Category: பெரியார் முழக்கம்

1929 – சுயமரியாதை மாநாடும் தமிழ்நாட்டின் அரசியலும் கோவையில் கழகம் நடத்திய எழுச்சிக் கருத்தரங்கு

1929 – சுயமரியாதை மாநாடும் தமிழ்நாட்டின் அரசியலும் கோவையில் கழகம் நடத்திய எழுச்சிக் கருத்தரங்கு

கோவை மாநகரக் கழகம் ஏற்பாடு செய்த “1929 செங்கல் பட்டு முதல் சுயமரியாதை மாநாடும் தமிழ்நாட்டின் அரசிய லும்” கருத்தரங்கம் கோவை அண்ணாமலை அரங்கில் பிப்ரவரி 18, மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. நிகழ்விற்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார், கருத்தரங்கின் முதல் நிகழ்வாக பகுத்தறிவு பாடல்களை கழகத் தோழர்கள் கிருஷ்ணன், புரட்சித் தமிழன், யாழினி, தமிழினி, சுருதி, அம்பிகா, இசைமதி ஆகியோர் பாடினார்கள். சிவராசு வரவேற் புரையாற்றினார், அதைத் தொடர்ந்து மாநகரத் தோழர் வெங்கட் , மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் யாழ். வெள்ளிங்கிரி, கழகப் பொரு ளாளர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றப் பொறுப் பாளர் சிவகாமி ஆகியோர் உரையாற்றினர் . தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி “பெண்களை கைப்பிடித்து அழைத்து வந்த தலைவர் பெரியார்” என்று தனது உரையில் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து சிறப்புரையாற்ற வந்த...

சென்னைக் கூட்டத்தில் பால். பிரபாகரன் உரை ஆஷ்துரையை வாஞ்சி சுட்டது ஏன்?

சென்னைக் கூட்டத்தில் பால். பிரபாகரன் உரை ஆஷ்துரையை வாஞ்சி சுட்டது ஏன்?

பிப்.6, 2023 அன்று மயிலைப் பகுதியில் கழகம் நடத்திய காந்தி படுகொலைக் கண்டன நாள் பொதுக் கூட்டத்தில் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) கல்புர்கி, கவுரி லங்கேசு இவர்களைக் கொன்ற துப்பாக்கியில் ஒரே ஒரு துப்பாக்கி. அது ஒரே வகை தோட்டா என்று இப்போது அறிக்கையிலே வெளி வந்திருக்கிறது. அவர்களைப் பிடித்து விசாரித்தால் அனைவரும் சொல்கிறார்கள் அமைப்பு ஒண்ணு இருக்குதுன்றான் என்னடா அமைப்பு? அப்படீன்னு கேட்டா, சனாதன, சன்ஸ்தா என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று. அவர்கள் சாஸ்திர தர்மம் என்று புத்தகம் எழுதியிருக்கிறார்கள். அந்த புத்தகத்தைப் படித்ததற்குப் பிறகு படித்தவன் யாரெல்லாம் இந்த சனாதன் தர்மத்தை எதிர்க்கிறார்களோ அவர்களை தீர்த்துக் கட்டுவதே அவர்களின் நோக்கமாக இருக்கும். ஏதோ சுதந்திரத்திற்குப் பின்பு தான் இந்த கொலை நடந்திருக்கிறது என்று நீங்கள் தயவு செய்து நினைக்க வேண்டும். சனாதனத்தைக் காப்பாற்றுவதற்காக கொலை. இந்தியர்களை மட்டுமல்ல பிரிட்டிஷார் ...

வெளிப்படையான நிர்வாகம் என்பது…

வெளிப்படையான நிர்வாகம் என்பது…

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் தான் முடிந்திருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்கப் போகிறது. ஆனால் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்டதை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் பொறுப்பில்லாமல் மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 20 மாத கால ஆட்சி திமுக அறிவித்த திட்டங்கள் எந்தளவுக்கு செயல்பாட்டிற்கு வந்திருக்கின்றன என்பது குறித்து கள ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார். மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து அதிகாரிகளை சந்தித்து இந்த திட்டங்கள் மக்களை சென்றடைந்ததுள்ளனவா? என்பது பற்றி எல்லாம் ஆய்வு செய்து இந்த ஆண்டு இறுதிக்குள் திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார். வெளிப்படையான நிர்வாகம் என்பது இதுவரை பேசப்பட்டுத்தான் வந்தது. ஆனால் அத்தகைய நிர்வாகம் என்ன என்பது பற்றி மக்களுக்குத் தெரியாது. இப்போது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் நாம் நேரடியாக பார்க்க முடிகிறது. இது தவிர...

தலையங்கம் பிரபாகரன்?

தலையங்கம் பிரபாகரன்?

தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று உலகத் தமிழர்களின் பிரதிநிதி என்ற நிலையில் தன்னை நிறுத்திக்கொண்டு பழ. நெடுமாறன் அவர்கள் அறிவித்திருப்பது கடும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. பழ. நெடுமாறன் அவர்கள் இதை அறிவித்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாட்டில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் களமாடிய முன்னோடி தலைவர்கள் எவரும் அவருடன் இல்லை. இந்த அறிவிப்பிலிருந்து அவர்கள் விலகி நிற்க முடிவு செய்துவிட்டனர். அவ்வப்போது பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறி வந்த பழ. நெடுமாறன் அவர்கள், அண்மைக்காலமாக இதில் அமைதி காத்து வந்த நிலையில், இப்போது இதை அறிவிக்க வேண்டிய தேவை – அவசியம் ஏன் வந்தது? மோடி தலைமையிலான ஒன்றிய ஆட்சி, ஈழத் தமிழர்களுக்கு 13ஆவது சட்டத் திருத்தத்தின்படி உரிமைகளை வழங்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறது. இந்த முயற்சியை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சர்வதேச சூழல்  என்று கருதும் பழ. நெடுமாறன், அதைச்...

சிவராத்திரி: அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கை

சிவராத்திரி: அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கை

சிவராத்திரி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண் டாடப்படுகிறது, இது மக்கள் பக்தியின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை; அந்த நம்பிக்கையில் நாம் குறுக்கிடுவதற்குத் தயாராக இல்லை. ஆனாலும் சிவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது என்பது குறித்த விளக்கங்கள் மக்களிடம் தரப்படுவதில்லை. இதுகுறித்து பல புராணக் கதைகள் கூறப்படு கின்றன. ஒரு கதை, பாற்கடலை தேவர்கள் வாசுகி என்ற விஷம் நிறைந்த பாம்பைக் கயிராகக் கொண்டு கடைந்தார்கள். அப்போது தேவர்கள் கடைந்த விஷம் கடலில் கலந்தது. இதனால் முழு உலகமும் அழிந்து விடுமோ என்ற அச்சத்தில் தேவர்கள் சிவபெருமானிடம் உதவி கேட்கிறார்கள். சிவ பெருமான் ஓடி வந்து அந்த விஷத்தைத் தானே குடித்தார். ஆனால் அந்த விஷத்தைத் தொண்டையில் வைத்துக் கொண்டார். வயிற்றுக்குள் அனுப்பவில்லை. இது நடைபெற்ற காலம் சிவராத்திரி இரவு. அந்த நாள் தான் சிவராத்திரியாக கொண் டாடப்படுகிறது. இது ஒரு கதை. மற்றொரு கதை பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற...

சேலத்தில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிறது “இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு”

சேலத்தில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிறது “இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு”

  திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு பிப்.15, 2023 பகல் 11 மணியளவில் சென்னை தலைமை அலுவலகத்தில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், தலைமைக் குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம், ஆசிரியர் சிவகாமி, சென்னை உமாபதி, விழுப்புரம் அய்யனார், பரிமளராசன், காவலாண்டியூர் ஈசுவரன், மயிலாடுதுறை இளையராசா ஆகியோர் பங்கேற்றனர். ஏப்ரல் 29, 30 தேதிகளில் சேலத்தில் கழகத்தின் மாநில மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு அது குறித்து நிகழ்ச்சிகள், தலைப்புகள், மாநாட்டு நோக்கங்கள், மாநாட்டுக்கான பேச்சாளர்கள், மாநாட்டுக்கு நன்கொடை திரட்டும் வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. “இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு” என்று மாநாட்டின் தலைப்பு முடிவு செய்யப்பட்டது....

ஜாதி மத மறுப்புத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா?

ஜாதி மத மறுப்புத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா?

¨  மணமுறிவு பெற்றவர்கள் ¨   துணையை இழந்தவர்கள் ¨  மாற்றுத் திறனாளிகள் – ஆகியோரும் Manitham Matrimony இணையதளத்தில் இலவசமாகப் பதிவு செய்து பயன் பெறலாம். இச்சேவையை Google Play  அலைப்பேசி செயலியாகவும் (Mobile Apps) பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம். மனிதம் திருமண தகவல் நிலையம் எண்.5/9, பாலமுத்துகிருஷ்ணா தெரு தர்மாபுரம், தியாகராய நகர், சென்னை – 600 017. அலைபேசி எண். 7604977781 மின்னஞ்சல் : manithammatrimonial@gmail.com web: http//manithammatrimony.com பெரியார் முழக்கம் 16022023 இதழ்

பராசக்தி திரைப்படத்தில் சமூக நீதிக் கருத்துகள்: கொளத்தூர் மணி உரை

பராசக்தி திரைப்படத்தில் சமூக நீதிக் கருத்துகள்: கொளத்தூர் மணி உரை

ஊடகம் மற்றும் சமூக அறிவியல் மையம், மூங்கில்பாடி,சேலம் மற்றும் சேலம்  ஏ.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை நடத்திய தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு நடந்தது. “திரைப் படங்களில் திராவிடக் கதையாடல்கள்”: “பராசக்தி திரைப்படம்” – ‘வாசிப்பு மற்றும் மீள் வாசிப்பு’ எனும் தலைப்பில் நடைபெற்ற 2 நாள் மாநாட்டில் 10.02.2023 வெள்ளி காலை 10.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று “பராசக்தி திரைப்படத்தில் சமூக நீதிக் கருத்துகள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 16022023 இதழ்

சேத்துப்பட்டு இராஜேந்திரன்-அலமேலு மணிவிழா

சேத்துப்பட்டு இராஜேந்திரன்-அலமேலு மணிவிழா

பெரியாரியலாளர் சேத்துப் பட்டு க. இராஜேந்திரன் – அலமேலு மணிவிழா பிப்.22ஆம் தேதி அயனாவரம் ‘ஸ்ரீசக்தி பார்ட்டி ஹாலில்’ ஆனூர் ஜெகதீசன் (தலைவர் த.பெ.தி.க.) தலைமையில் நிகழவிருக்கிறது. தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங் குடி ஆணைய துணைத் தலைவர் புனித பாண்டியன், உறுப்பினர் வழக்கறிஞர் குமாரதேவன், அன்பு தனசேகர் (தி.வி.க.) சிறப்புரையாற்றுகிறார்கள். மணிவிழா மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதிக்கு ரூ.2000/- வழங்கியுள்ளார்கள். பெரியார் முழக்கம் 16022023 இதழ்

கருத்துரிமையைப் பறிக்கும் ஒன்றிய ஆட்சியின் அச்சுறுத்தல் சட்டம் எட்வின் பிரபாகரன்

கருத்துரிமையைப் பறிக்கும் ஒன்றிய ஆட்சியின் அச்சுறுத்தல் சட்டம் எட்வின் பிரபாகரன்

பாஜகவுக்கு எதிரான செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக, புதிய சட்டத்திருத்தம் (IT Act 2021 – 3[1][b][v]) ஒன்றை ஒன்றிய அரசு கொண்டு வர உள்ளது. பத்திரிக்கைத் தகவல் பணியகமோ (PIB), ஒன்றிய அரசால் அங்கீகரிக் கப்பட்ட வேறொரு நிறுவனமோ, ஒரு செய்தியை போலி செய்தி என்று அறிவித்து விட்டால், அந்தச் செய்தி எந்த ஒரு இணைய ஊடகத்திலிருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண் டும் என்பதே அந்த சட்டத்திருத்தம். இதனை மின்ன ணுவியல் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் கொண்டு வரவுள்ளது. எந்த ஒரு ஒழுங்கு முறை அதிகாரமும் இல்லாத PIBயிடம், உண்மை சரிபார்ப்பு & கட்டுப்பாட்டு பொறுப்பை ஒன்றிய அரசு வழங்க விருக்கும் செயல், கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அரசின் கொள்கைகள், திட்டங் கள், முன்னெடுப்புகள் & சாதனை கள் தொடர்பான செய்திகளை, அச்சு ஊடகங்களுக்கும் இணைய ஊடகங்களுக்கும் வழங்குவது தான், பத்திரிக்கைத் தகவல் பணியகத்தின் வேலையாக இருந்து வருகிறது....

சென்னைக் கூட்டத்தில் பால். பிரபாகரன் உரை காந்தியார் கொலை: பெரியார் முன்கூட்டியே எச்சரித்தார்

சென்னைக் கூட்டத்தில் பால். பிரபாகரன் உரை காந்தியார் கொலை: பெரியார் முன்கூட்டியே எச்சரித்தார்

¨        காந்தியார் கொலை வரலாறு மறைக்கப் படுகிறது. ¨        காந்தியாரிடம் பெரியார் இயக்கத்துக்கு முரண் உண்டு. இரட்டை வாக்குரிமை ஓர் உதாரணம். ¨        அம்பேத்கர் ஒன்றிய அரசுப் பதவிகளில் ஆதிராவிடர் இடஒதுக்கீட்டை 1943லேயே பெற்றுத் தந்தவர் பிப்.6, 2023 அன்று மயிலைப் பகுதியில் கழகம் நடத்திய காந்தி படுகொலைக் கண்டன நாள் பொதுக் கூட்டத்தில் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்த்திய உரை. இப்போது எதற்காக திராவிடர் விடுதலைக் கழகம், காந்தியார் படுகொலை நாள் கூட்டத்தை நடத்துகிறது என்று சொன்னால், இப்போது ஆண்டு கொண்டிருக்கிற ஒன்றிய அரசாங்கம், பல்வேறு வரலாற்றுத் திரிபுவாதங்களை செய்து கொண்டிருக்கிறது. குஜராத்தினுடைய பாடப் புத்தகங்களிலே மத்திய அரசினுடைய பாடப் புத்தகங்களிலே 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி காந்தியடிகள் இறந்து போனார் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஏதோ நோய் வாய்ப்பட்டு இறந்தது மாதிரியோ அவர் ஆஸ்பத்திரியில் இருந்து பிழைக்க மாட்டார் என்று சொல்லி அவர்...

1954இல் ஆச்சாரியார் கொண்டு வந்த “இல்லம் தேடிக் கல்வி”

1954இல் ஆச்சாரியார் கொண்டு வந்த “இல்லம் தேடிக் கல்வி”

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி இழப்பை சரி செய்வதற்காக தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஒரு புதுமையான திட்டம் தான் இல்லம் தேடி கல்வித் திட்டம். கடந்த ஓராண்டு காலமாக இத்திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்று மாநில திட்டக் குழுவின் மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது, இந்த மதிப்பீட்டு அறிக்கையை மாநில திட்ட குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் அவர்கள் தமிழ்நாடு முதல்வர் அவர்களிடம் அளித்திருக்கிறார். அதில் இத்திட்டம் பற்றி ஆய்வுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. 6 மாவட்டங்களில் 362 பள்ளிகள், 679 தன்னார்வலர்கள், 362 தலைமையாசிரியர்கள், 362 ஆசிரியர்கள், 724 பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் கூறியிருக்கிற சில முக்கிய பரிந்துரைகள் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் எளிய கற்றல் முறைகள் மாணவர்களுடன் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை குறிப்பிட்டிருக்கிறது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிற இந்த...

தலையங்கம் ஆளுநரே! பதில் கூறுங்கள்!

தலையங்கம் ஆளுநரே! பதில் கூறுங்கள்!

சனாதனப் பெருமைப் பேசி வந்த தமிழக ஆளுநர் ரவி இப்போது திடீரென்று தமிழ்நாட்டில் தலித் மக்கள் உரிமைகளுக்காக கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கிறார். இது தான் ‘திராவிட மாடல் ஆட்சியா?’ என்று மேடைப் பேச்சாளர் போல் நக்கலடித்தும் இருக்கிறார். ஆளுநர் ரவி புரோகித – வைதீக வட்டாரங்களிலும் ஆகமக் கோயில்கள் சடங்குகளிலும் பங்கேற்கும் சனாதனவாதியாகவே செயல்பட்டு வரும் நிலையில் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்து நிற்கிறது. ஆளுநர் முதலில் சில அடிப்படையான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆளுநர் பேசும் சனாதனம் என்ற ‘வர்ணாஸ்ரமம்’ தான் ஜாதிக்கும் தீண்டாமைக்கும் ஆணிவேர் என்பதை ஆளுநர் மறுக்க முடியுமா? சனாதனத்தைப் போற்றிக் கொண்டு தீண்டாமைக்கு எதிராகப் பேசுவது இரட்டை வேடமல்லவா? இந்து மதம் – இந்து தர்மம் என்பவை இந்தியா தோன்றுவதற்கு முன்பே வந்து விட்டது என்று பேசிய ஆளுநர் அவர்களே! அதே ‘இந்து தர்மம்’ தானே மனிதர்களுக்குள் ஜாதியையும் தீண்டாமையையும்...

வினா விடை

வினா விடை

செவ்வாய்கிரகத்தில் ஆறுகள் இருந்திருக்கின்றன. – நாசா அப்படி வாங்க வழிக்கு. அதுல ஒன்னுதான் எங்க வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி ஆறு. செவ்வாய்கிரகத்திலேயே எங்களாவாதான் பூர்விகக் குடிகள், புரியுதோ! 3 ஆளுநர்களைத் தந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார், பிரதமர் மோடி. – பா.ஜ.க. என்ன குரல் மாறுது? மூன்று சனாதன ‘இந்துக்களைத் தந்து’ என்று தானே சொல்லணும். இப்போ, மதம் போய் – தமிழன் வந்துட்டானா? இந்துமாக் கடல் – சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருக்கும் நிலையில் பிரபாகரன் வெளிப்படுவதற்கான சூழல் உருவாகி யுள்ளது. – பழ. நெடுமாறன் இந்தியப் பெருங்கடல் இந்துமாக் கடலாக மாறி விட்டதா, அய்யா! பா.ஜ.கவின் கனவைத் தவிர்க்க பிரபாகரன் மீண்டும் ஈழத்துக்கு வரவேண்டும்! – கோவை இராமகிருட்டிணன் அறிக்கை அப்ப, தமிழ் ஈழத்துக்காக வரவேண்டாமா? அப்படியே ஈரோடு இடைத்தேர்தலுக்கும் வந்து பா.ஜ.க.வின் கனவைத் தவிர்த்தால் நல்லது. வருமான வரித் துறையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சிறப்பு அழைப்பாளராகப்...

மதுரையில் காதலர் தினம் ‘இந்து முன்னணி’க்கு கழகம் பதிலடி

மதுரையில் காதலர் தினம் ‘இந்து முன்னணி’க்கு கழகம் பதிலடி

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ராஜாஜி பூங்காவில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். செய்தியறிந்து, அதே பூங்காவில் மதுரை திவிக சார்பில் காதலர் தின வாழ்த்து தெரிவித்து காதலர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.. மேலும் “ஜாதி மறுத்து காதல் செய்வோம் – ஜாதி மறுத்து இணையேற்போம்” – ஜாதி மறுப்பு இணையர்களின் குழந்தைகளுக்கு “ஜாதியற்றோர் இட ஒதுக்கீடு வழங்கிடுக” என்று தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட செயலாளர் மா.பா. மணிஅமுதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி, புலிப்பட்டி கருப்பையா மற்றும் விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவைத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 16022023 இதழ்

பா.ஜ.க. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரிக்கும் சூழ்ச்சி வலை

பா.ஜ.க. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரிக்கும் சூழ்ச்சி வலை

‘இந்துத்துவா’ அரசியல் வரும் தேர்தலில் எடுபடாது என்ற முடிவுக்கு வந்த பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சூழ்ச்சி வலை வீசி வாக்குகளாக மாற்றும் திட்டத்தை உருவாக்கி வருகிறது. சர்வதேச காதலர் தினமான பிப்ரவரி 14-யை ஒன்றிய அரசின் விலங்குகள் நல வாரியம் பசு மாடு அணைப்பு தினமாக கடை பிடிக்கு மாறு விடுத்த வேண்டுகோளை இப்போது திடீரென்று ரத்து செய்வதாக அறிவித் துள்ளது. இதற்கு மக்களுடைய எதிர்ப்பு தான் காரணம் என்றாலும்கூட இதற்கு முன்பு எப்போதும் பிடிவாதமாக இருக்கிற ஒன்றிய பாஜக ஆட்சி இப்போது திடீரென்று தன்னுடைய குரலை ஏன் மாற்றிக் கொண்டு இருக்கிறது, இதற்குப் பின்னால் ஒரு மிகப் பெரிய அரசியல் சூழ்ச்சி அடங்கி இருப்பதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். பிப்ரவரி 10 ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டிருக்கிறது, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் “இந்துத்துவ முழக்கம்” தங்களை...

ஆனந்தி – அஸ்வின் குமார் இணையேற்பு விழா

ஆனந்தி – அஸ்வின் குமார் இணையேற்பு விழா

சென்னை மயிலைப் பகுதி திராவிடர் விடுதலை கழகத் தோழர் அஸ்வின் குமார் – ஆனந்தி ஆகியோரின் சுயமரியாதை இணையேற்பு விழா 03.02.2023 வெள்ளி அன்று சென்னை தேனாம்பேட்டை, டாக்டர் கிரியப்பா சாலை, சமூக நலக்கூடத்தில் மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.  விழாவிற்கு தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் உமாபதி முன்னிலை வகித்தார். இணையேற்பு விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வை திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையேற்று நடத்தி வைத்தார்.  ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர்.  கழக ஏட்டுக்கு ரூ.5,000/- நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 09022023 இதழ்  

நன்கொடை

நன்கொடை

குமாரபாளையம் தமிழன் இன்ஜினியரிங் லேத் தோழர் மாது ராஜி சரசுவின் மகன் திலகன்-சந்தியா தம்பதியருக்கு 29.1.2023 பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்வான தருணத்தில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு வளர்ச்சி நிதியாக நன்கொடை ரூ.1000/- காவலாண்டி ஊர் சார்பாக வழங்கி உள்ளார். பெரியார் முழக்கம் 09022023 இதழ்

திருப்பூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

திருப்பூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 26.1.23 அன்று திருப்பூர் மங்கலம் சாலை கே ஆர் சி மஹாலில் மாலை 5.30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது.  ஆலோசனைக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி அறிமுக உரையாற்றினார். கழக நிர்வாகிகள் உடுமலை மற்றும் பல்லடம் பொறுப்பாளர்கள், மாநகர பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் அனைவரும் கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா வசூல் மற்றும் பரப்புரைக்கான பல்வேறு ஆலோசனைகளை பேசினார்கள். தொடர்ந்து தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் மகிழவன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, இணையதளப் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டத் தலைவர் முகில் ராசு, தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், கழகப் பொருளாளர் துரைசாமி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். நிறைவாக பேசிய கழகத் தலைவர், கழகம் கொள்ளவிருக்கிற அடுத்தகட்ட செயல்பாடுகள்,...

ஈரோட்டில் கழகப் பெண்கள் சந்திப்பு

ஈரோட்டில் கழகப் பெண்கள் சந்திப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்றம் இணைந்து நடத்திய “பெண்கள் சந்திப்பு” நிகழ்வு 5.2.2023 ஞாயிறு அன்று ஈரோடு பிரியாணிபாளையம் உணவக அரங்கில் நடைபெற்றது. ஈரோடு மணிமேகலை நிகழ்விற்கு தலைமையேற்று சுவையான கவிதை நடையில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். திருப்பூர் கார்த்திகா வரவேற்புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடக்கவுரையாற்றினார். பெரியார் தனது இயக்கத்தில் பெண்களுக்கு அளித்த முக்கியத்துவம் பற்றியும் பெரியார் நடத்திய மாநாடுகளில் தொடக்க உரையாகவோ கொடியேற்றி தொடங்கி வைப்பவராகவோ கட்டாயம் ஒரு பெண் தோழர் இருக்கும் படி பார்த்துக் கொண்டார் என்பதையும் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்கும் இயக்கங்கள் தங்களது பணியை சிறப்பாக செய்ய முடியும் என்பதை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து ‘அம்பேத்கரும் பெரியாரும்’ என்ற தலைப்பில் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, ‘மூடநம்பிக்கைகளை முறியடிப்போம்’ என்ற தலைப்பில் சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, ‘பெண் கல்வியும் தமிழ்நாடும்’ என்ற தலைப்பில் கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர்...

‘அருட்பா-மருட்பா’ மோதல்: பின்னணி என்ன? விடுதலை  இராசேந்திரன்

‘அருட்பா-மருட்பா’ மோதல்: பின்னணி என்ன? விடுதலை இராசேந்திரன்

சென்ற இதழ் தொடர்ச்சி ¨           வள்ளலார் பிறந்த ஜாதியைக் கூறி இழிவு செய்தனர். ¨           சிதம்பரம் பேரம்பலத்தில் நடந்த கூட்டத்தில் காரசார மோதல். ¨           மான நட்ட வழக்கை அருட்பா-மருட்பா என்று தவறாக சித்தரித்தார் ம.பொ.சி. ¨           ‘வேதம்’ என்ற சொல்லையே எதிர்த்த வள்ளலார்.   நாவலர் வள்ளலாரின் பாடல்கள் ‘திருவருட்பா’ அல்ல என்று மறுத்தார், தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரியபுராணம் எனும் ஐந்து புராணங்கள் தான் திருவருட்பாவே தவிர மற்றவை அல்ல என்றார், வள்ளலார் பாடல்களை நேரடியாக கண்டித்து மருட்பா என்றார், பார்ப்பனர்களைக் கடுமையாக சாடும் திருமந்திரத்தையே அருட்பா பட்டியலில் சேர்க்காதவர் அவர், ஆறுமுக நாவலர் கருத்துக்கு எதிராக 1868இல் ‘திருவருட்பா தூசன பரிகாரம்’ எனும் நூலை திருமயிலை சண்முகம் பிள்ளை என்பவர் எழுதி வெளி யிட்டார். அருட்பா மருட்பா விவாதங்கள் அனல் பறக்கத் தொடங்கின; அடிகளாருக்கு ஆதரவாக அட்டாவதனம் வீராசாமி செட்டியார், இறுக்கம் இரத்தினம் முதலியார், பூவை...

உடல் மற்றும் கண்கள் கொடை

உடல் மற்றும் கண்கள் கொடை

திராவிடர் விடுதலைக் கழக குமாரபாளையம் நகரச் செயலாளர் செ .வடிவேலு தந்தையார் செல்லமுத்து உடல் நலக்குறைவால் 28.11.2022 மதியம் அன்று சுமார் 2.45 மணியளவில் இயற்கை எய்தினார். அவர் இறந்த ஆறுமணி நேரத்திற்குள் அவரின் இரண்டு கண்களும் பார்வை இழந்தவர்களுக்கு பார்வை கிடைக்கும் வகையில் ஈரோடு அரசன் கண் மருத்துமனைக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்டது. அவரின் உடல் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உதவும் விதமாக கொடையாக நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் பொறுப்பாளர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது அங்கிருந்து மருத்துவப் பேராசிரியர்கள் மிகுந்த மகிழ்வுடன் பெற்று கொண்டது மட்டுமில்லாமல் இது தான் இந்த மருத்துவக் கல்லூரிக்குக் கிடைத்த முதல் உடற்கொடை ஆகும். தொடர்ச்சியாக பெரியார் இயக்கத்தை சார்ந்தவர்கள் இப்பணியைச் செய்வது பாராட்டத்தக்கது என்று பாராட்டினார். தோழர் வடிவேல் மட்டும்தான் அவருடைய குடும்பத்தில் பெரியாரிய கொள்கையை ஏற்றுக் கொண்டவர். இருப்பினும் வடிவேல் மற்றும் கழகத் தோழர்களின் வேண்டு கோளையேற்று அவருடைய...

அறநிலையத் துறையைக் கலைக்கக் கோரும் அண்ணாமலைக்கு ஆன்மிகப் பேச்சாளர் சுகி. சிவம் பதிலடி

அறநிலையத் துறையைக் கலைக்கக் கோரும் அண்ணாமலைக்கு ஆன்மிகப் பேச்சாளர் சுகி. சிவம் பதிலடி

தமிழ்நாட்டில் பாஜக ஆட் சிக்கு வந்தால் இந்துசமய அறநிலையத் துறையை ஒழிப்பது தான் முதல் வேலை என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணா மலை கூறியுள்ளார். இந்த பேச்சை அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர். இந்துசமய அறநிலையத்துறையை ஒழிப்பது என்ற பேச்சு, கோவில் சொத்துக்களை தனிநபர்கள் கொள்ளை யடிக்கவே உதவி செய்யும் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுகுறித்து ஆன்மீகப் பேச்சாளரும் அறநிலையத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினருமான சுகி சிவம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆகிவிடுவார்.  சித்தப்பா பெண்ணை எப்படி கல்யாணம் முடிப்பது என்று ஒருவன் கேட்டால் எவ்வளவு குழந்தைத்தனமாக இருக்குமோ, அவ்வளவு குழந் தைத்தனமானது பாஜக அண்ணா மலையின் பேச்சு. பாஜக ஆட்சிக்கு வந்தால் என்று அவர் கூறுவது கற் பனையின் உச்சம். பாண்டிச்சேரி கூட்டணி அரசில் யார் இருக்கிறார்கள்? அங்குள்ள திருநள்ளாறு கோவில் யார் கட்டுப் பாட்டில் உள்ளது? முதல்வர்...

தலையங்கம் சரணாகதிப் படலம்

தலையங்கம் சரணாகதிப் படலம்

பாரதிய ஜனதாவின் கயிறுகள் அ.இ.அ.தி.மு.க.வின் அணிகள் என்ற பொம்மையை ஆட்டுவித்து பொம்மலாட்டம் நடத்துவதை இனியும் மறைக்க முடியாது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் இது வெளிச்சமாகிவிட்டது. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முதலில் தனது கட்சியே வேட்பாளரை நிறுத்தும் என்றார். தேர்தல் பணிக் குழுவையும் நியமித்தார். எடப்பாடி பழனிச்சாமி, கட்சிக்கு நான் தான் தற்காலிக பொதுச் செயலாளர்; நானே அ.இ.அ.தி.மு.க. – எனவே நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம் என்றார். பா.ஜ.க.விடம் நேரில் சென்று ஆதரவு கேட்டார். நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒரு வேட்பாளரை அறிவித்தார். மற்றொரு அணியான ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தின் பதிவுகளில் தாமே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றார். தனது கட்சி, பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தினால், ஆதரிக்கும்; நிறுத்தவில்லை என்றால், தங்கள் கட்சியே வேட்பாளரை நிறுத்தும் என்றார். இரண்டு கட்சிகளும் பா.ஜ.க.வின் முடிவுக்காக விடிய விடிய நாள்கணக்கில் காத்திருந்ததுதான் மிச்சம். பிறகு, ஓ. பன்னீர்செல்வமும் ஒரு வேட்பாளரை நிறுத்தி அவரை வேட்பு...

அனைத்து இந்துக்களையும் சேலம் திருமலைகிரி கோயில் நுழைவுக்கு அனுமதிக்கக் கோரி சேலத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

அனைத்து இந்துக்களையும் சேலம் திருமலைகிரி கோயில் நுழைவுக்கு அனுமதிக்கக் கோரி சேலத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 02.02.2023 வியாழன் காலை 11.00 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் திருமலை கிரி கோவிலில் அனைத்து தரப்பு இந்து மக்களும் வழிபட ஆலய நுழைவை தமிழ் நாடு அரசு உறுதிப் படுத்த வேண்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் க.சத்திவேல் தலைமை தாங்கினர். கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர் அ.சக்தி வேல், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, இளைஞரணி அமைப்பாளர் தேவபிரகாசு, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்ட நோக்கத்தை விளக்கி உரை நிகழ்த்தினர்.  தோழர்கள் தங்களது உரையில் “கிராமப் பகுதிகளில் தொடர்ந்து நிலவும் ஜாதிப் பாகுபாடுகள், தீண்டாமைக் கொடுமைகள் இவற்றை தமிழ்நாடு அரசு கண்கானித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதேபோல அறநிலையத் துறை கட்டுபாட்டின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் அனைத்து இந்து மக்களும் வழிபட தமிழ்நாடு...

மயிலையில் காந்தி படுகொலை கண்டனக் கூட்டம் ‘கருப்பு-சிவப்பு-நீலம்’ இணைந்து காவிகளின் மிரட்டலை சந்திக்கும்

மயிலையில் காந்தி படுகொலை கண்டனக் கூட்டம் ‘கருப்பு-சிவப்பு-நீலம்’ இணைந்து காவிகளின் மிரட்டலை சந்திக்கும்

‘கருப்பு-சிவப்பு-நீலம்’ இணைந்து தமிழ்நாட்டில் காவியை விரட்டியடிக்க உறுதி ஏற்போம் என்று காந்தி படுகொலை கண்டனக் கூட்டத்தில் பேசிய அனைவரும் உறுதி ஏற்றனர். சென்னை மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழக சார்பில் 6.2.2023 மாலை மந்தைவெளி இரயில் நிலையிம் அருகே காந்தி படுகொலை நாள் பொதுக் கூட்டம் மக்கள் கலை இலக்கிய மய்யக் குழு பாடகர் கோவன் கலை நிகழ்ச்சிகளோடு எழுச்சியுடன் தொடங்கியது. காந்தியாரின் பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்ட வடிவத்தில் தங்களுக்கு முரண்பாடு உண்டு என்றும், பகத்சிங் நிலைப்பாட்டையே தங்களது அமைப்பு அங்கீகரிப்பதாகவும் கூறிய பாடகர் கோவன், காந்தி படுகொலையை பார்ப்பன சங்கிகள் திட்டமிட்டு நடத்தியதைக் கண்டிப்பதிலும், அது நம் அனைவருக்குமான வரலாறு தரும் எச்சரிக்கை என்பதிலும் நாம் இந்த மேடையில் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்ற தன்னிலை விளக்கத்தோடு நிகழ்ச்சியைத் தொடங்கினார். காந்தி படுகொலைக்குப் பின் இந்தியாவுக்கு காந்தி தேசம் என்று பெயர் சூட்டக் கோரினார் பெரியார். ஆனால் காந்தி பிறந்த...

திருப்பூர் மாஸ்கோ நகரில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா

திருப்பூர் மாஸ்கோ நகரில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா

சிறுவர் சிறுமியர் விளையாட்டுப் போட்டிகள் – கலை நிகழ்ச்சி – தமிழிசைப் பாடல்கள் – பொதுக் கூட்டம் என ஒரு நாள் நிகழ்சியாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிகள் அனைத்திலும் அப்பகுதி வாழ் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 13ஆவது ஆண்டு பொங்கல் விழா மற்றும் தமிழ் புத்தாண்டு விழா ஆகியவை 22.01.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு வரை நடைபெற்றது.  விழாவிற்கு மாநகரச் செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக காலை 10.00 மணிக்கு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கும் நிகழ்வை தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கழகப் பொருளாளர் துரைசாமி, மாநகரத் தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் முத்து, தெற்கு பகுதி கழகச் செயலாளர் இராமசாமி, சரசு, பகுதி கழகத் தோழர் கோமதி,...

சென்னையில் காந்தி படுகொலை நாள் பொதுக்கூட்டம்

சென்னையில் காந்தி படுகொலை நாள் பொதுக்கூட்டம்

சென்னை மயிலாப்பூர் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காந்தி படுகொலை நாள் பொதுக் கூட்டம் 6.2.2023 திங்கள் மாலை மந்தை வெளி இரயில் நிலையம் அருகே நடைபெற உள்ளது. உரை :      ஆளூர் ஷா நவாஸ், எம்.எல்.ஏ. பால். பிரபாகரன் (பரப்புரைச் செயலாளர்) வழக்கறிஞர் திருமூர்த்தி கு. அன்பு தனசேகரன் (தலைமைக் குழு உறுப்பினர்) கோவன் குழுவினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறும். பெரியார் முழக்கம் 02022023 இதழ்

மொழிப் போர் தியாகிகள், முத்துக்குமார் நினைவிடங்களில் கழகம் மரியாதை

மொழிப் போர் தியாகிகள், முத்துக்குமார் நினைவிடங்களில் கழகம் மரியாதை

1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பில் வீரமரணம் அடைந்த நடராசன், தாளமுத்து நினைவிடம் வட சென்னை மூல கொத்தளம் பகுதியில் உள்ளது. அதேபோல ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முத்துக்குமார் நினைவிடம் சென்னை கொளத்தூரில் உள்ளது. கழக சார்பில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மயிலை சுகுமார், இராவணன், மனோகரன், பிரவீன், உதயகுமார், ரவி பாரதி, சிவா, கனி, நரேஷ் உள்ளிட்ட தோழர்கள் முறையே ஜன. 25 மற்றும் 30ஆம் தேதிகளில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பெரியார் முழக்கம் 02022023 இதழ்

காந்தி முதல் கவுரி லங்கேஷ் வரை : திருச்சியில் கழகம் கருத்தரங்கம்

காந்தி முதல் கவுரி லங்கேஷ் வரை : திருச்சியில் கழகம் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் திருச்சி, பெரம்பலூர் மாவட்டக் கழகங்களின் சார்பில், காந்தியார் நினைவு நாள் கருத்தரங்கம், “காந்தி முதல் கவுரி லங்கேஷ் வரை” என்ற தலைப்பில், 28.01.2023 அன்று மாலை 5 மணி யளவில், திருச்சி இரவி மினி அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு, பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை தாமோதரன் தலைமை வகித்தார். நிகழ்விற்கு, திருச்சி மாவட்டச் செயலாளர் மனோகரன் வரவேற்பு கூறினார். திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி, திருவரங்கம் அசோக், விராலிமலை குமரேசன், திருச்சி ஆறுமுகம், போலீஸ் காலனி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் தொடக்கத்தில், மக்கள் கலை இலக்கிய கழகம் மய்யக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மதவெறிக்கு எதிரான பாடல்களை கலைக்குழுவினர் பாடினர். தொடர்ந்து, விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கருத்துரையாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சங் பரிவாரங்களின் மதவெறிக் கலவரங்கள் மற்றும் கொலைகளைப் பற்றி விரிவாக விளக்கி உரையாற்றினார்....

ஈஷா மய்ய மர்மங்கள் : கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

ஈஷா மய்ய மர்மங்கள் : கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

கோவை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் சனவரி 26, காலை 10 மணிக்கு கோவை ஆதித்தமிழர் பேரவை அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் பா. இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் அண்மையில் மறைந்த தூத்துக்குடி மாவட்ட தலைவர் பால்ராசு, தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் இணையர் வசந்தி, தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவைப் பொதுச்செயலாளர் சந்திரபோஸ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஈசா யோகா மையத்தில் தொடரும் மர்மங்களைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்துவது, பெரியார் கொள்கைகளை விளக்கி புதிய இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடத்துவது, தலைமைக் கழக வெளியீடுகளை மக்களிடத்தில் பரவலாக கொண்டு சேர்ப்பது, பெரியாரியல், திராவிடர் இயக்க பயிலரங்கங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு நூலகங்களில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ செல்கிறதா என்பதில் தோழர்கள் கவனம் செலுத்தி இதழ் செல்வதற்கு வழி செய்ய தோழர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 2023ஆம் ஆண்டிற்கான கழக வார...

ஆறாம் திருமுறை இருட்டடிக்கப்படுவது ஏன்? விடுதலை  இராசேந்திரன்

ஆறாம் திருமுறை இருட்டடிக்கப்படுவது ஏன்? விடுதலை இராசேந்திரன்

¨           கடைசி 10 ஆண்டுகளில் மதங்கள் அனைத்தை யும் வேண்டாம் என்றார். ¨           ‘திருவருட்பா’ என்று தனது தொகுப்புக்கு  பெயர் சூட்டியது வள்ளலார் இல்லை. ¨           வள்ளலாரின் அய்ந்து திருமுறைகளையும் வெளியிட ஆர்வம் காட்டிய பலரும் 6ஆம் திருமுறையை வெளியிட விருப்பம் காட்டவில்லை; சைவப் பற்றே காரணம். ¨           வள்ளலாரே தனது 6ஆம் திருமுறையை வெளியிட ஆர்வம் காட்டவில்லை என்ற ம.பொ.சி.யின் கருத்து உண்மைக்கு மாறானது. ¨           தில்லை தீட்சதர்கள் அர்ச்சகர்களாக முடியாது; அவர்கள் சிவதீட்சைப் பெற்றவர்கள் அல்ல என்று கடுமையாக எதிர்த்தவர் ஆறுமுக நாவலர். சைவத்தில் பற்று வைத்து பிறகு சிந்தனை வளர்ச்சிப் போக்கில் சைவத்தின் மனித சமத்துவ எதிர்ப்புக் கருத்துக்களை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியதுதான் வள்ளலாரின் தனித்துவம். அவர் சுய மத மறுப்பாளர். சைவத்துடனேயே அவர் வாழ்நாள் முழுதும் போராட வேண்டியிருந்தது. “நாம் இலட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் இலட்சியம்...

அதானியை மோடி வளர்த்தது எப்படி?

அதானியை மோடி வளர்த்தது எப்படி?

குஜராத்தின் அஹமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு 1988ம் ஆண்டில் கௌதம் அதானி என்பவரால் அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனமாக தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் மிகப் பெரிய வளர்ச்சிக்கு பிரதமர் மோடியே அடித்தளமிட்டவர். கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி தனது ஆத்ம நண்பரான அதானியை ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் போதும் உடன் அழைத்துச் சென்றார். 2019இல் ஆஸ்திரேலியா சென்ற போது அதானியை அழைத்துச் சென்று, அங்குள்ள குயின்ஸ்லாந்தில் சார்பில் 12.3 பில்லியன் அமெரிக்க டாலர்களில் மேற்கொள்ளப்பட இருந்த பெரிய திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ ஆரம்பத்தைப் பெற்று தந்தார். இதற்கு இந்தியாவில் உள்ள வங்கிகள் பிணை வழங்கியது சர்ச்சைக்கு உள்ளானது. தொடர்ந்து இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை அதானி குழுமத்தின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததிலும் ஒன்றிய அரசின் ஒப்புதல் பரிபூரணமாக இருந்தது. ஒரு காலத்தில் அதானி குழுமத்தின் ஆதிக்கத்தின் கீழ் விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டவையும் வந்து...

நன்கொடை

நன்கொடை

மலேசியா சிலாங்கூர் பகுதியில் வசிக்கும் பெரியாரியலாளர் பரமசிவம், 2023ஆம் ஆண்டுக்கான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு வளர்ச்சி நிதியாக ரூ.5,000/- வழங்கினார். பெரியார் முழக்கம் 02022023 இதழ்

பழனி கோயில் – பார்ப்பன அர்ச்சகர்கள் நுழைந்த வரலாறு

பழனி கோயில் – பார்ப்பன அர்ச்சகர்கள் நுழைந்த வரலாறு

பழனி மலைக் கோயிலில் 17 ஆண்டு களுக்குப் பிறகு தமிழில் குடமுழுக்கு நடந்து முடிந்திருக்கிறது. சொல்லப் போனால் பழனி மலை கோயில் என்பது பார்ப்பன ரல்லாத பண்டாரங்களின் கட்டுப்பாட்டில் சித்தர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு கோயில் தான். மதுரையை திருமலை நாயக்கன் என்ற ஒரு மன்னன் ஆட்சி செய்த போது அவனது படைத் தளபதியாக இருந்த தளவாய் ராமப்பய்யர் என்ற ஒரு பார்ப்பனர் பழனி மலை கோயிலுக்கு வழிபடச் சென்றார். அங்கே பார்ப்பனரல்லாத பண்டாரங்கள் வழிபாடு நடத்துவதைப் பார்த்து அவர் மனம் கொதித்துப் போனார். அவர்களிடம் இருந்து திருநீறை வாங்கிக் கொள்வதற்கு அவர் மறுத்தார், உடனடியாக மதுரைக்குத் திரும்பி பண்டாரங்கள் அத்தனை பேரையும் பதவியில் இருந்து நீக்கி இனி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்று உத்தரவிட்டார். இப்படித்தான் வழக்கமாக ஆகம விதிப்படி பண்டாரங்கள் வழிபாடு நடத்தி வந்த கோயிலில், ஆகமங்களை மீறி பார்ப்பனர்கள் திணிக்கப்பட்டார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக...

தலையங்கம் அதானி குழுமம் மோசடி: மோடி ஏன் மவுனம் சாதிக்கிறார்?

தலையங்கம் அதானி குழுமம் மோசடி: மோடி ஏன் மவுனம் சாதிக்கிறார்?

மோடி தனது செல்லப் பிள்ளையாக வளர்த்துவிட்ட அதானி, இப்போது தனது சாம்ராஜ்யம் ஆட்டம் காணும் வகையில் பங்கு வணிக மோசடியில் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. (மோடி – அதானியை வளர்த்த கதையை வேறு இடத்தில் வெளியிட்டிருக்கிறோம்) 2017ஆம் ஆண்டு கார்ப்பரேட் நிறுவனங்களில் நிகழும் மோசடிகளை ஆய்வு செய்ய உருவான அமெரிக்க நிறுவனமே ஹிண்டன்பர்க். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி குழும நடவடிக்கைகளை ஆய்வு செய்தது; குழுமத்தின் முன்னாள் அதிகாரிகளை நேர்காணல் செய்தது. அதனடிப்படையில் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை பெரும் அதிர்வு அலைகளை உருவாக்கியது. உலக பில்லியனர் இடத்தில் 3ஆவது இடத்தில் இருந்த அதானி (சொத்து மதிப்பு 11 இலட்சம் கோடி), இப்போது 7ஆம் இடத்திற்குத் தள்ளப் பட்டுள்ளார். அதானி குழுமத்தில் அதிவேக வளர்ச்சியில் அதன் நிறுவனப் பங்குகளைப் பெரும் தொகைக் கொடுத்து வாங்கினர். அரசு பொதுத் துறை நிறுவனங்களும் முதலீடு செய்தன. ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.அய்.சி., ரூ.77,000 கோடியை...

காயாம்பட்டியில் ‘தீண்டாமை’ வன்முறை: பொய் வழக்கைக் கண்டித்து கழகம் ஆதரவு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

காயாம்பட்டியில் ‘தீண்டாமை’ வன்முறை: பொய் வழக்கைக் கண்டித்து கழகம் ஆதரவு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள காயாம்பட்டியில் ஜனவரி 15 பொங்கல் தினத்தன்று பட்டியல் சமூகத்தைச் சார்ந்த கண்ணன் எனும் இளைஞர் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது – காயாம்பட்டியை சார்ந்த ஆதிக்க ஜாதி வெறியர்கள் 7 பேர் சேர்ந்து தடுத்து நிறுத்தி “நீயெல்லாம் வண்டில வேகமா போறியா” என சொல்லி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  மேலும் அவரை நிர்வாணப்படுத்தி அவரது மனைவி மீதும் பாலியல் சீண்டல் செய்திருக்கின்றனர். இத் தகவலை அறிந்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மா.பா. மணி அமுதன் மக்களை சந்தித்து உண்மை தகவலை அறிந்து பாதிக்கப்பட்ட சமூக மக்கள் 26 பேர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது. அதனைத் தொடந்து 27-1-23 அன்று தலித் மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக் கோரியும்...

காந்தி கொலை: முன் கூட்டியே எச்சரித்தார் பெரியார் காந்தியை இந்துத்துவ தீவிரவாதிகள் படுகொலை செய்த நாள்  (30.01.1948).

காந்தி கொலை: முன் கூட்டியே எச்சரித்தார் பெரியார் காந்தியை இந்துத்துவ தீவிரவாதிகள் படுகொலை செய்த நாள் (30.01.1948).

காந்தியடிகளை (ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதி கோட்சே) படுகொலை செய்யப்படக்கூடிய ஆபத்து இருப்பது குறித்து காந்தியிடமே முன்பே எச்சரித்தார் பெரியார். பெரியார் எச்சரித்தவாறே காந்தியை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கொலை செய்தார்கள். பெரியார் காந்தியை நேரில் பார்த்து கூறினார் : “நான் சொல்லுகிறேன், தாங்கள் மன்னிக்க வேண்டும். இந்து மதத்தை வைத்துக் கொண்டு இன்று தங்களாலேயே நிரந்தரமாக ஒன்றும் செய்துவிட முடியாது. பிராமணர்கள் அவ்வளவு தூரம் விட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். தங்கள் கருத்து அவர்களுக்கு விரோதமாகச் சற்றுப் பலிதமாகிறது என்று கண்டால் உடனே எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவரை ஒரு பெரியாராலும் இந்தத் துறையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்பட்டதில்லை என்பதோடு, அப்படிப்பட்ட ஒருவரையும் பிராமணர்கள் விட்டு வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.” பெரியார் முழக்கம் 02022023 இதழ்

பெரியார் சிலை அகற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை

பெரியார் சிலை அகற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை

காரைக்குடியில் கழகத் தோழர் இளங்கோவன் புதிதாகக் கட்டிய தனது இல்ல வளாகத்துக்குள் பெரியார் மார்பளவு சிலை ஒன்றை நிறுவி, அதன் திறப்பு விழாவுக்காக கழகத் தலைவர் கொளத்தூர் மணியை அழைத்திருந்தார். ஜன. 29 அன்று இல்லத் திறப்புக்கு முன்பே சிலையை அதிகாரிகள் அகற்றி விட்டனர். காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் விரைந்து வந்து அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டுள்ளது; அகற்றுமாறு கோரினர். வீட்டின் வளாகத்துக்குள் சொந்த இடத்தில் வைத்துள்ள சிலையை ஏன் அகற்ற வேண்டும்? எதற்காக அனுமதி? என்று கேட்டு நீதிமன்றத் தீர்ப்புகளையும் கழகத் தோழர் எடுத்துக் காட்டினார். அதிகாரிகள் அது பற்றி கேட்காமலேயே சிலையை அகற்றி மூட்டையில் கட்டி வருவாய்த் துறை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர். பெரியார் சிலை அகற்றப் பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. பிரச்சினை உடனடியாக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. கோட்டையூரில் கழகத் தோழர் இல்லம் அருகே தான் பா.ஜ.க.வின் எச். ராஜா பண்ணை இல்லம் இருக்கிறது....

சென்னை – திருப்பூர் – மேட்டூரில் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள்

சென்னை – திருப்பூர் – மேட்டூரில் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள்

சென்னை – திருப்பூர் – மேட்டூரில் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. திருவல்லிக்கேணி : சென்னை திருவல்லிக்கேணி பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், தமிழர் திருநாள், பொங்கல் விழா நிகழ்வு, மக்கள் கலை விழாவாக ஜனவரி 13ஆம் தேதி மாலை 6 மணியளவில், வி.எம்.தெரு பெரியார் படிப்பகம் அருகில் நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசளித்து வாழ்த்துரை வழங்கினார். மேலும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர்  விடுதலை இராசேந்திரன் மற்றும் திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் (திமுக) முனைவர் ஏ. ரியா ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றி பரிசுகளை வழங்கினார்கள். கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். மேலும், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் மா.வேழவேந்தன் ஆகியோரும் பரிசுகளை வழங்கினர். பறையிசை, சிலம்பாட்டம், கிராமிய பாடல்கள்,...

கோவை இராமகிருட்டிணன் இணையர் வசந்தி முடிவெய்தினார்

கோவை இராமகிருட்டிணன் இணையர் வசந்தி முடிவெய்தினார்

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் அவர்களின் இணையர் வசந்தி (வயது 59) 20.01.2023 அன்று காலை 10 மணி அளவில் உடல்நலமின்றி இயற்கை எய்தினார். முடிவு செய்தி அறிந்த திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி கழகப் பொருளாளர் துரைசாமி,  தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் கு. இராமகிருட்டிணன் மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். கு. இராமகிருட்டிணனின் நீண்ட கால பெரியார் பணிக்கு துணை நின்ற அம்மையாரது இறுதி வணக்க ஊர்வலம் 21.01.2023 காலை 10 மணியளவில் இராமகிருட்டிணன் இல்லத்தில் இருந்து அருகில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது. இறுதி ஊர்வலத்திலும் கழகத் தலைவர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள், தோழமை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா, அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்....

சந்திரபோஸ் முடிவெய்தினார்

சந்திரபோஸ் முடிவெய்தினார்

தியாகி இமானுவேல் சேகரன் பேரவையின் பொதுச் செயலாளரும், ஐந்திணை மக்கள் கட்சியின் அரசியல் ஆலோசகருமாகிய அருமைத் தோழர் சந்திரபோஸ் 21.01.2023 அன்று சனிக்கிழமை உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் எனும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தோழரின் மரணம், ஜாதி ஒழிப்புக் களத்தில் நிகழ்ந்துள்ள ஒரு பேரிழப்பாகும். ஜாதியப் பெருமைகளைப் பற்றி எந்த நிலையிலும் சிந்திக்காமல், ஜாதிய இழிவுகள், புறக்கணிப்புகள், வஞ்சனைகள், உரிமைப் பறிப்புகள் பற்றி தொடர்ச்சியாக எடுத்துரைத்து அவற்றுக்குத் தீர்வு காண பெரும் போராட்டங்களையும் முன்னெடுப்புகளையும் நடத்தி வந்த ஒரு முற்போக்கு சிந்தனைவாதியாகத் திகழ்ந்தவர். பட்டியல் இன மக்களுக்குள்ளேயே ஏற்றத் தாழ்வினையும் பிரிவினையையும் பலரும் பேசி வருகிற சூழலில், சந்திரபோஸ், தியாகி இமானுவேல்சேகரனைப் போலவே அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு செயலாற்ற விரும்பியவர். தன் குடும்பத்து திருமண உறவுகளில் கூட அந்தப் பிரிவினைப் போக்கினை உடைத்துக் காட்டியவர் அவர்.  பல ஆண்டுகளாக தனது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவருடைய பணிகளை அவர்...

நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் வருகிறது ஜனநாயகத்தை இராமராஜ்யமாக்குகிறார்கள்

நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் வருகிறது ஜனநாயகத்தை இராமராஜ்யமாக்குகிறார்கள்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் ஒன்றிய அரசுக்கே முழு அதிகாரம்; உச்சநீதிமன்ற ‘கொலிஜியம்’ குறுக்கிடக் கூடாது என்று ஒன்றிய அரசு மோதலை உருவக்கி வருகிறது. மத்திய சட்ட அமைச்சர் கிரன் ரிஜிஜு டில்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எஸ். சோதி அளித்த பேட்டியை தனக்கு சாதகமாக வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றமே அதிகார மிக்கது என்றும், உச்சநீதிமன்றம், நீதிபதிகள் நியமனங்களில் தலையிட முடியாது என்றும் அவர் பேசியிருந்தார். இதற்கிடையே உச்சநீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒன்றிய அரசு ‘ஜனநாயக்’ நாட்டை ‘இராமராஜ்யமாக்க’ முயற்சிக் கிறது என்று ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கோபால கவுடா வெளிப்படையாகவே பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது உரையை சூழ்நிலை கருதி ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. இந்தியா ஒரு பாசிச நாடாக மாறி வருவதாகவும், 2014ஆம் ஆண்டுக்கு பிறகு உச்சநீதிமன்றம் தனது சுயத்தை இழந்து வருவதாகவும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கோபால கவுடா குற்றம் சாட்டியுள்ளார். அயோத்தி...

சிறைத் துறைக்கு மாணவர் கழகம் நூல் அன்பளிப்பு

சிறைத் துறைக்கு மாணவர் கழகம் நூல் அன்பளிப்பு

சென்னை 46ஆவது புத்தகக் கண்காட்சியில் சிறைத் துறை சார்பில் நூல் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய “மரண தண்டனை ஒழிப்போம்” உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நூல்கள் சிறைவாசிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. தோழர்கள் உதயகுமார், பிரவீன், வழக்கறிஞர் அன்பரசன், புகழ் பொன் வளவன் அருண், மகிழவன், விஷ்ணு, பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26012023 இதழ்

கள்ளக்குறிச்சி மாவட்டக் கழக கலந்தாய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டக் கழக கலந்தாய்வுக் கூட்டம்

6.1.2023 மாலை 4 மணிக்கு சங்கராபுரம் வாசவி அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்களை மாவட்டத் தலைவர் மதியழகன் வரவேற்று பேசினார், மாவட்ட செயலாளர் க. இராமர்,  மாவட்ட அமைப்பாளர் கி. சாமிதுரை, சங்கை ஒன்றிய செயலாளர் அன்பு ரவி, ந. வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள், கழகம் ஏற்படுத்திய நிகழ்வுகள் ஆகியவைகளைப் பற்றித் தோழர்கள் கருத்து பேசினார். தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யனார், க.ராமர் மு.நாகராஜ், கி.சாமிதுரை, மா.குமார், அன்பு ரவி, கார்மேகம், பெரியார் வெங்கட் ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து மாநிலப் பொறுப்பாளர்களான தலைமைச் செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி பல்வேறு உதாரணங்களைக் கொண்டு அமைப்பின் செயல்பாடுகள் இப்போது...

தமிழ் ‘தேவபாஷை’ அல்ல; மக்கள் மொழி

தமிழ் ‘தேவபாஷை’ அல்ல; மக்கள் மொழி

. வெங்கடேசன் எம்.பி (ளுர ஏநமேயவநளயn ஆஞ) எடுத்த வைத்த விவாதம் நம்மை சிலிர்க்க வைக்கிறது. மக்களவையில் சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களின் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சு.வெங்கடேசன், ஊஞஐ(ஆ) சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் என வாதிட்டார். இந்த மசோதாவை முன்மொழிகிற பொழுது அமைச்சர் இந்திய மொழிகளுக் கெல்லாம் தாய்மொழியாகவும், உலக அறிவினுடைய ஆதாரமாகவும் சமஸ்கிருதத்தை முன்வைத்தார். “இதற்கு என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது?” என்ற கேள்வியை நான் இங்கே எழுப்ப விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் அமைச்சர் அறிவியல் பூர்வமான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என்பதை மக்கள் விரும்புவார்கள். சமஸ்கிருதத்தினுடைய முதல் கல்வெட்டு ராஜஸ்தானத்தினுடைய அத்திப்பாரா விலும் குஜராத்தில் இருக்கிற ஜுனாகடிலும் கிடைத்துள்ளது.  அந்த கல்வெட்டின் காலம் கிபி 1-ம் நூற்றாண்டு. ஆனால்,  தமிழ் மொழியில் முதல் கல்வெட்டு மதுரையில் மாங்குளத்திலும் தேனியில் புலிமான்கோம்பையிலும் கிடைத்திருக்கிறது? இந்தக் கல்வெட்டின் காலம் கிமு 6-ம் நூற்றாண்டு. சமஸ்கிருத கல்வெட்டு கிடைத்ததற்கு 700 ஆண்டுகளுக்கு...

வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு ஆதரவான போராட்டம்: வழக்கு தொடரப்பட்ட கள்ளக்குறிச்சி தோழர்கள் விடுதலை

வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு ஆதரவான போராட்டம்: வழக்கு தொடரப்பட்ட கள்ளக்குறிச்சி தோழர்கள் விடுதலை

சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும் தாழ்த்தபட்ட பழங்குடியினருக்கு ஒரளவு பாதுகாப்பாக இருக்கும் வன்கொடுமை தடுப்புசட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டில் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை அவசர அவசரமாக அமுல்படுதில் ஒன்றிய அரசு முனைப்பு காட்டியது. இதனை எதிர்த்து இந்தியா முழுவதும் தொடர்சியான நீடித்த போராட்டங்கள் நடைபெற்றன. பலமாநிலங்களில் துப்பாக்கி சூடு நடைபெற்று உயிர்ப் பலி ஏற்பட்டது. இதன் பின்னரே இத்தீர்ப்பை உச்சநீதிமன்றமே வாபஸ்பெற்றது. தமிழகத்தில் இடதுசாரிகட்சிகளும், திராவிட இயக்கங்களும், தலித் அமைப்பு களும் ஒருங்கிணைந்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர். கள்ளகுறிச்சி மாவட்டத்தில் 9.4.2018 மற்றும் 2.7.2018 ஆகிய தேதிகளில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சின்னசேலம் ரயில் நிலையத்தில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சேலம் இருப்புபாதை காவல்படை, ஆத்தூர் காவல்நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் விழுப்புரம் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்குகளை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு...

21 மொழிகளில் பெரியார் எழுத்து பேச்சுகள்; தமிழக முதல்வர் அறிவிப்பு

21 மொழிகளில் பெரியார் எழுத்து பேச்சுகள்; தமிழக முதல்வர் அறிவிப்பு

பன்னாட்டு புத்தகக் கண்காட்சி சென்னையில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. நிறைவு விழாவில் 118 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. ஏராளமான நூல்கள், 365 நூல்கள் பிறமொழிகள் தமிழில் இருந்து மொழிபெயர்ப்பதற்கான ஒப்பந்தங்களாக அவை நடந்து முடிந்திருக்கின்றன. நிறைவு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பெரியாருடைய எழுத்து, பேச்சுகள், இந்திய மொழிகளை உள்ளடக்கி 21 உலக மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிட தமிழக அரசு ஏற்பாடுகளைத் தொடங்கி இருக்கிறது என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டு இருக்கிறார். அதே உரையில் அவர் மற்றொரு செய்தியையும் குறிப்பிட்டு இருக்கிறார். பதிப்புத் துறையில் பெரிதும் வளராத காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையும், ஏங்கல்ஸ், லெனின்  அம்பேத்கர் உள்ளிட்ட பல அறிஞர்களுடைய நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார். அந்த வகையில் முன்னோடிகளின் கனவை நிறைவேற்றும் காட்சிகளாக இந்த பன்னாட்டு புத்தகக் கண்காட்சி உள்ளது என்றும்...

‘அம்மா’ பெயரில் அரசியல் சரணாகதி

‘அம்மா’ பெயரில் அரசியல் சரணாகதி

ஈரோடு இடைத் தேர்தல் வந்தாலும் வந்துச்சி; அக்கிரகார  (அல்லது மயிலாப்பூர் ஆடிட்டர்) தி.மு.க. எனும் அதிமுக முகத்திரை கிழிஞ்சு தொங்குது என்றார் ஒரு நண்பர். “நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்; முகத்திரை ஒன்றை மாட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு அவ்வளவு வீரம். பல ஆண்டுகாலம் ஒன்றாகப் பயணித்த சொந்தக் கட்சிக்காரர்களிடம் முண்டாவைத் தூக்கி கட்டிப் புரண்டு திருப்பி திருப்பி அடிப்பார்கள். தூக்கிப் போட்டு மிதிப்பார்கள். ஆனால் பா.ஜ.க. என்று வந்து விட்டால் அவ்வளவு தான்! நீ யார்ரா, முதலில் போய் பா.ஜ.க.வைக் காலைப் பிடிப்பது? எனக்கில்லாத உரிமை உனக்கு வந்து விட்டதா? என்று மீண்டும் யுத்தக் களத்தில் வீரத்துடன் இறங்குவார்கள். ‘அமைதிப் படை’ படத்தில் சத்யராஜ் ஆடையைக் துவைப்பதில் தனது சீனியாரிட்டி உரிமையை விட்டுக் கொடுக்காமல் மணிவண்ணன் போராடும் வீரம்செறிந்த காட்சி நினைவுக்கு வந்தால் நாம் பொறுப்பு அல்ல. பா.ஜ.க.வின் ‘புனிதத்தலமான’ குஜராத்துக்கே யாத்திரை போயிருக்கிறாராம் ஓ பன்னீர்செல்வம். அழைக்கச்...

கருநாடகத்தில் ‘திராவிட சங்கம்’ உதயம்

கருநாடகத்தில் ‘திராவிட சங்கம்’ உதயம்

ச. சிவலிங்கம் தலைவர், சுயமரியாதை தலித் சக்தி அரங்கின் மேடையில் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தவர் ‘கன்னடம்’ ‘கன்னடம்’ என்று முழக்கமிட அரங்கில் இருந்தவர்கள் ‘திராவிடம்’ ‘திராவிடம்’ என்று  முழங்கினார்கள். அதேபோல மேடையில் இருந்தவர் ‘திராவிடம்’ ‘திராவிடம்’ என்று  முழக்கமிட அரங்கில் இருந்தவர்கள் ‘கன்னடம்’ ‘கன்னடம்’ என்று முழங்கினார்கள். அரங்கில் இருந்த எனக்கு “சென்னை கலைவாணர்’’ அரங்கில் இருக்கின்றோமா எனும் எண்ண ஓட்டங்கள். ஆனால் இந்த முழக்கங்களை வரலாற்றுப் பதிவாக மாற்றியது கொண்டஜ்ஜி பசப்பா அரங்கமாகும். பெங்களூரின் மையப்பகுதியில் இருந்தது அரங்கம்.  கருநாடகத்தின் சட்டமன்றமான ‘விதான சௌதாவிற்கு’ கூப்பிடும் தூரத்தில்தான் அந்த அரங்கம் இருந்தது. மேடையில் அமைக்கப்பட்டிருந்த திரையில் ஒளிவெள்ளத்தில் கருநாடகத்தின் நிலவியலைக் கண்முன் நிறுத்தும் வண்ணமயமான காட்சிகள்; பசுமையான காடுகள், மலைத் தொடர்கள், நீர் வீழ்ச்சிகள், தங்களின் அடையாளம் உயிர் பெற்றதைப் போல பாடிக்கொண்டிருந்தன. அந்த பாடல்களின் உட்பொருளாக – சுனுளு எனும் எழுத்துகள் மக்களுடன் உறவாட துடித்துக் கொண்டிருந்தன. ஆம்!...