Category: பெரியார் முழக்கம்

அரசுத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பன உயர்ஜாதிப் பட்டியல்

அரசுத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பன உயர்ஜாதிப் பட்டியல்

அரசுத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பன உயர்ஜாதிப் பட்டியல்: ஜனாதிபதி செயலகத்தின் மொத்த இடுகைகள் : 49. பார்ப்பனர்கள் – 39 (திறந்த போட்டி) : எஸ்.சி., எஸ்.டி. – 4; பிற்படுத்தப்பட்டோர் – 6. துணை ஜனாதிபதி செயலகத்தின் 7 பதவிகள். இங்கே 7  பார்ப்பனர்கள். எஸ்.சி., எஸ்.டி., – 0; பிற்படுத்தப்பட்டோர் – 0. கேபினட் செயலாளர் பதவிகள் : 20. பார்ப்பனர்கள் – 17. எஸ்.சி., எஸ்.டி., – 1; பிற்படுத்தப்பட்டோர் – 2. பிரதமரின் அலுவலகத்தில் மொத்த பதவிகள் : 35. பார்ப்பனர்கள் – 31. எஸ்.சி., எஸ்.டி., – 2; பிற்படுத்தப்பட்டோர் – 2. விவசாய திணைக் களத்தின் மொத்த இடுகைகள் : 274. பார்ப்பனர்கள் – 259. எஸ்.சி., எஸ்.டி., – 45; பிற்படுத்தப்பட்டோர் – 10. பாதுகாப்பு அமைச்சகம் மொத்த இடுகைகள் : 1379. பார்ப்பனர்கள் – 1300. எஸ்.சி., எஸ்.டி.,...

மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புக் கோயில்கள்  கழக சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு

மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புக் கோயில்கள் கழக சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு

மயிலாடுதுறை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 28 நடைபாதைக் கோயில்கள் மற்றும் வழிபாட்டு இடங்களின் பட்டியலை மயிலாடுதுறை வருவாய்த் துறை அதிகாரியிடம் ஜன.21 அன்று கழகத் தோழர்கள் நேரில் பட்டியலாக  அளித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பதிவுத் அஞ்சலிலும் அனுப்பப்பட்டுள்ளது. கழகப் பொறுப்பாளர்கள் இளையராஜா, மகேஷ், செந்தில், மகாலிங்கம், விஜயராகவன், தில்லை நாதன், ராகவன் ஆகியோர் மனு  அளிக்க சென்றிருந்தனர். பெரியார் முழக்கம் 24012019 இதழ்

7 தமிழர் விடுதலை: ஈழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி  தமிழக முதல்வரிடம் கழகத் தலைவர்- தோழர்கள் நேரில் மனு

7 தமிழர் விடுதலை: ஈழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் கழகத் தலைவர்- தோழர்கள் நேரில் மனு

14-1-2019 இரவு 8-00 மணியளவில் கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இளங்கோவன், சேலம் மாவட்ட செயலாளர் மேட்டூர் கோவிந்தராசு, ஈரோடு மாவட்ட செயலாளர் பவானி வேணுகோபால், சேலம் மாநகர செயலாளர் பரமேசு ஆகியோருடன் சேலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சந்தித்து பேரறிவாளன் முதலான எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்யக் கோரியும் ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தியும் விண்ணப்பத்தைக் கையளித்தனர். முதல்வரும் தாங்களும் எழுவர் விடுதலையில் அக்கறை கொண்டிருப்பதாகவும், விரைவில் விடுதலைக்கு ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார். முதல்வரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்: திரு. இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயக் குமார் ஆகிய எழுவரும் வாழ்நாள் சிறையாளர்களாக இருந்து வருவதும் அவர்கள் விடுதலைக் குறித்து ஒட்டுமொத்த தமிழகமும் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளும்...

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (4) கருஞ்சட்டைப் படைக்கு விதித்தத் தடை

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (4) கருஞ்சட்டைப் படைக்கு விதித்தத் தடை

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையி லிருந்து. பகுதி 3 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி திருச்சி புத்தூர் மைதானத்தில் 17ஆவது தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக் கட்சி) மாநாடு பெரியார் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழகம் தொடங்கப்பட்டிருந்தாலும் இது நீதிக்கட்சியின் 17ஆவது மாநாடாக நடைபெற்றது. நீதிக் கட்சியின் ‘தராசுக் கொடியே’ மாநாட்டிலும் ஏற்றப்பட்டது. ‘தராசுக் கொடி’ சமநீதி தத்துவத்தைக் கொண் டிருந்தாலும் புரட்சிக்கான அடையாளமாக இல்லை என்ற கருத்து முன் வைக்கப்பட்டு, அதற்குப் பிறகு கொடி உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, திராவிடர் கழகக் கொடி உருவாக்கப்பட்டது. அடுத்த நாள் செப். 20ஆம் தேதி சுயமரியாதை இயக்கத்தின் 4ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. அண்ணா மாநாட்டு வரவேற்புக் குழுவின் தலைவர். அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை...

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ –  ஜனவரி 2019 இதழ்

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ – ஜனவரி 2019 இதழ்

தலையங்கம் – திசை வழிகாட்டிய திருச்சிப் பேரணி கருஞ்சட்டை – எதிர்நீச்சலின் வரலாறு பாரதியின் பார்ப்பனியம் : பெரியார் எழுப்பிய கேள்விகள் பெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள் – சாஸ்திரங்கள் அய்.நா.வில் தலித் பெண்கள் சமர்ப்பித்த ஆவணம் ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்றது எப்படி? பெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்? மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvom@gmail.com பெரியார் முழக்கம் 17012019 இதழ்

கழகத் தோழர் இரா. விஜயகுமார் தாயார் மறைவு

கழகத் தோழர் இரா. விஜயகுமார் தாயார் மறைவு

சேலம் மாவட்டம் கொளத்தூர் தார்காடு கிளை கழகத் தோழர் இரா.விஜயகுமார் (இராணுவ ஓய்வு) தாயார் ஆர்.என்.காசிமதி (71) உடல் நலக்குறைவுக் காரணமாக 09.01.2019 அன்று காலை 10.00 மணிக்கு அவர்களது இல்லத்தில் முடிவெய்தினார்.  கழக மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் மறைந்த காசிமதி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பெரியாரியல் சிந்தனையாளரும் காசிமதி கணவருமான இராமசாமி (ஆசிரியர் ஓய்வு), மகன்கள் விஜயகுமார், சசிகுமார் ஆகியோர் காசிமதியின் உடலை எந்தவித சடங்குகளும் இன்றி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ மாணவர்கள் ஆய்வுக்காக  கையளித்தனர். தோழர்கள் கடந்த 2009ஆம் ஆண்டு தனது தாயாரின் உடல் கொடைக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  தோழர்களின் இச்செயல்களை  நிகழ்வுக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர். பெரியார் முழக்கம் 17012019 இதழ்

கடலூர் -அரியலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

கடலூர் -அரியலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

08.01.2019 திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சி வசந்தா திருமண நிலையத்தில் நடைபெற்றது.  நிகழ்வுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார்.  முதல் நிகழ்ச்சியாக கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி கழகக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகப் பெரியார் சிந்தனைப் பலகை தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. கடவுள் மறுப்பை மதன்குமார் கூறினார். அறிவழகன் வரவேற்புரையாற்றினார். துவக்க உரையாக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமிதிராவிடர் விடுதலை கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் பெரியாரியல் குறித்தும் பேசினார். தமிழ்நாடு மாணவர் கழக மாநிலச் செயலாளர் பாரி சிவக்குமார், பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம், அய்யனார், பழனிவேல் (ஆசிரியர்), முத்துகிருஷ்ணன், அரியலூர் மாவட்ட அமைப்பாளர் கோபால் இராவணன், நட பாபு அம்பேத்கர், கண்மணி, நட பாரதிதாசன் ஆகியோர் பேசினர். கடலூர் மாவட்ட செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டது. அடுத்த கட்ட...

கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்

கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்

4.01.2019 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தாக்கல் செய்திருந்த ரிட் மனு எண்.27748/2005 விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சிவசுப்பிரமணியன் தமிழகம் முழுவதும் பாதைகள், நீர்நிலைகள், புறம் போக்கு நிலங்கள் ஆகியவற்றில் சட்டவிரோதமாக எந்தவிதமான அரசு அனுமதி இல்லாமல் கட்டப் பட்டுள்ள சர்ச்சுகள், மசூதிகள், கோயில்கள் ஆகியவை அகற்றப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்து அது தொடர்பாக தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் இவ்வாறு கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத்தலங்கள் பற்றிய புள்ளிவிவரங்களை 21/01/19 தேதிக்குள் நீதிமன்றத்துக்கு அளிக்குமாறு தமிழக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கழகத் தோழர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத வழிபாட்டுத் தலங்கள் பற்றிய புள்ளி விவரங்களை அளித்து விரிவான அறிக்கை அனுப்பி வைக்குமாறு...

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு:  சில கேள்விகள்

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு: சில கேள்விகள்

பொருளாதார அடிப்படையில்  இடஒதுக்கீடு செய்யக் கொண்டு வரப்பட்ட சட்டம், சட்டத்தின் பார்வையில் நிலைக்குமா? இதை அமுல்படுத்துவது எப்படி? இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் போகக் கூடாது என்று தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இதனால் முன்னேறியப் பட்டியலில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சமமாகக் கூடுதல் இடங்களை ஒவ்வொரு ஆண்டும் உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்து பெற்று வந்தனர். அவர்கள் தான் இடஒதுக்கீட்டை உயர்த்துவதில் தவறு இல்லை என்று இப்போது வாதிடு கிறார்கள். கல்வி வேலை வாய்ப்புகளில் பெரும் பான்மை ஆதிக்கத்தில் பாதிக்கப் படும் சிறுபான்மை மக்களுக்காகவே இட ஒதுக்கீடு என்ற சமூக நீதிப் பாது காப்புத் திட்டம் இப்போது தலைகீழாக மாற்றப்பட்டு விட்டது. கல்வி வேலை வாய்ப்பு களில் ‘போதிய பிரதிநிதித்துவம்’ இல்லாத சமூகத்துக்குத் தான் (ஹனநளூரயவந சுநயீசநளநவேயவiடிn) இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. முன்னேறிய சமூக ஏழைகளில் போதுமான...

பொருளாதார அடிப்படை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை என்ன?

பொருளாதார அடிப்படை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை என்ன?

முன்னேறிய ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற அமைச்சரவையின் முடிவு வெளி வந்தவுடன், கேரள முதல்வர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பினராய் விஜயன் அதை ஆதரித்தார். கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி, இந்த அறிவிப்பு தேர்தல் மாய்மாலம் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவும் இதேபோல் ‘மாய்மாலம்’ என்று கூறினாலும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு தேவை இருக்கிறது என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது. மண்டல் குழு பரிந்துரை அமுல்படுத்திய காலத்திலிருந்தே இந்தக் கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்து வருவதாகவும் தலைமைக் குழு அறிவித்துள்ளது. கேரள முதல்வர் பினராய் விஜயன், இந்த இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் போது கேரளாவின் மற்றொரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அச்சுதானந்தன் கடுமையாக எதிர்த்துள்ளார். “இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத் திட்டமல்ல; பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு; ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்ற அடிப்படையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...

மண்டல் பரிந்துரை அமுலாக்க 10 ஆண்டுகள் மூன்றே நாட்களில் வந்துவிட்டது ‘பொருளாதார’ இடஒதுக்கீடு

மண்டல் பரிந்துரை அமுலாக்க 10 ஆண்டுகள் மூன்றே நாட்களில் வந்துவிட்டது ‘பொருளாதார’ இடஒதுக்கீடு

பொதுப் போட்டியில் கல்வி மற்றும் வேலை வாயப்புகளில் மட்டும் 10 சதவீத இடஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு செய்து அதற்கான சட்டத்திருத்தத்தையும் நாடாளுமன்றத்தில் இரு அவையிலும் நிறைவேற்றியிருக்கிறார்கள். இடஒதுக்கீடு சமூக கல்வி ரீதியாகப் பின் தங்கியவர்களுக்குக் கொண்டு வரப்பட்டது; பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அல்ல. நாடாளுமன்றத்தில் 1951ஆம் ஆண்டு இது குறித்து விவாதங்கள் நடந்தபோது பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர், ‘பொருளாதாரம்’ என்ற சொல்லையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை புறந்தள்ளினர். வி.பி.சிங் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்புகள் 27 சதவீத இடஒதுக்கீட்டை அமு லாக்கும் ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 9 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. பிரதமராக இருந்த நரசிம்மராவ், திறந்த போட்டிக்கான இடங்களில்முன்னேறிய ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத ஒதுக்கீடு ஆணையை பிறப்பித்தார். உச்சநீதிமன்றம் நரசிம்மராவ் ஆணையை சட்டத்துக்கு எதிரானது என்று கூறி விட்டது. குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி 2016இல் முன்னேறிய ஜாதியினருக்கு 10...

தமிழர் திருநாள் வாழ்த்து!

தமிழர் திருநாள் வாழ்த்து!

தோழர்களுக்கும், வாசகர்களுக்கும், ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தின் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! பெரியார் முழக்கம் 10012019 இதழ்

சென்னையில் ‘திராவிடம்’ பயிற்சி வகுப்பு

சென்னையில் ‘திராவிடம்’ பயிற்சி வகுப்பு

‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பு சென்னையில் டிசம்பர் 14, 15 தேதிகளில் இரண்டு நாள் பயிற்சி வகுப்பை நடத்தியது. தமிழ்நாடு முழுதுமிருந்தும் 50க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்றனர். ‘சென்னை பிரஸ் கிளப்’ அரங்கில் நடந்த இந்தப் பயிற்சி வகுப்பில் டிசம்பர் 14ஆம் தேதி பகல் 11 மணியிலிருந்து ஒரு மணி வரை ‘திராவிடம்’ என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசினார். திராவிடம் தோன்றிய வரலாறு, அதன் உள்ளடக்கம், வரலாற்றுத் தொடர்ச்சி, திராவிடத்துக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் அடங்கியுள்ள குழப்பங்களை தரவுகளோடு விளக்கினார். உரையைத் தொடர்ந்து பயிற்சி யாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமளித்தார் பெரியார் முழக்கம் 10012019 இதழ்

ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக கலந்தாய்வுக் கூட்டம் 30.12.18 மாலை 4 மணிக்கு,  சென்னிமலை செல்வராசு இல்லத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர்கள் மடத்துக் குளம் மோகன்,  சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்டக் கழகம் சார்பில் ஒன்றிய கிளைக் கழகக் பொறுப்பாளர்கள் நியமனத்தில் மாற்றம் செய்யப்பட்டது. எதிர்வரும் பொங்கல் விழாவை தெற்கு மாவட்டம் சார்பில் சிறப்பாகக் கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. கலந்தாய்வில் மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 10012019 இதழ்

கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68 சதவிகிதம் அதிகரித்தது

கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68 சதவிகிதம் அதிகரித்தது

மோடி ஆட்சியில் கடந்த நான்காண்டுகளில் இந்தியாவில் கோடீஸ்வரர் களின் எண்ணிக்கை 68 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.மத்தியில், மோடி தலைமையில் பாஜக அரசு பதவியேற்று நான்கரை ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் குறித்த விவரங்களை நேரடி வரிவிதிப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஆண்டு வருமானம் இருப்பதாக கூறி வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை, கடந்த 4 ஆண்டுகளில் 1 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது; கடந்த 2014-15ஆம் நிதி யாண்டில் 88 ஆயிரத்து 649 பேர் 1 கோடி ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டு வதாக கணக்கு தாக்கல் செய்திருந்தனர்; ஆனால், அவர்கள் தற்போது 1 லட்சத்து 40 ஆயிரத்து 139 பேர்களாக அதிகரித்துள்ளனர்; இது 68 சதவிகித உயர்வாகும் என்று நேரடி வரி விதிப்பு வாரியத் தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்....

கழக ஏட்டுக்கு மாதந்தோறும்  கழகத் தோழர் ரூ.1000 நன்கொடை

கழக ஏட்டுக்கு மாதந்தோறும் கழகத் தோழர் ரூ.1000 நன்கொடை

திருச்செங்கோட்டில் தம்பி தேனீர் விடுதி நடத்தும் கழகத் தோழர் சோமசுந்தரம், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’இதழுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000/- நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளார். தோழரின் பங்களிப்பைப் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. – ஆசிரியர் பெரியார் முழக்கம் 10012019 இதழ்

காஞ்சி, சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

காஞ்சி, சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

கழகத் தலைவர், பொதுச் செயலாளர், அமைப்புச் செயலாளர், பொருளாளர் மாவட்டம் தோறும் கழகத் தோழர்களை சந்தித்து உரையாடி வருகிறார்கள். சில பகுதிகளில் மாவட்டக் கழக அமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டன. கழக ஏடுகளுக்கு ‘சந்தா’க்களை தோழர்களிடமிருந்து பெற்று வருகின்றனர். இது குறித்து ஏற்கனவே பல மாவட்ட கலந்துரையாடல் செய்திகள் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டில் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் டிசம்பர் 20ஆம் தேதி மாலை கூடுவாஞ்சேரி தலைநகர் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. கழகப் பொறுப்பாளர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து கீழ்க்கண்ட பொறுப்பாளர் களை கழகத் தலைவர் அ றிவித்தார். மாவட்டத் தலைவர் செ.கு. தெள்ளமிழ்து; மாவட்ட செயலாளர் மு. தினேசுகுமார்; மாவட்ட அமைப்பாளர் கா. இரவிபாரதி; மாவட்ட துணைத் தலைவர் சி. சிவாஜி; மாவட்ட துணை செயலாளர் சு. செங்குட்டுவன்; மாவட்ட இளைஞரணி தலைவர் மூ. ராஜேஷ்; மாவட்ட இளைஞரணி செயலாளர் ஊமைத்துரை; மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ந. இராமஜெயம்;...

‘போலி அறிவியல்’ கும்பலுக்கு சில கேள்விகள்

‘போலி அறிவியல்’ கும்பலுக்கு சில கேள்விகள்

மகாபாரத காலத்திலேயே சோதனைக் குழாய் குழந்தை பிறப்பு முறை வந்து விட்டது என்றால் பிறகு அது ஏன் நடைமுறையில் இல்லை? வெளி நாட்டுக்காரர்கள் இந்த அறிவியல் முறையை கண்டுபிடிக்கும் வரை, ‘இந்தப் புராண அறிவியல்’ எந்தப் புற்றுக்குள் பதுங்கிக் கிடந்தது? சோதனைக் குழாய் குழந்தைகளுக்கு-பெண்-ஆண் விந்துக்களை பரிசோதிக்கும் சோதனைச் சாலைகள் இருந்தனவா? ‘ஸ்டெம் செல்’ அறிவியல் புராண காலத்திலேயே இருந்தால் அந்த ‘ஸ்டெம்செல்’ மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதா? அதற்கான மருத்துவர்கள் இருந்தார்களா? தசரதன் மனைவிக்கு குழந்தை இல்லாததால் அசுவமேத யாகம் நடத்தி ‘குதிரை’யுடன் தசரதன் மனைவி உறவு கொண்டு இராமன் பிறந்ததாக இராமாயணம் கூறுகிறதே? அப்போது ஏன் ‘சோதனைக் குழாய்’ முறை – இராமன் பிறப்புக்குப் பயன்படுத்தவில்லை? அலுமினியம் இரப்பர் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு தான் விமானக் கண்டுபிடிப்பே வந்தது? இராவணன் போர் விமானங்களைப் பயன்படுத்தினான் என்றால் – இரப்பர், அலுமினியம் இல்லாமலே விமானம் வந்து விட்டதா? இராம – இராவண யுத்தம்...

நெமிலியில் மக்கள் மன்றம் நடத்திய அம்பேத்கர் நினைவு நாள்

நெமிலியில் மக்கள் மன்றம் நடத்திய அம்பேத்கர் நினைவு நாள்

மக்கள் மன்றம் சார்பில் காஞ்சி மாவட்டம் நெமிலியில் அம்பேத்கர் நினைவு நாள் கூட்டம் டிசம்பர் 17ஆம் தேதி மக்கள் மன்ற கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. காவிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக சமத்துவம்-சகோதரத்துவம் காண உறுதி ஏற்போம் என்கிற முழக்கத்தோடு நிகழ்வு நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அம்பேத்கரின் இந்து எதிர்ப்பு, இராமாயண எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்புகளையும் ஜாதி – ஜாதியமைப்பு – ஜாதி ஆணவப் படுகொலை குறித்தும் உரையாற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நிறைவுரையாற்றினார். மக்கள் மன்றத்தில் பத்தாண்டுகளாக இணைந்துள்ள தோழர் உமாவின் தந்தையார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது அம்பேத்கர் – பெரியார் சிலைகளுக்கு பறை முழக்கத்துடன் மாலைகள் அணிவிக்கப் பட்டன. பெரியார் முழக்கம் 10012019 இதழ்

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (3) ‘தேசியக் கொடி’ எரிப்பு அறிவிப்பும் அதன் தாக்கமும்

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (3) ‘தேசியக் கொடி’ எரிப்பு அறிவிப்பும் அதன் தாக்கமும்

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையி லிருந்து. பகுதி 2 இந்தித் திணிப்புக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தார் பெரியார். 17.7.1955 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு 1955 ஆகஸ்ட் 1ஆம் தேதி கொடி எரிப்புப் போராட்டம் நடத்தும் முடிவை எடுத்தது. இது குறித்து 20.7.1955 அன்று வெளி வந்த ‘விடுதலை’ நாளேட்டில் பெரியார் அறிக்கை வெளியிட்டார். நாடெங்கும் கடும் எதிர்ப்புகள் வந்தன. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது. அப்போது பெரியார் இவ்வாறு எழுதினார்: “குமரன் காத்த கொடியை கொளுத்தலாமா என்கிறார்கள் நம் நாட்டு கம்யூனிஸ்டுகள். உலகத்தில் அறிவாளிகள் பிறக்குமிடம் கம்யூனிஸ்ட் கட்சி தான் என்கிறார்கள். நம் நாட்டு கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை அத்தனையும் பொய்யாகிவிட்டது. குமரன்...

கொளத்தூர் சரவணபரத்-பிரியதர்சினி இணை அறிமுக விழா – பெண் விடுதலைக் கருத்தரங்கம்

கொளத்தூர் சரவணபரத்-பிரியதர்சினி இணை அறிமுக விழா – பெண் விடுதலைக் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் பகுதி தோழர் சரவணபரத் மற்றும் பிரியதர்சினி ஆகியோரது இணை அறிமுக விழா 30.12.2018 அன்று சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் ஒன்றியம் அய்யம் புதூர் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. முன்னதாக காலை 10 மணியளவில் அய்யம்புதூரைச் சார்ந்த  பெரியார் பெரும் தொண்டர் சி. சுப்பிரமணி அய்யம்புதூர் பகுதியில் கழகத்தின் கொடிக் கம்பத்தை நிறுவி , கொடியேற்று விழா ஏற்பாடு செய்திருந்தார். பறை முழக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கழகக் கொடியை ஏற்றினார். பின்னர் ஊர்வலமாக தோழர்கள் அனைவரும் சென்றனர். அதற்கடுத்து காலை 11 மணியளவில் பெண் விடுதலைக் கருத்தரங்கம் நடைபெற்றது. கழகப் பொருளாளர் துரைசாமி தலைமை வகித்தார் . சேலம் மாவட்ட தலைவர்  சூரியக்குமார் முன்னிலை வகித்தார்.  இரத்தினசாமி (அமைப்புச் செயலாளா) மற்றும் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) ஆகியோர் இணையர்களை வாழ்த்தி வாழ்த்துரை...

தமிழர்களுக்கான விழா பொங்கல் மட்டுமே பெரியார்

தமிழர்களுக்கான விழா பொங்கல் மட்டுமே பெரியார்

17.1.1968 அன்று கரூரில் பொங்கல் விழா சிறப்புக் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி. இந்த பொங்கல் விழா என்பது அறுப்புப் பண்டிகைன்னும் சொல்லுவார்கள். அதேபோல நாமும் அறுத்துப் பண்டங்களைக் குடும்பத்துடன் உபயோகப்படுத்துகிற நாள். மற்றும் நம்மாலான வசதிகளை விவசாயத்துக்காக நமக்கு உதவியாய் இருந்து தொண்டாற்றின ஆளுகளுக்கு – அவர்களுக்கு நாம ஏதாவது திருப்தி பண்ணுகிறதுக்கு – சாப்பாடு போடுகிறதோ, அவர்களுக்கு துணிமணி எடுத்துக் கொடுக்கிறதோ அல்லது ஏதாவது காசு கொடுத்து அவர்களைச் சந்தோஷப்படுத்துகிறதோ – இதெல்லாம், நாம் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தோம். நேற்று (16.1.968இல்) இந்த நேரத்துக்கு, நான் சேலத்திலே பெரிய மிராஸ்தார் இரத்தினசாமி பிள்ளை என்கிறவர், அவர் தோட்டத்திலே இந்த பண்டிகை வைச்சார். என்னைத்தான் தலைமையாய் அவர் விரும்பினார், போயிருந்தேன். பொங்கல் தடபுடலாக ஒரு அய்ம்பது, அறுபது மாடுகளை வைச்சி நம்ம எதிரிலேயே நடத்தினாரு. இம்மாதிரி இருநூறு பேருக்குச் சீலை வேட்டி தந்தார். ஒரு புலவர் அம்மையார் காமாட்சி...

தமிழ் ஊடகங்களில் முதன்முறையாகப் பெறுகிறார்  ‘நியூஸ் 18’ குணசேகரனுக்கு ராம்நாத் கோயங்கா விருது

தமிழ் ஊடகங்களில் முதன்முறையாகப் பெறுகிறார் ‘நியூஸ் 18’ குணசேகரனுக்கு ராம்நாத் கோயங்கா விருது

  நியூஸ் 18 தமிழ்நாடு’ தொலைக் காட்சியின் முதன்மை ஆசிரியர், குணசேகரனுக்கு, ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது’ வழங்கப் பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர், ராம்நாத் கோயங்கா நினைவுகளை போற்றும் வகையில், 2004 முதல், ஒவ்வொரு ஆண்டும், ஊடகத்துறை சாதனையாளர்களுக்கு, ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது’ வழங்கப்படுகிறது. பத்திரிகையாளர் களின் நேர்மையான, மிகச் சிறப்பான பங்களிப்பை போற்றும் வகையில், இந்த விருது வழங்கப்படுகிறது. பிராந்திய மொழியில், ஒரு நிகழ்வு அல்லது மக்கள் பிரச்னையை, விரிவாக, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், பதிவு செய்யும், அச்சு மற்றும், ‘டிவி’ ஊடகவியலாளருக்கு, இவ்விருது வழங்கப்படும். அதன்படி, 2017ஆம் ஆண்டுக்கான விருதுகளில், பிராந்திய மொழிகளில் சிறந்து விளங்கிய, ஊடகவியலாளர் விருதுக்கு, ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ முதன்மை ஆசிரியர் மு. குணசேகரன் தேர்வு செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில், 2017இல், ‘ஒக்கி’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீனவர்கள் சந்தித்த துயரங்களை, தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வந்ததற்காக,...

அரசு நிதி உதவியுடன் பஞ்சாப் மாநிலம்  ஜலந்தரில்  அறிவியல் மாநாடு என்ற பெயரில் ‘காமெடி கலாட்டா’

அரசு நிதி உதவியுடன் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் அறிவியல் மாநாடு என்ற பெயரில் ‘காமெடி கலாட்டா’

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி இந்திய அறிவியல் மாநாடு என்ற பெயரில் ‘காமெடி கலாட்டா நிகழ்ச்சி’ ஒன்றை அரங்கேற்றி யுள்ளனர். பிரதமர் மோடி இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்திருக்கிறார். தமிழகத்தில் ஆழியாறில் செயல்படும் உலக சமுதாய சேவை மய்யத்தில் வேலை செய்யும் கண்ணன் ஜெகதாள கிருஷ்ணன் என்ற 42 வயது பேர் வழி அய்ன்ஸ்டின், நியுட்டன் கோட்பாடுகள் தவறு; புவி ஈர்ப்பு விசை என்பதும் தவறு என்று பேசியிருக்கிறார். தன்னை ஒரு இயற்பியல் விஞ்ஞானி என்று கூறிக் கொண்ட அவர் “20ஆம் நூற்hறண்டு அய்ன்ஸ்டின் நூற்றாண்டு என்று கூறுகிறார்கள்; அடுத்த சில ஆண்டுகளில் அது என்னுடைய நூற்றாண்டாகப் பெயர் மாறப் போகிறது” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டார். இவர் இயற்பியல் படித்தவரே அல்ல என்றும் மின்பொருள் துறை படித்த பொறியியல் பட்டதாரி தான் (எலக்டிரிக்கல் என்ஜினியர்) என்றும், ‘இந்து’ ஆங்கில நாளேடு சுட்டிக்காட்டியிருக்கிறது. ஒரு வேத...

பெங்களுருவில் விஷ்ணு சிலை அமைக்க தமிழகத்தின் பாறையை வெட்டுவதா? பி.யு.சி.எல். அமைப்பு கண்டனம்

பெங்களுருவில் விஷ்ணு சிலை அமைக்க தமிழகத்தின் பாறையை வெட்டுவதா? பி.யு.சி.எல். அமைப்பு கண்டனம்

பெங்களுருவில் விசுவரூப மகா விஷ்ணு சிலை அமைக்கத்  தமிழக அரசுக்குச் சொந்தமான பாறையைக் கொண்டு செல்லத் தடை  விதிக்கக் கோரி மக்கள் சிவில் உரிமைக் கழகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசிக்கு அருகிலுள்ள கொரக் கோட்டை கிராமத்திலிருந்து மிகப் பெரும் குன்றுப்பாறையை வெட்டி யெடுத்து, கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால், பெங்களூருவின் ஈஜிபுராவிலுள்ள கோதண்ட இராமசுவாமி கோவிலில், ஏறத்தாழ 300 டன் எடை கொண்ட விசுவரூப மகா விஷ்ணு சிலை அமைப் பதற்கு ஒரு அறக்கட்டளைக்கு  மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்தது கடும் கண்டனத்திற்கு உரியது. இவ்வளவு பிரமாண்டமான சிலையை அமைப்பதற்குத் தேவையான ஒற்றைக் கல் இந்தியாவில் எங்கும் கிடைக்கவில்லை எனவும், இச்சிலையை நிறுவத் திட்டமிட்ட பெங்களூருவிலுள்ள கோதண்ட இராமசாமி கோவில் அறக்கட்டளை,  அரசினை அணுகியது எனவும் இவர்களின் வேண்டுகோளை ஏற்று தொலைதூரச் செயற்கைக் கோளின் உதவியால், தேவையான கல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதை...

திருச்சிப் பேரணி : மலேசியத் தமிழர்களிடம் எழுச்சி

திருச்சிப் பேரணி : மலேசியத் தமிழர்களிடம் எழுச்சி

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் தமிழர் தன்மான இயக்கம் சார்பில் டிசம்பர் 24ஆம் தேதி திருச்சி கருஞ்சட்டைப் பேரணி குறித்து சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியார் அரங்கில் நடந்த இந்த நிகழ்வுக்கு தன்மான இயக்கத் தலைவர் பெரு. அ. தமிழ்மணி தலைமை தாங்கி திருச்சிப் பேரணி மிகப் பெருந் தாக்கத்தை உருவாக்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். மலேசிய தி.க. தேசியத் தலைவர் எப்.காந்தராசு, கெ.வாசு, த.பரமசிவம், நா.பாரி, இரா.பெரியசாமி, இவர்களோடு மாந்த நேய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ச. அன்பரசன், பெரியார் பாசறை துணைத் தலைவர் ம. இலட்சுமணன் ஆகியோர் திருச்சியில் கருஞ்சட்டைத் தோழர்களை வாழ்த்தி – வரவேற்றுப் பேசினார்கள். 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கருஞ்சட்டை அணிந்து வந்தனர். பகுத்தறிவு கவிஞர் தி.ப.செழியன்,  பெரியார் குறித்து சிறப்பான கவிதை வாசித்து அரங்கம் அதிர கரவொலி பெற்றார். இறுதியாக தலைமைச் செயலாளர் சி.மு.விந்தைக்குமரன் நிறைவுரையாற்றினார். இயக்கத் துணைப் பொதுச் செய லாளர் த.சி.அழகன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்....

பெரியார்  தொண்டர் உணவகத்தில் நெகிழிப் பயன்பாடு நிறுத்தம்

பெரியார் தொண்டர் உணவகத்தில் நெகிழிப் பயன்பாடு நிறுத்தம்

நெகிழி பொருட்கள் (பிளாஸ்டிக்), நெகிழி பைகள் ஜனவரி 1, 2019 முதல் தமிழகத்தில் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மந்தைவெளி பகுதியில் பெரியாரிய தொண்டர் சுரேஷ் நடத்தி வரும் ‘அய்யா உணவகத்தில்’ டிசம்பர் 31 முதல் வாழை இலை, துணிப்பை, பாக்குமட்டை தட்டு போன்றவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் மாரிமுத்து மற்றும் கழகத் தோழர்கள் நேரில்  சென்று வாழ்த்தி வரவேற்றனர். பெரியார் முழக்கம் 03012019 இதழ்

பெரியார் நினைவு நாள் நிகழ்வு

பெரியார் நினைவு நாள் நிகழ்வு

இராசிபுரத்தில் : தந்தைபெரியாரின் 45 வது நினைவேந்தல் நிகழ்வு இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்  இராசிபுரம் ஜபாரதிதாசன் சாலையில் உள்ள தி.வி.கழக அலுவலகம்முன் நடைபெற்றது. பகுத்தறிவு பகலவனுக்கு முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்திய நிகழ்வில்  ர. சுமதிமதிவதனி  (தி.வி.க.), திலகா (இராசிபுரம்) வரவேற்புரையாற்றினார். இரா. பிடல்சேகுவேரா (நகரஅமைப்பாளர் தி.வி.க) தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டவர்கள் : வி.பாலு  நுஒ. ஆஊ, தி.மு.க.முன்னாள் மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர், தலைவர், இராசிபுரம் நகரவளர்ச்சி மன்றம். முன்னிலை: மணிமாறன் (நகர செயலாளர் சி.பி.ஐ.), ஜி.கே. வைகறை சேகர் (மாநில துணைச் செயலாளர் விவசாயஅணி, வி.சி.க.),  கண்ணன் (மாவட்டச் செயலாளர், ஆதித் தமிழர் பேரவை), தட்சிணாமூர்த்தி (மாவட்டத் தலைவர், தமிழர் தேசிய முன்னணி), நாணற்காடன் (மாநிலதுணைசெயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்), சுமன் (மா.துணை செயலாளர், ஆதி தமிழர்பேரவை), அண்ணாதுரை (ஒ.செயலாளர், ஆதிதமிழர் பேரவை), பாலகிருட்டிணன் (புரட்சிகர இளைஞர் முன்னணி), கீதாலட்சுமி...

மீனாட்சி அம்மன் கோவிலின் ஒரு நாள் வருவாய் 50 ரூபாயா?

மீனாட்சி அம்மன் கோவிலின் ஒரு நாள் வருவாய் 50 ரூபாயா?

“நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்?”புத்தகத்தை எழுதிய மாரிதாஸ், சமீபத்தில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட் டிருக்கிறார். வழக்கம்போல ஒரு போர்டில் கசமுசாவென ஏகப்பட்ட வார்த்தைகளை எழுதிவைத்துக்கொண்டு, மாரிதாஸ் உளறும் அந்த வீடியோ ஒரு பொய்களின் குவியல். எட்டு நிமிடங்களுக்கு ஓடும் அந்த வீடியோவில் அவர் எப்படி தகவல்களைத் திரித்துச் சொல்கிறார் என்பதைப் பார்ப்போம். இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் உள்ள கோவில்களின் எண்ணிக்கை 36, 488. பதில்: தவறு. 2018-19ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பின்படி, தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் உள்ள கோவில்களின் எண்ணிக்கை 38,646. அந்த நபர் சொல்வதுபோல 36 ஆயிரத்துச் சொச்சமல்ல. ஒரு சிறிய தகவலைக்கூட சரிபார்க்க முடியாமல், இவ்வளவு பெரிய பேச்சு. தமிழகக் கோவில்களிலிருந்து கிடைக்கும் வருவாயின் அளவு வருடத்திற்கு ஏறக்குறைய 55 கோடி ரூபாய். பதில்: பொய்....

ஆய்வரங்கமாக நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம்

ஆய்வரங்கமாக நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம்

‘நிமிர்வோம்’ மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் எட்டாவது வாசகர் வட்டம் டிச. 16, 2018 அன்று சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக அரங்கில் ஆய்வரங்கம்போல் நடந்தது. தலைமைக் குழு உறுப்பினர் அன்பு. தனசேகர் தொடக்க உரையாற்றினார். (மாதந்தோறும் ‘நிமிர்வோம்’ வளர்ச்சிக்கு ரூ.1000 நன்கொடையும் வழங்கி வருகிறார்)  வளர்மதி எழுதிய ‘சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்’ நூல் குறித்து இமானுவேல் துரை  விரிவாக உரை நிகழ்த்தினார். குஞ்சிதம் குருசாமி, நீலாவதி இராம சுப்ரமணியம், சிவகாமி சிதம்பரனார் உரையிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டினார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய் திரள்வோம்’ நூல் குறித்து எட்வின் பிரபாகரன் நூலின் மய்யமான கருத்துகளை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினார். ‘நிமிர்வோம்’ இதழில் இடம் பெற்றிருந்த மனுஷ்யபுத்திரன் உரையை மய்யமாக வைத்து பெரியாரின் ‘கிராம சீர்திருத்தம்’ நூலோடு ஒப்பிட்டு மதன்குமார் திறனாய்வு செய்தார். யுவராஜ் – க. திருநாவுக்கரசு எழுதிய நீதிக் கட்சி...

சீனாவுக்கொரு சன் யாட் சென், தமிழ்நாட்டிற்கொரு பெரியார்

சீனாவுக்கொரு சன் யாட் சென், தமிழ்நாட்டிற்கொரு பெரியார்

திருச்சியில் நடந்த திசம்பர் 23 தமிழின உரிமை மாநாட்டில் பேசுவதாய் இருந்த உரை… பெரியார் பற்றாளர்களோடு நாமும் பகிர்ந்து கொள்ள சில செய்திகள் உண்டு. சுயராஜ்ஜியம், சுதந்திரம் என்ற ஆரவாரங்களுக்கு இடையே 1947 ஆம் ஆண்டே ஆகஸ்ட் 15 தமிழர்களுக்கு துக்க நாள் என்று சொன்ன தேசத் துரோகி – இந்திய தேசத் துரோகி, இந்து, இந்தியன் என்ற அடையாளத்தை என்றைக்கும் ஏற்காத (யடட வiஅந யவேi-iனேயைn), சாதியைப் பாதுகாக்கும் அரசமைப்பை கொளுத்துங்கள் என்று சொன்ன (ரசயெn யேஒயட), 1947இலேயே படேலின் பாசிச ஆட்சி என்று சொன்ன பெரியாருக்கு வீரவணக்கம். பெரியார் பற்றாளர்களுக்கு வணக்கம். தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவராக இருந்த போது பார்ப்பனிய மேலாதிக்கத்தையும் இந்திய தேசியத்தையும் ஏற்காத பெரியார் காங்கிரசிலில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார். தனக்கென தனித்த வரலாறு கொண்ட தமிழ்நாட்டின் தனித்த வரலாற்றுப் பாதையை கடந்த நூற்றாண்டில்  உறுதிசெய்த வரலாற்று நிகழ்வு இது. இதனால்தான்,...

திருத்தம்

திருத்தம்

கடந்த வாரம் முதல் பக்கத்தில் வெளி வந்த சுப. வீரபாண்டியன் உரையில், தூத்துக்குடி மாநாட்டுப் பந்தல் எரிக்கப் பட்டது என்று தவறாக வெளி வந்து விட்டது. மதுரை மாநாட்டுப் பந்தல் எரிக்கப்பட்டது என்பதே சரி. தவறுக்கு வருந்துகிறோம்.                               (ஆர்) பெரியார் முழக்கம் 03012019 இதழ்

திருச்சிப் பேரணி : மூத்த கருஞ்சட்டைத் தோழரின் உணர்வு

திருச்சிப் பேரணி : மூத்த கருஞ்சட்டைத் தோழரின் உணர்வு

23.12.2018 அன்று திருச்சியில் நடைபெற்ற பெரியார் கருஞ்சட்டைப் பேரணி மாநாடு குறித்து பொது மக்கள் மற்றும் பெரியார் உணர்வாளர்கள், பெரியார் இயக்கத்தினரிடையே மிகுந்த பேரெழுச்சியும், மகிழ்ச்சி யும் ஒரு புதிய செயல் வேகமும் ஏற்பட்டிருக்கிறது. உணர்வாளர்களிடம் பேசிய போது பெரியார் பெருந்தொண்டர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் வணிகம் நடத்தி வரும் கம்பரசம் பேட்டையைச் சேர்ந்த பெரியவர் இருளாண்டி கூறிய கருத்து: “நான் சிறுவயதிலிருந்தே பெரியார் கொள்கைகளைப் பின்பற்று பவனாகவே இருந்தேன். எனது 18ஆவது வயதில் 1957இல் பெரியார் கூட்டிய தஞ்சை மாநாட் டிற்குப் பிறகு இப்பொழுதுதான் இவ்வளவு பெரும் கருஞ்சட்டைத் தோழர்களைப் பார்க்க முடிந்தது. உணர்ச்சி பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் வடித்தேன். எங்களுக்குப் பிறகு இந்த பெரியார் இயக்கத்தை வழி நடத்த, மக்களிடையே கொண்டு செல்ல யார் இருக்கிறார்கள் என்று நினைத்த வேளையில் பல ஆயிரக்கணக்கில் குறிப்பாக இளைஞர்களும் இளம் பெண்களும் பேரணியில் ஆட்டம் பாட்டம் முழக்கத்துடன் வந்தது...

பரப்புரை இயக்கங்கள்; போராட்டங்கள்; மாநாடுகள் 2018: கழகத்தின் தொடர் களப்பணிகள்

பரப்புரை இயக்கங்கள்; போராட்டங்கள்; மாநாடுகள் 2018: கழகத்தின் தொடர் களப்பணிகள்

2018இல் திராவிடர் விடுதலைக் கழகத்தில் செயலாற்றல் கொண்ட தோழர்கள் தொடர்ச்சியான களப்பணிகளை செய்து முடித்துள்ளனர். வழமையான பொதுக் கூட்டங்கள், பெரியார் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் ஆகிய வற்றைத் தவிர்த்து மாநாடு, பரப்புரை, போராட்டம் மற்றும் பயிலரங்க நிகழ்வு களை மட்டும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் இடம் பெற்றுள்ள பதிவுகளிலிருந்து தொகுத்துள்ளோம். ஜனவரி: கல்வி – வேலை வாய்ப்பில் – தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகள் பறிக்கப்படுவதை விளக்கும் துண்டறிக்கைகளை பல்லாயிரக்கணக்கில் தயாரித்து கழக முன்னணி அமைப்பினர் – தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கல்லூரி, பள்ளி வாயில்களில் மாணவ மாணவிகளிடம் தோழர்கள் வழங்கினர். பா.ஜ.க. பார்ப்பனர் எச். ராஜா நடத்திய ஒரு சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காஞ்சிபுரம் சங்கராச்சாரி விஜயேந்திரன் ‘தமிழ்த் தாய்’ வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க மறுத்ததைக் கண்டித்து சேலம், மேட்டூர், பள்ளிப் பாளையம், ஈரோடு, மார்த்தாண்டம், மதுரை உள்ளிட்ட நகரங்களில்...

யாவையும் நிறுத்திக் கொள் காவியே!  – பெ. கிருஷ்ணமூர்த்தி

யாவையும் நிறுத்திக் கொள் காவியே! – பெ. கிருஷ்ணமூர்த்தி

வெறிமிகு வேகத்தில் பயணிக்காத வாகனங்கள். தனிமனிதத் துதியும், வெறுப்புமற்ற , சமூகநீதி வேண்டித் தாகமுடன் களம்காணும் வேட்கை பொதிந்தப் பயணம் ! மகிழுந்தும், பெருவாகனமும்… தும்பை வெள்ளையும்… பட்டை மோதிரமும்… அத்தர் நெடியும்… பட்டைச் சங்கிலி சகிதம் மதுக்கடையை மொய்க்காதக் கூட்டம்.! நோட்டுகளை எண்ணுகிறதும், எண்ணுகிற நோட்டுக்காய் எச்சில் விழுங்கிக் கையேந்தாதக் கரங்கள்.! மனமெல்லாம் தாடிக்கிழவனை நிரப்பி… பசியென்னும் உணர்வையே பறையிசையில் நிறைத்து… நரம்பு நாணை சுயமரியாதைப் பாட்டால் மீட்டும் கூட்டம்! எம் கரமேந்தும் கருங்கொடி … சூரியனையும் மிஞ்சும் சுடரொளி! எங்கள் கருந்தேகத்தைக் கிழித்திட்டால் சிவப்பு நட்சத்திரமாய் மினுங்கும் புது ஒளி! வரலாறைச் சுமந்த மூளை. அடக்குமுறை எதிர்க்கும் தேகம். சமூகநீதிக்காய் நடந்து… நடந்து உரமேறியக் கால்கள். தீமைக்கெதிரான சொற்கள். தீர்வு கிட்டும்வரை துஞ்சாதக் கண்கள். இவையே எங்கள் அடையாளம். போதையின் ஆக்கத்தால் ஆட்டமோ.. மாநாடுத் திடலில் குழாய் விளக்குடைக்கும் நாட்டமோயின்றி… அரைக்கல் அளவே இடமாயினும்… நெஞ்சுநிமிர்த்தி அமர்ந்து… பகலவனின்...

‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலுக்கு மட்டும் புத்தகக் கண்காட்சியில் தனி அரங்கு

‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலுக்கு மட்டும் புத்தகக் கண்காட்சியில் தனி அரங்கு

‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலை ரூ.10க்கு மலிவு பதிப்பாக்கி இலட்சக்கணக்கில் விற்பனை இயக்கம் நடத்தி வரும் நன்செய் பதிப்பகத் தோழர்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த நூலுக்கு மட்டுமே தனி விற்பனை அரங்கு எடுத்துள்ளனர். இலட்சங்களையும் தாண்டி பிரதிகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன.   அரங்கின் எண். 543 பெரியார் முழக்கம் 27122018 இதழ்

“காவிக்கு மறுப்பு – பெரியாரின் கறுப்பு” திருச்சிப் பேரணி மாநாட்டு நிகழ்விலிருந்து ஒரு தொகுப்பு:

“காவிக்கு மறுப்பு – பெரியாரின் கறுப்பு” திருச்சிப் பேரணி மாநாட்டு நிகழ்விலிருந்து ஒரு தொகுப்பு:

இலட்சியத்தில் உறுதி; கட்டுப்பாட்டின் அடை யாளமே கருஞ்சட்டை என்பதை நிரூபித்தது பேரணி. காவல் துறைக்கு வேலையே இல்லை; தோழர்களே தங்களை ஒழுங்குப்படுத்திக் கொண்டு கட்டுப்பாட்டுடன் – இளம் பெண்களும் ஆண்களும் பேரணியில் அணி வகுத்தக் காட்சி – எந்த அரசியல் கட்சியிலும் பார்க்க முடியாத ஒன்று. மூத்த தலைவர்களான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர் வே. ஆனைமுத்து; அடுத்த தலைமுறையைச் சார்ந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் ஒரே மேடையில் அடுத்தடுத்து அமர்ந்திருந்த காட்சி தோழர்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்தது. மேடைக்குப் பின் திரையில் ஒளிக் காட்சிகளாக பெரியாரின் வெவ்வேறு நிழல் படங்கள் திரையிடப்பட்டன. உரைகளுக்கு இடையே பெரியாரின் ஒரு நிமிட உரை இரண்டு முறை ஒளி பரப்பப்பட்டது. பெரியார் குரலையும் கருத்தையும் கேட்ட இளைஞர்கள் கூட்டம்...

ஜாதி ஒழிப்பு – தமிழின விடுதலை – மதவெறி எதிர்ப்பை வலியுறுத்திக் குரல் கொடுத்தது கருஞ்சட்டை மாநாடு

ஜாதி ஒழிப்பு – தமிழின விடுதலை – மதவெறி எதிர்ப்பை வலியுறுத்திக் குரல் கொடுத்தது கருஞ்சட்டை மாநாடு

செயல் திசை நோக்கி வெளிச்சம் காட்டும் திருச்சி மாநாட்டுத் தீர்மானங்கள் திருச்சி பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு தமிழர்களின் அடையாளம் – உரிமைப் பறிப்பு – விடுதலைக்கான இலக்கு நோக்கிய கொள்கை வழியை அடையாளப்படுத்தி தீர்மானங்களை நிறைவேற்றி யுள்ளது. திருச்சி உழவர் திடலில் 2018 திசம்பர் 23 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒற்றைப் பண்பாடு, ஒற்றை அடையாளங்கள் என்கிற வகையில் பார்ப்பனிய அதிகார வெறிகொண்டு இயங்குகிற இந்திய அரசு இந்தியாவிற்குள் அடக்கப்பட்டுள்ள பல்வேறு மொழித் தேசங்களின் வரலாற்றையும், பண்பாட்டையும், அடையாளங்களையும் மறுக் கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தேசியஇன அடையாள உரிமையின் கீழ்த் தங்களைத் `தமிழர்கள்’ என்றே பதிந்து கொள் வதற்கான வகையில் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்து கிறது. மாநில உரிமைகளை நசுக்குவதற்காகவே ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட...

பெரியாரைப் பார்த்திடாத இளைஞர் கூட்டம்  பெரியாரியலை முன்னெடுக்க உறுதி ஏற்றது

பெரியாரைப் பார்த்திடாத இளைஞர் கூட்டம் பெரியாரியலை முன்னெடுக்க உறுதி ஏற்றது

ஆயிரமாயிரமாய் இளைஞர்கள் அணி வகுத்த கருஞ்சட்டைப் பேரணி குலுங்கியது திருச்சி மாநகர் டிசம்பர் 23, 2018 அன்று திருச்சி மாநகர் ஒரு வரலாற்றை எழுதியுள்ளது. சுமார் 200 அமைப்புகள் ஓரணியில் திரண்டு – பெரியாரே – தமிழர்களின் – தமிழ்நாட்டின் முதன்மை அடையாளம்; காவிக்கு மறுப்பு – பெரியாரின் கருப்பு என்ற முழக்கத்தோடு பல்லாயிரக்கணக்கில் திருச்சியில் திரண்டார்கள். திரும்புமிடமெல்லாம் கருப்புச் சட்டை. அதிலும் நூற்றுக்கு 90 சதவீதம் பேர் பெரியார் இறப்புக்குப் பின் 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் கழித்துப் பிறந்த பெரியாரையேப் பார்த்திடாத இளைஞர்கள்; அவர்களிலும் பலர் பெண்கள். தமிழ்நாடு முழுதுமிருந்தும் பல நூறு தனி வாகனங்கள் திருச்சியை நோக்கி வந்தன. பகல் 2 மணியளவில் பேரணி புறப்படும் கே.டி. திரையரங்கு அருகே கருஞ்சட்டைத் தோழர்கள் திரளத் தொடங்கினார்கள். 3.30 மணியளவில் பறை இசை முழங்க பேரணியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு அமைப்பும் தங்கள்...

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ –  நவம்பர் 2018 இதழ்

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ – நவம்பர் 2018 இதழ்

நடுவண் ஆட்சியின் துரோகங்கள் – தலையங்கம் ஜாதி ஒழிப்புப் போராளியின் நினைவலைகள் “இந்து இராஷ்டிரம்” அமைக்க படுகொலைகளை நடத்தும் அமைப்பு – அதிர்ச்சித் தகவல்கள் ஆரியர்களே பூர்வீகக் குடிகள் என்ற வரலாற்றுப் புரட்டுகள் தகர்கின்றன சீடர்களுடன் புத்தர் நடத்திய அறிவார்ந்த விவாதங்கள் பட்டியல் இனப்பிரிவு இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 20122018 இதழ்

கவுசல்யா மறுமணம் ஆணவப் படுகொலைக்கு எதிராக இணைந்த கைகள்

கவுசல்யா மறுமணம் ஆணவப் படுகொலைக்கு எதிராக இணைந்த கைகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே உள்ள குமரலிங்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்த சங்கரும் பழநியைச் சேர்ந்த கவுசல்யாவும் பொள்ளாச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது 2015இல் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.  சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஜாதி வெறியுடன் கவுசல்யா வின் பெற்றோர் இத்திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். 2016 மார்ச் மாதம் உடுமலைப்பேட்டையில் பட்டப் பகலில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். கொலைக்கு திட்டமிட்ட கவுசல்யாவின் பெற் றோர்கள் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கவுசல்யா மறுமணம் புரிய துணிவுடன் முடிவெடுத்தார். கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் டிசம்பர் 9ஆம் தேதி மறுமணம் நடந்தது. பறை இசை முழங்க நடந்த அந்தத் திருமணத்தில் சங்கரின் தந்தை வேலுச்சாமியும் சங்கரின் சகோதரர் களும் கலந்து கொண்டு இணையரை வாழ்த்தினர். இனி, “ஜாதி ஒழிப்புக் களத்தில் துணைவருடன் இணைந்து செயல்படுவேன். ஆணவப் படுகொலைக்கு...

அய்ராவதம் மகாதேவன் முடிவெய்தினார்

அய்ராவதம் மகாதேவன் முடிவெய்தினார்

அய்.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று ‘தினமணி’ நாளேட்டில் ஆசிரியராக நான்காண்டு காலம் பணியாற்றி, பிறகு எழுத்தியல் குறித்த ஆய்வில் பெரும் சாதனை முத்திரைகளைப் பதித்த அய்ராவதம் மகாதேவன் முடிவெய்தினார். பார்ப்பனராகப் பிறந்தாலும் அவர் சார்பு நிலையற்ற ஆய்வாளராக வாழ்ந்து காட்டிய அபூர்வ மனிதராகவே வாழ்ந்தார். சிந்து சமவெளி நாகரிக எழுத்துக்கள் திராவிட நாகரிகத்துக்கு உரியவை என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார். தமிழ் பிராமி எழுத்துகள் தான் மிகவும் பழமையானது என்பதை நிறுவியவர். சிந்து வெளி நாகரிகம், ஆரிய நாகரிகமே என்று வரலாற்றுத் திரிபு செய்த பார்ப்பனியத்துக்கு மறுப்பாக அவரது ஆய்வு அமைந்தது. இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தின் நிதி உதவியோடு அவர் நடத்திய ஆய்வுகளை இந்திய தொல்லியல் துறை 1977இல் நூலாக வெளியிட்டது. மண்டல் பரிந்துரையில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு ஆணை வந்தபோது பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்த நிலையில் அதை ஆதரித்தவர் அய்ராவதம் மகாதேவன். தனது 88ஆவது வயதில்...

முன்னாள் நீதிபதி சந்துரு சாடுகிறார் ஆகமங்களை அறியாமலேயே தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள்

முன்னாள் நீதிபதி சந்துரு சாடுகிறார் ஆகமங்களை அறியாமலேயே தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள்

நீதிபதிகள் ஆகமங்களையே அறியாமல் தீர்ப்பு சொல்லுகின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு கூறினார். வழக்கறிஞர் சிகரம் ச. செந்தில் நாதனின் படைப்புலகம் குறித்த ஆய்வரங்கு  டிச.16 அன்று சென்னை யில் நடைபெற்றது. இந்நிகழ்வின் நிறைவாக சிறப்புரை யாற்றிய அவர், “நீதிபதிகளே ஆகமம் என்றால் என்னவென்று தெரியாமல் தீர்ப்பு வழங்குகின்றனர். காஞ்சி வைணவக் கோவிலில் தமிழில் பாசுரங்களை பாடக் கூடாது என்று ஒரு வழக்கு. அதன்மீது தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஆகம விதிப்படி தமிழில் பாட தடைவிதிப்பதாக தீர்ப்பளித்தார். அந்த நீதிபதியைத் தொடர்பு கொண்டு எந்த ஆகமத்தை படித்துப்பார்த்து தீர்ப்பு வழங்கினீர்கள்? ஏற்கெனவே ஆகமம் குறித்து நான் வழங்கிய தீர்ப்பைக் கூட படிக்கவில்லையா? என்று கேட்டேன். அவரிடம் பதில் இல்லை. ஆகமங்கள், கோவில்கள் குறித்து செந்தில்நாதன் புத்தகம் எழுதி யுள்ளார். அவற்றை முதலில் நீதிபதி களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். ஒரு வழக்கு வருகிறதென்றால், நீதிபதிகள், அதை நன்கு...

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (2) அரசியல் சட்ட எரிப்புக் கிளர்ச்சி

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (2) அரசியல் சட்ட எரிப்புக் கிளர்ச்சி

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையி லிருந்து. பகுதி 1 ஒரு நாட்டின் அரசியல் சட்டப் பிரிவுகளையே 10,000 பேர் தீயிட்டுக் கொளுத்திய போராட்ட வரலாறு – பெரியார் இயக்கத்துக்கு மட்டுமே உண்டு. 1957 நவம்பர் 26இல் அரசியல் சட்டத்தில் ஜாதி இழிவு ஒழிப்புக்குத் தடையாக உள்ள உட்பிரிவுகளான 13(2), 25(1), 26(1), 26(2), 368 பிரிவுகளை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை தஞ்சையில் திராவிடர் கழக சிறப்பு மாநாட்டை 3.11.1957 அன்று கூட்டி பெரியார் அறிவித்தார். சரியாக 24 நாட்கள் இடைவெளியில் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் அறிவித்தார். பெரியார் தஞ்சை  மாநாட்டுச் சிறப்பை தனது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார். “எனது 40 ஆண்டுகால வாழ்க்கையில் எத்தனையோ மாநாடுகள் நடந்திருக்கின்றன. தலைமை வகித்திருக்கிறேன்; சுயமரியாதை இயக்க கால முதல்...

போலி அறிவியலை தோலுரித்த நரேந்திர தபோல்கர்

போலி அறிவியலை தோலுரித்த நரேந்திர தபோல்கர்

நரேந்திர அச்சுத் தபோல்கர் (1945-2013) ஒரு பிரபலமான அறிவியல் ஆர்வலர், பகுத்தறிவுப் போராளி மற்றும் எழுத்தாளர். 2013 ஆகஸ்ட் 20 அன்று காலையில் நடை பயிற்சியில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். தபோல்கரைப் பற்றி உடனேயே அறிவியல் கதிரில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம். மனிதத் தன்மையற்ற மூடநம்பிக்கைகளுக்கெதிராக அவரது இடைவிடாத பிரச்சாரத்தின் காரணமாகவும் மக்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தைப் பரப்பி வந்ததற்காகவும்தான் அவர் கொல்லப்பட்டார் என்பது வெளிப்படையான உண்மை. தபோல்கர்தான் முதல் பலி என்பதுபின்னர் தெரிந்தது. 2015 பிப்ரவரி 20 அன்று கோவிந்த் பன்சாரே, அதே வருடம் ஆகஸ்ட் 30 அன்று எம்.எம்.கல்புர்கி, 2017 செப்டம்பர் 5 அன்று கௌரி லங்கேஷ்ஆகிய பகுத்தறிவாளர்களும் மதச்சார்பின்மைக்காகப் போராடியவர்களும் செயல்பாட்டாளர்களும் ஆன மேலும் மூவர் வரிசையாகக் கொல்லப்பட்டனர். `சனாதன் சன்ஸ்தா’ என்ற இந்துத்துவ பயங்கரவாத அமைப்புதான் இவர்களைக் கொலை செய்த குற்றத்தைச் செய்தது என்று கர்நாடக சிறப்புப் புலனாய்வு குழு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. சமூகத்தில் தபோல்கரின் தலையீடுகள் காரணமாக...

பெரியார்-அம்பேத்கர் நினைவு நாள்  பொதுக் கூட்டம்

பெரியார்-அம்பேத்கர் நினைவு நாள் பொதுக் கூட்டம்

பெரியார் –  அம்பேத்கர் நினைவு நாள் பொதுக் கூட்டம் 2018, டிசம்பர் 13ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டு பெரியார் திடலில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் நடைபெற்றது. பா. ராஜன் தலைமை தாங்கினார். கோ. இளங்கோ (விடுதலை சிறுத்தைகள்), புவன் (மக்கள் அதிகாரம்) ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், முனைவர் சுந்தரவள்ளி உரையாற்றினர். வடசென்னை மாவட்டக் கழகத் தோழர் சா. ராஜீ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தொடக்கத்தில் சமர்கலைக் குழுவினரின் பறை இசை நிகழ்வு நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி குழுவினருக்கு நூல்களை வழங்கி பாராட்டினார். பெரியார் முழக்கம் 20122018 இதழ்

மேதகு பிரபாகரன் பிறந்த நாளில் மாணவர்களுக்கு கல்வி உதவி

மேதகு பிரபாகரன் பிறந்த நாளில் மாணவர்களுக்கு கல்வி உதவி

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் கற்க கல்வி அறக்கட்டளை சார்பில் தமிழீழத் தேசிய தலைவர் வே. பிரபாகரன் 64ஆவது பிறந்த நாள் விழா மற்றும் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா சென்னை மேடவாக்கம்  தமிழ் வழிப் பள்ளியில்  கரு அண்ணாமலை தலைமை யில் நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி இனமான நடிகர் சத்யராஜ், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, பொழிலன் (த.வி.க. தலைவர்) உரையாற்றினர். தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் மாணவர்கள் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து பாடல்கள் பாடி கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடினர்.  உமாபதி, சுப்பிரமணி பொற்கோவன், பெரியார் மணிமொழியன் கண்ணன், சிலம்பம் சிவாஜி, கரிகாலன் சுரேஷ், மூவேந்தன், மதன்குமார் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், கற்க கற்க கல்வி அறக்கட்டளை தோழர்கள், பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 20122018 இதழ்

கோவை கல்லூரி விழாவில் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் அறிமுகம்

கோவை கல்லூரி விழாவில் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் அறிமுகம்

கோவை அன்னூர் அருகே குப்பேபாளையம் கிராமத்தில் உள்ள ஜி.ஆர்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் டிசம்பர் 14, 2018 அன்று முத்தமிழ் விழா நடந்தது. விழாவில் கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நிர்மல், வெங்கட் ஆகியோர் பங்கேற்று, பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” நூல் குறித்து மாணவ மாணவிகளிடம் பேசினர். ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட 230 பேர் நிகழ்வில் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் சங்கர சுப்பிரமணியம் பங்கேற்றார். கவிஞர் வைகை சுரேஷ், இந்நிகழ்வை மிகுந்த ஆர்வத்தோடு ஏற்பாடு செய்தார். 10 ரூபாய் விலையில் வெளியிடப்பட்டுள்ள நூலை தனது சொந்தப் பணத்தில் வாங்கி, மாணவிகளுக்கு வழங்கினார் வைகை சுரேஷ். கல்லூரியின் மனித வள மேம்பாட்டு அலுவலர் பாபு, மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட  ஒருங் கிணைப்பாளர்கள் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். சில மாதங்களுக்கு முன்பு இங்கே கல்லூரி நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்...

‘கருஞ்சட்டைப் பேரணி’க்கு திரளுவீர்!

‘கருஞ்சட்டைப் பேரணி’க்கு திரளுவீர்!

அன்பார்ந்த தோழர்களுக்கு, வணக்கம். தந்தை பெரியாரின் 45ஆம் நினைவுநாளை (24.12.1973) முன்னிட்டு வரும் டிசம்பர் 23, 2018 அன்று திருச்சியில் ‘காவி பயங்கரவாதத்தை’ வீழ்த்த இலட்சம் பேர் பங்கேற்கும்  கருஞ் சட்டைப் பேரணி – மாநாடு நடைபெற உள்ளது. பேரணியையும், மாநாட்டையும் வெற்றி பெற செய்ய வேண்டியது நம்முடைய கடமையும், உரிமையும் ஆகும். குறிப்பாக காவி பயங்கரவாதம் தமிழ் நாட்டையும், இந்திய துணை கண்டத்தையும் கார் இருளுக்குள் தள்ளிவிட்டது. வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவில் மனிதனை மனிதன் அடித்துக் கொல்லும் கொடூரமான கொடுங்கோல் ஆட்சியை மோடி தலைமையில் ஆர்.எஸ்.எஸ்.சும், பி.ஜே.பி.யும் நடத்திக் கொண்டு இருக்கின்றன. இதற்கு மேலும் பொறுமையாகக் கடந்து செல்வது. தன்மானமுள்ள தமிழனுக்கு அவமானம்.  தமிழினத்தைப்  பாதுகாக்க தமிழ் இளைஞர்கள் தோள் கொடுக்கவேண்டிய தருணம் இது. மேலும் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய, தமிழ்த் தேசிய, ஜனநாயக சிந்தனையாளர்கள்  ஒரு குடையின் கீழ் திரள உள்ளனர். இங்கே எந்த வேறுபாடும் இல்லை....

160க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்கின்றன கருஞ்சட்டைப் பேரணிக்கு திருச்சி நோக்கி திரளுகிறார்கள்

160க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்கின்றன கருஞ்சட்டைப் பேரணிக்கு திருச்சி நோக்கி திரளுகிறார்கள்

திருச்சியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் டிசம்பர் 23 அன்று நடைபெறவுள்ள பெரியார் நினைவு கருஞ்சட்டைப் பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு 17.12.2018 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பேரணி மற்றும் மாநாட்டில் இது வரையில் 160க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்திருக்கின்றன. தமிழ்நாடு முழுதும் உள்ள பெரியார் கொள்கைகளை ஏற்கும் அனைத்து அமைப்புகளும், படைப்பாளி களும், செயல்பாட்டாளர்களும், தமிழின உணர்வாளர்களும் கருப்புச் சட்டை அணிந்து இந்த பேரணியில் பங்கேற்கிறார்கள். 19.12.2018 அன்று அனைத்து அமைப்பு களின் பெயர்களையும் உள்ளடக்கிய முழுமையான பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களும், பெண்களும், மாணவர் களும், இளைஞர்களும் பெருமளவில் திரண்டு பேரணி மற்றும் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி யின் தலைவர் குடந்தை அரசன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை...