Category: சிறப்பு கட்டுரை

மூளையின் உற்பத்தியே கடவுள் உணர்ச்சி     கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(7) -விடுதலை இராசேந்திரன்

மூளையின் உற்பத்தியே கடவுள் உணர்ச்சி கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(7) -விடுதலை இராசேந்திரன்

விபத்துகளும் மரணங்களும் கடவுள் விதிப்படிதான் நிகழ்கின்றன என்று மதவாதிகள் கூறுகிறார்கள். அஹமதாபாத் விமான விபத்தில் 241 பேர் இறந்தார்கள். விபத்துக்களை எவராலும் தடுக்க முடியாது; எல்லாம் விதிவசம் என்று கூறினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஆனால் மக்கள் அமித் ஷாவின் இந்த கருத்தை நம்புவதற்குத் தயாராக இல்லை. விமானத்தின் கருப்புப் பெட்டியை உடைத்து பார்த்தால் அங்கே “விதியோ கடவுளோ இல்லை”. விமான விபத்துக்குக் காரணம் எரிபொருள் நிறுத்தப்பட்டது தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எரிபொருளை நிறுத்தியது யார் என்ற அழுத்தமான சந்தேகமே இப்போது எழுந்துள்ளது. கடவுள் தான் காரணம் என்று சொன்னால் மக்கள் நம்புவார்களா? நிச்சயம் நம்பமாட்டார்கள், இங்கே கடவுள் மறுப்பு வந்து விடுகிறது. கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட மன்னர்கள் ஆட்சி இப்போது இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி வந்துவிட்ட பிறகு கடவுள் ஓரங்கட்டப்பட்டு விட்டார். “நீங்கள் என்ன சொன்னாலும் கோயிலுக்குப் போனால் ஒரு ஃபீலிங் வருது பாருங்க.. அதுதான்...

கோயில்களைப் பள்ளிகளாக மாற்றிய பூந்தோட்டம்!‌

கோயில்களைப் பள்ளிகளாக மாற்றிய பூந்தோட்டம்!‌

வரலாற்று பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த சமூக புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரை தொடரை முரசொலியில் ர.பிரகாசு எழுதி வருகிறார். இது பூந்தோட்டத்தில் நடந்த புரட்சி! “எங்கள் ஊரில் முன்பு கோயில் இருந்தது. பெரியார் ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்தார். ‘இந்த ஊர்ல இத்தன கோயில் இருக்கே? எத்தனை பள்ளிக்கூடம் இருக்கு? எவ்வளவு தற்குறியாவும், கைநாட்டுப் பசங்களாகவும் திரியறீங்க? பொம்பளங்கள, புள்ளை பெக்குற மெஷினாட்டம் வச்சிருக்கீங்க! பெண்களைப் படிக்க வச்சிங்கன்னா மொத்த சமுதாயத்தையும் காப்பாத்துவாங்க’ என்று பேசினார். உடனே கோயில்கள் எல்லாம் பள்ளிகளாக மாறிவிட்டன. இப்போது வீட்டுக்கு ஒரு குழந்தையை ஆசிரியருக்குப் படிக்க வைக்கிறோம். அதுவும் பெண் குழந்தையை” என்று கூறியுள்ளார். தினமணியின் மகளிர் மலர் ஒன்றில் ஒருமுறை மனோரமா அளித்த நேர்காணலில் சொன்ன தகவல் இது. மனோரமா சொன்ன அந்த ஊர், கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு அருகே உள்ள பூந்தோட்டம் கிராமம்....

‘டார்வின்’ நேருக்கு நேர் நடந்த விவாதம்! கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(6) -விடுதலை இராசேந்திரன்

‘டார்வின்’ நேருக்கு நேர் நடந்த விவாதம்! கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(6) -விடுதலை இராசேந்திரன்

உயிர்கள் எப்படி தோன்றின? இந்த கேள்விக்கான பதில்கள் காலத்துக்கு ஏற்றார் போல் மாறிக்கொண்டிருக்கின்றன. இந்த கேள்வி எப்போது உருவானது? மனித மூளை உருவான பிறகுதான். கடவுளை, மதத்தை, ஜாதியை உருவாக்கியது மனித மூளை தான். ஆதிசேஷன் என்ற பாம்புதான் பூமியைத் தாங்கிக் கொண்டு இருப்பதாக இந்து புராணங்கள் கூறுகின்றன. நானே கடவுள்; பக்தர்களைக் காக்கவும் வர்ண தர்மத்தை நிலைநாட்டவும் நான் வந்திருக்கிறேன். தர்மம் மீறப்படும்போது நான் அவதாரம் எடுத்து வருவேன். அது சாம்ப வாமி யுகே, யுகே என்று கீதையில் கிருஷ்ண பகவான் கூறுவதாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல கடவுளே மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்று படைத்தார் என்றும் கீதை கூறுகிறது. இந்த மனிதர்களை வர்ண பாகுபாடுடன் உயிரையும் உடலையும் தந்து பூமிக்கு அனுப் பியவர்கள் கடவுள்கள் தான் என்ற நம்பிக்கை மக்கள் மீது திணிக்கப்பட்டது. உண்மையில் கடவுள் எந்த மனிதரையும் படைக்கவில்லை. அது...

‘இடையாற்றுமங்கல’ புரட்சி!

‘இடையாற்றுமங்கல’ புரட்சி!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ர.பிரகாஷ் எழுதி வருகிறார். லால்குடி இடையாற்று மங்கலத்தில் பெரியார் தொண்டர்கள் பண்ணை ஆதிக்கத்தை எதிர்த்த சுருக்கமான வரலாறு. பகுத்தறிவுக் கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் ஊர்களைப் பற்றிய பதிவாக ஒரு தொடர். கீழத்தஞ்சையில் மட்டும் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இருந்தனர். குடந்தையில் அதன் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த ஜோசப்பை லால்குடிக்கு அனுப்பினார் பெரியார். `விளைச்சலைச் சமமாகப் பங்கிடு’, `நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கு’ போன்ற முழக்கங்களை விவசாயக் கூலிகள் மனதில் ஆழமாகப் பதியச் செய்தார் ஜோசப். ஊர்வலங்கள், பிரச்சாரங்கள், துண்டறிக்கை விநியோகம் என பெரியார் கொள்கைகளும் சேர்ந்து பரப்பப்பட்டன. பண்ணையாளர்களோடு தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கொண்டையம்பட்டி செட்டியார் பண்ணை படியாததால், அறுவடையை மொத்தமாக எடுத்துக்கொள்வது என முடிவு செய்தனர்....

கடவுளின் இருப்பை உடைக்கும் கேள்விகள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(5) -விடுதலை இராசேந்திரன்

கடவுளின் இருப்பை உடைக்கும் கேள்விகள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(5) -விடுதலை இராசேந்திரன்

உலகத்தையே உலுக்கியது அகமதாபாத் விமான விபத்து. பயணித்தவர்களில் ஒருவரைத் தவிர 234 பயணிகளும் மரணமடைந்து விட்டார்கள். கடவுள் இப்படி ஒரு தண்டனையைத் தர வேண்டுமா? என்ற கேள்வியை கடவுள் நம்பிக்கையாளர்கள் எவருமே கேட்கவில்லை. காசாவில் 54,000 அப்பாவி மக்களை இஸ்ரேல் படுகொலை செய்வதை கடவுள் ஏன் நிறுத்தவில்லை என்ற கேள்வியையும் கடவுளை நோக்கி எவரும் கேட்கவில்லை. இஸ்ரேல் ஈரான் மீது குண்டு வீசுகிறது, ஈரான் பதிலளித்திருக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக குண்டு வீசுகிறது. நாட்டில் அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் நான் அவதாரம் எடுத்து வருவேன் என்று கூறிய ‘கிருஷ்ண பகவான்’ ஏன் வரவில்லை என்று எந்த கீதை பக்தர்களாவது கேட்டர்களா? கேட்கவில்லை. மாறாக என்ன நடந்தது? விமான விபத்தையும் இஸ்லாமிய எதிர்ப்புக்கு பயன்படுத்தினர். விபத்துக்குள்ளான விமானத்தை இஸ்லாமிய நாடான துருக்கியின் நிறுவனம் ஒன்று பராமரிக்கிறது. எனவே விபத்தில் இஸ்லாமிய சதி இருக்கிறது என்றார் ஒருவர். அவர்தான் சங்கிகளின் ஊது குழலான...

நில உரிமைக்குப் போராடிய ‘இடையாற்றுமங்கலம்’

நில உரிமைக்குப் போராடிய ‘இடையாற்றுமங்கலம்’

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரை தொடரை முரசொலையில் ர.பிரகாஷ் எழுதி வருகிறார். லால்குடி இடையாற்று மங்கலத்தில் பெரியார் தொண்டர்கள் பண்ணை ஆதிக்கத்தை எதிர்த்த சுருக்கமான வரலாறு. `முதலில் ஒழிக்கப்பட வேண்டியது, `வர்க்க வேறுபாடா`, `சாதி வேறுபாடா’ என்பதில் தந்தை பெரியாருக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் இடையில் கருத்து மாறுபாடு இருந்தது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியைப் போலவே சாதியப் பிரச்சினையுடன் வர்க்க அடிமைத்தனத்தையும் ஒழிக்க, பண்ணை ஆதிக்கத்துக்கு எதிராக களத்தில் இறங்கிப் போராடியது பெரியாரால் தொடங்கப்பட்ட `திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம்’. அப்படி ஒரு போராட்டத்தால் பலன் அடைந்த கிராமம்தான் இடையாற்று சதுர்வேதிமங்கலம். 1950-கள் வரை லால்குடி சுற்றுவட்டாரம் முழுவதும் கூகூர் பரமசிவம்பிள்ளை, தாத்தாச்சாரியார், மணக்கால் பாப்பாத்தி அம்மாள், கொண்டையம்பட்டி செட்டியார் என விரல் விட்டு எண்ணக்கூடிய சில பண்ணையார்களிடம்தான் இருந்தன. அதில் கொள்ளிடக்கரையில் உள்ள ஒரு...

`மனிதத்தை’ போற்றுவோரே கடவுள், மத மறுப்பாளர்கள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(4)

`மனிதத்தை’ போற்றுவோரே கடவுள், மத மறுப்பாளர்கள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(4)

உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் யுவால் நோவா ஹராரி. இஸ்ரேலில் பிறந்தவர் இப்ரு பல்கலைக்கழக பேராசிரியர். மனித குல வரலாறு, வருங்கால வரலாறு, என்று அவர் எழுதிய நூல்கள் உலகம் முழுதும் 2 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. மூன்றாவதுதாக அவர் எழுதி உலக சாதனை படைத்துள்ள நூல் “21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” – கடவுள் மதத்தை மறுக்கும் மதச்சார்பின்மை குறித்து அவர் எழுதியுள்ளதின் ஒரு பகுதி மதச்சார்பற்ற சித்தாந்தம் என்றால் என்ன? உண்மையிடத்தில்தான் மதச்சார் பின்மைவாதிகள் அர்ப்பணிப்புக் கொண்டு ள்ளனர். தலையாய என்பது நேரடிக் கண்காணிப்பு மற்றும் சான்றுகளின் அடிப்படையில் அமைகிறதே அன்றி, விசுவாசத்தின் அடிப்படையில் அல்ல. மதச்சார்பின்மைவாதிகள் உண்மையை நம்பிக்கையோடு போட்டுக் குழப்பிக் கொள் வதில்லை. ஏதோ ஒரு கட்டுக்கதையில் மிக வலிமையான ஒரு நம்பிக்கை உங்களுக்கு மூளையில் உளவியலையும், உங்கள் குழந் தைப் பருவத்தையும், இருந்தால், உங்கள் கட்டமைப்பையும் சுவாரசியமான விஷயங்...

நுழைவுத் தேர்வுகளின் தோல்வி!

நுழைவுத் தேர்வுகளின் தோல்வி!

மாணவர் தகுதியை நிர்ணயிக்கும் நுழைவுத்தேர்வு முறைகள் தோல்வி அடைந்து வருகின்றன. மாணவர் அனைவரும் ஒரே தேர்வை எழுத வேண்டி இருப்பதால், இத்தகைய நுழைவுத் தேர்வு முறையின் வழியாக, எவ்விதக் குளறுபடிகளும் இல்லாத, நியாயமான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்தியாவில், நுழைவுத் தேர்வுகள் சட்டபூர்வமானதும், மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. உண்மையில், கவனமாக ஆய்வுசெய்து பார்த்தோமேயானால், நுழைவுத் தேர்வு முறை குறித்த கூற்றுகளும் நம்பிக்கைகளும் கேள்விக்கு உரியவையாக ஆகிவிடுகின்றன. மகாராஷ்டிரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டுவசதி மேம்பாட்டுக் குழுமத்தில் ஆள்சேர்க்கைக்கான தேர்வு நடைபெற்றபோது, தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வெளியாகிவிட்டன. மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வியாபம் ஊழல் நாட்டையே உலுக்கியது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த வியாபம் தேர்வு முறைகேடு களில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், மாணவர்கள், இடைத்தரகர்கள் ஈடுபட்டு இருந்தது அம்பலமாகியது. எண்ணற்ற மர்ம மரணங்களையும் நாம் கேள்வியுற்றோம். நீட் நுழைவுத் தேர்வு குறித்த சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை...

ஊரையும் சேரியையும் இணைத்த `மாதிரிமங்கலம் புரட்சி’

ஊரையும் சேரியையும் இணைத்த `மாதிரிமங்கலம் புரட்சி’

இப்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கும் மாதிரி மங்கலம் என்ற பார்ப்பனர்கள் தானம் பெற்ற ஊரில் பெரியார் இயக்கம் நடத்திய ஜாதி ஒழிப்பு புரட்சி பற்றி கடந்த இதழில் வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி… பகுத்தறிவுக் கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் ஊர்களைப் பற்றிய பதிவாக ஒரு தொடர். அம்பேத்கரின் `மகர்’ போராட்டத்தை மாதிரிமங்கலத்தில் சத்தமில்லாமல் செய்துகாட்டிய துரைசாமி அத்தோடு நிற்கவில்லை. பண்ணையார்களுக்கு எதிராகவும், பார்ப்பனர்களுக்கு எதிராகவும் தொடர்ந்த சுயமரியாதைப் போராட்டத்தால், 1960-களில் அங்கே இருந்த தலித் மக்கள் இறப்புக்குப் பறை அடிக்கச் செல்வதை நிறுத்தினர். இறந்துபோன மாட்டை தூக்கச் சொல்வதும் வழக்கொழிந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் சட்டை அணிந்தனர், காலில் செருப்பு போட்டனர், ஊர்த்தெருவுக்குள் நடக்கத் தொடங்கினர். குத்தகை பார்த்த பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த இருவரை, ராமாமிர்தம் அய்யர் வீட்டு முற்றத்தில் கட்டி வைத்த செய்திகேட்டு, இருவரையும் மீட்ட துரைசாமி, அந்த வீட்டையே கொளுத்தி விட்டார். இச்செயல்களால் கொந்தளித்துப்போன பண்ணையார்கள், துரைசாமியோடு நெருக்கமாக...

நாத்திகர் மரபு: நீதிமன்றம் தரும் வெளிச்சம் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(3)

நாத்திகர் மரபு: நீதிமன்றம் தரும் வெளிச்சம் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(3)

2014 ஆகஸ்ட்18-ம் தேதி மேட்டூரில் கழக சார்பில் நடந்த நாத்திக பேரணிக்கு முதலில் காவல்துறையில் அனுமதி மறுத்தது நீதிமன்றம் வழியாக அனுமதி பெறப்பட்டது நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து புரட்சி பெரியார் விளக்கம் நாத்திக மரபு நீதிமன்றம் தரும் வெளிச்சம் என்ற தலைப்பில் எழுதிய தலையங்கம் இது…. திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி முடித்த மேட்டூர் நாத்திகர் பேரணிக்கும் வழமைபோல காவல்துறை அனுமதி மறுத்து. உயர் நீதிமன்றத்தின் வழியாக அனுமதி பெற வேண்டியிருந்தது. விநாயகர் சதுர்த்தியைக் காரணம் காட்டி காவல்துறை கூறிய விளக்கத்தை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதி தமது ஆணையில் நாத்திக மரபு குறித்துப் பதிவுசெய்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். “ஆத்திகம்-நாத்திகம் இரண்டுமே இந்திய மரபில் ஒன்றுக்கொன்று உதவி வந்திருக்கிறது. இரண்டில் எந்த ஒன்றையும் ஒழிக்கவோ. புறந்தள்ளவோ முடியாது, இரண்டு கருத்தியல்களும் ஒன்றை ஒன்று எதிர்த்தாலும், இரண்டுமே சமூகப் பிணைப்பை வலிமைப் படுத்து வதற்கான இழையோட்டத்தை வழங்கி யிருக்கிறது.” எனவே, இதுபோன்ற...

ஒன்றிய ஆட்சியின் திட்டங்களுக்கு  மாநில அரசே செலவிடுகிறது (ஆதாரங்களுடன் ஆங்கில நாளேடு கட்டுரை)

ஒன்றிய ஆட்சியின் திட்டங்களுக்கு மாநில அரசே செலவிடுகிறது (ஆதாரங்களுடன் ஆங்கில நாளேடு கட்டுரை)

தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதி தர மறுத்து வரும் ஒன்றிய ஆட்சி, மற்றொரு உண்மைக்கு மாறான செய்தியை பரப்புகிறது. ஒன்றிய ஆட்சியின் திட்டங்களை தமிழ்நாடு அரசு தனது திட்டங்களாக அறிவிக்கிறது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர் கூறி வருகிறார்கள். மோடியின் படத்தோடு அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு கூடுதல் நிதியை தமிழ்நாடு அரசுதான் செலவிட்டு வருகிறது என்பதே உண்மை. இதுகுறித்து இந்து ஆங்கில நாளேடு விரிவான செய்தியை வெளியிட்டு உள்ளது. “ஒன்­றிய பா.ஜ.க. அரசு, தமிழ்­நாட்­டுக்­கான எந்­தப் புதிய சிறப்­புத் திட்­டத்­தை­யும் தர­வில்லை. அவர்­கள் மிகச் சில திட்­டங்­க­ளுக்கு ஒதுக்­கும் பண­மும் முழு­மை­யாக இல்லை. அதில் கூடு­தல் பணம் போட்டு மாநில அர­சு­தான் அந்த திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­திக் கொண்டு இருக்­கி­றது. குடி­நீர் திட்­ட­மாக இருந்­தா­லும்– வீடு­கட்­டும் திட்­ட­மாக இருந்­தா­லும் – ஒன்­றிய அரசு ஒதுக்­கும் பணத்தை வைத்து செயல்­ப­டுத்த முடி­யாது என்­ப­தால் மாநில அர­சு­தான் கூடு­தல் பணம் கொடுக்­கி­றது. சில திட்­டங்­க­ளுக்கு ஒன்­றிய...

‘முன்’ மாதிரிமங்கலம்!

‘முன்’ மாதிரிமங்கலம்!

பகுத்தறிவுக் கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் ஊர்களைப் பற்றிய பதிவாக ஒரு தொடர். ஆரிய ஆதிக்கத்தின் மீது, திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டாக நிகழ்த்தி வரும் சம்மட்டி அடியால், முந்நூறு ஜாதிகள் சமூக தளத்தில் மூன்று பிரிவுகளாகச் சுருங்கிவிட்டன. உயர் ஜாதி, இடைநிலை ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்ற 3 பிரிவுகள் மட்டுமே மெல்லியதான கோடுகளுடன் மிச்சமிருக்கின்றன. சுயமரியாதைத் திருமணங்கள், சமத்துவபுரங்கள், தீண்டாமையைக் கடைப்பிடிக்காத கிராமங்களுக்குப் பரிசு போன்ற திட்டங்களின் ஊடாக இந்த 3 கோடுகளையும் கரையச் செய்கிற பணியை `திராவிட மாடல்’ அரசு செய்துகொண்டிருக்கிறது. ஆனால், ஓர் அரசு மட்டுமே செய்துவிடக் கூடிய பணி அல்ல இது. சமூகமும் சேர்ந்து எடுக்க வேண்டிய தீர்க்கமான முடிவு அது. அந்த முடிவுக்கு ஆகச்சிறந்த முன் உதாரணம்தான் மாதிரிமங்கலம். மயிலாடுதுறைக்கு அருகே உள்ள அரங்கங்குடியைச் சேர்ந்த துரைசாமி, நீதிக்கட்சிக் கொள்கையின்பால் ஈர்க்கப் பட்டவர். பார்ப்பனிய அதிகார வர்க்கத்துடன் மோதல், தலித் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம்...

தேர்தலில் பாஜகவின் தில்லுமுல்லு     ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார் ராகுல்

தேர்தலில் பாஜகவின் தில்லுமுல்லு ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார் ராகுல்

ராகுல் காந்தியின் இந்தக் கட்டுரையை அனைத்து எதிர்க்கட்சிகளும் உன்னிப்பாகக் கவனித்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் – கடுமையான தேர்தல் பரப்புரை செய்ய வேண்டும் – என்பதற்கு இணையானது இதுபோன்ற சதிகளை அறிந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதும் ஆகும். “மராட்டிய மாநிலத் தேர்தல் முடிவுகள் சந்தேகத்திற்கு உரியதாகவே இருக்கிறது. அதில் நடந்த மோசடியை மறைக்க எடுக்கப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் மீறி, அது தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களில் இருந்தே அப்பட்டமாக தெரிகிறது. அதனை நான் உங்களுக்கு பட்டியலிட்டுச் சொல்கிறேன்” என்ற முன்னோட்டத்துடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அனைத்து எதிர்க்கட்சிகளும் உன்னிப்பாகக் கவனித்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது இந்த கட்டுரை. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் – கடுமையான தேர்தல் பரப்புரை செய்ய வேண்டும் – என்பதற்கு இணையானது இதுபோன்ற சதிகளை அறிந்து எச்சரிக்கையுடன்...

“நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?”   நாத்திக விழா சிந்தனை(2)

“நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?” நாத்திக விழா சிந்தனை(2)

1967 மே 24 விடயபுரத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் கடவுள் மறுப்பு வாசகங்களை பெரியார் உருவாக்கினார். அதில் அந்த வாசகங்களை விளக்கி பெரியார் எழுதிய கட்டுரையைக் கடந்த இதழில் வெளியிட்டு இருந்தோம். இதுகுறித்து மறைந்த பேராசிரியர் இராமநாதன் அவர்கள் எழுதிய கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். கடவுளை வணங்குகிறவர்களைக் காட்டுமிராண்டிகள் என கடுமையான சொற்களைப் பயன்படுத்தியவர் பெரியார் அதற்கான காரணம் என்ன தெரியுமா…. காட்டுமிராண்டி மக்களுக்கும், மற்ற மக்களுக்கும் என்ன வேறபாடு? எல்லோரும் மக்கள்தான். பொது இயல்பில் வேறுபாடில்லை. நடைமுறையில் வேறுபாடு உண்டு. காட்டுமிராண்டி மக்கள் வாழ்வில் அறிவொடுபட்ட செயல்முறைகள் இல்லை. மானம் இல்லாதவர். அறிவும் மானமும் இல்லாமல் விலங்கொடு விலங்காக வாழ்பவர். மனிதனுக்கு மற்ற உயிரினங்களைவிடப் பகுத்தறிவு இருக்கின்றது. அந்த அறிவைக்கொண்டே மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு உலகில் முன்னேறியிருக்கின்றான். ஆயினும் அவன் தன்னுடைய பகுத்தறிவைக் கொண்டு முன்னேற முடியாமல் கடவுள் கருத்தும், இதனை ஒட்டி எழுந்துள்ள கற்பனைகளும்,...

பேரன்பும் பெருங்கோபமும்

பேரன்பும் பெருங்கோபமும்

தங்கர்பச்சான் தயாரிப்பில் வெளிவந்துள்ள ‘பேரன்பும் பெரும்கோபமும்’ திரைப்படம் ஜாதி பெருசா? சாமி பெருசா? என்ற முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது. மிகுந்த ஆழமான கேள்வியும் கூட இது. உண்மையில் சாமியை விட ஜாதிதான் பெரிது. அதைத்தான் இப்படம் பேசுகிறது. இதற்கு படம் தேர்ந்தெடுத்திருக்கும் கதைக் கரு வழக்கத்தில் இருக்கும் முத்தாலம்மன் கதை. முத்தாலம்மன் தென்மாவட்டம் முழுவதும் வழிபடக்கூடிய தெய்வமாகும். முத்தாலம்மன் உயர்குடி ஜாதியைச் சேர்ந்தவள். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவனை காதலித்து ஊரை விட்டு ஓடிவிடுகிறாள். வெளியூரில் திருமணம் முடித்து குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறாள். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவள் வாழும் இடம் தெரிந்து சக்கரையாக பேசி ஊருக்கு அழைத்து வருகிறார்கள். ஊர்க்காரர்களின் பேச்சை நம்பி வந்த முத்தாலம்மன் கணவன் குழந்தைகளோடு சேர்த்து படுகொலை செய்யப்படுகிறாள். இன்னும் அந்த சம்பவத்தை நிகழ்த்திக் காட்ட திருவிழாக்களின் போது படுகளம் போடுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் விரதமிருந்து படுகளத்தில் கழுகுமரம் ஏறுவதும், செத்தவர்கள் போல படுத்து கிடக்க, அந்த...

திருப்பரங்குன்றத்தின் வரலாறு என்ன?  மதக்கலவரத்தை தூண்டும் அமித்ஷா

திருப்பரங்குன்றத்தின் வரலாறு என்ன? மதக்கலவரத்தை தூண்டும் அமித்ஷா

மதுரையில் பாஜக ஜூன் 23 அன்று முருகன் அரசியல் மாநாடு ஒன்றுக்கு திட்டமிட்டுள்ளது திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். அங்கே இந்து முஸ்லிம் பகைமையை உருவாக்கி மதக் கலவரத்தை உருவாக்குவது இந்த மாநாட்டின் நோக்கம். அங்கே இருக்கிற தர்காவை அகற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த மாநாடு நடைபெறுகிறது. மதுரையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலையாக மாற்ற திமுக ஆட்சி முயற்சிக்கிறது என்றும் அதை முறியடிக்க வேண்டும் என்றும் மதவெறியை தூண்டும் வகையில் பேசி இருக்கிறார். உண்மையில் திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது, அதன் வரலாறு என்ன… திருப்பரங்குன்றம் மலை உரிமை தொடர்பான வெவ்வேறு பிரச்சினைகள் ஒரு நூற்றாண்டாகவே இருந்து வந்திருந்தாலும் கடந்த முப்பது ஆண்டுகளாக, இந்த மதவெறிக் கும்பல்தான், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் இதனைக் கையாண்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலிலில் சில தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற வெறியில், அதிகார வர்க்கத்தில் ஊடுருவியிருக்கும்...

விடயபுரம் பயிற்சி முகாம் வரலாறு!

விடயபுரம் பயிற்சி முகாம் வரலாறு!

`கடவுள் வணக்கம்’ கூறுவதைப் போல இனி நாம் எல்லா நிகழ்ச்சிகளும் கடவுள் மறுப்பு வாசகத்தைச் சொல்லித்தான் தொடங்க வேண்டுமென்று அறிக்கை விடுத்தார் பெரியார். அன்றுமுதல் இன்றுவரை திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் கடவுள் மறுப்பு வாசகம் சொல்லப்படுவது வழக்கமான ஒன்று. அத்தகைய வரலாற்றுச்சிறப்பு மிக்க வாசகம் முதன்முதலில் சொல்லப்பட்ட இடம் விடையபுரம்.” 2018-ஆம் ஆண்டு திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அங்கிருந்த லெனின் சிலை உடைக்கப்பட்டது. அதைப்போல தமிழ்நாட்டிலும் பெரியார் சிலை ஒருநாள் உடைக்கப்படும் என்று பதிவிட்டார் ஒருவர். எதிர்ப்புகள், வழக்குகளுக்குப் பிறகு தனது அட்மின் மீது பழியைத் தூக்கிப்போட்டார். அதுபோல, பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசுவார்கள், செருப்பு மாலை அணிவிப்பார்கள். நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட்டால், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றுசொல்லி பிணை கேட்பார்கள். மறைந்த அரை நூற்றாண்டுக்குப் பிறகும் எதிரிகளை இப்படி பெரியார் அச்சுறுத்துகிறார் என்றால், அவருடைய சித்தாந்தம் ஒரு காரணம். மற்றொன்று, அவரது சிலைக்குக் கீழே பீடத்தில் தவறாமல்...

மேட்டூர் நாத்திக விழா சிந்தனை: “நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?”

மேட்டூர் நாத்திக விழா சிந்தனை: “நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?”

பெரியார் முதன்முதலாக விடயபுரம் பயிற்சி வகுப்பில் உருவாக்கிய கடவுள் மறுப்பு வாசகத்திற்க்கு விளக்கம் அளித்து பெரியார் எழுதிய கருத்தாழமிக்க கட்டுரை: கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்; பரப்பினவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று கூறிவருவது கண்டு, பார்ப்பனர் நெருப்பின் மீது நிற்பதுபோல் துள்ளுகிறார்கள்; துள்ளிக் குதிக்கிறார்கள். அப்பாவிகளையும், கூலிகளையும் பிடித்து நம்மீது ஏவிவிடுகிறார்கள். பெரும் பெரும் போராட்டங்கள் நடத்தப் போவதாகப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கிறேன்; எதிர்பார்க்கின்றேன். காரணம், போராட்டம் துவக்கினால், எனது மேற்கண்ட பிரசார வேலைக்கு உதவியாகும் என்பதோடு, மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று கருதுவதுதான். கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காகக் கோபித்துக்கொள்ளும் சிகாமணிகளே! நான், கடவுளை உண்டாக்கியவன் முட்டான் என்றால், எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ளவேண்டும்? “உண்டாக்கியவன் முட்டாள்” என்றால், உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக்கிறது? கோபிக்கின்றவனே! நீ, கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக்கொள்கிறாயா? உனது...

காணாமல்போன கடவுள் சக்தி -கோடங்குடி மாரிமுத்து

காணாமல்போன கடவுள் சக்தி -கோடங்குடி மாரிமுத்து

கடவுள் இல்லை; எங்கே கடவுள் சக்தி? என்று நாத்திகர்கள் பேரணி நடத்துகிறார்கள் என்பதற்காக எந்த கடவுளும் கொந்தளிக்கவில்லை. “இதோ அவதாரம் எடுத்து சம்ஹாரம் செய்கிறேன்,பார்!” என்று ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு ஓடி வரவில்லை. சரி, போகட்டும்;கொளத்தூர் கழக மகளிர் கனவில் வந்தாவது மிரட்டி இருக்கலாம் அதற்கும் தயாராக இல்லை உண்மையில் கொந்தளித்தது யார் தெரியுமா? கொளத்தூர் காவல்துறை தான். “அய்யோ கடவுள் எதிர்ப்புக்கு நாங்கள் அனுமதி தர முடியுமா? அது பாவமல்லவா?” என்பதற்காக காவல்துறை கொந்தளிக்கவில்லை. “சங்கிகள் கூச்சல்களை சந்திக்க வேண்டியிருக்குமே என்பதுதான் அவர்களின் பயம். “என்னை எதிர்ப்பவருக்கு பேரணி நடத்த அனுமதிக்காதே! அழித்துவிடுவேன்” என்று ஏதேனும் ஒரு காவல் அதிகாரி கனவில் வந்தாவது கடவுள் மிரட்டி இருக்கலாம் அதுவும் இல்லை” அப்படி எதுவும் நடக்காமலேயே கடவுள் பக்தியோ, பக்தர்களின் மனம் புண்படும் செயல்களையோ நிகழ்த்த மாட்டோம் என்று எழுதிக் கேட்டது காவல்துறை. “எதற்கு நாங்கள் எழுதித் தர வேண்டும்; கடவுளைப்...

தமிழிலிருந்து பிறந்ததே திராவிட மொழிகள்! – பெரியார்

தமிழிலிருந்து பிறந்ததே திராவிட மொழிகள்! – பெரியார்

ழில் இருந்து பிறந்தது கன்னடம் என்று கூறியதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது. நடிகர் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். பெரியார் கருத்து இதுவாகவே இருந்து இருக்கிறது. அவரது எழுத்தில் இருந்து சிலபகுதிகள்; மொழிவாரி மாகாணம் பிரிக்கப் படப்போகிறது. மொழி வாரி வித்துவான்கள் நியமிக்கப்பட்டு மொழி வாரி இலக்கணங்களும் செய்யப்பட்டு திராவிட மொழியைப் பாழாக்கத் திட்டம் தீட்டியாகி விட்டதே!…. பண்டிதர்களில் சிலர் இவை நான்கும் ஒன்றிலிருந்து வந்தவை; ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நாலு அக்கா தங்கைகள் என்று கருதுகிறார்கள். இது பித்தலாட்டம் என்பதுதான் என் கருத்து. இத்திராவிடத் தாய்க்குப் பிறந்தது ஒரே மகள்தான். அது தமிழ்தான். அந்த ஒன்றைத்தான் நாம் நாலு பேரிட்டு அழைக்கிறோம். நாலு இடத்தில் பேசப்படுவதால் நான்கு பெயரில் வழங்குகிறதே ஒழிய நாலிடத்திலும் பேசப்படுவது தமிழ் ஒன்றுதான். நாலும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தான் தவறு. ஒன்றுதான் நாலாக நமது அறியாமையால் கருதப்பட்டு...

நீதிபதிகளே மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள் நாத்திகர் விழாவில் தோழர்கள் உரை

நீதிபதிகளே மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள் நாத்திகர் விழாவில் தோழர்கள் உரை

ஜெசி மூடநம்பிக்கைகளை நீதிபதிகளே பரப்புப்கிறார்கள் என்று காஞ்சி மக்கள் மன்றம் தோழர் ஜெசி கூறிப்பிட்டார். அவரது உரையிலிருந்து… இன்றைக்கு பல்வேறு மூடநம்பிக்கை கருத்துக்களை சாமியார்கள் பேசுவதைவிட நீதிபதிகள், அமைச்சர்கள் இப்போது தீவிரமாக பேசி வருகிறார்கள். ஒரு நீதிபதி பேசுகிறார் “பசு ஆக்சிஜனை உள்ளிழுத்து ஆக்சிஜனையே வெளியேற்றம் செய்கிறது. சாமியார்களிலே வித்தியாசமான சாமியார் நித்தியானந்தா தான். அவர் பேச்சுத் தொணி கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும். நித்தியானந்தா ஒரு (cosmic Airport)பிரபஞ்ச விமான நிலையத்தை உருவாக்கி இருக்கிறார். கருவுறும் பெண்கள் எல்லோரும் வாருங்கள். இந்த பிரபஞ்ச விமான நிலையத்தில் உங்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய இடத்தில் வந்து குழந்தை பெற்றுக் கொண்டால் பிறக்கும் போது ஞானம் பெற்றிருப்பார்கள். நான் அதற்குரிய (DNA) மரபணுக்களை மாற்றிவிடுவேன் ஆகையால் இங்கே வாருங்கள் என்று நித்தியானந்தா அழைக்கிறார். ஒரு ராஜஸ்தான் நீதிபதி பேசியது: ஆண் மயில்கள் பிரம்மச்சாரிகளாம். பெண்மயில்ளோடு உடலுறவு வைத்துக் கொள்வதில்லை. ஆண்மயில்களின் கண்ணீரை குடித்துத்...

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழ்நாடு அரசுக்கு நாத்திகர் விழா கோரிக்கை

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழ்நாடு அரசுக்கு நாத்திகர் விழா கோரிக்கை

கொளத்தூரில் மே24-ல் நடந்த நாத்திகர் விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: முன்மொழிந்தவர்: ஈரோடு மணிமேகலை தீர்மானம்-1: சமூகத்தில் அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும். சாமியார்களின் அதீத சக்திகளை மக்கள் நம்பி ஏமாறுகிறார்கள். அந்த மக்களின் நம்பிக்கைகளை வாய்ப்பு ஆக்கிக் கொண்டு சாமியார்கள் பெண்களின் நகைகளைப் பறிப்பது, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது போன்ற குற்ற செயல்கள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. அனைத்து தொலைக்காட்சிகளும் ஒவ்வொரு நாளும் இந்த குற்ற செயல்களை நிகழ்ச்சிகளாக ஒளிப்பரப்பி வருகின்றன. பேய்,பில்லி, சூனியம், பரிகாரம், தாயத்து போன்ற பல்வேறு வடிவங்களில் இந்த மோசடிகள் நடைபெறுகின்றன. அறிவியல் மனப்பான்மையை குடிமக்களிடையே உருவாக்க வேண்டும் என்று இந்திய அரசியல்சட்டப் பிரிவு (51 (A) (h) கூறுகிறது. இந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கத்தோடு பல்வேறு இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த இயக்கங்களுக்கு பல்வேறு நிலைகளில் அரசு ஆதரவு தந்து ஊக்குவிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்...

கொளத்தூர் குலுங்கியது

கொளத்தூர் குலுங்கியது

சேலம் மாவட்டம் மகளிர்‌ அணி சார்பில் 24.05.2025 அன்று நாத்திகர் விழா அதை ஒட்டி அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம்! மூடநம்பிக்கைகளை ஒழிப்போம் என்கிற முழக்கத்தோடு மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி மற்றும் நாத்திகர் விழா நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெண்கள், குழந்தைகள், தோழர்கள் மட்டும் தனி வாகனத்தில் மாநாட்டுக்கு வந்தனர். பெண்கள் மட்டுமே சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கர்ப்பிணிப் பெண்களும், கைக்குழந்தைகளுடனும் பெண்கள் பங்கேற்றனர். குழந்தை பிறந்து 20 நாட்களே ஆன கிருத்திகா அலகு குத்தி பேரணியில் பங்கேற்றார். உக்கம்பருத்திக்காடு சு. கோமதி, காவலாண்டியூர் க.கலைச்செல்வி, கொளத்தூர் அழகேஸ்வரி, உக்கம் பருத்திக்காடு கு.லதா, மாதம்மாள் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்தனர். சேலம் (கொளத்தூர், காவலாண்டியூர், மேட்டூர், மேட்டூர் ஆர்எஸ், மேச்சேரி, நங்கவள்ளி, கொங்கணாபுரம், ஏற்காடு, ஆத்தூர்‌) போன்ற பகுதிகளில் இருந்தும் ஈரோடு வடக்கு, தெற்கு, திருப்பூர், கோவை, நாமக்கல், திருச்சி, பொள்ளாச்சி, மடத்துக்குளம், சென்னை, மதுரை, தஞ்சாவூர், தென்காசி,...

பெண்களின் “நாத்திகப் பேரணி” – கடவுள் இல்லை; மதம் இல்லை; ஜாதி இல்லை!

பெண்களின் “நாத்திகப் பேரணி” – கடவுள் இல்லை; மதம் இல்லை; ஜாதி இல்லை!

கருப்பு உடை தரித்து பெரியாரியப் பெண்கள் தீச்சட்டிகளுடன் அலகுகுத்திக் கொண்டும் கடவுள் இல்லை என்றும் பேரணியாக அணிவகுத்த காட்சியை கொளத்தூர் கண்டது. “நாங்கள் பெரியாரியப் பெண்கள்; எங்களுக்கு கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை, தோழியர்களே! இந்த நம்பிக்கைகள் தான் நம்மை அடிமையில் ஆழ்த்துகின்றன” என்ற செய்தியை மக்களுக்கு கூறினார்கள். மேட்டூர் வட்டத்தின் ஒரு சின்னஞ்சிறு கிராமம் கொளத்தூர். அந்த ஊரைச் சார்ந்த திராவிடர் விடுதலைக் கழக மகளிர் அணியினர் ஒரு புரட்சிகர முடிவை எடுத்தனர். நாத்திகர் விழா நடத்துவது என்று அறிவித்து களம் இறங்கினர். கழகத் தலைமைக்கு அந்த முடிவை தெரிவித்தனர். பெண்களே நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். பெண்களே பொதுமக்களிடம் நிதி திரட்டினார்கள். கடவுள், மதத்தை எதிர்த்து இப்படி பெண்கள் களத்தில் இறங்கி செயல்பட்டு பேரணியையும் விழாவையும் நடத்தி அதை வெற்றியாக்கி சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு முழுதும் இருந்து கழகத் தோழர்கள் பெண்களும் ஆண்களுமாக கொளத்தூர் நோக்கி திரண்டனர்....

“ஆகமத்தீண்டாமையை” வலியுறுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு

“ஆகமத்தீண்டாமையை” வலியுறுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தலித் சமூகத்தைச் சார்ந்த கவாய் பதவி ஏற்ற அடுத்த நாளிலே உச்சநீதிமன்றம் ஆகம தீண்டாமையை நியாயப்படுத்தி இருக்கிறது. ஆகமக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்ற இந்தத் தீர்ப்பை அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு வரவேற்று இருப்பது கண்டனத்திற்குரியது. திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைக்கு எதிரான இந்தத் தீர்ப்பை எப்படி வரவேற்கிறார்? இந்த கோரிக்கையின் நோக்கம் அர்ச்சகர் பதவிகளுக்கானது அல்ல, மாறாக ஆகமக் கோயில்களில் சூத்திரர்கள் அர்ச்சர்களாகக் கூடாது என்ற இழிவுக்கு எதிரான போராட்டம். ஒருமுறை கலைஞர் சட்ட மன்றத்தில் “கர்ப்பகிரகத்துக்கு பாதுகாப்பு தேவை தான், ஆனால் அது வர்ணாசிரம பாதுகாப்பாக இருக்கக் கூடாது” என்று காங்கிரஸ் உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்தார் கலைஞர் கருத்துக்கு எதிராகவே அமைச்சர் பேசுகிறார். அரசியல் சட்டம் தலைமை நீதிபதியாக ஒரு தலித் வர முடியும் என்று கூறுகிறது. ஆனால் ஆகமங்களோ பிராமணர்களைத் தவிர பிற ஜாதியினர்...

நீட் தேர்வில் தொடரும் ‘கெடுபிடிகள்’-ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைகிறது

நீட் தேர்வில் தொடரும் ‘கெடுபிடிகள்’-ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைகிறது

ஒன்றிய ஆட்சியின் தேர்வு நிறுவனம் நடத்தும் கெடுபிடிகளால் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது 2021-க்குப் பிறகு 2025 இல் முதல் முறையாக மிக மோசமான அளவுக்கு தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன இந்த ஆண்டு தேர்வு எழுத விண்ணப்பித்த 25 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுத முன் வந்துள்ளனர். ● நீட் நுழைவுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்ய, தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 42 பேர், மூன்று ஆண்டு தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. ● எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்தாண்டு நடந்த நீட் தேர்வில், வினாத்தாள் கசிந்ததாகப் புகார் எழுந்தது. ● இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரித்து...

நூற்றாண்டு காணும் பெரியார் பேரொளி திருவாரூர் தங்கராசு

நூற்றாண்டு காணும் பெரியார் பேரொளி திருவாரூர் தங்கராசு

சுயமரியாதை சுடரொளி திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு கூட்டத்தை நிமிர்வோம் வாசகர் வட்டம் கழக தலைமை அலுவலகத்தில் 9-5-25 அன்று நடத்தியது. திருவாரூர் தங்கராசு இயக்கத்தின் பரப்புரையளராக பெரியார் கொள்கைகளை வாழ்நாள்‌ முழுவதும் கொண்டு சென்றார். 1927-ல் பிறந்த அவர் 1947-லிருந்து 1973 வரை திராவிடர் கழகத்தில் முதன்மை இயக்கப் பேச்சாளராக இருந்தார். ஒவ்வொரு திராவிடர் கழகத்தின் குடும்பத்தினருடன் அவர் நெருக்கமாக இருந்தவர். 1957 நடந்த சட்ட எரிப்பு போராட்டத்தின்‌ போது தமிழ்நாடு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்ட கழகத் தோழர்களை பெரியார் நேரில் சென்று சந்தித்தார். அப்போது திருவாரூர் தங்கராசு அவர்களை பெரியார் உடன் அழைத்து சென்றார். கலைஞர் எழுதி நடிகர்வேள்‌ எம்.ஆர் ராதா‌ நடித்த தூக்கு மேடை நாடகத்தில் நடித்தவர் திருவாரூர் தங்கராசு. நடிகர்வேள் எம்.ஆர்.ராதா நடித்து நாட்டையே அதிரச் செய்த ராமயாணம் நாடகத்துக்கு கதை வசனம் எழுதியவர் இவர் தான். நடிகர்வேள்‌ நடிப்பில் இவர் எழுதிய ரத்த கண்ணீர் நாடகம்...

பெரியார் கடவுள் மதத்தை எதிர்த்தது ஏன்? கனிமொழி எம்பி விளக்கம்

பெரியார் கடவுள் மதத்தை எதிர்த்தது ஏன்? கனிமொழி எம்பி விளக்கம்

கோயம்­புத்­தூர் மாவட்­டம், ஆர்.எஸ்.புரத்­தில் உள்ள மாந­க­ராட்சி கலை­ய­ரங்­கத்­தில் திரா­விட இயக்­கத் தமி­ழர் பேரவை சார்­பில் சுய­ம­ரி­யாதை இயக்க நூற்­றாண்டு விழா­வை­யொட்டி இரண்டு நாட்­கள் நடை­பெ­றும் கருத்­த­ரங்­கம், கவி­ய­ரங்­கம், கலை நிகழ்ச்சி, பேரணி மற்­றும் பொது மாநாட்டை (26–04–2025) தொடங்கி வைத்து, விழா­வில் திமுக துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ரும், தி.மு.க. நாடா­ளு­மன்­றக் குழு தலை­வரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி அவர்­கள் தொடக்க உரை­யாற்­றி­னார். இம்மாநாட்­டில் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. அவர்கள் பேசி­ய­தா­வது:– “அண்­ணன் சுபவீ அவர்­கள் இந்த மாநாட்­டிலே நீ கலந்­து­கொள்ள வேண்­டும் என்று கேட்­ட­போது… எத்­த­னையோ பெரு­மை­கள் நமக்கு கிடைக்­க­லாம், தேர்­த­லிலே வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்­க­லாம், நம் உழைப்பை அங்­கீ­க­ரித்து நாம் சார்ந்­தி­ருக்­கும் இயக்­கங்­கள் நமக்கு பொறுப்­பு­கள் அளிக்­க­லாம். ஆனால் இதை­யெல்­லாம் விட பெரு­மை­யாக நான் நினைப்­பது, தலை­வர் கலை­ஞர் அவர்­கள் என்­னைப் பற்றி மேடை­யிலே குறிப்­பிட்­டுச் சொன்­னார்­கள். எங்­கள் வீட்­டில் எல்­லா­ரும் திமுக என்­றால் என் மகள் கனி­மொழி திரா­வி­டர் கழ­கத்­தைச்...

பெரியார் கடவுள் மதத்தை எதிர்த்தது ஏன்? கனிமொழி எம்பி விளக்கம்

பெரியார் கடவுள் மதத்தை எதிர்த்தது ஏன்? கனிமொழி எம்பி விளக்கம்

கோயம்­புத்­தூர் மாவட்­டம், ஆர்.எஸ்.புரத்­தில் உள்ள மாந­க­ராட்சி கலை­ய­ரங்­கத்­தில் திரா­விட இயக்­கத் தமி­ழர் பேரவை சார்­பில் சுய­ம­ரி­யாதை இயக்க நூற்­றாண்டு விழா­வை­யொட்டி இரண்டு நாட்­கள் நடை­பெ­றும் கருத்­த­ரங்­கம், கவி­ய­ரங்­கம், கலை நிகழ்ச்சி, பேரணி மற்­றும் பொது மாநாட்டை (26–04–2025) தொடங்கி வைத்து, விழா­வில் திமுக துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ரும், தி.மு.க. நாடா­ளு­மன்­றக் குழு தலை­வரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி அவர்­கள் தொடக்க உரை­யாற்­றி­னார். இம்மாநாட்­டில் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. அவர்கள் பேசி­ய­தா­வது:– “அண்­ணன் சுபவீ அவர்­கள் இந்த மாநாட்­டிலே நீ கலந்­து­கொள்ள வேண்­டும் என்று கேட்­ட­போது… எத்­த­னையோ பெரு­மை­கள் நமக்கு கிடைக்­க­லாம், தேர்­த­லிலே வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்­க­லாம், நம் உழைப்பை அங்­கீ­க­ரித்து நாம் சார்ந்­தி­ருக்­கும் இயக்­கங்­கள் நமக்கு பொறுப்­பு­கள் அளிக்­க­லாம். ஆனால் இதை­யெல்­லாம் விட பெரு­மை­யாக நான் நினைப்­பது, தலை­வர் கலை­ஞர் அவர்­கள் என்­னைப் பற்றி மேடை­யிலே குறிப்­பிட்­டுச் சொன்­னார்­கள். எங்­கள் வீட்­டில் எல்­லா­ரும் திமுக என்­றால் என் மகள் கனி­மொழி திரா­வி­டர் கழ­கத்­தைச்...

ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் ஒட்டிய ஸ்டிக்கர்-விடுதலை இராசேந்திரன்

ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் ஒட்டிய ஸ்டிக்கர்-விடுதலை இராசேந்திரன்

ஆளுநர் ஆர்.என் ரவி பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது என் கருத்து. நீதிமன்ற அவமதிப்புச் சின்னமாக இங்கேயே இருக்கட்டும். உச்ச நீதிமன்றம் ஆளுநரின் மீது இரண்டு ஸ்டிக்கர்களை ஒட்டி உள்ளது. சட்ட விரோதமாக முறைகேடாக செயல்பட்டுள்ளார் என்பது ஒன்று anti constitunal and erroneous, நல்ல எண்ணம் கொண்டவராக நடந்து கொள்ளவில்லை என்பது இரண்டு. The conduct exhibited on part of the Governor, as it clearly appears from the events that have transpired even during the course of the present litigation, has been lacking in bonafides. There have been clear instances where the Governor has failed in showing due deference and respect to the judgments and directions of this Court. In...

பெரியார் இயக்கத் தொண்டர்களைப் போல் உலக வரலாற்றில் எவரும் இல்லை- -உதயநிதி ஸ்டாலின்

பெரியார் இயக்கத் தொண்டர்களைப் போல் உலக வரலாற்றில் எவரும் இல்லை- -உதயநிதி ஸ்டாலின்

கோவையில் ஏப்ரல் 29-ல் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி பேசியதாவது: தந்தை பெரி­யா­ரைப் போல தன் கொள்கைக்காக உழைத்த தலை­வர் உலக வர­லாற்­றி­லேயே எங்கு தேடி­னா­லும் கிடைக்க மாட்­டார். பெரி­யார் இறந்து 51 ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. ஆனால், தமிழ்­நாட்­டின் அர­சி­யலை இன்­றும் அவர்­தான் தீர்­மா­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றார் என்­றால், அது­தான் பெரி­யா­ரின் சிறப்பு. இன்­னும் பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், இன்­றைக்கு உங்­க­ளின் அழைப்பை ஏற்று வந்து இருக்­கி­றேன். தி.மு.க–வின் இளைஞர் அணிச் செய­லா­ள­ராக வந்­தி­ருக்­கி­றேன், அது பெரு­மை­தான். நீங்­கள் எல்­லோ­ரும் சொன்­ன­தைப்­போல் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ராக வந்­தி­ருக்­கி­றேன், அது­வும் பெரு­மை­தான். தமிழ்­நாட்­டின் துணை முத­ல­மைச்­ச­ராக வந்­தி­ருக்­கி­றேன், அது­வும் பெரு­மை­தான். ஆனால், அவை எல்­லா­வற்­றை­யும்­விட மிகப் பெரு­மை­யாக நான் கரு­து­வது என்­ன­வென்­றால் உண்­மை­யான பெரி­யா­ரின் கொள்­கைப் பேர­னாக இந்த மாநாட்­டிற்கு வந்­தி­ருக்­கி­றேன். அத­னால்­தான் பெரி­யா­ரின் தொண்­டர்­கள் மத்­தி­யில் பேசும்­பொ­ழுது எனக்கு தனி வித­மான...

போலித் தமிழ்தேசியர்களுக்கு மறுப்பு! புரட்சிக் கவிஞர் ‘திராவிட’ எதிர்ப்பாளரா?

போலித் தமிழ்தேசியர்களுக்கு மறுப்பு! புரட்சிக் கவிஞர் ‘திராவிட’ எதிர்ப்பாளரா?

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெரியார் மறுத்து திராவிடம் பேசினார் என்று “விலை போகும் தமிழ்த்தேசியங்கள்” பிதற்றி வருகின்றன. அந்த புரட்டுக்களை மறுத்து மறைந்த திராவிட இயக்கப் பெருங்கவி தமிழேந்தி ‘பாசறை முரசு’ இதழுக்கு எழுதிய கட்டுரை புரட்சிக் கவிஞர் நினைவு நாளையொட்டி வெளியிடப்படுகிறது. “திராவிடர்’ என்ற சொல் இந்தியர் என்ற சொல்லுக்கு எதிரான பொருளிலும் அமைந்தது. மேலும் “பார்ப்பனர் அல்லாதார்’ என்ற சொல்லைப் புறந்தள்ளிய பெரியார், “நம்மைக் குறிக்கப் பார்ப்பனர் அல்லாதோர் என்கிறோம். அல்லாதார் என்பதைச் சேர்த்துக் கொள்ள நாம் என்ன நாடோடிகளா? நாம் ஏன் அல்லதோர் ஆக வேண்டும்?” என்று விளக்கம் தந்தார். பின் நாட்களில் “திராவிடம்’ என்பதும் “தமிழகம்’ என்பதும் ஒன்றே என்று பெரியார் அரசியல் நிலைப்பாடு எடுத்தார். பெரியாரின் கருத்துக்கு இசைவாகவே ‘திராவிடம்’ என்பதும் ‘தமிழகம்’ என்பதும் ஒன்றே எனப் பாவேந்தர் பாட்டிசைத்தார். மன்னும் தமிழே திராவிடம் என்று திரிந்த தென்றால் மறுப்பவர் இல்லை திருத்தமிழம் எனும்...

எழுச்சியுடன் நடந்த கழக ஆர்ப்பாட்டம் காஞ்சியில் சங்கராச்சாரிகளின்‌ முகமூடி கிழிப்பு!

எழுச்சியுடன் நடந்த கழக ஆர்ப்பாட்டம் காஞ்சியில் சங்கராச்சாரிகளின்‌ முகமூடி கிழிப்பு!

பெரியார் மீது ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசிய பார்ப்பனக் கைக்கூலிகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டங்களை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி, பார்ப்பன சங்கராச்சாரிகளின் பார்ப்பன முகமூடியைக் கிழித்துக் காட்டியது. பெரியார் மீது கைவைத்தால் சங்கரச்சாரிகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம் என்று திராவிடர் விடுதலைக் கழகம் களம் இறங்கியது. குறிப்பாக சங்கரமடம் உள்ள காஞ்சிபுரத்தில் 21.04.2025 மாலை 5 மணியளவில் பேருந்து நிலையம் அருகே எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தனி பேருந்தில் காஞ்சிபுரம் வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். காஞ்சி விஜயேந்திரன் கடந்த ஜனவரி 19 அன்று பெங்களூரில் ‘பிராமணர்கள்’ மாநாட்டில் இந்து சமூகத்தில் சூத்திர, பஞ்சமர்களிடம் இருந்து பிராமணர்கள் விலகி தங்களது மேலாண்மையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற இன ஒதுக்கல் கருத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகப் பேசி இருந்தார். சூத்திர, பஞ்சமர்கள் அடிமைப்பட்டவர்கள் என்ற மனுதர்மம் விதிக்கும் கோட்பாடுகளுக்கு உயிரூட்டுவதே அவரது பேச்சின்...

சட்டங்களே வேண்டாம்; சாஸ்திரங்களே போதும்! – காஞ்சி சங்கராச்சாரியின் நச்சுக் கருத்துக்கள்(2)

சட்டங்களே வேண்டாம்; சாஸ்திரங்களே போதும்! – காஞ்சி சங்கராச்சாரியின் நச்சுக் கருத்துக்கள்(2)

“பெண்களுக்கு சொத்துரிமை கூடாது” பெண்களுக்கு சொத்துரிமை வழங்கினால் ஸ்த்ரி தர்மமே பாழாகிவிடும்அதற்கு வர இருந்த சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னவர் காஞ்சி சீனியர் சங்கராச்சாரி. நாடாளுமன்றத்தில் நேரு பெண்களுக்கு சொத்துரிமை தரும் மசோதாவை கொண்டு வந்த போது அதை தடுத்து நிறுத்த தீவிர முயற்சிகளில் ஈடுப்பட்டவர்‌ சங்கராச்சாரி. இது குறித்து அக்னி கோத்திரம்” ராமானுஜ தாத்தாச்சாரியார் இந்து மதம் எங்கே போகிறது? நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “இதப்பார்த்தீரா.. ஸ்திரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவா கூட ஸ்த்ரீகள் ஓடிப்போயிடுவா. அபாண்டமா, அபச்சாரமா போயிடும்” -என அந்த பேப்பரை தட்டியபடி வியாக்யானம் தந்து கொண்டிருந்தார் மகாபெரியவர். நான் சிரித்தபடி பதில் சொன்னேன். ‘எனக்கு நல்லதுதான். ஸ்வாமி… என் மாமனாருக்கு நிறைய சொத்துகள் இருக்கு. ஒருவேளை என் ஆத்துக்காரிக்கு பங்கு வந்தால் எனக்கும் நல்லதுதான்! -இந்த பதிலைக் கேட்டதும். “அசட்டுத்தனமா...

காஞ்சி சீனியரின் “நச்சுக் கருத்துக்கள்”-

காஞ்சி சீனியரின் “நச்சுக் கருத்துக்கள்”-

பார்ப்பனர் என்றால் எல்லோரையும் சமமாகப் பார்ப்பவர்கள் என்று கூறும் பார்ப்பனர்களே! பார்ப்பன அடிமைகளே! இதோ காஞ்சி சீனியர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்துக்களை தொகுத்துத் தந்து இருக்கிறோம் இதற்கு என்ன பதில்…. “நான்கு வர்ணம் தேவையே!” சங்கராச்சாரியார் ‘தெய்வத்தின் குரல்’ என்ற நூலிலே வெளிப்படையாகவே சொல்லு கின்றார். “நம் மதத்தில் (இந்துமதம்) ‘பிராமணர்’, ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த “வர்ணங்களை நாம் “ஜாதி” என்கிறோம். வாஸ்தவத்தில் ஜாதி வேறே, வர்ணம் வேறே: வர்ணங்கள் மேலே சொன்ன நான்குதான். இதற்குள்ளேயே ஒவ்வொன்றிலும் பல ஜாதிகள் இருக்கின்றன. “பிராமண” வர்ணத்திலேயே அய்யர், அய்யங்கார், ராவ் என்று பல சாதிகள் இருக்கின்றன. நான்காம் வர்ணம் ஒன்றிலேயே முதலியார், பிள்ளை, ரெட்டி, நாயக்கர், நாயுடு, கவுண்டர், படையாட்சி என்கிற மாதிரி எத்தனையோ ஜாதிகள் இருக்கின்றன. நான்கு ஜாதிகளுக்கும் (அதாவது வர்ண ங்களுக்கும்) சாஸ்திரங்களில் வெவ்வேறு விதமான கர்மாக்களையும் ஆசாரங்களையும் விதித்திருக்கிறது. இதனால் ஒரே...

சோனியா காந்தியின் திராவிட இயக்கக் குரல்-கல்விக் கொள்கையில் மதவாதம் திணிப்பு; மாநில உரிமைகள் பறிப்பு;

சோனியா காந்தியின் திராவிட இயக்கக் குரல்-கல்விக் கொள்கையில் மதவாதம் திணிப்பு; மாநில உரிமைகள் பறிப்பு;

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, “ஒன்றிய ஆட்சி நாட்டின் கல்வி முறையைப் படுகொலை செய்து வருகிறது. மாநிலங்களைக் கலந்து ஆலோசிப்பதில்லை, மானியங்களை நிறுத்துகிறது, மதவாதத்தைத் திணிக்கிறது. பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களுக்கு ஏகபோக அதிகாரங்களை வழங்குகிறது கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்களை ஊடுருவ விட்டுள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார். திராவிட இயக்கத்தின் குரலாக, சோனியாவின் இந்த கருத்து அமைந்துள்ளது. இதுகுறித்து ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (மார்ச் 31)-இல் அவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதன் சுருக்கமான கருத்துக்கள். இந்திய கல்விமுறையை மூன்று “சி”க்கள் வேட்டையாடுகின்றன. அதிகாரக் குவிப்பு (centralisation of power), வணிகமயமாக்கல் (Commercialisation) மற்றும் மதவாதமயமாக்கல் (Communalisation). இதில் மட்டுமே ஒன்றிய அரசு கவனம் செலுத்தி இருக்கிறது. கவர்ச்சிகரமான தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தி நாட்டின் குழந்தைகள் இளைஞர்களின் கல்வியை ஆழமான அரசியல் ஆக்கி வருகிறது. கட்டுப்பாடற்ற அதிகாரக் குவிப்பு கடந்த 11 ஆண்டுகளாக பாஜக அரசின் செயல்பாட்டின் அடையாளமாக இருந்து வருகிறது. இது...

தரிசனத்துக்கு சட்டையை கழற்ற மறுப்பு! கேரளாவில் போராட்டம்

தரிசனத்துக்கு சட்டையை கழற்ற மறுப்பு! கேரளாவில் போராட்டம்

திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அறிவிப்பை மீறி பத்தனம்திட்டா அருகே சம்பவம்! கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள தர்மசாஸ்தா கோயிலில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அறிவிப்பை மீறி சட்டை அணிந்து தரிசனம் செய்த பக்தர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் குருவாயூர் கிருஷ்ணன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் உள்பட பல முக்கிய கோயில்களில் ஆண்கள் சட்டை அணிந்து செல்லக்கூடாது என்ற மரபு கடந்த பல வருடங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் திருவனந்தபுரம் அருகே உள்ள சிவகிரி நாராயண குரு ஆசிரமத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆசிரமத்தின் தலைவர் பேசும் போது கோயில்களில் ஆண்கள் சட்டை அணிந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். சிவகிரி மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இந்த வழக்கம் பின்பற்றப்பட மாட்டாது என்று அவர் மேலும் கூறினார். காலம் மாறும் போது இது போன்ற நம்பிக்கைகள் தேவையில்லாதது என்று முதல்வர்...

மாநாட்டிலிருந்து சில துளிகள்

மாநாட்டிலிருந்து சில துளிகள்

பயணக் குழுவினர் மயிலாடுதுறை கேணிக்கறையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியாக முழக்கங்களுடன் மாநாட்டு மேடைக்கு அணிவகுத்து வந்தனர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனின் திராவிட மாடலா? ஆரிய மாடலா? நூலை (தலையங்கத் தொகுப்பு) கள்ளக்குறிச்சி பயணக்குழு பொறுப்பாளர் இராமர் வெளியிட பயணக்குழுவில் தொடர்ந்து வந்த சென்னை இரண்யா, சேலம் ஆனந்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ரூபாய் 500 மதிப்புள்ள நூல் 400-க்கு விற்கப்பட்டது. அனைத்து பிரதிகளும் மாநாட்டில் விற்றுத் தீர்ந்தன. மயிலாடுதுறை மாவட்டக் கழகம் சார்பில் கழக வளர்ச்சிக்கு ரூ.25,000 கழகப் பொருளார் சு.துரைசாமி அவர்களிடம் வழங்கப்பட்டது. மேடை அருகே அமைக்கப்பட்ட தனித்‌திரையில் பெரியார் பற்றிய குறும்படம் ஒளிப்பரப்பட்டது. குறும்படம் தோழர்கள் இடையே உணர்வலைகளை உருவாக்கியது. .பிரகாஷ் எழுத்தில் கொளத்தூர் கபிலன் ஸ்டுடியோ இந்த குறும்படத்தை உருவாக்கியது. பயணக் குழுவை வழிநடத்திய இரா.உமாபதி, காவை ஈசுவரன்,‌ கள்ளக்குறிச்சி இராமர்,‌‌ கோவை நிர்மல் பயண அனுபவங்களையும்‌, மக்கள் தந்த ஆதரவுகளையும்...

காஞ்சி சங்கராச்சாரி “பிராமண” வெறிப் பேச்சு-நடவடிக்கை எடுக்கக் கோரி கழகம்

காஞ்சி சங்கராச்சாரி “பிராமண” வெறிப் பேச்சு-நடவடிக்கை எடுக்கக் கோரி கழகம்

பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?” “வாருங்கள் வரலாறு பேசுவோம்!!” என்ற‌ தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் மார்ச் 15-ல் தொடங்கி மார்ச் 22- வரை தமிழ்நாடு தழுவிய பரப்புரைப் பயணங்களை நடத்தி நிறைவு விழா மாநாட்டை மயிலாடுதுறையில் மார்ச் 22.03.2025 மாலையில் நடத்தியது. மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசியல் சட்டத்திற்கு எதிராக இனவெறியைத் தூண்டி காஞ்சி சங்கராச்சாரி பேசிய பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏப்ரல் 21-இல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மாநாடு முடிவு செய்தது. தீர்மானத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்தார். பலத்த கரவொலி எழுப்பி, தோழர்கள் வரவேற்றனர். கடந்த ஜனவரி 19-ஆம் தேதி பெங்களூரில் “கர்நாடக பிராமண மகாசபையில்” பேசிய‌‌ காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி, அரசியல் சட்டத்திற்கு‌ எதிராக இன‌வெறியை தூண்டிவிட்டிருக்கிறார். வேத மதத்தை காப்பாற்ற “பிராமணர்களால்” மட்டுமே முடியும் எனவே “பிராமணியத்தை” நாம் காப்பாற்றியாக வேண்டும். “பிராமணர்களை” அடையாளப்படுத்தும் சந்திய...

அரைகுறையாய் படித்துவிட்டு அவதூறு பரப்புவதா?  பெரியாரை விமர்சிக்கும் அடிமுட்டாள்கள்!-

அரைகுறையாய் படித்துவிட்டு அவதூறு பரப்புவதா? பெரியாரை விமர்சிக்கும் அடிமுட்டாள்கள்!-

(சென்னையில் பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெற்ற நிமிர்வோம் வாசகர் வட்ட நிகழ்ச்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் தொடர்ச்சி) பெரியார் ஆங்கிலம் படிக்கச் சொன்னார்‌. தேவநேயப் பாவணரும், பாவலர் பெருஞ்சித்திரனாரும் சேர்ந்து ஆங்கிலமும் தமிழும் படிக்க வேண்டும் என்று சொன்னவர்கள்தான். ஆராய்ச்சிப் படிப்புகள் வரைக்கும் தமிழில் படிக்க வேண்டும் என்ற குரலும் அப்போதே ஒலிக்கத் தொடங்கியது. “தமிழில் சொற்களே இல்லை, தமிழில் எப்படி ஆராய்ச்சி படிப்புகளை படிக்க முடியும்?” ஆனால் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். தமிழ்வழிக் கல்வி மாநாட்டில் பேசும்போது தொடக்கக் கல்வியை தாய்மொழியில் கற்க வேண்டும் என்று சொல்லுவேன். உடனே மணியரசன் போன்றவர்கள்‌, மணி‌ தமிழர் இல்லை, தமிழருக்கு பெருமிதம் இல்லை என்று வசைபாடுவார்கள். அடுத்தக் கூட்டத்தில் நான் சொன்னேன், “தமிழர்களுக்கு பெருமிதமான வரலாறே இல்லை; அடிமை வரலாறு, சூத்திர வரலாறுதானே நமக்கு எல்லாம். அழகான தமிழ்ப்பெயர் அருண்மொழிவர்மன்‌ என்பதை ராஜராஜ சோழன் என்ற வடமொழி பெயராக...

உண்மைக்குப் புறம்பாக விமர்சிக்கும் கயவர் கூட்டம்! பெரியார் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி- -கொளத்தூர் மணி

உண்மைக்குப் புறம்பாக விமர்சிக்கும் கயவர் கூட்டம்! பெரியார் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி- -கொளத்தூர் மணி

சென்னையில் நிமிர்வோம் வாசகர் வட்ட கூட்டத்தில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி… அண்ணா ஏராளமான நாடகங்களை எழுதியுள்ளார். முதலில் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம், இந்து ராஜ்ஜியம் என்றால் எப்படி இருக்கும்? அரசனாக இருந்தாலும் என்பதுதான் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம். சந்திர மோகன் என்பவர் பார்ப்பனர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார் சிவாஜியிடம். ஆனாலும் சிவாஜி அவமானப்படுத்தப்படுவார், என்பதை எல்லாம் எழுதி அது எப்படி இந்த இந்து மத சாஸ்திரங்கள் என்ற பெயரால் அரசனைக் கூட கைப்பாவையாக வைத்திருந்தனர் பார்ப்பனர்கள் என்று சொல்வது தான் அந்த நாடகம். அம்பேத்கர் பாகிஸ்தான் பிரிவினை என்ற நூலில் எழுதியுள்ளார். “எப்படியாவது எந்த வழியிலாவது இந்து இராஜ்ஜியம் அமைந்து விடுமேயானால், அதை விட இந்த நாட்டுக்கு பெரும் கேடு எதுவும் இருக்க முடியாது”. இந்து இராஜ்ஜியம் என்றால் என்ன அது அமைந்தால் என்ன நிலை என்பதை அழகாக எடுத்துச் சொன்ன நாடகம்தான் ‘சிவாஜி கண்ட...

பெரியாரை சீண்டும்‌ ஆளுநருக்குப் பதிலடி  ஆரியர்-திராவிடர் கற்பனையா?

பெரியாரை சீண்டும்‌ ஆளுநருக்குப் பதிலடி ஆரியர்-திராவிடர் கற்பனையா?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பிராமண சங்கத்தின் தலைவராக இப்போது “அவதாரம்” எடுத்து நேரடியாகப் பெரியாரைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார். ஆரியரைப் பற்றி தவறான கருத்தை பெரியார் பரப்பினாராம் ஆரியர்-திராவிடர் வெவ்வேறு இனம் என்றும் ஆரியர் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தனர் என்றும் கடந்த 60 ஆண்டுகளாக திராவிட சித்தாந்தம் பேசுவோர் கற்பனைக் கதையை உருவாக்கிப் பரப்புகிறார். ஆரியர் வந்தேறிகள் என்று ஈ.வெ ராமசாமி கருத்துத் திணிப்பு செய்தார் என்றும் வாய்க் கொழுப்புடன் பேசி உள்ளார். இந்த உளறல்களை கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய் விட்டது. பிகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த ஆளுநரே உமக்கு வரலாறு ஏதாவது தெரியுமா? 1. பார்ப்பனர்களே தங்களை ஆரியர்கள் என்று பெருமையுடன் அறிவித்துக் கொண்ட கதை தெரியுமா? அவர்கள் ஆரிய சமாஜம் என்ற‌ அமைப்பை உருவாக்கிக் கொண்டார்களே அது உமக்குத் தெரியுமா? அதன் நிறுவனர் தயானந்த சரசுவதி ஆரியர்களாகிய வேதமும் சமஸ்கிருதமும் இரண்டு கண்கள் என்று...

தமிழ் இலக்கியங்களை அலசி ஆராய்ந்தவர் பெரியார்! -கொளத்தூர் மணி

தமிழ் இலக்கியங்களை அலசி ஆராய்ந்தவர் பெரியார்! -கொளத்தூர் மணி

(பிப்ரவரி 1-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிமிர்வோம் வாசகர் வட்ட 28-வது சந்திப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை) எப்போதுமே அரசியலிலோ அல்லது மற்றவற்றிலோ படிப்படியாக முன்னேறி செல்வதுதான் அனைவருக்கும் வழக்கம். ஆனால் மணியரசன் அவர்கள் ஒரு பொதுவுடைமைவாதியாக இருந்து, தமிழ் தேசியம் பேசி, இப்போது ஜாதியவாதிகள் பக்கம் வந்து நின்று கொண்டிருக்கிறார். இன்னும் சிறிது நாட்களில் முழுமையாக வெளிப்பட்டு விடுவார். 1956 நவம்பரில் மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது, யாரெல்லாம் தமிழ்நாட்டில் இருந்தார்களோ அவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று முதலில் ஒரு வரையறை வைத்திருந்தார். எந்த அறிவியல் அடிப்படையில் இந்த வரையறையை வைத்தார் என்பது தெரியாது. சீமானுக்கு ஆசானாக சேர்ந்து விட வேண்டும் என்ற‌ ஆசையாக கூட இருக்கலாம். அண்ணா நினைவுநாளையொட்டி இந்த நிமிர்வோம் வாசகர் வட்டம் நடைபெறுகிறது. 1934-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி திருப்பூரில் நடைபெற்ற...

ஏன் இந்த பரப்புரைப் பயணம்?

ஏன் இந்த பரப்புரைப் பயணம்?

தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி சமுதாய இயக்கமாக தமிழர் நலனுக்காக அரை நூற்றாண்டுக்கு மேலாக ஓயாது உழைத்தவர் பெரியார். ஜாதிய ஏற்றத்தாழ்வு இல்லாத, பாலினப் பாகுபாடு இல்லாத ஒரு சமத்துவ சமூகம் மலர வேண்டும் என்று தன் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டு பாடுபட்டவர் பெரியார். மக்கள் ஆதரிப்பதைப் பேசி, அவர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு மாறாக மக்கள் பின்பற்றிய மூடத்தனங்களை மிகக் கடுமையாக எதிர்த்தவர் பெரியார். தன் மீது கல், முட்டை, செருப்பு போன்றவை வீசப்பட்டபோது கூட ஓடி ஒளிந்து கொள்ளாமல், தனக்கு சரியெனப்பட்டதை வெளிப்படையாகப் பேசியவர் பெரியார். குடலிறக்க வலியோடும், மூத்திரச் சட்டியோடும் வாழ்நாளின் கடைசிவரை தமிழ் மக்களின் தன்மானத்திற்காகப் பேசியவர் பெரியார். கல்வி எட்டாக்கனியாக இருந்த தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி ஒரு நூற்றாண்டில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு உருவாகக் காரணம் பெரியார். எல்லாவற்றுக்கும் மேலாக சுயமரியாதைச் சிந்தனையைத் தமிழர்களுக்குக் கடத்தியவர் தந்தை பெரியார். ஆனால் இன்றைக்குப் பெரியாரைக்...

தமிழ்தேசிய முப்பாட்டன் பெருமையும்  சிங்கள இனவெறியும் ஒன்றுதான்!-விடுதலை இராசேந்திரன்

தமிழ்தேசிய முப்பாட்டன் பெருமையும் சிங்கள இனவெறியும் ஒன்றுதான்!-விடுதலை இராசேந்திரன்

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் b&w tamil youtube சேனலுக்கு அளித்த நேர்காணலில், மேதகு பிரபாகரன் பெரியார் கொள்கைகளையே ஈழத்தில் செயல்படுத்தினார் என்பதை விரிவாக விளக்கினார் . கடந்த வார தொடர்ச்சி… நெறியாளர்: ஈழத்தில் பிரபாகரன் நடத்திய விடுதலைப் போராட்டத்துக்கும் இங்கே தமிழ்தேசிய போரட்டத்துக்கும்‌ வேறுபாடு இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா? பொதுச்செயலாளர்: அடிப்படையில் ஒரு தேசத்தின் விடுதலை என்பது மக்களின் சமத்துவத்தையும், உரிமையும் அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். இதற்கு நேர்மாறாக மக்களிடையே பிளவுகளையும், பாகுபாடுகளையும் அடையாளப்படுத்தும் கொள்கைகளைக் கொண்ட தேசியம் என்பது விடுதலைக்கு நேர் முறணானது. பிரபாகரன் போராடிய ஈழ விடுதலை என்பது ஐக்கிய‌ நாட்டு சபை அங்கீகரித்த தேசிய‌ சுய‌நிர்ணய உரிமையை வலியுறுத்தி நடத்திய போராட்டமாகும்‌. இந்தியாவை இந்து நாடாக மாற்றி அமைப்பதற்கு இப்போது இங்கே முயற்சிகள் நடைபெற்றுக்‌ கொண்டு இருக்கினறன.இந்தியா என்ற‌ சொல்லுக்கு முசுலிம்களும், கிருத்தவர்களும் உள்ளடக்கிய‌ நாடு என்று பொருள்படுகிறது, எனவே இந்தியா என்ற...

பார்ப்பனிய பண்பாட்டை எதிர்த்தவர் மேதகு பிரபாகரன்

பார்ப்பனிய பண்பாட்டை எதிர்த்தவர் மேதகு பிரபாகரன்

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் b&w tamil youtube சேனலுக்கு அளித்த நேர்காணலில், மேதகு பிரபாகரன் பெரியார் கொள்கைகளையே ஈழத்தில் செயல்படுத்தினார் என்பதை விரிவாக விளக்கினார் . கடந்த வார தொடர்ச்சி … போராட்டத்தில் வீரமரணம் எய்திய விடுதலைப்புலிகளின் இறுதி நிகழ்வில் மதச் சடங்குகள் நடப்பதில்லை. பெற்றோர்கள் கூட எந்த வித மதச் சடங்குகள் இல்லாமல் மலர் வளையம் வைத்துத் தான் மரியாதை செய்வார்கள். துயிலும் இடங்களை மக்கள் வாகனங்களில்‌ கடக்கும்‌ போது தலைகுனிந்து ஒரு மரியாதை செலுத்திவிட்டு தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடந்து செல்வார்கள். விடுதலைப்புலிகள் வைப்பகம்(வங்கி) ஒன்றை நடத்தினார்கள்.தமிழேந்தி என்ற போராளி தான் பொறுப்பாளராக இருந்தார். தமிழேந்தி முழுமையான பகுத்தறிவாளர்‌. சித்திரையில் மதவாதிகள் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டு நான் கிளிநொச்சியிஸ் இருந்தேன். சித்திரை மாத தமிழ்ப்புத்தாண்டை விடுதலைப் புலிகள் இயக்கம் ஏற்கவில்லை. தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு அந்த நாள்...

திருப்பரங்குன்றம்! சங்கிகளின்‌ புரட்டு  மதக்கலவரத்தை உருவாக்க சதி

திருப்பரங்குன்றம்! சங்கிகளின்‌ புரட்டு மதக்கலவரத்தை உருவாக்க சதி

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்‌ என்ற‌ முழக்கத்தோடு சங் பரிவாரங்கள்‌ சதித்திட்டம் தீட்டி வருகின்றன. மதவெறி அமைப்புகளை தமிழ்நாட்டு ‌மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்‌ என்று திமுக,காங்கிரஸ்,மதிமுக,இந்தியகம்யூனிஸ்டு, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளன. மதுரை மாவட்ட காவல்துறையும் நீதித்துறையும் சங்கிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திருப்பரங்குன்றம் மலை முழுவதும்‌ முருகனுக்கே சொந்தம் என்று சங்கிகள் கூறுவது வரலாற்று புரட்டு. உண்மையில் நடப்பது என்ன? மதுரையில் திருப்பரங்குன்றம் போல எண்ணற்ற பெருங்குன்றுகள் உள்ளன. இந்தக் குன்றுகள்அனைத்தும் நாட்டார்வழிபாடு, சமண, புத்த சமயங்கள், வைணவ, சைவமதங்கள், இசுலாமிய, கிறித்தவ சமயங்கள் என அனைத்து வழிபாட்டு தலங்களும் எந்தவித இடர்களும் சிக்கல்களும் இன்றி மக்களால் அமைதியான முறையில் வழிபட்டு வரப்படுகின்றன. இவ்வாறு தான் இசுலாமிய இறை மார்க்கத் தூதர்களின் வழிபாட்டு இடங்களில் ஒன்றான அவுலியா சிக்கந்தர்பாதூஷா அடக்கம் செய்யப்பட்ட தர்கா வழிபாட்டு இடம் திருப்பரங்குன்றம் மலை மீது இருநூறு ஆண்டுகளுக்கு...

ஈழத்தில் பிரபாகரன் நடத்திய பெரியார் ஆட்சி!

ஈழத்தில் பிரபாகரன் நடத்திய பெரியார் ஆட்சி!

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் b&w tamil youtube சேனலுக்கு அளித்த நேர்காணலில், மேதகு பிரபாகரன் பெரியார் கொள்கைகளையே ஈழத்தில் செயல்படுத்தினார் என்பதை விரிவாக விளக்கினார் . நெறியாளர் : 2006-இல் ஈழத்துக்கு ஒரு மாதம்‌ சென்று வந்தீர்களே, அந்த நட்பு எப்படி உருவானது‌? பொதுச்செயலாளர்: 2006-க்கு முன்பு தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு இணைந்து பல்வேறு களப்பணிகள், அரசியல் பணிகள் செய்திருக்கிறோம். அதன்காரணமாக அவர்களோடு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. குறிப்பாக 1982,1983 ஆண்டுகாலத்தில் ‘விடுதலை’ பத்திரிகையில் நான் பொறுப்பில் இருந்தேன். தமிழீழ விடுதலைப்புலிகள் ஆதரவு தேடி தமிழ்நாடு வந்த காலகட்டம் அது. அப்போது அவர்கள் எங்களோடு நெருக்கமாக இருந்தார்கள். பல்வேறு குழுக்கள் தமிழ்நாட்டிற்கு வந்தார்கள். அதில் விடுதலைப் புலிகள் இயக்கம் தான்‌ சரியான‌ இயக்கம் என்று நாங்கள் தேர்ந்தெடுத்து அந்த இயக்கத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, அப்போது திராவிடர் கழகத்தில் இருந்த தோழர்கள் கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன், நான்...

ஆமைக்கறி சீமான் அம்பலமானார்!

ஆமைக்கறி சீமான் அம்பலமானார்!

2008-ஆம் ஆண்டு இறுதிப்போருக்கு முன்பாக திரைப்படக் குழுவினருடன் ஈழத்திற்கு சென்ற சீமான், கடந்த 15 ஆண்டுகளாக அந்தப் பயணம் தொடர்பாக எண்ணற்றக் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டுள்ளார். மனநோயாளியைப் போல சீமான் கூறிவந்த அந்தப் பொய்களை, தமிழ்நாட்டு மக்கள் வேடிக்கையுடன் கடந்து சென்றனர். ஆனால் இப்போது பெரியார் மீது அவர் வைத்திருக்கும் அருவருப்பான அவதூறுகளால் தமிழ்நாட்டு மக்கள் கொந்தளித்துள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி, சர்வதேச அளவில் சீமானின் இந்த புளுகு மூட்டைகளை அம்பலப்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆரிய இழிவில் இருந்து தமிழர்களை விடுவிக்க வாழ்நாளெல்லாம் உழைத்தத் தந்தை பெரியாரையும், ஈழத்தில் தேசிய இன விடுதலைக்காகப் பெரும்படை கட்டிப் போரிட்ட மேதகு பிரபாகரனையும் நேரெதிர் எதிரிகளாகச் சித்தரிக்க முயன்ற சீமானின் சூழ்ச்சியை விடுதலைப் புலிகளும், அவர்களோடு அணுக்கமாக இருந்தவர்களும் உடனடியாக கண்டித்து அறிக்கை வெளியிட்டு, சீமானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர். குறிப்பாக பிரபாகரன் அவர்களின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த...

திராவிட மாடல் அரசின் சாதனைகள்

திராவிட மாடல் அரசின் சாதனைகள்

திராவிட மாடல் ஆட்சி முன்னெடுத்த நடவடிக்கைகளாலும், மக்கள் நலத் திட்டங்களாலும் தமிழ்நாடு முக்கியமான 10 சாதனைகளை 3 ஆண்டுகளில் செய்துள்ளது. 1. இந்தியாவின் பொருளாதாரத்தில் தமிழ்நாடு 9% பங்கை வகிக்கிறது. 2. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 3. ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7.24% இருக்கும்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சியானது 8.19% உயர்ந்துள்ளது. 4. இந்திய அளவில் பணவீக்கமானது 6.65% இருக்கும்போது, தமிழ்நாட்டில் அது 5.97% குறைந்து உள்ளது. 5. ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 6. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. 7. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 3-வது இடத்துக்கு திராவிட மாடல் ஆட்சியில் முன்னேறி உள்ளது. 8. கல்வியில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. 9. புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது....