Category: பெரியார் முழக்கம் 2015

கருவூலக் கட்டுரை – இது ‘சுதந்திர’ நாடா? 0

கருவூலக் கட்டுரை – இது ‘சுதந்திர’ நாடா?

இது ‘சுதந்திர’ நாடா? 1950 ஜனவரி 26ஆம் தேதிய பலன், 1947 ஆகஸ்டு 15 ஆம் தேதியைப் போல் ஒரு விலாசம் மாற்றும் தினமேயாகும். அதே முதலாளிதான்; அதே பணப்பெட்டிதான்; அதே தராசுதான்; அதே படிக் கல் தான்; அதே சரக்குதான்; அதே பித்தலாட்டம் தான். ஆனால், விலாசம் அதாவது ‘டிரான்ஸ்வர்’ செய்யப்பட்டது மட்டும் மாற்றம் அடைகிறது. குடிஅரசு ஆட்சி என்கிற புதுப் பெயரால் பழைய கொடுங்கோல் ஆட்சியே மேலும் அதிக பலத்துடனும், அதிகப் பாதுகாப்புடனும் 26-ந் தேதி முதற்கொண்டு நடைபெறப்போகிறது. – பெரியார். (‘விடுதலை’, 20.1.1950)      நிற்க, மேல்நாடுகளில் ‘சுதந்திர நாள்’, ‘சுதந்திர ஆண்டு விழா’க் கொண்டாடுவது போல், நம் நாட்டில் சுதந்திர நாள், ஆண்டு விழாக் கொண்டாடுவது – புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டதைப் போலாகும். மேல்நாட்டார்கள் சுதந்திரம் பெற்றபின் பெற்ற நாளைக்குறி வைத்துக் கொண்டாடு  கிறார்கள். நாம் அதுபோல் கொண்டாட நமக்குச்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

மது விலக்கு எங்கள் கொள்கை; மற்ற கட்சிகள் பறித்துக் கொண்டு விட்டன. – பா.ம.க. அன்புமணி அரசியல் கட்சிகள விடுங்க; அரசாங்கமே உங்க கிட்டேயிருந்து இதை பறிச்சு அமுலாக்கிடாமல் பாத்துக்குங்க; அப்புறம் கட்சியே நடத்தமுடியாமல் போயிடும்! அரசு தடையையும் மீறி, கோயில்களில் சினிமா படப்பிடிப்புகள் நடக்கின்றன. – ‘இந்து’ ஏடு அதெல்லாம் கோயில் பிரச்சினைகளில், அரசு தலையிட முடியாது; தலையிடவும் கூடாது. இது இராமகோபாலன் உத்தரவு; தெரிஞ்சுக்குங்க. இந்தியாவிலேயே தூய்மையான நகரங்களில் முதலிடம் மைசூரு; இரண்டாவது திருச்சி. – செய்தி புண்ணியஸ்தலங்களான காசி, இராமேசுவரத்தை இப்படியெல்லாம் அவமானப் படுத்தக் கூடாது. இரயில்களில் பாட்டுப்பாடி, பிச்சை எடுப்பவர்களை அரசு திட்டங்களின் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்த மத்திய அரசு திட்டம். – செய்தி இந்தத் திட்டத்தில், இஸ்லாமிய கிறிஸ்துவ பிச்சைக்காரர்களையும் சேர்த்துப் பீங்களா? பங்கு சந்தையில் ஏழுமலையான் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. – செய்தி சுவிஸ் வங்கியில் ஏற்கெனவே கணக்கு தொடங்கிட்டீங்களா? ‘கோ’ சாலைகளில் உள்ள...

தலைமை அறிக்கை – யுவராஜை கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்து ஆக 17இல் ஆர்ப்பாட்டம் 0

தலைமை அறிக்கை – யுவராஜை கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்து ஆக 17இல் ஆர்ப்பாட்டம்

“கோகுல்ராஜ் கொலையில் தேடப்படும் குற்றவாளி யுவராஜ் என்பவர், இதுவரை கைது செய்யப்படவில்லை. நடந்தது ஒரு சாதாரண கொலைதான், இதற்கு ஏன் காவல்துறை இப்படி பெரிதுபடுத்த வேண்டும் என்றும் காவல்துறையால் தன்னை நெருங்க முடியாது என்றும், தனது ஜாதிக்காரர்களிடம் ‘வாட்ஸ் அப்’ வழியாக யுவராஜ் பேசி, அந்த பேச்சு பரப்பப்பட்டு வருகிறது. இதேபோல் வேறு ஒரு கொலை வழக்காக இருந்தால் தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க காவல்துறை அவரது குடும்பத்தினரைக் கைது செய்து குற்றவாளியை சரணடைய வைத்திருப் பார்கள். ஆனால், இந்த யுவராஜை கைது செய்வதில் காவல்துறை அலட்சியம் காட்டி வருகிறது. இதைக் கண்டித்து ஆகஸ்டு 17ஆம் தேதி ஒத்த கருத்துடைய அமைப்புகளை ஒருங்கிணைத்து, திருச்செங் கோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது” என்று செய்தியாளர்களுக்கு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டியளித்தார். தொடர்ந்து மதுவிலக்கு பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “முழுமையான மதுவிலக்கு...

பேராசிரியர் இராமு. மணிவண்ணன் மீதான பழி வாங்கும் நடவடிக்கை கண்டனத்துக்குரியது 0

பேராசிரியர் இராமு. மணிவண்ணன் மீதான பழி வாங்கும் நடவடிக்கை கண்டனத்துக்குரியது

சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல், விஞ்ஞானம் மற்றும் பொது நிர்வாகத் துறையின் தலைமைப் பேராசிரியர் இராமு. மணிவண்ணன். ஈழத் தமிழர் உரிமைப் போராட்டத்தில் அளப்பரிய பங்காற்றி வரும் பேராசிரியர். அய்.நா.வின் கூட்டங்கள் நடக்கும் போதெல்லாம் ஜெனிவா சென்று மனித உரிமைத் தளங்களில் ஈழத் தமிழர் பிரச்சினைகளை முன்னெடுத்தவர். ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான சான்றுகளைத் திரட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் ஆவணமாக்கியவர். ஒரு பேராசிரியர் என்ற எல்லையோடு தனது கடமை முடிந்துவிடவில்லை என்று சமுதாயப் பணியாற்றக் கூடியவர். அவரை இப்போது சென்னை பல்கலைக்கழகம் பழி வாங்கியிருக்கிறது. துறைத் தலைவர் பதவியிலிருந்து அவரை இறக்கிவிட்டு, அந்த இடத்துக்கு கோட்டீசுவர பிரசாத் என்பவரை துணைவேந்தர் நியமித்துள்ளார். பேராசிரியர் மணிவண்ணன் செய்த ‘குற்றம்’ தான் என்ன? “மதுக் கடைகளை மூடும் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் பற்றிய தகவல்களைத் தருமாறு என்னிடம் கேட்டார்கள். மாணவர்களுக்கான போராட்ட உரிமைகளில் நான் தலையிட முடியாது என்று கூறி, அது குறித்த தகவல்களைத்...

தலையங்கம் – பார்ப்பனியத்தின் சதி வலை 0

தலையங்கம் – பார்ப்பனியத்தின் சதி வலை

‘இந்து’க்களை ஒரே அணியாக தமிழகத்தில் திரட்ட முடியாத நிலையில் வெவ்வேறு ஜாதிக் குழுக்களை தங்கள் கட்சிக்குள் கொண்டுவந்து சேர்க்கும் முயற்சிகளில் பா.ஜ.க. இறங்கியிருக்கிறது. இந்து மத அடையாளங்களுக்குள் முடங்கிவிடாமல் தமிழகத்தில் பல்வேறு படி நிலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஜாதிக் குழுக்கள் அந்த அடையாளத்தை முன்னிறுத்தி, தங்கள் உரிமைப் போரை முன்னெடுத்தன. இதுவே பெரியார் வலியுறுத்திய ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற கோட்பாடு. பார்ப்பன மேலாண்மைக்கும் ஆதிக்கத்துக்கும் அரணாக நின்ற ‘இந்து ஓர்மை’க்கு வேட்டு வைத்தது, இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம், பெரியார் போராட்டத்தால் அரசியல் சட்டத்தில் நிகழ்ந்த முதல் திருத்தத்தின் வழியாக ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ சமூக கல்வி அடிப்படையிலான இடஒதுக்கீடாக மாறி அது தமிழ்நாட்டில் ஆட்சிகளைக் கடந்து தீவிரமாக செயலாக்கம் பெற்றது. உரிமை மறுக்கப்பட்ட ஜாதிக் குழுக்கள் முன்னேறத் தொடங்கின. உண்மையில் ‘தலைவிதி’, ஜாதி தர்மம்’ என்ற பார்ப்பனக் கோட்பாடுகளை உடைத்து நொறுக்கிக் கொண்டு உருவானதே இந்த முன்னேற்றம்! இந்த நிலையில், இந்த ஜாதிக் குழுக்களை மீண்டும்...

0

கழகத்தின் புதிய இணையதளம் dvkperiyar.com

நமது இயக்கத்தின் இணைதளம் dvkperiyar.com செயல்பட தொடங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் தலைமை கழகத்தின் அறிக்கை, ‘புரட்சி பெரியார் முழக்கத்தின் தலையங்கம், சிறப்பு கட்டுரை, மற்றும் குடிஅரசு செய்தி, ஏதேனும் ஒன்று முகப்பு பக்கத்தில் வாராவாரம் தகவல் உள்ளீடு செய்யப்படும் செயற்களம் பகுதியில் அந்தந்த மாவட்ட செய்திகள் மற்றும் நிகழ்வுகள் அட்டவணை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செய்திகள் மற்றும் நடைபெற உள்ள நிகழ்வுகளை மற்றவர்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த dvkperiyar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். அனுப்பும் புகைப்படங்களில் ஏதேனும் ஒன்று landscape இருப்பது சிறப்பு. மேலும் காணொளிகள் ஏதேனும் இருந்தால் youtube ஏற்றி உரலி (link) அனுப்பவும். எந்த மாவட்டத்தின் கீழ் செய்தி வரவேண்டும் என்பதையும் தெரியப்படுத்தினால் உள்ளீடு செய்ய உதவியாக இருக்கும். கழக மின்னூல்கள், குடிஅரசு மின்னூல்கள் மற்றும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மின்னூல்கள் வரும் நாட்களில் இணையத்திலேயே முழுதுமாக ஏற்றப்படும். குடிஅரசு யூனிக்கோடாகவும் படிக்க, காணொளிகள் மற்றும் பாடல்கள் ஏற்றவும் பணிகள் நடைபெற்று வருகிறது....

0

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் நியமனம்

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் கழகத் தலைவர் அறிவித்த மாவட்டப் பொறுப்பாளர்கள். ஈரோடு (தெற்கு) மாவட்டப் பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர் – சென்னிமலை செல்லப்பன்; மாவட்ட செயலாளர் – கு. சண்முக பிரியன்; மாவட்ட அமைப்பாளர்கள் – சென்னிமலை செல்வராசு, மரவபாளையம் குமார், மாநகர செயலாளர் – சிவானந்தம், மாநகர தலைவர் – திருமுருகன், மாநகர துணைத் தலைவர் – சத்தியராசு; பெருமாள்மலை கிளை தலைவர் – ராசன்னா; சித்தோடு கிளை தலைவர் – சத்தியராசு. மாவட்ட பொருளாளர் – மணகாட்டூர் கிருஷ்ணமூர்த்தி; மாவட்ட செய்தி தொடர்பாளர் – ஆசிரியர் மோகன்ராசு; மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் – அறிவுக்கன்பன், இனியன் பத்மநாபன், சென்னிமலை கோபிநாத். ஈரோடு மாவட்டப் (வடக்கு) பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர் – நாத்திகசோதி; மாவட்ட அமைப்பாளர் – ம. நிவாசு; மாவட்ட செயலாளர் – ந. வேணுகோபால். கோபி ஒன்றிய செயலாளர் – நா. அருளானந்தம்; நம்பியூர் ஒன்றிய...

கழகத் தலைவர்-பொதுச்செயலாளர் பங்கேற்ற கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள் 0

கழகத் தலைவர்-பொதுச்செயலாளர் பங்கேற்ற கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்ற மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் ஜூலை 29ஆம் தேதி முதல் ஈரோட்டிலிருந்து தொடங்கின. ஈரோடு ரெசிடென்சி அரங்கில் பகல் 11 மணியளவில் கடவுள் ஆத்மா மறுப்புடன் கூட்டம் தொடங்கியது. மலேசிய மாந்த நேய திராவிடர் கழகத்தைச் சார்ந்த வே.சு. மணியம், தமிழகத்தில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஈரோடு பெரியார் நினைவிடத்தைப் பார்வையிட வந்த அவர், கழகத் தலைவர் கொளத்தூர் மணியை சந்தித்துப் பேசிய பிறகு, மாவட்டக் கழகக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மலேசியாவில் கழகப் பணிகளை விளக்கி, சற்று நேரம் உரையாற்றி விடைபெற்றார். கலந்துரை யாடலில் கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, மாவட்ட செயலாளர் சண்முகப் பிரியன், மாவட்டத் தலைவர் செல்லப்பன், அமைப்பாளர் குமார், செல்வராஜ், மாணவர் விஜயரத்தினம், கிருஷ்ணமூர்த்தி, சத்தியமூர்த்தி, நகரத் தலைவர் திருமுருகன், இராசன்னா, சுகுணா, கோபிநாத், இசைக்கதிர், சித்தோடு எழில், ஆதரவாளர் முருசேன், நடராசன், மோகன்ராஜ்,...

கச்சிதமாகப் பொருந்துகிறார் கலாம்! 0

கச்சிதமாகப் பொருந்துகிறார் கலாம்!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஜூலை 27ஆம் தேதி ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு சாய்ந்துவிட்டார். வேறு எந்த குடியரசுத் தலைவருக்கும் மக்களிடம் கிடைத்திடாத அனுதாபமும் இரங்கல் உணர்ச்சியும் கலாம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. அரசு அமைப்புகளும் ஊடகங்களும் முழுமையான அர்ப்பணிப்புடன் தங்கள் துயரங்களை வெளிப்படுத்தின. கிராமம், நகரம் வேறுபாடின்றி தமிழகம் முழுதும் கலாமுக்கு அஞ்சலி பதாகைகள் கண்ணீர் செலுத்தின. இது ஒரு வித்தியாசமான நிகழ்வுதான். பல அரசியல் தலைவர்களின் மரணங்களை தமிழகம் சந்தித்திருக்கிறது. செய்தி வந்தவுடனேயே தொண்டர்களில் சிலர் வன்முறைகளைக் கையில் எடுத்துக் கொள்வார்கள். கடைகளை அடைக்கச் சொல்லி தாக்குதல் நடக்கும்; பேருந்துகள் கல்வீச்சுகளுக்கு உள்ளாகும்; மூட மறுக்கும் கடைகள் சூறையாடப்படும்; தமிழ் நாட்டின் இந்த ‘அரசியல் கலாச்சாரம்’ அப்துல் கலாமின் மரணத்தில் விடைபெற்றுக் கொண்டது. அனைத்துமே அமைதியாக நடந்து முடிந்தன. கடைகளை தாமாகவே முன்வந்து மூடி,...

உச்சநீதிமன்றத்தில் ‘மநுசாஸ்திர’ சுலோகம் 0

உச்சநீதிமன்றத்தில் ‘மநுசாஸ்திர’ சுலோகம்

மேமன் கருணை மநுவை தள்ளுபடி செய்த நீதிபதிகளில் ஒருவரான அனில் தவே, தூக்குத் தண்டனையை நியாயப்படுத்திட ‘மனுதர்மத்தை’ சமஸ்கிருத மொழியில் எடுத்துக் காட்டினார். “அரசன் சரியாக விசாரணை நடத்தினால், அவனிடத்தில் கருத்த மேனியும், சிவந்த கண்களும் கொண்ட பாவத்தைப் போக்குகிற தண்டம் எனும் தெய்வத் தன்மையுடைய புருஷன் பிறக்கிறான். ஆதலால் அத்தகைய அரசனிடத்தில் மக்கள் துன்பமடைய மாட்டார்கள்.” – (மனு அத்.7 : சுலோகம் 25) இதே நீதிபதிதான் நான் சர்வாதிகாரி ஆனால் கீதையை தேசிய நூல் ஆக்குவேன் என்று சொன்னவர் ஆவார். பதவி விலகிய அதிகாரி “யாகூப் மேமன் கருணை மனுக்களை தள்ளுபடி செய்து விசாரணை நடத்தியது உச்சநீதிமன்றத்தின் இருண்ட காலம். நீதி நெறி முறைகள் கைவிடப்பட்டன” என்று எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தின் துணைப் பதிவாளர் முனைவர் அனுப் சுரேந்திர நாத், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். ஜூலை 30ஆம் தேதி நள்ளிரவில் அவசர அவசரமாக கருணை மனுவை விசாரித்தபோது சுரேந்திர...

0

சிறப்புக் கட்டுரை – அடக்குமுறை சட்டங்களை முறியடிப்போம்!

அடக்குமுறை சட்டங்களை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தினார். அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்புச் சார்பில் இந்துத்துவ மக்கள் விரோத அரசின் அடக்குமுறைக்கு எதிராகக் கண்டனக் கருத்தரங்கம் கோவை அண்ணா மலை அரங்கில் 30.7.2015. அரங்க. குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகம்) தலைமையில் நடந்தது. கருத்தரங்கில், தமிழகத்தில் காவல் துறை புதிதாகப் பயன்படுத்தத் தொடங்கி யிருக்கும் மற்றொரு அடக்குமுறை சட்டமான ‘சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்துக்கு (Unlaw – ful Activities( Prevention ) Act – UPPA) கடும் எதிர்ப்பு தெரிவித்து தோழர்கள் பலரும் உரையாற்றினர். ‘தடா’, ‘பொடா’ சட்டங்களைப்போல் இதுவும் ஒரு கொடூரமான அடக்குமுறை சட்டமாகும். இந்த சட்டங்கள் முறைகேடாகவே பயன் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பொடா சட்டத்தை நீக்கிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, இந்தச் சட்டத்தில் இடம் பெற்றிருந்த...

தலையங்கம் – போராட்டக் களமாகும் தமிழகம் 0

தலையங்கம் – போராட்டக் களமாகும் தமிழகம்

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும் என்ற போராட்டம், அரசியல் கட்சிகளையும் தாண்டி மக்கள் போராட்டமாக உருவெடுத்து வருகிறது. சசிபெருமாள் என்ற காந்தியவாதி, கைபேசி கோபுரத்தின் மீது ஏறி நின்று நடத்திய போராட்டத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டத்தின் வேகம் அதிகரித்திருக்கிறது. மதுவிலக்கு குறித்து ஜூலை 19இல் தர்மபுரியில் கூடிய திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை நிறைவேற்றிய தீர்மானத்தின் ஒரு பகுதியை சுட்டிக்காட்ட விழைகிறோம். தமிழ்நாட்டில் ஒரு காலத்தில், ‘மதுக்குடி’ தனிப்பட்ட சிலரின் பழக்கமாக இருந்த நிலை மாறி, இன்று சமூகத்தையே சீர்குலைத்து வருகிறது. மாணவர்களையும் இளைஞர்களையும் போதை அடிமைகளாகவும் குடிநோயாளிகளாகவும் மாற்றிவருவது ஆபத்தான அறிகுறியாகும். மதுக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், விற்பனைக்கு கூடுதலாக இலக்கை நிர்ணயிப்பதும் ஒரு மக்கள் நலன் பேணும் ஆட்சிக்கான செயல் திட்டமாக இருக்க முடியாது. அதே நேரத்தில் முழுமையாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதிலும் பல ஆபத்துகள் இருக்கவே செய்கின்றன. கள்ளச் சாராயம் வர்த்தகமாகி, காவல்துறை-கள்ளச் சாராய வியாபாரிகள் இரகசிய...

மன்னையில் கனல்மதியின் கவிதை நூல் அறிமுகம் 0

மன்னையில் கனல்மதியின் கவிதை நூல் அறிமுகம்

கல்வி வளர்ச்சி நாள் கருத்தரங்கில் 8ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி கனல்மதி எழுதிய ‘இப்படிக்கு மழை’ கவிதை நூல் அறிமுகம் நடந்தது. திருப்பூரில் அரசுப்பள்ளியில் தமிழ் வழிக் கல்வி படிக்கும் கனல் மதி, கழகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் கழகப் பொறுப்பாளர் முகில்ராசு, அறிவியல் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் சிவகாமி ஆகியோரின் மகள் ஆவார். நூல் அறிமுக நிகழ்வு எழுத்தாளர் மருதம் சோதி தலைமையில் நடந்தது. மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீனி. ஜெகவர்சாதிக் நூலை வெளியிட, தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தோழர் சேதுராமன் பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் பசு. கவுதமன் நூல் திறனாய்வு செய்தார். கவிதைகளை எழுதிய மாணவி கனல்மதி ஏற்புரை வழங்கினார். பெரியார் முழக்கம் 30072015 இதழ்

பேராசிரியர் கல்விமணி வலியுறுத்தல் சிறப்பு கல்வி மண்டலம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும் 0

பேராசிரியர் கல்விமணி வலியுறுத்தல் சிறப்பு கல்வி மண்டலம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும்

நாட்டில் சிறப்பு கல்வி மண்டலம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை உடனடியாக கைவிட வேண்டும் என மன்னார்குடியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி புரட்சி நாள் கருத்தரங்கமாக நடைபெற்றது. கருத்தரங்கில் காமராஜர் படத்தை, முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவாராஜமாணிக்கம் திறந்து வைத்து பேசினார். அதுபோல் பெரியார் படத்தை, தஞ்சை தமிழ்பல்கலைக்கழக பேராசிரியர் வெற்றி செல்வன், அம்பேத்கர் படத்தை, திருவாரூர் கவுன்சிலர் வரதராஜன் ஆகியோர் திறந்து வைத்து பேசினார்கள். தொடர்ந்து, ‘தமிழக பள்ளி-கல்வி பிரச்சனைகளும் தீர்வுகளும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் பிரபா கல்விமணி பேசினார். அப்போது, “மத்திய மாநில அரசுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்கீடு செய்யவேண்டும் அனைத்திந்திய அளவில் நடைபெறும் அனைத்து நுழைவுத்தேர்வுகளிலும், தமிழிலும் கேள்வித்தாள் அளிக்கப்படவேண்டும். மைய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயக்கும் ஐஐடி மற்றும்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

‘வாஸ்து’ நம்பிக்கையால் டெல்லியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் 70 எம்.பி.க்கள் குடியேறவில்லை – செய்திவிடாதீங்க… டெல்லிக்குப் போகும் விமானத்துலயும் வாஸ்துப்படி இருக்கை கேளுங்க! இல்லாவிடில் டில்லிக்கும் போகாதீங்க! தில்லை நடராசன் கோபுரத்தை மறைத்து கட்டிடம் கட்டுகிறார்கள், தீட்சதர்கள். – செய்திகோபுரத்தை இடிச்சுட்டு ‘பிளாட்’ போட்டுக்கூட விப்பாங்க; அதுக்கெல்லாம் உச்சநீதிமன்றத்துல சு.சாமி அதிகாரம் வாங்கிக் கொடுத்திருக்காரு! கோயில்களில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வது ஆகமத்துக்கு எதிரானது. – இந்து அமைப்புகள் எதிர்ப்புசூரிய பகவானையும் ‘சூத்திரர்’ பட்டியலில் சேர்த்துட்டேளா? திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக ரீதியாக எடுக்கும் முடிவுகளால் ‘புரோக்கர்’களுக்குத் தான் பயன். – ‘தினமலர்’ விடுங்கய்யா… ஏழுமலையான் புரோக்கர்களான அர்ச்சகர்கள் மட்டும்தான் காலம்காலமாய் பயனடைய வேண்டுமா என்ன? அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம். – செய்திமண்சோறு உண்டார்; மண்ணில் உருண்டார்; ‘மந்திரி’யும் இழந்தார்! கடவுள் பெயர்களை வணிக நிறுவனங்கள் வர்த்தகத்துக்குப் பயன்படுத்த தடை இல்லை. – டெல்லி உயர்நீதிமன்றம்வர்த்தகத்துக்குப் பயன்படுத்தலாம்; வர்த்தக மோசடிக்கும்...

75ஆம் பிறந்த நாளில் கழகம் வழங்கியது பெரியார் பெருந்தொண்டர் சதாசிவத்துக்கு “பெரியாரியல் பேரொளி விருது” 0

75ஆம் பிறந்த நாளில் கழகம் வழங்கியது பெரியார் பெருந்தொண்டர் சதாசிவத்துக்கு “பெரியாரியல் பேரொளி விருது”

பெரியாரியல் கொள்கைகளை கிராமம் கிராமமாக சென்று பரப்பும் பணியை தொடர்ந்து பல ஆண்டுகளாக செய்துவருபவரும், ஏராளமான பெரியாரியல் பரப்புரையாளர்களை உருவாக்கியவருமான தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் (வளவன்) அவர்களுக்கு 24-7-2015ஆம் நாள் 75ஆம் ஆண்டு பிறந்தநாள் ஆகும். பேச்சின்போக்கில் இதை அறிந்துகொண்ட மேட்டூர் நகரக் கழகத் தோழர்கள் அவருக்கு பிறந்தநாள் விழா எடுக்க முடிவுசெய்து கழகத் தலைமையிடம் அனுமதி கோரினர். கழகத் தலைவரும், கழகப் பொதுச்செயலாளரும் கலந்துபேசி அவரது நீண்டகால பெரியாரியல் பரப்புரைப் பணிகளைக் கருத்தில் கொண்டு அவ்விழாவை நடத்த அனுமதித்ததோடு, அவருக்கு “பெரியாரியல் பேரொளி ” என்ற விருதினை அளிக்கவும் ஆலோசனைக் கூறினர். அதையடுத்து 24-7-2015 வெள்ளியன்று மேட்டூர் மகாலட்சுமி திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அவ்விழாவை எடுத்தனர். அது விழா என்ற அளவோடு முடிந்துவிடாமல் அதை ஒரு பயிலரங்கமாகவும் நடத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘ இட ஒதுக்கீட்டின் நியாயங்கள்’ என்ற தலைப்பில் ஒரு...

கிருஷ்ணகிரியில் கழகத் தலைவர் பங்கேற்ற காமராசர் விழா 0

கிருஷ்ணகிரியில் கழகத் தலைவர் பங்கேற்ற காமராசர் விழா

கிருஷ்ணகிரி, நுகர்வோர் சேவை மையம் நடத்திய கல்விக்கண் தந்த கர்மவீரர் காமராசரின் 113 வது பிறந்த நாள் விழா கல்வி விழிப்புணர்வு விழாவாக நடைபெற்றது. இவ்விழாவை ஒட்டி கிருஷ்ணகிரியில் 21.07.2015 செவ்வாய் மாலை 6 மணியளவில் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நுகர்வோர் பொதுச்சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ராஜேஷ் ஜெயராமன் தலைமை தாங்கினார். இந்த விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். உரையில் காமராசருக்கும் பெரியாருக்குமான உறவு, கல்விப் பெருக்கத்துக்கு ஆற்றிய பணிகள், பசுவதை தடை குறித்து அவரது எதிர்ப்பால் அவர்மீது இந்து மதவெறி அமைப்பினரின் தாக்குதல் ஆகியவற்றை விளக்கிப் பேசினார். விழாவின் தொடக்கத்தில் புதுவை அதிர்வுக் கலைகுழுவின் பறையிசை, கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பல்வேறு அரசியல் அமைப்புச் சேர்ந்தவர்களும், இலக்கிய அமைப்பினரும் உரையாற்றினர். முன்னதாக கிருட்டிணகிரியில் கழகத் தலைவர் பங்கேற்ற காமராசர் விழா கிருஷ்ணகிரி கொத்தபேட்டா...

தண்டனையைக் குறைக்க கழகம் கோரிக்கை 0

தண்டனையைக் குறைக்க கழகம் கோரிக்கை

“யாகூப் மேமனின் மரணதண்டனையை கருணை அடிப்படையில் இரத்து செய்து தண்டனை குறைப்பு வழங்க வேண்டும்” என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது. “மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முதன்மையான குற்றவாளிகள் இருவர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்ட நிலையில், குற்றவாளியின் தம்பியான யாகூப் மேமன் தானாக முன் வந்து தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டார். அவ்வாறு தன் மீது குற்றம் இல்லை என தானாகவே முன் வந்தவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அவர் தூக்கு கயிற்றின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். தற்போது மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கும் யாகூப் மேமனை தூக்கிலிடப் போவதாக அறிவித்திருப்பது ஏற்புடையது அல்ல. உலகம் முழுவதும் மரணதண்டனைக்கு எதிராக அனைத்து மனித உரிமை ஆர்வலர்களும் குரல் எழுப்பிக் கொண்டுள்ள நிலையிலும், பல நாடுகள் மரணதண்டனையை இரத்து செய்துவிட்ட நிலையிலும் மனித நேயமுள்ள நாகரீக சமுதாயத்தை நோக்கி உலக நாடுகள் சென்று கொண்டிருக்கும் இந்தச்சூழலில் இந்தியாவில் இப்படி...

தூக்குத் தண்டனையை நீக்குக 0

தூக்குத் தண்டனையை நீக்குக

இந்தியாவில் தூக்குத் தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பச்சன்சிங் வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு, பெரும்பான்மை அடிப்படையில் தூக்குத் தண்டனைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 30ஆம் தேதி தூக்கிலிடுவதற்கு பம்பாய் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யாக்கூப் மேமனுக்கு தேதி குறித்த நிலையில் தூக்குத் தண்டனைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ், பதவி ஓய்வுக்குப் பிறகு தூக்குத் தண்டனைக்கு எதிராக கருத்துகளை வலியுறுத்தி வருகிறார். தற்போது யாக்கூப் மேமன் பிரச்சினையில் தூக்குத் தண்டனைக்கு எதிராக தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஒரு நீதிபதி தூக்குத் தண்டனை விதிக்கக்கூடிய குற்றம் என்று கருதுவதால் மட்டுமே தூக்குத் தண்டனை விதித்திடக் கூடாது என்று கூறியுள்ள முன்னாள் உச்சநீதிமன்ற...

நம்ப வைத்து ஏமாற்றப்பட்ட மேமன் 0

நம்ப வைத்து ஏமாற்றப்பட்ட மேமன்

“1994 ஜூலை மாதம், தனது பெற்றோர், மனைவி மற்றும் 40 நாள் ‘கைக்குழந்தை’யோடு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்து, தனக்கும் குண்டுவெடிப்புக்கும் சம்மந்தமில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காக ‘சரண்’ அடைந்தவர் தான் யாகூப் மேமன். ” பாபர் மசூதியை இடித்த கையோடு, தொடர்ந்து 3 மாதங்களாக முஸ்லிம்களை கொன்று குவித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், 12-03-1993 அன்று மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு குற்றவாளிகள் குறித்து துப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தது இந்திய அரசு. தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட பலர் மீது, புலனாய்வுத் துறையினரின் பார்வை விழுந்துக் கொண்டிருந்த வேளையில் ‘ஆடிட்டர்’ யாகூப் மேமன்மூலம் குண்டு வெடிப்புக்கான பணபரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாககூறி, யாகூப் மேமன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. தன் மீதான ‘கறை’யை துடைக்கும் பொருட்டு, 1994 ஜூலை மாதம், தனது பெற்றோர், மனைவி மற்றும் 40 நாள் ‘கைக் குழந்தை’யோடு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்து, தனக்கும் குண்டுவெடிப்புக்கும் சம்மந்தமில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காக ‘சரண்’ அடைந்தவர்தான் யாகூப் மேமன்....

தலையங்கம்-மனிதனுக்கு கீழோ-மேலோ எந்த ஜாதியும் இல்லை! 0

தலையங்கம்-மனிதனுக்கு கீழோ-மேலோ எந்த ஜாதியும் இல்லை!

உரிமைக்காக ஜாதி மாநாடுகள் கூட்டுவதை ஆதரித்த பெரியார், ஜாதி பெருமைக்காகக் கூட்டப்படுவதை அழுத்தமாகக் கண்டித்திருக்கிறார். “இந்த நாடு பல சாதி, பல வகுப்பார் அடங்கியதாக இருக்கிறது. எப்போது நமது நாட்டில் சாதி வகுப்பு ஏற்பட்டு அதனுள் உயர்வு தாழ்வு அமைக்கப்பட்டுப் போய்விட்டதோ அன்று முதலே தனிச்சாதி மாநாடு கூட வேண்டியது அவசியமேற்பட்டுவிட்டது. ஒவ்வொரு சாதியாரும் தனித்தனியாக மாநாடுகள் நடத்திக்கொண்டிருந்தால் எப்போதுதான் ஒன்று சேருவது என்று பலபேர் குற்றஞ் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சிலர் இத்தகைய மாநாடுகளை வகுப்பு மாநாடுகள் என்று சொல்லி மாநாட்டிற்கு வரமுடியாதென்று மறுக்கவும் பார்த்திருக்கிறேன். இத்தகைய காரணங்களைக் கொண்டு வகுப்பு மாநாடு கூட்டுவோரைக் குறை கூற முடியாது. இத்தகைய மாநாடுகள் கூட்ட வேண்டியது மிகவும் அவசியமாகவே இருக்கிறது. ஒரு வகுப்பார் தாங்கள் தாழ்ந்த நிலைக்குள்ளாக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வருவதை உணராதிருக்கும் வகையில் ஒருவித ஏற்பாடும் செய்யாமல் தான் இருப்பார்கள். அவர்களுக்குத் தாங்களும் மனிதர்கள், தாங்களும் மற்றோருக்குச் சமமானவர்களே, தங்களைத் தாழ்ந்தவர்களெனக் கூறுவது...

சிறப்பு கட்டுரை-பெரியார் கேட்ட கேள்வி நீடிக்கிறது 0

சிறப்பு கட்டுரை-பெரியார் கேட்ட கேள்வி நீடிக்கிறது

நீதித் துறை ஜாதிய மயமாகியிருக்கிறது என்று பெரியார் நீதிமன்றத்திலே வாக்குமூலம் அளித்தார். ‘ஒரு குலத்துக்கு ஒரு நீதி’யாக செயல்படும் நீதித் துறையால் தண்டிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டவர்களில் தலித், ஆதிவாசிகளே அதிகம் என்பதை விளக்கி, ‘தமிழ்’ இந்து நாளேட்டில் 23.7.2015 அன்று சமஸ் எழுதிய கட்டுரை இது. ஆட்சியும் ஆதிக்கமும் பெரிதும் மேல் சாதிக்குச் சொந்தம். அவர்களிடம் அல்லலும் அவதியும் படுவது கீழ் சாதிக்குச் சொந்தம். இது சட்டப்படி, சாஸ்திரப் படி, கடவுள் சிருஷ்டியின்படி இந்த மடநாட்டில் இருந்துவருகிறது. இதை மாற்றுவதுதான் எங்கள் முயற்சி. இதற்கு நாங்கள் தக்க விலை கொடுத்தாக வேண்டும். ஆகையால், கனம் கோர்ட்டார் இஷ்டப்பட்ட விலை போடுங்கள்! – 1957இல் வரலாற்றுப் புகழ்பெற்ற திருச்சி வழக்கில், நீதிமன்றத்தில் எதிரொலித்த பெரியாரின் வார்த்தைகள் இவை. ‘இந்தியாவில் சாதியம் உறைந்திருக்கும் பீடங்கள்’ என்று பெரியார் வீசிய அம்புகளும் ஈட்டிகளும் நம்முடைய நீதி அமைப்புகளையும் சேர்த்தே குறி பார்த்தன. நீதி அமைப்புகளைச் சாதிய...

தலைமை அறிக்கை- மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 0

தலைமை அறிக்கை- மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

மாவட்டந்தோறும் கீழ்க்கண்ட திட்டப்படி கழகத் தலைவர், கழகப் பொதுச்செயலாளர் பங்கேற்கும், கலந்துரையாடல் கூட்டங்களை நடத்த கழக செயலவை தீர்மானித்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை மாவட்ட வாரியாக கழகத் தலைவர்,கழகப் பொதுச்செயலாளர், மாவட்டக் கழகக் கூட்டங்கள் வழியாக நேரில் சந்தித்து கழக அமைப்புகளை மேலும் முனைப்பாக நடத்திடவும் அமைப்புகளை மாற்றி அமைக்கவும், கீழ்க்கண்ட சுற்றுப்பயணத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு இரண்டு மாவட்டக் கூட்டங்கள் நடக்கும். முதல் கூட்டம் முற்பகல் 10 மணிக்கும், இரண்டாவது கூட்டம் பிற்பகல் 4 மணிக்கும் கீழ்க்கண்ட வரிசையில் தொடங்கும். ஜூலை 29 – ஈரோடு (தெற்கு ) – ஈரோடு ( வடக்கு ); ஜூலை 30 – திருப்பூர் -கோவை; ஜூலை 31 – பொள்ளாச்சி – திண்டுக்கல்;ஆகஸ்டு 5 – சேலம் ( மேற்கு ) – சேலம் ( கிழக்கு ); ஆகஸ்டு 6 – நாமக்கல் – கரூர்;ஆகஸ்டு 7 –...

தலையங்கம்-‘புண்ணிய’ முழுக்குகளில் பலியாகும் அப்பாவி உயிர்கள் 0

தலையங்கம்-‘புண்ணிய’ முழுக்குகளில் பலியாகும் அப்பாவி உயிர்கள்

மதத்தை மக்களிடம் நிலைநிறுத்துவதற்கு மதவாதிகள் உருவாக்கிய சடங்குகள், அதன் மீது திணிக்கப்பட்ட நம்பிக்கைகள் மக்களின் சிந்தனைகளை முடக்கிப் போட்டு விட்டன. இந்த நம்பிக்கைகள்தான் மக்களை விழாக்களில் இலட்சக்கணக்கில் கூடுவதற்கு தூண்டுகின்றன. பெரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் திறன் மிக்க நிர்வாகக் கட்டமைப்புகள் இல்லாதபோது அப்பாவி பக்தர்கள் உயிர்ப்பலியாகி விடுகிறார்கள். காதைக் கிழிக்கும் அளவுக்கு மதங்களையும் அதன் மீதான அரசியலையும் நீட்டி முழங்கிக் கொண்டிருப்பவர்கள், மத உணர்வில் வீழ்ந்துபட்ட பக்தர்கள் இப்படி உயிர்ப்பலியாகும் போது வாயை இறுக மூடிக் கொண்டுவிடுகிறார்கள். மதத் திருவிழாக்களில் கூட்ட நெரிசலில் சிக்கி, அப்பாவி மக்கள் பலியாகும் அவலம் தொடர்கதையாகிவிட்டது.ஆந்திராவில் கோதாவரியாற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ‘கோதாவரி புஷ்கரம்’ விழாவில் முழுக்குப் போட வந்த மக்களில் 29 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த துயர செய்தி அண்மையில் வெளி வந்திருக்கிறது. இந்த ‘புண்ணிய முழுக்குப்போடும் விழாவுக்கு கட்டுக்கடங்காத வகையில் கூட்டத்தைக் கூட்டச் செய்ததில் சாமியார்களுக்கு ஜோதிடர்களுக்கு...

சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடுக! 0

சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடுக!

மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ள நடுவண் அரசு- ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவரங்களை மட்டும் வெளியிடாமல் தவிர்ப்பது கண்டனத்துக்குரியது. இந்த உண்மைகள் வெளியே வந்தால் பார்ப்பன உயர்ஜாதி – ஆதிக்கம் அனைத்துத் துறைகளிலும் மேலோங்கி நிற்கும் உண்மை அம்பலமாகிவிடுமோ என்று அஞ்சுகிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் உண்மையான கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலைகள் வெளிவரும் போதுதான் அவர்களுக்கு சமூக நீதிக்கான இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றிட முடியும் என்பதால், ஜாதிவாரி கணக்கீட்டு விவரங்களை வெளியிட வேண்டும் என்று இந்த செயற்குழு வற்புறுத்துகிறது. – செயலவைத் தீர்மானம் பெரியார் முழக்கம் 23072015 இதழ்

எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்! மீண்டும் தொடங்குகிறது, பரப்புரை இயக்கம்! 0

எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்! மீண்டும் தொடங்குகிறது, பரப்புரை இயக்கம்!

தர்மபுரி செயலவையில் ஜாதி எதிர்ப்பு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை வலியுறுத்தி பரப்புரை இயக்கத்தைத் தொடங்க தீர்மானிக்கப்பட்டது. தீர்மான விவரம்: தமிழ்நாட்டில், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களின் எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. அவர்களின் வேலை வாய்ப்புகள், அரசுத் துறைகளில் வெகுவாகக் குறைந்து விட்டன. தாராளமயக் கொள்கையால் பெருகிவரும் பெரும் தொழில் நிறுவனங்களில் இவர்களின் வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் சட்டங்கள் வர வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த கால அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, அதன் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் ஏற்றுக் கொண்டிருந்தாலும் செயல்படுத் தாமல் புறந்தள்ளிவிட்டது. பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அரசுதான் நிலம் வழங்குகிறது.தண்ணீர், மின்சாரம் இலவசமாகவோ அல்லது மிகக்குறைந்த விலையிலோ வழங்கப்படு கின்றன. பங்கு மூலதனங்கள் வழியாக மக்கள் பணம் மூலதனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு இந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்ய அரசு சட்டம் இயற்றுவதற்கு முழுமையான அதிகாரமும் நியாயமும் இருக்கிறது....

காவல்துறைக்கு சவால் விடும் ஜாதிவெறியர்கள் 0

காவல்துறைக்கு சவால் விடும் ஜாதிவெறியர்கள்

தமிழ்நாட்டில் ஜாதி ஆணவக் கொலைகள் தொடர்ந்து கொண்டிருப்பதோடு, ஜாதிவெறி சங்கங்கள் இதைத் தூண்டிவிட்டு, நியாயப்படுத்தியும் வருகின்றன. நடுவண் ஆட்சி, இந்த ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் ஒன்றை இயற்றிட – மாநில அரசுகளிடம் கருத்துகள் கேட்டுள்ள நிலையில், அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இது குறித்து ஏதும் கருத்து கூறாது அலட்சியம் காட்டுகிறது.தமிழ்நாடு அரசே, ஒரு தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்கவில்லை. அண்மையில் கோகுல்ராஜ் என்ற தலித் பொறியியல் பட்டதாரி, தலை துண்டிக்கப்பட்டு ஜாதி ஆணவக் கொலைக்கு பலியாகியுள்ளார். இந்தக் கொலையில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான யுவராஜ் என்பவர் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், அவர் தலைமறைவாக இருந்துகொண்டு, தனது குற்றச் செயலை நியாயப்படுத்தி காவல்துறைக்கு சவால்விட்டு பேசியது, ‘வாட்ஸ் அப்’ வழியாக பரப்பப்பட்டு வருகிறது.ஜாதி ஆணவக் கொலைகளில் காவல்துறையின் இந்த அலட்சியத்துக்குக் காரணம், அதில் ஊடுருவி நிற்கும் ஜாதிய மனநிலைதான் என்பதை வருத்தத்துடன் சுட்டிக்...

எழுச்சியுடன் நடந்த தர்மபுரி கழக செயலவை 0

எழுச்சியுடன் நடந்த தர்மபுரி கழக செயலவை

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 19.7.2015 காலை 11 மணியளவில் தர்மபுரி பெரியார் மன்றத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடந்தது.கழகத் தோழர் கிணத்துக்கடவு நிர்மல் குமார்,கடவுள்,ஆன்மா மறுப்பு கூற, மாவட்டக் கழக சார்பில் நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று ஏற்பாடுகளை செய்த பரமசிவம் வரவேற்புரையாற்றினார். சென்னை மாவட்டக் கழகத் தோழர் சரவணன்,நெல்லை மாவட்டத் தலைவர் குறும்பலபேரிசு. வடிவேலு (3.11.2014), தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் க.மதன் (16.4.2015), மதுரை கைவண்டி கருப்பு, கழக ஓவியர் மேட்டூர் சாதகப் பறவை சேகர், கரூர் இராஜா ஆகியோர் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுனம் காத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், செயலவை முன் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள், கழக செயல் பாடுகளை விளக்கி தொடக்க உரையாற்றினார்.பின்னர், மாவட்ட வாரியாக தோழர்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். ஈரோடு வடக்கு – நாத்திக ஜோதி, ஈரோடு தெற்கு – சண்முகபிரியன், சேலம்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

அசைவ உணவுக்கு அனுமதித்து பூஜைகளை தடை செய்யும் அய்.அய்.டி.கள் இந்து மதத்துக்கு எதிராக செயல்படுகின்றன.- ஆர்.எஸ்.எஸ். குற்றச்சாட்டு அப்ப, அய்.அய்.டி.களை இந்து அறநிலையத் துறை அதிகாரத்துக்குக் கீழே கொண்டுவந்து, ஓர் அவசர சட்டம் போட்டுடுங்க. கோயில் பக்தர்களிடம் கட்டணம் வசூல் செய்வதை எதிர்த்து இராம. கோபாலன் போராட்டம். – செய்தி புரோகிதர்கள் ‘தட்சணை’ வாங்குவதையும் இதுல சேர்த்துக்குங்க… பா.ம.க., பா.ஜ.க. கூட்டணிக்கு வர வேண்டும்.- பா.ஜ.க. தலைவர் தமிழிசை இது என்ன பிரமாதம்! நாளைக்கே அன்புமணிதான் முதல்வர்ன்னு அறிவியுங்கள்; ஓடி வந்துடுவாங்க. முஸ்லிம்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளில் கட்சிகள், பிற அமைப்புகள் பங்கேற்க ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு. – செய்தி ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம் பிரிவான ‘ராஷ்டிரிய மஞ்சின்’ நடத்திய நோன்பு திறப்பில் டில்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பங்கேற்றார்களே, அநேகமாக அந்த நிகழ்ச்சியில்தான் இப்படிப் பேசியிருப்பாங்கபோல! உப்பிலியப்பன் கோயிலில் உரிய மரியாதை தரவில்லை என்று தரிசனம் செய்யாமல் வெளியேறிய வானமாமலை ஜீயரிடம் அதிகாரிகள் மன்னிப்பு....

மேட்டூரில் தொடர் கூட்டங்கள்.

மேட்டூரில் தொடர் கூட்டங்கள்.

மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழக சார்பில் மேட்டூர் அணைப் பகுதியில் ஜூலை 4 முதல் 19ஆம் தேதி வரை பெரியார் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன. ஜூலை 4 – காவேரி பாலம் (தலைமை – பிரகாசு) 5 – குள்ள வீரன்பட்டி (தலைமை – பெ. சக்திவேல்) 7 – பொன்னகர் ( தலைமை – இர. பூவழகன்) 9 – ஆஸ்பத்திரி காலனி (தலைமை – பொன்.தேவராசு) 11 – பாரதி நகர் (தலைமை – மே.கா.கிட்டு) 12 – வீரபாண்டிய கட்டபொம்மன் (தலைமை – மா.கதிரேசன்) 14 – நேரு நகர் (தலைமை – அ. அண்ணாதுரை) 16 – மசூதித் தெரு (தலைமை – மார்ட்டின்) 18 – காவேரி நகர் (தலைமை – சி. கோவிந்தராசு) 19 – மாதையன்குட்டை (தலைமை – மா. பழனிச்சாமி) கூட்டங்களில் கோபி....

மேட்டூர் கழக மூத்த ஓவியர் சேகர் முடிவெய்தினார்.

மேட்டூர் கழக மூத்த ஓவியர் சேகர் முடிவெய்தினார்.

மேட்டூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மூத்த ஓவியர் சந்திரசேகர் (எ) சேகர் கடந்த 1.7.2015 அன்று உடல்நலம் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் முடிவெய்தினார். இவருக்கு வயது (54). மேட்டூரில் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டு, வளர்ந்து வந்த நிலையில் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு கழகம் வளர்வதற்கு இவரின் சுவரெழுத்தும், தட்டி விளம்பரமும் முழு வீச்சாக அன்று இருந்தது. குறிப்பாக கடவுள் கதைகள், வேதங்களில் வரும் கடவுள் தொடர்பான கடவுள் கதைகளுக்கேற்ப கார்ட்டூன்கள் வரைவதில் திறமையானவர். அந்த காலகட்டங்களில் இவர் வரையும் கடவுள் கார்ட்டூன்கள் அடங்கிய தட்டி பிரச்சாரம் மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு பரபரப்பை உண்டாக்கும். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், தமிழ் பிரபா, தமிழ் நிலா என்ற இரு மகள்களும் உண்டு. கழகப் பொறுப்பாளர்களும், கழகத் தோழர்களும் கழகச் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர். பெரியார் முழக்கம் 16072015 இதழ்

கைவண்டி கருப்பு முடிவெய்தினார்.

கைவண்டி கருப்பு முடிவெய்தினார்.

எப்போதும் கருஞ்சட்டையுடன் காட்சியளிக்கும் உழைக்கும் தோழர் மதுரை கைவண்டி கருப்பு (75), 12.7.2015 அன்று காலை முடிவெய்தினார். திராவிடர் கழகத்தில் தொடங்கி, திராவிடர் விடுதலைக் கழகம் வரை பெரியார் தொண்டராகவே வாழ்ந்தவர். அவர் பொள்ளாச்சியில் வாழ்ந்த காலத்தில் எப்போதும் சுமை இழுக்கும் கைவண்டியுடன் உழைத்ததால் கைவண்டி கருப்பு என்று பெரியாரால் அழைக்கப்பட்டவர். கழக நிகழ்ச்சிகளில் தமது துணைவியாரோடு பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த சில மாதங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் மதுரை மஞ்சள்மேடு குடியிருப்பில் தனது இல்லத்தில் முடிவெய்தினார். கழக சார்பில் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பெரியார் முழக்கம் 16072015 இதழ்

சிறப்பு கட்டுரை-சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் ‘மனுதர்ம’க் கூட்டம் என்ன நடக்கிறது, ‘அய்.அய்.டி.’களில்? – விடுதலை இராசேந்திரன் 0

சிறப்பு கட்டுரை-சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் ‘மனுதர்ம’க் கூட்டம் என்ன நடக்கிறது, ‘அய்.அய்.டி.’களில்? – விடுதலை இராசேந்திரன்

‘சூத்திரர்’ கல்வி உரிமையைப் பறித்தது ‘மனுசாஸ்திரம்’. எனவே, அம்பேத்கரும் பெரியாரும் அதை எதிர்த்தனர். மக்கள் வரிப் பணத்தில் இயங்கும்- அய்.அய்.டி.கள். இந்தத் தலைவர்களின் சிந்தனை களுக்கே அய்.அய்.டி. வளாகத்துக்குள் தடை போட்டன. ‘மனுதர்மமே’ அய்.அய்.டி. ஏற்றுக் கொண்ட தத்துவம் என்பதே இதற்கான அர்த்தம். இதுகூட ஒரு கண்ணோட்டத்தில் வரவேற்க வேண்டியது தான். இல்லையேல் தமிழ்நாட்டில் அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள், மார்க் சிஸ்டுகள், மாவோயிஸ்டுகள் ஒரே களத்தில் கரம் கோர்க்க நல்ல வாய்ப்பை உருவாக்கியிருக்குமா? ‘அய்.அய்.டி.’ என்பதற்கு மற்றொரு பெயர் எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கும் – “அய்யர், அய்யங்கார், உயர்கல்வி நிறுவனம்”. வசிஷ்டர் படிப்பு வட்டம், வந்தே மாதரம் படிப்பு வட்டம், இராமாயண படிப்பு வட்டம், விவேகானந்தர் படிப்பு வட்டம், துர்வாசர் படிப்பு வட்டம் என்று வளாகத்தை வேத மயமாக்குவதற்கு அனுமதித்தவர்கள் – அம்பேத்கர், பெரியார் படிப்பு வட்டத்தை மட்டும் அனுமதிக்க மறுத்தது. சென்னை அய்.அய்.டி.யில், தலித், பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் மீது...

‘பூப்பெய்தும்’ சடங்குக்கு மாற்றாக…

‘பூப்பெய்தும்’ சடங்குக்கு மாற்றாக…

இந்து ‘கலாச்சாரம்’ திணித்த பெண்ணடிமை பண்பாடுகளில் ஒன்று வயதுவந்துவிட்ட பெண்களுக்காக நடத்தப்படும்‘பூப்பெய்தும்’ விழா என்பதாகும். ஒரு பெண் வயதுக்குரிய பருவத்தை எட்டுவது, இயல்பாக ஏற்படும் உடலியல் மாற்றம். இதை ஏன் ஊருக்கு அறிவிக்கும் விழாக்களாக நடத்த வேண்டும்? இதேபோல் ஆண் பிள்ளைகளுக்கு ஏன் நடத்து வது இல்லை? சென்னையில் பல பகுதிகளில் இதற்காக பெண்ணின் படத்தோடு விளம்பரப் பதாகைகள்கூட வைக்கப்படுகின்றன. புவனேசுவரி என்ற மென்பொருள் பொறியாளர், தனது மகள் பூப்பெய்தும் விழாவை சடங்குகளாக மாற்றாமல், அறிவியல் நிகழ்வாக மாற்றி நடத்தியிருக்கிறார். மகப்பேறு மருத்துவர், ஊட்டச் சத்து நிபுணர், உளவியல் மருத்துவர் களை அழைத்து, அறிவியல் விளக்கம் தரும் நிகழ்ச்சியாக அதை மாற்றியமைத்துள்ளார். “எனக்கு இது போன்று நிகழ்ந்தபோது என்னுள் பல கேள்விகள் எழுந்தன. உடல் மற்றும் உளரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்து என் அய்யங்களுக்கு எவரும் விடை தரவில்லை. இந்த நிலை என் மகளுக்கும் வந்துவிடக் கூடாது என்பதாகவே, இளம் பெண்களும்,...

ஜூலை 15 இல் விசாரணை தொடங்குகிறது: 7 தமிழர் விடுதலையில் சட்டச் சிக்கல் என்ன?–தியாகு

ஜூலை 15 இல் விசாரணை தொடங்குகிறது: 7 தமிழர் விடுதலையில் சட்டச் சிக்கல் என்ன?–தியாகு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்து, தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அடுத்த நாளே மத்திய காங்கிரஸ் ஆட்சி, அந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை வாங்கியது. வழக்கு மாநிலம் தொடர்பானது என்பதால் கலந்தாலோசனைக்காக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.மத்திய அரசோ கலந்தாலோசனை என்றாலே மத்திய அரசின் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்று வாதிடுகிறது. இரண்டும் ஒன்று என்றால், இரண்டுக்கும் வெவ்வேறு பிரிவுகளை சட்டம் உள்ளடக்கியிருப்பது ஏன் என்ற கேள்வியை தோழர் தியாகு எழுப்புகிறார். உச்சநீதிமன்றத்தில் ஜூலை 18இல் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் வழக்கு குறித்த விளக்கங்களை முன் வைக்கிறது இந்த கட்டுரை. திருப்பெரும்புதூரில் கடந்த 1991 மே 21ஆம் நாள் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதும், இது தொடர்பான கொலை வழக்கில் தடா சிறப்பு நீதிமன்றம் மொத்தமாக 26 தமிழர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்ததும், உச்ச நீதிமன்றம் அவர்களில் 19 பேரை விடுதலை செய்து, மூவருக்குத்...

வளர்ச்சியும் பார்ப்பனியமும்

வளர்ச்சியும் பார்ப்பனியமும்

இந்தியாவில் வறுமை கணிசமாக குறைந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஆனால், மக்களிடையே சமத்துவம் உருவாகியிருக்கிறதா? அதாவது, ஏற்றத்தாழ்வுகள் குறைந்திருக்கிறதா என்பதே முக்கிய கேள்வி! ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமூக சமுத்துவம் தான் – பெரியாரின் இலட்சியம். பெரியார் வாழ்நாள் முழுதும் போராடிய வகுப்புவாரி பிரதி நிதித்துவம் என்ற கொள்கையின் அடிநாதமே அனைத்து சமூகப் பிரிவினரையும் சமப்படுத்துவது தான். இந்தியாவின் உயர் அதிகார மட்டத்தில், பார்ப்பனர்களே கொடி கட்டிப் பறக்கிறார்கள். அவர்கள் கார்ப்பரேட்டுகளுடன் கைகோர்த்துக் கொண்டு,வெகு மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளின் இடைவெளிகளை மேலும் மேலும் அதிகப்படுத்தும் திட்டங்களையே உருவாக்குகிறார்கள். இந்தியாவில் “பொருளாதாரசீர்திருத்தம்” என்ற பெயரில், கடந்த 30 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட கொள்கைகள் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச் செய்துவிட்டது என்பதை புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. 2000ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்தியாவின் மொத்த சொத்து – செல்வங்களில் 66 சதவீதம், 10 குடும்பங்களிடமே தங்கியிருந்தது. இப்போது, இது 66-லிருந்து 74 சதவீதமாக அதிகரித்துவிட்டது. இதேபோல்...

தலையங்கம்-பெண்களும் நீதிமன்றங்களும்

தலையங்கம்-பெண்களும் நீதிமன்றங்களும்

பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுக்குள்ளான ஒரு நபரை சிறையிலிருந்து விடுவித்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சமரசம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடர்ந்திட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த ஆணை பலரையும் வியப்படையச் செய்தது. இந்த ஆணை கடும் விமர்சனங்களை எதிர் கொண்டது. இதைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து வந்த ஒரு பாலியல் வன்முறை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு நேர் எதிராக இருந்தது. இத்தகைய வழக்குகளை சமரசத் தீர்வு மய்யங்களுக்கு அனுப்பக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டது உச்சநீதிமன்றம். இதனால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, தான் பிறப்பித்த ஆணையைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்ட குற்றவாளி, மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுவிட்டார். இதேபோன்று, உயர்நீதிமன்றத்தில் மற்றொரு நிகழ்வு கடும் எதிர்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. ஆம்பூரைச் சார்ந்த பவித்ரா என்ற பெண், காணாமல் போனார் என்பதால், ஆம்பூரில் இஸ்லாமியர்களுக்கும் காவல்துறைக்குமிடையே பெரும் கலவரமே நடந்து முடிந்துள்ளது. அந்தப் பெண்ணின் கணவர் தந்த...