சமத்துவபுரம் – டைடல் பார்க் – இரண்டுமே தேவை ஏ.எஸ். பன்னீர்செல்வம்
சமத்துவபுரம், டைடல் பார்க் [தொழில்நுட்பப் பூங்கா] இரண்டுமே ஒரே நேரத்தில் தொடங்கப்பட வேண்டும் என்பதே பெரியார்,அண்ணா பார்வை, என கலைஞர் கூறினார் கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னைச் சந்திக்கும் பத்திரிகையாளர்களும் கல்வியாளர்களும் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை நான் எழுதுவதற்கான காரணம் என்னவென்று தொடர்ந்து கேட்டுவருகின்றனர். ஒரு தேசத்தை உருவாக்குவதில் இரண்டு விதமான கற்பனைகள் உண்டு: ஒரு கற்பனைக்கு Holding together என்றும் மற்றொரு கற்பனைக்கு Coming together என்றும் அரசியல் விஞ்ஞானத்தில் கூறப்படுகிறது. இதில் Holding together என்ற கருத்தாக்கத்தில் அரசு இயந்திரத்துக்கும் பாதுகாப்புத் துறைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து, மக்களுக்கான அதிகாரம் மற்றும் உரிமைகள் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படுகின்றன. ஆனால், Coming together என்ற கருத்தாக்கத்தில் சாமானிய மக்களின் உரிமைகள், எதிர்பார்ப்புகள் முதலியவை முக்கியத்துவம் பெற்று, அரசு இயந்திரம் மக்களின் உரிமைகளை நிறைவேற்றும் ஒரு கருவியாக மாறுகிறது. கலைஞரின் செயல்திட்டம்: அதிகாரக் குவிப்பில் நம்பிக்கை உடைய கட்சிகள் அனைத்தும் Holding...