Author: admin

வினா… விடை…!

வினா… விடை…!

நகைகளாக பக்தர்கள் தந்த காணிக்கையை அரசின் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய தங்கக் கட்டியாக உருக்கினால் அது சாமி குத்தமாயிடும். – கோயில் நிர்வாகிகள் அச்சம் ரொம்ப சரி; அதேபோல உண்டியல்ல விழுற கள்ளநோட்டுகளையும் அப்படியே ஏத்துக்கணும்போல. இல்லாட்டி சாமி குத்தமாயிடும். பசுக்களை கொல்ல தடைவிதிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை. – டெல்லி உயர்நீதிமன்றம் அப்படி ஒரு அதிகாரம் நீதிமன்றத்துக்கு இருக்க வேண்டும் என்றால், பசு மாட்டுக்காக தனி ஆகமங்கள் இருக்க வேண்டும். திருவரங்கம் – ரெங்கநாதர் கோவிலில் ‘சொர்க்க வாசல்’ திறப்புக்குமுன் கதவு வாசலில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். – செய்தி எல்லாம் ஒரு பாதுகாப்புதான். எவராவது உண்மையிலேயே ‘சொர்க்கம்’ போயிட்டா, மீட்கணும்ல! மோடி இரஷ்ய பயணத்தின்போது, கூடங்குளத்தில் 5,6ஆவது அணுஉலைகளை அமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும். – செய்தி அப்படியே கையோடு கையா முதலாவது அணுஉலை இயங்கு வதற்கும் ஒரு ஒப்பந்தம் போடுங்க… மறந்துடாதீங்க… காவல்துறை மீது உள்ளூர் மக்களுக்கு நம்பிக்கை...

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. (5) இராஜாஜி குறித்து ம.பொ.சி. கூறிய பொய்! வாலாசா வல்லவன்

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. (5) இராஜாஜி குறித்து ம.பொ.சி. கூறிய பொய்! வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (சென்ற இதழ் தொடர்ச்சி) ம.பொ.சி. அப்போது சட்ட மேலவையில் உறுப் பினராக இருந்தார். அப்போது அவர் பேசியதாவது – “மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, நம்முடைய முதல் அமைச்சர் அவர்கள் இந்தக் கவுன்சிலின் முன்பு வைத்துள்ள ஆந்திர ராஜ்ய அமைப்பு மசோதாவை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்… இந்த எல்லைப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் ஒரு நியாயம் நடந்திருக்கவேண்டும். சித்தூர் ஜில்லா தகராறுள்ள பிரதேசமாக இருப்பதால் அதை எஞ்சிய சென்னை ராஜ்யத்தோடு சேர்ந்திருக்க வேண்டும். சித்தூர் ஜில்லா தகராறுள்ள ஜில்லா என்று முத்திரைப்போட்டு எஞ்சிய சென்னை ராஜ்ஜியத்தில் தான் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும். அப்படியில்லாமல் மொழியின் அடிப்படையிலே அமைக்கப்படுகிற ஆந்திர ராஜ்ஜியத்தில் தகராறுள்ள இந்தச் சித்தூர் ஜில்லாவை சேர்த்திருக்கக்கூடாது. எஞ்சிய சென்னை ராஜ்ஜியத் தில் சேர்க்காமல்,...

ஆகமத்துக்குள் பதுங்கும் பார்ப்பனர்களே! இதற்கு என்ன பதில்?

ஆகமத்துக்குள் பதுங்கும் பார்ப்பனர்களே! இதற்கு என்ன பதில்?

இந்து சமூகத்தில் அனைத்துப் பிரிவினருக்கும் அர்ச்சகராகும் உரிமை மீண்டும் மறுக்கப்பட்டுள்ளது. ஆகமங்களைப் பின்பற்றும் கோயில்களின் நடைமுறைகள் அப்படியே தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆகமங்களுக்கு சட்டப்பூர்வ ஏற்பை வழங்கியிருக்கிறது. “பிராமணர்களில்”கூட எல்லோரும் கருவறைக்குள் சென்று பூஜை செய்து விட முடியாது. அதற்குரிய ஆகம தகுதி பெற்றவர்கள்தான் பூஜை செய்ய முடியும் என்று பார்ப்பனர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், அதற்குரிய ஆகமத் தகுதி பெற்ற பார்ப்பன ரல்லாத ‘சூத்திரர்’களுக்கு முற்றிலும் உரிமை கிடையாது. பார்ப்பனர்கள் இப்போது கோயில்களில் வழிபாடுகளில் ‘ஆகம’ விதிகளை அப்படியேதான் பின்பற்றி வருகிறார்களா? அவை மீறப்படாமல் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க ஏதேனும் அமைப்பு இருக்கிறதா? அல்லது இப்போது ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் வேலை பார்க்கும் அய்யர், அய்யங்கார், சாஸ்திரிகள் ஆகமங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதற்கு ஏதேனும் தேர்வுகளோ – அதில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றுகளோ இருக்கிறதா? எதுவும் இல்லை. அவர்கள் பின்பற்றுவதுதான் ஆகமம். அவர்கள் நடத்துவது எல்லாமே முறையான...

சேலம் மாநாட்டின் எழுச்சி!

சேலம் மாநாட்டின் எழுச்சி!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை” தமிழகமெங்கும் நடத்த திட்டமிடப்பட்டு முதல் மாநாடு ஈரோடு, அடுத்ததாக சென்னையில் நடைபெற்றதைத் தொடர்ந்து சேலத்தில் நடத்த அறிவிக்கப்பட்டு கழகத் தோழர்களால் மாநாட்டு பணிகள் துவங்கப்பட்டன. ”மக்களைப் பிரிக்கும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் 19.12.2015 சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் துவங்கியது. மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவுப் பாடல்களுடன் மாநாடு ஆரம்ப மானது. குமரப்பா தபேலா வாசிக்க, சீனி தவிலும், காளியப்பன் உறுமியும் வாசித்தனர். கோவிந்தராசு, முத்துகுமார், இசைமதி, அருள்மொழி ஆகியோர் சாதி ஒழிப்பு, பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினர். மாநாட்டின் முதல் அமர்வாக கருத்தரங்கம் நடைபெற்றது.”தொடரும் பார்ப்பன வல்லாதிக்கம்” எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் நெறிப்படுத்தினார்....

தடை தகர்ந்தது!

தடை தகர்ந்தது!

• வழக்கம்போல் சேலம் காவல்துறை மாநாட்டுக்கு கடைசி நேரத்தில் பிப்.17ஆம் தேதி அனுமதி மறுத்தது. உடனே உயர்நீதிமன்றத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. டேவிட் சார்பில் மாநாட்டுக்கு அனுமதி கேட்டு வழக்கு மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் திருமூர்த்தி, மனுவை தாக்கல் செய்து வாதாடினார். மாநாட்டுக்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றம், இரவு 8 மணிக்குள் மாநாட்டை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. சரியாக 8 மணிக்கு மாநாடு நிறைவடைந்தது. • மாநாட்டு அரங்கில் பெரியார்-அம்பேத்கர் கருத்துகளை தலைவர்களின் படங் களோடு பதாகைகளாக வைக்கப்பட் டிருந்தன. • சமூகம்-அரசியல்-பொருளாதாரத்தில் பார்ப்பன மேலாதிக்கத்தை விளக்கும் பதாகைகள் கண்காட்சியாக வைக்கப்பட் டிருந்தது. • மாநாட்டு அரங்கிற்கு வெளியே பகுதி முழுதும் ஏராளமான கழகக் கொடிகளை தோழர்கள் கட்டியிருந்தனர். • காலை கருத்தரங்கில் நேரு அரங்கம் இளைஞர்களால் நிரம்பி வழிந்தது. “நாங்கள் ஜாதியற்றவர்கள்; ஜாதியை ஒழிக்கக் கூடியவர்கள்” என்ற ‘பாட்ஜை’ சட்டைகளில் குத்தியிருந்தனர். • திறந்தவெளி...

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை,சிவகங்கை,விருதுநகர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 24.12.205 அன்று மதுரையில் வழக்கறிஞர் தோழர் பொற்கொடி அவர்கள் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற்றது. மதுரையில் பிப்ரவரி மாதம்  ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” நடத்துவது குறித்து கழக தோழர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழக பரப்புரை செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் அவர்கள் தலைமை தாங்கினார்.மதுரை மாவட்ட செயலாளர் தோழர் மா.பா.மணிகண்டன் முன்னிலை வகித்தார்.மாவட்ட அமைப்பாளர் தோழர் மாப்பிள்ளை சாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார். விருதுநகர் ஜெயக்குமார்,செந்தில்குமார்,சிவகங்கை நா.முத்துக்குமார், கா.தர்மலிங்கம்,ராஜா,ராமகிருஷ்ணன்,அருண்குமார்,திருநாவுக்கரசு,  நித்தீஷ்,செந்தில்குமார்,மஜீத் உள்ளிட்ட தோழர்கள் இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்

ஆதித்தமிழர் பேரவையின் வேண்டுகோள்

அனைவருக்கும் வணக்கம், கீழே இருக்கும் கடிதம் இந்திய இரயில்வே துறையின் மந்திரி திரு. சுரேஷ் பிரபு அவர்களிடம் இருந்து இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று கருதுகிறேன். இந்தியன் இரயில்வே துறை சிறப்பாக செயல்பட கருத்து கேட்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும்  sureshprabhu@irctc.co.in என்ற மின்னஞ்சலுக்கு SUBJECT லைன் -இல் மட்டும் “END MANUAL SCAVENGING IN INDIAN RAILWAYS” என்பதை CUT  PASTE செய்து அனுப்பினால், இந்திய இரயில்வே துறையில் இருக்கும் கையால் மலம் அள்ளும் முறை ஒழிக்கப்பட அனைவரும் குரல் கொடுத்ததாக இருக்கும் என்று கருதுகிறேன். அனைவரும் இந்தத் தகவலை தத்தமது சமூக வலைதளங்கள் அனைத்திலும் பதிவு செய்தும், தங்களின் மின்னஞ்சல் வரிசையில் இருக்கும் அனைவருக்கும் அனுப்பியும், இதை பரப்ப உதவுமாறு ஆதித்தமிழர் பேரவையின் சார்பாக வேண்டுகிறேன். Dear Rail user, Our respected Prime Minister, Shri Narendra Modi Ji has a vision for this great nation and in this vision...

தோழர் கா.சு.நாகராசு தந்தையார் நினைவேந்தல்

24-12-2015 அன்று நண்பகல் 12-00 மணிக்குபொள்ளாச்சி, கா.க.புதூர் தோழர் நாகராசு அவர்களின் தந்தையார் சுப்பிரமணியன் அவர்களின் நினைவேந்தல், அவரது பூஞ்சோலைஇல்லத்தில் ந்அடைபெற்றது. நிகழ்வுக்கு பொள்ளாச்சி வெள்ளீயங்கிரி தலைமை தாங்கினார். அனைவரையும் வரவேற்று கா.சு.நாகராசன் உரையாற்றினார். தனது உரையில் ஐம்பது வயதுவரை கடவுள் நம்பீகையாளராக இருந்த தனது தந்தை நாட்டிகரானதையும், அறுபது வயதில் சாதிப்பற்றினை விட்டொஇத்ததையும், தானும் தன் சகோதரர் குடும்பத்தார் அனைவரும் இயக்கப் பணியாற்றுவதற்கு அவரளித்த சுதந்திரத்தையும், ஒத்துழைப்பையும் நினைவுகூர்ந்தார்.அதுபோலவே அவரது உடலை மருத்துவமனைக்கு அளிப்பதற்கு தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்து அனுமதி கொடுத்த பாங்கினை விளக்கினார். தொடர்ந்து தோழர்கள் மடத்துக்குளம் மோகன் (தி.வி.க), பொள்ளாச்சி விசயராகவன் (காட்டாறு), பொறியாளர் பரமசிவம் (தி.க), ஆறுச்சாமி (தி,மு.க), தோழர் அறக்கட்டளை சாந்தகுமார் ஆகியோரின் நினைவேந்தல் உரைகளைத் தொடர்ந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நினைவேந்தல் உரையாற்றினார்.தனது உரையில் ஆத்மா தத்துவத்தின் பொய்மைகளையும், பார்ப்பனர்களைக் கொண்டு நடத்தப்படும்  இறுதிச் சடங்கில் கூறப்படும் மந்திரத்தின்...

தமிழ் தேச மலைநாடு மக்கள் கட்சி மாநாடு

21-12-2015 அன்று மாலை 3-00 மணி தொடங்கி மாலை 6-30 மணிவரை, சேலம் போஸ்மைதானத்தில், தமிழ் தேச மலைநாடு மக்கள் கட்சியின் முதல் மாநில மாநாடு அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பொ.பா.இராமசாமி தலைமையில் நடைபெற்றது. முழுதும் பழங்குடி மக்களின் மேம்பாட்டை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இக்கட்சியியின் மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். அரசியல் சட்டம் அனுமதித்துள்ள ஐந்தாம் பட்டியலில் இணைப்பதின் வழியாக உரிமைகள்பல பெற உள்ள வாய்ப்புகள் பற்றியும், வன உரிமைச் சட்டத்தை நடைமுறைபடுத்த வலியுறுத்துவதால் உள்ள நன்மைகள் குறித்தும், அதற்கென தமிழகம் தழுவிய ஒருங்கிணைந்த கிளர்ச்சிகள் நடதவேண்டிய தேவை குறித்தும் தனது உரையில் குறிப்பிட்டார். மேலும் ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகத் தலைவர் சேலம் பெ.இராசகோபால், கான்ஷிராம் பகுஜன் கட்சித் தலைவர் வடலூர் சாமிதுரை, நீலகிரி ஆதிவாசிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் எம். ஆல்வாஸ், தமிழக ஆதிவாசிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒய்.வின்சென்ட் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்

விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 21122015 மாலை பேருந்து நிலையத்தில் பூங்கா என்ற பெயரில் பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்க முற்ப்படும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மேலும் சாலை சீரமைப்பு கழிப்பறை வசதி சுகாதார பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாக்ஸ்சிட் கட்சி ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ‎திராவிடர்‬ விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் கலந்துகொண்டு திவிக சார்பில் தோழர்கள் பாலமுருகன் மாவட்ட அமைப்பாளர், சிலம்பரசன் கம்மாபுரம் ஒன்றிய செயலாளர், தமிழ்நாடு மாணவர் கழக பாரி சிவக்குமார் மற்றம் மாவட்ட செயலாளர் பாலாஜி,அமைப்பாளர் தினேஷ், தர்மா, பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர்

திரளான மக்கள் ஆதரவுடன் பெரும் வெற்றி பெற்ற கழகத்தின் சேலம் மாநாடு !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை” தமிழகமெங்கும் நடத்த திட்டமிடப்பட்டு முதல் மாநாடு ஈரோடு, அடுத்ததாக சென்னையில் நடைபெற்றதைத் தொடர்ந்து சேலத்தில் நடத்த அறிவிக்கப்பட்டு கழக தோழர்களால் மாநாட்டு பணிகள் துவங்கப்பட்டன. மாநாடு நடத்துவதற்கான 26-11-2015 அன்று கொடுத்தஅனுமதி கடிதத்திற்கு காவல்துறை நீண்ட அமைதிக்குப்பின் 17-12-2015 அனுமதி மறுத்தது. மாநாடு அறிவிக்கப்பட்ட முந்தையநாள் காவல்துறையின் தடையை உயர்நீதிமன்றத்தின் மூலம் கழகம் உடைத்தது. ”மக்களைப்பிரிக்கும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் 19.12.2015 சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் துவங்கியது. மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு,பகுத்தறிவுப் பாடல்களுடன் மாநாடு ஆரம்பமானது. தோழர் குமரப்பா தபேலா வாசிக்க, தோழர் சீனி தவிலும், தோழர் காளியப்பன் உறுமியும் வாசித்தனர். தோழர்கள் கோவிந்தராசு, முத்துகுமார், இசைமதி, அருள்மொழி ஆகியோர் சாதி ஒழிப்பு, பகுத்தறிவுப்...

19122015 சேலம் – மக்களைப் பிளவுப்படுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு – தீர்மானங்கள்

தீர்மானம் : 1 உரிய பயிற்சி பெற்ற எந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவரையும் அறநிலையத் துறையின் ஆளுகைக்குள் உள்ள கோவில்களில் அர்ச்சகர் ஆகலாம் என 2006 –ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்துக்கு எதிராக பார்ப்பனர்கள் தொடர்ந்த வழக்கில் அண்மையில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்தின் நோக்கத்தையே குழி தோண்டி புதைத்து விட்டது. தீண்டாமையையும், பார்ப்பன மேலாண்மையையும் நிலைநிறுத்தும் – ஆகம சாஸ்திரங்களைப் பின்பற்றுவது “தீண்டாமை” தடுப்பு சட்டத்துக்கோ – சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் சட்டப் பிரிவுகளுக்கோ எதிரானது அல்ல என்றும் தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. ஆகம விதிகள் படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆகும் உரிமைக்குரிய கோயில்களில், அதற்கு மாறாக  வேறு எந்தப் பிரிவினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்ற இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு – இந்து மதம் பார்ப்பன மதமே என்பதை உறுதியாக்கியிருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து – தமிழக அரசு...

கழகத்தின் இணையத்தள செயல்பாடுகள்

கழகத்தின் இணையத்தள செயல்பாடுகள்

இனி வரும் காலத்தில் கையடக்கமான தந்தி போன்ற சாதனம் அனைவரிடமும் இருக்கும்” என்று கூறிய சமூக விஞ்ஞானி பெரியாரின்எழுத்துக்களை அடுத்த தலைமுறையிடம் சேர்க்கும் பொருட்டு நமது கழகத்தின் நவீன செய்திதொடர்பு சாதனமாக, கழகத்தின் கொள்கை நிலைப்பாடுகளை, பிரச்சார நோக்கங்களை, போராட்ட முறைகளை, மாவட்ட வாரியான செய்திகளை கழக தோழர்களிடமும், அனைத்து மக்களிடம் சென்று சேர்க்கும் வலுவுள்ள இணையதளமாக (www.dvkperiyar.com) நமது இணையதளம் செயல்பட ஆரம்பித்துள்ளது. இயக்க தோழர்களுக்கு அதைப் பற்றிய ஓர் அறிமுகம் – இயக்கம் : முகப்பு பக்கத்தில் இயக்கம் என்ற Menuவின் கீழ் பெரியார் வாழ்க்கை வரலாறு ஆண்டுவாரியாக தொகுத்துள்ளோம். தலைமை அவ்வப்போது அறிவிக்கும் அறிக்கைகளின் பட்டியல் அடுத்து வரும். கழகத்தின் கொள்கை, பிரகடனம், உறுதிமொழி, மாநில மற்றும் பொறுப்பாளர்களின் பட்டியல், துணை இயக்கங்களின் அறிமுகம் மற்றும் அதனதன் பொறுப்பாளர்கள், கழகத்தில் இணைய விரும்பும் தோழர்களுக்கு படிவம் ஆகிய அனைத்தும் இதன் கீழ் வரும். மாவட்ட செய்திகள் :...

நெகிழ வைத்த நிதி !

திராவிடர் விடுதலைக் கழகம் மேட்டூர் காவலாண்டியூர் கிளை சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் நிதி சேகரிப்பின் போது 08.12.2015 அன்று செட்டியூரில் மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் தனது பங்களிப்பு நிதியாக ரூ.50-ஐ கொளத்தூர் தா.செ.பழனிச்சாமி யிடம் வழங்கியது, அனைவரையும் நெகிழ வைத்தது, அவர் அளித்த ரூ.50, விலை மதிப்பற்ற அவரது உணர்வின் வெளிப்பாடு. பெரியார் முழக்கம் 10122015 இதழ்

ஜாதி ஆணவ வெறிக் கொலைக்கு தமிழகத்தில் மற்றொரு பெண் பலி

ஜாதி ஆணவ வெறிக் கொலைக்கு தமிழகத்தில் மற்றொரு பெண் பலி

‘கவுரவக் கொலை’ என்ற பெயரில் ஜாதி வெறிக்கு குடும்பத்தினரே பெண்களை கொலை செய்யும் அளவுக்கு ஜாதியம் வெறி பிடித்து நிற்கிறது. இந்தக் கொலைகளையும் இந்தக் கொலைகளை தண்டனையாக அறிவிக்கும் ஜாதி பஞ்சாயத்துக்களையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலிமையடைந்து வருகிறது. தமிழ்நாடு அரசே கடுமையான ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு செவிமெடுக்கவில்லை. மோடி ஆட்சி இதற்கு ஒரு தனி சட்டம் இயற்ற முன் வந்து அதற்கான மசோதாவை மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டு அனுப்பியது. ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்கள் இந்த மசோதா குறித்து கருத்துகளைத் தெரிவித்து விட்டன. தமிழ்நாடு அரசோ எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அலட்சியம் காட்டுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 98 பேர் – இப்படி ‘கவுரவ’க் கொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இப்போது மீண்டும் இதேபோல் ஒரு கொலை நடந்திருக்கும் அதிர்ச்சியான செய்தி வெளி வந்திருக்கிறது. இராமநாதபுரம் வட்டம் புத்தேந்தல்...

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு:

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு:

நந்தன் : தில்லை நடராசன் கனவில் வந்ததாகக் கூறி, சிவபக்தனாகி, ஆண்டவனை தரிசிக்க வந்தவன் நந்தன். தீண்டப்படாத சமூகத்தைச் சார்ந்தவன். கொள்ளிடம் என்ற சிற்றூரிலிருந்து புறப்பட்டு தில்லைக்கு நடராசனை தரிக்க வந்தபோது தீட்சதப் பார்ப்பனர்கள் தீயில் குளித்து தீட்டைப் போக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். நந்தன் தீயில் குதித்தான். அப்போது தில்லை நடராசன் நேரில் தோன்றி, எதிரே இருந்த நந்தியை விலகச் சொல்லி, நந்தனுக்கு கர்ப்பக்கிரகத்துக்கு வெளியில் வைத்தே ‘தரிசனம்’ தந்ததாக ‘பெரிய புராணத்தில்’ சேக்கிழார் எழுதியுள்ளார். உண்மை என்னவென்றால், நந்தன் தீயில் எரிக்கப்பட்டான் என்பதே. சம்பூகன் : பார்ப்பனர்கள் மட்டுமே கடவுளை நேரடியாக தவம் செய்ய உரிமை பெற்றவர்கள். ராமன் ஆட்சியில் சம்பூகன் என்ற ‘சூத்திரன்’ கடவுளை நோக்கி நேரடியாக தவம் செய்தான். பார்ப்பனர்கள் – இதை அதர்மம் என்று கூறி, சூத்திரன் தவம் செய்ததால், அக்கிரகாரத்தில் பிறக்க வேண்டிய ஒரு குழந்தை, தாயின் கர்ப்பத்திலே இறந்துவிட்டதாக புகார்...

என்றென்றும் நினைவில் நிற்கும் மாநாடு

என்றென்றும் நினைவில் நிற்கும் மாநாடு

சென்னை மாவட்டக் கழக மாநாட்டுப் பணிகள் தொடங்கியது முதல் கடும் மழை கொட்டிக் கொண்டே இருந்தது. திருப்பூர், கோவை, விழுப்புரம், தூத்துக்குடி, நாகை, விருதுநகர், மாவட்டங்களிலிருந்து தோழர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மாநாட்டில் பங்கேற்கும் ஆர்வத்துடன் கடும் இடர்ப்பாடுகளை யும் கடந்து வந்திருந்தனர். கழகப் பொருளாளர் இரத்தினசாமி, முதல் நாளே மாநாட்டுப் பணிகளில் பங்கேற்க சென்னை வந்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நவம்பர் 17ஆம் தேதி சென்னை வந்தவர், 19 நாள்களுக்குப் பிறகு டிசம்பர் 5ஆம் தேதி காலையில் தான் மேட்டூர் புறப்பட்டுச் சென்றார். மலேசியாவில் பினாங்கு துணை முதல்வர் இராமசாமி ஏற்பாடு செய்த ஈழத் தமிழர் உரிமை மாநாட்டில் பங்கேற்க தோழர் கொளத்தூர் மணி, நவம்பர் 19ஆம் தேதி சென்னையிலிருந்து பினாங்கு பயணமானார். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாடு கடந்த தமிழீழ அரசின் தமிழகப் பிரதிநிதி பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்....

கொட்டிய மழையிலும் நடந்த “பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”

கொட்டிய மழையிலும் நடந்த “பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”

திராவிடர் விடுதலைக்கழகம், சென்னை மாவட்டத்தின் சார்பாக மக்களைப் பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” 01.12.2015 செவ்வாய்க் கிழமை சென்னை மேற்கு மாம்பலம் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை முழு நாள் மாநாடாக நடைபெற்ற இந்த சிறப்பான மாநாட்டில் கலை நிகழ்ச்சி, கருத்தரங்கம், பட்டி மன்றம், கருத்துரை ஆகியன இடம் பெற்றன. சென்னையில் காலத்தின் அவசியம் கருதி பல்வேறு தடங்கல்களை முறியடித்து கழகத் தோழர்களின் பெரு முயற்சியால் இம்மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாநாட்டின் முந்தைய நாள் இரவிலேயே கடும் மழை பெய்தது. கடும் மழைக்குமிடையே தோழர்கள் மாநாட்டு பணிகளை மேற்கொண்டார்கள். காலையிலேயே மாநாடு துவங்கும் நேரத்திலேயே கடும் மழை இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கழக மாநாட்டின் கருத்துரைகளைக் கேட்க தோழர்கள், தோழமை அமைப்புகள், பொது மக்கள் வருகை என 200க்கும் மேற்பட்டோரால் அரங்கம் நிறைந்தது. காலை...

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (3) வாலாசா வல்லவன்

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (3) வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. 2ம் பாகம் படிக்க வழக்குரைஞர் பா.குப்பன் பெரியார் மீது சுமத்தும் மற்றொரு குற்றச்சாட்டு “தமிழ்ப் பார்ப்பனர்களிடம் சினப் பாய்ச்சல்; தெலுங்குப் பிராமணர்களிடம் இனப்பாசம்!” (பக் 53) என்று எழுதியுள்ளார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பா.குப்பன் தமிழ்ப் பார்ப்பனர் தெலுங்குப் பார்ப்பனர் என்று வரையறை செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம். பழந்தமிழகத்தில் பார்ப்பனர் என்ற சாதியே கிடையாது. தொல்காப்பியர் காலக் கட்டத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியப் பார்ப் பனர்கள் தமிழகத்தில் வந்துள்ளனர். தொல்காப்பி யத்திலேயே வடமொழிச் சொற்களைச் சேர்ப் பதற்கான விதிகளை அவர் உருவாக்கியதிலிருந்தே இதனை நாம் உணர முடிகிறது. பெரியாரியல் வாதிகளும், மார்க்சிய வாதிகளும், உண்மையான தேசிய இன விடுதலையில் அக்கறை உள்ளவர்களும் தலைவர்களின் அரசியல்...

கழகம் – ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ நீட்டிய உதவிக் கரம்

உதவிக்கரம் நீட்டியோர் திராவிடர் விடுதலைக் கழகம், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இணைந்து நடத்திய நிவாரணப் பணிகளுக்கு உதவிட முன்வந்தோர் பட்டியல்: திருப்பூர் வணங்காமண் ஆடையகம் சார்பில் ஊமை அழகிரி 150 புதிய சட்டைகள், 150 வேட்டிகள்; மேட்டூர் கழகம் சார்பில் அரிசி மூட்டைகள், தண்ணீர் பாக்கெட், பருப்பு, ரொட்டி, மருந்துகள், தனி வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னை ஆனந்தன் 225 பெட்சீட்டுகள் வழங்கினார். திருப்பூர் மாவட்டக் கழகத் தோழர்கள் ஏராளமாக அரிசி மூட்டைகள், ரொட்டி, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அனுப்பினர். குவைத்திலிருந்து செந்தில் ரூ.50,000; தஞ்சையிலிருந்து மணி வண்ணன் ரூ.25,000; சூலூர் பனிமலர் ரூ.10,000; சென்னை பாண்டியன் ரூ.4000; அமெரிக்காவிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் ரூ.44,000. குறிஞ்சி நாடன் ரூ.3,000; வளர் தங்கம் குடும்பத்தார் ரூ.2000. செந்தில் (எப்.டி.எல்.) வழியாக உதவியோர் ரூ.8,600. தேனி ஆசிரியர் மணிமேகலை ரூ.5000. சுவீட்சர்லாந்து இளம் இராயல் விளையாட்டுக் கழக சார்பில்...

சாதி கொடுமைகளுக்கு எதிரான மாநாடு 12122015 மதுரை

12 டிசம்பர் 2015 அன்று காலை 9.30 மணி அளவில் சாதி கொடுமைகளுக்கு எதிரான மாநாடு நடைபெற்றது. எவிடென்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்து இருக்கும் இந்த மாநாடு மதுரை – கே.புதூரில் அமைந்து உள்ள டி நோபிலி அரங்கில் நடைபெற்றது மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சாதி வேறுபாடுகள் கூடாதென சட்டம் வலியுறுத்தினாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வரமுடியாதவர்களாக பெரும்பகுதி மக்கள் இருக்கின்றனர் என்றார் சாதி, மத ஆதிக்கம் அரசியலிலும், ஆட்சியிலும் நுழைவது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். எவிடன்ஸ் அமைப்பு சார்பில் மதுரை கோ.புதூர் டிநோபிலி அருள் பணி மைய அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற சாதியக் கொடுமைகளுக்கு எதிரான மாநாட்டில் அவர் பேசியதாவது: இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தீண்டாமை கூடாது என்கிறது. அதன் பிறகு வந்த குடியுரிமைச்...

புதுச்சேரியில் முற்றுகைப் போராட்டம் 16122015

புதுச்சேரி அரசில் அரசுச் செயலாளராகப் பணியாற்றும் ராக்கேஷ் சந்திரா என்னும் அதிகாரி ஏராளமான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் ஆவார். மருத்துவக் கல்லூரி இடங்களில் 50% இடங்கள் அரசு ஒதுக்கீட்டு அளித்தாக வேண்டும் என்ற விதியை 50 இடங்கள் அளித்தாக வேண்டும் என்று திரித்துக் கூறி இடஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கிடைக்காமல் செய்தவர். ஆசிரியப் பணித் தேர்வில் தகுதி அடிப்படையில் தேர்வு பெற்றோரையும் ஒதுக்கீட்டுக் கணக்கில் வைத்து ஏராளமான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வேலை வாய்ப்பைப் பறித்தவர். மேலும் சம்பள விகிதம் அதிகமாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை கெசட்டட் பதவி எனக் கூறி இடஒதுக்கீட்டில் வராது என்று நியமனங்களில் ஊழல் செய்தவர். புதுவைக் காகித ஆலைக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை, அவ்வாலை இயங்காததால் அர்டசுக்குத் திருப்பி அளிக்கவேண்டும் என்ற ஒப்பந்த விதிகளுக்கு முரணாக, அரசின் அனுமதியின்றியே தனியாருக்கு விற்றதால் 7.5 கோடி ஊழல் என்று 2014 ஜூலை மாதமே ஏமாற்றுதல் (420), அதிகார துஷ்பிரயோகம்...

பிரச்சார பயண நிறைவு பொதுக்கூட்டம் நம்பியூர் 13122015

ஈரோடு (வடக்கு) மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ”எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்” என்னும் பயண நிறைவு விழாப் பொதுக்கூட்டம், 13-12-2015 அன்று மாலை நம்பியூர் பேருந்து நிலைய திடலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நம்பியூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ரமேசு தலைமை தாங்கினார். தோழர் செல்வகுமார் வரவேற்புரையாற்றினார்.மேட்டூர் டி.கே.ஆர். பகுத்தறிவு இசைக்குழுவினரின் சாதியொழிப்பு, பகுத்தறிவு பாடல்களுடன் தொடங்கியது. கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரோடு இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் கோபி இளங்கோ, பேச்சாளர் கோபி வேலுச்சாமி ஆகியோர் உரையாற்றினார். அந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற உறுப்பினர்களுக்கு, அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, கழகத் தலைவர் வழியாக வழங்கினார்.

சங்ககிரி ராச்குமார் திருமண வரவேற்பு

திரைப்பட இயக்குநரும், சீரிய பகுத்தறிவாளருமான தோழர் சங்ககிரி ராச்குமார்- தோழர் திலகவதி ஆகியோரின் திருமண வரவேற்பு சங்ககிரி மீனாட்சி திருமண மண்டபத்தில் 13-12-2015 அன்று நடைபெற்றது. வரவேற்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், வட அமெரிக்க சியோட்டல் தமிழ்ச் சங்கத் தலைவர் அதியமான், திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சன், சன் டி.வி. ராஜா, இசையமைப்பாளர் தாஜ்நூர் , ஈரோடு மருத்துவர் சக்திவேல் உட்பட கழகத் தோழர்களும், திரைப்படத் துறையினரும் கலந்து கொண்டனர்

கடலூர் ஒட்டிய கிராம புறங்களுக்கு வெள்ள நிவாரண பொருளுதவி

கடலூர் ஒட்டிய கிராம புறங்களுக்கு வெள்ள நிவாரண பொருளுதவி

கடலூர் ஒட்டிய கிராம புறங்களுக்கு வெள்ள நிவாரண பொருளுதவி புரிய விரும்புவோர் கவனத்திற்க்கு ! கடலூர் ஒட்டிய கிராமப்புறங்களுக்கு இப்போது வரை நிவாரண பொருட்கள் சரியாக சென்றடையவில்லை. அக்கிராமங்கள் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்ப்ட்டுள்ளது. அளிக்கப்படும் நிவாரண பொருட்களும் பல்வேறு காரணங்களால் அங்கு சென்று சேர்வதில்லை.கடலூரிலேயே பொருட்களை கொடுத்து செல்வது,உள்கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாத நிலை,மேலும் பொருட்களை கொண்டு செல்லும் வழியில் சிலரால் ஏற்படுத்தப்படும் இடையூறுகள் ஆகிவற்றால் மக்களுக்கு பொருட்கள் சரியாக கொண்டு சென்று வழங்கப்படாததல் இன்னும் அம்மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலையில் உள்ளனர். திராவிடர் விடுதலைக் கழக தோழர்களும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வெள்ள நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.பொருட்களை சேகரித்து வைக்க இப்போது வடலூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர்,மூத்த பெரியார் தொண்டர் தோழர் கலிய மூர்த்தி அவர்களின் வடலூர்,ராதா திருமண மண்டபத்தில் நிவாரண பொருட்கள்...

கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி

கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி

திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் சார்பில் கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி ! சேலம் மாவட்டம் கொளத்தூர் பொது மக்களிடம் திரட்டப்பட்ட வெள்ள நிவாரண உணவு பொருட்கள் திராவிடர் விடுதலைக் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் லோகு. அய்யப்பன் உதவியோடு கடலூர் ஆண்டித்தோப்பு, வழிசோதனை பாளையம் ஆகிய பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அன்பழகன், ராமச்சந்திரன், தயலப்பன், சரவணன், கீர்த்தியரசு, எல்.ஐ.சி.வேலு, விஜயபூபதி, பால்.பாலு ஆகிய தோழர்கள் முன்னின்று செயல்பட்டனர்.

கடலூர் கிராம புறங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணப்பணி

கடலூர் கிராம புறங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணப்பணி

கடலூர் கிராம புறங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணப்பணி 5 ம் நாள் (09.12.2015) நேற்று கழகத் தோழர்களோடு இணைந்து தமிழ்நாடு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் அவர்கள் வெள்ள மீட்புப் பணியாற்றினார்.

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணம்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணம் ! திருப்பூர் மாவட்ட கழகத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்கள் கழக தோழர்களால் கடலூருக்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டு ஏற்கனவே அங்கு கிராம பகுதிகளில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கழக தோழர்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுக்கு வழங்க்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் வழங்கப்பட்ட பொருட்கள்,பொருளுதவி செய்தவர்கள் விவரம் : சந்திரசேகர் சி எம் டி கார்மெண்ட்ஸ் —அரிசி 100 கிலோ அருண்,சதிசு மற்றும் நண்பர்கள் ப்ளூ ஜே மென்ஸ் பௌட்டிக் — 300 சப்பாத்தி; 280 தண்ணீர் குவளை; 200 பிஸ்கட் பாக்கட். சிவகுமார் ஈரோ லுக் ஸ்டிக்கர்ஸ் – 25 கிலோ அரிசி; 50 நாப்கின்ஸ் அபிநயா, சவிதா, மனோஜ், அக்சதா, பாரதி விழி தற்காப்பு பயிற்சி கூடம் சூலூர்—- பிஸ்கட் 2 பெட்டிகள்(2௦௦ பாக்கட்); துணிகள் ; 50 கிலோ அரிசி. முத்துச்சாமி...

9 வது நாளாக திராவிடர் விடுதலைக்கழகத்தின் தொடர்ந்த வெள்ள மீட்புப்பணி

9 வது நாளாக திராவிடர் விடுதலைக்கழகத்தின் தொடர்ந்த வெள்ள மீட்புப்பணி

9 வது நாளாக (10.12.2015) சென்னை திராவிடர் விடுதலைக்கழகத்தின் தொடர்ந்த வெள்ள மீட்புப்பணி ! வெள்ள நிவாரணப்பணியில் தொடர்ந்து 9 வது நாளாக பணி செய்த திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் 10.12.2015 அன்று நிவாரண பணிகள் மேற்கொண்ட இடங்கள் : குன்றத்தூர்,பெருங்குடி,கல்குடி நிவாரண பொருட்களுடன் 1500 பேருக்கு உணவும் வழங்கப்பட்டது. தோழர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட வெள்ள நிவாரணப்பொருட்கள் விவரம் : ‘கோபி ‘ : ஆயில் -850 கிலோ , மைதா – 1 மூட்டை, அரிசி – 10 மூட்டை, அரிசி – 5 மூட்டை, நாப்கின் – 100 பீஸ், மருந்து – 1 பெட்டி, பாய் – 1 கட்டு, பிஸ்கட் – 2 பெட்டி, ஈரோடு : பெட்சீட் – 150, துணி – 1 பண்டல்.

மதுரையில் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான மாநாடு

சாதியக் கொடுமைகளுக்கு எதிரான மாநாடு இடம் : டி நோபிலி அருள் பணி மையம், மெயின் அரங்கம்,கே.புதூர்,மதுரை – 7. மாநாடு – காலை 10.00 முதல் 1.00 மணி வரை. தலைமை : தோழர் இரா.நல்லக்கண்ணு இந்திய கம்னியூஸ்ட் கட்சி துவக்க உரை : தோழர் ஜி.ராமகிருஷ்ணன் மாநில செயலாளர், மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி, சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு : எவிடன்ஸ்.

கடலூர் கிராம புறங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணப்பணி 5 ம் நாள் (09.12.2015)

கடலூர் கிராம புறங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணப்பணி 5 ம் நாள் (09.12.2015) நேற்று கழகத் தோழர்களோடு இணைந்து தமிழ்நாடு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் அவர்கள் வெள்ள மீட்புப் பணியாற்றினார்.

திவிக கொளத்தூர் சார்பில் கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி !

திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் சார்பில் கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி ! சேலம் மாவட்டம் கொளத்தூர் பொது மக்களிடம் திரட்டப்பட்ட வெள்ள நிவாரண உணவு பொருட்கள் திராவிடர் விடுதலைக் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் லோகு. அய்யப்பன் உதவியோடு கடலூர் ஆண்டித்தோப்பு, வழிசோதனை பாளையம் ஆகிய பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அன்பழகன், ராமச்சந்திரன், தயலப்பன், சரவணன், கீர்த்தியரசு, எல்.ஐ.சி.வேலு, விஜயபூபதி, பால்.பாலு ஆகிய தோழர்கள் முன்னின்று செயல்பட்டனர்.

சேலத்தில் 19122015 அன்று பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

சேலத்தில் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” திராவிடர் விடுதலைக்கழகம்,சேலம் மாவட்டம் நடத்தும் மக்களைப்பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” ‘காலை முதல் இரவு வரை முழு நாள் மாநாடு’ நிகழ்சி நிரல். நாள் : 19.12.2015 சனிக்கிழமை, இடம் : நேரு கலையரங்கம் சேலம். தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கம். காலை 10 மணி – ‘கருத்தரங்கம்.’ நண்பகல் 2 மணி – ‘பட்டிமன்றம்.’ ———————————————————– மாலை 6 மணி, இடம் : போஸ் மைதானம் சேலம். இளவரசன் – கோகுல்ராஜ் நினைவரங்கம், ”திறந்த வெளி மாநாடு.”

தொடர்ந்த 7 வது நாள் (08.12.2015) வெள்ள மீட்புப்பணி !

தொடர்ந்த 7 வது நாள் (08.12.2015) வெள்ள மீட்புப்பணி !

சென்னை திராவிடர் விடுதலைக்கழகத்தின் தொடர்ந்த 7 வது நாள் (08.12.2015) வெள்ள மீட்புப்பணி ! வெள்ள நிவாரணப்பணியில் தொடர்ந்து அயராது பணி புரியும் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் நேற்றும் உழைக்கும் சாதாரண ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் நிவாரண பணியாற்றினார்கள். நிவாரண பணிகள் மேற்கொண்ட இடங்கள் : அடையாறு பாலம்,மலர் நகர், ஓட்டேரி சத்யா நகர், மயிலாப்பூர் ரூதூர் புரம்,நாடான் தோட்டம். மேலும் உணவு தயாரிப்பில் தோழர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நான்காவது நாளாக 08122015 அன்று கடலூரில் நிவாரண உதவி

நான்காவது நாளாக 08122015 அன்று கடலூரில் நிவாரண உதவி

கடலூர் ஒட்டிய கிராம புறங்களுக்கு வெள்ள நிவாரண பொருளுதவி புரிய விரும்புவோர் கவனத்திற்க்கு ! கடலூர் ஒட்டிய கிராமப்புறங்களுக்கு இப்போது வரை நிவாரண பொருட்கள் சரியாக சென்றடையவில்லை. அக்கிராமங்கள் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்ப்ட்டுள்ளது. அளிக்கப்படும் நிவாரண பொருட்களும் பல்வேறு காரணங்களால் அங்கு சென்று சேர்வதில்லை.கடலூரிலேயே பொருட்களை கொடுத்து செல்வது,உள்கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாத நிலை,மேலும் பொருட்களை கொண்டு செல்லும் வழியில் சிலரால் ஏற்படுத்தப்படும் இடையூறுகள் ஆகிவற்றால் மக்களுக்கு பொருட்கள் சரியாக கொண்டு சென்று வழங்கப்படாததல் இன்னும் அம்மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலையில் உள்ளனர். திராவிடர் விடுதலைக் கழக தோழர்களும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வெள்ள நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.பொருட்களை சேகரித்து வைக்க இப்போது வடலூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர்,மூத்த பெரியார் தொண்டர் தோழர் கலிய மூர்த்தி அவர்களின் வடலூர்,ராதா திருமண மண்டபத்தில் நிவாரண பொருட்கள்...

வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிப்பு !

திராவிடர் விடுதலைக் கழகம் (Mettur, kolathur) காவலாண்டியூர் கிளை சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் நிதி சேகரித்து சென்னை அனுப்பட்டுவருகிறது. 08.12.2015 வெள்ள நிவாரண சேகரிப்பின் போது செட்டியூரில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது பங்களிப்பு நிதியாக ரூ.50 ஐ தோழர் கொளத்தூர் தா.செ.பழனிச்சாமி அவர்களிடம் அளித்தார்.சேரிக்கப்பட்ட நிவாரண பொருட்களுடன் கழக தோழர்கள்.

சென்னை வெள்ள மீட்புப்பணி 6 வது நாள் (07.12.2015)

சென்னை வெள்ள மீட்புப்பணி 6 வது நாள் (07.12.2015)

திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் சென்னையில் வெள்ள மீட்ப்புப்பணியில் கழக தோழர்கள் தொடர்ந்து வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எளிய மக்களுக்கு பணிகளை செய்து வருகிறார்கள்.நேற்றும் கழக தோழர்கள் உணவு,உடை குடிநீர்,பிஸ்கட்டுகள்,மருந்து பொருட்களை மக்களுக்கு வழங்கினார்கள்.நேற்று 2000 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் கழக தோழர்கள் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இடங்கள் : அமிஞ்சிக்கரை,டி.பி.சத்திரம், துரைப்பாக்கம்,கண்ணகி நகர், மயிலாப்பூர்,கணேச புரம், மேற்கு சைதாப்பேட்டை மாந்தோப்பு வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் நேற்று சென்னை நிவாரண பணிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பொருட்கள் : சப்பாத்தி – 500, ஜாம் – 200 பாக்கெட், பிஸ்கட் 2 பாக்ஸ்,

கடலூர் கிராம பகுதிகளுக்கு பொருள் உதவி செய்ய விரும்பும் தோழர்களுக்கு !

வரலாறு காணாத மழை காரணமாக சென்னையைப்போலவே கடலூரும் மிகுந்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. இங்குள்ள உழைக்கும் சாதாரண கிராம பகுதி மக்கள் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளார்கள்.இந்த கிராமப்புற மக்களுக்கு நிவாரண பொருட்கள் சரிவர கிடைக்காத நிலை உள்ளது. கடலூர் ஒட்டிய உள் கிராமங்களில் பாதிப்புகளுக்கு உள்ளான மக்களுக்கு திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் தங்கள் பணிகளை மிகுந்த சிரமங்களுக்கு இடையே செய்துவருகிறார்கள். தோழர்களின் இப்பணிக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் உதவிகள் கிடைத்து வருகின்றன. மேலும் இந்த கடலூர் கிராம பகுதிகளுக்கு பணி யாற்றும் கழக தோழர்களுக்கு பொருட்களாக உதவி செய்ய விரும்புபவர்கள், கீழ் காணும் பாதை வழியாக பொருட்களை கொண்டு சென்று கொடுக்குமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.கடலூர் பகுதிகளுக்கு நிவாரன பொருட்களை கொண்டு செல்வோர் கடலூரிலேயே நின்றுவிடுவதால் உள்கிராமங்களுக்கு பொருட்கள் சேருவதில் மிகவும் தாமதமும்,சரிவர கிடைக்காத நிலையும் உள்ளது. எனவே கடலூர் உள் கிராமப்பகுதிகளில் பணி செய்யும் கழக தோழர்களுக்கு நிவாரண பொருட்களை...

கடலூரில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள மீட்புப்பணி !

கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் பகுதி கிராமங்களுக்கு நிவாரண பொருட்கள் கோவையிலிருந்து கடலூருக்கு கொண்டு செல்லப்பட்டு கழக தோழர்கள் அதனை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சாதாராண உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் வழங்கினார்கள். கடலூர் கிராம பகுதிகளில் தொடர்ந்து கழக தோழர்கள் வெள்ள மீட்புபணியில் ஈடுபட்டுள்ளார்கள். கட்லூர் கொண்டு செல்லப்பட்ட நிவாரண பொருட்களுக்கு உதவி செய்தவர்கள், ஜி.ஆர்.டி..கல்லூரி – 15,000 மதிப்புள்ள பொருட்கள். கழக ஆதரவாளர் தோழர் முத்துரத்தினம் மற்றும் போர்டு நிறுவன ஊழியர்கள் – 10,000 மதிப்புள்ள பொருட்கள். கழகதோழர்கள் – 15,000 இணைந்த கரங்கள் அறக்கட்டலை கோவை,வடவெள்ளி மருதமலை சுப்ரமணிய சாமி திருக்கோயில் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பு – 50,000 மதிப்புள்ள பொருட்கள். பொருட்கள் விவரம் : பேஸ்ட் 100, பிஸ்கட் 8 பெட்டி, நாப்கின் 2 பாக்ஸ், பால்பவுடர் 1 பாக்ஸ், அரிசி 150 கிலோ, பெட்சீட் 100,...

தொடர்ந்து வெள்ள மீட்புப் பணியில் சென்னை திவிக

தொடர்ந்து வெள்ள மீட்புப் பணியில் திராவிடர் விடுதலைக் கழகம் ! சென்னையில் தொடர்ந்து வெள்ள மீட்புபணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கழக தோழர்கள் எளிய மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். அந்தவகையில் 06.12.2015 அன்று கழக தோழர்கள் பணி செய்த இடங்கள், சூளைமேடு நமச்சிவாயபுரம், சேத்துப்பட்டு அப்பாராவ் தோட்டம், திருவல்லிக்கேணி செல்லம்மாள் தோட்டம், எம்.ஜி.ஆர்.நகர் ஏரிக்கரை,காமராஜர் சாலை, குறுக்குப்பேட்டை சத்தியமூர்த்தி வாணி நகர். நேற்று நன்கொடையாக பெறப்பட்டு வழங்கப்பட்ட பொருட்கள், தோழர் ராசய்யா தமிழன் அவர்களிடமிருந்து, தண்ணீர் பாட்டல் – 1000 பிஸ்கட் – 500 கட்டுகள், போர்வை – 100, மருந்துப்பொருட்கள் – 100. ஈரோடு மாவட்டம், எண்ணெய் – 60 லிட்டர்

பாபர் மசூதியை மீட்க கருச்சட்டை ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோபியில் நடத்திய ”பாபர் மசூதியை மீட்க கருச்சட்டை அணிந்து ஆர்பாட்டத்தில்” 06.12.2015 அன்று கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.  

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் !

கோபி தமிழர் கூட்டமைப்பு சார்பாக 06.12.2015 அன்று நடைபெற்ற புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு மாமேதை அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து களத்தில் வெள்ள நிவாரணப்பணிகளில் திராவிடர் விடுதலைக் கழகம்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் இடைவிடாது தொடர்ந்து தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள். 04.12.2015 கழக தோழர்களால் உணவு தயாரிக்கப்பட்டு 1000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 05.12.2015 1000 பேருக்கான உணவை தோழர்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது மேலும் பிஸ்கட்,பிரட்,குடிநீர்,உடைகள்,போர்வை,நேப்கின்கள்,மருந்துப்பொருட்கள் ஆகியவை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நன்கொடைகளாக பெறப்பட்டு தோழர்களால் விநியோகிக்கப்பட்டுள்ளது.மேலும் பாதிப்படைந்த மக்களுக்கு தொடர்ந்தும் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று தமிழ் நாட்டின் பல்வேறு பகுதி தோழர்களால் மழை நிவாரண பணிக்காக அனுப்பப்பட்ட பொருட்களின் விவரங்கள் : தஞ்சாவூர் மாவட்டம் : அரிசி மூட்டை – 35, மைதா – 1 மூட்டை, நேப்கின் – 1000, பிரிட்டானியா – 6 பெட்டி, சன் பிளவர் ஆயில் – 1 கேன், மளிகை சாமான் – 1 மூட்டை, கரூர் மாவட்டம் : தமிழர் முண்ணனி அமைப்பினர் அனுப்பிய பொருட்கள், நைட்டி,லுங்கி,போர்வைகள் அடங்கிய பண்டல்கள்...

வெள்ள மீட்பு பணியில் திராவிடர் விடுதலைக் கழகம்

சென்னையில் பெய்துள்ள வரலாறு காணாத பெருமழையின் காரணாமாக அனைத்து தரப்பு மக்களும் தாங்கொணா துயரத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற வெள்ள மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள்.இந்த மக்கள் பணியில் திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. சாதாரண உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் பணிகளை செய்து வரும் கழக தோழர்கள் உணவு தயாரித்து வழங்குதல்,உடைகளை விநியோகித்தல், படகு மூலம் வீடுகளில் சிக்கிகொண்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கழகத்தின் இப்பணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிதியாகவும், உடைகள்,உணவு பொருட்களாகவும் தோழர்கள் பலர் வழங்கிவருகிறார்கள். நிதியாக, கடலூர் பகுதிக்காக கத்தார் நாட்டைச் சேர்ந்த தோழர் காதர் மீரான் அவர்கள் வழியாக ரூ 1,10,000 (ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்) வழங்கியுள்ளார்கள். அத்தொகை கடலூர் ஆலப்பாக்கம் பகுதிக்காக செலவிடப்படுகிறது. சென்னை பகுதிக்காக குவைத்தில் உள்ள கழக...

கடும் மழையில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

கடும் மழையில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

திராவிடர் விடுதலைக்கழகம்,சென்னை மாவட்டத்தின் சார்பாக மக்களைப்பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” 01.12.2015 செவ்வாய்க்கிழமை சென்னை மேற்கு மாம்பலம் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை முழு நாள் மாநாடாக நடைபெற்ற இந்த சிறப்பான மாநாட்டில் கலை நிகழ்ச்சி,பட்டி மன்றம்,கருத்தரங்கம்,கருத்துரை ஆகியன இடம்பெற்றன. சென்னையில் மழை வரும் சூழல் நிலவிய போதும் காலத்தின் அவசியம் கருதி பல்வேறு தடங்கல்களை முறியடித்து கழக தோழர்களின் பெரு முயற்சியால் இம்மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாநாட்டின் முந்தைய நாள் இரவிலேயே கடும் மழை பெய்தது. கடும் மழைக்குமிடையே தோழர்கள் மாநாட்டு பணிகளை மேற்கொண்டார்கள்.காலையிலேயே மாநாடு துவங்கும் நேரத்திலேயே கடும் மழை இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கழக மாநாட்டின் கருத்துரைகளைக் கேட்க தோழர்கள்,தோழமை அமைப்புகள்,பொது மக்கள் வருகை என 200க்கும் மேற்பட்டோரால் அரங்கம் நிறைந்தது. காலை 10 முதல் நிகழ்வாக சம்பூகன் கலைக்குழுவினரின்...