறைச்சி திருமணத்துக்கு முதல் நாள் “மதுவர்க்கம்” என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின் போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படி கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டு கிறார்கள்? “விவாஹே கௌஹு… க்ருஹே கௌஹு… திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத் தான் வெட்டுகிறார்கள் – தாத்தாச்சாரி (நூல்: இந்துமதம் எங்கே செல்கிறது?) மாட்டுக்கறி சாப்பிடச் சொல்லும்...

திருப்பதி லட்டும் பார்ப்பனியமும்

திருப்பதி லட்டும் பார்ப்பனியமும்

நாளொன்றுக்கு இலட்சக்கணக்கில் தயாரிக்கப்படும் ஏழுமலையான் ‘சமையலறையில்’ நுழைந்து லட்டு தயாரிக்கும் உரிமை அய்யங்கார் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு என்று பார்ப்பனர்கள் உரிமை கோருகிறார்கள். ஏனைய பார்ப்பனரல்லாத ஜாதி – அவர் தேவஸ்தான தலைவராகவோ அமைச்சராகவோ இருந்தால்கூட, ‘மடப்பள்ளி’க்குள் (சமையலறை) நுழைய முடியாது. அண்மையில் ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம்’ என்ற மத்திய அரசு நிறுவனம், சென்னையில் உள்ள உணவு தயாரிப்புக்கான உரிமம் வழங்கும் ஆணையகத்துக்கு ஒரு தாக்கீது அனுப்பியது. திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமாகிய ‘லட்டு’ ஒரு உணவுப் பொருள் என்பதால் அது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருகிறது. இந்த உணவுப் பொருளை தயாரிக்கும் சமையலறை உணவுப் பாதுகாப்புக்கான விதிகளின் கீழ் செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது சட்டப்படியான நடைமுறை. எனவே பொது சமையலறைக்கான உரிமம் பெறப்பட்டுள்ளதா? உணவுப் பாதுகாப்புக்கான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வாளர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும் என்று தாக்கீது அனுப்பியது. ஆனால், திருப்பதி...

கவுசல்யா – திவ்யாவின் உருக்கமான சந்திப்பு

தர்மபுரியில் திவ்யா என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண், இளவரசன் என்ற தலித் இளைஞரை காதலித்து திருமணம் செய்து, இளவரசனின் குடும்பத்தோடு வாழ்ந்தபோது, ஜாதி வெறி சக்திகள் கலவரம் செய்து கட்டாயப்படுத்தி இந்த இணையர்களைப் பிரித்தனர். இறுதியில் தலித் இளைஞர் இளவரசன், இரயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தார். திவ்யா என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண், வாழ்க்கைத் துணைவரை பறி கொடுத்துவிட்டு கடும் மன அழுத்தத்தில் சமுக – ஜாதியப் பிடிக்குள் சிக்கித் தவிக்கிறார். இதே கொடுமைதான் உடுமலை சவுசல்யா என்ற பொறியியல் பட்டத்தாரிப் பெண்ணுக்கும் நிகழ்ந்தது. தன்னுடன் படித்த சங்கர் என்ற தலித் பொறியாளர் மாணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதால், சங்கரை உடுமலைப்பேட்டையில் கவுசல்யா கண் முன்பே வெட்டி சாய்த்தார்கள். கவுசல்யா என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பெண்ணின் பெற்றோர்களே இந்தக் கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இப்போது சிறையில் இருக்கிறார்கள். ஜாதி வெறி பிடித்த தனது பெற்றோர்களை...

சென்னை சுயமரியாதை கல்விக் கழகம் சிறப்பான முயற்சி

சென்னை சுயமரியாதை கல்விக் கழகம் சிறப்பான முயற்சி

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறித்து பயிலரங்கம்: பகுதி மக்கள் பேராதரவு 15.4.2017 அன்று மாலை 4 மணியளவில் சென்னை மந்தைவெளி செயின்ட்மேரீஸ் சாலையில் அமைந்துள்ள அப்துல்கலாம் சமுதாய நலக் கூடத்தில் மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் முயற்சியால் சுயமரியாதைக் கல்விக் கழகம் என்ற ஒரு துணை அமைப்பை உருவாக்கி, 10, ப்ளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் அரசு வேலை வாய்ப்பு களுக்கான  பயிலரங்கம் நடத்தப்பட்டது. இப்பயிலரங்கத்தில் மாணவ மாணவியர் 70 பேர், அவர்களுடைய பெற்றோர் மற்றும் கழகத் தோழர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பயிலரங்கத்தில் வகுப்புகள் நடத்த ம. வீரபாகு, (வருமான வரித் துறை அதிகாரி, தலைவர், கூட்டுறவு சங்கம்), கோ. குணவதி (தலைவர், வருமானவரி பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சங்கம்), கு. தனசேகர் (வருமானவரி ஆய்வாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர். கழகத் தோழர் ஆ. சிவக்குமார் தலைமை தாங்கினார். கோ. குணவதி,...

தலையங்கம் ஆபத்து – எச்சரிக்கை!

தலையங்கம் ஆபத்து – எச்சரிக்கை!

இந்தியாவை ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வரு வதற்கும், இந்துத்துவ சர்வாதி காரத்தை ‘ஜனநாயக’ வழிமுறைகள் வழியாக திணிப்பதற்குமான ஆபத்தான திட்டங்களை நடுவண் பா.ஜ.க. ஆட்சி மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. இதற்கு எத்தனையோ சான்றுகளை அடுக்கடுக்காக காட்ட முடியும். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை நுழைத்து, தமிழகத்தின் தனித் துவத்தைப் பறித்து விட்டார்கள். பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கும் இது வரப் போகிறது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் தரும் சட்டத்தை இயற்றிய போது அதை நாமும் வரவேற்றோம். அதன் வழியாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஒரு ஜாதியை இணைப்பது அல்லது நீக்குவது எனும் உரிமையை  மாநில அரசிடமிருந்து பறித்து விட்டார்கள். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மாநில அரசு திருத்தங்களை செய்ய முடியாது. காவிரி நீர் உரிமைக்காக நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், நடுவர் மன்றம் நிர்ணயித்த 192 டி.எம்.சி. தண்ணீரை...

ஃபாரூக் நினைவேந்தல்: உணர்ச்சிப் பெருக்குடன் திரண்ட தோழர்கள்

மத அடிப்படைவாதிகளால் இறை மறுப்பாளர் என்பதற்காக மார்ச் 16 அன்று இரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டார் கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாரூக். ஃபாரூக் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு 16.4.2017 ஞாயிறு மாலை 5 மணியளவில் கோவை அண்ணாமலை அரங்கில் உணர்வுபூர்வமாக நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கழகத் தோழர் களும், பல்வேறு இயக்கங்களின் தோழர்களும் திரண் டிருந்தனர். 4.30 மணியளவில் அரங்கம் முழுதும் நிரம்பிய நிலையில் பலரும் நின்றுகொண்டே கருத்துகளைக் கேட்டனர். நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன் செய்தி யாளர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி அளித்தார். பேட்டியில் – “இந்த வழக்கை சி.பி.சி.அய்.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, நாங்கள் போராடினோம். இப்போது அந்தக் கோரிக்கையை காவல் துறை ஏற்று காவல்துறை இயக்குனர் ‘சி.பி.சி.ஐ.டி.’ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதை வரவேற் கிறோம். அதே  நேரத்தில் இந்த வழக்கின் பின்னணி –...

அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

ஆத்தூரில் அம்பேத்கர் 126 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் தலைமையில் காலை 9.30 மணியளவில் பெரியார்-அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 4.00 மணியளவில்  பெரியார் – அம்பேத்கர்  வாசகர் வட்டம் புதியதாக தொடங்கப் பட்டது. படிப்பகத்தை (வாசகர் வட்டம்) பெரியாரின் தொண்டர், பேராசிரி யர் முருகேசன், பேராசிரியர் அம்பேத்கர் சிறப்பு அழைப்பாள ராகக் கலந்து கொண்டு படிப்பகத்தை திறந்து வைத்தனர். அண்ணலின் பிறந்த நாளை சிறப்பிக்கும்படி அனைத்து தோழர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் பொங்கல் இனிப்பு வழங்கப்பட்டது. சென்னையில் : சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஏப்ரல் 14, அம்பேத்கர் பிறந்த நாள் விழா காலை 8 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் அடையாறு அம்பேத்கர் மணி மண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை...

‘பாரூக் படுகொலையும் காலத்தின் தேவையும்’: சென்னையில் கருத்தரங்கம்

4.4.2017 திங்கட்கிழமை மாலை 6.00 மணியளவில் சென்னை, கவிக்கோ மன்றத்தில், துவக்கு இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பில், “தோழர் பாரூக் படுகொலை கண்டனமும் காலத்தின் தேவையும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் வரவேற்று துவக்கு இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர் கவிஞர் இசாக் உரையாற்றி, நிகழ்வினை நெறிப்படுத்தினார். திராவிட இயக்கத் தமிழர்ப் பேரவையின் முத்தையா குமரன், விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்ட செயலாளர் தமீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மைத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோரைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா உரையாற்றினார். அவரது உரையில் பெரியார் இயக்கத்துக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் நிலவும் நல்லுறவு பெரியார் காலம் முதல் இன்றுவரை தொடர்ந்துவரும் பாங்கினையும், சிறுபான்மை மக்கள்மீது எங்கிருந்து தாக்குதல் வந்தாலும் முதலில் களத்துக்கு வருபவர்கள் திராவிடர் கழகங்களைச் சார்ந்தோரே என்றும், இஸ்லாமிய...

வெளி வந்துவிட்டது! ‘நிமிர்வோம்’ ஏப்ரல் இதழ்

‘திராவிட’ எதிர்ப்பாளர்களுக்கு சில கேள்விகள். இஸ்லாம் குறித்து பெரியார் பார்வை – ஒரு விரிவான தொகுப்பு நீட் தேர்வும் – சமூக அநீதியும் புத்த தம்மம் ஒ வர்ணதர்மம் – அம்பேத்கர் துருக்கியில் கெமால் செய்த புரட்சி சீரடி சாய்பாபா யார்? – பரபரப்பான பின்னணித் தகவல்கள் பசுவதைத் தடையின் அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை மதங்கள் தேவையில்லை – இன்குலாப் கவிதை மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்…    தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு :  நிர்வாகி,  ‘நிமர்வோம்’ மாத இதழ், 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை – 600 004. தொலைபேசி எண் : 044 24980745 / 7299230363 www.dvkperiyar.com / nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 13042017 இதழ்

இளம்பிள்ளையில் கழகப் பொதுக் கூட்டம்

இளம்பிள்ளையில் கழகப் பொதுக் கூட்டம்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்த பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 07.04.2017 வெள்ளிக்கிழமை அன்று இரவு 6-00 மணிக்கு துவங்கியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக நிமிர்வு கலைக்குழுவின் பறை ஜாதிக்கான இசை அல்ல பறை தமிழரின் இசை என்ற முழக்கத்தோடு பறை இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நிமிர்வு கலைக்குழுவினர் பறைக்கேற்றவாறு பரதம் ஆடி பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றனர். தொடர்ந்து நகர தலைவர் சி.தனசேகரன் தலைமையேற்க,  முருங்கப்பட்டி ரமேசு வரவேற்புரையாற்ற பொதுக்கூட்டம் தொடங்கியது. நகர செய்தி தொடர்பாளர்  சி.மோகன்ராஜ் பெரியார் தொண்டர்கள் மீது மக்கள் கொண்டிருந்த அதிருப்தி குறித்தும் அதை விளக்கியும் உரையாற்ற அவரைத் தொடர்ந்து கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ஆர்.எஸ். சக்தி பெரியாரியல்வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்தும் உரையாற்றினார். இவர்களைத் தொடர்ந்து பெரியாரின் கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் சாக்கோட்டை மு.இளங்கோவன், இம்மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும்  இழிவையும், அடிமைத்தனத்தை யும் ஒழிக்க...

ஆப்பிரிக்கர்கள் மீதான வெறுப்புக்குக் காரணம் – ஜாதி உணர்வுதான்!

ஆப்பிரிக்கர்கள் மீதான வெறுப்புக்குக் காரணம் – ஜாதி உணர்வுதான்!

இந்தியாவில் நிறவெறி சில பகுதிகளில், சில இந்தியர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. தங்கியிருக்க விசா காலத்தை நீட்டிக்குமாறு கோரும்போதும், வாடகைக்கு வீடு தேடும்போதும், வீதியிலும் பொது இடங்களிலும், எங்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும்போது இது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆப்பிரிக்கர்களைப் பார்த்தால் ஏற்படுகிற வெறுப்புணர்வுக்குக் காரணம், ஏற்கெனவே இந்தியாவில் இருக்கும் சாதி உணர்வுகள்தான். பட்டியல் இனத்தவரைத் தீண்டத்தகாதோராக காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் அதே அணுகுமுறையைத்தான், கருப்பாக இருக்கும் ஆப்பிரிக்கர்களுக்கு எதிராகவும் கடைப்பிடிக் கின்றனர். சாதியம் என்பது மிகப் பலரைத் தாழ்த்தியும், ஒரு சிலரை உயர்த்தியும் நடத்துவது. எளியவர்களைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளாமல் விலக்கி வைப்பது. பொது இடங்களில் இந்தியச் சிறுவர்களும் புகைபிடிக்கின்றனர்; நாங்களும் அப்படிப் புகைத்தால், அது கஞ்சா அல்லது மரிஜுவானா தான் என்று முடிவுகட்டுகின்றனர் ஒலியை அதிகப்படுத்திப் பாட்டு கேட்டால் காவல்துறையிடம் புகார் செய்கின்றனர், அல்லது வீடு புகுந்து அடிக்கின்றனர். அதே அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் செய்யும்போது கேட்டு ரசிக்கின்றனர். நாங்கள் மிகவும் பின்தங்கிய கண்டத்திலிருந்து...

சுயமரியாதைக்காகப் போராடுகிறோம் டாக்டர் அம்பேத்கர்

சுயமரியாதைக்காகப் போராடுகிறோம் டாக்டர் அம்பேத்கர்

கடந்த காலங்களில் புலால் உண்ணாமைக்கான தொரு இயக்கம் நம்மிடையே இருந்தது. அதன் பிறகு தான் அந்த கருத்தாக்கம் தீண்டப்படும் சாதியினரின் சிந்தனையில் மின்னலைப்போல் உதித்தது. உயிரோடு இருக்கும் எருமையின் பாலை அவர்கள் மட்டுமே குடிக்க வேண்டும்; செத்துப்போன அதே மாட்டின் பிணத்தை நாம் தூக்கிச் சுமக்க வேண்டும். என்ன ஒரு விந்தை இது நாம் அவர்களைக் கேட்க வேண்டும். மரித்துப் போன உங்கள் தாயின் பிணத்தை மட்டும் ஏன் நாங்கள் சுமக்க அனுமதி மறுக்கிறீர்கள்? செத்த மாட்டை நம்மிடம் தருவதுபோல் அவர்கள் தாயின் பிணத்தையும் நம்மிடம் தானே தரவேண்டும். சிலர் எப்போதோ ‘கேசரி’ இதழில் எழுதியிருந்தார்கள். ‘சில கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் 50 விலங்குகள் வரை செத்துப் போகின்றன. அவற்றின் இறைச்சி தோல், கொம்பு, எலும்பு, கால் பாதம், வால் இவற்றையெல்லாம் விற்பதால் 500 ரூபாய் வரை கிடைக்கும். தின்னக்கூடாது என்று இறைச்சியை ஒதுக்கி விட்டாலும் மற்றவைகளால் கிடைக்கக்கூடிய வருமானம் என்பது...

போலி அறிவியலும் மூடநம்பிக்கை விதைகளும் முனைவர் சு. சேதுராமன்

போலி அறிவியலும் மூடநம்பிக்கை விதைகளும் முனைவர் சு. சேதுராமன்

சிதம்பரம் நடராஜர் கோவில்தான் பூமியின் மய்யமா? இந்த மாதிரியான கோயில்களை இப்போதைய அறிவியலால் கட்ட முடியுமா? என்று அவ்வப்போது சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் மத அடிப்படைவாதிகள் எழுதுகிறார்கள். இந்தியாவின் புராதனச் சின்னங்களான கோபுரங்களின் மேல் உள்ள கலசங்கள் மந்திரங்களின் மூலம் ‘மகா சக்தி’ பெற்று சுற்றி உள்ள ஊர்களில் ‘இடி விழாமல்’ தடுக்கும் வல்லமை பெற்ற ஓர் ‘இடிதாங்கி’யாகச் செயல்படும் வல்லமை கொண்டவை என்றும் இந்த ‘அறிவியல் பூர்வமான’ அமைப்பை அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றும் உங்களிடம் சொல்லி இருக்கக் கூடும். இதேபோலவே செல்பேசி கோபுரங்களில் வரும் கதிர்வீச்சுக் காரணமாகத்தான் ‘சிட்டுக் குருவி’ இனம் அழிந்து போவதாகவும், சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மய்யம் உள்ளதாகவும், அம்மைநோயின்போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு ‘ஆண்டி-பயாடிக்’ என்ற அறிவியல் உண்மையின் காரணமாகத்தான் என்றும் உங்களிடம் யாரேனும் சொல்லி இருக்கக்கூடும்....

கழக உறுப்பினர்களிடம் மாதக் கட்டணம்: சென்னை மாவட்டக் கழகம் முடிவு

கழக உறுப்பினர்களிடம் மாதக் கட்டணம்: சென்னை மாவட்டக் கழகம் முடிவு

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் ஏப்.2ஆம் தேதி மாலை 7 மணியளவில் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் எழுச்சியுடன் நடந்தது. மாவட்ட செயலாளர் உமாபதி கலந்துரையாடலை ஒருங்கிணைத் தார். தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன் உரையைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் சென்னை மாவட்டக் கழக செயல்பாடுகள் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏடு, ‘நிமிர்வோம்’ மாத இதழ்களை பரப்பும் இயக்கம், பரப்புரைக் கூட்டங்கள் குறித்து கருத்துகளைத் தெரிவித்தனர். அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி அம்பேத்கரின் பவுத்த மதமாற்றம் – இந்து மத எதிர்ப்பு – ஜாதி ஒழிப்புக்காக நடத்திய விவாதங்கள் குறித்து வடசென்னையில் கருத்தரங்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கழகத் தோழர்கள் ஒவ்வொரு மாதமும் உறுப்பினர் கட்டணம் வசூலிக்கும் முறையைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. முடிவெய்திய கழகத் தோழர் ஆட்டோ சரவணன் குடும்பத்துக்கு மாவட்ட கழக சார்பில் ரூ.20,000/- நிதி வழங்கப்பட்டது.  40க்கும் மேற்பட்ட தோழர்கள்...

தலையங்கம் தருண் விஜய் உண்மை முகம்!

தலையங்கம் தருண் விஜய் உண்மை முகம்!

திருக்குறள் பெருமையைப் பேசுகிறார், தருண் விஜய் என்று தமிழ்நாட்டில் அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து பாராட்டு மழைகளை பொழிந்தவர்கள் உண்டு. பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான அவர், அரித்துவாரில் கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை வைக்கப் போவதாகக் கூறினார். வைதீகப் பார்ப்பனர்கள், திருவள்ளுவர்  ‘தீண்டத்தகாதவர்’ என்று கூறி, சிலையை ‘புனித நதி’க் கரையில் நிறுவ எதிர்த்தனர். அதற்குப் பிறகு ‘சங்கராச்சாரி சதுக்கம்’ என்ற இடத்தில் சிலையை நிறுவ முடிவு செய்த போது சொரூபானந்த சரசுவதி எனும் பார்ப்பனர் தலைமையில் பார்ப்பனர்கள் எதிர்த்தனர். இது ஆதிசங்கரர் அறக்கட்டளைக் குரிய இடம். ஆதிசங்கரர் சிலை மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறி விட்டனர். கடைசியில் பொதுப் பணித்துறை விருந்தினர் வளாகத்தில் சிலை திறப்பு நடந்தது. தருண் விஜய் இப்படியெல்லாம் நடத்திய ‘தமிழ்ப் பற்று’ நாடகம், இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. புதுடில்லி நொய்டா பகுதியில் ஆப்பிரிக்க நாட்டின் மாணவர் தாக்கப்பட்டது குறித்து சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு...

ஃபாரூக் நினைவேந்தல்: குடும்ப நிதி வழங்கல்

நாள்    :              16.4.2017 ஞாயிறு மாலை 4 மணி இடம்                 :               கோவை அண்ணாமலை அரங்கு (தொடர் வண்டி நிலையம் எதிரில்) உரை :               கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருஷ்ணன், இரா. அதியமான், வழக்கறிஞர் ப.பா. மோகன், கேரளயுக்திவாதி (பகுத்தறிவாளர்கள்) தோழர்களும், பல்வேறு இயக்கங்களின் பொறுப்பாளர்களும் பங்கேற்கிறார்கள். ஏற்பாடு           :               கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்.                 அனைவரும் வருக! பெரியார் முழக்கம் 13042017 இதழ்

வழக்கறிஞர் போராட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேச்சு வஞ்சிக்கப்படும் தமிழக விவசாயிகள்

புது தில்லியில் சுமார் ஒரு மாத காலமாக போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்க சார்பில் 6.4.2017 அன்று ஒரு நாள் அடையாள பட்டினிப் போராட்டம், அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் தலைமையில் உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது: “தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் காங்கிரஸ் ஆட்சியானாலும், பா.ஜ.க. ஆட்சியானா லும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. டெல்லியில் 25 நாள்களாக போராடும் விவசாயிகளை மோடி ஆட்சி திரும்பிப் பார்க்கக் கூட மறுப்பது தமிழர்களுக்கு இழைக்கும் அவமானம். மூன்று முறை மத்திய நிதியமைச்சர் ஜெட்லியை சந்தித்துப் பேசிய பிறகு இறுதி சந்திப்பில் ஓரளவு முன்னேற்றம் இருந்தது என்று போராடும் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். என்ன...

தற்காப்புக் கலையில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா காளிப்பட்டி 06042017

சேலம் மாவட்டம் பஞ்சு காளிப்பட்டி, சவுத் இந்தியன் மெட்ரிகுலேசன் பள்ளீயில் தற்காப்புக் கலையில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா பள்ளி தாளாளர் திரு. சவுந்திர ராசன் தலைமையில் 06042016 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு கிக்பாக்சிங் கழகப் பொதுச்செயலாளரும் பயிற்றுநருமான சிவபெருமாள் வரவேர்புரையாற்றினார். அடுத்து தந்தை பெரியார் அவர்களின் படத்தினைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்துவைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பள்ளியின் தாளாளர் அப்பள்ளியின் விழா அரங்குக்கு தந்தை பெரியார் விழா அரங்கம் எனப் பெயரிடப்படுவதை உற்சாகக் கைதட்டல்களுக்கு இடையே அறிவித்தார். நிகழ்வில் பள்ளியின் முதல்வர் பிருதிவிராசன், புதுவை சிந்தனையாளர் கழகத் தலைவர் தீனா, சிந்தாமணியூர் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்

பெரியாரியல் விளக்கப் பொதுக்கூட்டம் மேச்சேரி 05042017

05042017 அன்று மாலை 6-00 மணியளவில், சேலம் மாவட்டம் மேச்சேரி பேருந்து நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுக்கூட்டம் கிளைக்கழக செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கத்தில் தோழர் காவை இளவரசனின் மந்திரமல்லதந்திரமே என்ற செயல்முறை விளக்கா நிகழ்வு நடந்தது. அதனை தொடர்ந்து நங்கவள்ளீ அன்பு, தலைமைக் கழகப் பேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் ஆகியோர் உரைகளுக்குப் பின்னர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நங்கவள்ளி கிருட்டிணன்  நன்றி கூறலுடன் நிறைவுபெற்றது.

வாழ்க்கை இணையேற்பு விழா தோழர் நீலாவதி – சந்திரமோகன் நிலக்கோட்டை 02042017

கழகத்தின் எல்லா குழந்தைகள் பழகு முகாம்களிலும் கலந்துகொண்டு உளவியல், தன்நம்பிக்கை வகுப்புகளை திறம்பட எடுத்துவருபவரும், நிலக்கோட்டை தொழிர் சங்கத் தலைவர் தோழர் செல்வராசு அவர்களின் மகளுமான தோழர் நீலாவதி, சந்திர மோகன் ஆகியோரின் வாழ்க்கைதுணையேற்பு விழா பவுத்த நெறிப்படி, 02042017 அன்று காலை 9-00 மணியளவில் சிறப்புற நடந்தேறியது. வாழ்த்தரங்கம் தமிழ்நாடு இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் முனைவர் செ.கு.தமிழரசன் தலைமையில் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தகைவர் ஆசிரியர் சிவகாமி, திருப்பூர் மாவட்டக் கழகச் செயலாளர் முகில்ராசு, முனைவர் பள்ளப்பட்டி மணிமாறன், கும்பகோணம் இணைப்பதிவாளர் தோழர் ரமணிதேவி ஆகியோரும் கலந்துகொண்டு சிறபித்தனர்.

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்- புத்தக அறிமுக விழா தஞ்சாவூர் 01042017

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்- புத்தக அறிமுக விழா தஞ்சாவூர் 01042017 தஞ்சை பசு.கவுதமன் பெரியாரின் மொழி, கலையும் பண்பாடும், இலக்கியம், தத்துவம், சித்திரபுத்திரன் கட்டுரைகள் என்ற ஐந்து தலைப்புகளில் தொகுத்து, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட உள்ள 3,750 பக்கங்கள் கொண்ட தொகுப்புகளைக் குறித்த அறிமுகக் கூட்டத்தை அந்நிறுவனமும், தஞ்சை இலக்கிய வட்டமும் இணைந்து    1-4-2017 அன்று மாலை 6-00 மணியளவில், தஞ்சாவூர் பெசண்ட் அரங்கில் நடத்தினர். தஞ்சை இலக்கிய வட்டத் த்ஹொழர் சண்முக சுந்தரத்தின் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவரும் மூத்த பொதுவுடமை இயக்கத் தலைவருமான தோழர் ஆர்,நல்லக்கண்ணு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்குறைஞர் இராஜ்குமார் (தி.மு.க), பேராசிரியர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அறிமுக உரையாற்றினர். கூட்டத்தின் இறுதியில் தொகுப்பாசிரியர் பசு கவுதமன், அவருக்கு துணை நின்ற அவரது வாழ்விணையர் அறிவுச்செல்வி ஆகியோர் பாராட்டப் பட்டனர்....

“இனி கருஞ்சட்டை குடும்பம்தான் எனது உறவுகள்”

முடிவெய்திய கழகத் தோழர் முனியாண்டி படத்திறப்பில் அவரது துணைவியார் இந்துமதி உருக்கமான பேச்சு வேலூர் மாவட்டம் மகேந்திரவாடி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் க. முனியாண்டி (45) கடந்த பிப்.22 ஆம் தேதி உடல்நலக் குறைவில் முடிவெய்தினார். நெமிலி கழகத் தோழர் திலீபனோடு உற்ற தோழராக களப்பணியாற்றியவர் முனியாண்டி. அவரது படத்திறப்பு நிகழ்வு கடந்த மார்ச் 25ஆம் தேதி பகல்  11 மணியளவில் நெமிலி தனபாக்கியம் திருமண மண்டபத்தில் நிகழ்ந்தது. முனியாண்டியைப் போலவே அவரது துணைவியார் இந்துமதி, கிராமத்தில் வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் உறுதியாக பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டவர். படத்திறப்பு நிகழ்ச்சிக்கு அவரே தலைமை ஏற்றார். பெரியாரிய கொள்கை உணர்வோடு அவர் பேசியது உணர்வுபூர்வமாக இருந்தது. அவர் தனது உரையில் : – “எங்களுக்கு சுயமரியாதை திருமணம்தான் நடந்திச்சி. இதுநாள் வரைக்கும் எங்களுக்குள்யே சண்டை வந்ததே இல்ல. இங்க பேசின எல்லோ ரும் சொன்னா மாதிரி எங்க வீட்டுக் காரருக்கு...

பாரூக் படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள்

இசுலாமிய அடிப்படைவாதிகளால் ஃபாரூக் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து 29.03.2017, புதன்கிழமை மாலை 5.00மணிக்கு சேலம் மாவட்டம், நங்கவள்ளி பேருந்து நிலையம் அருகே கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நங்கவள்ளி நகர துணைத் தலைவர் க.மனோஜ்குமார் தலைமையேற்க, நகர பொறுப்பாளர்கள் இராசேந்திரன், கண்ணன், செந்தில், உமாசங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, தலைமைக்குழு உறுப்பினர் சக்திவேல், நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல், சேலம் மாவட்ட அமைப்பாளர் அன்பு, திருச்செங்கோடு நகரகழகத் தோழர் தனலட்சுமி, ராசு வெங்கடேசு (ஈரோடு), திராவிடர் பண்பாட்டு நடுவத்தின் பொறுப்பாளர் முல்லைவேந்தன் உரையாற்றினர். திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் நிறைவாக பேசினார். மத தீவிரவாதங்கள் தலைதூக்குவது, தமிழகத்தின் தனித்துவத்தை குலைத்து விடும் என்பதை விளக்கி உரையாற்றினார். பழ. உமாசங்கர் நன்றி கூறினார். மேட்டூரில் – கழகத் தோழர் பாரூக் படுகொலையைக் கண்டித்துக் கழகத்தின் சார்பில் 27.3.2017...

காவேரிப்பட்டினம் – அரசு மருத்துவமனை வளாகத்தில் ‘விநாயகன்’ வழிபாடு : மாவட்டக் கழகம் எதிர்ப்பு

கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ வளாகத்தில் அரசாணைகளுக்கு எதிராக விநாயகன் சிலையை திடீரென வைத்து பூஜைகளை நடத்தி வருகிறார்கள். அங்கே மருத்துவராக பணியாற்றும் வட்டார மருத்துவ அலுவலர் இரா. அரிராம் என்பவரே முன்னின்று இந்த பூஜைகளை நடத்திக் கொண்டிருக் கிறார். தகவல் அறிந்து கிருட்டிணகிரி மாவட்ட கழகத் தலைவர் தி.குமார் தலைமையில் கழகத் தோழர்கள் மார்ச் 28ஆம் தேதி காலை மருத்துவ அலுவலர் அரிராமைச் சந்தித்து, அரசு வளாகங்களில் கோயில் கட்டுவது சட்டப்படி தவறு என்பதை சுட்டிக் காட்டி மனு ஒன்றை அளித்தனர். மனுவை அளித்து விட்டு வெளியே வரும்போது முன்கூட்டியே தகவல் அறிந்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். காரர்கள்  மாவட்ட தலைவர் குமார் மற்றும் தோழர்களை சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் வாக்குவாதம் செய்தனர்.  தனது உயிருக்கோ, உடைமை களுக்கோ ஆபத்து ஏற்படுமானால் அதற்கு மருத்துவர் அரிராம் மற்றும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.காரர்களே பொறுப்பு என்று காவேரிப்பட்டினம்...

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நிலை இதுதான்!

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நிலை இதுதான்!

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் (2011-2016) பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 94 சதவீதம் வழக்குகள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் விடுதலையிலேயே முடிந்திருக்கின்றன. ஜே.பி. அஜீஅரவிந்த் என்ற சமூக செயல்பாட்டாளர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், காவல் துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவுக்கு (சமூகநீதி மற்றும் மனித உரிமைக்கான காவல்துறை இயக்குனரகம்) எழுதிக் கேட்டு இத்தகவல்களைப் பெற்றுள்ளார். 6 ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் 1,934 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தண்டிக்கப்பட்ட வழக்குகள் 108 மட்டுமே. காவல்துறை இந்த வழக்குகளை நடத்துவதில் ஆர்வம் காட்டாததும், காவல்துறையில் நிலவும் தலித் மக்களுக்கு எதிரான ஜாதிய மனப்பான்மையும் இதற்கு முக்கிய காரணம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரி ‘தலித்’ சமூகத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும் என்று சட்டம் கூறினாலும் சட்டம் இந்த விதியை கட்டாயப்படுத்தவில்லை. நீதித் துறையில் தலித் நீதிபதிகள் பிரதிநிதித்துவம் குறைந்து வருவதும்...

காவிச் சட்டையும் கருப்புச் சட்டையும் ஒன்றே தானாம்! கூறுகிறது தவ்ஹீத் ஜமாஅத்

காவிச் சட்டையும் கருப்புச் சட்டையும் ஒன்றே தானாம்! கூறுகிறது தவ்ஹீத் ஜமாஅத்

பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும், திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து மத, இறை மறுப்பாளராக இருந்தார் என்பதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் வெறிகொண்ட அவரது இஸ்லாமிய நண்பர்களே பாரூக்கை படுகொலை செய்து காவல்துறையிடம் சரணடைந் துள்ளார்கள். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமிய கலை இலக்கியவாதிகள் இந்த படுகொலையை கண்டித்துள்ளனர். ‘தமிழ்இந்து’ நாளேடு, தமிழகத்தில் உருவாகி வரும் மோசமான சூழலின் வெளிப்பாடு என்று தலையங்கம் தீட்டியது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு இலக்கிய வாதிகளின் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி,  இந்திய தவ்ஹீத், விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. பெரியார் இயக்கக் கொள்கையை பேசியதற்காக 31 வயது இளைஞர் ஒருவரை இழந்து நிற்கிறது திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் பாரூக்கை இழந்த நிலையிலும் இஸ்லாமியர் களுடனான உறவு எப்போதும் நீடிக்கும் என்றும், பார்ப்பன – ஜாதிய – இந்துத்துவா கொள்கைகளே திராவிடர் விடுதலைக் கழகத்தின் முதன்மையான...

மேட்டூர் – குருவாரெட்டியூர் கழகப் பொதுக் கூட்டங்கள்: சாக்கோட்டை இளங்கோவன் சிறப்புரை

மேட்டூர் – குருவாரெட்டியூர் கழகப் பொதுக் கூட்டங்கள்: சாக்கோட்டை இளங்கோவன் சிறப்புரை

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் 20.3.2017 அன்று மேட்டூர் சதுரங்காடியில் நடைபெற்றது. மேட்டூர் நகர தலைவர் செ. மார்ட்டின் தலைமை வகிக்க, தலைமை செயற்குழு உறுப்பினர் அ. சக்திவேல், சென்னை இரண்யா ஆகியோர் உரைக்குப் பின் சாக்கோட்டை இளங்கோவன் சிறப்புரையாற்றினார். மேட்டூர் டி.கே. ஆர். இசைக்குழுவின் பறைமுழக்கம் மற்றும் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மீ. அம்ஜத்கான் நன்றியுரையாற்ற கூட்டம் நிறைவுற்றது. குருவையில் : ஈரோடு வடக்கு மாவட்டம் குருவரெட்டியூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “ஆணவ கொலைகளும், அண்மைகால பெண்கள் கொலைகளும்; தீர்வை நோக்கி” எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் 19.03.2017 ஞாயிறு அன்று குருவை பெரியார் திடலில் உள்ள அரங்கநாதன் நினைவரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர்.  பகுத்தறிவு இசைக்குழுவின் சார்பாக பறையாட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக சோதி தலைமையேற்க வேல்முருகன் வரவேற்புரை...

அரசுத் திட்டங்கள் தோல்வி: நெருக்கடிகள் அதிகரிப்பு மோடி ஆட்சியில் முடக்கப்படும் வேலை வாய்ப்புகள்

அரசுத் திட்டங்கள் தோல்வி: நெருக்கடிகள் அதிகரிப்பு மோடி ஆட்சியில் முடக்கப்படும் வேலை வாய்ப்புகள்

“இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 35 வயதுக்கு குறைவான வயதுடையவர்கள் 65 சதவீதம். இந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இவர்களை ஒருங்கிணைத்து இவர்களின் திறன்களை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்’’. இது 2013-ம் ஆண்டு இறுதியில் ஆக்ராவில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது. “தற்போது இந்தியாவில் 5 கோடி பேர் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றனர். 2020-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேரின் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்’’ என்று தொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கடந்த மாதம் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையிலேயே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 2020-ம் ஆண்டுக்குள் 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியுமா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு...

‘இனமுரசு’ சத்தியராஜ், தோழர் பாரூக் குடும்ப நிதியாக ரூபாய் ஒரு இலட்சம் வழங்கினார்

‘இனமுரசு’ சத்தியராஜ், தோழர் பாரூக் குடும்ப நிதியாக ரூபாய் ஒரு இலட்சம் வழங்கினார்

‘இனமுரசு’ நடிகர் சத்தியராஜ், பகுத்தறிவு கருத்துக்களை பேசிய காரணத்தினால் இசுலாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் ஃபாருக் குடும்ப நிதியாக ரூ. 1,00,000/= (ரூபாய் ஒரு லட்சம்) காசோலையாக சென்னை மாவட்டக் கழக பொறுப்பாளர்களிடம் வழங்கினார். திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், மாவட்டச் செயலாளர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன்,  செந்தில், எப்.டி.எல்., ஆகியோர் நடிகர்சத்யராஜ் இல்லம் சென்று காசோலையைப் பெற்றுக் கொண்டனர். பெரியார் முழக்கம் 06042017 இதழ்