மன்னையில் கனல்மதியின் கவிதை நூல் அறிமுகம்

கல்வி வளர்ச்சி நாள் கருத்தரங்கில் 8ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி கனல்மதி எழுதிய ‘இப்படிக்கு மழை’ கவிதை நூல் அறிமுகம் நடந்தது. திருப்பூரில் அரசுப்பள்ளியில் தமிழ் வழிக் கல்வி படிக்கும் கனல் மதி, கழகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் கழகப் பொறுப்பாளர் முகில்ராசு, அறிவியல் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் சிவகாமி ஆகியோரின் மகள் ஆவார். நூல் அறிமுக நிகழ்வு எழுத்தாளர் மருதம் சோதி தலைமையில் நடந்தது. மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீனி. ஜெகவர்சாதிக் நூலை வெளியிட, தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தோழர் சேதுராமன் பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் பசு. கவுதமன் நூல் திறனாய்வு செய்தார். கவிதைகளை எழுதிய மாணவி கனல்மதி ஏற்புரை வழங்கினார்.

பெரியார் முழக்கம் 30072015 இதழ்

You may also like...

Leave a Reply