‘அருட்பா-மருட்பா’ மோதல்: பின்னணி என்ன? விடுதலை இராசேந்திரன்
சென்ற இதழ் தொடர்ச்சி ¨ வள்ளலார் பிறந்த ஜாதியைக் கூறி இழிவு செய்தனர். ¨ சிதம்பரம் பேரம்பலத்தில் நடந்த கூட்டத்தில் காரசார மோதல். ¨ மான நட்ட வழக்கை அருட்பா-மருட்பா என்று தவறாக சித்தரித்தார் ம.பொ.சி. ¨ ‘வேதம்’ என்ற சொல்லையே எதிர்த்த வள்ளலார். நாவலர் வள்ளலாரின் பாடல்கள் ‘திருவருட்பா’ அல்ல என்று மறுத்தார், தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரியபுராணம் எனும் ஐந்து புராணங்கள் தான் திருவருட்பாவே தவிர மற்றவை அல்ல என்றார், வள்ளலார் பாடல்களை நேரடியாக கண்டித்து மருட்பா என்றார், பார்ப்பனர்களைக் கடுமையாக சாடும் திருமந்திரத்தையே அருட்பா பட்டியலில் சேர்க்காதவர் அவர், ஆறுமுக நாவலர் கருத்துக்கு எதிராக 1868இல் ‘திருவருட்பா தூசன பரிகாரம்’ எனும் நூலை திருமயிலை சண்முகம் பிள்ளை என்பவர் எழுதி வெளி யிட்டார். அருட்பா மருட்பா விவாதங்கள் அனல் பறக்கத் தொடங்கின; அடிகளாருக்கு ஆதரவாக அட்டாவதனம் வீராசாமி செட்டியார், இறுக்கம் இரத்தினம் முதலியார், பூவை...