Category: சிறப்பு கட்டுரை

மாற்றியமைக்கப்படும் கடவுள்கள் கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-21 –

மாற்றியமைக்கப்படும் கடவுள்கள் கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-21 –

பழையனவற்றிலிருந்து புதிய சடங்குகள் மட்டும் உருவமைக்கப்படுவதில்லை; ஆண்-பெண் கடவுளர்களும் புதிய வடிவத்தை அடைகின்றனர். அண்மைக்காலம் வரை சாதாரண மக்களோடு தொடர்புடைய கடவுளர்களும் தேவியர்களும் இப்போது பெருவணிக வளாகங்களும், பல்திரையரங்குகளும் (மால்களிலும் மட்டிபிளக்ஸுகளும்) கொண்ட ஆரவாரப் பகட்டுள்ள புதிய நகர்ப்புறங்களில் இருப்பிடம் பெறுகிறார்கள். நாட்டின் தென் பகுதியில், ஒருகாலத்தில் மக்களின் ஆரோக்கியத்தையும் மண்ணின் வளத்தையும் பாதுகாத்துவந்த கிராம தெய்வங்கள் அல்லது அம்மன்கள், இப்போது நடுத்தர வகுப்பினரால் ஏற்கப்படுகின்றனர். இப்போக்கு, ‘கடவுளரின் தரம் உயர்த்துதல்’ எனப்படுகிறது. நாட்டின் வடக்குப் பகுதியில், ‘மாதா’க்களின் கோயில்கள் அல்லது சக்திபீடங்களுக்குச் செல்லும் (சதி என்ற தேவியின் உடலுறுப்புகள் பலவும் விழுந்ததாகக் கருதப்படுகின்ற இடங்கள்) புனித யாத்திரைகள் மிகவும் பெருகியுள்ளன. சென்னை மாநகரத்தின் சாலையோரக் கோயில்கள் பற்றி அண்மையில் யு. கல்பகம் என்பவர் செய்த ஆய்வு, மாரியம்மனின் தரம் உயர்த்துதல் பற்றிய இயங்கு முறையைத் தெரிவிக்கிறது. தென் சென்னையின் மயிலாப்பூர் – மந்தை வெளிப் பகுதியில் உள்ள சாலையோரக் கோயிலான...

ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் சரியா? (2)  ‘ஜீவா’ வரலாறுகளின் குழப்பங்கள்

ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் சரியா? (2) ‘ஜீவா’ வரலாறுகளின் குழப்பங்கள்

ஜீவாவின் ‘ஈரோட்டுப் பாதை சரியா?’ என்பதை பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு முன்னர் சில செய்திகளை முன்னோட்டமாக முன்வைக்கிறோம். தோழர் ஜீவா அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை பலர் எழுதியிருந்தாலும், தோழர் எம். இஸ்மத் பாஷா எழுதிய ‘ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு’ மட்டுமே ஜீவா வாழ்ந்த காலத்தில் (1946 மார்ச்) வெளிவந்த நூலாகும். அந்நூலுக்கு முகவுரை எழுதியுள்ள தோழர் ஏ.எஸ்.கே (அய்யங்கார்) அம்முகவுரையில் “நான் கண்டிப்பாக முகவுரை எழுத வேண்டும் என்று ஜீவாவே கூறினார். என் நண்பரின் கட்டளைக்குப் பணிகிறேன்” என்று குறிப்பிட்டே முகவுரை எழுதியுள்ளார். எனவே அந்த நூல் ஜீவாவின் பார்வைக்கும் ஏற்புக்கும் பின்னர் தான் வெளிவந்திருக்க வேண்டும். அந்நூலின் 12ஆம் பக்கத்தில் “கொள்கைக்காக வீட்டை விட்டு ஜீவா நேராக சுசீந்திரம் என்ற ஊருக்குச் சென்றார். அங்கு தெருப்பிரவேச சத்தியாகிரகம் ஆரம்பிக்கும் தருவாயில் இருந்தது. தெருக்களில் அரிஜனங்கள் செல்லக்கூடாது என்ற சமூக அநீதி அங்கு பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது; உலகப் பிரசித்திப் பெற்ற வைக்கம்...

அண்ணாவின் ‘கடவுள்- புராண’ எதிர்ப்பு!

அண்ணாவின் ‘கடவுள்- புராண’ எதிர்ப்பு!

கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-20 அறிஞர் அண்ணா கடவுள் மத மறுப்பாளர். கடவுள்,மதம், புராண எதிர்ப்பு கட்டுரைகளை ஏராளமாக எழுதியுள்ளார். திமுக என்ற அரசியல் கட்சியான பிறகு ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கருத்தை சொர்க்கவாசல் என்ற திரைப்படத்தின் வழியாக முன்வைத்தார். இது திமுகவின் அதிகாரபூர்வமான கொள்கை அல்ல! 1945 -ல் அண்ணா எழுதிய கடவுள், மத எதிர்ப்பு கட்டுரை.. கரிமுகத்தோடு ஒரு கடவுள், நாக்கிலே நாயகியுடன் ஒரு கடவுள், நடனமாடும் மயில் மீது மற்றோர் கடவுள், அலைகடல் மீது ஆலிலைமேல் துயிலும் வேறோர் கடவுள், தலைமீது தையலுடன் பிறிதோர் தேவன், என்ற இன்னோரன்ன கடவுள்கள் இருந்து கொண்டு இன்னின்னவருக்கு இன்னின்ன விதமான நிலைமை இருக்க வேண்டும் என்று ஏற்பாடுகளைச் செய்து கொண்டு வாழ்கிறார்கள் என்பதை இன்றும் நம்பி, அந்த நம்பிக்கைக்கேற்ற நாள் நட்சத்திரம் நடவடிக்கைகளிலே பாசம் வைத்துக் கொண்டுள்ள மக்களிடத்திலே, கான்ஸ்ட்டிடியூவண்ட் அசெம்பிளி பற்றியும், காரல் மார்க்சின் கருத்துப்...

ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் சரியா?-                கொளத்தூர் மணி

ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் சரியா?- கொளத்தூர் மணி

பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் ஜீவானந்தம் (ஜீவா) ஈரோட்டுப் பாதை சரியா? எனும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் பெரியார் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு… கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த புதிய தோழர்களுக்கான பயிலரங்கின் நிறைவில் 28.9.2025 அன்று மாலை நடந்த ‘அய்யம் களைதல்’ நிகழ்வில் தோழர் பிரவீன் சுப்ரமணியன் எனும் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் “தோழர் ஜீவா எழுதிய ஈரோட்டுப் பாதை சரியா?” என்ற நூலில் வைத்துள்ள விமர்சனங்களைப் பற்றித் தெளிவுபடுத்துமாறு கோரினார். நான் அந்த நூலினைப் பற்றி நூலின் செய்திகளைப் பற்றி நூல் ஆசிரியரைப் பற்றி முன்வைத்த பல செய்திகள் ஜீவா பற்றாளர்களைக் கடும் கோபத்துக்கு உள்ளாக்கி விட்டது. ஆவேசமான எதிர்வினைகள் சமூக ஊடகங்களில் கொட்டப்பட்டன. பொழியப்பட்ட வசை மொழிகள் எளிய தோழர்களிடமிருந்து மட்டுமல்ல; முதிர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்தும் வந்தன. சீமானோடு ஒப்பிட்டு விட்டீர்களே என்ற சொற்கள் எல்லா பதிவுகளிலும்...

நாத்திகம் பேசிய பார்ப்பன சிந்தனையாளர்கள் – கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(19)

நாத்திகம் பேசிய பார்ப்பன சிந்தனையாளர்கள் – கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(19)

பார்ப்பனராக பிறந்தாலும் பார்ப்பனியத்தை மறுத்த இரண்டு நாத்திகர்கள் பற்றிய தகவல்களை இக்கட்டுரை விளக்குகிறது. ஒருவர் அஸ்ஸாமியப் பாடகர் ஜுபின் கார்க். அண்மையில் சிங்கப்பூரில் வடகிழக்கு இந்தியத் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்ற அவர் ஜான்ஸ் தீவின் கடற்கரையில் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் கடலில் நீந்தும்போது அவரை மரணம் அழைத்துக் கொண்டது. இப்போது மரணத்தில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. மற்றொருவர் ஆந்திராவில் பார்ப்பனராக பிறந்து நாத்திகத்தை வாழ்வியலாக ஏற்று இயக்கம் நடத்திய கோரா (கோபராஜூ ராமசந்திர ராவ்). பெரியாருடன் நெருக்கமாக இருந்தார். இருவரும் இணைந்து மாட்டுக்கறி-பன்றிகறி விழா நடத்தினார்கள். செப்டம்பர் 19, 2025 அன்று, கார்க் சிங்கப்பூரில் வடகிழக்கு இந்தியத் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்றார். தனது 52 வயதில் இறந்தார். ஜான்ஸ் தீவின் கடற்கரையில் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் கடலில் நீந்தும்போது அவரை மரணம் அழைத்துக் கொண்டது. அசாம் அரசு செப்டம்பர் 20 முதல் 22 வரை மூன்று நாள் மாநில துக்கத்தை...

நாத்திகம் குறித்து தாய்-மகன் உரையாடல்   கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(18)

நாத்திகம் குறித்து தாய்-மகன் உரையாடல் கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(18)

1928 ஆம் ஆண்டு குடிஅரசு இதழில் நாத்திகம் என்னும் தலைப்பில் சித்திரபுத்திரன் எழுதிய நையாண்டி உரையாடலே இந்த கட்டுரை. சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதியவர் பெரியார். தாயும் மகனும் இதில் உரையாடுகிறார்கள் தந்தை தீவிரமான பெரியார் கொள்கைக்காரர். ‘குடிஅரசு’ அலுவலகத்திலேயே பணியில் சேர்ந்து விடுகிறார். நாத்திகப் பத்திரிகையான குடிஅரசு பத்திரிக்கைக்கு அப்பா ஏன் வேலைக்குப் போக வேண்டும்? என்று மகன் தாயிடம் கேட்கிறார். மகன் கருத்தை வைத்தே தாய் நாத்திகத்தை மகனுக்கு புரிய வைக்கிறார். இந்த உரையாடலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் இவை. இது ஒரு உண்மை சம்பவமாகவே இருக்கும் என்று கருதத் தோன்றுகிறது. உரையாடலை தூயவெழிலழகனார் என்பவர் எழுதி அதை சித்திரபுத்திரன் திருத்தம் செய்துள்ளார் என்று ‘குடிஅரசு’ குறிப்பிடப்பட்டுள்ளது. தாய்: – அப்பா மகனே, சாமி என்றால் என்ன? அதை முதலில் சொல்லு பார்ப்போம், அதாவது அதற்குப் பெயர் என்ன? ரூபம் (உருவம்) என்ன? நிறம் என்ன? குணம் என்ன?...

கடவுள் உண்டா? சவால் விட்ட நாத்திகர்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-17

கடவுள் உண்டா? சவால் விட்ட நாத்திகர்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-17

டாக்டர் ஆபிரகாம் கோவூர் அவர்கள் ஒரு தலைசிறந்த நாத்திகர், மனோதத்துவ நிபுணர். அறிவியல் அறிஞர். எதையும் அறிவுபூர்வமாகப் பேசி, உண்மைகளை நிலைநிறுத்திடும் ஆற்றல் வாய்ந்த ஒரு சமுதாய விஞ்ஞானி கேரளத்தில் பிறந்தவராயினும், இறுதி வாழ்க்கையை இலங்கையில் அமைத்துக் கொண்டவர். சிறீலங்காவில், கொழும்புவில்தான் 1978 செப்-18-ல் அவர் மறைந்தார். பல ஆண்டுகாலம் தமிழ் நாட்டிலும் இந்தியாவின் இதர மாநிலங்களிலும் தீவிர பகுத்தறிவுப் பிரச்சாரம் புரிந்தவர் அவர். டாக்டர் கோவூர் “கடவுள்” உண்டு என நிரூபிப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன் என்று சவால்விட்டார். எவர் முன் வருவார்? அப்படி ஒன்று இருந்தால் அல்லவா நிரூபிக்க முடியும்? அவரது பகுத்தறிவுப் பிரச்சாரத்தை பெரியார் இயக்கம் பயன்படுத்திக் கொண்டது. கோவூர் பலமுறை தமிழ்நாடு வந்து திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது உண்டு. கோவூர் எழுதிய தன்னுடைய சுயவரலாற்றிலிருந்து சி ல கேரளாவில் தீண்டத்தகாதவர்கள் தாங்கள் நடக்கும் வழியிருந்தால் அகன்று போய்விடுவதற்கு எச்சரிக்கையாக, நம்பூதிரிகள்...

அல்பேனியா அரசின் அதிரடி முடிவு செயற்கை நுண்ணறிவுக்கு ஊழல் ஒழிப்பு அமைச்சர் பதவி!

அல்பேனியா அரசின் அதிரடி முடிவு செயற்கை நுண்ணறிவுக்கு ஊழல் ஒழிப்பு அமைச்சர் பதவி!

உலகில் முதன் முதலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.அய்) அமைச்சர் பதவியை ஏற்று இருக்கிறது. அந்த அமைச்சரின் பெயர் ‘டியெல்லா’. அல்பேனியா நாட்டின் பிரதமர் ஏ.டி ராமா கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தனது அமைச்சரவையில் இணைத்துள்ளார். ‘டியெல்லா’வுக்கு ஊழல் ஒழிப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அல்பேனியா இணையதளத்தின் உதவியாளராக கடந்த ஜனவரியில் நியமனம் செய்யப்பட்டது. இப்போது அமைச்சராக பதவி உயர்வு தரப்பட்டுள்ளது. உலகிலேயே முதன்முதலாக அமைச்சராக பதவி ஏற்றுள்ளது ‘டியெல்லா’ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். டியெல்லாவுக்கு அல்பேனிய நாட்டின் பாரம்பரிய உடை அணிந்த பெண் உருவம் தரப்பட்டுள்ளது. 28 லட்சம் மக்கள் தொகை கொண்ட அல்பேனியா, ஐரோப்பாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக் கொண்டது இந்த நாடு. 18 வயதுக்கு உட்பட்ட நல்ல மனநிலை உள்ள எவரும் அமைச்சராக முடியும் என்று அல்பேனியாவின் அரசியல் சட்டம் கூறுகிறது. அல்பேனியா இணையதளத்தில்...

“கடவுளை” ஓரம் கட்டுகிறது அறிவியல்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-16(விடுதலை இராசேந்திரன்)

“கடவுளை” ஓரம் கட்டுகிறது அறிவியல்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-16(விடுதலை இராசேந்திரன்)

நடிகர் ரோபோ சங்கர்(46 வயது) இறந்த துயரமான செய்தி வந்தது. உண்மையிலேயே இது துயரமானதுதான். இதற்கு இரங்கல் தெரிவித்த நடிகர் எம்.எஸ் பாஸ்கர் இவ்வாறு கூறினார்; “மரணத்துக்கு எவர் மீதும் குறைகாண முடியாது. கடவுள் அவருக்கு விதித்த ஆயுள் அவ்வளவுதான், முடிந்ததும் அவர் அழைத்துக் கொண்டார்.” ஒவ்வொருவருக்கும் கடவுள் ஆயுள் காலம் நிர்ணயித்துக் கொண்டு இருக்கிறாரா?.. * இறந்து போனவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சடங்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. ஒருகாலத்தில் வீடுகளில் நடத்தப்பட்ட சடங்குகள் இப்போது பொதுநிகழ்வாக திட்டமிட்டு மாற்றப்பட்டுவிட்டன. இதனால் வேத பார்ப்பன பண்டிதர்கள் கொள்ளை இலாபம் அடிக்கிறார்கள். இதற்கு சரியான நாளாக புரட்டாசி மாதம் அமாவாசையை தேர்வு செய்து இருக்கிறார்கள். அந்த ஒரு நாளில் மட்டும் தான் வேறு உலகத்தில் இருந்தும் மூதாதையர்களுக்கு இவர்கள் தரும் தர்ப்பணம் டெலிவெரி ஆகுமாம். இப்படி ஒரு புரட்டு! அதுவும் ஆண்களுக்கு மட்டுமே இப்படி தர்ப்பணம் செய்கின்ற உரிமை உண்டு. இப்படி...

‘குடிஅரசு’ தொகுப்பில் கழகம் சந்தித்த தடைகள்	 –   விருது வழங்கும் விழாவில் கொளத்தூர் மணி விளக்கம்

‘குடிஅரசு’ தொகுப்பில் கழகம் சந்தித்த தடைகள் – விருது வழங்கும் விழாவில் கொளத்தூர் மணி விளக்கம்

தொகுப்புகளை வெளியிட்ட பதிப்பாசிரியர் கொளத்தூர் மணிக்கு சிறந்த பதிப்பாளர் விருதை சீர் வாசகர் வட்டம் வழங்கியது.விருது ஏற்பு விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை; எனக்கு குடிஅரசு நூல் பதிப்புக்காக இந்த விருதை அளித்திருக்கிறார்கள். அதனால் அதைப் பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும். பெரியாரின் உதவியாளராக இருந்த புலவர் இமயவரம்பன் அவர்களின் முயற்சியில் தோழர்களால் திரட்டப்பட்டு அப்போது வரை இருந்த குடிஅரசு இதழ்களை படி எடுத்து (ஜெராக்ஸ்) கையால் எழுதி திருச்சி பெரியார் மாளிகையில் பிரதியெடுத்தார்கள். இரண்டு ஆண்டுகள் இந்த பணிகள் நடைபெற்றன. பெரியார் மாளிகையில் புலவர் இமயவரம்பன் அவர்கள் அதற்கென்று தேக்கு மரத்தால் செய்யப்பட்ட தனி அலமாரியில் ஆண்டு வாரியாக தனித்தனி ட்ராயரில் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். என்னை பெரியார் திடலில் 1993-94ல் சந்தித்த போது சொன்னார். “ 25 கிலோ நாப்த்தாலின் குண்டுகளை வாங்கி குடிஅரசு இதழ் அலமாரியில் வைத்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்; இன்னும் வெளியிடவில்லை என்றாலும்...

எல்லைகளைக் கடந்த சிந்தனையாளர் பெரியார்!

எல்லைகளைக் கடந்த சிந்தனையாளர் பெரியார்!

பகுத்­த­றி­வும், அறி­வி­ய­லும் ஒரே நேர்கோட்டில் இருக்­கும். அறிவின் கூர்மைதான் பகுத்­த­றிவு என்று எடுத்துச் சொன்­ன­தால்­தான், ஆக்ஸ்ஃபோர்டு பல்­கலைக்கழ­கம் அவ­ரைப் பற்றி அவர் மறைந்து இத்­தனை ஆண்டுகள் கழித்­தும் விவா­திக்­கி­றது. கேம்பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கம் புத்­த­கம் வெளியிடுகி­றது. சுய­ம­ரி­யாதை இயக்­கத்தை 1925–ஆம் ஆண்டு தொடங்­கி­னா­லும், சுயமரியாதைச் சிந்­த­னை­யா­னது பெரி­யா­ருக்கு இள­மைக் காலத்­தி­லேயே வந்து­விட்­டது. அவர் அப்­போதே அப்­ப­டித்­தான்! அவ­ரு­டைய சுயசரிதையை கொஞ்­சம் பார்த்­தால், அவர் காலத்தை மீறி செய்த புரட்­சி­கள் புரி­யும்! ஆதிக்க ஜாதி­யி­னர் வீட்­டில் தண்­ணீர் குடித்­த­தால் அவ­மா­னப்­படுத்தப்பட்டதும், தாழ்த்­தப்­பட்­டோர் வீட்­டில் தண்­ணீர் குடித்­த­தால் சொந்த வீட்­டில் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­ட­தும் சிறிய வய­தி­லேயே அவர் மன­தில் ஒரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. பெரி­யா­ரின் தங்கை மகள் அம்­மா­யிக்கு 10 வய­தி­லேயே, 13 வயது பையன்கூட திரு­ம­ண­மாகி, மண­மான அறு­ப­தா­வது நாளே மண­மகன் இறந்­து விட்­டார். மறு­ம­ணத்­துக்கு குடும்­பத்­தில் உள்ள எல்­லோ­ரும் எதிர்ப்­புத் தெரி­வித்­தா­லும், அதை­யெல்­லாம் மீறி, அந்­தப் பெண்­ணுக்கு இரண்­டா­வது திரு­ம­ணம் நடத்தி வைத்­தார். மாற்­றுச்...

பெரியார் ஆயுதம் ஏந்தாத புரட்சியாளர்-ஆக்ஸ்போர்டு பல்கலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உணர்ச்சி உரை

பெரியார் ஆயுதம் ஏந்தாத புரட்சியாளர்-ஆக்ஸ்போர்டு பல்கலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உணர்ச்சி உரை

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில்–தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிமிகு உரை! முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் 4.9.2025 அன்று இங்­கி­லாந்து நாட்­டின் ஆக்ஸ்ஃ­போர்டு பல்­க­லைக் கழ­கத்­தில், பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரியார் அவர்­க­ளின் திரு­வு­ரு­வப் படத்­தைத் திறந்துவைத்து உரை­யாற்­று­கை­யில் “தந்தை பெரி­யார்தர­ணி­ம­ய­மாகி விட்­டார்” என்று உணர்ச்சிமேலி­டக் குறிப்­பிட்­டார். முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஆற்றிய உரை வரு­மாறு:– பல நூறு ஆண்­டு­களாக, உல­கின் சிறந்த அறி­வா­ளி­களை உரு­வாக்கும் இந்த ஆக்ஸ்ஃ­போர்டு பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பேசு­வதை நான் பெருமை­யா­கக் கருதுகிறேன். இப்­போது புள­காங்­கித உணர்­வோடு உங்­கள் முன்­னால் நான் நின்று கொண்­டி­ருக்கிறேன். பெரி­யா­ரின் பேரன் என்ற கம்­பீ­ரத்து­டன் நிற்­கி­றேன்! இங்கே நான் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர், தெற்­கா­சிய அர­சி­யலை புரட்­டிப் போட்ட இயக்­க­மான தி.மு.கழ­கத்­தின் தலை­வர் என்ற தகு­தி­யு­டன் மட்­டு­மல்ல; பெரி­யா­ரின் பேரன் என்­கின்ற கம்­பீ­ரத்­து­டன் உங்­கள் முன்­னால் நான்நின்று கொண்­டி­ருக்­கி­றேன். பகுத்­த­றி­வுப் பக­ல­வன் அறி­வா­சான் தந்தை பெரியாரின் படத்தை...

உலக ஆய்வாளர்கள் பங்கேற்ற பெரியார் கருத்தரங்கம்

உலக ஆய்வாளர்கள் பங்கேற்ற பெரியார் கருத்தரங்கம்

தொன்­மை­யான தமிழ் பண்­பாடு உலக சிந்­த­னைக்கு அளித்த எத்­த­னையோ கொடை­க­ளில் இரண்­டினை முதன்­மைப்­படுத்திச் சொல்ல வேண்­டும் என்­றால் அது ஐயன் திரு­வள்­ளு­வ­ரின் திருக்குறளும், பெரியாரின் சிந்­த­னை­க­ளும் என­லாம். திரு­வள்­ளு­வர் தொடர்ந்து மொழி­யாக்­கம் செய்­யப்­பட்டு வந்­தி­ருக்­கி­றார். லண்­டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருக்­கு­றளை 1886-ஆம் ஆண்டே மொழி­யாக்­கம் செய்த ஜி.யு.போப் அவர்­க­ளின் கல்­ல­றைக்கு சென்று மரி­யாதை செலுத்தியுள்ளார். அத­னால் திருக்­கு­றள் உல­கில் பர­வ­லாக அறி­யப்பட்­டது. பெரி­யா­ரைப் பொறுத்­த­வரை அவர் தன் சிந்­தனைகளைத் தொகுத்து நூலாக எழு­த­வில்லை. ஒரு சில பிர­சு­ரங்­கள் அவர் பெய­ரில் வந்துள்ளனவே தவிர, ஒரு விரி­வான அர­சி­யல் தத்­துவ நூலா­கவோ, சித்­தாந்த நூலா­கவோ எழு­த­வில்லை. மாறாக அவர் தொடர்ந்து மக்களி­டையே பிரச்­சா­ரம் செய்து பெரும் சிந்­த­னைப் புரட்­சியை பொது­மன்­றத்­தில் உரு­வாக்­கி­ய­வர். செயல்­முறை தத்­து­வம் (philosophical praxis) என்­பதை மேற்­கொண்­ட­வர். கற்­றோ­ருக்­கான நூல்­களை எழுதுவதைவிட, அனைத்து மக்­க­ளை­யும் சிந்­திக்க வைத்து சுய­ம­ரியா­தையை சுடர் விடச் செய்­வதையே அவர் முக்­கி­யப் பணி­யா­கக் கரு­தி­னார். அவர்...

கொளத்தூர் மணியின் மிகச்சிறந்த ஆய்வுகளின் தொகுப்பு – பேரா.வீ.அரசு

கொளத்தூர் மணியின் மிகச்சிறந்த ஆய்வுகளின் தொகுப்பு – பேரா.வீ.அரசு

எதிர்நீச்சல் போட்டு குடிஅரசு தொகுப்பை வெளியிட்டு பதிப்புத் துறையில் சாதனை புரிந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களுக்கு சீர் வாசகர் வட்டம் சிறந்த பதிப்பாளர் விருது வழங்கி ஒரு லட்சம் பணம் முடிப்பையும் வழங்கியது. விருது வழங்கி சிறப்புரையாற்றினார் பேராசிரியர், சென்னை பல்கலைக்கழக மேனாள் தமிழ் இலக்கியத்துறை தலைவர் வீ.அரசு. அவரது உரையில் இருந்து…. சீர்வாசகர் வட்டம் தோழர் மணி அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான இந்த விருதை வழங்குகிறது. தோழர் மணி என்ன செய்திருக்கிறார்? நாங்கள் எல்லாம் 19-ஆம் நூற்றாண்டில் உருவான மார்க்ஸ், எங்கல்ஸ் உலகத்துக்கு தந்த ஒரு மிகப்பெரிய தத்துவ மரபின் மீது ஈடுபாடு கொண்டு அதை வாசித்தவர்கள், அதோடு வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள். அது உலகம் முழுவதும் என்னென்ன வடிவத்தில் எப்படி எப்படி எல்லாம் மாற்றிக்கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறது என்பது பற்றி மிகுந்த அக்கறை உடையவர்கள். லத்தின் அமெரிக்க நாடுகளிலே அது...

.    சமத்துவபுரமாகிய நரசிம்மன்நகர் (14)

. சமத்துவபுரமாகிய நரசிம்மன்நகர் (14)

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை ‘முரசொலியில்’ ர.பிரகாசு எழுதி வருகிறார். `நரசிம்மன் நகர்’ கடந்த இதழின் தொடர்ச்சி இது. ஆனைமலை ஆற்றங்கரையை அடுத்து, நரசிம்மனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று இருந்தது. மக்கள் போக்குவரத்து நிறைந்த பகுதி. அங்குள்ள நெடுஞ்சாலையை யொட்டி திராவிடர் கழகக் கட்டடமும் அதில் பகுத்தறிவுப் படிப்பகமும் அமைக்கப் பட்டிருந்தன. அங்குள்ள நாயக்கர் தெருவில்தான் நரசிம்மனின் வீடு இருந்தது. அந்த வீட்டிற்குள் பெரியாரின் வேன் வந்து செல்வதற்காகவே நுழைவாயிலில் தனிவழி அமைத்திருந்தார். வீட்டின் புல்தரையில் பெரியாருடன் அமர்ந்து பேசிய வரலாறும் உண்டு. இத்தகைய பேச்சுக்களின் ஊடாக, நரசிம்மனுக்கு மூன்று முக்கிய ஆலோசனைகளை வழங்கியிருந்தார் பெரியார். 1) தன்னிடம் இருக்கும் நிலத்திலோ அல்லது புதிதாக வாங்கியோ தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றாக இருக்கும் வகையில் பகிர்ந்தளிக்க வேண்டும். 2) தனது செல்வாக்கைப்...

ஊர்-சேரி பாகுபாட்டை ஒழித்த ‘ஆனைமலை’

ஊர்-சேரி பாகுபாட்டை ஒழித்த ‘ஆனைமலை’

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை ‘முரசொலியில்’ ர.பிரகாசு எழுதி வருகிறார். `நரசிம்மன் நகர்’ வரலாறு இது. 1938-ஆம் ஆண்டில் முதல் இந்தி எதிர்ப்புப் போரில்’ பங்கேற்று தந்தை பெரியார் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்ட போது, அவருடன் சிறையில் இருந்தவர்களில் ஒருவர் `ஆனைமலை’ நரசிம்மன். பட்டம் படித்தவர் என்பதால், சிறையில் முதல் வகுப்பை அதிகாரிகள் வழங்க, தன் தோழர்கள் எல்லோரும் சாதாரண வகுப்பில் இருக்க, தனக்கு மட்டும் முதல் வகுப்பு வேண்டாம் என்று மறுத்துவிட்டார் நரசிம்மன். ஆனால், ஆனைமலையில் வசதி படைத்த, செல்வாக்கான குடும்பம் இவருடையது. ராஜாஜி, சத்தியமூர்த்தி அய்யர் என அந்த காலத்தில் இவர் வீட்டில் பல தலைவர்கள் தங்கிச் சென்றுள்ளனர். 1906-ஆம் ஆண்டு நாராயண நாயக்கர்-குஞ்சம்மாள் தம்பதிக்கு கடைசி மகனாகப் பிறந்தவர் நரசிம்மன். சென்னை...

கடவுளை மறுத்த ஆன்மீகவாதி    கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-12  விடுதலை இராசேந்திரன்

கடவுளை மறுத்த ஆன்மீகவாதி கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-12 விடுதலை இராசேந்திரன்

‘மனம்’ என்று ஒன்று இல்லை அது மூளை என்ற ஒரு பொருளின் செயல்பாடு. மனதை ஒருமுகப்படுத்துவது ஆன்மிகம் சார்ந்தது அல்ல! அது ஒரு பயிற்சியே என்ற கட்டுரையை கடந்த இதழில் ‘பெரியார் முழக்கம்’ வெளியிட்டது. கடவுள் வழி நடத்தவில்லை, மனித மூளை தான் உடலை இயக்குகிறது என்பதே அந்த கட்டுரையின் மய்யமான கருத்து. இதற்கு நேர் மாறாக ‘மனமே’ மனிதரை இயக்குகிறது. தனி மனிதரின் ‘மன மாற்றமே’ அனைத்துக்கும் தீர்வு. மனிதருக்கு வெளியே புறத்தில் நிகழும் சமூகப் புரட்சிகள் உயிரற்றவை, நானே என்னை புரிந்து கொள்ளாத வரை வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல், மற்றவர்களை எப்படி புரிந்து கொள்ள முடியும் என்ற சிந்தனையை உலகம் முழுதும் ஒருவர் பரப்பினார். உலகப் புகழ்பெற்ற தத்துவஞானியாக அவர் பேசப்பட்டார், அவரது பெயர் ‘ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி’. பொருளியல் நிகழ்வுகளை விலக்கிவிட்டு ‘மனப்புரட்சி’ பேசிய அவரது பின்னணியை சுருக்கமாக விளக்குவோம். 1875-இல் மதனப்பள்ளியில் பார்ப்பன குடும்பத்தில் அவர்...

கடவுளின் குரலை  “மனம்” பேசுகிறதா?  கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை (11)

கடவுளின் குரலை “மனம்” பேசுகிறதா? கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை (11)

கேள்வி: மனம் ஒரு குரங்கு, மனசை அடக்கு என்று ஆன்மிகவாதிகள் கூறுகிறார்கள். மனமும், சிந்தனையும் ஒன்றா? ‘சிந்தனைசெய் மனமே’ என்று திரைப்படப் பாடல் சொல்கிறதே! மனதும் அறிவும் வெவ்வேறுதானே! அப்படியாயின், மன நிம்மதிக்கு ஆன்மீகம் என்பது சரிதானே? மனசெல்லாம் மத்தாப்பு, மனநிம்மதி, மனநிறைவு, மனசாட்சி இப்படி ஏராளமான சொற்களை அன்றாடம் புழங்கிக்கொண்டிருக்கிறோம். மனம் ஒரு குரங்கு என்று ஆன்மீகவாதிகள் மட்டுமா சொன்னார்கள்? இல்லை. “மனசாட்சி தூங்கும் போது மனக்குரங்கு ஊர்சுற்றக் கிளம்பிவிடுகிறது” என்பது கலைஞர் சினிமா வசனமும் கூட. மார்க்சின் எழுத்துகளில் கூட மனசாட்சி என்ற சொல்லைக் காண முடியும். மனம் என்ற சொல் ஆன்மீகத்துக்கு பட்டாபோட்ட சொல் அல்ல; ஆனால் எது மனம் என்பதை விளக்குவதில்தான் ஆன்மீகவாதிகளும் பகுத்தறிவாளர்களும் மாறுபடுகின்றனர். மனம் என்பது தனித்து சுயம்புவாக இயங்குவதாக ஆன்மீகவாதிகள் சித்தரிப்பர். ஆனால் மனம் என்பது மூளை என்ற உறுப்பின் செயல்பாடென அறிவியலாளர் கூறுவர். மகிழ்ச்சி, கோபம் என பல்வேறு உணர்ச்சிகளை...

சுயமரியாதைக்காக கருப்புச் சட்டை ஏந்திய ‘கீழப்பாலையூர்’ (13)

சுயமரியாதைக்காக கருப்புச் சட்டை ஏந்திய ‘கீழப்பாலையூர்’ (13)

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை ‘முரசொலியில்’ ர.பிரகாசு எழுதி வருகிறார். கீழப்பாலையூர் வரலாறு இது. ராஜராஜன் காலத்தில் சமணப்பள்ளியைக் கொண்டிருந்த ஊர், தஞ்சை பெரிய கோயிலின் தென்புறக் கருவறைச் சுவற்றில் பெரிய நெல் களம் குறித்த வரலாற்றுக் குறிப்பு என திருவாரூரில் உள்ள கீழப்பாலையூருக்கு வரலாற்றுப் பெருமிதங்கள் ஏராளம் சொல்லப்படுகின்றன. ஆனால், டெல்டா பகுதியில் நிலவிய கொடூரமான ஜாதிய- பண்ணை அடிமைத் தனத்திற்குத் தப்பாத பகுதி என்ற வரலாறு பதிவாகவில்லை. சுற்றியிருந்த சுமார் 50 கிராமங்களிலும் நிலமும் ஆதிக்கமும் விரல் விட்டு எண்ணக்கூடிய பார்ப்பனர்கள் வசம்தான் இருந்தன. ராமசுப்ரமணிய ஐயர், சேஷாத்ரி ஐயர் போன்றோரிடம்தான் கீழப்பாலையூர் மண்ணும் மக்களும் சிக்குண்டு இருந்தனர். அக்ரஹாரத் தெருவுக்குள் ஆடு, மாடுகள் நுழையலாம். ஆனால், ஐயர் வயலில் கூலியாட்களாக இருந்த தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்துவிடக்கூடாது. பிற்படுத்தப்பட்டவர்கள் ஆடு,...

இந்தியாவின் முதல் நாத்திகர் மாநாடு  – கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(10)

இந்தியாவின் முதல் நாத்திகர் மாநாடு – கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(10)

நம் நாட்டு வரலாற்றில் முன் எப்போதும் நடந்திராத புதுமையானதொரு மாநாடு சென்னை எழும்பூரில் அமைந்த ‘ஒயிட்ஸ் மெமோரியல் ஹால்’ என்ற மண்டபத்தில் 31-12-1933 அன்று வெற்றியாக நடந்தேறியிருக்கிறது. நாஸ்திகர் மகாநாடு என்று அழைக்கப்பட்ட அம்மாநாட்டின் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை விரிவாகப் ‘புரட்சி’ ஏடு தந்தது. நாடெங்கிலுமிருந்து கணக்கற்ற எண்ணிக்கையில் மக்கள் வந்து கலந்து கொண்டார்கள். குறிப்பாக, படிப்பறிவு பெற்ற நிறையப் பெண் வீராங்கனைகள் மாநாட்டில் பங்கேற்ற செய்தியைப் படிக்கும்போது பெருமையாக இருக்கின்றது. இம்மாநாட்டில் கருத்துரைகள் ஆற்றிய சான்றோர்தம் சுவையான சில சொற்பொழிவுகள் படிப்பவர் எவருக்கும் உணர்ச்சியூட்டும் என்பதில் அய்யமில்லை. வரவேற்புரை நிகழ்த்திய சி.கே. குப்புசாமியின் கருத்துரை ஒவ்வொருவருக்கும் சிந்தனை விருந்தாகும். “நாஸ்திகர்களெல்லாம் ஒன்று சேர்ந்து சென்னை மாகாணத்தில் முதன் முதலாக மாகாண நாஸ்திகர் மகாநாட்டைக் கூட்டியிருக்கிறோம். இதிலிருந்து உலகத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், பாமர மக்களுக்கும் நாஸ்திக உணர்ச்சி அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நாஸ்திகம் என்றால் என்ன? சர்வசக்தி, சமகுணம், தயாளகுணம், ஜீவகாருண்யம்,...

மனிதம்-அடையாளம்; ஜாதி- அவமானம் மடியட்டும் ஆணவப் படுகொலைகள்

மனிதம்-அடையாளம்; ஜாதி- அவமானம் மடியட்டும் ஆணவப் படுகொலைகள்

ஜாதிப் பெருமைக்குள் புதையுண்டு கிடக்கும் ஜாதியவாதிகளே! உங்களிடம் சில கேள்விகள்: ஜாதி என்ற அடையாளம் நாம் தேர்வு செய்ததா? படிப்பு, தொழில், வாழ்க்கையைத் தான் நாம் தேர்வு செய்கிறோம். அதேபோல் ஜாதியை நாம் தேர்வு செய்கிறோமா? ஒரு காலத்தில் நமது மூதாதையர்கள் பிறந்த ஜாதிக்கு ஒதுக்கப்பட்ட தொழிலை மட்டும் செய்து வந்தார்கள் இப்போது அந்த தொழில்களை நாம் செய்கிறோமா? இல்லை. முடி வெட்டுவது, துணி துவைப்பது, செருப்பு தைப்பது, மலம் அள்ளுவது, செக்கு ஆட்டுவதும் ஜாதிக்கான தொழில் என்ற நிலையை இப்போது நாம் பின்பற்றுகிறோமா? ஜாதியை உதறி விட்டு வேறு தொழில்களுக்கு மாறிவிட்டோமா இல்லையா? இவற்றில் எல்லாம் ஜாதியைக் கைவிடலாம்; ஆனால் திருமணத்தில் மட்டும் கட்டாயமாக ஜாதியைப் பின்பற்ற வேண்டுமா? மேல் ஜாதி, கீழ் ஜாதி, தீண்டப்படாத ஜாதி என்று நம்மைப் பிரித்தார்கள். கெட்ட ஜாதி, நல்ல ஜாதி என்று இழிவுபடுத்தினார்கள்; நான் ஏன் கீழ் ஜாதி என்று ஜாதியை எதிர்த்து...

கொக்கூருக்கு குதிரை வண்டியில் வந்த பெரியார்

கொக்கூருக்கு குதிரை வண்டியில் வந்த பெரியார்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ர.பிரகாசு எழுதி வருகிறார். கொக்கூர் என்ற ஊரின் வரலாறு இது.. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் கொக்கூர். 1940-கள் வரை பார்ப்பனிய மேலாதிக்கம் கொடூரமாக கோலோச்சியது, அந்தக் கிராமத்தில். கிருஷ்ணமூர்த்தி ஐயரின் மகன் குஞ்சிதபாதம் குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் மொத்த ஊரும். பார்ப்பனர்களைத் தவிர, வேறு யாரும் மேல் சட்டை அணியக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாது, பள்ளிக்கூடம் செல்லக்கூடாது, முக்கிய சாலைகளைப் பயன்படுத்தக் கூடாது. தோளில் துண்டு, தலைப்பாகை கட்டவும் அனுமதி கிடையாது, ஊர்க்கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது. பார்ப்பனர்களின் வயல்களில்தான் வேலை செய்ய வேண்டும். ஐயர் தரும் மிகச்சொற்ப நெல்லுக்காக, அக்ரஹாரத்துக்கு வெளியே தென்னை மரத் தடுப்புக்குப் பின்னால் வரிசையில் கையைக் கட்டிக்கொண்டு நிற்க வேண்டும். ஐயரின் ஆட்கள் தரும்...

பெரியார் நடத்திய `ரிவோல்ட்’ வெளியிட்ட பட்டியல் மதவெறிக்கு உயிர்ப் பலியானவர்கள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை (9)

பெரியார் நடத்திய `ரிவோல்ட்’ வெளியிட்ட பட்டியல் மதவெறிக்கு உயிர்ப் பலியானவர்கள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை (9)

கடவுள், மதத்தை எதிர்த்ததால் கொடூரமாக கொல்லப்பட்டவர்களின் பட்டியலை பெரியார் நடத்திய `ரிவோல்ட்’ ஆங்கில வார ஏடு, 7-7-1929 இதழில் வெளியிட்டது. அதன் விவரம். புதிய சிந்தனைகளை வெளியிட்டமைக்காகப் பண்டைய கிரேக்க அறிஞர் பித்தகோரஸ் பழமை வெறியர்களால் பாய்ந்து துரத்தப்பட்டு, கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார். இளைஞர்களை அரசு ஏற்றுக் கொண்ட `கடவுளர்’ களிடமிருந்து பிரித்தார் என்று குற்றஞ்சுமத்தப்பட்டு, நஞ்சு தரப்பட்டு சாகடிக்கப்பட்டார் சாக்ரட்டீஸ். கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் மத நிறுவனத்தைத் துணிவாக எதிர்த்த ப்ரெஷ்யாவின் ஆர்னால்டு தூக்கு மரத்தில் தொங்கவிடப்பட்டார். மத நிறுவனத்தின் தீயபண்புகளை 15ஆம் நூற்றாண்டில் எதிர்த்த இத்தாலியச் சீர்திருத்தக்காரர் சவோன ரோலாவை தேடிப் பிடித்து உயிருடன் எரித்தனர். 16-ஆம் நூற்றாண்டில் அறிவு விடுதலை வேண்டிப் போராடிய பாவியாவின் உல்ரிச் வான் ஹட்டன் உடைமைகள் அனைத்தையும் இழந்து விட்ட நிலையில் தன்னைக் காத்துக் கொள்ளும் பொருட்டு அடிமட்டப் பணியாளர் படையில் சேருமாறு நேரிட்டது. அதே நூற்றாண்டில் சீர்திருத்தக்காரர் தாமஸ்முவென்ஸர்...

`இந்தியா டுடே’ ஆய்வறிக்கை இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்

`இந்தியா டுடே’ ஆய்வறிக்கை இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகத் திறன் மேன்மையை ஐ.நா. அமைப்பும், ஒன்றிய அரசின் நிறுவனங்களும் பாராட்டியுள்ளன. தமிழ்நாடு இந்திய நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் முன்னணி மாநிலமாக திகழ்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 2021 மே மாதம் 7ம் நாள் பொறுப்பேற்றது முதல் நிறைவேற்றி வரும் புதுமையான, புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாடு மிகக் குறுகிய காலத்தில் பல வெற்றிகளை பெற்று சாதனைகள் புரிந்து தேசிய அளவில் முதல் இடம் என்னும் பெருமையை நிலைநாட்டியுள்ளது. ‘இந்தியா டூடே ஆங்கில இதழ்’ ஒன்றின் இயக்குநர் கூறுகையில், “இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் செயல்பாடுகளை கணித்ததாகவும், அதில் ஒட்டு மொத்த செயல் திறனிலும் சிறந்து விளங்கும் பெரிய மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும்” குறிப்பிட்டிருந்தார். முதலமைச்சர், “இந்த கடிதத்தைப் படித்தபோது எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை; இது தனிப்பட்ட எனக்கு கிடைத்த பெருமை அல்ல, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த பெருமையாகும். தமிழ்நாட்டிற்கு...

மதப் பண்டிகைகளை மறுக்கும் மேலமெஞ்ஞானபுரம்!

மதப் பண்டிகைகளை மறுக்கும் மேலமெஞ்ஞானபுரம்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ர.பிரகாஷ் எழுதி வருகிறார். மேலமெஞ்ஞானபுரம் என்ற ஊரின் வரலாறு இது.. 1967, தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த ஆண்டு. தமிழ்நாட்டு இளைஞர்களைத் தன்னகத்தே வாரி அணைத்து வைத்திருந்த தி.மு.கழகத்தின் சூழலுக்குத் தப்பாமல், தங்களையும் இணைத்திருந்த உடன்பிறப்புகள் சீ.தங்கத்துரை, சீ.டேவிட் செல்லத்துரை. தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள மேலமெஞ்ஞானபுரம் இவர்களின் சொந்த ஊர். மாணவப் பருவத்திலேயே மதத்தைக் கடந்து, பகுத்தறிவுக் கொள்கைகளின் மீது நாட்டம் கொண்டிருந்தனர். தி.மு.க. கூட்டங்களில் பங்கேற்பதும், தேர்தல் பிரச்சார நாடகங்களில் நடிப்பதும், சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்வதும் இவர்களின் பணி. கழகம் ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில், சட்டமன்ற உறுப்பினர் ஆலடி அருணா அவர்களின் பரிந்துரையால் தங்கத்துரைக்கு மின்சார வாரியத்தில் வேலை. தி.மு.க. உருவாகி அப்போது 20 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், பெரியாரின்...

செயற்கை உயிர் வந்து விட்டது கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(8)     – விடுதலை இராசேந்திரன்

செயற்கை உயிர் வந்து விட்டது கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(8) – விடுதலை இராசேந்திரன்

‘இது இறைவன் கொடுத்த உடல்’ என்ற நம்பிக்கையை பொது சமூகம் ஒரளவு புறக்கணித்து விட்டது என்றே கூறலாம். குழந்தை பிறப்புக்கு இறைவனே காரணம் என்ற கூற்று வாழ்வியலில் முறியடிக்கப்பட்டு விட்டது. குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தை அரசாங்கங்கள் செயல்படுத்தி வருகின்றன. அதில் வெற்றியும் பெற்று விட்டன. கருத்தடைச் சாதனங்களை கடவுள் நம்பிக்கையாளர்களே பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். குழந்தை இல்லாதவர்கள் பரிகார பூஜைகளை மட்டுமே நடத்தி வந்தனர். இப்போது கருத்தரிப்பு மருத்துவ மய்யங்கள் ஊருக்கு ஊர் வந்துவிட்டன. சினை முட்டை, விந்துக்களை இணைத்து அறிவியல் முறையில் கருவை உருவாக்குகிறார்கள். கருவை சுமக்க வாடகை பெண்களும் வந்து விட்டனர். கருத்தடைத் திட்டத்தை பெரியார் தீவிரமாக ஆதரித்தார். ‘கர்ப ஆட்சி’ என்ற நூலையும் அவரே வெளியிட்டார். குடும்ப வருமானம், சிக்கன வாழ்க்கை என்று குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை பொருளியல் பார்வையில் பலரும் அணுகினார்கள். ஆனால் பெரியார் பார்வை இதில் மாறுபட்டது. பெண்ணடிமைக்கு முக்கிய...

பண்ணையார்களை பணியவைத்த கொரடாச்சேரி

பண்ணையார்களை பணியவைத்த கொரடாச்சேரி

முரசொலியில் பெரியார் மண் தொடரில் ர.பிரகாசு எழுதி வரும் கட்டுரை தொடரில் நாகை மாவட்டம் கொரடாச்சேரி என்ற ஊரின் வரலாறு இது. எல்லா சாலைகளும் ரோமாபுரியை நோக்கி’ என்பதுபோல, திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் ‘எல்லா சாலைகளும் பெரியாரை நோக்கி’த்தான். இங்குள்ள கண்கொடுத்தவனிதம் கிராமம், இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான இணைப்புச் சங்கிலி. அந்த ஊரில், எந்தத் திசையில் சென்றாலும், தந்தை பெரியார் சிலையாக இருப்பார். மொத்தம் 7 சிலைகள் உள்ளன. கருப்புச்சட்டை சகிதமாய் எவரேனும் இன்றும் தென்படுவர். அங்கு அந்தக் கருப்புச் சட்டைகள் உருவான காலகட்டம் 1950. நேரடியாகப் பெரியாரின் பேச்சைக் கேட்டோ, எழுத்தைப் படித்தோ கருப்புச்சட்டை அணிந்தவர்கள் அல்ல அவர்கள். ஆனால், தாங்கள் சந்தித்த அடக்குமுறைக்கு எதிரான ஆயுதமாகக் கருப்புச்சட்டையைக் கருதினர். அந்த ஆயுதத்தை அவர்கள் ஏந்த பாலமாக இருந்தது திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம். கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள கண்கொடுத்தவனிதம், பருத்தியூர், விடையபுரம், வடபாதி, தென்பாதி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட இருபதுக்கும்...

பனகல் அரசரும் திராவிட மாடலும்

பனகல் அரசரும் திராவிட மாடலும்

நீதிக் கட்சியின் தலைவர்; இரண்டு முறை சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று! (09.07.1866) மகத்தான சாதனைகளை புரிந்தவர். தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சிக்கும் பனகல் அரசரின் ஆட்சிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.அரசு பதிவேடுகளில் `பறையர் பஞ்சமர்’ என்ற இழிசொற்களை நீக்கி ஆதிதிராவிடர் என்று அறிவிக்க ஆணையிட்டவர் பனகல்அரசர். திராவிட மாடல் ஆட்சி ஆதி திராவிட நல விடுதிகளை `சமூக நீதி’ விடுதிகளாக பெயர் மாற்றம் செய்துள்ளது. அவமானச் சொல்லான `காலனி’ என்ற சொல்லை அரசு பதிவேடுகளில் இருந்து நீக்கி இருக்கிறது. மாநிலங்களின் உரிமைக்காக திராவிட மாடல் ஆட்சி குரல் கொடுப்பதைப் போல் பனகல் அரசரும் போராடினார். பிரிட்டிஷ் அரசிடம் இருந்த மருத்துவத் துறையை கடுமையாக எதிர்த்துப் போராடி, மாகாண சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மாநில உரிமைக்கு கொண்டு வந்தவர் பனகல் அரசர். முதல் இந்திய மருத்துவக்‌ கல்லூரியை அவர்தான் நிறுவினார். இன்று மும்மொழி வழியாக...

மூளையின் உற்பத்தியே கடவுள் உணர்ச்சி     கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(7) -விடுதலை இராசேந்திரன்

மூளையின் உற்பத்தியே கடவுள் உணர்ச்சி கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(7) -விடுதலை இராசேந்திரன்

விபத்துகளும் மரணங்களும் கடவுள் விதிப்படிதான் நிகழ்கின்றன என்று மதவாதிகள் கூறுகிறார்கள். அஹமதாபாத் விமான விபத்தில் 241 பேர் இறந்தார்கள். விபத்துக்களை எவராலும் தடுக்க முடியாது; எல்லாம் விதிவசம் என்று கூறினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஆனால் மக்கள் அமித் ஷாவின் இந்த கருத்தை நம்புவதற்குத் தயாராக இல்லை. விமானத்தின் கருப்புப் பெட்டியை உடைத்து பார்த்தால் அங்கே “விதியோ கடவுளோ இல்லை”. விமான விபத்துக்குக் காரணம் எரிபொருள் நிறுத்தப்பட்டது தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எரிபொருளை நிறுத்தியது யார் என்ற அழுத்தமான சந்தேகமே இப்போது எழுந்துள்ளது. கடவுள் தான் காரணம் என்று சொன்னால் மக்கள் நம்புவார்களா? நிச்சயம் நம்பமாட்டார்கள், இங்கே கடவுள் மறுப்பு வந்து விடுகிறது. கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட மன்னர்கள் ஆட்சி இப்போது இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி வந்துவிட்ட பிறகு கடவுள் ஓரங்கட்டப்பட்டு விட்டார். “நீங்கள் என்ன சொன்னாலும் கோயிலுக்குப் போனால் ஒரு ஃபீலிங் வருது பாருங்க.. அதுதான்...

கோயில்களைப் பள்ளிகளாக மாற்றிய பூந்தோட்டம்!‌

கோயில்களைப் பள்ளிகளாக மாற்றிய பூந்தோட்டம்!‌

வரலாற்று பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த சமூக புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரை தொடரை முரசொலியில் ர.பிரகாசு எழுதி வருகிறார். இது பூந்தோட்டத்தில் நடந்த புரட்சி! “எங்கள் ஊரில் முன்பு கோயில் இருந்தது. பெரியார் ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்தார். ‘இந்த ஊர்ல இத்தன கோயில் இருக்கே? எத்தனை பள்ளிக்கூடம் இருக்கு? எவ்வளவு தற்குறியாவும், கைநாட்டுப் பசங்களாகவும் திரியறீங்க? பொம்பளங்கள, புள்ளை பெக்குற மெஷினாட்டம் வச்சிருக்கீங்க! பெண்களைப் படிக்க வச்சிங்கன்னா மொத்த சமுதாயத்தையும் காப்பாத்துவாங்க’ என்று பேசினார். உடனே கோயில்கள் எல்லாம் பள்ளிகளாக மாறிவிட்டன. இப்போது வீட்டுக்கு ஒரு குழந்தையை ஆசிரியருக்குப் படிக்க வைக்கிறோம். அதுவும் பெண் குழந்தையை” என்று கூறியுள்ளார். தினமணியின் மகளிர் மலர் ஒன்றில் ஒருமுறை மனோரமா அளித்த நேர்காணலில் சொன்ன தகவல் இது. மனோரமா சொன்ன அந்த ஊர், கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு அருகே உள்ள பூந்தோட்டம் கிராமம்....

‘டார்வின்’ நேருக்கு நேர் நடந்த விவாதம்! கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(6) -விடுதலை இராசேந்திரன்

‘டார்வின்’ நேருக்கு நேர் நடந்த விவாதம்! கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(6) -விடுதலை இராசேந்திரன்

உயிர்கள் எப்படி தோன்றின? இந்த கேள்விக்கான பதில்கள் காலத்துக்கு ஏற்றார் போல் மாறிக்கொண்டிருக்கின்றன. இந்த கேள்வி எப்போது உருவானது? மனித மூளை உருவான பிறகுதான். கடவுளை, மதத்தை, ஜாதியை உருவாக்கியது மனித மூளை தான். ஆதிசேஷன் என்ற பாம்புதான் பூமியைத் தாங்கிக் கொண்டு இருப்பதாக இந்து புராணங்கள் கூறுகின்றன. நானே கடவுள்; பக்தர்களைக் காக்கவும் வர்ண தர்மத்தை நிலைநாட்டவும் நான் வந்திருக்கிறேன். தர்மம் மீறப்படும்போது நான் அவதாரம் எடுத்து வருவேன். அது சாம்ப வாமி யுகே, யுகே என்று கீதையில் கிருஷ்ண பகவான் கூறுவதாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல கடவுளே மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்று படைத்தார் என்றும் கீதை கூறுகிறது. இந்த மனிதர்களை வர்ண பாகுபாடுடன் உயிரையும் உடலையும் தந்து பூமிக்கு அனுப் பியவர்கள் கடவுள்கள் தான் என்ற நம்பிக்கை மக்கள் மீது திணிக்கப்பட்டது. உண்மையில் கடவுள் எந்த மனிதரையும் படைக்கவில்லை. அது...

‘இடையாற்றுமங்கல’ புரட்சி!

‘இடையாற்றுமங்கல’ புரட்சி!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ர.பிரகாஷ் எழுதி வருகிறார். லால்குடி இடையாற்று மங்கலத்தில் பெரியார் தொண்டர்கள் பண்ணை ஆதிக்கத்தை எதிர்த்த சுருக்கமான வரலாறு. பகுத்தறிவுக் கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் ஊர்களைப் பற்றிய பதிவாக ஒரு தொடர். கீழத்தஞ்சையில் மட்டும் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இருந்தனர். குடந்தையில் அதன் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த ஜோசப்பை லால்குடிக்கு அனுப்பினார் பெரியார். `விளைச்சலைச் சமமாகப் பங்கிடு’, `நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கு’ போன்ற முழக்கங்களை விவசாயக் கூலிகள் மனதில் ஆழமாகப் பதியச் செய்தார் ஜோசப். ஊர்வலங்கள், பிரச்சாரங்கள், துண்டறிக்கை விநியோகம் என பெரியார் கொள்கைகளும் சேர்ந்து பரப்பப்பட்டன. பண்ணையாளர்களோடு தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கொண்டையம்பட்டி செட்டியார் பண்ணை படியாததால், அறுவடையை மொத்தமாக எடுத்துக்கொள்வது என முடிவு செய்தனர்....

கடவுளின் இருப்பை உடைக்கும் கேள்விகள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(5) -விடுதலை இராசேந்திரன்

கடவுளின் இருப்பை உடைக்கும் கேள்விகள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(5) -விடுதலை இராசேந்திரன்

உலகத்தையே உலுக்கியது அகமதாபாத் விமான விபத்து. பயணித்தவர்களில் ஒருவரைத் தவிர 234 பயணிகளும் மரணமடைந்து விட்டார்கள். கடவுள் இப்படி ஒரு தண்டனையைத் தர வேண்டுமா? என்ற கேள்வியை கடவுள் நம்பிக்கையாளர்கள் எவருமே கேட்கவில்லை. காசாவில் 54,000 அப்பாவி மக்களை இஸ்ரேல் படுகொலை செய்வதை கடவுள் ஏன் நிறுத்தவில்லை என்ற கேள்வியையும் கடவுளை நோக்கி எவரும் கேட்கவில்லை. இஸ்ரேல் ஈரான் மீது குண்டு வீசுகிறது, ஈரான் பதிலளித்திருக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக குண்டு வீசுகிறது. நாட்டில் அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் நான் அவதாரம் எடுத்து வருவேன் என்று கூறிய ‘கிருஷ்ண பகவான்’ ஏன் வரவில்லை என்று எந்த கீதை பக்தர்களாவது கேட்டர்களா? கேட்கவில்லை. மாறாக என்ன நடந்தது? விமான விபத்தையும் இஸ்லாமிய எதிர்ப்புக்கு பயன்படுத்தினர். விபத்துக்குள்ளான விமானத்தை இஸ்லாமிய நாடான துருக்கியின் நிறுவனம் ஒன்று பராமரிக்கிறது. எனவே விபத்தில் இஸ்லாமிய சதி இருக்கிறது என்றார் ஒருவர். அவர்தான் சங்கிகளின் ஊது குழலான...

நில உரிமைக்குப் போராடிய ‘இடையாற்றுமங்கலம்’

நில உரிமைக்குப் போராடிய ‘இடையாற்றுமங்கலம்’

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரை தொடரை முரசொலையில் ர.பிரகாஷ் எழுதி வருகிறார். லால்குடி இடையாற்று மங்கலத்தில் பெரியார் தொண்டர்கள் பண்ணை ஆதிக்கத்தை எதிர்த்த சுருக்கமான வரலாறு. `முதலில் ஒழிக்கப்பட வேண்டியது, `வர்க்க வேறுபாடா`, `சாதி வேறுபாடா’ என்பதில் தந்தை பெரியாருக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் இடையில் கருத்து மாறுபாடு இருந்தது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியைப் போலவே சாதியப் பிரச்சினையுடன் வர்க்க அடிமைத்தனத்தையும் ஒழிக்க, பண்ணை ஆதிக்கத்துக்கு எதிராக களத்தில் இறங்கிப் போராடியது பெரியாரால் தொடங்கப்பட்ட `திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம்’. அப்படி ஒரு போராட்டத்தால் பலன் அடைந்த கிராமம்தான் இடையாற்று சதுர்வேதிமங்கலம். 1950-கள் வரை லால்குடி சுற்றுவட்டாரம் முழுவதும் கூகூர் பரமசிவம்பிள்ளை, தாத்தாச்சாரியார், மணக்கால் பாப்பாத்தி அம்மாள், கொண்டையம்பட்டி செட்டியார் என விரல் விட்டு எண்ணக்கூடிய சில பண்ணையார்களிடம்தான் இருந்தன. அதில் கொள்ளிடக்கரையில் உள்ள ஒரு...

`மனிதத்தை’ போற்றுவோரே கடவுள், மத மறுப்பாளர்கள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(4)

`மனிதத்தை’ போற்றுவோரே கடவுள், மத மறுப்பாளர்கள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(4)

உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் யுவால் நோவா ஹராரி. இஸ்ரேலில் பிறந்தவர் இப்ரு பல்கலைக்கழக பேராசிரியர். மனித குல வரலாறு, வருங்கால வரலாறு, என்று அவர் எழுதிய நூல்கள் உலகம் முழுதும் 2 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. மூன்றாவதுதாக அவர் எழுதி உலக சாதனை படைத்துள்ள நூல் “21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” – கடவுள் மதத்தை மறுக்கும் மதச்சார்பின்மை குறித்து அவர் எழுதியுள்ளதின் ஒரு பகுதி மதச்சார்பற்ற சித்தாந்தம் என்றால் என்ன? உண்மையிடத்தில்தான் மதச்சார் பின்மைவாதிகள் அர்ப்பணிப்புக் கொண்டு ள்ளனர். தலையாய என்பது நேரடிக் கண்காணிப்பு மற்றும் சான்றுகளின் அடிப்படையில் அமைகிறதே அன்றி, விசுவாசத்தின் அடிப்படையில் அல்ல. மதச்சார்பின்மைவாதிகள் உண்மையை நம்பிக்கையோடு போட்டுக் குழப்பிக் கொள் வதில்லை. ஏதோ ஒரு கட்டுக்கதையில் மிக வலிமையான ஒரு நம்பிக்கை உங்களுக்கு மூளையில் உளவியலையும், உங்கள் குழந் தைப் பருவத்தையும், இருந்தால், உங்கள் கட்டமைப்பையும் சுவாரசியமான விஷயங்...

நுழைவுத் தேர்வுகளின் தோல்வி!

நுழைவுத் தேர்வுகளின் தோல்வி!

மாணவர் தகுதியை நிர்ணயிக்கும் நுழைவுத்தேர்வு முறைகள் தோல்வி அடைந்து வருகின்றன. மாணவர் அனைவரும் ஒரே தேர்வை எழுத வேண்டி இருப்பதால், இத்தகைய நுழைவுத் தேர்வு முறையின் வழியாக, எவ்விதக் குளறுபடிகளும் இல்லாத, நியாயமான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்தியாவில், நுழைவுத் தேர்வுகள் சட்டபூர்வமானதும், மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. உண்மையில், கவனமாக ஆய்வுசெய்து பார்த்தோமேயானால், நுழைவுத் தேர்வு முறை குறித்த கூற்றுகளும் நம்பிக்கைகளும் கேள்விக்கு உரியவையாக ஆகிவிடுகின்றன. மகாராஷ்டிரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டுவசதி மேம்பாட்டுக் குழுமத்தில் ஆள்சேர்க்கைக்கான தேர்வு நடைபெற்றபோது, தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வெளியாகிவிட்டன. மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வியாபம் ஊழல் நாட்டையே உலுக்கியது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த வியாபம் தேர்வு முறைகேடு களில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், மாணவர்கள், இடைத்தரகர்கள் ஈடுபட்டு இருந்தது அம்பலமாகியது. எண்ணற்ற மர்ம மரணங்களையும் நாம் கேள்வியுற்றோம். நீட் நுழைவுத் தேர்வு குறித்த சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை...

ஊரையும் சேரியையும் இணைத்த `மாதிரிமங்கலம் புரட்சி’

ஊரையும் சேரியையும் இணைத்த `மாதிரிமங்கலம் புரட்சி’

இப்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கும் மாதிரி மங்கலம் என்ற பார்ப்பனர்கள் தானம் பெற்ற ஊரில் பெரியார் இயக்கம் நடத்திய ஜாதி ஒழிப்பு புரட்சி பற்றி கடந்த இதழில் வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி… பகுத்தறிவுக் கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் ஊர்களைப் பற்றிய பதிவாக ஒரு தொடர். அம்பேத்கரின் `மகர்’ போராட்டத்தை மாதிரிமங்கலத்தில் சத்தமில்லாமல் செய்துகாட்டிய துரைசாமி அத்தோடு நிற்கவில்லை. பண்ணையார்களுக்கு எதிராகவும், பார்ப்பனர்களுக்கு எதிராகவும் தொடர்ந்த சுயமரியாதைப் போராட்டத்தால், 1960-களில் அங்கே இருந்த தலித் மக்கள் இறப்புக்குப் பறை அடிக்கச் செல்வதை நிறுத்தினர். இறந்துபோன மாட்டை தூக்கச் சொல்வதும் வழக்கொழிந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் சட்டை அணிந்தனர், காலில் செருப்பு போட்டனர், ஊர்த்தெருவுக்குள் நடக்கத் தொடங்கினர். குத்தகை பார்த்த பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த இருவரை, ராமாமிர்தம் அய்யர் வீட்டு முற்றத்தில் கட்டி வைத்த செய்திகேட்டு, இருவரையும் மீட்ட துரைசாமி, அந்த வீட்டையே கொளுத்தி விட்டார். இச்செயல்களால் கொந்தளித்துப்போன பண்ணையார்கள், துரைசாமியோடு நெருக்கமாக...

நாத்திகர் மரபு: நீதிமன்றம் தரும் வெளிச்சம் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(3)

நாத்திகர் மரபு: நீதிமன்றம் தரும் வெளிச்சம் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(3)

2014 ஆகஸ்ட்18-ம் தேதி மேட்டூரில் கழக சார்பில் நடந்த நாத்திக பேரணிக்கு முதலில் காவல்துறையில் அனுமதி மறுத்தது நீதிமன்றம் வழியாக அனுமதி பெறப்பட்டது நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து புரட்சி பெரியார் விளக்கம் நாத்திக மரபு நீதிமன்றம் தரும் வெளிச்சம் என்ற தலைப்பில் எழுதிய தலையங்கம் இது…. திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி முடித்த மேட்டூர் நாத்திகர் பேரணிக்கும் வழமைபோல காவல்துறை அனுமதி மறுத்து. உயர் நீதிமன்றத்தின் வழியாக அனுமதி பெற வேண்டியிருந்தது. விநாயகர் சதுர்த்தியைக் காரணம் காட்டி காவல்துறை கூறிய விளக்கத்தை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதி தமது ஆணையில் நாத்திக மரபு குறித்துப் பதிவுசெய்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். “ஆத்திகம்-நாத்திகம் இரண்டுமே இந்திய மரபில் ஒன்றுக்கொன்று உதவி வந்திருக்கிறது. இரண்டில் எந்த ஒன்றையும் ஒழிக்கவோ. புறந்தள்ளவோ முடியாது, இரண்டு கருத்தியல்களும் ஒன்றை ஒன்று எதிர்த்தாலும், இரண்டுமே சமூகப் பிணைப்பை வலிமைப் படுத்து வதற்கான இழையோட்டத்தை வழங்கி யிருக்கிறது.” எனவே, இதுபோன்ற...

ஒன்றிய ஆட்சியின் திட்டங்களுக்கு  மாநில அரசே செலவிடுகிறது (ஆதாரங்களுடன் ஆங்கில நாளேடு கட்டுரை)

ஒன்றிய ஆட்சியின் திட்டங்களுக்கு மாநில அரசே செலவிடுகிறது (ஆதாரங்களுடன் ஆங்கில நாளேடு கட்டுரை)

தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதி தர மறுத்து வரும் ஒன்றிய ஆட்சி, மற்றொரு உண்மைக்கு மாறான செய்தியை பரப்புகிறது. ஒன்றிய ஆட்சியின் திட்டங்களை தமிழ்நாடு அரசு தனது திட்டங்களாக அறிவிக்கிறது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர் கூறி வருகிறார்கள். மோடியின் படத்தோடு அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு கூடுதல் நிதியை தமிழ்நாடு அரசுதான் செலவிட்டு வருகிறது என்பதே உண்மை. இதுகுறித்து இந்து ஆங்கில நாளேடு விரிவான செய்தியை வெளியிட்டு உள்ளது. “ஒன்­றிய பா.ஜ.க. அரசு, தமிழ்­நாட்­டுக்­கான எந்­தப் புதிய சிறப்­புத் திட்­டத்­தை­யும் தர­வில்லை. அவர்­கள் மிகச் சில திட்­டங்­க­ளுக்கு ஒதுக்­கும் பண­மும் முழு­மை­யாக இல்லை. அதில் கூடு­தல் பணம் போட்டு மாநில அர­சு­தான் அந்த திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­திக் கொண்டு இருக்­கி­றது. குடி­நீர் திட்­ட­மாக இருந்­தா­லும்– வீடு­கட்­டும் திட்­ட­மாக இருந்­தா­லும் – ஒன்­றிய அரசு ஒதுக்­கும் பணத்தை வைத்து செயல்­ப­டுத்த முடி­யாது என்­ப­தால் மாநில அர­சு­தான் கூடு­தல் பணம் கொடுக்­கி­றது. சில திட்­டங்­க­ளுக்கு ஒன்­றிய...

‘முன்’ மாதிரிமங்கலம்!

‘முன்’ மாதிரிமங்கலம்!

பகுத்தறிவுக் கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் ஊர்களைப் பற்றிய பதிவாக ஒரு தொடர். ஆரிய ஆதிக்கத்தின் மீது, திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டாக நிகழ்த்தி வரும் சம்மட்டி அடியால், முந்நூறு ஜாதிகள் சமூக தளத்தில் மூன்று பிரிவுகளாகச் சுருங்கிவிட்டன. உயர் ஜாதி, இடைநிலை ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்ற 3 பிரிவுகள் மட்டுமே மெல்லியதான கோடுகளுடன் மிச்சமிருக்கின்றன. சுயமரியாதைத் திருமணங்கள், சமத்துவபுரங்கள், தீண்டாமையைக் கடைப்பிடிக்காத கிராமங்களுக்குப் பரிசு போன்ற திட்டங்களின் ஊடாக இந்த 3 கோடுகளையும் கரையச் செய்கிற பணியை `திராவிட மாடல்’ அரசு செய்துகொண்டிருக்கிறது. ஆனால், ஓர் அரசு மட்டுமே செய்துவிடக் கூடிய பணி அல்ல இது. சமூகமும் சேர்ந்து எடுக்க வேண்டிய தீர்க்கமான முடிவு அது. அந்த முடிவுக்கு ஆகச்சிறந்த முன் உதாரணம்தான் மாதிரிமங்கலம். மயிலாடுதுறைக்கு அருகே உள்ள அரங்கங்குடியைச் சேர்ந்த துரைசாமி, நீதிக்கட்சிக் கொள்கையின்பால் ஈர்க்கப் பட்டவர். பார்ப்பனிய அதிகார வர்க்கத்துடன் மோதல், தலித் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம்...

தேர்தலில் பாஜகவின் தில்லுமுல்லு     ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார் ராகுல்

தேர்தலில் பாஜகவின் தில்லுமுல்லு ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார் ராகுல்

ராகுல் காந்தியின் இந்தக் கட்டுரையை அனைத்து எதிர்க்கட்சிகளும் உன்னிப்பாகக் கவனித்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் – கடுமையான தேர்தல் பரப்புரை செய்ய வேண்டும் – என்பதற்கு இணையானது இதுபோன்ற சதிகளை அறிந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதும் ஆகும். “மராட்டிய மாநிலத் தேர்தல் முடிவுகள் சந்தேகத்திற்கு உரியதாகவே இருக்கிறது. அதில் நடந்த மோசடியை மறைக்க எடுக்கப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் மீறி, அது தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களில் இருந்தே அப்பட்டமாக தெரிகிறது. அதனை நான் உங்களுக்கு பட்டியலிட்டுச் சொல்கிறேன்” என்ற முன்னோட்டத்துடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அனைத்து எதிர்க்கட்சிகளும் உன்னிப்பாகக் கவனித்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது இந்த கட்டுரை. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் – கடுமையான தேர்தல் பரப்புரை செய்ய வேண்டும் – என்பதற்கு இணையானது இதுபோன்ற சதிகளை அறிந்து எச்சரிக்கையுடன்...

“நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?”   நாத்திக விழா சிந்தனை(2)

“நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?” நாத்திக விழா சிந்தனை(2)

1967 மே 24 விடயபுரத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் கடவுள் மறுப்பு வாசகங்களை பெரியார் உருவாக்கினார். அதில் அந்த வாசகங்களை விளக்கி பெரியார் எழுதிய கட்டுரையைக் கடந்த இதழில் வெளியிட்டு இருந்தோம். இதுகுறித்து மறைந்த பேராசிரியர் இராமநாதன் அவர்கள் எழுதிய கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். கடவுளை வணங்குகிறவர்களைக் காட்டுமிராண்டிகள் என கடுமையான சொற்களைப் பயன்படுத்தியவர் பெரியார் அதற்கான காரணம் என்ன தெரியுமா…. காட்டுமிராண்டி மக்களுக்கும், மற்ற மக்களுக்கும் என்ன வேறபாடு? எல்லோரும் மக்கள்தான். பொது இயல்பில் வேறுபாடில்லை. நடைமுறையில் வேறுபாடு உண்டு. காட்டுமிராண்டி மக்கள் வாழ்வில் அறிவொடுபட்ட செயல்முறைகள் இல்லை. மானம் இல்லாதவர். அறிவும் மானமும் இல்லாமல் விலங்கொடு விலங்காக வாழ்பவர். மனிதனுக்கு மற்ற உயிரினங்களைவிடப் பகுத்தறிவு இருக்கின்றது. அந்த அறிவைக்கொண்டே மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு உலகில் முன்னேறியிருக்கின்றான். ஆயினும் அவன் தன்னுடைய பகுத்தறிவைக் கொண்டு முன்னேற முடியாமல் கடவுள் கருத்தும், இதனை ஒட்டி எழுந்துள்ள கற்பனைகளும்,...

பேரன்பும் பெருங்கோபமும்

பேரன்பும் பெருங்கோபமும்

தங்கர்பச்சான் தயாரிப்பில் வெளிவந்துள்ள ‘பேரன்பும் பெரும்கோபமும்’ திரைப்படம் ஜாதி பெருசா? சாமி பெருசா? என்ற முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது. மிகுந்த ஆழமான கேள்வியும் கூட இது. உண்மையில் சாமியை விட ஜாதிதான் பெரிது. அதைத்தான் இப்படம் பேசுகிறது. இதற்கு படம் தேர்ந்தெடுத்திருக்கும் கதைக் கரு வழக்கத்தில் இருக்கும் முத்தாலம்மன் கதை. முத்தாலம்மன் தென்மாவட்டம் முழுவதும் வழிபடக்கூடிய தெய்வமாகும். முத்தாலம்மன் உயர்குடி ஜாதியைச் சேர்ந்தவள். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவனை காதலித்து ஊரை விட்டு ஓடிவிடுகிறாள். வெளியூரில் திருமணம் முடித்து குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறாள். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவள் வாழும் இடம் தெரிந்து சக்கரையாக பேசி ஊருக்கு அழைத்து வருகிறார்கள். ஊர்க்காரர்களின் பேச்சை நம்பி வந்த முத்தாலம்மன் கணவன் குழந்தைகளோடு சேர்த்து படுகொலை செய்யப்படுகிறாள். இன்னும் அந்த சம்பவத்தை நிகழ்த்திக் காட்ட திருவிழாக்களின் போது படுகளம் போடுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் விரதமிருந்து படுகளத்தில் கழுகுமரம் ஏறுவதும், செத்தவர்கள் போல படுத்து கிடக்க, அந்த...

திருப்பரங்குன்றத்தின் வரலாறு என்ன?  மதக்கலவரத்தை தூண்டும் அமித்ஷா

திருப்பரங்குன்றத்தின் வரலாறு என்ன? மதக்கலவரத்தை தூண்டும் அமித்ஷா

மதுரையில் பாஜக ஜூன் 23 அன்று முருகன் அரசியல் மாநாடு ஒன்றுக்கு திட்டமிட்டுள்ளது திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். அங்கே இந்து முஸ்லிம் பகைமையை உருவாக்கி மதக் கலவரத்தை உருவாக்குவது இந்த மாநாட்டின் நோக்கம். அங்கே இருக்கிற தர்காவை அகற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த மாநாடு நடைபெறுகிறது. மதுரையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலையாக மாற்ற திமுக ஆட்சி முயற்சிக்கிறது என்றும் அதை முறியடிக்க வேண்டும் என்றும் மதவெறியை தூண்டும் வகையில் பேசி இருக்கிறார். உண்மையில் திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது, அதன் வரலாறு என்ன… திருப்பரங்குன்றம் மலை உரிமை தொடர்பான வெவ்வேறு பிரச்சினைகள் ஒரு நூற்றாண்டாகவே இருந்து வந்திருந்தாலும் கடந்த முப்பது ஆண்டுகளாக, இந்த மதவெறிக் கும்பல்தான், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் இதனைக் கையாண்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலிலில் சில தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற வெறியில், அதிகார வர்க்கத்தில் ஊடுருவியிருக்கும்...

விடயபுரம் பயிற்சி முகாம் வரலாறு!

விடயபுரம் பயிற்சி முகாம் வரலாறு!

`கடவுள் வணக்கம்’ கூறுவதைப் போல இனி நாம் எல்லா நிகழ்ச்சிகளும் கடவுள் மறுப்பு வாசகத்தைச் சொல்லித்தான் தொடங்க வேண்டுமென்று அறிக்கை விடுத்தார் பெரியார். அன்றுமுதல் இன்றுவரை திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் கடவுள் மறுப்பு வாசகம் சொல்லப்படுவது வழக்கமான ஒன்று. அத்தகைய வரலாற்றுச்சிறப்பு மிக்க வாசகம் முதன்முதலில் சொல்லப்பட்ட இடம் விடையபுரம்.” 2018-ஆம் ஆண்டு திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அங்கிருந்த லெனின் சிலை உடைக்கப்பட்டது. அதைப்போல தமிழ்நாட்டிலும் பெரியார் சிலை ஒருநாள் உடைக்கப்படும் என்று பதிவிட்டார் ஒருவர். எதிர்ப்புகள், வழக்குகளுக்குப் பிறகு தனது அட்மின் மீது பழியைத் தூக்கிப்போட்டார். அதுபோல, பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசுவார்கள், செருப்பு மாலை அணிவிப்பார்கள். நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட்டால், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றுசொல்லி பிணை கேட்பார்கள். மறைந்த அரை நூற்றாண்டுக்குப் பிறகும் எதிரிகளை இப்படி பெரியார் அச்சுறுத்துகிறார் என்றால், அவருடைய சித்தாந்தம் ஒரு காரணம். மற்றொன்று, அவரது சிலைக்குக் கீழே பீடத்தில் தவறாமல்...

மேட்டூர் நாத்திக விழா சிந்தனை: “நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?”

மேட்டூர் நாத்திக விழா சிந்தனை: “நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?”

பெரியார் முதன்முதலாக விடயபுரம் பயிற்சி வகுப்பில் உருவாக்கிய கடவுள் மறுப்பு வாசகத்திற்க்கு விளக்கம் அளித்து பெரியார் எழுதிய கருத்தாழமிக்க கட்டுரை: கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்; பரப்பினவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று கூறிவருவது கண்டு, பார்ப்பனர் நெருப்பின் மீது நிற்பதுபோல் துள்ளுகிறார்கள்; துள்ளிக் குதிக்கிறார்கள். அப்பாவிகளையும், கூலிகளையும் பிடித்து நம்மீது ஏவிவிடுகிறார்கள். பெரும் பெரும் போராட்டங்கள் நடத்தப் போவதாகப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கிறேன்; எதிர்பார்க்கின்றேன். காரணம், போராட்டம் துவக்கினால், எனது மேற்கண்ட பிரசார வேலைக்கு உதவியாகும் என்பதோடு, மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று கருதுவதுதான். கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காகக் கோபித்துக்கொள்ளும் சிகாமணிகளே! நான், கடவுளை உண்டாக்கியவன் முட்டான் என்றால், எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ளவேண்டும்? “உண்டாக்கியவன் முட்டாள்” என்றால், உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக்கிறது? கோபிக்கின்றவனே! நீ, கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக்கொள்கிறாயா? உனது...

காணாமல்போன கடவுள் சக்தி -கோடங்குடி மாரிமுத்து

காணாமல்போன கடவுள் சக்தி -கோடங்குடி மாரிமுத்து

கடவுள் இல்லை; எங்கே கடவுள் சக்தி? என்று நாத்திகர்கள் பேரணி நடத்துகிறார்கள் என்பதற்காக எந்த கடவுளும் கொந்தளிக்கவில்லை. “இதோ அவதாரம் எடுத்து சம்ஹாரம் செய்கிறேன்,பார்!” என்று ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு ஓடி வரவில்லை. சரி, போகட்டும்;கொளத்தூர் கழக மகளிர் கனவில் வந்தாவது மிரட்டி இருக்கலாம் அதற்கும் தயாராக இல்லை உண்மையில் கொந்தளித்தது யார் தெரியுமா? கொளத்தூர் காவல்துறை தான். “அய்யோ கடவுள் எதிர்ப்புக்கு நாங்கள் அனுமதி தர முடியுமா? அது பாவமல்லவா?” என்பதற்காக காவல்துறை கொந்தளிக்கவில்லை. “சங்கிகள் கூச்சல்களை சந்திக்க வேண்டியிருக்குமே என்பதுதான் அவர்களின் பயம். “என்னை எதிர்ப்பவருக்கு பேரணி நடத்த அனுமதிக்காதே! அழித்துவிடுவேன்” என்று ஏதேனும் ஒரு காவல் அதிகாரி கனவில் வந்தாவது கடவுள் மிரட்டி இருக்கலாம் அதுவும் இல்லை” அப்படி எதுவும் நடக்காமலேயே கடவுள் பக்தியோ, பக்தர்களின் மனம் புண்படும் செயல்களையோ நிகழ்த்த மாட்டோம் என்று எழுதிக் கேட்டது காவல்துறை. “எதற்கு நாங்கள் எழுதித் தர வேண்டும்; கடவுளைப்...

தமிழிலிருந்து பிறந்ததே திராவிட மொழிகள்! – பெரியார்

தமிழிலிருந்து பிறந்ததே திராவிட மொழிகள்! – பெரியார்

ழில் இருந்து பிறந்தது கன்னடம் என்று கூறியதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது. நடிகர் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். பெரியார் கருத்து இதுவாகவே இருந்து இருக்கிறது. அவரது எழுத்தில் இருந்து சிலபகுதிகள்; மொழிவாரி மாகாணம் பிரிக்கப் படப்போகிறது. மொழி வாரி வித்துவான்கள் நியமிக்கப்பட்டு மொழி வாரி இலக்கணங்களும் செய்யப்பட்டு திராவிட மொழியைப் பாழாக்கத் திட்டம் தீட்டியாகி விட்டதே!…. பண்டிதர்களில் சிலர் இவை நான்கும் ஒன்றிலிருந்து வந்தவை; ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நாலு அக்கா தங்கைகள் என்று கருதுகிறார்கள். இது பித்தலாட்டம் என்பதுதான் என் கருத்து. இத்திராவிடத் தாய்க்குப் பிறந்தது ஒரே மகள்தான். அது தமிழ்தான். அந்த ஒன்றைத்தான் நாம் நாலு பேரிட்டு அழைக்கிறோம். நாலு இடத்தில் பேசப்படுவதால் நான்கு பெயரில் வழங்குகிறதே ஒழிய நாலிடத்திலும் பேசப்படுவது தமிழ் ஒன்றுதான். நாலும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தான் தவறு. ஒன்றுதான் நாலாக நமது அறியாமையால் கருதப்பட்டு...

நீதிபதிகளே மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள் நாத்திகர் விழாவில் தோழர்கள் உரை

நீதிபதிகளே மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள் நாத்திகர் விழாவில் தோழர்கள் உரை

ஜெசி மூடநம்பிக்கைகளை நீதிபதிகளே பரப்புப்கிறார்கள் என்று காஞ்சி மக்கள் மன்றம் தோழர் ஜெசி கூறிப்பிட்டார். அவரது உரையிலிருந்து… இன்றைக்கு பல்வேறு மூடநம்பிக்கை கருத்துக்களை சாமியார்கள் பேசுவதைவிட நீதிபதிகள், அமைச்சர்கள் இப்போது தீவிரமாக பேசி வருகிறார்கள். ஒரு நீதிபதி பேசுகிறார் “பசு ஆக்சிஜனை உள்ளிழுத்து ஆக்சிஜனையே வெளியேற்றம் செய்கிறது. சாமியார்களிலே வித்தியாசமான சாமியார் நித்தியானந்தா தான். அவர் பேச்சுத் தொணி கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும். நித்தியானந்தா ஒரு (cosmic Airport)பிரபஞ்ச விமான நிலையத்தை உருவாக்கி இருக்கிறார். கருவுறும் பெண்கள் எல்லோரும் வாருங்கள். இந்த பிரபஞ்ச விமான நிலையத்தில் உங்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய இடத்தில் வந்து குழந்தை பெற்றுக் கொண்டால் பிறக்கும் போது ஞானம் பெற்றிருப்பார்கள். நான் அதற்குரிய (DNA) மரபணுக்களை மாற்றிவிடுவேன் ஆகையால் இங்கே வாருங்கள் என்று நித்தியானந்தா அழைக்கிறார். ஒரு ராஜஸ்தான் நீதிபதி பேசியது: ஆண் மயில்கள் பிரம்மச்சாரிகளாம். பெண்மயில்ளோடு உடலுறவு வைத்துக் கொள்வதில்லை. ஆண்மயில்களின் கண்ணீரை குடித்துத்...

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழ்நாடு அரசுக்கு நாத்திகர் விழா கோரிக்கை

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழ்நாடு அரசுக்கு நாத்திகர் விழா கோரிக்கை

கொளத்தூரில் மே24-ல் நடந்த நாத்திகர் விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: முன்மொழிந்தவர்: ஈரோடு மணிமேகலை தீர்மானம்-1: சமூகத்தில் அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும். சாமியார்களின் அதீத சக்திகளை மக்கள் நம்பி ஏமாறுகிறார்கள். அந்த மக்களின் நம்பிக்கைகளை வாய்ப்பு ஆக்கிக் கொண்டு சாமியார்கள் பெண்களின் நகைகளைப் பறிப்பது, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது போன்ற குற்ற செயல்கள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. அனைத்து தொலைக்காட்சிகளும் ஒவ்வொரு நாளும் இந்த குற்ற செயல்களை நிகழ்ச்சிகளாக ஒளிப்பரப்பி வருகின்றன. பேய்,பில்லி, சூனியம், பரிகாரம், தாயத்து போன்ற பல்வேறு வடிவங்களில் இந்த மோசடிகள் நடைபெறுகின்றன. அறிவியல் மனப்பான்மையை குடிமக்களிடையே உருவாக்க வேண்டும் என்று இந்திய அரசியல்சட்டப் பிரிவு (51 (A) (h) கூறுகிறது. இந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கத்தோடு பல்வேறு இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த இயக்கங்களுக்கு பல்வேறு நிலைகளில் அரசு ஆதரவு தந்து ஊக்குவிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்...