மோடி – ஜாதிப் பெயர் அல்ல

அதானியைக் காப்பாற்றுவதற்காக நாடாளுமன்றத்திற்குள்ளேயே வரவிடாமல் ராகுல் காந்தியை தடுத்துவிட்டது ஒன்றிய ஆட்சி. ஆனால் இப்போது மோடி என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தை ராகுல் காந்தி இழிவு செய்து விட்டார் என்று ஒரு பொய்யான பிரச்சாரத்தை பாஜக தலைவர்கள் கட்டவிழ்த்துவிட்டு இருக்கிறார்கள். இந்தப் பிரச்சாரத்தில் உண்மை இருக்கிறதா?

ராகுல் காந்தி குறிப்பிட்ட நீரவ் மோடி, லலித் மோடி, மெகுல் சோக்ஸி ஆகிய மூவரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வர்கள் அல்ல. அவர்கள் முன்னேறிய ஜாதியினர். மோடி என்பதும் கூட ஒரு ஜாதி இல்லை. பெயருக்குப் பின்னால் மோடி என்று போட்டுக் கொள்வது ஒரு மரபு பெயர். அது ஜாதிப் பெயரல்ல.

பிலு மோடி என்று நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இருந்தார். அவர் பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர். அதேபோல் பாகல் என்று சொல்லப்படுகிற ஒரு மரபுப் பெயர் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக இருக்கிற பூபேஷ் பாகல் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் அதே பாகல் என்ற மரபு பெயர் ராஜபுத்திரர்களாலும், பழங்குடியினர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மோடி  பெயருக்குப் பின்னால் இருப்பது ஜாதி பெயர் இல்லை ஒரு மரபுப் பெயர் தான். மோடி பிறந்த ஜாதி  எண்ணெய்  எடுக்கும் ஒரு சமூகத்தை சேர்ந்தவர். இதுதான் இவர்கள் பிற்படுத்தப்பட்டோர் மீதான கவலை!

பிற்படுத்தப்பட்டோருக்கு தாங்கள் காவலர்கள் என்று பேசிக் கொண்டிருக்கிற இவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு என்ன செய்திருக்கிறார்கள்? அகில இந்திய மருத்துவப் படிப்புக் கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து அதை மறுத்தது ஒன்றிய பாஜக ஆட்சி. நீதிமன்ற வரை சென்று வழக்கு தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தான் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய கோட்டாவில்  இட ஒதுக்கீடு கிடைத்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. பூபேஷ்பாகல் அந்த மாநில முதலமைச்சராக இருக்கிறார். மாநில சட்டமன்றம் பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்து மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. ஆனால் அந்தத் தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் தமிழ்நாட்டு ஆளுநரைப் போலவே கிடப்பில் போட்டுள்ளார்.

பொதுத்துறை வங்கிகளில் பொது மேலாளர் பதவிகளில் 91ரூ பேர் இப்போதும் பார்ப்பனர்கள் தான். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட் டோர் பாதி அளவுக்கு கூட வர முடியவில்லை. டெலிஸ் என்று ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகம் இருக்கிறது. இந்த டெலிஸ் என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், மோடி என்ற மரபுப் பெயரைப் பயன்படுத்தி வருகிறார்கள். பெரும்பாலோர் மோடி என்ற மரபுப் பெயரைப் பயன்படுத்துவதில்லை. ஆக மோடி என்பது ஜாதிப் பெயர் அல்ல; அது ஒரு மரபுப் பெயர். ஆனால் ராகுல் காந்தி பிற்படுத்தப்பட்ட ஜாதிக்கு எதிரானவர் என்ற ஒரு பொய்யான பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டு அதானியை காப்பாற்றுகிற பிரச்சாரங்கள் நாட்டில் ஒருபோதும் எடுபடாது

பெரியார் முழக்கம் 30032023 இதழ்

You may also like...