மேட்டூர் – குருவாரெட்டியூர் கழகப் பொதுக் கூட்டங்கள்: சாக்கோட்டை இளங்கோவன் சிறப்புரை

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் 20.3.2017 அன்று மேட்டூர் சதுரங்காடியில் நடைபெற்றது. மேட்டூர் நகர தலைவர் செ. மார்ட்டின் தலைமை வகிக்க, தலைமை செயற்குழு உறுப்பினர்

அ. சக்திவேல், சென்னை இரண்யா ஆகியோர் உரைக்குப் பின் சாக்கோட்டை இளங்கோவன் சிறப்புரையாற்றினார். மேட்டூர் டி.கே. ஆர். இசைக்குழுவின் பறைமுழக்கம் மற்றும் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மீ. அம்ஜத்கான் நன்றியுரையாற்ற கூட்டம் நிறைவுற்றது.

குருவையில் : ஈரோடு வடக்கு மாவட்டம் குருவரெட்டியூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “ஆணவ கொலைகளும், அண்மைகால பெண்கள் கொலைகளும்; தீர்வை நோக்கி” எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் 19.03.2017 ஞாயிறு அன்று குருவை பெரியார் திடலில் உள்ள அரங்கநாதன் நினைவரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர்.  பகுத்தறிவு இசைக்குழுவின் சார்பாக பறையாட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக சோதி தலைமையேற்க வேல்முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். கழகப் பொறுப்பாளர்கள் வேணுகோபால், இராம .இளங்கோவன் உரையைத் தொடர்ந்து, சாக்கோட்டை மு.இளங்கோவன் சிறப்புரை யாற்றினார்.  திலிபன் நன்றி கூறினார். நிகழ்வில் மாநில, மாவட்ட கழகத் தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.  பொதுக்கூட்டம் தொடங்கும் முன்பு மத வெறிக்கு பலியான கோவை கழகத் தோழர் பாரூக் மரணத்திற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பெரியார் முழக்கம் 06042017 இதழ்

You may also like...