களப்பணியாளர் பயிலரங்கம்: ஒரு வேண்டுகோள்

2022 ஜூலை 23, 24, 25 ஆகிய மூன்று தினங்கள் கழகக் களப்பணி யாளர்களுக்கான பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் களப்பணியாற்றும் தோழர்கள் பங்கு பெறலாம். தோழர்கள் மாவட்ட பொறுப்பாளர்களின் ஒப்புதலுடன் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

மாவட்டப் பொறுப்பாளர்கள் 07.07.2022 தேதிக்குள் தங்கள் மாவட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கும் தோழர்கள் பட்டியலை 97894 56485 என்ற எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்புங்கள்.

குறைந்த அளவில் தோழர்களை வைத்து விரிவாக இப் பயிலரங்கம் நடத்திட தலைவர்,பொதுச் செயலாளர் இருவரும் திட்டமிட்டுள்ளதால் விரைவாக பெயர் பட்டியல் அனுப்பவும். அதிக தோழர்கள் இருப்பின் தலைமைக் குழு தேர்வு செய்யும் தோழர்கள் பயிலரங்கத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

பயிலரங்கம் திருச்சியில் ‘டி.எம்.எஸ்.எஸ்.’ நிறுவனத்துக்கான பயிற்சி அரங்கில் நடைபெறும்.

– பால்.பிரபாகரன்,  பரப்புரைச் செயலாளர்,  திராவிடர் விடுதலைக்கழகம்

 

பெரியார் முழக்கம் 30062022 இதழ்

You may also like...