Category: குடி அரசு 1936

பொய்! பொய்!!  வெறுக்கத் தக்க இழிவான

பொய்! பொய்!! வெறுக்கத் தக்க இழிவான

  பொய்!!! டாக்டர் அம்பத்கார் இன்னம் 10 வருஷத்துக்கு இந்து மதத்தை விட்டு விடும்படி பிரசாரம் செய்வதில்லை என்று காந்தியாரிடம் பிரமாணம் செய்து கொடுத்ததாக தேசிய (பார்ப்பன) பத்திரிக்கைகளில் வந்த செய்தி பொய்! பொய்!! முழுப்பொய்!!! என்று டாக்டர் அம்பேத்கார் தெரிவித்து விட்டார். குடி அரசு பெட்டிச் செய்தி 10.05.1936

காஞ்சீபுரம் தமிழர் மகாநாட்டுக்கு

காஞ்சீபுரம் தமிழர் மகாநாட்டுக்கு

ஈ.வெ.ரா. வேண்டுகோள் தோழர்களே! காஞ்சீபுரத்தில் ஜுன் கடைசி வாரத்தில் 38வது தமிழர் மாகாண மகாநாடு கூடப்போவதாக அறிகிறேன். அது விஷயமாய் எனக்கு வந்த கடிதங்களையும் குறிப்பாக தோழர் வி. ஓ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் எழுதிய கடிதத்தையும் பார்த்தேன். காஞ்சீபுரத்தில் 221125ந் தேதி கூட்டிய 31வது மகாநாடுதான், அதுவும் எனது தோழர் திரு. வி. கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் தலைமையில் கூடிய மகாநாடுதான் என்னை காங்கிரசை விட்டு விரட்டி சுயமரியாதை இயக்கத் தொண்டையும் பார்ப்பனரல்லாதார் இயக்கத் தொண்டையும் செய்யும்படி செய்தது. எதற்கு ஆக காஞ்சீபுரம் மகாநாட்டை விட்டு வெளியேறினேனோ அந்தக் காரியம் இப்பொழுது தமிழ் மக்களால் சரி என்று ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது என்றாலும் முழுதும் அது கை கூடுவதில் மற்றும் அனேக கஷ்டங்கள் இருந்து வருகின்றன. எதிரிகளின் எதிர்ப்பு முயற்சி ஓய்ந்தபாடில்லை. இதை அனேகர்கள் அதாவது காங்கிரசில் இருக்கும் பார்ப்பனரல்லாதார்களும் உணருகிறார்கள். ஆனால் பல காரணங்களால் அவர்களும் நானும் ஒத்து வேலை...

பாண்டியன் ராமசாமி  அறிக்கைக் கூட்டம்

பாண்டியன் ராமசாமி அறிக்கைக் கூட்டம்

  தலைவரவர்களே! தோழர்களே!! எங்களுடைய ஒரு சிறு சாதாரண பத்திரிகை விளம்பர அழைப்பை மதித்து இன்று இங்கு இந்த வெயில் காலத்தில் சென்னை முதல் திருநெல்வேலி ஈறாக வெகு தூரத்தில் இருந்து இவ்வளவு பேர்கள் அதாவது 300, 400 பேர்கள் விஜயம் செய்திருப்பதற்கு நான் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், இது எங்களுக்கு மிகவும் பெருமையும், நம்பிக்கையும் கொடுக்கக்கூடிய காரியமாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்தக் கூட்டம் பார்ப்பனரல்லாதார் அதாவது தென்னிந்திய நலவுரிமைச் சங்க (ஜஸ்டிஸ்) இயக்கத்தின் சம்மந்தமாய் அழைப்பு அனுப்பி, அவ்வியக்கத்தின் நன்மைக்கு ஏற்ற காரியங்களைச் செய்யவே கூட்டப்பட்ட கூட்டம் என்பதை அறிக்கையில் இருந்து நீங்கள் எல்லோரும் அறிந்ததேயாகும். ஆனால் அவ்வியக்கத்திற்குச் சம்மந்தப்பட்டவர்கள் அதாவது அவ்வியக்கத்தின் பேரால் பட்டம் பதவி பெற்று, ஆயிரக்கணக்கான சம்பளங்களும், லக்ஷக்கணக்கான பணங்களும், பட்டங்களும் அனுபவித்தவர் களும், அனுபவிப்பவர்களும், அதனாலேயே பிழைப்பவர்களும், பெரு வாழ்வு வாழ்பவர்களும் ஆன பெருமான்கள் யாராவது இன்று இங்கு வந்திருக்கிறார்களா...

உஷார்! உஷார்!! உஷார்!!!

உஷார்! உஷார்!! உஷார்!!!

மறுபடியும் தென்னாட்டிற்கு (காங்கிரஸ் தலைவர்களை) வடநாட்டு ஆசாமிகளைக் கூட்டி வந்து உங்களை ஏய்க்கப் போகிறார்கள். இதைத் தவிர தென்னாட்டு பார்ப்பனர்களுக்கு இப்போது தேச சேவை வேறு கிடையாது. தோழர்களே! ஏமாந்து விடாதீர்கள் ஏமாந்து விடாதீர்கள். குடி அரசு பெட்டிச் செய்தி 03.05.1936

பார்ப்பனக் கிளர்ச்சி

பார்ப்பனக் கிளர்ச்சி

சென்னை மாகாணத்திலே வருஷந்தோறும் எத்தனையோ பேர் கொலைக் குற்றத்துக்கும், கொள்ளைக் குற்றத்துக்கும் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் அதற்காக எந்த சமூகமும் ஒன்றாகத் திரண்டு புரளி செய்தது கிடையாது. பெயர் பெற்ற கருங்குழிப் பிரதேசப் பார்சல் வழக்கில் தோழர் ராமநுஜய்யங்காருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது தென்னாட்டுப் பார்ப்பன சமூகம் ஒன்றாகத் திரண்டெழுந்தது. சென்னையில் பிரபலம் பெற்ற பார்ப்பன லாயர்கள் எல்லாம் அந்தக் கேசில் கவனம் செலுத்தலாயினர். ஹைக்கோர்ட்டு செஷன்சில் அவ்வழக்கு விசாரணை நடந்தது. மேல் ஹைக்கோர்ட்டில் அப்பீல் செய்ய விசேஷ அனுமதி வேண்டுமாம். பிரஸ்தாப வழக்கின் போக்குக்கு விசேஷ அனுமதியளிக்கவே இடமில்லையாம். எனினும் விசேஷ அனுமதியளிக்கும் அதிகாரமுடையவர் கிளர்ச்சி செய்யும் சமூகத்தைச் சேர்ந்தவராயிருந்ததினால் விசேஷ அனுமதியும் கிடைத்தது. ஹைகோர்ட் புல் பெஞ்சில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஹைக்கோர்ட்டு செஷன்ஸ் தீர்ப்பில் தலையிடத் தமக்கு அதிகாரமில்லையென்று புல் பெஞ்சு தீர்ப்பும் பிறந்தது. அப்பால் பிரிவி கௌன்சிலுக்கு அப்பீல் அனுமதி கோரப்பட்டது. அதற்கும் சென்னை ஹைக்கோர்ட்டார்...

நம்மவர் கோழைத்தனம்

நம்மவர் கோழைத்தனம்

தோழர் சுபாஷ் சந்திரபோஸைக் கைது செய்து, விசாரணையின்றிச் சிறையிலடைத்து வைத்திருப்பதை அழுத்தமாய்க் கண்டிப்பதாக ஒரு தீர்மானம் கொண்டுவர அனுமதி வேண்டுமென்று சென்னை நகரசபை மெம்பர் தோழர் தாமோதரம் நாயுடு ஏப்ரல் 28ந் தேதி மாலை சென்னை நகரசபைக் கூட்டத்தில் ஒரு பிரேரணை கொண்டுவந்தார். இம்மாதிரிப் பிரேரணைகளுக்கு, நகரசபையில் பிரசன்னமாயிருக்கும் மெம்பர்களில் முக்கால்வாசிப் பேர் ஆதரவளித்தால்தான் சட்டப்படி அநுமதி கொடுக்க முடியும். ஆகவே மேயர் பிரேரணையை ஓட்டுக்கு விட்டார். 18 பேர் சாதகமாகவும், 7 பேர் பாதகமாகவும் ஓட்டுக் கொடுக்க 6 பேர் நடுநிலைமை வகித்தனர். எனவே பிரேரணை தோற்றுப் போய்விட்டதாக மேயர் தெரிவித்தார். உடனே தோழர் சக்கரை செட்டியார் எழுந்து சபையில் பிரசன்னமாயிருந்த அங்கத்தினர் 25 பேரில் 18 பேர் பிரேரணைக்குச் சாதகமாக ஓட் செய்திருக்கின்றனரென்றும், 25ல் முக்கால்வாசிப் பேர்கள் என்பது 18லு பேர்கள் என்றும், ஒரு நபரில் லு மனிதன் என்பது கருதக்கூடாத விஷய மென்றும் ஆதலின் பிரேரணைக்கு சபை...

ஜின்னாவின் உபதேசம்

ஜின்னாவின் உபதேசம்

சமூகமே முதலாவது “முதலில் சமூக நன்மையை கவனிப்பவனாகவும், இரண்டாவதாக தேச நன்மையைக் கருதுபவனாகவும், மூன்றாவதாகவே சுயநன்மையைக் கருதுபவனாகவும் இருக்கிறவனையே தேர்தல்களில் தெரிந்தெடுங்கள்” என்று தோழர் ஜின்னா அவர்கள் டெல்லி முஸ்லீம்கள் கூட்டத்தில் உபதேசம் செய்திருக்கிறார். அதையே நாமும் சொல்லுகிறோம். மனித சமூகத்துக்குப் பிறகு தான் தேசமாகும். பித்தலாட்டக்காரர்களும், பிழைக்க வேறு வழியற்றவர்களும் தான் மனிதன் மனிதனால் நாயிலுங் கேடாக மதிக்கப்படுவதை மறந்து தேசத்தைப் பற்றி பேசுவான். இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாய் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால், அவனுக்கு கடுகளவு சுயமரியாதையாவது இருக்குமானால் அவன் மனித இழிவை போக்கத்தான் முதலில் பாடுபடுவான். முடியாவிட்டால் அந்த தேசத்தையே நெருப்பு வைத்து பொசுக்கவே பாடுபடுவானே ஒழிய கேவலம் தான் சொந்தப் பிழைப்புக்கு ஆக இவைகளை மறைத்துக் கொண்டு தேச பக்த வேஷம் போடமாட்டான். இதை உணர்ந்து தான் தோழர் ஜின்னா முதலாவது சமூகம் என்றார். இதை போலி தேச...

வேலூர் ஜில்லா போர்டுக்கு ஜே!  அப்துல் ஹக்கீம்கு ஜே!!

வேலூர் ஜில்லா போர்டுக்கு ஜே! அப்துல் ஹக்கீம்கு ஜே!!

  சௌகார் அப்துல் ஹக்கீம் சாயபு அவர்கள் வேலூர் ஜில்லா போர்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அவர் கோடீஸ்வர செல்வவான், தாராளமாய் தர்மம் செய்யும் தயாளவான், கட்சி பிரதிகட்சி சார்பில்லாமல் தனக்கு தோன்றியபடி நடந்து கொள்ளுபவர் என்றாலும் பார்ப்பனர்களுக்கு மிகவும் வேண்டியவராயும் காங்கிரசுக்கு தாராளமாக கேட்டபோதெல்லாம் பணம் உதவிக் கொண்டும் இருந்து வந்தவர். ஜஸ்டிஸ் கட்சியில் பற்றில்லாதவராகவும் இருந்தவர். இப்படி இருந்தும் பாம்புக்கு பால் வார்த்த பயன்போல் பார்ப்பனர்கள் இவருக்கு தொந்திரவு கொடுக்க ஆரம்பித்து அவர் வேலூர் ஜில்லா போர்டுக்கு ஒரு மெம்பராகக்கூட வருவதற்கு இல்லாமல் செய்ய பலமாய் முயற்சித்து இவருக்கு போட்டியாக ஒரு முஸ்லீமை நிறுத்தி முஸ்லீம்களுக்குள் கட்சி உண்டாக்கினார்கள். தோழர் அப்துல் ஹக்கீம் அவர்கள் இவற்றையெல்லாம் லட்சியம் செய்யாமல் தன் இஷ்டப்படியே செய்ததுடன் “நான் ஜஸ்டிஸ் கட்சி சார்பாகவே நிற்கிறேன், என்னை யார் என்ன செய்யக்கூடும்” என்று வீரம் பேசினார். “பல கூட்டங்களில் யார் என்ன செய்தாலும் நான் பிரசிடெண்டாய்...

காங்கிரசுக்காரர்கள் பிரதிநிதிகளாவார்களா?

காங்கிரசுக்காரர்கள் பிரதிநிதிகளாவார்களா?

ஜனப்பிரதிநிதிகள் என்பவர்கள் ஜனங்களுக்குத் தெரிந்தவர்களாகவும், ஜனங்களிடம் உண்மையைச் சொல்லி ஓட்டுக் கேட்பவர்களாகவும் இருக்க வேண்டும். ஆனால் நமது காங்கிரஸ்காரர்கள் எலக்ஷனில் “வெற்றி” பெற்றார்கள் என்றாலும் ஜனங்களுக்குத் தெரிந்தவர்களா? ஜனங்களிடம் உண்மை பேசி ஓட்டுப் பெற்றவர்களா? என்பது கவனிக்கத்தக்கதாகும். காங்கிரசுக்காரர்கள் கொள்கை இன்னது என்று அநேக மக்களுக்குத் தெரியவே தெரியாது. உண்மையிலேயே காங்கிரசுக்கும் இன்னதுதான் எலக்ஷன் கொள்கை என்பதாக ஒன்று இல்லவே இல்லை. காங்கிரசுக்காரர்கள் ஓட்டுக் கேட்பதை காந்திக்கு ஓட்டுப் போடுங்கள் என்பதாக கேட்பது. ஜெயிலுக்கு (யாரோ) போனவர்கள் ஆதலால் (யாருக்கோ) ஓட்டுப் போடுங்கள் என்பது. பொய்யையும் அன்னியர் மீது அநியாயப் பழிகளையும் கூறி ஓட்டுக் கேட்பது. மூட நம்பிக்கையான மதப்பிரசாரம் செய்து அதை அரசியலுடன் பொருத்தி ஓட்டுக் கேட்பது. பெண்களைத் தனிமையில் அனுப்பி முக்கியஸ்தர்களை வசப்படுத்துவது. அபேக்ஷகர்கள் யார்? அவர்கள் யோக்கியதை என்ன? முன்பின் நடத்தை என்ன? என்பதை மூடிவைத்து ஓட்டு வாங்குவது. தங்கள் அதிகாரத்திற்குச் சம்மந்தமில்லாத காரியங்களைச் செய்வதாகச் சொல்லி...

அசம்பளியில் வெண்ணெய் வெட்டிகள்

அசம்பளியில் வெண்ணெய் வெட்டிகள்

“அரசியல் என்பது யோக்கியமான வழியில் வாழ்க்கை நடத்தத் தகுதியற்றவர்களின் கடைசி வயிற்றுப்பிழைப்பு மார்க்கம்” என்பதாக மேல்நாட்டு அறிஞர் ஒருவர் கூறியிருப்பது யாவரும் அறிந்ததே யாகும். அதை நமது நாட்டு பார்ப்பன தேசீய வாதிகள், தேசாபிமானத் தலைவர்கள் என்பவர்கள் மெய்ப்பித்துக்காட்டி விட்டார்கள். வக்கீல் வேலையிலும், வியாபாரத்திலும், தாசித்தொழிலிலும் பிரவேசிக்கின்றவர்களுக்கு எப்படி நாணயம், ஒழுக்கம், சத்தியம் முதலியவைகள் வேண்டியதில்லையோ இருக்க முடியாதோ இருக்கக்கூடாதோ அது போல் நமது தேச பக்த கூட்டங்களுக்கும், தேசீயத் தலைவர்களுக்கும் நாணயமும், ஒழுக்கமும், சத்தியமும் சிறிதுகூட இல்லாமல் போய் விட்டன. இவர்களுக்கு வேண்டிய தெல்லாம் எப்படி பாமர மக்களை ஏய்ப்பது, எந்த இழிவான காரியம் செய்தாவது ஸ்தானங்களைக் கைப்பற்றுவது என்கின்ற இரண்டு காரியங்களேயாகும். ஆதலால் நம் தேசீயத் தலைவர்கள் இந்த இரண்டு காரியங்களிலும் முதல் நெம்பர் கெட்டிக்காரர்களாகி இன்று அரசியலில் தலை சிறந்து விளங்குகிறார்கள். இந்தக்கூட்டத்தாரின் தேசாபிமானமும், தேசீய வெற்றியுமெல்லாம் பாமரமக்கள் சரியானபடி ஏய்க்கப்பட்டார்களா, அரசியல் பதவிகள் எல்லாம் தங்கள்...

கடவுள்

கடவுள்

வினா: கடவுளைப்பற்றிப் பொதுவாக ஜனங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை விளக்கிக் கூறு. விடை: கடவுள் வான மண்டலத்தையும், பூமியையும், அதிலுள்ள சகல சராசரங்களையும் படைத்தவன் என்று மக்களில் பெரும்பாலார் நம்புகிறார்கள். வினா: அப்புறம்? விடை: கடவுள் சர்வஞானமுடையவனாம், யாவற்றையும் பார்க்கிறானாம். பிரபஞ்ச முழுதும் அவனது உடமையாம். சர்வ வியாபியாம். வினா: கடவுள் ஒழுக்கத்தைப்பற்றி ஜனங்கள் என்ன சொல்லுகிறார்கள். விடை: அவன் நீதிமானாம்; புனிதனாம். வினா: வேறு என்ன? விடை: அவன் அன்பு மயமானவனாம். வினா: கடவுள் அன்பு மயமானவனென்று ஜனங்கள் எப்பொழுதும் நம்புகிறார்களா? விடை: இல்லை. மக்கள் அறிவும் ஒழுக்கமும் உயர உயர கடவுள் யோக்கியதையும் விருத்தியடைந்து கொண்டே போகிறது. வினா: உன் கருத்தை நன்கு விளக்கிக் கூறு. விடை: காட்டாளன் கடவுள் ஒரு காட்டாளனாகவும், திருடனாகவும் இருந்தான். அராபித் தலைவன் கடவுளான ஜாப் ஒரு கீழ் நாட்டு யதேச்சாதிகாரியாக இருந்தான். யூதர்கள் கடவுள் போர் வெறியனாயும் பழிக்குப்பழி வாங்கும் குணமுடையவனாகவும் இருந்தான்....

இஸ்லாம் மார்க்கத்துக்கும்  இந்து மதத்திற்கும் உள்ள  ஒற்றுமை அற்ற தன்மை

இஸ்லாம் மார்க்கத்துக்கும் இந்து மதத்திற்கும் உள்ள ஒற்றுமை அற்ற தன்மை

    இஸ்லாம் மத ஒழுக்கம் மதுபானம் கூடாது. சூதாடுதல் கூடாது. விபசாரம் கூடாது. வட்டி வாங்குதல் கூடாது. போர் செய்தல் கூடாது. ~subhead இந்து மத ஒழுக்கம் ~shend கடவுள்களுக்கு மது படைக்கவேண்டும். (ராமாயணம்) அரசர்க்கு சூது உரியது. (பாரதம்) கடவுள்களே விபசாரம் செய்திருக்கின்றன. (கிருஷ்ணன், முருகன்) விபசாரிகளை அனுமதிக்கின்றன. (தேவதாசிகள் முறை) வட்டி வாங்குவது வருணாச்சிரம முறை. (வைசிய தர்மம்) கடவுள்கள் யுத்தம் செய்திருக்கின்றன. யுத்தம் அரச நீதி, அரச தர்மம். (கந்தப்புராணம், பாரதம், ராமாயணம்) மதக்கொள்கைகள், திட்டங்கள் ஆகியவைகளில் இந்து மதம், இஸ்லாம் மதம், கிருஸ்தவ மதம் ஆகிய மதங்கள் எல்லாம் ஒன்றே. ~subhead கடவுள் ~shend இந்து மதத்தில் பல கடவுள்கள் உண்டு. இஸ்லாம், கிறிஸ்து மதங்களில் ஒவ்வொரு கடவுள் தான் உண்டு. ~subhead கடவுள் சாயல் ~shend இந்துமதம் கடவுளை மனிதனாகவே மனித ரூபகமாகவே பாவிக்கிறது. இஸ்லாம்மதம் கடவுளை மனிதனாகக் கூறுகிறது. அதாவது கடவுளை...

தர்மம் அல்லது பிச்சை

தர்மம் அல்லது பிச்சை

தர்மம் அதாவது ஏழைகளுக்கு பிச்சை இடுதல் முதல் மற்றவர்களுக்கு பலவித உதவிகள் செய்வது என்பது வரை அனேக விஷயங்கள் தர்மத்தின் கீழ் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி தர்மத்தைப் பற்றி எல்லா மதங்களுமே முறையிடுகின்றன. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் முதலிய மதங்களில் இந்த தர்மத்தை பிச்சை கொடுத்தலை மிக நிர்ப்பந்தமாக கட்டாயப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது. எப்படி எனில் தர்மம் கொடுக்காதவன் பாவி என்றும் அவன் நரகத்துக்கு போவான் என்றும், கடவுள் அவனை தண்டிப்பார் என்றும் இப்படியெல்லாம் பயமுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. இவை கடவுள் வாக்கெனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்து மதம் என்பதில் தர்மத்தை 32 விதமாக கற்பித்து 32 தர்மங் களையும் ஒருவன் செய்ய வேண்டும் என்றும், அந்தப்படி செய்தால் அவனுக்கு இன்ன இன்ன மாதிரி புண்ணியம் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, அறம் 32. ஒரு மனிதன் சத்திரம், படிப்பவர்களுக்கு சாப்பாடு, பக்தர்களுக்கு உணவு, பசுவுக்கு வாயுறை, கைதிகளுக்கு சாப்பாடு, இரப்பவர்களுக்கு பிச்சை, தின்பண்டம், அநாதிகளைக்...

மனித சமூக உறவு முறை

மனித சமூக உறவு முறை

மக்கள் சமூகத்தில் சொந்தம் பாராட்டவும், சொத்துக்கள் அனுபவிக்கவும், கலவிகள் செய்யவும், உறவு முறை என்பதாக ஒரு நியதி ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. அந்நியதிக்கு எவ்வித கொள்கையும், ஆதாரமும் இல்லாமலும் உலகமெங்குமுள்ள மனித சமூகத்தில் ஒரே விதமான உறவு முறை அனுஷ்டிக்கப்படாமலும், தேசாச்சாரம், ஜாதியாச்சாரம், மதாச்சாரம், பழக்கம், வழக்கம் என்கின்ற பலவகையான மார்க்கத்தைப் பின் பற்றியே உறவு முறைகள் கையாளப்படுகின்றன; யாதொரு நியாயமும் காரணமும் சொல்லப்படாமலே பின்பற்றப்படுகின்றன. அவ்வளவோடு மாத்திரமல்லாமல் இம்முறைகள் சிறிதும் தவறாமல் மிகவும் ஜாக்கிரதையாய் கையாளப்பட வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தங்களுக்கும் ஆளாகியிருக்கின்றன. ஆகவே, இவைகளையெல்லாம் பார்த்தால் உறவு முறைகள் என்பது அர்த்தமற்ற பழக்க வழக்கத்தில் கட்டுப்பட்டதாகவும், குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகவுந்தான் காணப்படுகின்றனவே தவிர அவசியங்களை அறிந்து கொண்டதாகக் கருத முடியவில்லை. உதாரணமாக, சகோதரர்கள் விஷயத்தில், ஆண் சகோதர உறவுக்கு ஒரு முறையும், பெண் சகோதர உறவுக்கு ஒரு முறையும் கையாளப்பட்டு வருகிறது. ஆண் சகோதரன் வயிற்றில் பிறந்த குழந்தைகளை...

கிராமப் புனருத்தாரணப் புரட்டு

கிராமப் புனருத்தாரணப் புரட்டு

இப்பொழுது காங்கிரஸ்காரர்களும் சிறப்பாக காந்தியார், ஜவகர்லால் பண்டிதர் முதலியவர்களும் புதிய மார்க்கம் ஒன்று கண்டுபிடித்து இருக் கிறார்கள். தீண்டாமை, மதுவிலக்கு, இந்து முஸ்லீம் ஒற்றுமை, கதர் ஆகிய காரியங்கள் சுயராஜ்ஜியத்துக்கு மார்க்கம் என்று சொன்னவைகள் இப்பொழுது மக்களின் பகுத்தறிவு என்னும் சண்டமாருதத்தில் சிக்கி சின்னா பின்னப்பட்டுப் போயிற்று. இனி இவைகளின் பேரால் மக்களை ஏய்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. புதிய வழி அதாவது தீண்டாதவர்கள் முன்னேற்றம் என்பதும் ஒரு 20, 30 லக்ஷம் ரூபாய் சம்பாதிக்க முடிந்ததே ஒழிய மற்றபடி அது தீண்டாதவர்கள் இந்து மதம் விட்டு வேறு மதம் புகவேண்டியதுதான் மார்க்கம் என்னும் நிலைக்கு வந்துவிட்டது. இப்போது பார்ப்பனர்களுக்கு சமதர்ம வீரர் என்னும் பண்டித ஜவஹர்லால் நிழலில் வாழவேண்டியதைத் தவிர வேறு மார்க்கம் இல்லாமல் போய்விட்டது என்றாலும் புதிய முறையில் மக்களை ஏமாற்ற கிராமப் புனருத்தாரணம் என்கின்ற ஒரு புரட்டைக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அப்புரட்டை வெளியாக்க எழுதிய ஒரு வியாசம் அளவுக்குமேல்...

தோழர் டி.வி. பிரிவு

தோழர் டி.வி. பிரிவு

ஜஸ்டிஸ் கட்சி ஊழியர்களில் தலை சிறந்தவரான தோழர் டி.வி. சுப்பிரமணியம் சென்ற 21ந் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9.20 மணிக்கு சென்னையில் காலமானதை யறிந்து வருந்துகிறோம். ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பமான நாள் முதல் இறக்கும் வரை கட்சிக்கு இடையறாத தொண்டாற்றியவர்களுள் தோழர் டி.வி.யும் ஒருவர். கட்சிக்கும் தனக்கும் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள் நேர்ந்த காலத்தும் அவர் கட்சியைக் காட்டிக் கொடுக்கவில்லை; கட்சியை விட்டுப் பிரியவுமில்லை. வசைமாரியையும், கல்மாரியையும், மண்மாரியையும் பொருட்படுத்தாமல் மேடையேறி வீரமுழக்கம் செய்வதற்கு அவருக்கு இருந்தது போன்ற நெஞ்சழுத்தம் அதிகப் பேருக்கு இருக்க முடியாது. கட்சிப்பிரசாரம் செய்ய தீரமும் திறமையும் உடைய ஊழியர்கள் ஏராளமாகத் தேவைப்படும் இக்காலத்தில் அவரது பிரிவு கட்சிக்கு நஷ்டமேயாகும். குடி அரசு இரங்கற் செய்தி 26.04.1936

பாண்டியன் ராமசாமி அறிக்கை

பாண்டியன் ராமசாமி அறிக்கை

திருச்சியில் கூட்டம் 26-1-36ந் தேதி குடி அரசில் வெளியான பாண்டியன் ராமசாமி அறிக்கையின் படி கூட்டப்படவேண்டிய கூட்டம் மே மாதம் 3ந் தேதி ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் கூட ஏற்பாடு செய்திருக்கும் விஷயம் முன்னமேயே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அக்கூட்டம் 3536ந் தேதி திருச்சியில் தோழர்கள் டி.பி. வேதாசலம், கே.எ.பி. விஸ்வநாதம் ஆகியவர்கள் முயற்சியில் தென்னூர் பழனிச்சாமி பிள்ளை பங்களாவில் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டம் ஒரு கூட்டத்தாருக்கு முக்கியமானதொரு கூட்டம் என்பதைப் பற்றி நாம் விவரிக்க வேண்டியதில்லை. பார்ப்பனரும் பார்ப்பனக் கூலிகளும் இதை பரிகசிக்கக்கூடும். அது அவர்களது ஜாதிப்புத்தியும் இழி சுபாவமுமாகும். பார்ப்பனரல்லாதார் சமூக முன்னேற்றத்திற்கு என்றே ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சியானது இந்த 20 வருஷ காலமாக தென் இந்தியாவில் எவ்வளவோ வேலை செய்து வந்திருக்கிறது. சமூகத் துறையில் இதுவரை எந்தக் கட்சியாரும் எந்த தனிப்பட்ட பெரியாரும் எந்த அரசாங்கமும் செய்திருக்காத செய்ய நினைக்கவும் இல்லாத அளவு காரியங்களைச் செய்து ஒரு...

கொச்சி சமஸ்தானத்தில் பிரசங்கம்  வாலிபர்களே உலக முற்போக்குக்கும்  உலக பிற்போக்குக்கும் காரணஸ்தர்கள்

கொச்சி சமஸ்தானத்தில் பிரசங்கம் வாலிபர்களே உலக முற்போக்குக்கும் உலக பிற்போக்குக்கும் காரணஸ்தர்கள்

  அன்புள்ள தோழர்களே! கொச்சி ராஜ்ஜிய தீயர் வாலிப சங்கச் சார்பாக உங்களைப் பல ஆயிரக்கணக்கில் சந்திக்க நேர்ந்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுடைய அன்பும், உணர்ச்சியும் மிகுந்த ஆடம்பரமான வரவேற்புகளையும், புகழ் வார்த்தைகளையும் கண்டு நான் வெட்கமடைய வேண்டியவனாய் இருக்கிறேன். அவைகள் உண்மையிலேயே எனது தகுதிக்கு மேற்பட்டவையாகும். என்றாலும் என்னிடம் உங்களுக்கு உள்ள விஸ்வாசத்துக்கு நான் பெருமை அடைவதோடு எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ~subhead வைக்கம் சத்தியாக்கிரகம் ~shend வைக்கம் சத்தியாக்கிரகத்தைப்பற்றி பிரஸ்தாபித்தீர்கள். இளம் ஆண்களும் பெண்களும் ஏராளமாய் நிறைந்த இந்த கூட்டத்தையும் குதூகலத்தையும் பார்க்கும் போது வைக்கம் சத்தியாக்கிரகம் தானாகவே எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. வைக்கம் சத்தியாக்கிரகமே முதல் முதலாக உங்களையும் என்னையும் சந்திக்க வைத்தது என்பது மாத்திரமல்லாமல் அந்த சத்தியாக்கிரகமானது நம்மை ஒன்றாகக் கட்டி பிணைத்து விட்டது. அந்த வைக்கம் சத்தியாக்கிரகம் செய்த வேலைதான் இன்று இந்தியா பூராவுக்கும் சமுதாயத் துறையில் ஒரு புதிய உணர்ச்சியை...

மனிதன்

மனிதன்

வினா: மனிதன் என்றால் என்ன? விடை: பகுத்தறிவுள்ள ஒரு பிராணி. வினா: மனிதன் தோன்றி எவ்வளவு காலமாயிற்று? விடை: லட்சக்கணக்கான வருஷங்களாயிற்று. வினா: அவனுடைய பூர்வீகர் யார்? விடை: முலையுண்ணும் பிராணிகள். வினா: அது உனக்கு எப்படித் தெரியும்? விடை: மக்கள் உறுப்புகளின் அமைப்பு, கலப்பு, வேலை முறை முதலியவைகளைக் கவனித்தால் மனிதனும் ஒரு பிராணிக்கு ஒப்பாகவே இருக்கிறான். வினா: மனிதனுக்கும் பிராணிகளுக்கும் பொதுவாக இருக்கும் சில அம்சங்களை விளக்கிச் சொல். விடை: மற்றப் பிராணிகளுக்கு இல்லாத தசை நாரோ, எலும்போ, உறுப்புகளோ மனிதனுக்கு இல்லவே இல்லை. வினா: இவ்வளவுதானா? விடை: மனித உடலும் மிருக உடலும் ஒரே மாதிரிப் பொருள் களாலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு உடல்களிலும் ஒரே மாதிரியான அங்க அமைப்பே காணப்படுகின்றன. இரண்டு உடல்களும் ஒரே மாதிரியான ஜனன மரண விதிகளுக்கே கட்டுப்பட்டிருக்கின்றன. வினா: இதர பிராணிகளுக்கும் மனிதனுக்கும் ஏதாவது வித்தியாச முண்டா? விடை: அறிவிலும் ஒழுக்கத்திலும் மனிதன்...

மே தினக் கொண்டாட்டம்

மே தினக் கொண்டாட்டம்

சர்வ தேசங்களிலுமுள்ள தொழிலாளர்கள் ஆண் பெண் அடங்கலும் மே 1ந் தேதியை தொழிலாளர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். ரஷியாவில் தொழிலாளர் தங்களது ஓரளவு வெற்றியை நினைத்து வெற்றி தினமாகக் கொண்டாடுகிறார்கள். மற்ற தேசங்களில் தொழிலாளர் குறைபாடுகளை வெளிப்படுத்தி உலக அரசியலிலும், சமூக இயலிலும் தொழிலாளர்கள் சமத்துவமும் ஆதிக்கமும் பெறவேண்டுமென்று ஆசைப்பட்டு மே தினம் கொண்டாடுகிறார்கள். இந்தியர்களாகிய நாமும் சமூகத்துறையில் ஜாதி மத இழிவிலிருந்தும், பொருளாதாரக் கொடுமையில் இருந்தும் விடுதலை பெறவும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி பொதுக்கூட்டம் கூட்டி நமது இழிவையும், கொடுமையையும் எடுத்துச் சொல்லி சகல மக்களுக்கும் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் கிடைக்கவேண்டுமென்று விளக்கிக் கொண்டாட வேணுமாய் வேண்டிக் கொள்ளுகிறேன். – ஈ.வெ.ராமசாமி குடி அரசு அறிக்கை 19.04.1936

காங்கிரஸ் கபட நாடக முடிவு

காங்கிரஸ் கபட நாடக முடிவு

சென்ற வாரம் காங்கிரஸ் கூட்டம் என்பது ஏமாற்றுந் திருவிழா என்றும், அதன் நடவடிக்கைகள் கபட நாடகம் என்றும், அதற்கு முக்கிய பாத்திரங்கள் தோழர்கள் காந்தி, ராஜகோபாலாச்சாரி, ஜவஹர்லால் நேரு ஆகிய மூவர்கள் என்றும் விளக்கிவிட்டு அதன் பயன் இன்னதாகத்தான் இருக்கும் என்றும் எடுத்துக்காட்டியிருந்தோம். இப்பொழுது அவ்வேமாற்றுந் திருவிழா முடிவடைந்த பிறகு நாம் எழுதியது எவ்வளவு சரி என்பதும், கட்டுப்பாடாக பாமரமக்கள் எப்படி ஏய்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் நன்றாய் விளங்கும். தோழர் காந்தியார் பெயரளவில் அங்கு வந்து இருந்து கொண்டு, காரிய அளவில் தோழர் ராஜகோபாலாச்சாரியார் இஷ்டப்படியே எல்லாக் காரியங்களும் நடைபெற, ஆயுத அளவில் தோழர் ஜவஹர்லால் உதவியாயிருந்து காரியங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்தக் காங்கிரசில் மூன்று விஷயங்கள் முக்கிய லக்ஷிய விஷயங்களாக பிரஸ்தாபிக்கப்படும் என்றும், அவை இன்ன கதிதான் அடையும் என்றும் சென்ற வாரமே பிரஸ்தாபித்திருந்தோம். அதாவது, சீர்திருத்தத்தை என்ன செய்வது? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை என்ன செய்வது? மந்திரி பதவிகளை என்ன செய்வது?...

பகுத்தறிவும் கடவுள் வாக்கும்

பகுத்தறிவும் கடவுள் வாக்கும்

வினா: மதம் என்றால் என்ன? விடை: உண்மையில் நம்பிக்கை. வினா: உண்மை என்றால் என்ன? விடை: ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய பரிபூரணமான ஞானமே உண்மை. வினா: உண்மையில் நம்பிக்கை என்றால் என்ன? விடை: அப்பேர்ப்பட்ட பூரண ஞானம் வாழ்க்கையின் உயரிய லக்ஷ்யத்தைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானது என்ற நம்பிக்கையே உண்மையில் நம்பிக்கை எனப்படும். வினா: உண்மையில் உள்ள நம்பிக்கையை எப்படி நிரூபித்துக் காட்டுவது? விடை: தன் உயர்வான தெளிந்த அறிவுக்குப் பொருத்தமாக நடப்பதினால் நிரூபித்துக் காட்டலாம். வினா: உண்மை அல்லது பரிபூரண ஞானத்தை எப்படி அடைவது? விடை: அநுபவத்தினாலும், பயிற்சியினாலும் அடையலாம். வினா: வேறு வழியில்லையா? விடை: இல்லை. வினா: மதத்தைப்பற்றி நீ கூறிய வியாக்கியானம் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட வியாக்கியானம் தானா? விடை: தெய்வ நம்பிக்கையும் தெய்வ அருளைப் பெற்ற மதாசிரியர்கள் வகுத்த விதிகளில் நம்பிக்கையுமே பொதுவாக மதம் என மதிக்கப்படுகிறது. வினா: தெய்வீகம் என்றால் என்ன? விடை:...

காங்கிரஸ்காரர் யோக்கியதை

காங்கிரஸ்காரர் யோக்கியதை

வரப்போகும் அரசியலை நிராகரிப்பதாகக் கூறிக்கொண்ட காங்கிரஸ்காரர்கள், சீர்திருத்த சம்பந்தமான எத்தகைய வேலையிலும் பங்கு கொள்வதில்லையென்று முடிவுசெய்திருந்தார்கள். மாகாண தொகுதி நிர்ணயக் கமிட்டிகளிலும் அவர்கள் ஸ்தானம் வகிக்கவில்லை. சென்னை மாகாணத் தொகுதி நிர்ணயக்கமிட்டியில் தோழர் ஸி.ஆர். ரெட்டியாருக்கு சென்னை சர்க்கார் வெகு கண்யமாக ஸ்தானம் வழங்கியபோது, சீர்திருத்த சம்பந்தமான வேலைகளில் பங்கு கொள்வதில்லையென்று காங்கிரஸ் தீர்மானித்திருப்பதினால் மாகாணக் கமிட்டியில் ஸ்தானம் வகிக்க முடியா தென்று காரணம் கூறி, தமக்களித்த பதவியை ராஜிநாமாச் செய்துவிட்டார். இப்பொழுது ஹாமண்டு அறிக்கை விஷயமாக காங்கிரஸ்வாலாக்கள் சர்க்காரோடு ஒத்துழைத்திருக்கிறார்கள். ஹாமண்டு அறிக்கையைப் பரிசீலனை செய்த கமிட்டியில் அசம்பிளி காங்கிரஸ் மெம்பர்கள் அங்கம் வகித்தார்கள். அந்தக் கமிட்டி அறிக்கையை அசம்பிளி ஆதரிக்க வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தவரும் காங்கிரஸ் மெம்பரான தோழர் பந்துவே. இம்மாதிரி முன்னுக்குபின் முரணாக நடந்துகொள்ளும் காங்கிரஸ்காரருக்கு எள்ளத்தனையாவது நாணயமோ யோக்கியப் பொறுப்போ இருக்க முடியுமா? என்று கேட்கிறோம். குடி அரசு துணைத் தலையங்கம் 12.04.1936

லக்னோவில் ஏமாற்றுந் திருவிழா  அல்லது  காங்கிரசின் கபட நாடகம்

லக்னோவில் ஏமாற்றுந் திருவிழா அல்லது காங்கிரசின் கபட நாடகம்

  காங்கிரஸ் மகாநாடுகள் என்பவை ஏமாற்றும் திருவிழாக்கள் என்றும், கபட நாடக நடிப்பு என்றும் 10, 12 வருஷ காலமாகவே கூறி வருகின்றோம். அதற்கு ஏற்பவே இன்று லக்னோவில் அவ்வேமாற்றத் திருவிழாவானது நாடக முறையில் நடைபெறுகிறது. அந் நாடகத்திற்கு மூவர் முக்கியமானவர்களாகத் திகழ்கின்றனர். ஒன்று சூத்திரதார் ஸ்தானத்தில் அமர்த்தப்பட்ட தோழர் காந்தியாராவார். இரண்டு நாடகத்தின் முக்கிய பாத்திரம் ஆகிய தோழர் ஜவஹர்லால் ஆவார். மூன்று அந்நாடகத்தின் கதாசிரியரும் உண்மையான சூத்திர தாருமான தோழர் ராஜகோபாலாச்சாரியாராவர். கதாசிரியராய் இருக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் இந்திய மக்களின் முட்டாள் தனத்தையும், அவர்களது மூடபக்தியையும் சரியானபடி அளவெடுத்து அதற்கேற்றபடி மக்களை ஏமாற்றத்தக்க விதமாக கதை எழுத வல்லவர். அப்படிப்பட்டவரே உண்மை சூத்திரதாராக (டைரக்டராக) இருந்து நாடகம் நடத்தும்போது கதையின் நடிப்பு வெற்றிகரமாய் முடிவதில் யாருக்குத்தான் சந்தேகம் இருக்க முடியும்? கதையின் முக்கிய நடிகரான தோழர் ஜவஹர்லால் அவர்கள் இன்று டாக்கீஸ் என்னும் சினிமாக்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் இருக்கும்...

இனாம் மசோதாவும் வைஸ்ராயும்  நிராகரித்த காரணம் என்ன?

இனாம் மசோதாவும் வைஸ்ராயும் நிராகரித்த காரணம் என்ன?

    “உரிமையைப் பறிமுதல்” செய்கிறது என்பது ஒன்றே – உண்மை விளம்பி திருத்துறைப் பூண்டியில் நடந்த தஞ்சை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டில் தோழர் கே.எம். பாலசுப்பிரமணியம் தன்னுடைய சொற்பொழிவில், ஜஸ்டிஸ் கட்சி நிறைவேற்றிய மசோதாவை வைஸ்ராய் அவர்கள் அங்கீகரிக்க மறுத்து நிராகரிக்கக் காரணம், வைஸ்ராய் இம்மசோதாவானது இனாம் தாரர்களின் உரிமைகளை (குடிவார உரிமை) பறிமுதல் செய்து இனாம் குடிகளுக்கு வழங்கும் தன்மையது என்று அபிப்பிராயப்பட்டதேயாகும் என்று கூறினார். இதை எதற்காக எடுத்துரைத்தார் எனின், ஜஸ்டிஸ் கட்சியும் கூடிய அளவு ஏழை மக்களுக்கு, உதுணீணூணிணீணூடிச்tடிணிண (பறிமுதல்) என்ற முறையை சட்டபூர்வமாகக் கையாண்டு பிழைப்புவழி செய்து வந்துள்ளது என்பதை விளக்கவே. இது பலருக்குப் போதுமான அளவு பொதுவுடமை தத்துவத்தை புரட்சி மூலம் செய்யாத உப்புச்சப்பில்லாச் சட்டமாய்த் தோன்றலாம். ஆனால் இது உதுணீணூணிணீணூடிச்tணிணூதூ இடச்ணூச்ஞிtஞுணூ (பறிமுதல் தன்மையை) கொண்டிலது என்று கூறுவது தவறாகும். இதைவிடத் தவறு, வைஸ்ராய் இந்த அபிப்பிராயத்தைக் கொள்ளவில்லை என்று கூறுவது....

முத்தைய முதலியாருக்கு பாராட்டு

முத்தைய முதலியாருக்கு பாராட்டு

சென்னை மாகாண தொகுதி நிர்ணயக்கமிட்டித் தலைவராயிருந்த மாஜி மந்திரி தோழர் எஸ்.முத்தைய முதலியாரவர்களுக்கு சென்னை முதலியார் சங்கத்தார் சென்ற மார்ச்சு 29ந் தேதி ஒரு உபசார விருந்து நடத்தினார்கள். அப்பொழுது தோழர் செய்துள்ள தேசத்தொண்டுகளைப் பாராட்டிப் பேசப்பட்டன. முதலியார் மாகாணத் தொகுதி நிர்ணயக்கமிட்டித் தலைவராய் இருந்து செய்த சேவைகளை தென்னாட்டார் நன்கறிவர். ஒரு பிரதிநிதி தொகுதியை மாகாணக்கமிட்டியார் சிபார்சு செய்தனராயினும் ஹாமண்டு கமிட்டியார் பல மெம்பர் தொகுதிகளையே ஆதரித்தனர். எனினும் சென்னைச் சட்டசபை அபிப்பிராயத்தைத் தழுவி ஒரு பிரதிநிதி தொகுதியை பார்லிமெண்டு ஆதரித்து விட்டது. தமிழர் க்ஷேமத்துக்காக தோழர் முதலியார் பல நல்ல காரியங்கள் செய்திருக்கிறார். அவர் மந்திரியாகவிருந்த போது தான் வகுப்புவாரி வீதாசார உத்தியோக உத்தரவு பிறந்தது. பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு அதனால் ஏற்பட்டிருக்கும் நன்மைகளை நாம் விளக்கிக் கூறத் தேவையில்லை. குடி அரசு செய்தி விளக்கம் 05.04.1936

காங்கிரஸ் தலைவர் யோக்கியதை

காங்கிரஸ் தலைவர் யோக்கியதை

தோழர் சி. ஆர். ரெட்டி ஜஸ்டிஸ் கட்சியால் விளம்பரம் பெற்றவர்; அதில் தனக்கு உத்தியோகமோ பதவியோ கிடைக்கவில்லை என்று அக் கட்சிக்கு தொல்லை கொடுத்தவர். பிறகு ஜஸ்டிஸ் கட்சியார் ஒரு (ஆந்திரா யூனிவர்சிட்டி வைஸ் சேன்ஸ்லர்) உத்தியோகம் கொடுத்தவுடன் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தவர். அந்த உத்தியோகத்துக்கு காலாவதி ஆகப்போவதை அறிந்து, மறுபடியும் ஜஸ்டிஸ் கட்சியில் உத்தியோகம் கிடைக்காது என்கின்ற சந்தேகத்தின் மீது அதை தேசாபிமானம் காரணமாக ராஜினாமா கொடுத்து விட்டதாக விளம்பரம் செய்து கொண்டவர். காங்கிரஸ் உத்தியோகம் ஏற்கப்போகின்றது என்பதையும், காங்கிரசு எலக்ஷனில் வெற்றி பெறக்கூடும் என்பதையும் உணர்ந்த பிறகு காங்கிரசில் சேர்ந்துகொண்டதாக வேஷம் போட்டுக்கொண்டவர். பிறகு உத்தியோகம் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் வந்த உடன் முன் தேசாபிமானத்தின் காரணமாக ராஜினாமாச் செய்து உதறித்தள்ளி விட்டு விட்டுப்போன உத்தியோகத்தை இப்போது மறுபடியும் ஜஸ்டிஸ் கட்சி உதவியினாலேயே பெற்றுக்கொண்டு காங்கிரசைவிட்டு விட்டவர். ஆகவே காங்கிரஸ் பக்தியும் உத்தியோகங்களை ராஜினாமா செய்யும் தேசபத்தியும் காங்கிரஸ் தலைவர்களுக்கு...

ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவை எப்படி மறக்க முடியும்?

ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவை எப்படி மறக்க முடியும்?

“மநுதர்ம சாஸ்திரம்” என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அநுஷ்டிக்கப்பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்ட திட்டங்களால் அநுசரிக்கப்பட்டதுமாகும். அதில் உள்ள நீதிகளும், விதிகளும், எந்த விதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்கள் அடிமைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை யாரும் உணர்ந்து கொள்ளுவது அவசியமாகும். ஆதிதிராவிட சமூகம் முதல், சகல அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்தார்கள் வரை இந்த மநுதர்மத்தை நீதியாகக் கொண்ட இப்படிப்பட்ட கொடுமையான இந்து மதத்தில் இருப்பதைவிட பிறமதத்தில் சேர்ந்து தங்களுக்கு விடுதலையைத் தேடிக்கொள்வது சரியா? பிசகா? என்பதையும், அல்லது இம்மாதிரியான அநீதியான சட்ட திட்டங்கள் அமைந்துள்ள “இந்து” மதத்திலேயே அடிமைப் பட்டாகிலும் வாழ வேண்டுமா என்பதையும் கீழ்வரும் மனுதர்ம விதிகளைப் படித்து முடிவு செய்து கொள்ளும்படி கோருகிறோம். “பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம் சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது”. அத்தியாயம் 8, சுலோகம் 20. “சூத்திரர் நிறைந்த...

எப்படி மறக்கமுடியும்?

எப்படி மறக்கமுடியும்?

  இந்நாட்டில் ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவும், இப்பிரிவினருள் ஒருவருக்கொருவர் காட்டும் வேற்றுமையுணர்ச்சியும், துவேஷத்தன்மையும் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே வருகின்றன. இது எவ்வளவுதான் இன்று ஒருசுயநலக்கூட்டத்தினரின் பிரசாரங்களால் மறைக்கப்பட்டாலும் எவ்வளவுதான் இப்பிரிவினை கூடாது என்று “இதோபதேசம்” செய்யப்பட்டாலும் இந்தப் பிரிவு மற்றெல்லாப் பிரிவு களைவிட சரித்திர சம்மந்தமானதாகவும், முன் பின் பழிவாங்கித் தீரவேண்டிய உணர்ச்சியுடையதாகவும், இருந்து வளர்ந்து கொண்டே வருகிறது. இப்பிரிவைப்பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இன்று மனிதசமூகத்தில் உள்ள சகலவித பிரிவிலும் இந்த ஆரியர் (தமிழர் அல்லது) திராவிடர் என்கின்ற பிரிவே மிகக் கொடுமையுள்ளதாகவும், இவ்விரு பிரிவினரும் எந்தக் காலத்திலும் ஒன்றுபடுவதற்கில்லாத வேற்றுமையுடைய தாகவும் இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் பல்வேறு மதங்களின் பேரால் இந்திய மனித சமூகம் பிரிக்கப்பட்டோ பிரிவினைப்பட்டோ இருந்தாலும் அவைகளை யெல்லாம்விட இந்து மதத்தினர் என்பவர்களுக்குள்ளாகவே இருந்து வரும் இந்த ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவானது எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒன்று படுத்தப்பட...

காங்கிரஸ் புளுகு

காங்கிரஸ் புளுகு

பாமரமக்கள் காங்கிரசை அதிகமாக ஆதரிக்கும் பொருட்டு, காங்கிரஸ் மனப்பான்மையுடைய பத்திரிகை நிருபர்கள் தத்தம் மனோதர்மப்படி அடிக்கடி பத்திரிகைகளில் கயிறு திரிப்பதுண்டு. வெள்ளை அறிக்கை வெளிவந்த காலத்து, காந்தியாரை இந்தியா மந்திரி லண்டனுக்கு அழைக்கப் போவதாகவும், அவருடன் கலந்து, வரப்போகும் அரசியல் திட்டத்தை வகுக்கப்போவதாகவும் ஒரு கதை கட்டிவிடப்பட்டது. அப்பால், வைஸ்ராய் காந்தியை பேட்டி காணப் போகிறார், காந்தி சிம்லாவுக்குச் செல்லப் போகிறார் என்றெல்லாம் பல வெங்காய வெடிகள் கிளம்பின. இரண்டு வாரங்களுக்கு முன், எட்வர்டு மன்னர் பண்டித ஜவஹர்லாலைப் பேட்டி காண விரும்பியதாகவும் பண்டிதர் மறுத்து விட்டார் என்றும் ஒரு டெல்லிப் பத்திரிகையில் ஒரு செய்தி வெளிவந்தது. அதைப்பற்றிப் பலருக்கு சந்தேகம் ஏற்படவே அந்தச் செய்தி உண்மைதானென்று அந்த டெல்லிப் பத்திரிகை மீண்டும் ஊர்ஜிதம் செய்தது. ஆனால் பண்டித ஜவஹர்லால் அந்தச் செய்தியை இதுவரை ஆதரிக்கவோ மறுக்கவோ முன்வரவில்லை. சென்ற வாரத்தில் காந்தியாரும் புதிய வைஸ்ராய் லார்டு லின்லித்கோவும் சந்தித்துப் பேசுவதற்கு...

வலங்கைமான் தேசீயம்

வலங்கைமான் தேசீயம்

அண்ணாமலை சர்வகலா சங்க உப அத்யக்ஷர் தோழர் வலங்கைமான் ஸ்ரீனிவாச சாஸ்திரியாரைத் தென்னாடு நன்கறியும். அரசியலில் மிதவாதி யெனக் கூறிக்கொண்டு சாதாரண காலங்களில் காங்கிரசைத் தாக்குவதும் தேர்தல் காலங்களில் காங்கிரஸ்காரரை ஆதரித்துப் பிரசாரம் செய்வதும் அவரது பிறவிக்குணம். மிதவாதியான அவர் காங்கிரஸை ஆதரிக்கக் காரணம் என்ன? காங்கிரஸ் ஆதிக்கம் பார்ப்பனர் முன்னேற்றத்துக்கு உதவிபுரியக்கூடியதாயிருப்பதினாலேயே அவர் காங்கிரஸை ஆதரித்து வருகிறார். மேலும் ஜஸ்டிஸ்கட்சி யென்றால் அவருக்குப் பெரிய வெறுப்பு. ஜஸ்டிஸ் கட்சி வகுப்புவாதக் கட்சியாம். எனவே ஜஸ்டிஸ்கட்சி ஒழிய வேண்டுமாம். இவ்வாறு கூறும் தேசீயப் புலியான வலங்கைமான் சாஸ்திரியார் அண்ணாமலை சர்வகலா சங்கத்தில் நடத்துந் திருவிளையாடல், அவரது வகுப்புவாதத்தை நன்கு விளக்கக்கூடியதாயிருக்கிறது. அண்ணாமலை சர்வகலா சங்கத்தை பார்ப்பன மயமாக்குவதே அவரது நோக்கமாயிருந்து வருவது போல் தோற்றுகிறது. அதற்கு சமீபத்தில் அங்கு நடைபெற்ற நியமனங்களே அத்தாட்சி. மஹாமஹோபாத்தியாய குப்புசாமி சாஸ்திரியார் கௌரவ சமஸ்கிருதப் பேராசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறாராம். ஆனால் அவர் செய்யும் “கௌரவ” வேலைக்காக அவருக்குப்...

பட்டுக்கோட்டை பொதுக்கூட்டம்

பட்டுக்கோட்டை பொதுக்கூட்டம்

  காந்தியும் காங்கிரசும் சாதித்ததென்ன? சு.ம. இயக்கம் மிருகமும் பக்ஷியும் மலமும் மூத்திரமும் கடவுளா? தோழர்களே! தோழர்கள் பொன்னம்பலம், அழகிரிசாமி ஆகியவர்கள் பேசுகையில் நீங்கள் சிரித்து ஆனந்தப்பட்டுக்கொண்டிருந்தீர்கள். ~subhead நமது இழி நிலை ~shend நமது கேவல நிலைமையையும், முட்டாள்தனத்தையும் நம்மைப் பார்ப்பனர்கள் எப்படி ஏமாற்றினார்கள் என்பதையும் விளக்கும்போது நமக்கு உண்மையான சுயமரியாதை உணர்ச்சி இருந்தால் சிரிப்பு வருமா? ஆத்திரமும், வெட்கமும் அல்லவா வரும். நமது இழிவானது நேற்று இன்று என்று இல்லாமல் ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருவதால் நமது ரத்தம் வெட்கப்படுவதிற்கில்லாமல் இழிவிலேயே உறைந்து போய்விட்டது. ~subhead புரட்சி வேண்டும் ~shend மனிதனுக்கு வெட்கமும், ரோஷமும் ஏற்படுவதற்கு ஆகவே சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு பெரும் சமூகப் புரட்சியால் ஏற்பட வேண்டியதே ஒழிய சிரிப்பு விளையாட்டில் ஏற்படக் கூடியதல்ல. இதற்காக அனேக தொல்லைகளை அனுபவிக்க வேண்டி வரும்....

சுயமரியாதைக்காரரும் மதமும்

சுயமரியாதைக்காரரும் மதமும்

மதம் என்பது கடவுளாலும் கடவுள்களால் அனுப்பப்பட்டவர்களாலும் கடவுளை அடைவதற்கும், கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள சம்மந்தத்தை விளக்குவதற்கும் ஏற்பட்டவைகள் என்பது ஒரு சாராரின் அபிப்பிராயம். மனிதன் நடந்து கொள்ள வேண்டியதற்கு ஆக ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் விதிகள் திட்டங்கள் என்பதுதான் மதம் என்பது மற்றொரு சாராரின் அபிப்பிராயம். எப்படி இருந்தாலும் சுயமரியாதைக்காரர்கள் மதம் என்பதைப்பற்றி கொண்டுள்ள அதப்பிராயம் பலர் அறிந்ததேயாகும். நிர்ப்பந்தமான அல்லது மூடநம்பிக்கையானதும் பிரத்தியட்ச அனுபவத்திற்கும் சாத்தியத்துக்கும், மாறானதும் பகுத்தறிவிற்கும் ஆராய்ச்சி அல்லது விஞ்ஞானத்திற்கும் எதிரானதுமான காரியங்களையோ கருத்துக்களையோ ஆதாரங்களையோ ஏற்றுக்கொண்டு இருப்பதே மதம் என்றும், அது எதுவானாலும் அப்படிப் பட்ட மதங்களையே சுயமரியாதைக்காரர்கள் மறுக்கிறார்கள் என்பதோடு அம்மதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். சாதாரணமாக இன்று இந்தியாவில் பெரும்பான்மையான அதாவது 100க்கு 95 பேர்களுக்கு மேலாகவே உள்ள மக்களை ஆவாகனம் செய்து கொண்டிருக்கும் மதங்களாகிய இந்து மதமும் மற்றும் சீர்திருத்த மதங்கள் என்பவையாகிய இஸ்லாம், கிறிஸ்து, ஆரிய சமாஜம், பிர்மசமாஜம், முதலிய பல...

மாம்ச ஆகாரமும் பார்ப்பனர்களும்

மாம்ச ஆகாரமும் பார்ப்பனர்களும்

இந்து மதத்தில் பசு மிகவும் மேன்மையாகப் பாவிக்கப்படுகிறதென்றும், முக்கியமான தெய்வமென்றும், அதை வதை செய்வதால் இந்து மதத்திற்கு பெரும் பங்கமேற்படுகிற தென்றும், இந்துக்கள் பெரும் தடை செய்கின்றார்கள். பூர்வீக காலத்திலிருந்த இந்து மதத்திலேயே பசுவதை செய்வதை ஹலாலாக்கி வைத்திருந்தது மட்டுமல்லாமல் முஸ்லீம்கள் அவ்விறைச்சியை எவ்வாறு புசிப்பது அவர்கள் மார்க்கத்தில் கூடுமானதாயிருக்கின்றதோ அதே போல் இந்துக்களும் அம்மாமிசத்தை புசித்து வந்தனர் என்ற விஷயம் இந்து மத ஆராய்ச்சி நிபுணர்களின் ஆராய்ச்சியில் மறைந்திருப்பதன்று. இவ்வாறு இந்து மதத்தில் பசு வதை செய்வது சரியென்றும், பலி செய்யப் பட்ட பசுவின் மாமிசத்தை புசிக்கலாம் என்றும், இந்து வல்லாத மத ஆராய்ச்சி நிபுணர்கள் எத்தனையோ வியாசங்களைப் பிரசுரித்திருக்கின்றார்களே யாயினும் இன்றைக்கு வங்காள பிரபல பூர்வீக மத ஆராய்ச்சியில் இந்து நிபுணரான ராஜா ராஜேந்திரலால் மத்ரா எல்.எல்.டி., சி.ஐ.இ., அவர்களால் எழுதப்பட்ட ஓர் புத்தகத்தில் “இந்து ஆரியன்” என்ற மகுடம் சூட்டப்பட்ட 6வது அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயத்தை நாம்...

ஜஸ்டிஸ் கட்சிக்கு வெற்றி

ஜஸ்டிஸ் கட்சிக்கு வெற்றி

ஜஸ்டிஸ் கட்சியார் என்ன நல்ல காரியங்கள் செய்தாலும் சரி அதை எதிர்ப்பதே பார்ப்பனர்களுடையவும், காங்கிரஸ்காரர்களுடையவும், தேசீயப் பத்திரிகைகளுடையவும் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஜஸ்டிஸ் கட்சியாராலும் ஜஸ்டிஸ் கட்சியார் ஆதரவு பெற்ற இதரர்களாலும் சென்னைச் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட அறநிலையப் பாதுகாப்பு மசோதா, விபசாரத் தடை மசோதா, பொட்டுக்கட்டுத் தடை மசோதா, இனாம் குடிகள் மசோதா போன்ற நல்ல மசோதாக்களையெல்லாம் பார்ப்பனர்களும் காங்கிரஸ் வாலாக்களும் தேசீயப் பத்திரிகைகளும் கட்டுப்பாடாக எதிர்த்து வந்திருப்பதை நேயர்கள் மறந்திருக்க மாட்டார்கள். சென்னைச் சட்டசபையில் ஜஸ்டிஸ் கட்சியார் செய்யும் காரியங்களினால் நாட்டுக்கு நன்மையுண்டா இல்லையா என்பதை பார்ப்பனரும், காங்கிரஸ் கும்பல்களும் தேசீயப் பத்திரிகைகளும் கவனிப்பதே இல்லை. ஜஸ்டிஸ் கட்சியார் செய்யும் வேலைகளுக்கெல்லாம் குற்றம் கற்பித்து வகுப்புவாதிகள், தேசத்துரோகிகள், பிற்போக்காளர் என வசைமாரி பொழிவதே þ கூட்டத்தாரின் முக்கிய நோக்கம். இதை விளக்க சமீப காலத்தில் நடந்த ஒரு சம்பவம் போதுமானது. சட்டசபைத் தேர்தல் தொகுதிகளையும், பிரதிநிதிகளை நிறுத்தும் முறைகளையும், வாக்களிக்கும்...

ஈ.வெ.ரா. விளக்கம்

ஈ.வெ.ரா. விளக்கம்

தோழர் ஈ.வெ.ரா. திருத்துறைப்பூண்டியில் தனது நிலைமையை விளக்கிக்காட்டச் செய்த உபன்யாசம் மற்றொரு புறம் பிரசுரித்திருக்கிறோம். இவ்வுபன்யாசம் சு.ம. தொண்டர்களில் சிலர் செய்துவரும் விஷமப் பிரசாரத்துக்கு தக்க சமாதானமாகுமென்று நம்புகிறோம். தோழர் ஈ.வெ.ரா. மீது சு.ம. தோழர்கள் சிலர் செய்து வரும் விஷமப் பிரசாரமெல்லாம் ஈ.வெ.ராமசாமி பொது உடமைப் பிரசாரத்தை நிறுத்திக் கொண்டார் என்பதும், ஈ.வெ.ராமசாமி மந்திரிகளுடன் குலாவுவதுடன் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கிறார் என்பதுமே யாகும். பொது உடமைப் பிரசாரத்தை நிறுத்திக்கொண்டதற்கு காரணம் முன்னமேயே கூறியிருக்கிறார். அதாவது அரசாங்கத்தார் பொதுவுடமைப் பிரசாரத்தை சட்ட விரோதமானதென்று தீர்மானித்துவிட்டதாலும், சு.ம. இயக்கம் தனது கொள்கைகளையும் திட்டங்களையும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு பிரசாரம் செய்து நிறைவேற்றிக் கொள்வதாக இருப்பதாலும் இப்போது சட்டத்தை மீறி பொதுவுடமைப் பிரசாரம் செய்வதற்கில்லை என்று வெளிப்படையாய்த் தெரிவித்து இருக்கிறார். அதோடு கூடவே சுயமரியாதை இயக்கத்தின் வேலைத் திட்டம் இன்னது என்பதுபற்றி 10.3.35ந்தேதி குடிஅரசில் விளக்கியும் இருக்கிறார். இதையே திருச்சி ஜில்லா சு.ம. மகாநாட்டிலும் விளக்கமாக...

திருத்துரைப்பூண்டி தஞ்சை ஜில்லா  5 வது சுயமரியாதை மகாநாடு  ஆம் ஆம் பொது உடமைப் பிரசாரம் நிறுத்திக்கொண்டேன்  ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்துத் தீருவேன்

திருத்துரைப்பூண்டி தஞ்சை ஜில்லா 5 வது சுயமரியாதை மகாநாடு ஆம் ஆம் பொது உடமைப் பிரசாரம் நிறுத்திக்கொண்டேன் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்துத் தீருவேன்

  தோழர்களே! சுயமரியாதை இயக்கம் மிக நெருக்கடியில் இருப்பதாகவும், சீக்கிரத்தில் செத்துப் போகும் என்றும் இங்கு சொல்லப்பட்டது. இயக்கம் ஒன்றும் நெருக்கடியில் இல்லை என்பது என் அபிப்பிராயம். சிலருக்கு அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பை உத்தேசித்து அப்படித் தோன்றலாம். அதற்கு நான் காது கொடுக்க முடியாது. இந்த இயக்கம் ஆரம்பித்த காலம் முதற்கொண்டு அனேகர் தங்கள் சுயநலத்துக்கு சௌகரியமில்லாதது கண்டு இது போலவேதான் இயக்கம் நெருக்கடியில் இருக்கிறது, செத்துப்போய் விட்டது என்று சொல்லிக்கொண்டே போய்விட்டவர்களும், வெளியில் போய்விட்ட பின்பும் அவர்களால் கூடுமானவரை தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருந்தவர்களும் இருக்கிறவர்களும் திரும்பி வந்தவர்களும் பலர் உண்டு. அப்படிப்பட்டவர் களையும் அவர்களது விஷமங்களையும் பற்றி நான் சிறிதும் லக்ஷியம் செய்வதில்லை. அந்தப்படி நான் அலக்ஷியமாய் இருந்துவிட்டதால் இதுவரை இயக்கத்துக்கோ, எனக்கோ யாதொரு கெடுதியும் ஏற்பட்டு விடவில்லை. இயக்கம் போய்விட்டது என்று இன்னமும் சொல்லிக் கொண்டுதான் திரிகிறார்கள். இயக்கம் எங்கு போய் விட்டது. அவர்களை விட்டு...

பிராணனை விட்டது  மதம் மாறுவதற்கா?  இந்து மதத்தில் இருப்பதற்கா?

பிராணனை விட்டது மதம் மாறுவதற்கா? இந்து மதத்தில் இருப்பதற்கா?

  நாசிக்கில் விச்சிராம் யாதவன் என்ற ஆதிதிராவிட சிறுவன் ஒருவன் தான் தோட்டியாய் இருப்பதில் அவமானமும், வெறுப்பும் அடைந்து தற்கொலை செய்து கொண்டான். இதை பார்ப்பனர்கள் “அச்சிறுவன் மதம் மாறுவதற்கு இஷ்டப்படாமல் தற்கொலை செய்து கொண்டான்” என்று எழுதி திரித்துக் கூறி இப்போது இந்து மதத்திலிருந்து மதம் மாறவேண்டும் என்கின்ற உணர்ச்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்குள் ஏற்பட்டிருப்பதை அடக்க அதை ஒரு சூழ்ச்சியாய்க் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் அயோக்கியத்தனத்தைக் காட்ட மற்றொரு உதாரணமேயாகும். விச்சிராம் யாதவன் என்கின்ற தோட்டிக்கு வயது 18. அச்சிறு வயதிலேயே அவனுக்கு தோட்டி வேலை பிடிக்கவில்லை என்பது இயற்கையேயாகும். அதற்காக அவனுக்கு வேறு மார்க்கமும் இல்லை. ஜாதி இழிவும், ஜாதி தொழில் கொடுமையும் நீங்குவதற்காக அச்சமூகத் தலைவர்கள் செய்த முயற்சிகள் எல்லாம் வீணாயின. அது சம்மதமாய் இந்துத் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் பொய்யாயின. கடைசியாக அவர்கள் (இந்துத் தலைவர்கள்) தீண்டாதவர்கள் பேரால் பணம் வசூலித்து வயிறு வளர்க்க...

ஜவஹர்லால்

ஜவஹர்லால்

ஜவஹர்லால் ஒரு பெரிய வீரர் என்பதும், சமதர்மவாதி என்பதும் பலருடைய அபிப்பிராயம். ஜவஹர்லால் எந்த முறையில் வீரர் என்பதும் எந்த முறையில் சமதர்மவாதி என்பதும் தெரிய வேண்டுமானால் பார்ப்பனர்கள் அவரை வீரரென்றும், சமதர்மவாதி என்றும் செய்யும் பிரசாரத்தைத் தவிர வேறு எவ்வித உதாரணமும் காண முடியாது என்றே சொல்லுவோம். சமதர்ம சம்பந்தமாய் இதற்கு முன் பேசிய பலருடைய அபிப்பிராயத்தை சிற்சில சந்தர்ப்பங்களில் கிளிப்பிள்ளை போல் பேசி விட்டது ஒன்றைத் தவிர வேறு ஒரு காரியத்திலும் அவர் சமதர்மவாதி என்று சொல்லும்படி இதுவரை நடந்து கொண்டவரல்ல. அவருடைய சமதர்மம் நடவடிக்கை, சர்க்காரிடம் காந்தியார் தான் இனி சட்டம் மீறுவதில்லை என்றும், சத்தியாக்கிரகம் செய்வதில்லை என்றும் வாக்குக் கொடுத்து விடுதலையாகி வந்த “ராஜியை” ஒப்புக் கொண்ட போதே நன்றாய் விளங்கிற்று. அதை மறுக்க அவர் ஒரு இடத்தில் அது ராஜி அல்லவென்றும், மறுதடவை சண்டைக்கு தயாராவதற்கு ஓய்வெடுத்துக் கொள்ளுவது என்றும் சொல்லி அதன் பேரில்...

தமிழ்ப் பெரியார் மறைந்தார்

தமிழ்ப் பெரியார் மறைந்தார்

பண்டிதர் தோழர் கா. நமச்சிவாய முதலியார் பிரிவினால் தமிழகத்தாருக்கு ஏற்பட்டிருக்கும் துக்கத்தில் நாமும் மனமாரப் பங்கு கொள்ளுகிறோம். பிறந்தாரெல்லாம் இறப்பது இயற்கையாயினும் நாட்டுக்கும், மக்களுக்கும் நலம் செய்வோர் பிரிவு நாட்டு மக்கள் உள்ளத்தைப் பெரிதும் துக்கத்தில் ஆழ்த்தச் செய்யும். தற்காலத்துத் தமிழர் முன்னேற்றத்துக்காக உழைப்பவர் மிகச் சிலரே. எனவே, கண்மூடும் வரை தமிழர் நலத்துக்காக அல்லும் பகலும் உழைத்துள்ள ஒரு பெரியார் பிரிவை யார்தான் தாங்கவல்லார்? தமிழ் மொழிக்கு தோழர் முதலியார் செய்த தொண்டு மலையினும் பெரியது; கடலினும் அகன்றது. தமிழ் உரைநடைக்கு முதன் முதல் அடிகோலிய ஆறுமுக நாவலருக்குப் பிறகு நூற்றுக்கணக்கான வசன நூல்கள் இயற்றி தமிழ் செம்மையுறச் செய்த பெருமை காலஞ்சென்ற முதலியாருக்கே சொந்தம். வட மொழிச் சொற்களை அறவே வெறுக்கும் தமிழபிமானியல்ல அவர். இன்றியமையாவிடத்து வடமொழிகளை ஆளுவதே அவரது போக்காயிருந்தது. அவரது நடை எளிதாயும், இனிதாயும், தெளிவாயும் விளங்குகிறது. அவர் எழுதிய நூல்கள் தமிழிலக்கியத்துக்கு அழகு செய்யும்...

மந்திரத்தினால் மாங்காய் விழுமா?

மந்திரத்தினால் மாங்காய் விழுமா?

  வைதீகப்பழமான பண்டித மதன்மோகன மாளவியாவும் ஒரு சீர்திருத்தக்காரராம். அவருடைய சீர்திருத்தப்போக்கு மகா விநோதமானது. தீண்டாதார் தீக்ஷை பெற்றுவிட்டால் ஏனைய இந்துக்களைப் போல அவர்களும் ஆலயங்களுக்குள் போகலாம்; சுவாமி தரிசனம் செய்யலாம் என்பது அவருடைய கருத்து. ஆனால் தீண்டாமையைப்பற்றி ஸநாதனிகளுக்குள்ளேயே அபிப்பிராய பேதமிருந்து வருகிறது. பண்டித மாளவியா கோஷ்டியார் வேத சாஸ்திரங்களில் தீண்டாமைக்கு ஆதரவில்லை யென்கிறார்கள். ஏனைய மாறுதல் வேண்டாத ஸநாதனிகள் உண்டு என்கிறார்கள். மாறுதல் வேண்டாத ஸநாதனிகளும் அவர்களை ஆதரிப்பவர்களுமே அதிகமாயிருக்கிறார்கள். எனவே தீண்டாதார் துயரம் அவ்வளவு சுளுவாக நீங்குமென்று நம்புவதற் கில்லை. தீண்டாமையை ஒழிக்க எத்தனையோ பேர் இதற்குமுன் முயன்று பார்த்தும் பயன் ஏற்படாததினாலேயே மத மாறியாவது சுயமதிப்பைப் பெறுங்கள் என்று டாக்டர் அம்பேத்கார் தம் இனத்தாருக்கு யோசனை கூறுகிறார். அவர் யோசனைப்படி பலவிடங்களில் பலர் மத மாறியும் வருகிறார்கள். எனவே ஹிந்து அரசியல்வாதிகளுக்கு கிலி பிடித்திருக்கிறது. தீண்டாதார் மதம் மாறி விட்டால் ஹிந்துக்களின் அரசியல் பலம் குறைந்துவிடும்....

குதிரை திருட்டுப் போன பின்பு  லாயம் பூட்டப்பட்டது

குதிரை திருட்டுப் போன பின்பு லாயம் பூட்டப்பட்டது

  குதிரை திருட்டுப் போன பின்பு லாயம் பூட்டப்பட்டது என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது குதிரை லாயத்தை, குதிரை உள்ளே இருக்கும்போது சரியானபடி பூட்டாமலும், கவனிக்காமலும் விட்டுவிட்டு, குதிரை திருட்டுப்போன பின்பு கவனித்து லாயத்தை பூட்டி வைப்பது பைத்தியகாரத்தனம் என்று சொல்லுவார்கள். அதுபோலவே நமது ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் என்பவர்கள் காலா காலத்தில் செய்யவேண்டிய காரியங்கள் எதையும் கவனிக்காமல் விட்டு விட்டு, அக்கட்சிக்கு ஏற்படவேண்டிய கெடுதியும், குறைவும் எவ்வளவு ஏற்படவேண்டுமோ, அவ்வளவும் ஏற்பட்டபிறகு இப்போது கவலை கொண்டவர்கள் போல் காட்டிக்கொண்டு தாங்கள் யோக்கியமாய் நடந்து கொண்டதாக அன்னியருக்கு மெய்ப்பிப்பதற்கு முயற்சிப்பதில் என்ன நன்மை ஏற்படும் என்பது நமக்கு விளங்கவில்லை. கட்சித் தலைவர் பொப்பிலிராஜா அவர்கள் தன்னால் கூடியதைத் துணிந்து செய்தார் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அவருக்கு எவ்வித ஒத்துழைப்பும் இல்லாமல் போனதாலும், மற்ற உபதலைவர்களுக்குள் பரஸ்பர நம்பிக்கையில்லாமல் போனதாலும் பல சந்தர்ப்பங்களில் அவரது நிலை அவருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்து...

ஏமாந்தது யார்?  சர்க்காரா? தேசாயா?

ஏமாந்தது யார்? சர்க்காரா? தேசாயா?

  காங்கிரஸ்காரர்களுக்கு ஸ்திர புத்தியோ, சுய புத்தியோ, உறுதியான வேலைத் திட்டமோ கிடையாதென்பதற்கு புதுப்புது ருசுக்கள் பிரதி தினமும் வெளி வந்து கொண்டிருக்கின்றன. 1933-34 வது வருஷத்திய ” இந்தியா” என்ற சர்க்கார் அறிக்கையில், “திடீர் திடீர் என்று ஹரிஜன இயக்கத்துக்குப் பணம் கேட்கப்பட்டதினால் பொதுஜனங்களிடையே வெறுப்புத் தோன்றியதென்றும், இவ்வியக்கம் கேவலம் சமூகக் குறைபாடுகளைப் போக்குவதான சீரிய நோக்கம் மாத்திரம் கொண்ட இயக்கம் என்ற விஷயத்தில் சிலர் சந்தேகித்தது நியாயமாகும் என்றும், பீகார் பூகம்ப நிவாரண நிதிக்குச் சரியான கணக்கு வெளியிடப் படவில்லை யென்றும், நிவாரண விஷயத்தில் காங்கிரஸ்காரர் சர்க்காரோடு ஒத்துழைக்கவில்லையென்றும், அரசியல் நோக்கத்துடனேயே நிவாரண வேலைகள் நடத்தப்பட்டன என்றும் கூறப்பட்டிருப்பது காந்தியாரையும் அவரது இயக்கத்தையும் காங்கிரஸ் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாதையும் அவமதிக்கக் கூடியதாயிருக்கிறதென்று காங்கிரஸ் பத்திரிகைகளும் காங்கிரஸ் தலைவர்களும் பெருங்கூச்சல் போட்டதைத் தோழர்கள் மறந்திருக்க மாட்டார்கள். எனவே, சர்க்கார் அறிக்கையைக் கண்டித்து காங்கிரஸ்காரர்களின் மானத்தைக் காப்பாற்றும் பொருட்டு இந்திய...

ஸ்தல ஸ்தாபனங்கள்  ஓட்டுரிமையும் கட்சிகளும்

ஸ்தல ஸ்தாபனங்கள் ஓட்டுரிமையும் கட்சிகளும்

இந்திய நாட்டிற்கு பிரிட்டிஷார் அளித்துள்ள ஓட்டுரிமையானது இயற்கைக்கு விரோதமானதும், இந்தியாவின் தகுதிக்கு எத்தனையோ பங்கு அதிகமானதுமான ஓட்டுரிமையாகும். ஆனால் இதை அவர்கள் நல்லெண்ணத்தோடு அளித்தார்களா அல்லது மற்ற எண்ணத்தோடு அளித்தார்களா என்பது வேறு விஷயம் என்றாலும் இந்த மாதிரியான ஓட்டுரிமையினால் நாட்டுக்கோ ஏழை மக்களுக்கோ ஏதாவது பயன் ஏற்பட்டதா என்று சொல்ல முடியாது. ஏனெனில் நமது நாட்டு மக்களில் 100க்கு 8 பேர்களே படித்தவர்கள் என்பதும், அந்த 8 பேர்களிலும் பார்ப்பன சமூகம் 100க்கு 100 பேராய் படித்திருப்பதும், மற்ற ஏழை மக்களில் 100க்கு 2 பேர் 3 பேர்களே படித்திருப்பதும், பெண்களில் முக்கியமாக பார்ப்பனரல்லாத பெண்களில் 100க்கு லீ பேர்களும் தாழ்த்தப்பட்ட மக்களில் 100க்கு லி பேர்களுமே படித்திருப்பதுமான நிலையில் இந்தக் கூட்டத்தார்களைக் கொண்ட இந்திய சமூகம் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஓட்டுரிமைகளை சரியான முறையில் பயன்படுத்துவார்கள் என்று யார்தான் சொல்ல முடியும். ஆகவே மக்கள் சாதாரண அறிவு விஷயத்திலேயே இப்படி...

திருச்செங்காடு தாலூகா ஆதிதிராவிடர் 5 வது மகாநாடு

திருச்செங்காடு தாலூகா ஆதிதிராவிடர் 5 வது மகாநாடு

தோழர்களே! இந்த உங்கள் மகாநாட்டில் உங்களுக்கு உள்ள உற்சாகத்தைப் பார்த்து மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது உடல் அசௌக்கியத்தால் நான் வருவதற்குப் பயந்தேன். நான் புறப்படுமுன் பல தோழர்கள் இந்நிலையில் போகக்கூடாது என்று சொன்னார்கள். நீங்கள் ஏமாற்றமடைந்து விடுவீர்கள் என்று சமாதானம் சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டேன். இப்போது இங்கு வந்தபின் உங்கள் உற்சாகத்தைப் பார்த்ததில் இங்கு நான் வராதிருந்தால் நான்தான் ஏமாற்றமடைய வேண்டியவனாவேன். இவ்வளவு தூரம் இந்த கிராமங்களில் போதிய தண்ணீர் வசதியும் வழி நடைபாதை வசதியும் இல்லாத நடுக்காடுகளில் இப்படிப்பட்ட மகாநாடு கூட்டுவதும், உற்சவம் போல ஆண் பெண்கள் கூடுவதுமான காரியம் உங்கள் விடுதலை விஷயத்தில் உங்களுக்கு உள்ள ஆர்வமே காரணம் என்பதும், உங்கள் பூரண விடுதலைக்கு நீங்கள் உரியவர்களாகி விட்டீர்கள் என்பதும் எனது அபிப்பிராயம். இப்படிப்பட்ட உணர்ச்சியும் முயற்சியும் உங்களுக்கு ஏற்படும் படியாகச் செய்தது இந்த பிரிட்டிஷ் அரசாங்கமும் பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சியுமே என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். உங்களில்...

பணக்காரத்தன்மை ஒரு மூடநம்பிக்கையே

பணக்காரத்தன்மை ஒரு மூடநம்பிக்கையே

  மனிதனைப் பிடித்து வாட்டும் மூடநம்பிக்கைகளில் பணக்காரத் தன்மையும் ஒரு மூடநம்பிக்கையேயாகும். இந்தப் பணக்காரத் தன்மை மூடநம்பிக்கையானது மத சம்பந்தமான மூடநம்பிக்கைகளைவிட மிக முக்கியமானதும் மோசமானதுமாகும். பணம் இல்லாவிட்டால் கடவுளுக்குக் கூட வேலை இல்லை என்று முடிவு கட்டிவிடலாம். பணமே கடவுளுணர்ச்சிக்கும் முக்கியமாய் மத உணர்ச்சிக்கும் மற்றும் பல மூடநம்பிக்கை உணர்ச்சிக்கும் மூல காரணமாய் இருக்கிறது. பணம் என்று சொல்லுவது செல்வம் என்பதின் கீழ் வரும் எல்லாவற்றையும் பொறுத்தது. அச்செல்வத்தன்மைக்கு அடிப்படையானது புகழ் ஆசை என்று தான் சொல்ல வேண்டும். அப்புகழ் ஆசை என்பதும் வெறும் சுயநலத்தையே அடிப்படையாகக் கொண்டதே தவிர மற்றப்படி செல்வ சம்பந்தமான புகழில் ஆசையில் வேறு எவ்வித பகுத்தறிவும் காண முடியவில்லை. சமூகத்தில் தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்கின்ற உணர்ச்சி எல்லா மக்களுக்கும் உள்ளது என்று ஒரு சாரார் வாதிக்கக் கூடுமானாலும் அப்புகழுக்கும், தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்கின்ற தன்மைக்கும் பணம் சேர்ப்பது என்பதை...

சீதை கற்பாயிருந்திருக்க முடியுமா? ஒரு நெருக்கடியான ஆராய்ச்சி

சீதை கற்பாயிருந்திருக்க முடியுமா? ஒரு நெருக்கடியான ஆராய்ச்சி

– சித்திரபுத்திரன் சுயமரியாதைக்காரர்கள் கற்பை ஒரு மோக்ஷ சாம்ராஜ்ஜியமான சங்கதி என்று எண்ணுவதில்லையானாலும் புருஷனும் மனைவியும் ஒருவருக்கொருவர் எந்த விஷயத்திலும் நம்பிக்கை துரோகம் செய்யக் கூடாது என்பதிலும், இருவர்கள் உரிமையிலும் ஒருவருக்கொருவர் அதிகம் கூடுதல் குறைவு பாராட்டக்கூடாது என்பதிலும் மிகவும் கண்டிப்பானவர்கள். இந்நிலையில் இன்று ஆரியர்கள் கற்பு, தமிழர் கற்பு என்கின்ற விஷயத்தில் நடக்கும் விவகார விஷயத்தில் சுயமரியாதைக்காரர்களுக்கு வெட்கமாகத்தான் இருக்கும். என்றாலும் இன்றைய முறையில் கற்புக்கு ஒருவித மரியாதை கற்பிக்கப்பட்டு அது இல்லாததற்கு ஒருவித இழிவு கற்பிக்கப்பட்டு அவை அமுலில் இருக்கும் காலத்தில் அதைப்பற்றி பேசித் தமிழர்களுக்கு கற்பு ஆரியர்கள் வந்துதான் கற்றுக் கொடுத்தார்கள், அதற்கு முன்பு இருந்ததில்லை என்று சொன்னால் அது வகுப்பு உணர்ச்சியின் பயனாக எந்தத் தமிழனுக்கும் அவன் சுயமரியாதைக்காரனாய் இருந்தால் இன்னும் அதிகமாகக் கூட வருத்தம் வரத்தான் செய்யும். ஏனெனில் ஒரு வகுப்பை இழிவுபடுத்தி மற்றொரு வகுப்பை உயர்வுபடுத்த வேண்டும் என்கின்ற முறையில் அப்படிச் சொன்னதாகக்...

திரு. வி.க. முதலியார் புறப்பட்டு விட்டார்

திரு. வி.க. முதலியார் புறப்பட்டு விட்டார்

  காங்கிரசுக்காரர்களின் அயோக்கியத்தனங்களைக் கண்டு சகிக்காமல் தோழர் திரு. வி. கல்யாணசுந்திர முதலியார் முதலியவர்கள் துணிந்து காங்கிரஸ் சிவிக் போர்டார் என்பவர்களால் நிறுத்தப்பட்ட நபர்களுக்கு விரோதமாயும், உண்மையில் தகுதி உடையவர்களுக்கு அநுகூலமாயும் பிரசாரம் செய்யப் புறப்பட்டு விட்டார்கள். காங்கிரஸ் சிவிக் போர்டாரால் தெரிந்தெடுக்கப்படும் மெம்பர்கள் என்பவர்களில் பலர், தெரிந்தெடுப்பு அதிகாரம் பெற்றவர்கள் என்பவர் களுக்குச் சொந்தத்தில் பணம் கொடுத்துத் தெரிந்தெடுத்துக் கொள்ளப்படு கிறார்கள் என்கின்ற புகார் திருநெல்வேலி, திருச்சி, திருவண்ணாமலை முதலிய இடங்களில் ஏற்பட்டது யாரும் அறியாததல்ல. இம்மாதிரி சூழ்ச்சியும், அயோக்கியத்தனமும் ஒழிய வேண்டும் என்பதே தோழர் முதலியார் போன்றவர்களின் முக்கிய கவலையாக இருந்திருக்குமென்று நம்புகிறோம். எப்படி இருந்தாலும் இப்போதாவது இவர்கள் உண்மையை உணர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி அடைகின்றோம். குடி அரசு துணைத் தலையங்கம் 01.03.1936

உரிமை பெரிதா?  காசு பெரிதா?

உரிமை பெரிதா? காசு பெரிதா?

  திடீரென்று தொழிலாளர் செய்யும் வேலை நிறுத்தங்களுக்கு தண்டனையாக 13 நாள் சம்பளத்தைப் பிடிக்க வேண்டுமென்று தோழர் மோடி இந்தியச் சட்டசபையில் கொண்டுவந்து நிறைவேற்றிய திருத்தம், இப்பொழுது 8 நாள் சம்பளத்தைப் பிடிக்க வேண்டுமென்று ராஜாங்க சபையில் திருத்தப்பட்டிருக்கிறது. இந்தத் திருத்தத்தைக் கொண்டு வந்த தோழர் பி.என். சாப்ரூவின் யோசனையை சர்.பிராங்கு நாய்ஸ் ஒப்புக் கொண்டதுடன் இவ்விஷயத்தில் அக்கரைகொண்ட அங்கத்தினர்கள் எல்லாம் அதை ஆதரிப்பதாயும் சொன்னாராம். தொழிலாளர் பிரதிநிதிகளான தோழர்கள் ஜோஷியும், கிரியும் தீராப் பொறியாக இந்தத் திருத்தத்தை ஒப்புக்கொண்டிருந்தாலும், தொழிலாளர் உரிமை பறிபோவதை நம்மால் ஆதரிக்க முடியாது. 13 நாள் சம்பளத்துக்கு பதிலாக 8 நாள் சம்பளம் பிடிப்பதினால் தொழிலாளருக்கு 5 நாள் சம்பளம் இலாபம் ஏற்படலாம். ஆனால் காசை விட உரிமையே முக்கியம். தமது உரிமைகளையும், மானத்தையும் காப்பாற்றும் பொருட்டு திடீர் வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்கள் தொழிலாளருக்கு உண்டாகக் கூடும். ஆகவே திடீர் வேலை நிறுத்தம்...

இப்போதாவது பாமர மக்களுக்குப் புத்தி வருமா?

இப்போதாவது பாமர மக்களுக்குப் புத்தி வருமா?

பார்ப்பனர்கள் ஏழை மக்களுக்கு அதாவது ஏழை விவசாயிகளுக்கும், ஏழைத் தொழிலாளிகளுக்கும் ஜன்ம விரோதிகள் என்பதற்கு இன்னம் ஏதாவது ருஜுவேண்டுமா? என்று கேட்கின்றோம். ஏழைக் குடியானவர்கள் மசோதாவாகிய இனாம்தார் மசோதா என்பதை கொலை செய்தவர்கள் யார் தொழிலாளிகள் மசோதாவில் சம்பளப் பிடித்தத் திருத்தத்தை ஆதரித்து தொழிலாளர் உரிமையைக் கொலை செய்தவர்கள் யார் என்பதை ஆலோசித்துப் பார்த்து காங்கிரசும் பார்ப்பனீயமும் ஏழை மக்களுக்கு அனுகூலமானதா துரோகமானதா என்பதை உணர வேண்டுகிறோம். இனாம்தார் மசோதா என்பதின் தத்துவம் எவன் பூமியை நேரில் கஷ்டப்பட்டு உழுது பயிர் செய்கிறானோ அவனுக்கே பூமி சொந்தமாய் இருக்க வேண்டும் என்கின்ற தத்துவத்தைக் கொண்டது. இந்த மசோதா ஒரு வழியில் சமதர்ம ஆட்சிக்கு அடிப்படையென்று கூட சொல்லலாம். ஜஸ்டிஸ் கட்சியானது உண்மையிலேயே ஒரு சமதர்ம தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே ஏற்படுத்தப் பட்டது என்று நாம் பலதடவை சொல்லி வந்திருக்கிறோம். அது முக்கியமாய் முதலாவதாக பிறவியிலேயே ஏழையாகவும் அடிமையாகவும் கற்பிக்கப்பட்ட மக்களின் விடுதலைக்...