மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்தமசோதாவுக்கு, நாட்டின் புகழ்பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், வரலாற்று ஆய்வாளர்கள், பொருளாதார அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வேதியியல் துறைக்கான ‘நோபல் பரிசு’ பெற்ற இந்திய வம்சாவளி தமிழரும், இலண்டன் ‘ராயல் சொசைட்டி’ தலைவருமான வெங்கட் ராமன் ராமகிருஷ்ணனும், குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்துள்ளார். இந்தச் சட்டம் மூலம், ஜெர்மனியில் தேசிய இனவாதத்தைத் தூக்கிப் பிடித்த பாசிஸ்ட் ஹிட்லரின் பாதையில் இந்தியா பயணிப்பதாகவும், இது இந்தியாவுக்கு ஆபத்து என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: “நான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் நான் இந்தியாவை மிகவும் விரும்புகிறேன். இந்தியா ஒரு சிறந்த சகிப்புத் தன்மையுள்ள இலட்சியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நான் எப்போதும் நம்புகிறேன். இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். நாடு விடுதலையடையும்போது, எந்தவொரு மதத்திற்கும்...