கொக்கூருக்கு குதிரை வண்டியில் வந்த பெரியார்
வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ர.பிரகாசு எழுதி வருகிறார். கொக்கூர் என்ற ஊரின் வரலாறு இது.. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் கொக்கூர். 1940-கள் வரை பார்ப்பனிய மேலாதிக்கம் கொடூரமாக கோலோச்சியது, அந்தக் கிராமத்தில். கிருஷ்ணமூர்த்தி ஐயரின் மகன் குஞ்சிதபாதம் குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் மொத்த ஊரும். பார்ப்பனர்களைத் தவிர, வேறு யாரும் மேல் சட்டை அணியக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாது, பள்ளிக்கூடம் செல்லக்கூடாது, முக்கிய சாலைகளைப் பயன்படுத்தக் கூடாது. தோளில் துண்டு, தலைப்பாகை கட்டவும் அனுமதி கிடையாது, ஊர்க்கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது. பார்ப்பனர்களின் வயல்களில்தான் வேலை செய்ய வேண்டும். ஐயர் தரும் மிகச்சொற்ப நெல்லுக்காக, அக்ரஹாரத்துக்கு வெளியே தென்னை மரத் தடுப்புக்குப் பின்னால் வரிசையில் கையைக் கட்டிக்கொண்டு நிற்க வேண்டும். ஐயரின் ஆட்கள் தரும்...
