பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு பொதுக் கூட்டம்

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் மூட நம்பிக்கை நாள் ஒழிப்புப் பொதுக் கூட்டம் செப்டம்பர் 24, அன்று மாலை 7 மணியளவில் மேடவாக்கம் அரசுப் பள்ளிப் பேருந்து நிறுத்தம் அருகே நடந்தது. பொது மக்கள் பெரும் கூட்டமாகக் கூடும் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்துக்கு கருத்துகளைக் கேட்க ஏராளமான பொது மக்களும் கொள்கை ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர்.

நிலவழகன் தலைமையில் (மக்கள் தமிழகம்) நடந்த கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், வன்னியரசு (வி.சி.க.), வந்தியத்தேவன் (ம.தி.மு.க.), பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொழிலன் மற்றும் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் உரையாற்றினர். கூட்ட நிகழ்வுகளை வழக்கறிஞர் பாவேந்தன் (தமிழக மக்கள் முன்னணி) ஒருங்கிணைத்தார்.

பெரியார் முழக்கம் 29092022 இதழ்

 

 

You may also like...