குமரேசன்-பனிமலர் வாழ்க்கைத் துணை ஏற்பு

சங்கராபுரம் , கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்தன் – விஜியா இணையரின் மகன் குமரேசனுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முனுசாமி – வாசுகி இணையரின் மகள் பனிமலர் என்பவருக்கும் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வு செப்டம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் கடுவனூர் பெரியார் திடலில், கழகத் தலைவர்  கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை, மாவட்டத் தலைவர் க.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்விற்கு   குமார் – அம்சவள்ளி வரவேற்புரை கூறினர். சடங்கு, சம்பிரதாயங்கள், பார்ப்பன அர்ச்சகரைத் தவிர்த்த இந்த வாழ்க்கை இணை ஏற்பிற்கு உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். புதுவை ‘விடுதலைக் குரல்’ குழுவின் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இணையர் ‘புரட்சிப் பெரியார் முழக்க’ வளர்ச்சி நிதியாக ரூ.1000/- வழங்கினர். நிறைவாக மணமக்கள் நன்றி கூறினர்.

பெரியார் முழக்கம் 06102022 இதழ்

You may also like...