தலையங்கம் – கீதையில் இருக்கிறது சனாதனம்!
சனாதனத்தை ஒழிக்க வேண்டும், அது மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வை விதைக்கிறது என்று அமைச்சர் உதயநிதி கூறியபோது, “இந்துக்களை ஒழிக்க வேண்டும்” என்று பேசுகிறார் என திரிபுவாதம் செய்து தேசிய அளவிலான விவாதப்பொருளாக இந்துத்துவா கும்பல் மாற்றியது. சனாதனத்தில் ஏற்றத்தாழ்வுக்கே இடமில்லை, அது ஒரு வாழ்வியல் நெறி என்றெல்லாம் அவரவருக்கு தோன்றியதை, வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினார்களே ஒழிய, எவரும் சனாதனம் என்றால் இதுதான் என தெளிவாக விளக்கவே இல்லை. பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் ஒருவரே, இப்போது தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறார். அசாம் மாநில முதல்வரான ஹிமந்த பிஸ்வா சர்மா தனது X பக்கத்தில் (டிவிட்டர்) கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள சில வரிகளைப் பதிவிட்டிருந்தார். “பகவத் கீதையின்படி, பிராமணர்கள், சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் ஆகிய மூன்று சாதியினருக்கும் சேவை செய்வது சூத்திரர்களின் இயற்கையான கடமை” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது. பிற்படுத்தப்பட்டோரை பிரதமர் ஆக்கிவிட்டோம், பழங்குடியினரை குடியரசுத் தலைவர் ஆக்கிவிட்டோம், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான எல்.முருகனை ஒன்றிய அமைச்சராக்கிவிட்டோம்,...