தலையங்கம் – கருநாடக “இந்து” துறவிகளைப் பாருங்கள்!
தமிழ்நாட்டில் இந்து மதத்தின் காவலர்களாக புறப்பட்டிருக்கும் அமைப்புகள், எவ்விதச் சமூக சிந்தனையுமின்றி பெரியார் இயக்கத்தைக் கண்மூடித்தனமாக எதிர்த்து வருகின்றன. ‘இந்து ஒற்றுமை’ பற்றி கூப்பாடு போடும் அவர்கள், அதற்கு தடையாக இருக்கும் ஜாதி, தீண்டாமைப் பற்றி பேசுவதே இல்லை. ‘தீண்டாமைக்கு’ உள்ளாக்கப்படும் மக்களும் ‘இந்துக்கள்’ தானே என்பது குறித்து இவர்கள் வெட்கப்படுவதும் இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்ததைப்போல், தமிழகத்திலும் வரவேண்டும் என்றால் உடனே ‘நாத்திகப் பிரச்சாரம்’ என்று கூக்குரலிடுகிறார்கள். இதோ, கருநாடகத்திலிருந்து ஒரு நல்ல செய்தி! மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை உடனே கொண்டுவர வேண்டும் என்று கருநாடகத்தில் 3 நாள் பட்டினிப் போராட்டம் நடந்திருக்கிறது. இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களே காவி உடை தரித்த இந்து மத சாமியார்கள் தான் என்பதே இதில் முக்கிய அம்சம். தலித் மற்றும் பகுத்தறிவாளர்களும் இந்தப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியான செய்தி. பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி...