Category: பெரியார் முழக்கம்

ஜனநாயகமா? பார்ப்பன நாயகமா? குற்றவாளிகளுக்குச் சுதந்திரம்; இயக்கவாதிகளுக்குச் சிறை கீற்று நந்தன்

ஜனநாயகமா? பார்ப்பன நாயகமா? குற்றவாளிகளுக்குச் சுதந்திரம்; இயக்கவாதிகளுக்குச் சிறை கீற்று நந்தன்

சாதி செல்வாக்கு, பண பலம் உள்ளவர்களை காவல் துறை அவ்வளவு எளிதாகக் கைது செய்துவிடாது. அப்படியானவர்கள் மீது வழக்குப் பதிவு செயவதற்கே பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும். போராட்டச் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து, மக்கள் கவனம் பெற்ற பிறகு ஏற்படும் அழுத்தம் காரணமாக, வேறு வழியின்றி தொடர்புடையவர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்யும் – அதுவும் எளிதில் ஜாமீன், விடுதலை கிடைக்கக்கூடிய சட்டப் பிரிவுகளில். இதுதான் சுதந்திர இந்தியாவில் தொடர்ச்சியான நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது, இப்போது மாணவி பாத்திமா  தற்கொலைக்குத் தூண்டப்பட்ட வழக்கிலும் இதுதான் நடந்து வருகிறது. கேரள மாணவி பாத்திமா தனது தற்கொலைக்குக் காரணம் அய்.அய்.டி. பேராசிரியர் சுதர்சன் பத்மனாபன் என்று குறிப்பு எழுதி வைத்திருந்தும், இதுவரை சுதர்சன் பத்மனாபன் கைது செய்யப்படவிலை. இந்தியாவில் பார்ப்பனர்களை அவ்வளவு எளிதாகக் கைது செய்யவோ, தண்டித்து விடவோ முடியாது. அதிகார மட்டம் முழுவதையும் ஆக்கிரமித்து இருக்கும் பார்ப்பனர்கள் அதை அவ்வளவு...

மகாராஷ்டிரா பா.ஜ.க.வில் பார்ப்பனத் தலைமையை எதிர்த்து பிற்படுத்தப்பட்டோர் போர்க் கொடி

மகாராஷ்டிரா பா.ஜ.க.வில் பார்ப்பனத் தலைமையை எதிர்த்து பிற்படுத்தப்பட்டோர் போர்க் கொடி

மகாராஷ்டிரா பா.ஜ.க.வுக்குள் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் போராட்டம் தொடங்கி விட்டது. முதல்வராக இருந்த பார்ப்பனர்  பட்னாவிசை எதிர்த்து பிற்படுத்தப்பட்ட பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க் கொடி உயர்த்தி யுள்ளனர். இது குறித்து ‘தி பிரின்ட்’ ஆங்கில இணைய தள இதழ் வெளியிட்டுள்ள கட்டுரை: “பா.ஜ.க. ஏனைய கட்சிகளைப் போன்றது அல்ல; நாங்கள் வேறுபட்டவர்கள் என்று சொல்லிக் கொள்கிறது. அந்தக் கட்சிககுள் தான் இப்போது ‘வேறுபாடுகள்’ தலைதூக்கியிருக்கின்றன. 105 மகாராஷ்டிரா பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் களில் குறைந்தது 15 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வராக இருந்த பட்னாவிசுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ளதோடு, சிவசேனா தலைமையில் ஆட்சி அமைத்துள்ள எம்.வி.டி. கூட்டணியுடன் (மகா விகாஸ் கூட்டணி) பேச்சு வார்த்தையைத் தொடங்கியுள்ளனர். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளன. மகாராஷ்டிராவின் முன்னாள் பெண் அமைச்சர் பங்கஜ்முண்டே, பா.ஜ.க.விலிருந்து விலகப் போவதாக ஒரு வாரத்துக்கு முன் அறிவித்தார். இவர் மோடி அமைச்சரவையில் அமைச்சராக...

கழகச் செயலவை டிச.28இல் சென்னையில் கூடுகிறது

கழகச் செயலவை டிச.28இல் சென்னையில் கூடுகிறது

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 8.12.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமை குழுவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி,  பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, இணைய தள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், தலைமைக் குழு உறுப்பினர்கள் காவை ஈசுவரன், மடத்துக்குளம் மோகன், சூலூர் பன்னீர்செல்வன், அய்யனார், இரா. உமாபதி, பாரி சிவக்குமார், மேட்டூர் சக்தி ஆகியோர் பங்கேற்றனர். கழகத்தின் பரப்புரைத் திட்டங்கள், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், கழக அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. டிசம்பர் 28 சனிக்கிழமை சென்னையில் கழகச் செயலவைக் கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. செயலவையில் தோழர்களின் கருத்துகளைக் கேட்டு, செயல்...

நீதிக்காகப் போராடிய தோழர்கள் பிணையில் விடுதலை

நீதிக்காகப் போராடிய தோழர்கள் பிணையில் விடுதலை

மேட்டுப்பாளையம் நடுவூரில் 17 தலித் மக்கள் உயிரிழந்த செய்தி கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து நீதி கேட்டுப் போராடிய தோழர்கள், பொது மக்கள் மீது காவல்துறை மூர்க்கத்தனமாக தடியடி நடத்தி கைது செய்தது. தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிடர் விடுதலைக் கழகக் கோவை மாநகர கழகத் தலைவர் நேரு தாசு, திராவிடர் தமிழர் கட்சியைச் சார்ந்த வெண்மணி, வழக்கறிஞர் கார்க்கி உள்ளிட்ட 28 தோழர்கள் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். 5 நாளுக்குப் பிறகு டிசம்பர் 7 அன்று நாகை திருவள்ளுவன் தவிர மற்ற தோழர்கள் பிணையில் விடுதலையானார்கள். பெரியார் முழக்கம் 12122019 இதழ்

அரசியல் கைதிகளைக் கிரிமினல் கைதிகளாக நடத்தியது, அன்றைய ஆட்சி அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தைப் பெரியார் நடத்தியது ஏன்? (2) கொளத்தூர் மணி

அரசியல் கைதிகளைக் கிரிமினல் கைதிகளாக நடத்தியது, அன்றைய ஆட்சி அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தைப் பெரியார் நடத்தியது ஏன்? (2) கொளத்தூர் மணி

அரசியல் சட்ட எரிப்பு நாளில் காணொளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி தஞ்சை மாநாட்டில் பெரியார் ஜாதி ஒழிப்பைப் பற்றி மிக ஆவேசமாகப் பேசுகிறார். தன்னுடைய தொண்டர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். ஜாதியை ஒழிப்பதற்கு ஆயிரம் பாப்பனரைக் கொன்றால்தான் முடியும் என்றால் கொல்லத் தயாராக இருக்கிறீர்களா? என்று கேள்வியெழுப்புகிறார். மக்கள் ஆரவாரித்து உடன்பாடான பதிலைக் கொடுக்கிறார்கள். அந்த மாநாட்டில் தான் ஜாதியைப் பாதுகாக்கிற இந்தச் சட்டப் பிரிவுகளை நீக்கவில்லை யென்றால் வருகிற நவம்பர் 26 நாளன்று அரசியல் சட்டத்தில் ஜாதியை பாதுகாக்கும் பிரிவுகளை எரிப்போம் என்று அறிவிக்கிறார். ஏன் நவம்பர்26ஐ அவர் தேர்ந்தெடுத்தார் என்றால், அரசியல் சட்ட வரைவு  எழுதப்பட்டு அதை நவம்பர் 25 அன்று நாடாளுமன்றத்தில்  நம்முடைய பெரும் மதிப்பிற்குரிய அம்பேத்கர் அவர்களால் முன் வைக்கப்பட்டு அதற்கான ஒப்புதலை கொடுக்குமாறு நாடாளுமன்றத்தைக்  கோருகிறார்; 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் தான் அந்த...

17 தலித் மக்கள் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை சேலத்தில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

17 தலித் மக்கள் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை சேலத்தில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

டிசம்பர் 2 அன்று மேட்டுப்பாளையம் அருகே தலித் மக்கள் கண்களில்படக் கூடாது என்ற நோக்கில் கட்டப்பட்ட ஜாதிச்  சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடூரமான மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியது. சென்னை மாவட்டக் கழக சார்பில் டிசம்பர் 3ஆம் தேதி அண்ணா சாலை பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில் டிசம்பர் 4ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை : திராவிடர் விடுதலைக் கழகம் ஒழுங்கு செய்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமை தாங்கினார். தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் மற்றும் கரு. அண்ணாமலை, மயிலைப் பகுதி தோழர்கள் சுகுமார், இராவணன், மனோகர், கன்னியப்பன், எட்வின் பிரபாகரன், திருவான்மியூர் வெங்கடேசன், வடசென்னை மாவட்டத் தலைவர் ஏசுகுமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டதோழர்கள் பங்கேற்றனர். தமிழ்த் தேச மக்கள் முன்னணி சார்பில் செந்தில், மே 17 இயக்கத் தோழர்கள் மற்றும் எஸ்.டி.பி.அய். மக்கள்...

நீலம் பண்பாட்டு மய்யம் நடத்திய அரசியலமைப்புச் சட்ட நாள் கருத்தரங்கம்

நீலம் பண்பாட்டு மய்யம் நடத்திய அரசியலமைப்புச் சட்ட நாள் கருத்தரங்கம்

நீலம் பண்பாட்டு மய்யம் சார்பில் ‘இந்திய அரசியல் அமைப்புச் சட்ட நாள் கருத்தரங்கம்’ நவம்பர் 26ஆம் தேதி மாலை சென்னை சேத்துப்பட்டு உலக பல்கலைக் கழக சேவை மய்யத்தில் நடந்தது. ‘பிளாக் பாய்ஸ்’ குழுவினரின் கானா மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இயக்குனர் ரஞ்சித் அறிமுக உரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அரசியலமைப்பு நகலை அறிமுகம் செய்து, புரட்சியாளர் அம்பேத்கர் நிகழ்த்திய ஆழமான உரையை சுட்டிக் காட்டிப் பேசினார். அம்பேத்கர் மொழி வழி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு எழுதிய நூலில் வடநாடு பிற்போக்கானது; தென்னாடு முற்போக்கானது. இந்தி பேசும் மாநிலங்கள் தென்னகத்தை அடக்கியாளுவதற்கேற்ப மாநிலப் பிரிவினை நடத்தியிருக்கிறது. இந்தியாவுக்கு தென்னாட்டில் ஹைதராபாத்திலும் ஒரு தலைநகரம் உருவாக்க வேண்டும் என்று எழுதியிருப்பதை சுட்டிக்காட்டினார். நிகழ்வில் ஆம்ஸ்ட்ராங் (பகுஜன் சமாஜ் கட்சி), சிந்தனைச் செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), திருமுருகன் காந்தி (மே 17), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), ஜக்கையன் (ஆதி...

கொளத்தூர் ‘புலியூரில்’ மாவீரர் நாள்

கொளத்தூர் ‘புலியூரில்’ மாவீரர் நாள்

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சேலம் கொளத்தூர் புலியூர் பிரிவில் உள்ள பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் 26.11.2019 அன்று மாலை 5 மணிக்கு  மாவீரர் நாள், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மாவீரர் நாள் பாடல் மாலை 6 மணிக்கு ஒலிக்க, மெழுகுவர்த்தி ஏந்தி தோழர்கள் நினைவு கூர்ந்தனர். சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசு மாவீரர் நாள் உரையாற்றினார். புலிகள் பஞ்சர் கடை சுப்பிரமணி நன்றி கூறினார். கழகத் தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என 1000 ற்கும் மேற்பட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 05122019 இதழ்

ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள்:  சென்னையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள்: சென்னையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் 65ஆம் பிறந்த நாள் நவம்பர் 26ஆம் தேதி பகல் 11 மணியளவில் அம்பத்தூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் நடிகர் சத்திய ராஜ், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர். ‘கற்க’ அறக்கட்டளை சார்பில் கழகப் பொறுப்பாளர் அண்ணாமலை பள்ளிக் குழந்தைகளுக்குப் புத்தகப் பை, நோட்டுகளை வழங்கினார். மாவட்டக் கழகத் தலைவர் வேழவேந்தன், செயலாளர் உமாபதி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 05122019 இதழ்

திருப்பூரில் சட்ட எரிப்பு நாள்- வீரவணக்கப் பொதுக் கூட்டம்

திருப்பூரில் சட்ட எரிப்பு நாள்- வீரவணக்கப் பொதுக் கூட்டம்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜாதியை பாதுகாக்கும் சட்ட பிரிவுகளை எரித்த நாள் பொதுக் கூட்டம் திருப்பூர், 15 வேலம்பாளையம் பகுதியில் 26.11.2019 அன்று மாலை 6 மணிக்கு  நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் சங்கீதா வரவேற்புரையாற்றினார். முதல் நிகழ்வாக முடிவெய்திய தோழர் இராவணன் படத்தை கழகத் தலைவர் திறந்து வைத்தார். இராவணனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பொதுக் கூட்டத்திற்கு இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மேட்டூர் டி.கே.ஆர். கலைக் குழுவினர் பகுத்தறிவுப் பாடல்கள் பாடினர். அவர்களுடன் பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, அமுதினி ஆகியோரும் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினார்கள். அதனைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்ட நிகழ்வில், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, மடத்துக்குளம் மோகன் ஆகியோரும், தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தோழர்கள் கனல்மதி, பிரசாந்த், தேன்மொழி, சந்தோஷ் ஆகியோரும் சட்ட எரிப்பு நாளைப் பற்றி பேசினார்கள். தொடர்ந்து தமிழ்நாடு சாக்கிய அருந்ததிய...

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்? கொளத்தூர் மணி

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்? கொளத்தூர் மணி

அரசியல் சட்ட எரிப்பு நாளில் காணொளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சிக்கு சமூக மேம்பாட்டிற்கு காரணமாக இருந்த தந்தை பெரியார் எடுத்த போராட்டங்களில் அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஏறத்தாழ நாம் அறிய உலகில் எந்த நாட்டிலும் , அந்த நாட்டின் போராட்டங்களில் அரசியல் சட்டம் எரித்ததாக இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. அப்படி ஒரு போராட்டத்தை பெரியார் முன்னெடுத்தார். அதற்கு என்ன காரணம் என்பதையும் அதைநோக்கி பெரியார் நகர்வதற்கான சூழலையும் சற்று நாம் பார்த்து விடுவது பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இந்தியாவில் பெரியார் பொது வாழ்க்கைக்கு வந்த பொழுது ஈரோடு அளவில் இருந்த பெரியார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு வந்து அதன் தலைவராக பணியாற்றிய ஆறாண்டு காலத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் போராடு பவர்களைப் பற்றி ஒரு கருத்து உருவாகிறது. இந்திய விடுதலை போராட்டம் என்பதே...

இலாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கும், மோடி ஆட்சி

இலாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கும், மோடி ஆட்சி

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், ஷிப்பிங் கார்ப்பரேசன், கன்டெய்னர் கார்ப்பரேசன், தெரி நீர்மின் உற்பத்தி கார்ப்பரேசன், வடகிழக்கு மின்சக்தி கார்ப்பரேசன் ஆகியவற்றைத் தனியாருக்கு விற்க முடிவெடுத் துள்ளதாக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். இவையனைத்தும் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள்.  மத்திய அரசு எதிர் கொள்ளும் நிதிப் பற்றாக்குறையை சமாளிப் பதற்காகத் தான் இந்த முடிவு என்கிறார் அமைச்சர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவை பொதுத்துறை நிறுவனங்கள். அவற்றைத்  தனியாருக்கு விற்பது நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமே பாதிக்கப்படுவதில் போய்த்தான் முடியும். வளர்ச்சியின் அடித்தளம் பொதுவாக கச்சா எண்ணெய், சுத்திகரிப்பு, எரிவாயு, உருக்கு, மின்சாரம், நிலக்கரி, சிமெண்ட், உரம் ஆகிய 8 தொ ழில்களை பொருளாதாரத்தின் முதன்மையான தொழில்கள் என்று அரசு அடையாளப்படுத்துகிறது. இதன் பொருள்,  ஒட்டுமொத்தத் தொழில் வளர்ச்சிக்கு இவை அடிப்படையானவை என்பதே.  இத்தகைய பொதுத்துறை நிறுவனங்கள்தான் கடந்த 72 ஆண்டுகளில் நமது தேசம் அடைந்துள்ள வளர்ச்சிக்கு அடித்தளமாக...

‘நள்ளிரவு நாடகங்கள்’

‘நள்ளிரவு நாடகங்கள்’

குடியரசுத் தலைவர், ஆளுநர், பிரதமர் பதவிகளுக்கான அதிகாரங்களை அப்பட்டமாக முறைகேடாகப் பயன்படுத்தி முகத்தில் கரியைப் பூசிக் கொண்டிருக்கிறது, நடுவண் ஆட்சி. மகாராஷ்டிராவில் சிவசேனையுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் சிவசேனையிடம் நாடாளுமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு முதல்வர் பதவியைத் தன் வசமே வைத்துக் கொள்ள பா.ஜ.க. செய்த முயற்சியை சிவசேனை ஏற்கவில்லை. பா.ஜ.க. ஆட்சி அமைக்க முடியாத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அறிவித்தார்கள். சிவசேனை தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி  அமைக்கும் முயற்சிகள் நடந்தன. திடீரென்று தேசியவாத காங்கிரசிலிருந்த சரத்பவார் அண்ணன் மகன் அஜித் பவாருடன் பேரம் பேசி அவர் மூலமாக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பா.ஜ.க. ஆட்சி அமைக்க குறுக்கு வழியில் முயற்சித்தது. சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி பதவி ஏற்க தயாரான நிலையில் நள்ளிரவில் குடியரசுத் தலைவர் மாளிகையின் கதவுகளைத் தட்டி மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி...

சட்ட எரிப்பு நாளில் கழகத் தோழர்கள் ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர்

சட்ட எரிப்பு நாளில் கழகத் தோழர்கள் ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர்

திருச்சி : சட்ட எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைச் சென்று சிறையிலேயே உயிர்நீத்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோரின் நினைவிடத்தில் திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கியசாமி தலைமையில் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பும், அண்மையில் முடிவெய்திய இராவணனுக்கு வீரவணக்க நிகழ்வும் 26.11.2019 அன்று காலை 10:30 மணியளவில் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகக் கொள்கைப் பரப்புரைச் செயலாளர் சீனி. விடுதலையரசு பங்கேற்று வீர வணக்க உரை நிகழ்த்தினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் புதியவன் உறுதி மொழி வாசிக்க தோழர்கள் உறுதி மொழி ஏற்றனர். இறுதியாக மனோகர் நன்றி கூறினார். நிகழ்வில், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி, மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய பண்பாட்டு...

கோத்தபய வருகைக்கு எதிர்ப்பு இலங்கை தூதரக முற்றுகை: கழகத் தோழர்கள் கைது

கோத்தபய வருகைக்கு எதிர்ப்பு இலங்கை தூதரக முற்றுகை: கழகத் தோழர்கள் கைது

இலங்கை அதிபராகியுள்ள ‘போர்க் குற்றவாளி’ கோத்தபய ராஜபக்சே இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தபோது இலங்கை அரசின் இராணுவ செயலாளராக செயல்பட்டவர் கோத்தபய ராஜபக்சே. அவர் இப்போது சிங்கள பெரும்பான்மையினரின் ஓட்டுகளைப் பெற்று அதிபராகி விட்டார். இனப் படுகொலை நடந்தபோது அதிபராக இருந்த ராஜபக்சே பிரதமர் பதவிக்கு வந்து விட்டார். ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே சகோதரர்கள் மீது போர்க் குற்ற விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்று உலகம் முழுதும் தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அரசின் வரவேற்பையேற்று கோத்தபய ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். இந்தியா அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் ஜந்தர் மந்தர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள். சென்னையில் நவம்பர் 29...

இராவணன் முடிவெய்தினார்

இராவணன் முடிவெய்தினார்

பெரியாரியலையே முழு நேரப் பணியாக ஏற்றுத் தொண்டாற்றிய பெரியாரியல்  போராளி இராவணன் (45) முடிவெய்தி விட்டார். திருப்பூரிலிருந்து அவரது பெரியாரியல் பயணம் தொடங்கியது. தமிழ்நாடு திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் என்று தொடர்ந்து செயல்பட்டவர். மதுரைக்கு அருகே உள்ள அதிகாரப்பட்டி என்ற கிராமத்தைச் சார்ந்த இராவணன், திருப்பூருக்குப் பணிக்கு வந்தபோது, ‘பெரியாரிஸ்டாக’ மாறினார். 15 ஆண்டுகாலம் தனது குடும்ப உறவுகளைத் துண்டித்துக் கொண்டு இயக்கத்தோடு இணைந்து முழு நேர ஊழியராக பெரியாரியக்கங்களில் களப்பணியாற்றினார். 2007ஆம் ஆண்டு தஞ்சையில் அன்றைய பெரியார் திராவிடர் கழகம், ஜாதி ஒழிப்பு மாநாடு-பேரணி ஒன்றை நடத்தி சட்ட எரிப்பில் சிறைச் சென்ற போராளிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தது. அப்போது திருப்பூரில் தனது வேலையை உதறிவிட்டு, முழு நேரப் பணியாற்ற கழகத்துக்கு வந்து மாநாட்டு அலுவலகப் பொறுப்பேற்று செயல்பட்டார். அது முதல் எந்தப் பயனையும் எதிர்பார்க்காது முழு நேரப் பணியாற்றி வந்தார்....

ஜாதி-மத-சமூக அரசியல் அதிகாரங்களை வீழ்த்த உறுதி ஏற்போம், வாரீர்!

ஜாதி-மத-சமூக அரசியல் அதிகாரங்களை வீழ்த்த உறுதி ஏற்போம், வாரீர்!

பச்சை என்றால் எப்படிப் பசுமையையும், உழவையும் குறிக்குமோ… வெள்ளை என்றால் எப்படித் தூய்மையையும், அமைதியையும் வெளிப்படுத்துமோ, கருப்பு என்றால் எப்படி அடக்குமுறைகளின் எதிர்ப்பை அடையாளப் படுத்துமோ…. சிவப்பு என்றால் எப்படி எழுச்சியையும் புரட்சியையும் புலப்படுத்துமோ… அப்படி நீலம் என்றால் சாதிய ஒடுக்குமுறைகளால் புறந்தள்ளப்பட்ட வாழ்க்கையையும், அச்சாதிய அடக்குமுறைகளை மறுத்த எழுச்சியையும் அடையாளப்படுத்துகிறது… காணாமை, தீண்டாமை, புறந்தள்ளல், ஒதுக்கி வைத்தல் அடக்குமுறை செய்தல், கல்வி வேலை வாய்ப்புகளை மறுத்தல், நட்பு, காதல் ஈடுபாடுகளைத் தடுப்பதோடு பிரித்தல், கொலையும் செய்தல் – என்றெல்லாம் இன்றைய அளவில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எத்தனை எத்தனை வடிவங்கள்… இத்தனையையும் மீறி படிப்படியாகத் தன்னை, தன் அறிவை, தன் வாழ்வை அடையாளப்படுத்திக் கொள்ளவும், மீட்டுக் கொள்ளவும் வேண்டிய நிலையில் இருக்கின்றனர், சாதியால் புறந்தள்ளப்பட்ட மக்கள்… பொதுப்பட மக்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளைக் காட்டிலும் சாதியால் புறந்தள்ளப்பட்ட மக்களின் மீதான ஒடுக்குமுறைகள் அதிகம்… இன்றைய பார்ப்பனிய இந்திய அரசும் பன்னாட்டு மூலதன...

கழகத் தலைவர் ஆறுதல் : திருப்பூர்  அகிலன் தாயார் முடிவெய்தினார்

கழகத் தலைவர் ஆறுதல் : திருப்பூர் அகிலன் தாயார் முடிவெய்தினார்

கடந்த 06.11.2019 அன்று முடிவெய்திய திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அமைப் பாளர் தோழர் அகிலன்  தாயார் முனியம்மாள் அவர்களின் இல்லத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்று குடும்பத் தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது கழகப் பொருளாளர்  திருப்பூர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில் ராசு, அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, மாதவன், அய்யப்பன், பல்லடம் சண்முகம், உள்ளிட்ட தோழர்கள் உடன் சென்றனர். பெரியார் முழக்கம் 28112019 இதழ்

ஃபாத்திமா – பார்ப்பனரல்லாதார் மீதான வரலாற்றுக் கொடூரங்களின் தொடர்ச்சி  – கீற்று நந்தன்

ஃபாத்திமா – பார்ப்பனரல்லாதார் மீதான வரலாற்றுக் கொடூரங்களின் தொடர்ச்சி – கீற்று நந்தன்

அய்.அய்.டி. நிறுவனங்களில் நடந்தேறி வரும் பார்ப்பனியக் கொடூரங்கள் குறித்து திராவிடர் இயக்கங்களும், முற்போக்கு சக்திகளும் தொடர்ச்சியாகப் பேசியும், போராடியும் வந்துள்ளனர். ஆனால், அவற்றின்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முந்தைய காங்கிரஸ் அரசும், தற்போதைய பாஜக அரசும் துணிந்ததில்லை.  அய்.அய்.டி. என்றில்லை, நடுவண் அரசு நிறுவனங்கள், கோயில்கள், நீதிமன்றங்களில் பார்ப்பனிய மேலாண்மையை மறைமுகமாக அங்கீகரித்தே நடுவண் அரசுகள் சுதந்திர காலம் தொட்டு இயங்கி வந்திருக் கின்றன. பார்ப்பனரல்லாதார் மீது பார்ப்பனியம் தொடுக்கும் கொடுமைகளின் வரலாற்றுத் தொடர்ச்சியாகத் தான் ஃபாத்திமாவின் தற்கொலையையும் பார்க்க வேண்டியிருக்கிறது. நந்தன், வள்ளலாரைக் கொன்றுவிட்டு, ‘ஜோதியில் அய்க்கியமானார்கள்’ என்று பொய்யுரைத்த பார்ப்பனியம்தான், இன்று மாணவர்களின் தற்கொலையை ‘பாடத் திட்டங்களின் அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்கள்’ என நாக்கூசாமல் கூறுகிறது. கடந்த 2019, நவம்பர் 9ஆம் தேதி சென்னை அய்.அய்.டி.யில் விடுதியில் கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு சுதர்சன் பத்மநாபன் என்ற...

இணையர் தேவை

இணையர் தேவை

இரா. மூர்த்தி; வயது : 50; மணமாகாதவர்; பத்தாம் வகுப்பு; மாத வருமானம் – ரூ. 20,000/-. பனியன் நிறுவனத்தில் தொழிலாளி; சொந்த வீடு; தனிநபர்; பெரியார் பணியில் ஆர்வமுடையவர். விரும்புவது : 40 வயதுக்கு மேற்பட்ட இணையர்.  குழந்தைகள் இருப்பது விரும்பத் தக்கது. இயக்கப் பணிக்கு குழந்தைகளுடன் வர ஈடுபாடு உடையவராக இருத்தல் நலம். தொடர்புக்கு : மூர்த்தி – 9843604153 (வி-எம்.) பெரியார் முழக்கம் 28112019 இதழ்

இதற்குப் பெயர்தான் காவிப் புனிதமா?

இதற்குப் பெயர்தான் காவிப் புனிதமா?

‘காவி’ப் புனிதம் கரைபுரண்டு ஓடுகிறது. வள்ளுவருக்கும் ‘காவி’ உடை போர்த்தி ‘இந்து மதக் காவலர்’ என்கின்றன, சங்பரிவாரங்கள். இந்து மதம், பார்ப்பனரல்லாத மக்களை வேத அதிகாரத்துக்கு அடிமைப்படுத்தி ‘சூத்திரா’ என்ற இழிவைத் திணித்து, ‘கடவுள் – மதம்’ என்ற நம்பிக்கை மாயைக்குள் நமது மக்களை மூழ்கச் செய்திருக்கிறது. உள்ளே மறைந்து கிடப்பது பார்ப்பனியம் என்ற நச்சுப் பாம்பு. இந்த உண்மைகளைப் பேசினால் இந்து மத எதிர்ப்பாளர்கள் என்று ஓலமிடுகிறார்கள். வீதிகளில் இறங்கி இவர்களைச் சந்திக்க வேண்டும் என்கிறார், எச். ராஜா என்ற பார்ப்பனர். ‘காவிப் புனிதம்’ பேசும் கூட்டங்கள், அந்தப் புனிதங்களுக்குள் பதுங்கிக் கொண் டிருக்கும் மோசடிக்காரர்களைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்? நித்தியானந்தா காவி உடை ‘ஆன்மீக’க்காரர். இளம் பெண்களைக் கடத்தி ஆசிரமத்தில் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருக்கிறார். புகார் தந்த இளம் பெண்களின் பெற்றோர், எச். ராஜா ‘குல’ வம்சமான பார்ப்பனர்கள் தான். குஜராத் காவல்துறை, காவி நித்தியானந்தா...

இஸ்லாமியர் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பார்ப்பனர்கள் எதிர்ப்பு

இஸ்லாமியர் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பார்ப்பனர்கள் எதிர்ப்பு

மொழிக்கு மதம், ஜாதி அடையாளங்கள் கிடையாது. அது மக்களுக்கானது. ஆனால் மொழியையும் பார்ப்பனர்கள் விட்டு வைக்கவில்லை. இந்திய மொழிகளுக்கு எல்லாம் ‘தாய்மொழி’ கடவுளுக்கான மொழி என்று இவர்கள் கூறும் ‘சமஸ்கிருதம்’, மக்களுக்கான மொழியல்ல. அது ‘தேவபாஷை’. எனவே “பிராமணர்”களுக்கான மொழி என்று வர்ணாஸ்ரமத் திமிர் பேசுகிறார்கள். உ.பி.யில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத் துறையில் ஃபெரோஸ்கான் என்ற இஸ்லாமியர் துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இளம் வயது முதலே சமஸ்கிருதம் படித்து, அந்த மொழியில் முனைவர் பட்டம் பெற்றவர். உரிய கல்வித் தகுதி அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வானார். ஆனால் பல்கலைக்கழகப் பார்ப்பன மாணவர்கள் பார்ப்பன பேராசிரியர்கள் இஸ்லாமியர் சமஸ்கிருதத் துறையில் பணியாற்ற எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர். இரண்டு வாரம் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. உ.பி. முதல்வர் காவி உடை சாமியார் ஆதித்யநாத் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான வினய் பாண்டியா, போராடிய...

மருத்துவப் பட்டம் மேல் பட்டப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பறி போகிறது

மருத்துவப் பட்டம் மேல் பட்டப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பறி போகிறது

மருத்துவப் பட்டமேற்படிப்பிற்கான அகில இந்திய NEET PG 2020ஆம் ஆண்டிற்கான தேர்வில், அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு இல்லை… நாடு முழுவதும் உள்ள சுமார் 30,774 மருத்துவ பட்டமேற் படிப்பிற்கான இடங்களுக்கு (MD, MS) அகில இந்திய நீட் பீஜி தேர்வு ஜனவரி மாதம் மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான குறிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிக்கையில் மொத்தமுள்ள 30,774 இடங்களில் 50% அதாவது, 15,387 இடங்களுக்கு மத்திய அரசே கவுன்சிலிங் மூலம் இடத்தை நிரப்பும். இந்த 15,387 இடங்களில் இப்போதுள்ள இடஒதுக்கீடு முறையில் 50 சதவீதம் (7,693 இடங்கள்) பொதுப்பிரிவிலும், 22.5 சதவீதம் (3,462 இடங்கள்) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும், 27 சதவீதம் (4,155 இடங்கள்) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்க வேண்டும். ஆனால், இந்த அறிவிக்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு OBC மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும்,...

அயோத்தித் தீர்ப்பை மறு ஆய்வு செய்க: தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டம்

அயோத்தித் தீர்ப்பை மறு ஆய்வு செய்க: தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டம்

பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் அயோத்திப் பிரச் சினையில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 21.11.2019 அன்று மாலை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன் காந்தி, ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), தெஹலான் பாகவி (எஸ்.டி.பி.அய்.), தனியரசு (சட்டமன்ற உறுப்பினர்) உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அமைப்பைச் சார்ந்தவர்கள் உரையாற்றினர். அயோத்திப் பிரச்சினையில் சட்டங்களைப் புறக்கணித்துவிட்டு, நம்பிக்கை அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, என்றும் மறு சீராய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திருமாவளவன் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள், கழக மாவட்ட செயலாளர் இரா....

பார்ப்பனர்கள் வன்முறைப் பேச்சுகள்: அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பார்ப்பனர்கள் வன்முறைப் பேச்சுகள்: அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சமூக அமைதியைக் குலைக்கும் நோக்கத்தோடு இரு பிரிவினருக்கு மிடையே மோதலையும் பதற்றத்தையும் உருவாக்கிடும் கருத்துகளைத் தெரிவித்த பார்ப்பனர்கள் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பில் 22.11.2019 அன்று நடந்த சென்னை செய்தியாளர் சந்திப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டார். புகார்கள் தரப்பட்டு வழக்குப் பதிவு செய்த பிறகும் கைது செய்யப்படாததோடு, புகார் மனுவைப் பெற்றுக் கொண்டு காவல்துறை வழக்குப் பதிவு செய்ய மறுப்பதையும் பேட்டியில் கொளத்தூர் மணி சுட்டிக் காட்டினார். பேட்டி விவரம்: “கேரளாவில் நடந்த பிராமணர் உலக மாநாட்டில் பேசிய வெங்கடகிருஷ்ணன் என்ற பேராசிரியர் ஜாதி ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்தியதோடு ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை நாயுடன் ஒப்பிட்டும் பேசினார். பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில்  அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நாகை திருவள்ளுவன் நேரில் காவல்துறையிடம் புகார் அளித்தார். 153ஏ, 153பி, 5.5ஏ, 5.5பி உள்ளிட்ட பிரிவுகளில் முதல் தகவல்...

பழங்குடிப் பெண் ‘சுஜி’க்கு இழைத்த அநீதி

பழங்குடிப் பெண் ‘சுஜி’க்கு இழைத்த அநீதி

2000ஆம் ஆண்டில் சென்னை அய்.அய்.டி. யில் நடந்த ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட வேண்டும். பழங்குடி-தலித் இணையர்களுக்குப் பிறந்த சுஜி என்ற பழங்குடி பெண், 12ஆம் வகுப்பில் ஆந்திராவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று, மாநில அரசின் விருது பெற்றவர். மாதம் ரூ.17,500 உதவித் தொகை பெற்று, 4 ஆண்டு பொறியியல் படிப்பை முடிக்க முடியும். ஆந்திராவிலே தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் சேர்ந்து படிக்க அழைப்பு விடுத்தும்கூட, அந்தப் பெண், சென்னை அய்.அய்.டி.யிலேயே படிக்க விரும்பினார். (பொதுவாக அய்.அய்.டி.களில் மாணவர்கள் சேர்க்கை தான் அதிகம் இருக்கும். மாணவிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே சேர்க்கப்படுகிறார்கள். இதிலும்கூட மனுதர்மக் கொள்கைதான்) தலித் மாணவர் என்றால் அவர்களுக்காக ஓராண்டு கூடுதல் படிப்பு. அதற்குப் பெயர் ‘தயாரிப்புப் பயிற்சி’. மாநிலத்திலே முதலிடம் பெற்ற மாணவியாக இருந்தாலும்கூட தலித் என்றால் அவருக்கும் தனிப் பயிற்சி கட்டாயம். இயற்பியல் (ஞாலளiஉள) மிகச் சிறந்த அறிவு பெற்றவர் சுஜி....

சைவ-அசைவ உணவு பாகுபாடு

சைவ-அசைவ உணவு பாகுபாடு

சில மாதங்களுக்கு முன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒருவர், மனித வளத்துறைக்கு எழுதிய கடிதத்தை அந்த அமைச்சகம் அனைத்து அய்.அய்.டி.களுக்கும் நகல் எடுத்து அனுப்பி, அதன் பேரில் விளக்கம் கேட்டது. சைவம், அசைவம் சாப்பிடுகிற மாணவர்களை, ஒரே இடத்தில் உணவருந்த அய்.அய்.டி. அனுமதிப்பதாக அந்த ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கடிதத்தில் புகார் தெரிவிக்கப்பட் டிருந்தது. சென்னை அய்.அய்.டி., உடனே இதற்கு பதில் எழுதியது. சைவ, அசைவ உணவுகள் ஒரே உணவு கூடத்தில் சாப்பிட அனுமதிக்கப்படுவது இல்லை என்பதே அய்.அய்.டி. தந்த பதில். சென்னை அய்.அய்.டி.யின் இணையதளம் உணவு விடுதிகள் பற்றிய தகவல்களைத் தந்துள்ளது. இதன்படி 15 மாணவர் விடுதிகளும் இரண்டு மாணவியர் விடுதிகளும் இவற்றிற்கு 6 உணவுக் கூடங்களும் செயல்படுகின்றன. இதில் அய்ந்து உணவுக் கூடங்கள் (பெண்கள் உணவுக் கூடங்களும் சேர்த்து)  தனியார் நடத்துபவை. ஒரு உணவுக் கூடத்தை அய்.அய்.டி. நிர்வாகமே நடத்துகிறது. இது தவிர, பல்வேறு உணவகங்கள் ஒரே இடத்தில் செயல்படும் உணவுக்...

இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டக்களம்

இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டக்களம்

உயர்கல்வியில் 27 சதவீதம் பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு செய்வதற்கான சட்டத் திருத்தம் வந்தபோது, இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டக் களமாக இந்த உயர்கல்வி நிறுவனங்கள் மாற்றப்பட்டன. அதற்கெல்லாம் நிர்வாகம் தாராளமான சுதந்திரத்தை வழங்கவே செய்தது. அய்.அய்.டி. வளாகத்துக்குள் மட்டுமல்ல; வெளியே வந்தும் போராடினார்கள். 2006, மே 15 அன்று இடஒதுக்கீட்டை எதிர்த்து, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு, அய்.அய்.டி. மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அய்.அய்.டி. நிர்வாகம் அனுமதித்தது. அப்போதெல்லாம் மாணவர்களுக்கு அரசியல் தேவையா என்ற கேள்வியை எழுப்புவதற்கு அய்.அய்.டி. ‘அறிவு ஜீவிகள்’ தயாராக இல்லை. அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் வரும்போது மட்டும்தான் இவர்கள் ஆவேசத்துடன் மாணவர்களிடையே பிளவு ஏற்படுத்தக் கூடாது என்றும், அரசியல் நுழையக் கூடாது என்றும் ‘வேதாந்தம்’ பேசுகிறார்கள். இவை மட்டுமா? இதுவரை 50க்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் வளாகத்துக்குள்ளேயும் விடுதிகளிலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மூன்று ஆண்டுகளுக்குமுன் ரூர்க்கேலா அய்.அய்.டி. வளாகத்தில் மனிஷ்குமார் என்ற ‘சாமார்’ சாதிப்...

அய்.அய்.டி. ‘மர்ம தேச’த்தில் என்ன நடக்கிறது?

அய்.அய்.டி. ‘மர்ம தேச’த்தில் என்ன நடக்கிறது?

கேரளாவிலிருந்து சென்னை அய்.அய்.டி.க்கு படிக்க வந்த பாத்திமா லத்தீப் என்ற இஸ்லாமிய மாணவி, அய்.அய்.டி. விடுதியில் நவம்பர் 9ஆம் தேதி தூக்கிட்டு உயிரை மாய்த்திருக்கிறார். மத ரீதியாகத் தான் துன்புறுத்தப்பட்டதால் இந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார். தனது அலைபேசியில் தன்னை துன்புறுத்தி, மதிப்பெண்களைக் குறைத்த சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியர்கள் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். கேரள முதலமைச்சர் இப்பிரச்சினையை தமிழக முதல்வரிடம் கொண்டு வர, தமிழகக் காவல்துறை சி.பி.சி.அய்.டி. துறை வழியாக விசாரணை நடத்தி வருகிறது. கோட்டூர்புரம் காவல்துறை மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அய்.அய்.டி. நிர்வாகத்தின் குரலையே எதிரொலித்து வழக்கை மூடி மறைக்க முயற்சித்தது. இப்போது கேரள மாநில முதல்வர் தலையீட்டால் வழக்கு விசாரணையில் புதிய திருப்பம் உருவாகி யிருக்கிறது. இந்தப் பின்னணியில் அய்.அய்.டி. வரலாற்றை மீண்டும் சுருக்கமாக நினைவுகூர வேண்டியுள்ளது. சென்னை அய்.அய்.டி.யில், தலித், பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் மீது திணிக்கப்படும் பாகுபாடு களை எதிர்த்து 1998இல்...

சபரிமலை தீர்ப்பு: உச்சநீதிமன்றம் – மார்க்சிஸ்ட் கட்சியின் தடுமாற்றங்கள்

சபரிமலை தீர்ப்பு: உச்சநீதிமன்றம் – மார்க்சிஸ்ட் கட்சியின் தடுமாற்றங்கள்

சபரிமலை அய்யப்பன் கோயிலில் இளம் வயது பெண்களை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சீராய்வு மனுவின் மீது அளித்த தீர்ப்பில்  நீர்த்துப் போகச் செய்து விட்டது. ஏற்கனவே அளித்த தீர்ப்பு வழியாகப் பெண்கள் கோயிலுக்குப் போக உரிமை கிடைத்தது. 7 பேர் கொண்ட அமர்வுக்கு வழக்கு விசாரணையை இப்போது மாற்றியுள்ளனர். இறுதி விசாரணையின் தீர்ப்பு வரும் வரை சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்லத் தடையில்லை என்றும் இப்போதும் உச்சநீதிமன்றம் (பெரும்பான்மை தீர்ப்பு) தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆனால்  கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி சபரிமலைக்கு வரும் இளம் பெண்களை காவல்துறையைப் பயன்படுத்தி தடுத்து வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியைத் தழுவியதற்குக் காரணம் சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதித்ததுதான் என்று கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினர் கருதுகிறார்கள். தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சி நடத்திய உயர்மட்டக் குழு கூட்டத்தில் பெண்ணுரிமை கண்ணோட்டத்தோடு கோயிலுக்கு வந்த பெண்களுக்கு அரசு...

நீலச் சட்டைப் பேரணி : கழகம் தயாராகிறது

நீலச் சட்டைப் பேரணி : கழகம் தயாராகிறது

சேலம் – சேலம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம், 16.11.2019 அன்று சேலம் இளம்பிள்ளை நகர அமைப்பாளர் தனசேகர் இல்லத்தில் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்குக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்டத் தலைவர் கருப்பூர் சக்தி, கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கலந்துரையாடல் கூட்டத்தில், நீலச் சட்டைப் பேரணிக்கு தோழர்கள் அதிகளவில் பங்கேற்பது, சேலத்தில் அலுவலகம் அமைப்பது, கிளைக் கழக பயிற்சி வகுப்புகள், மாணவர் பிரச்சினைக்கான துண்டறிக்கைகளை கல்லூரி முன்பு மாணவர்களிடத்தில் கொடுப்பது போன்ற கருத்துக்கள் தோழர்களால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இறுதியாக கழகத் தலைவர், தோழர்களிடத்தில் கழகச் செயல்பாடுகள் மற்றும் நீலச் சட்டைப் பேரணிக்கு அதிகளவில் பங்கேற்பதன் நோக்கம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். கலந்துரையாடலில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சேலம் மாநகரத் தலைவர், சேலம் சரவணன் (மூணாங்கரடு), கிழக்கு...

அயோத்தி தீர்ப்பு : முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எழுப்பும் கேள்விகள்

அயோத்தி தீர்ப்பு : முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எழுப்பும் கேள்விகள்

அயோத்தியில் இராமன் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்புக் குறித்து, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி எழுப்பி உள்ள கேள்விகள் ‘தி டெலிகிராப்’ ஏட்டில் வெளி வந்துள்ளது. “அங்கு ஒரு மஸ்ஜித் இருந்ததைச் சிறுபான்மை யினர் பல தலைமுறைகளாகக் கண்டு வருகிறார்கள். அது இடிக்கப்பட்டுள்ளது. அதன் மீது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஒரு கோயில் கட்டப்பட இருக்கிறது. இது என் மனதில் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அரசியலமைப்பின் மாணவராக, அதை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாகும். 1856-57இல் இல்லையென்றாலும், நிச்சயமாக 1949 முதல், அங்கு தொழுகை நடத்தப்பட்டு வந்துள்ளது. அது ஆவணங்களில் உள்ளது. எனவே, நமது அரசிய லமைப்பு நடைமுறைக்கு வந்தபோதும்,  தொழுகை நடத்தப்பட்ட அந்த இடம், ஒரு மஸ்ஜித் என்று அங்கீகரிக்கப்பட்டால், சிறுபான்மை சமூகத்திற்கு அவரவர்களின் மத சுதந்திரத்தைப் பாது காக்கும் உரிமை உண்டு. அது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை...

டிசம். 22 கோவையில் நீலச் சட்டைப் பேரணி: தோழர்களே, தயாராவீர்!

டிசம். 22 கோவையில் நீலச் சட்டைப் பேரணி: தோழர்களே, தயாராவீர்!

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு டிசம்பர் 22இல் கோவையில் நீலச்சட்டைப் பேரணிக்கும் ஜாதி ஒழிப்பு மாநாட்டுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி நடத்தி பெரும் வெற்றி பெற்றோம். தொடர்ந்து தமிழ்நாடு ‘காவி’கள் மண் அல்ல என்பதை  உணர்த்தவே நீலச்சட்டைப் பேரணி! திருச்சிப் பேரணியில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்ததைப் போல் – அந்த எண்ணிக்கையையும் மிஞ்சக் கூடிய அளவில் நீல சட்டைப் பேரணிக்கு திரண்டு வரவேண்டும்! ஜாதி எதிர்ப்பு – மதவெறி எதிர்ப்புக்கு அம்பேத்கரும்-பெரியாரும் நமக்கு இரு கண்கள்; அவர்கள் தான் நமக்கு வழிகாட்டிகள்; பார்ப்பனர்கள் ஆதிக்கம் நிறைந்த அரசியல் சட்ட வரைவுக் குழுவில் இடம் பெற்ற புரட்சியாளர் அம்பேத்கர், தனது அறிவு ஆற்றல் சட்டப் புலமையால் சமூக நீதி என்ற இடஒதுக்கீடு தத்துவத்தை சட்டத்தின் வழியாக நிலைநிறுத்தினார். பட்டியல் இனப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு மட்டுமல்ல; பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்கு சட்டத்தின் கதவுகளைத் திறந்து விட்டவரும்...

தமிழர் – சிங்களர் முரண்பாடு கூர்மையடைகிறது இலங்கை தேர்தல் முடிவுகள்: உணர்த்தும் உண்மைகள்

தமிழர் – சிங்களர் முரண்பாடு கூர்மையடைகிறது இலங்கை தேர்தல் முடிவுகள்: உணர்த்தும் உண்மைகள்

இலங்கை தேர்தலில் சிங்கள பெரும் பான்மையே மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (இலங்கை மக்கள் முன்னணி) வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 52.5 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ராஜபக்சேயின் சகோதரர் இவர். இலங்கை அரசியல் சட்டப்படி இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவியில் போட்டியிட முடியாது என்பதால் அவர் சார்பாக அவரது தம்பி நிறுத்தப்பட்டார். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டக் காலத்தில் இந்திய இராணுவம் அங்கே அமைதிப் படை என்ற பெயரில் சென்றபோது இந்திய இராணுவத்தை வெளியேற உத்தரவிட்டவர் அப்போது ஜெயவர்த்தனேயைத் தொடர்ந்து அதிபரான பிரேமதாசா. பிரேமதாசா விடுதலைப் புலிகள் ஒப்பந்தம் ஒன்றும் அப்போது உருவானது. சில மாதங்களில் பிரேமதாசா குண்டு வெடிப்பில் பலியானார். இலங்கையில் இப்போது ஆளும் கட்சியான அய்க்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா போட்டியிட்டார். வடக்கு – கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களும் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்து,...

இயக்குநர் அருண்மொழி காலமானார்

இயக்குநர் அருண்மொழி காலமானார்

நடிப்பு, நாடகம், இயக்கம், திரைக்கதை, ஆவணப்படம், திரை மொழி கற்பித்தல் ஆகியவற்றில் தனித்து விளங்கிய இயக்குநர் அருண்மொழி (49) மாரடைப்பால் 9.11.2019 அன்று முடிவெய்தினார். பூனாவில் திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்கம் பயின்றவர் அருண்மொழி. சென்னை திரும்பியவுடன் ‘அவள் அப்படித்தான்’ (1979) திரைப்படத்தில் ருத்ரய்யாவிடம் இணை இயக்குநராகப் பணி யாற்றினார். பின்னர் ‘ஏழாவது மனிதன்’ (1982) படத்தில் இயக்குநர் ஹரிஹரனிடம் பணி யாற்றினார். அப்படத்துக்கு வசனமும் எழுதினார். அதன் பின்னர் அவரே, நாசர், கலைராணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, ‘காணிநிலம்’ (1987) ‘ஏர்முனை’ (1992) ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இயக்குநர் அருண்மொழியின் திரைப்படங்கள் சர்வதேச திரைப்படவிழாக்களில் அயல்நாடுகளில் திரையிடப்பட்டன. அருண்மொழி, நிறைய வாய்ப்புகள் வந்தபோதும் தமிழ்த் திரைப்படத் துறையில் வணிகத் திரைப்பட இயக்குநராக செயல்பட மனமின்றி இயங்கி வந்தார். எனினும் திரைப்படத் துறைக்கு ஆர்வத்தோடு வரும் இளைஞர்கள் பலருக்கும் திரைப்படத்தைச் சொல்லிக் கொடுப்பதில் மிகுந்த அக்கறைக் காட்டினார். தாமிரபரணி மாஞ்சோலை...

பி.எஸ்.கிருஷ்ணன் முடிவெய்தினார்

பி.எஸ்.கிருஷ்ணன் முடிவெய்தினார்

வன்கொடுமை தடுப்புச் சட்டம், மண்டல் கமிஷன் அறிக்கையை செயல்படுத்தியது ஆகிய பணிகளில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் டெல்லியில் முடிவெய்தினார். அவருக்கு வயது 86. கேரளாவில் 1932 டிசம்பர் 30ஆம் தேதி பிறந்தவர் பி.எஸ்.கிருஷ்ணன். 1956இல் அய்.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வான அவர், ஆந்திராவிலும், மத்திய அரசிலும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். எஸ்.சி. பிரிவினருக்கு சிறப்புக்கூறு திட்டம், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், மண்டல் கமிஷன் அறிக்கை அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது போன்ற செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகித்தவர். 1990இல் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், மத்திய அரசின் கொள்கை உருவாக்க குழுக்களில் பொறுப்பாளராக பணியாற்றினார். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய உறுப்பினர், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கவுரவ ஆலோசகர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார். ‘நீதிபதி கிருஷ்ணய்யர் விருது’ உள்ளிட்ட பல...

இராசிபுரத்தில் கழகம் நடத்திய பெரியாரியல் பயிலரங்கம்

இராசிபுரத்தில் கழகம் நடத்திய பெரியாரியல் பயிலரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் இராசிபுரம் சார்பில் 10.11.2019 அன்று காலை 10 மணியளவில் இராசிபுரம் பட்டணம் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில்  பெரியாரியல் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சுமதி மதிவதனி வரவேற்புரையாற்றினார். இராசிபுர நகர அமைப்பாளர் பிடல் சேகுவேரா தலைமை வகிக்க, நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன் முன்னிலை வகித்தார். மேலும் நிகழ்வில், பொன். நல்லதம்பி (தி.மு.க பேரூர் செயலாளர்), சுந்தரம் (அ.தி.மு.க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி இயக்குனர்), இரத்தினம் (வழக்கறிஞர் உயர்நீதிமன்றம் மதுரை), மோகன் தாஸ் (தி.மு.க மாவட்ட மாணவரணி அமைப்பாளர்), கைலாஷ் (இராசிபுரம் ஒன்றிய செயலாளர் ம.தி.மு.க.) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாகக் கலந்து கொண்டனர். காலை அமர்வில், ‘பெரியார்-அம்பேத்கர் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். உணவு இடைவேளைக்கு பின், ‘இட ஒதுக்கீடு மற்றும் சட்ட எரிப்பு போராட்ட வரலாறு’ குறித்து கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் உரையாற்றினார்....

ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை

ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை

அக். 16இல் சென்னை அம்பத்தூரில் நிகழ்த்திய உரை: சென்ற இதழ் தொடர்ச்சி ஏதோ பெரியார் தான் சூத்திரன், சூத்திரன் என்று சொல்லிக் கொண்டுள்ளார் என்று சொன்னார்கள். ஆனால் 1996 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பிலேயே சூத்திரன் என்று கூறுகிறது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை முடக்கு வதாகவே பாஜ.க. ஆட்சி கல்விக் கொள்கை இருப்பதை ஆதாரங்களுடன் விளக்கினார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. ஆரியர்கள் வடக்கில்தான் படையெடுத்து வந்தார்கள். ஆனால் தெற்கில் பண்பாட்டுப் படையெடுப்பைத்தான் நடத்தினார்கள். அந்த பண்பாட்டு படையெடுப்புக்கு எதிர்ப்பாக பண்பாட்டுப் புரட்சியை பெரியார் செய்தார். பார்ப்பன எதிர்ப்பு என்பது பண்பாட்டு எதிர்ப்பு. பார்ப்பன பண்பாடு என்பது ஒவ்வொரு துறைதோறும் நம்மை அடிமைப்படுத்திய, கேவலப்படுத்திய பண்பாடு. நாம் கட்டிய கோயிலில் நமக்கு வழிபாடு நடத்தக்கூட உரிமை இல்லை என்று சொன்னார்கள். பெரியார் நடத்திய கடைசிப் போராட்டம் இதற்காகத்தான். பெரியார் நடத்திய போராட்டங்களில் நாத்திகப் போராட்டங்கள் இரண்டு மட்டும்தான். விநாயகர் சிலையை உடைத்தார், இராமர்...

பார்ப்பன ‘தினமலர்’ கூறுகிறது இராமர் கோயில் பிரச்சினைதான் பா.ஜ.க. வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தது

பார்ப்பன ‘தினமலர்’ கூறுகிறது இராமர் கோயில் பிரச்சினைதான் பா.ஜ.க. வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தது

இராமர் கோயில் பிரச்சினைதான் பா.ஜ.க. வளர்ச்சிக்கும் அதுஅதிகாரத்தைக் கைப்பற்று வதற்கும் உதவியது என்று ‘தினமலர்’ நாளேடு எழுதியுள்ளது. அயோத்தியில் உள்ள இராம ஜென்ம பூமி விவகாரம், மத்தியில் தற்போது ஆளும் பா.ஜ.க.,வுக்கு, 1996 முதலே, ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின் போதும் முக்கிய பிரச்னையாக அமைந்திருந்தது. மேலும், ஒவ்வொரு தேர்தலிலும், இந்தப் பிரச்னையை முன்வைத்து செய்த பிரச்சாரங்களால், அந்தக் கட்சி படிப்படியாக வளர்ச்சியைக் கண்டு வந்துள்ளது. ‘அயோத்தியில் இராமர் கோவில் கட்ட வேண்டும்’ என, பா.ஜ.க.,வின் முன்னாள் தலைவர் எல்.கே. அத்வானி உருவாக்கிய இயக்கம், ‘கோவில் கட்ட வேண்டும்’ என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பில் முடிந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலங்களில், இந்த விவகாரம், பா.ஜ.க.,வுக்கு தேர்தல்களில் மிகப் பெரிய உதவியை செய்துள்ளது. கடந்த, 1980களின் இறுதியில் மற்றும் 1990களின் துவக்கத்தில், ஒரு சிறிய கட்சி என்ற நிலையில் இருந்து, மிகவும் முக்கியமான கட்சியாக பா.ஜ.க., உருவெடுக்க ராமர் கோவில் உதவியுள்ளது. கடந்த, இரண்டு தேர்தல்களில்...

உச்சநீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்

உச்சநீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்

அயோத்திப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொது அமைதி கருதி வரவேற்றாலும், தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளை ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் (நவம். 11, 2019) தலையங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. அந்த ஏடு எழுப்பியுள்ள கேள்விகளின் சுருக்கமான தமிழ் வடிவம்: 1949ஆம் ஆண்டு மசூதிக்குள் இராமன், சீதை சிலைகள் போடப்பட்டதையும் மசூதியை இடித்ததையும் சட்ட விரோத நடவடிக்கைகளாக தீர்ப்பு கூறியிருப்பது மதச்சார்பின்மை கொள்கைக்கு உளவியலாக வலுசேர்க்கிறது என்றாலும் உச்சநீதிமன்றம் இராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதித்ததோடு இந்துக்களுக்கே அந்த இடம் உரிமையானது என்று தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்தாலும் தீர்ப்பு அதை நியாயப்படுத்தியிருக்கிறது. நிலத்துக்கான உரிமை கோரி இரண்டு சமூகங்கள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது. வழக்கில் இணைத்துக் கொண்ட ஒரு சமூகம், திட்டமிட்டு வன்முறைகளை உருவாக்கியது. மசூதியை இடித்தது விசுவ இந்து பரிஷத். இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது பாரதிய ஜனதா. இந்த வன்முறையை அரங்கேற்றிய பிரிவு 1989ஆம் ஆண்டு ‘குழந்தை...

உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா?

உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா?

உச்சநீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்திருக்கலாம் என்பதற்கு தொல்லியல் துறை அறிக்கையை ஒரு ஆவணமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. தொல்லியல் அறிக்கை ஏற்கனவே ஆய்வாளர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளரும் பல வரலாற்று நூல்களை எழுதியவருமான டி.என். ஜா, இந்த தொல்பொருள் ஆய்வின் நம்பகத் தன்மைக் குறித்து ‘தி வயர்’ இணைய ஏட்டுக்கு ஏற்கனவே பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் எழுப்பியுள்ள கேள்விகள் முக்கியமானவை. அயோத்தியில் இந்த அகழ்வாய்வை நடத்தியபோது தொல்பொருள் துறையின் இயக்குனராக இருந்தவர் பி.பி. லால். அவர் வெளியிட்ட முதல் ஆய்வு அ றிக்கையில் பாபர் மசூதிக்கு கீழே நடத்தப்பட்ட அகழ்வாய்வில் “தூண் தளங்கள்” இருந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. (கோயில் இருந்திருக்கலாம் என்பதற்கு இந்தத் ‘தூண் தளங்களே’ ஆதாரம் என்று சங்பரிவாரங்கள் கூறி வந்தன) பிறகு 1989ஆம் ஆண்டில் ‘இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தில்’ (அய்.சி.எச்.ஆர்.) இது குறித்து அவர் ஒரு கட்டுரை...

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?

திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை : அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கி விட்டது. இந்தியாவில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்று விட்டன. ஆனால் இது  சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்பு தானா? என்ற கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. இஸ்லாமியர்கள் தரப்பில் எடுத்து வைத்த வாதங்கள் அத்தனையையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது  என்பதும், இந்துத்துவாவாதிகள் முன்வைத்த வாதங்கள் பலவற்றையும் உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இராமர் கோயிலை இடித்து விட்டுதான் பாபர் மசூதி கட்டினார்கள் என்று சங்பரிவார்கள் பிரச்சாரம் செய்தன. அங்கு கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதியை கட்டவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. 1949 ஆம் ஆண்டு வரை அங்கே தொழுகைகள் நடந்தன என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதிப்...

வில்வித்தையில் தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாராட்டு

வில்வித்தையில் தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாராட்டு

திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் தமிழரசி-கொளத்தூர் குமார் ஆகியோரின் மகன் இனியன், காவலாண்டியூர் கலைச்செல்வி- விஜயகுமார்  ஆகியோரின் மகன் வளவன், அக்டோபர் 5, 6 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு வில்வித்தை சங்கம் (TAAT) நடத்திய மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றனர். அவர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அழைத்துப் பாராட்டினார். பெரியார் முழக்கம் 07112019 இதழ்

அரசுப் பேருந்துகளில் மத சுவரொட்டிகளை அகற்றக் கோரி கோவை கழகம் மனு

அரசுப் பேருந்துகளில் மத சுவரொட்டிகளை அகற்றக் கோரி கோவை கழகம் மனு

அரசுப் பேருந்துகளில் திட்டமிட்டு ஒட்டப்பட்டுள்ள மத அடையாள சுவரொட்டிகளை அகற்றுமாறு 16.10.2019 அன்று அரசு போக்குவரத்து கழகக் கோவை மாவட்ட மேலாண் இயக்குநரைச் சந்தித்து கோவை திவிக சார்பில் நேருதாஸ் தலைமையில்  மனு அளிக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட மேலாண் இயக்குநர், அப்படி இருந்தால் தவறு தான் நிச்சயம் இதன் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.  உடன் கலந்து கொண்ட தோழர்கள்: ஃபெரோஸ், வேல்முருகன் புஇக, இராவணன் தமிழ்ப் புலிகள்,  அஸ்வின் புஇமு,  ஜின்னா. பெரியார் முழக்கம் 07112019 இதழ்

வணிக நிறுவன விளம்பரப் பலகைகளில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரும் இயக்கம் கல்லக்குறிச்சி மாவட்டக் கழகம் முடிவு

வணிக நிறுவன விளம்பரப் பலகைகளில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரும் இயக்கம் கல்லக்குறிச்சி மாவட்டக் கழகம் முடிவு

திராவிடர் விடுதலைக் கழக  கல்லக்குறிச்சி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 02.11.2019 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சங்கராபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் ந. அய்யனார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் க. மதியழகன், மாவட்ட அமைப்பாளர் சி. சாமிதுரை, மாவட்டச் செயலாளர் க. இராமர், மாவட்ட துணை செயலாளர் மு.நாகராசு, மாவட்ட அறிவியல் மன்ற அமைப்பாளர் வீ. முருகன், ந. வெற்றிவேல், அன்பு ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். கலந்தாய்வு கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கல்லக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து சமுதாய (குமுகாய) மக்களும் நுகர்வோராக வணிகம் செய்கின்ற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் விளம்பர பலகையில் எழுதப்பட்டுள்ள சாதி பெயர்களை அகற்றக்கோரி மக்கள் மத்தியில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொள்வதோடு  சாதி பெயர் எழுதப் பட்டுள்ள வணிக நிறுவன உரிமையாளர்களிடம்  சாதி பெயரை அகற்றக்கோரி வேண்டுகோள் வைப்பது என்று மாவட்ட கழகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலையிலிருந்து...

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழக சத்தியமங்கலம் நகர அமைப்பாளர் மூர்த்தி – பூங்கொடி இல்லத் திறப்பு விழா  கெம்பநாயக்கன்பாளையம் சத்தியில், 03.11.2019 அன்று காலை 10 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். நிகழ்வில் ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை திருப்பூர் மாவட்டத் தோழர்கள் பெருந்திரளாய் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மண்டல கலந்துரையாடல் கூட்டம் 3.11.2019 அன்று சத்தி கெம்பநாயக்கம் பாளையம் திரு. கிட்டுசாமி தோட்டத் தில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர்  இரத்தினசாமி தலைமை யேற்று நோக்கவுரை ஆற்றினார். கழகத்தின் அடுத்த செயல் திட்டமாக மக்கள் சந்திப்பு இயக்கமும், கிராமங்கள் தோறும் பரப்புரைப் பயணமும், மருத்துவ முகாம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் உள்ளிட்டவைகளை நடத்த ஆலோசனை வழங்கினார். கழக மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மண்டலம் உள்ளடக்கிய ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை புறநகர், கோவை, நாமக்கல் மற்றும் திருப்பூர்...

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 11ஆவது சந்திப்பு

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 11ஆவது சந்திப்பு

சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாத இதழான நிமிர்வோம் 11ஆவது வாசகர் வட்ட சந்திப்பு, தலைமை அலுவலகத்தில் 03.11.2019 அன்று மாலை 5.30 மணி யளவில் நடைபெற்றது. நிகழ்விற்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை வகித்தார். தேன்ராஜ் மற்றும் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்டத்தின் நோக்கம் மற்றும் இனி வரும் காலங்களில் வாசகர் வட்ட சந்திப்புகள் குறித்து, நிமிர்வோம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் யுவராஜ் தொடக்கவுரை யாற்றினார். அதைத் தொடர்ந்து, வாசகர் வட்டத்தின் முதல் அமர்வில், ‘இசை நாடகத் துறையில் பெரியார் இயக்கம் விளைவித்த கலகம்’ என்ற தலைப்பில் அருண்குமார், ‘உயர்ஜாதி – ஏழை இடஒதுக்கீடு குறித்து’ தினேஷ்குமார், ‘சாதியக் கொடுமை யும் திராவிட இயக்கமும்’ என்ற தலைப்பில் ஊடகவியலாளரும் கழகத் தோழருமான பிரகாசும் உரையாற்றி னார்கள். இரண்டாம் அமர்வில், சட்ட எரிப்பு போராட்டத்தின் பெருமை மிகு வரலாறு குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின்...

நமது நெறி திருக்குறள்; நமது மதம் – மனித தர்மம் திருக்குறள்: பெரியார் கருத்து என்ன?

நமது நெறி திருக்குறள்; நமது மதம் – மனித தர்மம் திருக்குறள்: பெரியார் கருத்து என்ன?

பெரியார் திருக்குறளையே கடுமையாகக் கண்டித்தார் என்று பா.ஜ.க. – சங். பரிவாரங்கள் பேசி வருவதற்கு மறுப்பாக பெரியாரின் திருக்குறள் பற்றிய கருத்துகளின் ஒரு தொகுப்பு. ஆரியரல்லாத இந்நாட்டு மக்கள் அனைவர்க்கும் சிறப்பாக இந்த நாட்டுப் பழங்குடி மக்களான திராவிடர்கள் அனைவர்க்கும் வள்ளுவர் அருளிய ‘திருக்குறள்’ ஒரு பெரிய செல்வமேயாகும். நமது பெருமைக்கும் நெறிக்கும் நாகரிகத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டாக அதில் பல விவரங்களை நாம் காணலாம். திருக்குறளின் பேரால் திராவிட மக்களின் பெருமையை, திராவிடரல்லாத மக்களுக்கு உணரச் செய்ய முடிகிறது. நமது சரித்திரத்திற்கும் நாகரிகத்திற்கும் பல இலக்கியங்களிலிருந்தும் பல காவியங்களி லிருந்தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்ட முடியு மாயினும் அவை பெரும்பாலும் பண்டிதர் களுக்குத் தான் புரியும். அவர்களுக்குத்தான் பயன்படும். ஆனால், திருக்குறள் ஒன்றுதான் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், எப்படிப்பட்ட அறிவாளியும் ஏற்கும் தன்மைக் குரிய தக்க ஆதாரமாய் அமைந்திருக்கிறது. திருக்குறள் ‘தெய்வீகத் தன்மை பொருந்திய’ ஒருவரால் எழுதப்பட்டது என்பதாகவோ அல்லது...

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கியது பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கியது பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்

பேராசிரியர் நா. வானமாமலையின் மாணவரும், நாட்டார் வழக்காற்றியல், வாய்மொழி வரலாறு, அடித்தள மக்கள் வரலாறு, பொருள்சார் பண்பாடு போன்ற துறைகளில் பெரும் பங்காற்றி வருபவருமான பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் (ஆ.சி.) அவர்களுக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் (னு.டுவை.) வழங்கப்பட்டது. 22.10.2019ஆம் நாள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேராசிரியர் ஆ.சி.க்கு இப்பட்டம் வழங்கப்பட்டது. தமிழியல் ஆய்வுப் புலத்தில் 50 ஆண்டு கால அயராத பணிக்குக் கிடைத்த அங்கீகாரம் இது. தேர்ந்த களஆய்வு, பரந்தபட்ட நூலறிவு, அறிஞர்களுடன் நடத்தும் விவாதங்கள், உழைக்கும் மக்கள் சார்பு ஆகியவை அவருடைய தனித்தன்மை. எந்த விருதையும் அவர் தேடிச் சென்றதில்லை. அவருக்கு கல்விப்புலம் சார்ந்த இவ்விருதினை வழங்குவதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் பெருமை சேர்த்துக் கொண்டது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்போம்.  பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களுக்குப் பாராட்டுக்கள். ஆ. சிவசுப்பிரமணியன் 1960ஆம் ஆண்டுகளின் இறுதிப் பகுதியில் தமிழியல்...

கழக ஏட்டிற்கு நன்கொடை

கழக ஏட்டிற்கு நன்கொடை

புதுக்கோட்டையைச் சேர்ந்த இளங்கோவன் – தமிழன்பு இணையர் தங்கள் மகள் இளந்தமிழ் பிறந்த நாள் மகிழ்வாக கழகத்தின் வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு  ரூ.1500/- நன்கொடை அளித்துள்ளனர். பெரியார் முழக்கம் 07112019 இதழ்