மூளையின் உற்பத்தியே கடவுள் உணர்ச்சி கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(7) -விடுதலை இராசேந்திரன்
விபத்துகளும் மரணங்களும் கடவுள் விதிப்படிதான் நிகழ்கின்றன என்று மதவாதிகள் கூறுகிறார்கள். அஹமதாபாத் விமான விபத்தில் 241 பேர் இறந்தார்கள். விபத்துக்களை எவராலும் தடுக்க முடியாது; எல்லாம் விதிவசம் என்று கூறினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஆனால் மக்கள் அமித் ஷாவின் இந்த கருத்தை நம்புவதற்குத் தயாராக இல்லை. விமானத்தின் கருப்புப் பெட்டியை உடைத்து பார்த்தால் அங்கே “விதியோ கடவுளோ இல்லை”. விமான விபத்துக்குக் காரணம் எரிபொருள் நிறுத்தப்பட்டது தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எரிபொருளை நிறுத்தியது யார் என்ற அழுத்தமான சந்தேகமே இப்போது எழுந்துள்ளது. கடவுள் தான் காரணம் என்று சொன்னால் மக்கள் நம்புவார்களா? நிச்சயம் நம்பமாட்டார்கள், இங்கே கடவுள் மறுப்பு வந்து விடுகிறது. கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட மன்னர்கள் ஆட்சி இப்போது இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி வந்துவிட்ட பிறகு கடவுள் ஓரங்கட்டப்பட்டு விட்டார். “நீங்கள் என்ன சொன்னாலும் கோயிலுக்குப் போனால் ஒரு ஃபீலிங் வருது பாருங்க.. அதுதான்...
